துருவப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகப்படியான மாற்றங்கள்

துருவப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகப்படியான மாற்றங்கள்

 

இது நாள் வரை உள்ள ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் உணர்ந்த உண்மைக்கு மேலும் வலுக்கொண்ட பல நிலைகள் இன்று கூடி வருகிறது.

நம் பாட முறையில் யான் உணர்த்திய நிலையில் நம் பூமியின் சுவாச நிலை பெற்று வாழும் உயிர் ஆத்மாக்கள் மற்ற கோள்களில் சென்று வாழ முடியாது… இப்பூமிக்குகந்த ஈர்ப்பு குண அமிலத்தைத்தான் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தி வாழ்கின்றது என்பதனைப் பல இடங்களில் உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஓட்டப் பாதை சிறிது மாறு கொண்டுள்ளதாகவும்… மாறு கொண்ட அமிலங்களும் ஓடும் ஓட்டமுடன் நம் பூமியின் ஈர்ப்பு காற்று மண்டல நிலையுடன் சிக்குண்டு மோதிச் சிதறும் நட்சத்திர மண்டலங்களின் அமில குணமும்… “முந்தைய நாட்களைக் காட்டிலும் மாறு கொண்டு வருகின்றது” என்று உணர்த்துகின்றேன்.

மாறு கொண்ட அமிலத்தைத் தான் நம் பூமி ஈர்க்காதே…! அப்படியிருக்க நம் பூமியின் சுவாச நிலை கெடுவதேன்…? என்ற வினா எழும்பலாம்.

1.நம் பூமியின் ஈர்ப்பு வட்டக் காற்று மண்டல நிலைக்கும்
2.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் காற்று மண்டலத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும்
3.நம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் தான்
4.பல சக்தி நிலைகளும் அமில நிலைகளும் மாறுபட்டு நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருகின்றன.

நம் பூமி ஈர்த்து விடும் சுவாச அலையும் பால்வெளி மண்டலத்தில் இருந்து நம் பூமிக்கு வரும் (பூமியின் ஈர்ப்பிற்கு வரும்) அமில குணங்களும் இவ்விடைப்பட்ட நிலையில் சுத்திகரிக்கப்பட்டுத் தான் (FILTER) நம் பூமியின் ஈர்ப்பிற்கே வருகிறது.

அப்படி இருக்க மாறு கொண்ட ஓட்ட கதியில் அமில குணங்கள் அதிகப்பட்டு வருகிறது என்றால் அதனின் பொருள் என்ன…?

நாம் சமையல் செய்யும் பொழுது ஒரு வகை மரத்தை கருவேல மரத்தை வைத்து எரிக்கின்றோம். அதனுடன் மற்ற குணவிறகைக் குறைவாக வைக்கும் பொழுது கருவேல மரத்தின் நிலை உயர்ந்ததாக இருக்கும்.

மற்ற விறகைக் கருவேல மரத்தைக் காட்டிலும் அதிகமாக வைத்து எரிக்கும் பொழுது மற்ற விறகின் நிலை அதிகமாகக் கூடி விடுகிறது.

எரிந்து ஆவியாகிக் கலக்கும் நிலையில் அதிகப்படியாக வைத்த விறகின் குண ஆவி நிலையும் கருவேல மரத்தின் ஆவி நிலையும் ஒன்றுடன் ஒன்று கலந்து அதற்குகந்த தனி அமில நிலையாகி மீண்டும் ஒரு நிலையான தன்மை வழிபடுகிறது.

அதைப் போல்
1.நம் பூமியின் ஓட்டக் கதியில் இன்று ஓடும் மாறு கொண்ட ஓட்டத்தினால் ஏற்படும் புதிய அமில குணமானது
2.வழக்கமாக எடுக்கும் நிலையைக் காட்டிலும் அதிகப்பட்டுள்ளதால்
3/நம் பூமியின் ஈர்ப்பு நிலைக்கும் பால்வெளி மண்டலத்திற்கும் இடையிலுள்ள இச்சுத்திகரிப்பு ஆலை
4.”புதிய அமில குணத்தை” நமக்கு அனுப்பி வருகின்றது.

இதன் தன்மை நம் பூமியின் நிலையில் அதிகமாக ஜீவராசியின் சுவாச நிலைக்கு வருவதைக் காட்டிலும் நம் பூமியின் “வட துருவ தென் துருவ” நீர்நிலையின் ஈர்ப்பிற்குத்தான் அதிகமாகச் செல்கின்றது.

முந்தைய பாடத்திலேயே நம் பூமிக்கு உயிர் நாடியாய் வட துருவம் தென் துருவம் அமைந்துள்ளன என்று உணர்த்தினேன். அதுவல்லாமல் நம் பூமிக்குச் சில இடங்களில் சூரியனின் ஒளியே காணாத இடம் உள்ளது என்றும் உணர்த்தினேன்.

ஆனாலும் அங்கு உயிரணுக்கள் உண்டு. சூரியனின் ஒளி படாவிட்டாலும் (நேராக) பூமியின் சுவாச அலையின் வெக்கையும் காற்று மண்டலத்தின் அலையும் அங்கு உள்ளதினால் ஜீவன் உண்டு. ஆனால் கடும் விஷ குணங்கள் நிறைந்துள்ள இடங்களாகத் தான் அவை உள்ளன.

இப்பூமியிலேயே பலதரப்பட்ட வளர்ச்சி நிலைகள் எண்ணிலடங்கா வண்ணம் உள்ளன. அதற்குகந்த நிலையை அவை அவை பிரித்து அவற்றின் வளர்ச்சி நிலை வளர்கின்றது.

இதை உணர்த்தும் நிலை எதற்கு…? என்று எண்ணலாம்.

