
குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!
சமையல் கூடத்தில் பல காய்கறிகளையும் பல வகையான பொருட்களையும் இணைத்துக் கூடடமைப்பாகச் (சமையல் மாஸ்டர்) சமைக்கின்றார்கள். அவர்கள் செய்கின்றார்கள் என்று அதே மாதிரி நாமும் செய்தால் என்ன ஆகும்…?
அவர்கள் அதையெல்லாம் பக்குவப்படுத்தி
1.வேக வைக்கும் நேரம் பார்த்து எதனுடன் எதைச் சேர்க்க வேண்டும்…? எப்பொழுது சேர்க்க வேண்டும்…? என்று செயல்படுத்துவார்கள்
2.ஒரு பகுதி வெந்த பின் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள்.
அதாவது கடினமான காயாக இருக்கும். அதைத் தனியாக வேக வைத்துத் தாளித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். சீக்கிரம் வேகுவதைத் தனியாகப் போட்டு எடுத்து வைத்துக் கொள்வார்கள் அதற்குப்பின் இதை இரண்டையும் சமமாகக் கலக்கும் பொழுது ஒன்று போல இருக்கும்.
ஆனால் நாமும் செய்கிறோம் என்று இரண்டு காயையும் ஒன்றாக வைத்து வேக வைத்தால் என்ன ஆகும்…? நேரம் கழித்து வேகுவதும் சீக்கிரம் வேகுவதும் ஒன்றாகச் சமைக்கப்படும் பொழுது ருசி இல்லாமல் போய் விடும்.
அவர்கள் செய்தார்கள் ருசியாக இருக்கின்றது. நாம் செய்தோம் ருசி வரவில்லை என்பர்கள்.
அதே போல அந்த கொதித்து வரும் பருவத்தைப் பார்த்து உப்பைச் சேர்ப்பார்கள்… அது மேல் பருவமாக இருக்கும்.
1.ஆனால் ஒரு சிலர் குழம்பில் முதலிலேயே உப்பைப் போட்டு விடுவார்கள் காய்கறி அந்த உப்பை எல்லாம் எடுத்துக்கொள்ளும்.
2.குழம்பில் உப்பு இல்லை என்று மீண்டும் சேர்ப்பார்கள்… எல்லாமே மாறி விடும்.
சில பெண்கள் அந்தந்த சமயம் பார்த்து குழம்பைக் கிளறி விடுவார்கள். அந்தக் காலப்பருவங்களைப் பார்த்து அது கொதிக்கும் நிலையினைக் கண்டு அந்த நெருப்பை அவர்கள் கூட்டிக் குறைத்து வைப்பார்கள்.
1.குழம்பு வைக்கும் போது நெருப்பைக் கூட்டுவதிலும் குறைப்பதிலும் அத்தனை வித்தியாசம் இருக்கின்றது. அந்தக் குழம்பின் மணமும் நன்றாக இருக்கும் சுவையும் நன்றாக இருக்கும்.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக… ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கின்றார். “அ” என்று சொல்கின்றார். ஆனால் ஆ என்று குழந்தை திருப்பிச் சொன்னால் அப்படிக் கிடையாது அ என்று சொல்ல வேண்டும் என்று திருப்பிக் கற்றுக் கொடுப்பார்.
1.குழந்தை “ஆ…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
2.இவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லி பள்ளியை விட்டு ஆசிரியர் அவனைப் போகச் சொல்ல முடியுமா…?
3.பள்ளியிலே கற்றுக் கொடுப்பவர்கள் அந்த நெறிப்படித் தான் சொல்லி வழி நடத்துகின்றார்கள்.
அது போலத் தான் நம் குழந்தையாக இருந்தாலும் அவன் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களை நெறிப்படுத்தும் நிலையாக தாய் தந்தையர் ஞானத்தைக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். “என்ன சொன்னாலும் இப்படியே செய்கிறான்… இவன் உருப்பட மாடடான்…!” என்று சொல்லி விடக்கூடாது.
1.என் குழந்தை அருள் ஞானியாக வரவேண்டும் உலகைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக வளர வேண்டும் என்று கருவிலேயே இந்த உணர்வுகளை ஊட்டினால்
2.தெய்வக் குழந்தைகளாக நிச்சயம் உருவாக்க முடியும்… அந்தச் சக்திகளைத் தாயும் பெறுகின்றது குழந்தையும் பெறுகின்றது.
கடப்பாரையைக் கொடுத்துள்ளார்கள். அதை வைத்துப் பூமிக்கடியில் செல்லும் எலெக்ட்ரிக் வயரை எடுக்க வேண்டும் என்றால் சூதானமாகத் தோண்ட வேண்டும். வேகமாகத் தோண்டி விடலாம் என்று கடைப்பாரையால் குத்தினால் வயரிலே பட்டால் உடனே எர்த் ஆகும். அதுவும் பழுதாகி விடும்… நம்மையும் தூக்கி எறிந்து விடும்.
இதை எல்லாம் ஏன் சொன்கிறோம் என்றால்
1.குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!
2.நன்மை செய்வதற்குத்தான் குருநாதர் சக்தி கொடுக்கின்றார்.
அதை நாம் சீராகக் கையாள வேண்டும். அதற்குத்தான் தான் இத்தனை பக்குவங்களையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.