அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

ஈஸ்வரபட்டர்

அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

பொதுவாக நமது பெண்கள் மாலை ஆனதும் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்கிறார்கள். இதை தவிர, மாதந்தோறும் கோயில்களிலே 108 விளக்கு பூஜை 1008 விளக்கு பூஜை என்று கூட்டு தியானம் செய்கிறார்கள். இந்த விளக்கு பூஜையின் தத்துவம் என்ன?.

விளக்கைப் பொருத்தியபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.

விளக்கை வைத்தால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அந்தச் சுடரைப் போல எல்லாவற்றையும் அறிந்திடும் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் எங்களை அறியாது வரும் இருள்களை நீக்கிடும் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்பொழுது கோவிலில் போய் விளக்கை ஏற்றி வைத்து இதை வணங்குகின்றார்கள் ஆனாலும், அதே சமயத்தில் இவர்கள் வீட்டில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றதோ இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற உணர்வை வைத்து,

1.விளக்கை வைத்து

2.அந்த ஆண்டவனுக்கு இப்படி ஜெபித்து வந்தால்

3.நன்றாக இருக்கும் என்று செய்கிறார்கள்.

நாம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைக் கலந்து அந்த உணவைச் சாப்பிட்டால் நம்மை இறக்கச் செய்கின்றது.

இதைப்போலத் தான் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளில் இருந்து நாம் இதை விடுபடவேண்டும் என்றால்

1.விஷத்தன்மையை வென்ற

2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்.

வழக்கமாக விளக்கு பூஜை செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புஷ்பத்தை எடுத்து அங்கே போட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

அந்த நேரத்தில் இதற்காக சில பேர் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போடுவார்கள். இதனால் பலன் ஏதுமில்லை.

இதெல்லாம் பக்தி மார்க்கங்களில் ஒன்று சேர்த்து வாழ்வதற்கு ஒர் இணைப்புப் பாலமாகத்தான் அமைகின்றனரே தவிர அவர்கள் இந்த விளக்கு பூஜையினால் பலன் இல்லை. ஒன்று சேர்த்து வாழ முடியும்.

இந்த விளக்கு பூஜை நடந்து முடிந்த பிற்பாடு பாருங்கள் ஒருத்தருக்கொருத்தர் இந்த குறைபாடுகள் தான் வரும்.

ஆக குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா?இல்லை. நாம் புற நிலைக்காக விளக்கை வைத்துச் சென்றால் சரியில்லை. 

 

சாதாரணமாக கோயில்களில் விளக்கைக் காட்டுகிறார்கள் என்றால் எதற்காகக் காட்டுகிறார்கள்?

அங்கே இருட்டறைக்குள் மறைக்கப்பட்டு சிலைக்கு பல அலங்காரம் செய்து கனிகளும் பொருள்களும் வைத்துள்ளார்கள். அப்பொழுது அங்கே விளக்கைக் காட்டும்போது என்ன தெரிகின்றது? மறைந்த நிலைகள் அனைத்தும் அந்த வெளிச்சத்தில் தெரிகின்றது.

 அப்பொழுது என்ன எண்ண வேண்டும்? பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும்.

நாங்கள் பார்ப்போர் குடும்பங்களில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோருக்க்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இப்படி எண்ணும்போது இந்த விளக்கு பூஜை எப்படி இருக்கும்? கோவிலில் இப்படிக் காட்டப்படுகின்றது.

ஆகவே, அந்த விளக்கு என்பது என்ன…?

நாம் வேதனைப்படும்போது நமக்குள் மனம் இருண்டுவிடுகின்றது. அப்பொழுது, 

1.நம் மனம் இருளாது அருள் ஜோதியாக இருக்க வேண்டும், 

2.தெளிந்த மனம் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ணி,

3.அந்த உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால்

4.அது உண்மையான விளக்கு பூஜை ஆகும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading