மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது

மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது

 

பூமியின் உள் நிலையை நாம் எப்படி விரயப்படுத்துகின்றோம்…? பூமியிலிருந்து எடுக்கப்படும் கனி வளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண, காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் பூமியிலிருந்து அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகப் பல சக்திகளை விரையப்படுத்துகின்றோம்.

ஆங்காங்குள்ள கனி வளங்களை எடுத்துவிட்டாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருக்க இன்றைய செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்துகின்றது.

பல ஆயிரம் ஆண்டு காலங்களாக பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்தே உள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.
1.ஆனால் இக்குறுகிய நூற்றாண்டுகளில் பெட்ரோலிய இன திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காக காந்த அலையின் அணுசக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததினால்
3.பூமியில் வளர வேண்டிய கனிவளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன் அதன் வளர்ச்சியும் குன்றிவிட்டது,

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல. வாத்து தானாக தினசரி இட்ட முட்டைகளை பேராசை கொண்டு ஒரு நாள் அவ்வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல “நம் பூமியின் நிலையை நம் மனிதர்கள் சிதறடித்து விட்டனர்…”

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும் அறிவாற்றலிலும் ஞானத்திலும் வேகமில்லை.
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டுமென்ற பேராசையின் வெறி வேகம்
3.மனிதனுக்கு மிகவும் துரிதப்பட்டதினால் இயற்கையின் பொக்கிஷத்தை அழித்து வாழ்கின்றோம்.

இயற்கையின் சக்தியே ஒன்றுடன் ஒன்று கலந்து கலந்து ஒன்றிலிருந்து வெளிப்படும் அமிலமானது மற்றொன்றில் மோதி மற்றொன்று புதிய உயிர் ஜீவன் கொண்டு அதிலிருந்து வெளிப்படும் அமிலம் அதற்குகந்த தன்மையில் மாறு கொண்டு மாறி மாறியே வளர்ந்து வருகின்றது தொடர் வளர்ச்சியாக.

உங்களின் வினாவை எழுப்பலாம். இப்பூமியின் அமில குணம் இப்பூமியின் காற்று மண்டலத்திலேயே தான் உள்ளதென்கின்றீர். அப்படி இருக்க பூமியிலிருந்து பிரித்தெடுக்கும் சக்தி குணங்கள் மாறுபட்டால் மீண்டும் நம் பூமியின் ஈர்ப்பில் தானே நிலைபெற வேண்டும் என்று.

ஒன்றிலிருந்து பிரிக்கப்படும் அமிலமானது அதன் இன நிலையில் இருந்து ஆவியாய் காற்று மண்டலத்தில் சுழலும் நிலையில் அவ்வமிலத்துடன் மற்றொரு அமில நிலை மோதுண்டு அது ஏற்காத நிலையில் பிரியும் நிலையில் அதிலிருந்து ஒரு வகை அமிலம் வெளிப்படுகின்றது.

அதுவுமல்லாமல் மழை வரும் காலங்களில் ஏற்படும் இடியினால்தான் இவ்வுலகின் பல இயற்கையின் குண அமில வர்க்கங்கள் மாறுபாடு கொண்டு வளர்கின்றன.

இப்படியே மாறு கொண்டே அமில வளர்ச்சியில் சுழன்று ஓடும் நிலையில் மாறுபடும் இயற்கையின் வழித்தொடர் கொண்டு நாம் வாழ்ந்து வருகின்றோம்.

எல்லா வகை இயற்கை வளங்களுமே உருவிலும் சுவையிலும் வண்ணத்திலும் ஒளியிலும் ஒலியிலும் நீரிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் உள்ளது. நம் நிலைக்கு ஒன்று போல் உள்ளனவாகத் தெரிபவையும் சிறுகச் சிறுக அதன் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே தான் உள்ளது.

இந்நிலை எல்லா மண்டலங்களின் நிலைக்கும் ஒத்ததுதான்.

1.நம் பூமியின் நிலையில் மட்டும் இப்பூமியின் மாறிடும் தன்மை குணத்தில் ஏற்படப்போகும் நிகழ்ச்சிக்கு
2.மனித ஆத்மாவினால் நிகழுகின்றது என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்…?
3.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிபட்டதற்கு மனிதனைக் குற்றம் காணலாமா…? என்ற வினா எழும்பலாம்.

மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இத்தீய அமில குணத்தினால்தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு ஒருவனை உயர்த்தி ஒருவனை அடிமை கொண்டு வாழ்ந்த எண்ணத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டு பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
1.இயற்கையில் இருந்த அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
2.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது.

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

 

அகஸ்தியன் தன் தாய் கருவிலேயே விஷத்தை வெல்லும் சக்தி பெற்றான். பிறந்தபின் அவனை மற்ற மிருகங்கள் பாம்புகளோ நுகர்ந்தால்
1.அதனுடைய விஷத்தன்மைகள் இவனுக்கு முன் ஒடுங்கி விடுகின்றது.
2.விஷத்தன்மைகள் அங்கே ஒடுங்கும் பொழுது இவனுக்குள் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகின்றது.

விஷத்தை ஒடுக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் அந்தச் சக்தி இருப்பதனால் மின்னல் வெளிப்படும் பொழுது அதில் விஷத்தன்மை அதிகம் உண்டு
1.அதனையும் நுகர்ந்து அவனுக்குள் அடக்கும் சக்தி வருகின்றது.
2.மின்னலின் ஒளிக் கற்றைகள் எவ்வளவு வீரியமாக இருக்கின்றதோ அதை நுகர்ந்தறிந்து
3.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி ஒளியாக மாற்றிடும் உணர்வின் அணுக்களாக அவனில் பெருகுகின்றது.
4.மின்னல் தாக்கும் பொழுது அந்த ஒளிக் கற்றைகள் எவ்வளவு தூரம் விரிவடைகின்றதோ
5.அதைப்போல் அவன் எண்ணங்கள் வெகு தூரம் ஊடுருவி இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வாக அறியும் தன்மை பெறுகின்றான்,
6.வான் வீதியின் ஆற்றலையும் மின்னல்களையும் தனக்குள் ஒளிக்கற்றைகளாக மாற்றிக் கொண்டான்
7.அவன் உடலில் உயிரைப் போன்று உணர்வுகள் ஒளியானது.

திருமணமான பின் கணவன் மனைவியாக இணைந்து உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

அவர்கள் பெற்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் வரும் இருளை வென்று… பேரருளை இயக்கச் சக்தியாக மாற்றி ஒளி என்ற உணர்வுடன் வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை நாமும் பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர
2.நமது உடலில் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் உயிரை ஒத்த ஒளியாக மாற்றி
3.அந்த உணர்வின் துணை கொண்டு உடலை விட்டுச் சென்றால் நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட்டு
4.நஞ்சை வென்ற உணர்வாக வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் உணவாக எடுத்து
5.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

நம் உடலில் சிருஷ்டித்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இதே உடலை ஒளியாக மாற்றுகின்றது இதற்குப் பின் இன்னொரு உடல் இல்லை.