பூமியின் மாறு கொண்ட ஓட்ட கதியில் இருந்து பூமியின் அலையுடன் அதிகப்பட்டு அவ்வமிலங்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்கு வந்தாலும்
1.அதன் நிலைக்குகந்த ஈர்ப்பு நிலையான நம் பூமியின் சூரிய ஒளி படாத இருண்ட பகுதியின்
2.அமில குண வர்க்கத்தின் தொடர்புடைய அமில குணமாக அது இருப்பதினால்
3.இருண்ட பகுதியின் ஈர்ப்பிற்கு இப்புதிய நிலை விஷ அமிலம் சென்று விடுகின்றது.

ஆனால் இதன் வளர்ச்சி நிலை அதிகரிப்பினால் இன்றைய காலகட்டத்தில் நம் பூமியின் ஆத்மாக்கள் ஏற்க முடிவதாகத்தான் உள்ளது. காலநிலை கூடக்கூடத் தான் இதன் வளர்ச்சி நிலையில் அதிகரிப்பும் ஏற்படும்.

1.மிளகாய் குறு மிளகு இப்படியுள்ள செடிகள் அதற்குகந்த கார குணத்தையும்
2.கரும்பும் கனிகளும் அதற்குகந்த இனிப்பு குணத்தையும் அதனதன் பழக்கப்பட்ட ஈர்ப்பில் வளர்வதைப் போல்
3.இன்றைய நிலையில் நம் பூமியின் ஓட்ட மாற்றத்தினால் வந்தடைந்த அமிலத்தை எடுக்கக்கூடிய
4.இருண்ட பகுதியில் உள்ள விஷ ஜெந்துக்களுக்கும் தாவரங்களுக்கும் உகந்ததாக உள்ளது.
5.”இதன் வளர்ச்சியினால் தான் மாற்ற நிலை ஏற்படும்…”

சோமபானம் என்ற சோகபானம்

சோமபானம் என்ற சோகபானம்

 

குடும்பங்களில் கடும் சிரமங்கள் ஏற்பட்டால் இன்று லாகிரி வஸ்துகளை (மது) உபயோகப்படுத்துகிறார்கள். அதைப் போட்டு குடும்பக் கவலையே இல்லாதபடி “பல இம்சைகளைச் செயல்படுத்துகின்றார்கள்…”

ஆரம்பத்திலே அன்றைய அரசர்கள் சோமபானம் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துத் துஷ்ட தெய்வங்களையும் உருவாக்கி மந்திரங்களையும் சொல்லிப் பழகி இருந்ததனால்
1.அதையே காவல் தெய்வம் என்று வணங்கி சாராயமும் கறியும் வைத்துக் கும்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
2.இப்படிக் கும்பிட்டு ஏற்றுக் கொண்ட பின் இதை ஒத்த ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.

ஆதியிலே அரசன் எந்த அடிப்படையில் (செய்வினை ஏவல் தோஷம்) இதை உருவாக்கி மக்களுக்குள் பதிவு செய்தானோ அதுவே இன்று வேரூன்றி வளர்ந்து விட்டது. அவன் உருவாக்கிய மந்திரங்கள் அனைத்தும் மக்களுக்குள் ஊடுருவி விட்டது.

மது மாமிசம் இவைகளை வைத்து இன்று மந்திரத்தை ஜெபித்தால் போதும்…
1.அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைகள் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் இங்கே வந்து சேரும்… பல கெடுதலைச் செய்யும்.
2.துன்பங்களை மறக்க மதுவை உபயோகப்படுத்தி எதன் வழி அந்த ஜீவன்கள் பிரிந்ததோ அது இன்னொரு உடலுக்குள் சென்ற பின்
3.அதே மதுவைப் பருகச் செய்யும்… அவனைச் செயலற்றதாக ஆக்கும்… அதன் வழியில் வளர்ச்சி ஆகும்.
4.மீண்டும் அதனால் தொடர்படும் சாபங்கள்… அதனால் கடும் வேதனைகள் அங்கே உருவாகும்.

இப்படி உருவாகி விட்டால் அந்த உடலை விட்டுச் சென்ற பின் உயிரானமா… தன் உடலில் எத்தனை வேதனைகள் பட்டதோ அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் உயிருடன் ஒன்றித் தொக்கிக் (சுற்றி) கொண்டே இருக்கும்.

இந்த உணர்வுகள் தான் உடல்… உடலில் விளைய வைத்த்து தான் உயிர். உயிரின் தன்மை கொண்டு இந்த ஆத்மா அதில் சேர்த்துக் கொண்ட பின்
1.நிலையான வேதனையாக என்றுமே வேதனைப்படும் நிலையாக அமைத்து விடுகின்றது.
2.மதுவைக் குடித்துக் கஷ்டங்களை மறக்கலாம் என்று செய்தாலும் இது எல்லாம் விடாது.

ஆகவே உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன நடக்கும்…? என்று சற்று தெரிந்து கொள்ளுங்கள்.

உடலில் இருக்கும் பொழுதாவது சமாளித்துக் கொள்ளலாம்… உடலை விட்டுச் சென்றால் சமாளிக்கும் திறனே கிடையாது… வேதனையை அனுபவித்தே தான் தீர வேண்டும்.

1.மீண்டும் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குச் சென்றாலும் அங்கே மனிதனாகப் பிறக்க முடியாது
2.அங்கேயும் வேதனையை உருவாக்கி அவனையும் வீழ்த்தி விட்டு
3.எந்தத் தகாத செயலை இவன் செய்தானோ அதையே செய்யச் செய்யும்.

எந்த வேதனை அனுபவித்தானோ அதை அங்கே உருவாக்கி அதில் விளையும் உணர்வின் சத்தை இது எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும்.

அந்த உடலை வீழ்த்திய பின் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து உயிர் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.

கீதையிலே சொல்வார்கள் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று.
1.எந்தெந்த வேதனையை உருவாக்கி அதை ரசித்தோமோ அந்த வேதனையின் செயலாக நாம் இருந்தோமோ
2.அதனின் அடிப்படையிலேயே உயிர் அடுத்த உடலுக்குள் கொண்டு சேர்க்கும்.

