
தியான வழியில் உள்ள சிலர்… காசுக்காக ஞானத்தை இழந்து தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்
1.இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய சில பொருள்களிலும் சரி உணவுப் பொருள்களிலும் சரி
2.கெமிக்கல் கலக்காதது “இது அனைத்துமே பச்சிலைகள் சார்ந்தது…” என்று சொல்லிக் கொண்டு நிறையப் பேர் வருகின்றார்கள்.
துணிகளிலும் கூட பச்சிலைகளைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த துணிகள் இத்துப் போய்விடும். கெமிக்கல் கலக்காமல் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அப்படிக் கொண்டு வந்துள்ளார்கள்.
சில பச்சிலைகளைக் கையில் எடுத்தால் அரிப்பு அதிகமாகும். கெமிக்கல் எதிலிருந்து வருகின்றது…?
1.நுகர்ந்த உணர்வுகள் கெமிக்கலாக மாறுகின்றது.
2.பச்சிலைகளிலும் அது இணைந்து நமக்குத் தெரியாமலே அவ்வாறு ஆகின்றது.
அமெரிக்காவிலிருந்து எவ்வளவோ பொருள்கள் இப்படிக் கெமிக்கல் இல்லாதது என்று சொல்லி இறக்குமதியாகி இங்கே வந்து கொண்டிருக்கின்றது.
இது எவ்வளவு பெரிய விளைவுகளைன் உண்டாக்கும்…? என்பது “பின்னாடி தான் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்…”
1.அமெரிக்காவின் ராஜதந்திரம்… மற்றவருடைய புத்திகளைக் கெடுப்பதற்கு அதிலே ஆசையால் மோகம் வரும்படிச் செய்து
2.அனைவரும் அதன் பின் செல்லும் நிலையாக… தன்னை அறியாமலே இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.இதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். நாம் நினைக்கிறோம்… இது நல்லது என்று…!
ஆனால் நம்மை எங்கேயோ அது கொண்டு போய் விட்டு விடும்.
தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களும் சிலர் இதிலே இணைந்து கொண்ட நிலையில் இவ்வளவு பணம் கிடைக்கும் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…
1.கடைசியில் தியானத்தை விட்டு விடுவார்கள்.
2.அந்த மோகம் கொண்ட நிலையில் அதன் பின்னாடி தான் சென்று கொண்டிருப்பார்கள்
3.ஏனென்றால் அந்த மோகம் “தன் நிலையை” மறக்கச் செய்யும்.
யாம் கற்றுக் கொடுத்த உணர்வின் தன்மைகள் எல்லாம் அவர்களுக்குள் மாறி… இறக்குமதியாகும் அந்தப் பொருள்களை விற்றால் “இவ்வளவு சம்பாதிக்கலாம்…” என்று வீடு வீடாகச் சென்று கொடுத்தால் நல்லது என்று அவர்களின் ஆசை இப்படிச் சென்று கொண்டிருக்கிறது.
“குருநாதர் காட்டிய வழியில் ஆன்மீகத்தை வலுப் பெறச் செய்வதற்குப் பதில்…” இந்தப் பொருள்கள் இத்தனை வருடம் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்… சுத்தமானது… கெமிக்கல் கலக்காது…! என்று வீட்டு வீட்டுக்குச் சென்று சொல்லி
1.நாலு காசுக்காக இந்த மாதிரிச் செய்து கொண்டுள்ளார்கள்.
2.காசு ஆசையும் உடல் ஆசையும் இந்த உணர்வை இயக்குகின்றது.
கெமிக்கல்களில் உள்ள கெடுதல்களைப் பற்றி யாம் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளோம். ஆக இதிலே எத்தனை பேர் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பது இனி பின்னாடி தான் தெரியும்.
அமெரிக்காவின் தந்திரங்கள் (TRICKS) இது போன்ற நிலைகளைச் செய்து கொண்டு நுண்ணிய அலைகளை எடுத்து மனிதனின் சிந்தனையைப் பித்து பிடித்துப் பேய் மாதிரி செயல்பட்டுக் கொண்டுள்ளது.
1.அவர்களுக்குச் சிந்தனையே இருக்காது.
2.ஞானத்தை இழக்கும் தன்மைகளுக்கு தான் வந்து கொண்டுள்ளதே தவிர
3.பண்பென்ற நிலைகள் முழுவதும் அழியக்கூடிய நிலை தான் அதில் இருக்கின்றது.
உங்கள் வீடுகளுக்கெல்லாம் தேடி வருவார்கள் இத்தனை வருடத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று வந்து “கத்து… கத்து…” என்று சப்தமிட்டுக் கொண்டுள்ளார்கள்.
1.இதுகள் எல்லாம் எங்கே கொண்டு போய் விடும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
2.”இது எல்லாம் தவறான வழி…!”
நாம் இந்த ஆன்மீகத்தின் வழியில்… அழியா உணர்வுகளைப் பெருக்கி நல்வழியில் நாம் ஜீவிக்கும் தன்மைக்கு வர வேண்டும். ஆகையால் தயவு செய்து நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்… நல்வழியில் நீங்கள் வளருவீர்கள்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.