ஒளியின் சிகரமாகும் போது இருளை மாற்றிப் பேரின்ப நிலை என்று பேரானந்த நிலையாக… ஏகாந்த நிலையாக ஏகாதசி… பத்தாவது நிலையான கல்கி என்ற நிலை அடைய முடியும்.

அந்த மார்க்கத்தைத் தான் நமது ஞானிகள் காட்டினார்கள்.

1.இந்த உண்மையினை நமது குரு அறிந்தார் அதனின் வழியை எனக்கு வழி மொழிந்தார்.
2.அதன் வழி வாழ்க்கையில் நான் பின்பற்றி நடந்தேன்…. காடு மேடெல்லாம் அலைந்தேன்.

மிருகங்கள் எப்படி வாழ்கின்றது தாவரங்கள் எப்படி உருவாகின்றது இதனை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது என்று குருநாதர் எம்மை அறியச் செய்தார்.

அதைத் தான் உங்களுக்கு இப்போது உபதேசிக்கின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து… மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.

1.இந்த உடலில் வாழும் காலத்திலேயே அதிகமாக இதைப் பெருக்கி
2.உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டால் என்றும் நிலையான ஒளிச் சரீரம் சரித்திரம் பெற முடியும்.

மனிதனுடைய கடைசி எல்லை இதுதான்.

உலக மாற்றத்திற்குப் பின்…

உலக மாற்றத்திற்குப் பின்…

 

இப்பூமியில் நிகழப்போகும் மாற்றத்தினால் இப்பூமியில் உள்ள இயற்கைக் குண அமிலத்தில், குண அமிலம் என்பது இப்பூமியின் மேல் பகுதியில் உள்ள அனைத்து ஜீவன் கொண்ட நிலைகள் எல்லாம் மாற்றத்தில் உருமாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலை இப்பொழுது பூமியின் தன்மை மாறும் பொழுது இதிலுள்ள எல்லா இயற்கை நிலையும் மாறிய பிறகு (இறந்த பிறகு) அதனுடைய அமில குணங்கள் எப்படி வெளிப்படுகின்றன…?

ஒரு கனி அழுகிவிட்டால் அக்கனியில் உள்ள நீர்ச்சத்தெல்லாம் உஷ்ணம் படப்பட வெளிப்படுகின்றது அல்லவா…? பல நாட்கள் நாட்களுக்குப் பிறகு அது காய்ந்து எதுவுமே இல்லாமல் அதனுடைய சக்கையும் மண்ணுடன் மண்ணாய் கலந்துவிடுகிறது.

அதைப் போன்று இவ்வுலக மாற்றத்தில் அழியப்படும் எல்லா இயற்கை ஜீவன்களும் இப்பூமியின் மேல் ஜீவனற்று உள்ள நிலையில்… இப்பூமியின் சுழற்சியினால் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் உஷ்ண அலைகள் அவற்றின் மேல் மோதுண்டு மோதுண்டு…
1.அதிலிருந்து வெளியாகும் ஆவி அமில குணத்தின் நிலையுடன் இப்பூமியிலிருந்து பிரிந்த உயிரணுக்கள் எல்லாம்
2.மீண்டும் உஷ்ண அலைகள் பட்டவுடன் ஜீவன் பெற வருகின்றன மாறு கொண்ட நிலையுடன்.

அதன் தன் நிலையிலேயே மீண்டும் வர முடியாது. ஒன்றிலிருந்து வெளிப்பட்ட அமில குணமே அதன் சுவாசத்தை ஈர்க்கும் உயிரணுவுடன் மோதுண்டு ஜீவனுக்கு வரும் பொழுது உரு மாறப் பெறுகின்றது.

எப்படி…? என்று வினா எழும்பலாம்.

கொசு எதற்காக இரத்தத்தை உறிஞ்ச மனிதனையும் மிருகத்தையும் மட்டும் கடிக்கின்றது…? தாவரத்திலும் பல நிலைகள் உள்ள பொழுது மனிதனின் இரத்தத்தைத்தானே அக்கொசு விரும்புகிறது.

மனிதனிலிருந்து அவன் இறந்து விட்டால் அவ்வுடலைப் புதைத்த நிலையிலிருந்து வெளிப்படும் பல கோடி அணுக்கள் இக்காற்றுடன் படர்ந்துள்ளன.

அந்நிலையில் மனிதன் உண்டு கழித்த சாக்கடை நீர்களிலும் மனித மலத்திலும் மனிதனால் உண்ணப் பெறும் கனிகளின் அழுகிய பழங்களில் இருந்தும் இக்காற்றில் படர்ந்துள்ள இவ்வுயிரணுக்களுக்கு ஆகாரம் எடுக்க அதன் மேல் மோதுண்டவுடன்… அங்குள்ள ஈரத்தின் உஷ்ண அலையில் இஜ்ஜீவ அணு பட்டவுடன் உருவ நிலை கொண்டு கொசுவாகி புழுவாகி உரு அமைப்புப் பெற்றவுடன் அது சுற்றி வாழும் தருவாயில் மனிதனின் இரத்தத்தையே ருசி காண வருகிறது.

நாய் உள்ள இடத்தில் நாய் உண்ணி என்னும் ஒருவகைக் கொசு இருக்கும். அதைப் போன்று ஒவ்வொரு மிருக இனத்திற்கும் அது அது உள்ள இடத்தில் அதன் இன வர்க்க உடலில் இருந்து வெளிப்பட்ட உயிரணுக்களின் அமில குணத்தில் பிறப்பெடுக்கும் அதன் இன வர்க்க சுவாச குணமுடைய பல உயிர்ப்‌‌ பிறப்புக்கள் வளர்ச்சி கொள்கின்றன.

ஓர் உயிராத்மா ஓர் ஜீவ உடல் (மனிதனோ, மிருகமோ) அதன் நிலை மாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உயிரணுக்கள் அதன் நிலைக்கொப்ப அமில குணமுடைய உருக்கொண்டு அந்நிலை (அவ் உருவ நிலை) மாறும் பொழுது… அதிலிருந்து சில நிலைகள் ஏற்பட்டு ஏற்பட்டு பல உருவ நிலைகளும் மாறி மாறி வரும் ஜீவ ஜெந்துக்களின் நிலையும் இன்றைய கால நிலையிலேயே ஏற்பட்டு வருகின்றது.