அதாவது விஷத்தைக் கொட்டி உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்றுவிடும் ஏனென்றால் அந்த விஷத்தைத் தான் தன் உடலாக அது மாற்றி வைத்திருக்கின்றது.

மனிதனாகப் பிறந்த பின் கொடூர வேதனைகளை அனுபவித்து அதில் வளர்த்துக் கொண்ட விஷம் எதிலே சென்று ஒடுங்கும்…?

இந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் இந்த உயிரான்மா சென்று விஷத்தைத் தாங்கிக் கொள்ளும் உடலாகப் பெற்று அதிலிருந்து தான் மீண்டும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் மீண்டும் விளைகிறது.

1.மதுவை விரும்பிக் குடிப்பவர்களாக இருந்தாலும் சரி… அல்லது கவலையை மறக்க அதைக் குடித்தாலும் சரி
2.இறந்த பின் கடைசியில் அந்த நிலை தான்…!

இதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

நான் சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

நான் சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

 

வலுவிழந்து வலு கூட்டிக்கொள்ளப் போகின்றது நம் பூமி என்று உணர்த்தினேன். எதன் அடிப்படைத் தன்மையில்…?

முந்தைய பாடத்தில் நம் பூமியின் ஓட்டமுடன் பூமிக்குகந்த அமில குணங்கள் கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்குகின்றன என்றும் உணர்த்தினேன்.

வலுவிழந்து வலுக்கூடும் நிலை என்பது
1.இன்றைய பூமியின் வலுவிழந்த இந்நிலை…
2.இப்பொழுது பூமியின் மாறு கொண்ட ஓட்டப் பாதையில் சந்திக்கும் நட்சத்திர மண்டலங்களில் சிதறல்களும்…
3.மாறு கொண்ட அமில குணத்தின் சேர்க்கையில் ஏற்படும் நிலையில் ஏற்படும் புதிய அமில வளர்ச்சிக் குணங்களின் அதிகரிப்பும்…
4.நம் பூமியின் ஈர்ப்பில் மோதுண்டு இன்றைய இயற்கைத் தன்மையின் நிலையே
5.மாறு கொண்டு செயல்படும் இன வழிப்பாதை நிலை நம் பூமிக்கு ஏற்பட்டுள்ளது.

வழக்கமான பாதை நிலையிலிருந்து மாறு கொண்டு சுழன்று ஓடும் தன்மையினால் அந்த இடங்களுக்குகந்த அமில குணங்களும் ஏற்கனவே நம் பூமி வளர்த்துக் கொண்ட நம் பூமியின் ஈர்ப்பலையின் காற்று மண்டல அமில குணத்துடன் புதிய அமில குணங்களின் ஈர்ப்பின் நிலை மோதுண்டு இது வெளிப்படுத்தும் அமிலமும் மோதுண்டு ஒன்றுக்கொன்று உராய்ந்து ஏற்கும் நிலை பெறுவதற்கு முன்… ஒளி அலையாகி அதற்குப் பின் தான் பூமியின் ஈர்ப்பலைக்கு… இப்பொழுது ஓடும் பாதையில் சந்திக்கும் “புதிய அமில குணம்” நம் பூமியின் ஈர்ப்பின் காற்று மண்டலத்துடன் கலக்கும் தன்மை பெறுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்குள் உள்ள அமில குணத்தின் மாற்ற குணங்கள் மோதிடும் நிலையிலேயே மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்படுகின்றன.

சுழன்று ஓடும் இப்பெரிய நம் பூமியின் கோளத்தைக் காட்டிலும்…
1.நம் பூமி உறிஞ்சி வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் விகித வட்டம் பெரிதாக உள்ள தன்மையில்
2.இவ் ஓட்ட கதியில் ஏற்படும் அமில மோதலில் ஏற்படும் ஒளி வட்டம் தான் என்று பூமியைச் சுற்றியுள்ள ஒளி வட்டம்.
3.முந்தைய காலங்களைக் காட்டிலும் இன்றைய நிலையில் அவ்வொளிப் பிரகாசம் கூடுதலாகத் தெரிகின்றது.

நம் பூமிக்கு என்று ஏற்பட்டுள்ள இந்நிலையினால் அபரிமிதமான அமில சக்திகள் ஓடும் பாதையில் இருந்தும் நட்சத்திர மண்டலங்களின் வெடிப்பு நிலையில் இருந்தும் கூடிக்கொண்டு அதிகமாக பூமியின் சுவாச நிலைக்கு வருகிறது.

அப்படி வருவதினால் வலுவிழந்து வலு கூடும் தன்மை என்பது இக்கலி காலத்தில் மனிதனால் காற்று மண்டலத்தை நஞ்சாக்கி வலுவிழக்கச் செய்த நிலையை…
1.இம்மாற்ற ஓட்டத்தின் நிலையினால் ஏற்பட்டுள்ள மாறு கொண்ட அமில குணத்தை நம் பூமியின் அலையில் கலக்கச் செய்து
2.நம் பூமியின் பழக்கப்படுத்திக் கொண்ட நிலையிலிருந்து அதிகச் சுமை கலக்கப் பெற்று
3.அதை ஏற்கும் பக்குவத்தன்மையை நம் பூமியின் சுவாச நிலை ஏற்றுக் கொள்ளும் இயற்கை நிலை இல்லாததினால்
4.பூமியின் சுவாச நிலையை மனிதனுக்கு எப்படி அதிகமான உணர்ச்சி நிலை ஏற்படும் பொழுது இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறதோ
5.அதைப் போன்ற நிலையில் நம் பூமி உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சிறுகச் சிறுக உள்ள இந்நிலை அதிகப்படும் தருணத்தில் பூமியின் சுவாச அலைகள் மாறு கொண்டவுடன்
1.இன்று மனிதனால் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளின் நிலைக்குகந்த பாதுகாப்பும் குறைந்து
2.முந்தைய பாடத்தில் உணர்த்தியுள்ளதைப் போல் இக்கலியின் மாற்ற நிலையை மனிதன் காணப் போகின்றான்.

சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

காற்று மண்டலத்தின் ஈர்ப்புக்கு வந்துள்ள புதிய குண அமிலத்தின் வளர்ச்சியின் புதிய சக்திகள் உருவாகலாம். இயற்கையில் விஞ்ஞானத்திற்கும் செயற்கையின் வழி வாழ்க்கைக்கும் இன்றைய ஆராய்ச்சியில் இருந்தும்… பல உண்மைக் குண நிலைகளை எடுக்கலாம்.

ஆராய்ச்சிக்குப் புதிய வழித் தொடரில் சென்று பாருங்கள்… இதன் உண்மைக் குணம் புரியும்.

ஐம்பெரும் பூதங்கள்

ஐம்பெரும் பூதங்கள்

 

தாவர இனங்களுக்கு ஐந்தறிவு… ஒரு அணுவிற்கு ஐந்தறிவு. ஒரு அணுவிற்குள்
1.”வெப்பம்: ஆக்கும் சக்தி
2.”காந்தம்” அணைக்கும் சக்தி
3.அந்த அறிவு அது தன்னுடன் எதையுமே இணைத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.

வெப்பம் எப்பொருளைப் போட்டாலும் அது படைக்கும் சக்தி. காந்தம் தனக்குள் பட்ட… அல்லது எந்த சக்தியை எடுத்துக் கொள்கிறதோ வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இயக்கும்.

1.”விஷம்…” எந்த உணர்வின் சத்து இதனுடன் கலக்கின்றதோ அது இயக்கச் சக்தி என்ற நிலையும்
2.எந்த மணத்தை இது நுகர்ந்ததோ அந்த மணத்தின் சக்தியாக அறிந்திடும் நிலை “ஞானம்” (மணம்) சரஸ்வதி.
3.புலனறிவு நான்கானாலும் இவை அனைத்தும் கூட்டாகச் சேர்த்து “உணர்வு”
4.அது இயக்கச் சக்தியாக மாறி ஐந்து அறிவுடன் இயக்குகின்றது.
5.மணத்தால் அறிந்து கொள்கிறது… உணர்வால் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

ஆக ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் காயத்ரி இதனுடைய சுவை சீதா என்றும் அதனுடைய குணத்தை ஞானம் என்றும் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்… அதனின் குணத்திற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக.
1.புலனறிவு ஐந்து என்றும் ஐந்து பூதங்கள் என்றும் வைக்கின்றார்கள்…
2.ஐந்து நிலைகள் அதைச் செய்யும்.

இதைத் தான் பேரண்டம் ஆகாசம் அது இது என்றெல்லாம் இவர்கள் சொல்கின்றார்களே தவிர அந்த ஆகாசம் எப்படி இதில் இயக்குகின்றது…? என்று தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

இப்படி ஒவ்வொரு சத்தையும் எடுத்துக் கொண்டு கொண்டால் அந்த ஐந்து புலனறிவு கொண்டது தான் உயிரினங்கள் அனைத்தும். எந்த இலையின் சத்தை ஒரு புழு எடுத்துக் கொண்டதோ அந்த மணத்தின் நிலைகள் கொண்டு தான் அந்த அறிவு கொண்டே அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் மாடு எந்தெந்தத் தாவர இனங்களைச் சாப்பிட்டதோ அந்த உணர்வின் சத்தைக் கொண்டு அதனுடைய ஞானம் தான் வரும்… ஐந்து புலனறிவு தான்.

ஒரு பூனை எந்தெந்த மாமிசத்தைச் சாப்பிட்டுப் பழகியதோ அந்த மாமிசத்தின் உணர்வு கொண்டு தான் அதனுடைய ஐந்து புலனறிவு… வேறு எதையும் அது நாடாது.

ஐந்து புலனறிவு கொண்ட மற்ற உயிரினங்களாக இருந்தாலும் மனிதன் உடலில் வரப்படும் பொழுது ஆறாவது அறிவாகின்றது இயற்கையில் விளைந்த நஞ்சினைப் பிரித்து விடுகின்றது
1.அதாவது நம் உடலில் வரக்கூடிய மணம் கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் நிலை பெறுகின்றது.
2.நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றல் பெற்றது தான் இந்த ஆறாவது அறிவு.

இதைக் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

பூமிக்கடியில் ஆழத்தில் இருக்கக்கூடிய பொருளையும் தோண்டி எடுக்கும் திறனைப் பெறுகின்றோம். அணுவைப் பிளந்து அதை அடக்கி ஆளவும் தெரிந்து கொள்கின்றோம்… அதை ஒளி சுடராக மாற்றவும் அதீத சக்தி கொண்டு அழித்திடவும் முடிகின்றது.

இது மனிதனின் ஆறாவது அறிவு நாம் எதையெல்லாம் செய்கின்றோமோ மாற்றி அமைக்கும் சக்தி அதுதான் முருகு. ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது

 

ஜீவ ஜெந்துக்களுக்குத்தான் உண்டு கழிக்கும் குணமுண்டு. இயற்கைக்கு ஜீவன்களைப்போல் உண்டு கழிக்கும் தன்மையில்லை.
1.எல்லாத் தாவரங்களுமே அதற்குகந்த வளர்ச்சிக்கு வேண்டிய சத்தை மட்டும் சூரியனிலிருந்து நேராக எடுத்து வாழ்கின்றன
2.ஆனால் தாவரங்கள் பிறகுதான் ஜீவசக்தி பெறுகின்றன.

எல்லா மண்டலங்களின் சுழற்சியின் கூட்டுடன் சூரியனின் ஒளி அலையை அமிலத் தன்மையைப் பெறும் ஆரம்ப உயிரணு திடமாய் இப்பூமியின் ஈர்ப்பில் படர்ந்து தாவரமாய் வேர் ஊன்றி அதன் தன்மை மாறுபட்டு ஆவியாய் அமிலம் பெற்று மீண்டும் மீண்டும் அதன் வளர்ச்சி நிலை சுழற்சியில் ஏற்படும் உயிரணுக்கள் அதன் சக்தியைக் கொண்டு பூமியின் ஈர்ப்பிற்குச் செல்ல முடியாமல் மற்ற ஜீவனின் கர்ப்ப நிலையில் உண்டு கழிக்கும் வளர்ச்சிக்குகந்த ஜீவிதத்திற்குத்தான் வருகிறது.

இடியிலும் மின்னலிலும் ஏற்படும் அதிர்வினால் பூமியின் ஈர்ப்புத் தன்மையில் வான மண்டலத்திலுள்ள அமில குணங்கள் படர்ந்து காளானாய் புல் பூண்டாய் இன்னும் எப்பலனும் தராத பல தாவர வர்க்கங்களாய் வளர்கிறது.

அதற்குப் பிறகு அதன் நிலை
1.மாறு கொண்ட அமில குணங்களினால் வளரும் தாவரத்தில் இருந்து புஷ்பம் தரவல்ல நிலை பெற்று
2.அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தின் நிலை மீண்டும் வளர்ச்சியுற்றுப் பல பலன் தரத்தக்கக் கனி மரங்களாகின்றன.

பல தாவரங்கள் எப்பலனும் தராத நிலையில் இவற்றின் வளர்ச்சியினால் எப்பலன் நாம் பெறுகின்றோம் என்று எண்ணுகின்றோம். ஒன்றிலிருந்து ஒன்றாகத் தான் வளர்ச்சி நிலை கூடி ஜீவஜெந்து வந்து… மீண்டும் தாவரங்களின் நிலையிலிருந்தே நம் ஜீவனுக்கு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றோம்.

காளானாய் புல்லாகி, பூண்டாகி, பூவாகி, கனியாகி ஜீவன் பெற்ற நாம் மீண்டும் நம் ஜீவனுக்கு அதையே உணவாக உண்டு கழித்து… அக்கழிவினால் பல வித இன வர்க்கங்கள் புழுவாய், வண்டுகளாய், கொசுக்களாய் வளர்கிறது.

இவற்றின் தொடர் வட்ட வளர்ச்சியில் மாற்ற குணங்கள் பல ஏற்பட்டு ஏற்பட்டு… ஒன்றிலிருந்து ஒன்றாகி இச்சுழற்சி வட்டத்தில் எண்ணிலடங்கா சக்தியுடன் வாழும் நாம்… நமக்கு இச்சக்தியை அளித்துள்ள சூரியனின் ஒளி அலையை நம் சுவாசத்துடன் எடுக்கும் எண்ணம் கொண்டு ஈர்த்து வாழும் வழி பெற்றால் நம் சக்தியின் நிலை‌ கூடும்.

இல்லங்களில் இருந்து கொண்டும் தன்னிச்சையில் வாழும் பொழுதும் சூரியனின் ஒளி அலை ஒன்றின் மேல் பட்டு அது வெளிப்படுத்தும் எதிரலையில் வாழும் நாம்… எல்லாமில் எல்லாமுமாக வளர்க்கும் சூரியனின் ஒளி அலையை நாம் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசத்தில் ஈர்த்து “நல் சக்தியை நமதாகப் பெறும் சக்தியை எடுக்கலாம்…”

ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?

ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?

 

மனித உணர்வில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாக விண் சென்ற அவனை நாம் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பூமியில் வாழும் பொழுது
1.அவன் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த உணர்வின் சக்தி
2.எனக்குள் ஜீவன் பெற்று நாமும் ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
3.இது தான் ஓம் நமச்சிவாய

ஆனால் அவனின் நினைவலைகளை யாரும் நமக்குச் சொல்லவில்லை. இதை “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று சொன்னால் உனக்கு அபாயம் ஒன்றும் இல்லை…” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
1.எதைச் சிவமாக்க வேண்டும் என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.
2.அதை யாரும் நாம் பெறவில்லை.

தவ யோகிகளும் கொடுத்திருப்பார்கள் சினிமாப் படங்களிலும் கொடுத்திருப்பார்கள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய. அவன் எதைத் தனதாக… சிவமாக… ஆக்க வேண்டும் என்று சொன்னான்…? என்று யாராவது எண்ணுகின்றார்களா…! என்றால் இல்லை.

சிவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்றால் அந்தச் சிவன் யார்…? நம் உடல் தான் சிவம்.
1.நாம் எண்ணியதை எல்லாம் உயிர் ஜீவனாக்கிச் சிவமாக மாற்றுகின்றது என்ற நிலையை
2.இந்த உண்மையைக் கண்டு சொல்லி இருந்தாலும் அதை நாம் உணரவே இல்லை
3.யாரும் உணர்த்தவும் இல்லை உணரும்படிச் செய்யவும் இல்லை.

காவியமாகப் படைத்து விட்டார்கள் நாடக மேடையில் வேஷம் போட்ட மாதிரி நம்மை அலைய விட்டு விட்டார்கள்.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக நாம் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ந்தோம்…? என்று அந்த ஞானிகள் சொன்ன இயற்கையின் உண்மையினை நாம் அறிதல் வேண்டும்.

ஓர் புழு ஒரு உணர்வைச் சுவாசித்தால் ஓ…ம். எந்தச் சத்தை சுவாசித்ததோ அந்த உணர்வின் சத்து அதன் உடலாக மாறுகின்றது ஓம் நமச்சிவாய.

