வீட்டைச் சொர்க்கமாக்கும் வழி

வீட்டைச் சொர்க்கமாக்கும் வழி

 

மிருகங்களில் ஆண் பெண் என்ற நிலை இருக்கப்படும் பொழுது ஆணுக்கு ஆணே போர் செய்கின்றன… பெண் மிருகங்களைப் போரில் இணைப்பதில்லை.

மிருகங்களில் ஆணுக்கு ஆண் தான் மோதுகின்றதே தவிர பெண்பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால் மனிதர்களாக இருக்கும் நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இருக்கின்றது.
1.பெண்களைத் துன்புறுத்தும் நிலையில் வேதனை என்ற உணர்வுகள் கலந்தால்
2.ஆண் பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும் “வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது…” என்பதை உணர்வதில்லை.

காரணம் பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை ஆண்பால் நுகர நேர்ந்தால் வெறுப்பாகவோ வேதனையாகவோ இருந்து அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது.

பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது கேட்போர் மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும் கூட அது பதிவாகின்றது.

ஆகவே பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ
1.அந்த உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது வேதனையின் உணர்வுகள் புவியின் காற்றில் பரவுகின்றது.
2.பெண்களைத் துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால் ஆண்களும் நரக வேதனை என்ற நிலைகளை அனுபவிக்க நேரும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் திருமணமானபின் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம் காற்று மண்டலத்தில் படர்கின்றன.

சோகமும், வேதனையும் கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும் பொழுது நம் பூமியின் நிலைகளில் “மாற்றங்களே ஏற்படும்…” இங்கு மட்டுமல்ல… உலகெங்கிலுமே பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது.

மற்ற உயிரினங்களில் பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில் அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.

மனிதனானபின் பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும் பொழுது இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட வேதனையும் சோகமும் உருவாக்கப்படுகின்றது.

ஆகையால் இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற்ப இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில் “இதனைச் சாப அலைகள் என்று சொல்வார்கள்…”

துன்புறுத்தும் உணர்வுகளும் சரி வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில் மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே வருகின்றது.

இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து
1.பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி
3.நம்மையும் நம் நாட்டு மக்களையும் இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்வோம்.

ஆண் பெண் என்ற நிலைகளில் பெண்களும் ஆண்களை மதித்து அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால் ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர்… குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற நிலை உருவாகின்றது.

மகரிஷிகள் என்பவர்கள் தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும் கணவனும் மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து உணர்வின் சக்தியினை வளர்த்தனர். அதன் தொடர் கொண்டே நமக்கு காவியத் தொகுப்புகள் கிடைத்தன.

ஆனால் பிற்காலத்தவர்களோ இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலன்களுக்கேற்ப மாற்றியமைத்து உண்மைகளை மறைத்து விட்டனர்.

இதன் நிலையாக இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்குப் பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது.

தான் சுகமாக வாழ வேண்டும் என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து விட்ட்து. தீமைகளை அடக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில் நாட்டாசையும் உடலாசையும் பொன்னாசையும் பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச் செய்யும் நிலைகளையே வளர்த்துள்ளனர்.

மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள் புவியில் துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.

இந்தச் சந்ததிக்குப்பின் பெரும் புயல்களைப் போன்று… சூறாவளிகளைப் போன்று… பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி பெரும் பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று… மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து… மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும் மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும் வந்து கொண்டே இருக்கின்றது.

இது போன்ற தீமைகளிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3.ஒவ்வொரு நிமிடமும் பெண்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நாமும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் உயர்வு தரும்.

ஏனென்றால் குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது. இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில், இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்துச் சிவலிங்கம் அமைத்து பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது.

ஏனென்றால் இராமன் என்ற எண்ணங்கள் இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.

ஆகவே “நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்” என்ற உணர்வை நமக்குள் கலந்து விட்டால் கடைசி என்ற நிலைகள் வரும்… “தனுசுகோடி…”

நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனுசாக நமக்குள் உட்செலுத்தித் தீமைகளை அகற்றி
2.உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றி… இனி பிறவி இல்லை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்ல வேண்டும்.

மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்

மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்

 

மனிதனின் சகஜ வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தாலும் பண்பு பரிவு பாசம் கொண்டு வாழும் பொழுது பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து அதை அறிந்துணர்ந்த பின் அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களின் வேதனையான உணர்வுகளைத் தனக்குள் அதிகமாக நுகர்ந்து விடுகின்றோம்.

அப்படி நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக வளர்ச்சி அடைந்து இந்த நோயாளியின் உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றால் கேட்டறிந்த நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.அவ்வாறு வந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் இந்த உடலுக்குள் விளைந்து
2.மனிதன் என்ற பண்பையும் இழக்கச் செய்து விடுகின்றது.

கணவனும் மனைவியும் இருவருமே அந்த வேதனை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். வேதனை உணரவைப் பகிர்ந்து கொண்டாலும் எந்த வேதனையைக் கவர்ந்து கொண்டார்களோ இந்த உடலின் நிலை கொண்டு இன்னொரு ஆன்மா இங்கே சேர்ந்து விடுகின்றது. ஆக கணவனுக்கு மனைவி இல்லை.

கணவனும் இதைப் போன்று பல தீமையான உணர்வுகளைப் பரிவுடன் கேட்டறிந்தாலும் தீமை அதிகரித்து விட்டால் அதன் வழி இந்த உடலிலே கடும் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதன் வழி பெற்றாலும் தன் வாழ்க்கையில் அந்த விஷத்தின் தன்மை அதிகரிக்க இந்த உடலை விட்டுச் சென்றால்
1.இன்னொரு விஷத் தன்மை கொண்ட உடலாகத் தான் உருவாகுமே தவிர மனித உடல் பெறுவது என்பது முடியாத நிலை.
2.கணவனும் மனைவியும் இங்கே பிரிக்கப்படுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் கணவனின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வைத் தனக்குள் வலுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பின்… உடலை விட்டு பிரிந்து சென்ற கணவனின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
1.என்னுடன் இணைந்து வாழ்ந்த பண்பு கொண்ட பரிவு கொண்ட உணர்வுகள் நிலைத்த அறிவாக பேரொளியாகப் பெற்று
2.பெரு வீடு பெரு நிலை என்று நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று மனைவி கணவனை இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.

இதைப் போல மனைவியினுடைய உயிரான்மா பிரிந்து விட்டால் கணவன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெற்றோமோ
2.சூட்சும நிலை அடைந்த அந்த ஆன்மாக்களை அங்கே செலுத்தி விடலாம்.

அங்கே செலுத்திய பின் என்றென்றும் ஒளியின் சுடராக எங்கள் குடும்பத்திற்குள் இருளை அகற்றும் அருள் சக்தியாக வர வேண்டும் என்று எண்ணி ஏங்கிடல் வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவியும் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றாக இணைந்து வாழ்வீர்கள்…”

இந்த உணர்வுகள் இருக்கப்படும் போது அந்த உணர்வின் வலுவால் “நீங்கள் என்றுமே பிரிவதில்லை…” உடலை விட்டுப் பிரிந்தாலும் அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

1.கணவர் உடலை விட்டுப் பிரிந்தால் பெண்கள் மாங்கல்யத்தைக் கழற்றி விடுகின்றார்கள்.
2.அவ்வாறு செய்வது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்.

கணவனுடைய உணர்வுகள் தனக்குள் உண்டு. சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழ்ந்திடும் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் வரும் அறியாது சேர்ந்த இருளை நீக்கி எங்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று மனைவி கணவன் உயிரை உயர்ந்த நிலை கொண்டு எண்ணினால் இந்த உணர்வு இங்கேயும் வளர்கின்றது… குடும்பத்திற்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.

மனைவி கணவனை இவ்வாறு எண்ணுவதும் கணவன் மனைவியை இவ்வாறு எண்ணுவதும் இதைப் போல் இணைந்தால் இதன் வழி வரும் சந்ததியினருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் படரப்பட்டு தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெறுகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய இந்த அருள் வழிப்படி நடந்தால்
1.இந்த உடலுக்குப் பின் யார் முந்திச் சென்றாலும் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
2.அதே உணர்வைப் பற்றுடன் பற்றும் பொழுது எளிதில் அங்கே சென்று இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து ஒளியைப் பெருக்க இது உதவும்.

பெண்கள் மாங்கல்யத்தை நீக்குவது என்பது கணவனை நீக்குவது என்பதாகும். மாங்கல்யம் இங்கு இருந்தால்தான் அவருடைய நினைவே வரும்.

அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து அதன் வழி கொண்டு இரு உணர்வும் ஒன்றாகச் சேர்த்து அருள் வழி வாழவும் இதைப் பின் தொடர்ந்து வரும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானத்தை ஊட்டவும் அருள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்
1.அவர்களும் இதைப் பின்தொடர்ந்து வரப்படும் போது உங்கள் ஆன்மா வெளிப்பட்டாலும்
2.குழந்தைகள் இதே முறைப்படி செயல்படுத்தும் போது இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய உதவும்.
3.ஆகவே பெண்கள் மாங்கல்யத்தை நீக்காது கணவனின் நினைவு கொண்டு அந்த மாங்கல்யத்தை எடுத்து
4.“நாங்கள் அருள் வழி பெற வேண்டும்… ஒன்றி வாழும் அந்த அருள் சக்தி எங்களிலே வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் இவ்வாறு செய்தீர்கள் என்றால் இந்த பிறவியின் முழு பயனையும் நீங்கள் அடைகின்றீர்கள். சிந்திக்கும் வலிமை பெற்று நம் குரு அருளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வளமாக வாழ்ந்திட எமது அருளாசி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?

 

நான் கொடுக்கக் கூடிய உபதேசங்களைப் பெண்கள் ஆசையுடன் அதைப் பெற வேண்டும் என்று கூர்ந்து கவனித்தால் ரெக்கார்ட் ஆகிவிடும்.
1.பெண்கள் அதிகமாக அவ்வாறு நினைக்கப்படும் பொழுது
2.மகரிஷிகளின் சக்தியை அணுத்தன்மையாக மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டு.

கணவர் தொழிலின் நிமித்தம் பல நிலைகளைச் சந்திக்கப்படும் பொழுது அதிலே பல உணர்வுகள் அவர் மீது மோதினாலும்
1.என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
3.அவர் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
4.இதை உங்களில் வலுவாக்கி கணவருக்கு இது பெற வேண்டும் என்று பாய்ச்சினால் நிச்சயம் அது அவருக்கு நல்லதாகும்.

ஏனென்றால் தொழிலின் நிமித்தமோ அல்லது மற்ற எத்தனை அலுவல்களுக்குச் சென்றாலும் அதற்குள் எத்தனையோ எதிர்ப்புகள் இருக்கின்றது எத்தனையோ உணர்வுகளை அவர் சுவாசிக்க நேர்கின்றது.

ஆனால் அப்போதெல்லாம் பெண்கள் தன் கணவருக்கு உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தினால் “அவரைத் தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்…!”

அதே சமயத்தில் அவர் செயலைப் பார்த்து என்ன…? உன் கணவர் இப்படி இருக்கின்றார்…! என்று யாராவது சொன்னால் என்ன ஆகிறது…?

இப்படி இருந்தால் என்ன பண்ணுவது…? என் தலைவிதி இவருக்கு என்னைக் கட்டிக் கொடுத்து விட்டார்கள்…! என்று பெண்கள் இந்த வேதனையை எடுப்பார்கள்.