இவ்வுலகமே மாற்றம் கொள்ளும் தருவாயில் எல்லா ஜீவ ஆத்மாக்களின் நிலையும் மாறு கொள்ளும் பொழுது எந்த நிலையான மாற்றம் ஏற்படும் என்று எண்ண முடிகின்றதா…?

1.இன்றளவும் இவ்வுலகினில் நடந்து வந்த நிலையே இக்கலி மாறி கல்கியுகத்தில் எல்லா நிலைகளுமே மாறித்தான் நடக்கும்.
2.ஒன்றிலிருந்து ஒன்று மாறும் பொழுது ஒன்றைப் போல் ஒன்று இருக்காது. கல்கி என்ற புதிய உலகச் சுழற்சி தான் மீண்டும் ஏற்படும்.

இப்புதிய உலகில் இக்கலியில் மாற்றம் கொண்ட இயற்கைத் தன்மையினால் இவ் இயற்கையின் ஜீவ அணுக்களெல்லாம் கல்கி யுகத்தில் உருவ நிலைக்கு வரும்பொழுது “எண்ணிலடங்கா மாற்ற நிலை கொண்ட வளர்ச்சிகள்” ஏற்படப்போகின்றன.

இப்பூமியின் ஈர்ப்பில் ஜீவிக்கும் ஜெந்துக்களுக்கு மட்டுமா…? பறக்கும் பறவைகளின் நிலை எல்லாம் எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.

மாற்றத்தினால் அப்பறவைகளின் நிலையும் மாறப் போகின்றது. இப்பூமியின் ஈர்ப்பு சுற்றளவில் உள்ள மண்டலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் நிலையும் தான் இம்மாற்றத்தினால் மாறப்போகின்றது.

இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையினால் தான் உள்ளது. அந்நிலையில்
1.இம் மாற்றத்தினால் வெளியிடப் போகும் உஷ்ண அலையின் வெக்கையான அமில குணங்கள் மாறும் பொழுது
2.இப்பூமியின் ஈர்ப்பில் சுழன்று ஓடும் காற்று மண்டலத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு வழக்கமாய்ச் சுவாசித்த காற்றின் குண நிலை மாறும் பொழுது
3.அதன் எண்ண நிலையும் மாறு கொண்டு அதன் சுவாசத்தின் நிலையினால் அதன் ஜீவ உடலும் மாறத்தான் போகின்றது.

இந்நிலையினால் பலப் பல மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன.

உங்களுக்காக நான் பிரார்த்தித்தால்… உங்கள் கஷ்டம் எனக்குள் வராது

உங்களுக்காக நான் பிரார்த்தித்தால்… உங்கள் கஷ்டம் எனக்குள் வராது

 

சிலர் எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது… எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பார்கள்.

1.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து…
2.”நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் நினைத்தால்
3.நீங்கள் சொன்ன கஷ்டத்தை எனக்குள் வளராதபடி தடுத்து
4.எனக்குள் நல்லதை வளர்த்துக் கொள்ள முடியும்

ஆனால் உங்கள் கஷ்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் எண்ணினால் தானே நன்றாகும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இது உங்களுக்குள் நல்லதை உருவாக்கும்.

நிறையப் பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆக நம்மை இயக்குவது யார்…? நமக்குள் உருவாக்குவது யார்… நம்மை ஆள்வது யார்…?

திருவெங்கடாஜலபதி என்றால் யார்…? “ஏழுகொண்டலவாடா” என்றும் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு நம்மை ஆள்பவன் வெங்கடாஜலபதி.

திருவெங்கடாஜலபதி – நமது உயிர் தான் நம்மை ஆளுகின்றது. அங்கே தங்க ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்
1.நல்ல மனங்களை கொண்டு இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்பதற்காகச் சிலையைப் போட்டு வைத்துள்ளார்கள்.
2.நம்மை ஆள்வது நமது உயிர் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

இங்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கநாதனைக் காட்டுகின்றார்கள்.. மனைவி ஆண்டாள். இந்த உயிரின் தன்மை அரங்கநாதனாக இருக்கின்றது எந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது தான் நம்மை ஆளுகின்றது.

நான் (ஞானகுரு) இப்போது சொல்லக்கூடிய உணர்வுகளை நீங்கள் கேட்டால் இந்த உணர்வின் தன்மை உங்கள் உயிர் அரங்கநாதன் (உடலான அரங்கத்தில் நாதங்களை எழுப்பி) ஆக இயக்கி… நுகர்வதை இசையாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் சக்தி கொண்டு தான் உங்களை ஆளுகின்றது.

ஆண்டாள் என்று காரணப் பேர் வைத்து
1.நாம் எதை ஆள வேண்டும்…? எப்படி ஆளச் செய்ய வேண்டும்…? என்று சாதாரண நிலைகள் கொண்டு
2.ஒவ்வொன்றிலும் தெளிந்து தெரிந்து எப்படி வாழ வேண்டும்…?
3.தீமைகள் எப்படி அகற்ற வேண்டும்…?
4.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

ஆண்டாள் திருப்பாவையில் என்ன சொல்கின்றார்கள்…?

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…! இந்த உணர்வின் தன்மை நாம் எடுக்கும் பொழுது
1.அந்த மதியின் உணர்வாக நம்மை ஆளும். அதன் செயலாக நம் செயலும் இருக்கும்.
2.நமக்குள் நம் உணர்வின் தன்மை இங்கே அரங்கத்திற்குள் அமைந்திருக்கும் சக்தியாக
3.அதன் இசையாக அதனின் உணர்வின் செயலாக நம்மை இயக்குவான் என்று பொருள்படும்படி தத்துவங்களை எழுதி இருக்கின்றார்கள்.

மனிதன் புரிந்து தன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும்…? உயிரின் இயக்கம் எது…? நாம் நுகர்ந்த உணர்வின் சக்தி எது…? அது எப்படி நம்மை ஆளுகின்றது…? என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
1.அந்த ஞானிகள் உணர்வு மக்களைக் காக்கும்.
2.நம்மைக் காக்க உதவும் உலகைக் காக்க உதவும்
3.உலகை அருள் ஒளியாக மாற்ற உதவும்.

ஆகவே… மகரிஷிகள் காட்டிய அருள் உணர்வு வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உணர்வுகளை ஒளியாக்கி… நம் சொல்லின் தன்மை பிறரின் இருளைப் போக்கி… உலக மக்கள் அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.