ஆதியிலே ஓர் உயிர் அது தோன்றிய நிலையில் உயிருக்குள் துடிப்பின் இயக்கம் இருந்தால் தன் அருகில் இருக்கக்கூடிய செடியின் சத்தை இந்த உயிருக்குள் துடிப்பின் ஈர்ப்பான காந்தம் இழுத்து அந்த உயிருடன் இணைக்கச் செய்யும்போது ஓ… ம்… ஓம்…! என்கிற பொழுது ம் என்பது பிரம்மம்.

1.சுவாசித்த உணர்வுகள் அதற்குள் ஜீவனாகி அது உடலாகின்றது
2.இந்த உயிரான ஒளி இயக்கப்படும் பொழுது மின்னுகின்றது
3.ஆனால் இழுத்து அந்தச் சத்தான நிலைகள் இதனுடன் இணைக்கப்படும் பொழுது
4.ஒளி மறைக்கப்பட்டு உடலாகின்றது… சிவமாக மாறுகின்றது.

அந்த நந்நாளைத் தான் நாம் சிவன் இராத்திரி என்று சொன்னார்கள். உயிர் முதன் முதலில் தாவர இன சத்தை நுகர்ந்து அது உடலாகி உடலுக்குள் ஒளியின் சிகரமாக இருக்கின்றது.

எந்தத் தாவர இன சத்தை இந்த உயிர் இணைத்து உடல் ஆனதோ அந்த மணம் தான் வினை – விநாயகா. விநாயகன் பிரணவத்திற்கு உரியவன் என்றும் சொல்வார்கள்.

எந்த மணத்தை நாம் சுவாசிக்கிறோமோ அது எனக்குள் பிரணவமாகி இயங்கி ஜீவனாகின்றது. உயிர் இருக்கும் பொழுது தான் எண்ணியது அனைத்தையும் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது… சதா சிவமாக ஆக்கிக் கொண்டே உள்ளது.

1.ஆகவே… அருள் ஞானிகளின் உணர்வை நாம் சதா சிவமாக உடலாக ஆக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான்
2.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று தெளிவாக ஞானிகள் நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.

“தன் பலம்” காணுங்கள்

“தன் பலம்” காணுங்கள்

 

1.தன் சக்தி நிலை கூடக்கூட ஆத்ம பலம் வலுவேறி
2.தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றித் தன் பலம் என்னும் உண்மை பலத்தை
3.இம் மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.

தன் பலம் பெறத்தக்க வழிமுறைகளைப் பல உணர்த்தியுள்ளோம். மண் மணலாகி… மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி… பாறையாகி… மலையாகி வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக்கூடி வலுப்பெற்று வளர்ந்து கொண்டேதான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் “எல்லாவற்றின் ஐக்கியமும்…” அறிவாற்றல் கொண்டுள்ள மனிதன்
1.தன் ஞானத்தை இவ்வழித்தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற
2.மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி நிலை வளரப் பெறுகிறது.

உயிரணுவாய் உயிராத்மாவாய் இச்சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது இயற்கையின் உயர் சக்தி மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி அவ்வுயிராத்மாவை வளர்க்கக் கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்… இம் மனிதனின் உண்மையின் “உயர்ந்த பலம் கூடி” உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கும் செயலைப்போல்… மனிதனாய் வாழும் நாமும் நம் எண்ணத்தை இவ் இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது… இவ்வெண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப… அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து நம் உயிராத்மா பலம் கொள்கின்றது.

இக்காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை எடுக்கின்றார்கள்.
1.இவ்வுலகினில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால்தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இப்பூமி பல மண்டலங்களில் இருந்து வரும் ஒளி அலைகளையும் அம் மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கின்றது என்றால் “காந்த அலையின் ஈர்ப்பினால்” ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகிறது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இவ்வுலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும்… ஒவ்வொரு உயிரணுவுமும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்துதான்” எல்லாமே செயல் கொள்கின்றன.

மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர். இவ்வுடலும் மற்ற எல்லாமுமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்மக்கூட்டை இவ்வுடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துதோடு இல்லாமல்… பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சிகளுக்கெல்லாம்… நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் துணை கொண்டு உயிர் வாழும் நாம் இவ்வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கையை வாழ்ந்து… இம்மனிதனாய் வாழ்ந்த… வாழக்கூடிய செயல் பெற்ற நாம்…
1.இவ்வெண்ணச் சுழற்சியை “எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்…”
2.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
3.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
4.பயன் கண்டு இச்சுழற்சி வாழ்க்கையில் வாழ்ந்து மட்டும் எப்பயனை எவ்வாத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆத்மா) கண்டது…?

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை (அடைய) உணர பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால்… அப்பரம்பொருளின் சக்தி அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று… நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தை நாம் சேமிக்கலாம்.

நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து…
1.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
2.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறை கூட்டி
3.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
4.அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
5.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
6.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத்தொடரில் ஐக்கியம் கொண்டே வாழக்கூடிய பக்குவம் நாம் பெறுவது தான்
7.நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை.

நாக சர்ப்பம் விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாய் இருப்பதினால் அதன் எண்ண நிலை எதன் நிலைக்கும் மாறு கொள்வதில்லை. விஷ ஜெந்துவாய் நாம் காண்கின்றோம். “அவ்விஷத்தையே உரமாக்கி வைரமாக்கி… மாணிக்கமாய் சேமித்து வளர்த்து… ஒரு நிலையில் வாழ்கின்றது‌ அந்நாக சர்ப்பம்…”

பல நினைவலைகள் பலவும் உள்ளவன் தான் மனிதன்.
1.பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைத் தான் பெறல் வேண்டும்
2.பெற்று “தன் பலம் காணுங்கள்” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் குண வட்டத்தில்தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்ந்து வாழுகின்றன. ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ் ஜீவ ஜெந்துக்களின் நிலையில்தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

1.தன் நிலை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் உலக ஞானத்தையும்
2.மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும் அப்பரம்பொருளின் உண்மையையும் உணர முடியும்.