இந்த வேதனைப்படும் உணர்வோடு கணவனை எண்ணினால் என்ன செய்யும்…?
1.வெளியிலிருந்து அவர் வரும் பொழுதே உணர்வுகள் மாறிவிடும்… அவர் உள்ளே வரும் பொழுது உற்றுப் பார்ப்போம்.
2.கணவர் பார்க்கும் பொழுது என்ன…! மனைவியிடம் ஒரு வித்தியாசமான பார்வை தெரிகிறதே என்று
3.இந்தக் கண்கள் கணவருக்கு இப்படிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த உணர்வின் இயக்கம் ஆன பின் ஓஹோ…! இப்படியே இருந்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை என்னாவது…? அடுத்து ஒரு வார்த்தையைச் சொன்னால் போதும்.

வீட்டுக்கு வந்தவுடன் இது தானா வேலை…? என்று இந்த வெறுப்பு அங்கே விளைந்து இந்த உணர்வு ஒலியாகி (சொல்) கசப்பின் தன்மையாக வந்து விடும்.

ஆகவே மற்றவர் வாயிலாகக் கணரைப் பற்றிப் பிறிதொன்றைக் கேட்டாலும்…
1.கணவருக்கு அந்த அருள் பெற வேண்டும்… அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால்… இப்படி எத்தனை பெண்கள் நீங்கள் எண்ணுகின்றீர்கள்…?

சம்பாதித்துக் கொடுத்தால் என் கணவர் மாதிரி யாருமே இல்லை என்று சொல்வோம்.. ஆனால் கொடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது அதிலே தடையாகி விட்டால் “எனக்கு எல்லாம் தெரியும்…! வர வர எனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லை…!” என்று இரண்டு தரம் இப்படி ஆகிவிட்டால்…
1.இப்படி செய்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் என்ன மிச்சம் பிடிப்பது…?
2.குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது… குடும்பத்தை என்னத்தைக் கவனிக்கின்றீர்கள்…? என்று வந்து விடும்.

இது எல்லாம் எப்படி வருகின்றது…?

எதைக் கூர்ந்து கவர்கின்றோமோ அந்த உணர்ச்சிக்கொப்ப உணர்வின் செயல்கள் நமக்குள் வருகின்றது. எதைப் பதிவு செய்தோமோ கவர்ந்தது உயிரிலே படுகின்றது ரத்தத்தில் கலக்கின்றது. ஆக… தீமையை உருவாக்கும் சக்தியாக நமக்குள் உருப்பெறுகின்றது.

இந்த வாழ்க்கையில் எப்படித் தெரிந்து வாழ வேண்டும் என்பதற்கு எவ்வளவோ சாஸ்திரங்களை ஞானிகள் நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எத்தனையோ விதமான குணங்களை உருவங்களை வைத்துச் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

1.நல்லதைச் செய்யப்படும் பொழுது நமக்குள் அது தெய்வமாகச் செயல்படுகின்றது.
2.அதன் வழியில் என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.வசிஷ்டரும் அருந்ததி போன்று நாங்கள் இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று
4.தனது ஆசை “கணவரை உயர்த்த வேண்டும்” என்ற நிலைக்கு வருகிறது

ஒரு சில குடும்பம் ராஜ குடும்பமாகவே இருக்கும். ஆனால் மேலே சொன்னது போன்ற சிக்கல்கள் அங்கே வந்தே தீரும். பையனுக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து இந்த மாதிரியே ஆக்கிவிட்டார்கள் என்று வந்துவிடும்.

அல்லது சொந்தத்தில் யாராவது கஷ்டப்படுகின்றார்கள் என்று உதவி செய்தால் அப்பொழுது அதிலேயும் ஒரு சிக்கல் வரும்.

செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்கின்றதா என்றால் இல்லை…!

உணர்வின் தன்மை இது போன்று எதிர் நிலையாகும் பொழுது எதைக் கலந்து எது உருவானதோ அதன் வழியே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபட்ட இந்த உடல் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்ற இந்த மனித உடலில் தீமையை அகற்றும் சக்தியை இழந்திருக்கின்றோம்.