பூமி பரிசுத்தமடையும் காலம்

பூமி பரிசுத்தமடையும் காலம்

 

மனித ஆத்மாக்களுக்குத் தான் வழிமுறையும் செயல் திறமையும் செய்விக்க உணர்த்துகின்றேன். இவ்வுலக மாற்றத்தில் மிருகங்களின் நிலை என்ன…? மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…?
1.இவ்வுலக மாற்றத்தினால் மனிதனின் நிலை மட்டும் மாற்றப்படுவதில்லை.
2.இப்பூமியின் இயற்கைக் குணமே மாற்றம் கொள்ளப் போகின்றது.

நல்ல கனியை அது கெடாத வரைக்கும் சுவை உணர்ந்து உண்ண முடிகின்றது. அதே கனி அழுகிவிட்டால் நாற்றம் அடிக்கின்றது. அதைப் போன்று மாற்றம் கொள்ளும் தருவாயில்… நல் உணர்வு கொண்ட ஆத்மாக்கள் மற்ற ஜீவ ஜெந்துக்கள் இவற்றின் நிலையில் இருந்து “மாறும் அமில குணங்கள் தான்” இவ்வுலகமே கல்கிக்குச் செல்லும் அவதார நிலைப்படுத்துகிறது.

தீய எண்ணத்தை கொண்ட விஷமான அமில குணங்கள் இவ்வுலகினில் இக்கலியுடன் மாறப் போகின்றது. ஜீவராசிகளில் உன்னத சக்தியுடைய
1.நம் மனித ஆத்மாக்கள் காணாத பல கோடி நிலைகள் உண்டு.
2.பல கோடி தாவர வர்க்கங்களுண்டு
3.நாம் கண்டுணரும் பட்சிகளும் மற்ற சாது குணங்கள் கொண்ட பிராணி வர்க்கங்களும் பல உண்டு.

இவ்வுலக மாற்றத்தின் போது அந்தந்த இடங்களின் மாற்ற நிலைக்கொப்ப அங்கங்குள்ள ஜீவன்கள் எல்லாமே இன்றைய நிலை கொண்ட ஜீவநிலை உருமாறி… அவ்வுயிரணுக்கள் அவ்வுருவிலிருந்து பிரிந்தவுடன் அவ்வுருவுக்குண்டான ஆவியான அமில குணங்கள் நற்குணங்கள் எல்லாம் ஆவியான நிலையில் திடப்பட்டுப் பல உன்னத சக்தி கொண்ட பல கனிவளங்கள் இப்பூமியில் தோன்றிட… கலிக்குப் பிறகு கல்கியில் செயல் கொள்ள உதவுகின்றது.

அப்பொழுது அக்கல்கியில் எந்நிலை கொண்ட தன்மையில் உயிரணு வெளிப்பட்டதோ அதன் சக்தி இப்பூமியில் கல்கியில் உருவாக்கும் உயிர்த் துடிப்பின் உன்னத சக்தியில் அவ்வுயிரணுவின் உருவ ஜொலிப்பு இருந்திடும்.

இவ்வுலகம் முழுமைக்கும் இன்றுள்ள உண்மையின் உயிர் ஜீவ நற்சக்திகள் அதிகம். கடலும் மலையும் மடுவும் எல்லாமே. ஜீவத் துடிப்புள்ள சக்திதான்.
1.இத்தீய எண்ணங்களும் தீய செயலும் புரிவதெல்லாம் மனித ஆத்மாக்களின் தொடர் தான்.
2.மனிதனிலிருந்து சென்ற சென்ற மிருகங்களும் சில உள்ளன.
3.இம்மாற்றத்தினால் இத்தீய சக்திகள் மாறப் போகின்றன.

எத்தீய சக்தியும் கல்கிக்கு மருந்தாகச் செல்கின்றது. எந்த நிலையில்?

இப்பொழுது எப்படி இக்காற்றில் உள்ள விஷத்தன்மையை சில விஷச் செடிகள் தன்னுள் ஈர்த்துக் கொண்டு இக்காற்றை சுத்தம் ஆக்குகின்றனவோ அதைப் போல் பல நிலைகளை இன்றுள்ள தீய குணங்களும் இம்மாற்றத்தினால் வளர்ச்சிப் பெறப் போகின்றன கல்கியில்.

இவ்விஷமான காற்று எங்கு செல்லும்…?

இவ்வுலகம் மாற்றம் பெற்றால் எல்லாமே ஆவி நிலையாகி அமில குணப்பட்டு திடப்பட்டு ஒன்றுடன் உராய்ந்து வளர்ந்து கொண்டே தான் உள்ளது. தீய சக்தியையும் அழிக்க முடியாது… நற்சக்திகளையும் அழிக்க முடியாது.

இம்மாற்றத்தினால்…
1.இவ்வுலகத்துடன் கலந்துள்ள காற்று மண்டலத்தின் கரியமில வாயுவின் விஷச் சக்தி
2.இவ்வுலகின் இயற்கைத் தன்மையினால் இவ்வுலகம் மாறும் தருவாயில்
3.இவ் இயற்கைக் குணத்தில் இருந்து வெளிப்படும் ஆவியான அமில சக்தி அதிகப்பட்டு அதன் திடத்தினால்
4.இக்காற்று உலகத்தின் இன்று சுழன்றுள்ள தீய விஷமான அமிலக் குணத்தை இந்நற்சக்திகளின் அமில குணங்கள் மோதுண்ட பொழுது
5.சுழன்று கொண்டுள்ள இக்காற்று மண்டலத் தன்மை மேல் நோக்கி இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் சென்று விடுகின்றது.

இப்பூமியில் ஈர்ப்பின் காற்று குண அமில நிலைக்கு மேல் இத்தீய சக்தி பல நூறு மைல்களுக்கு மேல் நோக்கி உயர்ந்தும் சக்தி பெற்று… பால்வெளி மண்டலத்துடன் பல திசைகளில் பரவி விடுகின்றது. அதன் தொடரில் அந்தந்த குண நிலைக்கொப்ப உள்ள மண்டலங்களில் இந்நிலை சேர்த்து விடுகின்றது.

ஒரு நிலையில் சுழன்று கொண்டுள்ள இச்சக்தி நிலையே பிரிந்து செல்லும் பொழுது அதன் தன்மையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கடும் விஷமான வைரம் எப்படி ஜொலிக்கின்றது…? அப்படித்தான் இம்மாற்றத்தினால் பல உன்னதத் தன்மைகள் நிகழப் போகின்றன.
1.இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் புனிதப்படும் பொழுது
2.இப்பூமியில் வளரும் ஜீவனின் நிலை எந்நிலை கொண்ட புனிதத்தன்மை பெறும்…? இதனை உணர்ந்து செயல் கொள்ளுங்கள்.

தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்

தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்

 

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இவை எல்லாவற்றையும் இராமாயணத்தில் வாலியாகக் காட்டுகிறார்கள்… வலிமை மிக்க சக்தி.

அந்த வாலியை இராமன் என்ன செய்தான்…?