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசிப்பதன் உள் கருத்து

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசிப்பதன் உள் கருத்து

 

எமது குருநாதர் எமக்கு உபதேசித்தது போன்று
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் நினைவு கூறச் செய்து
2.நீங்கள் கேட்டுணரும் பொழுது மெய் ஞானிகள் கண்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கே உபதேசிப்பது.
3.பதிவு செய்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
4.தியானத்தின் மூலம் காற்றுக்குள் மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் கவரப் பழகுதல் வேண்டும்.

ஆலயத்தில் ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து வடம் பிடித்து எப்படி இழுக்கின்றோமோ இதைப் போல மகா ஞானிகளுடைய உணர்வுகளைப் பலரும் சேர்ந்து கவர்தல் வேண்டும். ஏனென்றால் அது மிக மிக சக்தி வாய்ந்தது.
1.அதனைக் கவர்ந்து ஈர்ப்பதற்கே இப்படி உபதேசித்து
2.உங்கள் நினைவினை விண்ணை நோக்கி செலுத்தும்படிச் செய்வது.

அந்த மகரிஷியின் அருள் சக்திகளை அதன் மூலம் நீங்கள் பெற்று அதை தியானிக்கும் போது அதை நுகர முடியும்

மகரிஷிகள் அனைவருமே பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது விண் சென்றவர்கள்
1.அவர்கள் உடலில் விளைய வைத்த அந்த உணர்வை சாதாரண மனிதன் எண்ணத்தால் நெருங்க முடியாது.
2.அவர்கள் ஒத்த உணர்வை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் எண்ணங்களை வலு கூட்டச் செய்து
4.நினைவை விண்ணை நோக்கி ஏகும்படிச் செய்து
5.அந்த ஆற்றலைப் பருகும் நிலைக்கு உற்சாகத்தைத் தூண்டி
6.அந்த உணர்வின் நினைவாற்றலை ஏற்படுத்திய பின் தியானத்தில் நாம் இருப்போமேயானால்
7.அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது.

இதனின் துணை கொண்டு எப்பொழுது நீங்கள் எண்ணினாலும் “மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா” என்று எண்ணினால் அந்தத் திறனை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அந்தத் திறன் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெருக்கி
1.அதன் வழித்தொடர் கொண்டு இந்த வலுவினைச் செருகேற்றிய பின் விண்ணுலக ஆற்றலை எளிதில் பெற முடியும்.
2.எந்த மெய் வழி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி வந்தீர்களோ அவை அனைத்தும் உங்களுக்குள் ஓங்கி வளரும்.

நோய் வராது தடுக்கவும் முடியும்.

உங்கள் நினைவுகள் எல்லாம் இப்போது கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்லுகின்றது. அதனின் வலுக் கொண்டு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் இன்னொரு உடல் பெறாதபடி “இந்த உடலிலேயே ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”

மகரிஷிகள் கண்ட வழியில் நீங்களும் சென்றடைந்து உங்கள் மூச்சும் பேச்சும்… கூட்டுத் தியானத்தால் வெளிப்படுத்தும் அலைகள் பிறருடைய உணர்வுகளை நல்ல உணர்வுகளாகப் படரச் செய்து… மெய் ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”

 

இக்கலியில் பூமியின் நிலையையே நிலை தடுமாற வைப்பவனும் இம் மனிதன்தான். இப்பூமி நிலைக்க கல்கி யுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இம்மனிதன் தான்.
1.மனிதன் மனித ஞானம் பெற்றால்
2.மனிதனால் மனித ஆத்மாக்களை உயர்ந்த நிலையில் நிறுத்த முடியும்.

இன்று நம் பூமியில் மனிதக் கரு வளர நம் பூமி மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள “வியாழனிலிருந்து மீண்ட மனித ஆத்மாக்கள் இருந்ததினால் தான்” மீண்டும் நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித்தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இப்பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து… இப்பூமியின் மாற்றக் காலத்தில் இம்மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இக்கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் கலி மாறும் தருணத்திலும்… அதே சுழற்சி ஓட்டத்திலிருந்து… தான் இதிலிருந்து மீள முடியாமல் மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலில் இருந்து தான் மனித உருவங்களே… இச் சூரியனைச் சுற்றியுள்ள “48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை பெறும்…”

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் கலி மாறி கல்கி யுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல் புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கி யுகம் வாழ முடியும்.

இவ்வுலக மாற்றத்தினால் இவ்வுலகில் உள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும் உயிராத்மாவும் சப்த அலைகளும் சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும் பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கலி பிறந்தால் இவ் எண்ண வளர்ச்சி எங்கு செல்லும்…?

இப்பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா? என்ற வினா எழும்பலாம். இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம், எந்நிலை கொண்டு…?

இப்பூமியின் மாற்றத்தினால் இப்பூமியில் இன்று வாழும் மனித ஆத்மாக்களும் பல கோடி ஜீவஜெந்துக்கள் தாவரங்கள் இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள் நீர் நிலைகள் மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள் இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே இப்பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகின்றோம்.

பல கோடி ஆண்டுகளாய் மாறாமல் சுழன்றுள்ள பலரின் சுவாச அலைகள் எல்லாம் இன்று நாம் எடுக்க முடியும்.
1.இராமாயண காலத்திலும் கிருஷ்ணாவதார காலத்திலும் மச்சாவதார காலத்திலும் மனித ஆத்மாக்கள் விட்ட சப்த அலையை
2.இக்காற்றிலிருந்து அதன் சுழற்சி வட்டத்தில் ஞானம் பெற்றோரினால் ஈர்த்து எடுக்க முடியும்.

ஆனால் இக்கலியின் மாற்றத்தினால் இந்நிலையும் மாறப் போகின்றது. எந்நிலையில்…?

இன்று இக்காற்று மண்டலத்தில் வாழ்ந்தவரின் சப்த அலைகள் அனைத்துமே உள்ளனவா…? என்ற வினா எழும்பலாம்.

இராமாயண காலத்தில் உள்ள நிலைகளைக் காவியமாய்ப் படைத்து இன்றளவும் அந்த இராமாயண கதை மனித ஆத்மாக்களிடம் கலந்துள்ள நிலையில் இச்சப்த அலையின் ஈர்ப்பும் அதன் நினைவு சக்தி சுழன்று உள்ள ஜீவ ஆத்மாக்கள் உள்ளவரை எச் சப்த அலையும் மாறாது.

பல கோடி ஆண்டுகளானாலும் அதன் தொடர் வட்டத்தில் செயல்படும் சப்த அலையின் நிலை சக்தி மாறாது.

இக்கலியில் மாறுகிறது என்றால் இவ்வுலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால்
1.சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல்
2.அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.
3.இன்னும் பல சப்த அலைகள் இப்பூமியின் ஈர்ப்பில் இவ்வதிர்வினால் மோதுண்டு இப்பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
4.பல பல மாற்ற நிலைகள் இக்கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
5.இவ் ஈஸ்வரப்பட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
6.மனித ஆத்மாக்களின் எண்ண நிலை இன்னும் தடுமாற்றம் கொள்ளப் போகின்றது.

இன்று உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும் இக்காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலையில்…
1.மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும் ஒலி அலைகளும்
2.இவர்கள் இன்று செயலாற்றும் முறைப்படி செயலாகாது.

இயந்திரத்தைத் துணைகொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில் இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல் அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

இக்காற்று மண்டலத்தின் விஷத்தன்மைகள் கூடி ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது…”

மனித ஆத்மாக்களே…! உங்களை நீங்கள் உணர்ந்து
1.என்றிருந்தாலும் மடியத்தான் போகின்றீர்கள் என்று எண்ணம் கொள்ளாமல்
2.மனித ஆத்மாக்களால்தான் நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படப் பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
3.மனிதனாய் அறிவு கொண்டு அன்பு பட்டு ஞானம் பெற்றிட வாருங்கள்.
4.இம்மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு.

அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது. தேவனாய் வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்.

எந்த மனித இனத்திலிருந்து அகஸ்தியன் வந்தானோ… அந்த மனித இனத்திற்கே “ஒளி பாய்ச்சிக் கொண்டுள்ளான்”

எந்த மனித இனத்திலிருந்து அகஸ்தியன் வந்தானோ… அந்த மனித இனத்திற்கே “ஒளி பாய்ச்சிக் கொண்டுள்ளான்”

 

விநாயகர் தத்துவப்படி விநாயகர் அருகில் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டி இருப்பார்கள். வேம்பு என்பது வாழ்க்கையில் வரும் கசந்த நிலை. வாழ்க்கையில் வரக்கூடிய அந்தக் கசப்பை வென்றவர்கள் தான் மகரிஷிகள்.

ஒரு பட்சி அரசம் பழத்தை உணவாக எடுத்து அதனுடைய சத்தை உட்கொண்டாலும்… உதாரணமாக ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை விடும் பொழுது
1.மலத்திற்குள் சிக்குண்ட இந்த வித்து பாழடைந்த இடத்தில் அது படர்ந்து காற்றில் பரவி இருக்கும் ஈரச்சத்தை நுகர்ந்து
2.தனது சத்தான நிலைகள் கொண்டு கருவுற்று ஜீவனாகி அரசாக (அரச மரமாக) விளைகின்றது.
3.பின் தன் விழுதுகளை ஊன்றி நீரே இல்லாத அந்த இடத்தில் தன் விழுதுகளை ஊன்றி நீர் இருக்கும் பக்கம் தன் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.
4.அப்படிப் பாய்ச்சி வளரத் தொடங்குகிறது.

இதைப் போன்று தான் மனிதன் தன் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி பாழடைந்த இடமான பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக” இருக்கின்றான்.

விண்ணிளிருந்து வரும் நஞ்சினைத் தனக்குள் அடக்கி நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக இன்றும் நிலையாக… தன் உணர்வின் அலைகளை முழுதும் பாய்ச்சித் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்ந்த மற்ற மனிதர்களும் அதைப் பின்பற்றி… சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழன்று வருகின்றார்கள்.

1.தன் விழுதுகளைப் பாய்ச்சிப் பேரண்டத்திலிருந்து வருவதை தன் உணர்வின் ஆற்றலால் அங்கே பெறும் மனிதன் அவனுக்குள் விளைவதால்
2.அவனைப் பின்பற்றிச் சென்றவரைப் பரிசுத்தப்படுத்தி அவர்களையும் வாழ வைத்து
3.ஒளியின் சரீரமாக இன்றும் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக வாழுகின்றான்.

விண்ணின் ஆற்றலின் நிலைகளை நட்சத்திரங்கள் தனக்குள் அடக்கிப் பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படும் பொழுது கோள்கள் தனது சத்தாக எடுத்து அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் கவர்ந்து ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது.

அதைப் போல அகஸ்தியனும் நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல் பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக விண்ணிலே வாழுகின்றான்.

சூரியன் எப்படி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று ஒளியின் சுடராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரம்
1.எந்த மனித இனத்திலிருந்து வந்தானோ அந்த மனித இனத்திற்கே ஒளி பாய்ச்சும் உணர்வினை
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதை நாம் நுகர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண் கொண்டு கூர்மையாக எண்ணும் பொழுது
4.அவன் உணர்த்திய உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… அதனை நாம் பருகுதல் வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இதுதான்.

விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் செலுத்தி… உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.