எதன் வழியில்…? ஆசையை நிமித்தம் கொண்டு…!

1.எதையோ ஒன்றை ஆசைப்படும்போது மற்றொன்றை இழந்து விடுகின்றோம்.
2.ஆசையின் தன்மை பெறப்படும் பொழுது காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.
3.இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் ஏற்படுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

தீமைகளை நீக்க வேண்டும் என்றால் “அதற்குண்டான முயற்சி” அவசியம் தேவை

தீமைகளை நீக்க வேண்டும் என்றால் “அதற்குண்டான முயற்சி” அவசியம் தேவை

 

ஒரு காரியத்தை மனமுவந்து செய்ய விரும்பினோம் என்றால் அதை எளிதில் செயல்படுத்த முடியும்.
1.ஒருவரைக் கட்டாயப்படுத்தி “நீங்கள் இதைச் செய்யுங்கள்…” என்று சொன்னால் அங்கே அந்த மனம் குறையும்.
2.இவர் என்ன சொல்வது…? நான் என்ன செய்வது…? என்று வந்துவிடும்.
3.சொல்லும் பொழுது அழுத்தமாகி அதிர்வாகி அந்த நிலை ஆகிறது.

ஆனால்… மனதை ஒன்று சேர்த்துச் செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த இயக்கம் வலிமை பெறுகின்றது.

ஒரு காரியத்திற்கு நண்பர்களாகச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். “அவர் செய்கின்றார்… நாமும் செய்வோம்…” என்று எண்ணம் கொண்டு செயல்படுத்தத் தொடங்கினால் அங்கே மகிழ்ச்சி வருகின்றது.

நீங்கள் இருங்கள் நான் செய்கிறேன் என்று சொல்வார். அது அல்லாதபடி நான் இதைச் செய்கிறேன் நீ இதைச் செய் என்கிற பொழுது “நீ என்ன சொல்வது…?” என்ற அந்த உணர்வு வந்து விடுகிறது.
1.இருங்கள்… நான் செய்கிறேன் என்று சொல்லப்படும் பொழுது
2.இல்லை… நானும் செய்கிறேன்…! என்று சொல்ல வருகின்றது
3.அப்பொழுது ஒன்றுபட்டு இயங்கும் நிலை வருகின்றது.
4.தியானம் இருப்போர் நம் எண்ணங்களை இவ்வாறு சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இந்த உணர்வு கொண்டு ஒன்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் பெருகப் பெருக… குடும்பப் பற்றும் வரும். கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்

அவ்வாறு வந்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தொழில் வளமும் மற்ற அனைத்துமே சீராக வரும். அனைவரையும் மகிழ்ந்து வாழ செய்யும் சக்தியாக… நம்மையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

1.இத்தகைய நல்ல உணர்வலைகள் வீட்டிற்குள் பரவப் பரவ நம் வீட்டின் தரைகளிலும் சுவர்களிலும் புவிஈர்ப்பிலே பதிந்து
2.நாம் பேசிய அந்தப் பேச்சு மூச்சும் அவ்வாறு பரவும் போது “நம்முடைய உணர்வே நமக்குப் பாதுகாப்பாக (ஓசான் திரையாக) மாறும்…”

நாம் வெளியில்… ரோட்டிலோ அல்லது வாகனங்களிலோ செல்லும் போது அசம்பாவிதங்களைப் பார்க்கின்றோம்… அல்லது பத்திரிக்கை டிவி வாயிலாக அதைப் பார்க்கும் போது அந்த விஷத்தின் தன்மை அதிகமாகக் கவர்ந்து விடுகிறோம்.

“அதே உணர்வுடன்” வீட்டிற்குள் வரும் பொழுது அத்தகைய அசுத்தமான உணர்வுகள் நம் வீட்டில் பதிவாகி விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு அசுர உணர்வு கொண்டவர் பேசுவதைப் பார்ப்பதையும் கேட்பதையும் நுகர்ந்து… அந்த அறிவின் தன்மை வந்தால் நம் உடலுக்குள் வரப்படும் பொழுது இதே போன்ற மூச்சலைகளாக வீட்டிற்குள் பதிவாகி விடுகிறது.