1.குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் அடித்து அதை மூடுகின்றான்…
2.வாலியினால் வெளியே வர முடியவில்லை. அவன் திறமைகளைக் காட்ட முடியவில்லை.

ஏனென்றால் வாலி யாரைப் பார்த்தாலும் அவருடைய வலிமையை நுகர்ந்து எல்லாவற்றையும் அடக்கி விடுவான். அவன் நிலைக்குத்தான் நாம் போக வேண்டும் என்பதற்காக “அதை மாற்றியமைக்கும் நிலைக்கு” இதைச் சொல்கின்றார்கள்.

தெளிவாக ரூபமாக்கிக் காவியம் படைத்து இந்த உணர்வை நாம் எண்ணினால் சீதாராமா. இராமன் என்ன செய்கின்றான்…?
1.கெட்டதைப் பார்க்கவில்லை… அதை மூடி விடுகின்றான்.
2.உடலில் உள்ள கெட்ட அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை அது வாடுகின்றது.

இதைப்போல் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.நம் தலைக்கு மேல் இருப்பதை… பாறை மாதிரி இருப்பது தான் துருவ நட்சத்திரம்
2.அந்த உணர்வை எடுத்து நினைத்து இங்கே புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.

காலையிலிருந்து நாம் எத்தனை பேரைப் பார்க்கின்றோம். எல்லாம் இந்த வழியில் தான் உள்ளே செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இங்கே வலுவாகச் சேர்த்துக் கொண்ட பிற்பாடு அதற்கடுத்து கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்தி…
1.உடலில் எத்தனை கோடி குணங்கள் உண்டோ அத்தனை குணங்களுக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.பேரொளியாக மாற வேண்டும் என்று நாம் எண்ணங்களைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது கண்ணின் நினைவை உடலில் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் அந்த அணுக்களுக்கு உள்ளே நினைவு செலுத்தி தீமைகளை நிறுத்திப் பழகுதல் வேண்டும்.

அப்போது அதை மறைத்துக் கொள்கின்றது. இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உள்ளே அணுக்கள் இழுக்கக்கூடியது… அதாவது வேதனைப்படுத்துவது கோபப்படுத்துவதோ சஞ்சலப்படுத்துவது பொறாமைப்படுத்துவது என்னை இப்படி பேசினானே என்ற எண்ணங்கள் கொண்ட உணர்வின் அணுக்களை நிறுத்தி விடுகின்றோம்.

அருள் உணர்வைக் கூட்டக் கூட்ட அது வலுப் பெறுகிறது.
1.உயிர் வழி தான் எல்லாமே உள்ளே செல்ல வேண்டும்
2.ஆனால் அங்கே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் போட்டு நாம் அடைத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்வை வலுப்படுத்துகின்றோம்… அது வலுவான பிற்பாடு மற்றதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

வேப்பமரம் பக்கம் ரோஜாப்பூ மணம் சென்றால் விடுமா…? ரோஜாச் செடியின் அருகிலே வேப்பமரம் மணம் சென்றால் விடுமா…?

இதைப் போன்று அருள் உணர்வின் வலிமையை நாம் அதிகமாக்கிக் கொள்கின்றோம். அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் சேர்த்தவுடனே இங்கே அடைத்து விடுகின்றோம்.

உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை.
1.இந்த உணர்வின் வலுத்தன்மை ஆகி அழுத்தமான பின் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி வருகிறது.
2.தள்ளும் போது ஒரு சாணுக்கு மேலே ஆன்மாவிலிருந்து விலக்கி விட்டால் சூரியன் இழுத்துக் கொண்டு சென்று விடுகிறது.
3.நம் ஆன்மா தூய்மையாகின்றது.

இந்த பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வருதல் வேண்டும்.

மற்றவர்கள் நிலையை… உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது

மற்றவர்கள் நிலையை… உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது

 

ஞான ஒளி பெறும் பக்குவத்திலும் ஒருவரைப் போல் ஒருவர் நிலை இருந்திடாது. ஒவ்வொரு உடல் அமில குண வளர்ச்சியைக் கொண்ட பக்குவ மேம்பாட்டில் வித்திடும் ஞான வளர்ச்சி தான் அதன் வழித் தொடர் பெறும்.

ஒன்றை ஒத்த விதை நெல்லை இரண்டு தோட்டக்காரர்கள் அவரவர்கள் ஊரில் பயிர் செய்தாலும் அம்மண் நீர் அங்குள்ள சீதோஷ்ண நிலை அதைப் பயிர் செய்யும் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் வளர்ப்பு முறை இவை கொண்டுதான் அப்பயிர் வளர்ந்து பலன் தரும்.

ஒரு தோட்டத்தில் வளர்ந்த விதை நெல்லையே மாறு கொண்ட ஊரில் பயிர் செய்யும் பொழுது அதன் மகசூலும் சுவையும் வேறு கொண்டுதான் அமைகின்றது. அதைப் போல்
1.ஞானத்தின் ஈர்ப்பும் அதை ஈர்த்துச் செயலாக்கும் முறைப்படித் தான்
2.நம் ஞான ஒளியும் பிரகாசிக்கும்.

ஒருவர் நிலையை வைத்து மற்றவர்கள் நிலையை உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது.

எல்லோரும் (ஞானத்தின் வழித்தொடர் பெற்றவர்கள்) தான் பெற்ற ஞான வளர்ச்சியின் முக்தி நிலை கொண்ட பிறகு… தனித்தனி ஒளிகளாக வளர்ச்சி கொண்ட ஞான ஒளி எல்லாம்… சப்தரிஷிகள் போன்றோரின் நிலை பெற்ற பிறகும் அவரின் வளர்ச்சி நிலை பெற்ற அமில குணத்தின் வட்டச் செயலில் தான் செயல்படுகின்றார்.

1.எல்லோரும் பக்தி கொண்டு வணங்குவதும்… ஒன்றை வைத்து ஒன்று இல்லை
2.ஞான வளர்ச்சி பெறும் நிலையிலும்… ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை.
3.சப்தரிஷியாய் நிலைக்கப் பெற்ற நிலையிலும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை
4.மண்டலங்களாய் உருளும் மண்டலங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை.

ஆனால் ஒன்றின் சக்தி கொண்டு ஒன்றி வாழும் இவ்வெல்லாமில் எல்லாமுமே ஒன்றே சக்தியாக ஆதி சக்தி ஒன்றி உள்ளாள் என்பதனை உணர்ந்து…
1.எவ் ஆத்மாவையும் குறை கண்டும் சலித்தும் வாழாமல்
2.நம் நிலையில் ஏற்பட்டுள்ள அமில குணத்தின் சக்தியின் வீரிய நிலையை
3.எவ்வழியில் அதிகமாகப் பெற்று வழி பெற்றோமோ அதன் வளர்ச்சியில் ஞானத்தை வழிப்படுத்துங்கள்.

