அகஸ்தியன் அருளைப் பெற மறந்து விடாதீர்கள்… தவறி விடாதீர்கள்

அகஸ்தியன் அருளைப் பெற மறந்து விடாதீர்கள்… தவறி விடாதீர்கள்

 

தென் துருவம் வட துருவம் என்கிற போது
1.தென் துருவம் பூமியின் அச்சிலே இருக்கிறது
2.வட துருவத்தின் வழியாக வரும் போது… மற்றது எது வருகிறதோ ஒதுக்கித் தள்ளும்.
3.தென் துருவம் தனக்குள் இழுத்துக் கொள்ளும்… பிடிப்பாக இருக்கும்.

இதனுடைய காந்தப் புலனறிவுகளை அறிந்து கொண்டு இன்று விஞ்ஞான அறிவுகளில் பல விதமான வித்தைகளைச் செய்கின்றனர்.

துருவப் பகுதியை அறிந்து இன்று விஞ்ஞானி அதைச் செய்கின்றான். அன்று துருவத்தின் எல்லையில் நின்றான் அகஸ்தியன்

அந்தத் துருவத்தின் எல்லையில் அகஸ்தியன் இருக்கும் போது வானுலக ஆற்றலை அறிந்தான். துருவத்தின் எல்லையில் அவன் நின்று
1.துருவத்தில் நீளமாக இந்தப் பூமி மாறும் போது (கோழி முட்டை போல் நீளமாக) அதனின் உணர்வை மாற்றியமைத்து
2.சமமான நிலையில் வைத்தான் அகஸ்தியன்… இன்றும் அவன் வைத்தது தான் ஓடிக் கொண்டுள்ளது.

ஏனென்றால் சர்வத்தையும் தனக்குள் கவர்ந்திடும் சக்தியாக அவன் எல்லை கடந்து தன் எண்ணங்களை விண்ணிலே செலுத்தி… உணர்வின் தன்மை ஆற்றலைப் பெறும் போது “துருவத்தின் வழியாகத் தான்…” இவன் நுகர்ந்தறிய முடிந்தது.

அதன் வழி அறிந்த அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. நம் பூமி துருவத்தின் வழியில் அதைக் கவர்கிறது.

அப்படிக் கவரப்படும் போது
1.அவன் எப்படி ஒளியின் தன்மை பெற்றானோ… பூமியைத் திசை மாற்றினானோ…
2.இதைப் போல் அவன் உணர்வின் தன்மையை நாம் அனைவரும் பெற முடியும்.
3.அப்படிப் பெறுவதற்குத் தான் அகஸ்தியன் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தான்.

அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்று மனித உடலில் யானையின் தலையைப் போட்டு
1.வடமேற்காக விநாயகரை வைத்து… வடகிழக்காக விண்ணிலே நம்மை உற்றுப் பார்க்கும்படி செய்து
2.அகஸ்தியன் எப்படி ஒளி உடல் பெற்றானோ துருவ நட்சத்திரமாக ஆகும் பருவம் பெற்றானோ
3.தன் இன மக்கள் அதைப் பெறுவதற்காக… அவன் இருக்கும் போது அத்தகைய நிலையை உருவாக்கி விட்டுச் சென்றான்.

அவன் வழியிலே சென்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் பெற வேண்டும். நம் உடலில் ஆழமாக ஊழ்வினை என்ற வித்தாக அதைப் பதிவாக்கிக் கொண்டால் காற்றுக்குள் மறைந்திருக்கும் அருள் உணர்வை நாம் பெற முடியும்.

ஏனென்றால் அவன் சர்வ சக்தியும் பெற்றவன். தெற்கிலிருந்த அந்த உணர்வுகள் அது வழக்கில் வந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அவன் ஒளியின் உடல் பெற்றான். அந்த உணர்வின் தன்மை வடக்கிலிருந்து பூமிக்குள் பரவிக் கொண்டு தான் உள்ளது.

1.அது வரும் பாதையில் வடகிழக்கினை உற்று நோக்கி – அதிகாலையில் நாம் நுகர்ந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவன் உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கினால் நமது உயிர் அதன் வலுவாகக் கொண்டு செல்கிறது. ஆகவே அந்த அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற மறந்துவிடாதீர்கள்… தவறி விடாதீர்கள்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். அந்த உணர்வுகளை வலு ஏற்றிக் கொள்ளுங்கள். அவன் உணர்வைப் பெற்ற பின் அவன் அடைந்த எல்லையை நாம் அடையலாம்.

இந்தப் பூமியில் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை ஒளியாகி ஆன பின்
1.சூரியனே அழியலாம்… அத்தகைய சந்தர்ப்பம் வந்து கொண்டுள்ளது
2.இந்தப் பிரபஞ்சமே அழியப் போகிறது… இதிலே சிக்கிய உயிரணுக்கள் எல்லாம் மீண்டும் வேறு பிரபஞ்சத்தில் பரவும்
3.எந்தப் பிரபஞ்சம் கவர்கிறதோ அங்கே சென்று அடுத்த உடல் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேதனை தான் இருக்கும்.
4.நரகலோகத்தைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இன்று இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்த அருள் உணர்வைச் சேர்த்துக் கோண்டால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்கிறோம்.

Leave a Reply