நம் முன்னோரின் கூற்றுப்படி விதைத்த விதைத்தானே முளைக்கும் என்பதனை உணர்ந்து ஞானத்தின் வழித்தொடர் பெறுங்கள்.

காட்சி;-
சில கனிகளைப் பறித்து அப்படியே உண்ணுகின்றோம். சில கனிகளைத் தோல் நீக்கப்பட்டு உண்ணுகின்றோம். பலாப்பழம் போன்ற கனிக்கு அதன் முள்ளை அகற்றி அதற்குள் இருக்கும் சதைப் பகுதிகளைப் பிரித்துச் சுவையான பலாச்சுளையை எடுத்து கொட்டை நீக்கித்தான் உண்ணுகின்றோம்.

நம் முன்னோர்களால் “முக்கனியின் சுவையை எடுத்து” என்ற சொல் நாமத்தின் அமுதிசையைக் கேட்டு மகிழ்ந்துள்ளோம். முக்கனியை வைத்து வணங்குகின்றோம்.

மாங்கனியை அப்படியே கடித்துச் சுவைத்து உண்டு அதன் கொட்டையை வீசிவிடுகின்றோம். வாழைப்பழத்தின் தோலை நீக்கி அதை அப்படியே சுவைக்கின்றோம். பலாச்சுளையை எடுக்கப் பல வேலைகளைச் செய்துதான் உண்ண முடிகின்றது.

இதன் உருவ நிலை என்ன…?

விளக்கம்;-
முக்கனிக்கும் சுவை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்குவ நிலை கொண்டு தான் அதனை நாம் உண்ண முடிகின்றது.

அதைப்போல் நம் ஆத்ம ஞானத்தை இவ்வழித்தொடர் எல்லாம் பெறும் நிலைப்படுத்தி
1.மாங்கனியை ஒத்த பூஜை வழிபாட்டைப் பக்தியில் சுவைத்து மற்றவற்றைக் கொட்டையைப் போல் அகற்றி
2.நம் எண்ணத்தைச் சுற்றியுள்ள உலக நிலைகளை வாழைப்பழத்தின் தோலைப் போல் நீக்கி ஞான வழி போல் பழத்தை உண்டு
3.நம்முள் கலந்துள்ள பல அணுக்களின் முட்களை நீக்கிச் சதையான நிலையை எண்ணாமல் நம்முள்ள சுவையான சுளையைச் சுவைத்திட
4.கொட்டை என்ற எதிர்நிலையை நீக்கி சுவைத்திடல் வேண்டும் என்ற பக்குவத்தை உணர்த்த முக்கனியைப் படைத்தார்கள் ஞானிகள்.

வேக வைக்காது பச்சையாகச் சாப்பிடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

வேக வைக்காது பச்சையாகச் சாப்பிடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

 

சில சாமியார்கள் என்ன சொல்வார்கள்…? என்றால்
1.நான் வேக வைத்து மட்டும் எதையும் சாப்பிடுவதில்லை.
2.அப்படியே பச்சையாகத் தான் சாப்பிடுவேன் என்று சொல்வார்கள்.

பச்சையாகச் சாப்பிட்ட பின் பாருங்கள். கத்திரிக்காயோ முள்ளங்கியோ வெண்டைக்காயோ வெங்காயத்தையோ சாப்பிட்டவர்கள் அருகிலே சென்றோம் என்றால் அதனதன் வாசனை அவர் உடலில் இருந்து நிச்சயம் வரும்.

ஆடு மாடுகள் எல்லாம் என்ன செய்கின்றது…? எந்தத் தழைத் தாம்புகளைத் தின்னுகின்றதோ அதனின் உடலில் அந்தத் தழையின் வாசனை தான் வரும்

செம்மறி ஆட்டுக்கறியைச் சமைத்தால் வெள்ளாட்டுக் கறி மாதிரி வாசனை வராது. மானையும் வெள்ளாட்டுக் கறியும் சமைத்தால் தழைத் தாம்பு வாசனை வரும்.

மனிதனாக இருப்பவர்கள் வேக வைக்காது காய் கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டால் அதனதன் வாசனை தான் உடலில் வரும்
1.இந்த வாசனையுடன் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா இன்னொரு மனித உடலுக்குள் செல்லாது
2.நேராக… அந்த மாடு ஆடுகள் எதையெல்லாம் சாப்பிட்டதோ அதைச் சாப்பிட்டுப் பழகியிருந்தால் அங்கே தான் செல்லும்.
3.நீ அதிலே சென்று பிற என்று உயிர் அழைத்துச் சென்றுவிடும்.
4.அந்த உணர்வுக்குத்தக்க ஆடாக மாற்றிவிடும்

ஆட்டுக்கறியைச் சாப்பிட்டாலும் அந்த ருசி வரப்படும் பொழுது அதைச் சாப்பிட வேண்டும்… அதைச் சாப்பிட வேண்டும்… என்ற எண்ணம் வரும்.

இந்த உணர்வு இங்கே கலந்த பிற்பாடு ஆடு மேய்ந்து கொண்டிருந்தால் ஆட்டின் ஈர்ப்புக்குள் சென்று விடும். கோழிக்கறியை விரும்பிச் சாப்பிட்டிருந்தால் கோழி மேய்ந்து கொண்டிருந்தால்… உயிர் அங்கே தான் நம்மை கொண்டு போய்ச் செலுத்தும்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக இயக்கப்பட்டு நாம் அதுவாகத்தான் மாறும் நிலையை உருவாக்குகின்றோம்.

தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
1.நான் (ஞானகுரு) யாரையும் மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை
2.சாப்பிட்டால் இந்த மாதிரி தான் உயிர் அழைத்துச் செல்லும் என்று ஒரு காட்டிய வழியில் உணர்த்துகின்றேன்.

அதைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றால் இதை வென்றவன் துருவ மகரிஷி. அகஸ்தியனாக இருக்கும் பொழுது நஞ்சினை வேன்றான். அவன் துருவனாகித் துருவ மகரிஷி ஆனான். ஆகவே
1.அகஸ்தியன் வழியினை நாம் பின்பற்றினால் தீமைகளை நீக்கலாம்.
2.நமது ஞானிகள் நமக்கு இதைத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்

 

வாழ்க்கை என்ற நிலை… அமைதியுடன் செல்லல் வேண்டும். அதுதான் வாழ்க்கையின் முழுமை. ஒருநிலை கொண்ட ஆண்டவனின் ஜெபத்தை மட்டும் ஜெபித்தே ஆண்டவன்பால் செல்வதல்ல வாழ்க்கை. ஒரு நிலை கொள்ள வேண்டும். ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்.

எங்குள்ளானப்பா நீங்கள் சொல்லும் ஆண்டவன்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைத்ததுதான் ஆதிசக்தியின் நிலையே
2.காற்றும் நீரும் மோதுண்டால் ஒளி பிறக்கின்றது
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் ஜீவன் பிறக்கின்றது
4.ஜீவன் பிறக்கவே இவ் ஒலி நீர் ஒளி ஏறிய பிறகுதான் அஜ்ஜீவனுக்கு சுவாசத் துடிப்பு கொள்ளுகின்றது.
5.சுவாசத் துடிப்பு பெற்றவுடன் அமில குணத்தை அஜ்ஜீவ அணு
6.தன்னுள் மோதுண்டு மோதுண்டு ஈர்க்கும் பக்குவம் பெற்றுச் சுழலுகின்றது.

இப்படியே அதன் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்பை இப்பூமியில் மோதுண்டு அதன் வளர்ச்சி நிலைக்கு அதன் ஈர்ப்பிற்கொப்ப அதன் சுவாசத்திற்கேற்ற வழித்தொடர் பெறுகின்றது.

எவ்வுயிர் அணு தோன்றி அதன் குண நிலை பெறுவதும் ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில் ஜீவனே பெறாது. இரண்டு நிலைகள் கொண்ட நிலையின் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழலுவதுதான் ஒவ்வொரு மண்டலமும் மண்டலத்தில் சிக்கியுள்ள எல்லா ஜீவன்களும்.

1.தனித்த ஆண்டவன் எங்குள்ளான்…?
2.அமைதி கொண்ட ஒருநிலை கொண்ட ஆண்டவன் ஜெபம் பெற்று செல்லும் நிலை எதுவப்பா…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே. இச்சுழலில் தான் உள்ளது.

மோதுண்ட சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் வடிவுகளாகி வழங்கும் மண்டல வளர்ச்சி… “ஜீவ ஆத்மாக்களே…”
1.தனித்த ஆண்டவன் இல்லையப்பா
2.எல்லாமில் எல்லாமாய் ஒளிரும் ஆண்டவன்தான்.

ஞானவழி பெற்றவர்களுக்கு:-
காட்சி:-
ஆட்டுக்கல்லில் அரிசியைப் போட்டு ஆட்டுவதைப் போலவும் ஆட்டும் நிலையில் ஒரே மாதிரி ஆட்டி வந்த நிலையில் ஒரு கல் சிக்குண்டவுடன் ஒலி கிளம்பி “நர நரத்த நிலையுடன்” மீண்டும் முதல் நிலையிலேயே அம்மாவு அரைபடும் பக்குவத்தைக் காட்டுகின்றார்.

விளக்கம்:-
1.ஞானத்தின் வழி பெற்று நாம் சென்றாலும் நம்மை அறியாமல் சில ஊடுருவல்கள் வந்து மோதும்
2.மோதலின் நிலைக்காக நாம் நம் ஞானத்தைச் சஞ்சலப்படுத்தாமல்
3.சுழலும் பொழுது மோதிய நிலையும் நம் ஞானத்துடனே கலந்து தனித்து நிற்காமல்
4.நம் ஞானவழி மீண்டும் செயல் கொள்ளும்.

காட்சி:-
பெரிய ஆலமரம்… அதற்கு அருகில் அடுப்பெரித்து உலை வைத்துச் சமையல் செய்கிறார்கள். அதே சமயத்தில் மற்றோர் இடத்தில் சிறிய ஒரு செடி பகலின் சூரியனின் நேர் உஷ்ணத்தைத் தாங்காமல் வாடி வதங்கி நிற்கின்றது.

விளக்கம்:-
ஆரம்ப ஞானவழிக்குச் சூரியனின் வெப்ப நிலையையே தாக்குப் பெறாத சிறிய செடியின் நிலையில் நாம் இருந்தாலும் ஆலமரத்தின் நிலைக்கொப்ப நம் ஞானத்தின் விழுதுகளை வளர்த்துக் கொண்டால் ஆலமரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் சூரியனின் இயற்கை ஒளியைக் காட்டிலும் செயற்கையாய் எரிக்கப்படும் இவ் ஏரிகள் ஆலமரத்தை எந்த நிலையிலும் தாக்குவதில்லை.

ஆலமரம் மட்டுமல்ல வளர்ந்த எம்மரமும் தான். அதைப் போல்
1.தன் நிலையில் உயர்ந்த ஞான வழி பெற்ற ஞானிகளை எந்நிலை கொண்ட சஞ்சலங்களோ மற்ற எதிர்படும் எல்லா நிலைகளும்
2.நன்மை தீமை கொண்ட இரண்டு நிலைகளும் அந்த ஞானியின் நிலையில் ஒட்டாமல் அவர் ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

காட்சி:-
நிலத்திலிருந்து ஓர் ஆத்மலிங்கம் வளர்ந்து வருகிறது. அவ்விலிங்கமே ஓர் மரமாக சப்தரிஷியைப் போல் காட்சியளித்து மேடான நிலையில் நின்று கொண்டு அவர் கையிலிருந்து ஓர் ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றனர்.

மேடான இடத்திற்கு கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அவ் ஒளி லிங்கம் அளிக்கப்படும் என்று பலரும் கையேந்தி வேண்டி நிற்கின்றனர்.

இவரோ அவ்வொளி லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி அவ்வொளியைப் பாய்ச்சிக் கொண்டே தான் உள்ளாரேயன்றி “யாருக்கும் தனித்து அவ்வொளி லிங்கம் அளிக்கப்படவில்லை…!”

ஆனால்
1.அவர் உருட்டிய ஒளி அலைகள் பாயப் பெற்ற அவ்வொளியை ஈர்த்து
2.தன் ஒளியை அவ் ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம் அவ் லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
3.மீண்டும் அவர் கையிலிருந்த அவ்வொளியான லிங்கம் முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பரப்பிக் கொண்டே உள்ளது.

அவ்விலிங்கமே கிடைக்கும் என்று கையேந்தி நிற்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கிறார்கள். அச்சப்த மகரிஷியும் தான் பெற்ற அவ்வொளி லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.

விளக்கம்:
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாய் நமக்களிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாய் ஒன்றுபோல் தான் ஒளி வீசுகின்றான்.

1.அவ்வொளி அருளை நாம் பெற்று அவ்வொளியுடன் ஒன்றும் ஒளியாய்த் தான் நம் செயல் இருக்க வேண்டுமே அன்றி
2.ஆண்டவனே வந்து நமக்கு அளிக்கட்டும் என்றால்… ஏங்கி நிற்கும் நாள் வரை காத்துத்தான் இருக்க வேண்டும்.
3.ஏனென்றால் எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும் “அவ்வொளியை ஆண்டவனே வந்து நமக்கு அருளப் போவதில்லை”

“அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியப்படுவது தான்” ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி. அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.

இதன் நிலையைப் புரிந்து
1.ஆண்டவன் அருளை வேண்டி நிற்காமல்
2.ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்.

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல

 

உதாரணமாக எல்லோருடனும் நாம் பழகுகின்றோம். ரொம்ப நெருங்கி ஒருவருக்கு உதவி செய்கின்றோம் அவர் குடும்பத்தில் கடுமையான சிக்கல்கள் வருகின்றது என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்தக் குடும்பம் எனக்கு இப்படிச் செய்தது… அது உருப்படுமா…? என்று இந்தச் சொல்களைச் சொல்கிறார். இந்த உணர்வலைகள் அவர்கள் உடலில் சாப அலைகளாக மாறுகின்றது.

எப்படி எல்லாம் இந்தக் குடும்பம் நாசமாக வேண்டும் என்று சொன்னாரோ… அந்த உணர்வுகள் எல்லாம் அங்கே பதிவாகி அந்தக் குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

இது போன்று சாப அலைகள் பட்ட குடும்பங்களை எல்லாம் பார்க்கலாம்
1.அதிகம் சம்பாதிப்பார்கள் கடைசியில் ஒன்றுமே இருக்காது
2.எதை எடுத்தாலும் எங்கே சென்றாலும் முட்டுக்கட்டையாக இருக்கும்… பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.

ஒருவர் சாப அலைகளைச் சொல்லப்படும் போது “குடும்பம் நாசமாக வேண்டும்” என்று சொல்வதை நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் கூட அதை நுகர்கின்றோம்.

இப்படிச் சொல்கின்றார் என்று எண்ணும் பொழுது அதே சாப அலை நமக்குள் அணுவாகி அவன் சொன்ன முறைப்படி நம் உடலிலே தவறுகளாகி நமக்குள்ளும் பகைகள் வரும் “சும்மா பார்த்தாலும் கூட…”

ஒரு சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசுகின்றார்கள்
1.அருகிலே நல்லவர் இருந்தாலும் அந்தச் சாக்கடை படாமல் இருக்குமா…?
2.கெட்டவன் மீது அள்ளி ஊற்றினாலும் அருகிலே நல்லவன் இருந்தால் அவன் மீதும் படத்தான் செய்யும்
3.இவன் உடலிலும் நாற்றம் ஆகும் அவன் உடலிலும் நாற்றம் ஆகும்.
4.சாக்கடை நல்லவன் என்று பார்க்குமா…? இல்லை…!

இந்தச் சாக்கடையைத் துடைக்கவில்லை என்றால் நாற்றம் இருக்கத்தானே செய்யும். இதைப் போன்று தான் நாம் நல்லவர்களாக இருந்து ஒருவன் சாபம் இடுவதை வேடிக்கையாகப் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி உள்ளது.

அவன் சாபம் இடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம் இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் சுழலத் தொடங்குகிறது நம் இரத்தங்களில் தேங்கி விடுகின்றது.

பின் அந்தச் சாப அலைகள்… அவன் ஒவ்வொரு நிமிடம் எப்படி கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்ச்சிகள்… அந்த எண்ணம் தோன்றுகின்றது.
1.யாரைப் பார்த்தாலும் “நீ நாசமாகப் போ” என்று நாமும் சொல்ல ஆரம்பிப்போம்
2.தொலைந்து போறவனே என்று சொல்லும்படி வரும் நாசமாக போகட்டும் என்ற அந்த உணர்வுகளை ஊட்டி
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி நம்மையும் அறியாமலேயே சாப அலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

தெரிகின்றது நமக்கு கோபப்படுகின்றோம் சாபம் விடுகின்றோம் அவன் சாபம் விட்டான் என்று. நாமும் சாபம் இடுவோம் ஏன் இந்த மாதிரிச் சொல்கின்றாய்…? என்று நம்மைக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அவன் செய்வது அப்படி…! என்று நம்மிடம் நல்லதைச் சொல்பவரிடமும் நாம் வம்புக்குத் தான் செல்வோம்.

ஏனென்றால் அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது என்று தெரிகின்றது… அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத்தான் குரு வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்படி நமது வாழ்க்கையில் அந்தச் சாப அலைகள் ஆனாலும் அந்த உணர்வுகள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்குகின்றது… தேடிய செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.

கல்வி கற்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்து எல்லாம் வளர்ச்சி இருக்கலாம் புதுப்புது பொருள்களையும் கண்டுபிடிக்கலாம்… செல்வத்தை அதிகமாகத் தேடக்கூடிய அந்தச் சக்தியும் இருக்கலாம்.

ஆனால் சாபம் இடுவோரைப் நல்ல குணம் கொண்டு பார்த்தபின் அந்த சாப அலையின் உணர்ச்சிகள் நல்ல அணுக்களில் சேர்ந்த பின் இதுவும் அந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்.

1.நாம் தேடிய செல்வத்தையும் அடுத்து பார்க்க முடியாது
2.யாரோ ஏதோ செய்து விட்டார்கள் நாம் வளர்ந்து வருவது பொறுக்க முடியாமல் ஏதோ செய்து விட்டார்கள்
3.பொறாமையில் எனக்குச் செய்து விட்டார்கள் என்று தான் இந்த உணர்வுகள் அந்தச் சாப அலைக்கு ஜீவன் ஊட்டி
4.நமக்குள் “அந்தச் சாபத்தையும் நிறைவேற்றியே கொடுக்கின்றோம்”. என்று வைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக மிளகாய் நெடி எந்தப் பொருளிலே பட்டாலும் அதனின் உணர்ச்சியை ஊட்டத்தான் செய்யும். ஒரு விஷம் எதிலே பட்டாலும் அதனுடைய உணர்வின் இயக்கத்திற்குத் தான் மாற்றும்.

அதைப் போன்று நம் உடலில் இத்தகைய உணர்வுகள் மாறுகின்றது.. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் பல இம்சைகள் பட்டுத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்துத்தான் மனிதனாக வந்திருக்கின்றோம். பல உயிரினங்கள் இன்று எத்தனையோ இம்சைகள் படுவதைப் பார்க்கின்றோம் அல்லவா.

ஆக… பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்
1.அருள் ஞானிகள் உணர்வை எடுத்து இனி வரக்கூடிய எத்தகைய தீமையிலிருந்தும் தப்பும் நிலையாக
2.அதை நமக்குள் பெருக்கிப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.