அப்படிப் பதிவாகி விட்டால்…
1.வீட்டிற்குள் நாம் நுழைந்தாலே நம் நல்ல உணர்வைத் திசை மாற்றிவிடும் “நம்மை அறியாமலே…”
2.நாமல்ல…! சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அவரவர்கள் சந்திக்கும் நிலைகளுக்கொப்பத் தான் இதனுடைய நிலைகள் வருகின்றது.

இதை எல்லாம் மாற்றிட… ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானம் இருந்து கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும்… ஒன்றான இயக்கத்தை உருவாக்கி விட்டால்… நம்மைச் சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.

இல்லை என்றால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக… பற்றென்ற நிலை வரப்படும் போது… நம்மை அறியாமலே விஷத்தின் தன்மையாக்க் கவர்ந்து… கணவன் மனைவிக்குள் வேற்றுமை உருவாகி… நம் நல்ல உணர்வுகளை… ஒன்று சேர்த்து இயக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

மன வேற்றுமை கொண்டு அடுத்து செயல்பட்டால் தொழிலும் சீராக வராது. நஷ்டமாகும் போது மீண்டும் அதிகமான சோர்வும் வேதனையும் தான் வரும்.

இதே உணர்வுகளைக் குழந்தைகள் மேல் பாய்ச்சப்படும் பொழுது இந்த குழந்தைகளும் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை வரும்…. ஒன்று சேர்த்து வாழும் நிலை இல்லாது போய்விடுகிறது.

இதைப் போன்ற நிலைகள் இருந்தெல்லாம் நாம் விடுபடுவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருவது.
1.அதன் வழியில் அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டு வாருங்கள்…
2.அதற்குண்டான முயற்சிகளை எடுங்கள்… முயற்சி எடுத்தால் தான் தீமைகளிலிருந்து மீள முடியும்.

ஒரு கட்டிடமே கட்ட வேண்டும் என்றால் மேடு பள்ளங்களைச் சமப்படுத்தித் தான் கட்டுகின்றோம். ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றாலும் சமமான நிலைகள் கொண்டுதான் அதை இயக்க முடியும்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றால் “நமது முயற்சி” கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற நிலையில் இருவரும் ஒன்றி… அப்படி வளரச் செய்யும் பருவத்தைக் கொண்டு வர வேண்டும்.
1.அப்படிக் கொண்டு வந்தால் தான் குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீக்க முடியும்…
2.எதிர்நோக்கி வரும் சில தீமைகளையும் அகற்ற முடியும்
3.எத்தகைய நிலைகள் இருந்தாலும் அதை வெல்லும் சக்தியாக இருவருக்குள்ளும் வருகிறது.

பெண்களின் உணர்வுகளும் கணவனுடைய உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்தால் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…”

இப்படிப்பட்ட ஒன்றுபட்ட உணர்வு வரும்பொழுது தீமை என்ற உணர்வு குடும்பத்திற்குள் வந்து இருவரையும் பிரிக்கும் நிலையோ நோயாக மாறும் நிலையோ வராது.

ஆனால் என் மனைவி இப்படி இருக்கிறதே அல்லது என் கணவர் இப்படி இருக்கின்றாரே…! என்று எண்ணினால் வேதனையான உணர்வுகள் நமக்குள் ஊடுருவி அதீதமான தீமைகளாக விளைந்து அதுவே நோயாகிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். அருள் வழியில் பற்றை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று இருவருமே ஒன்று சேர்த்து
1.கணவன் ஒளி பெற்று உயர வேண்டும்
2.மனைவி அந்த அருள் ஒளி பெற்று உயர வேண்டும்
3.எங்கள் இரு மனமும் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எண்ணிப் பழக வேண்டும்.

இவ்வாறு “எவரொருவர்” குடும்பத்தில் செயல்படுத்துகின்றனரோ அவர்களுடைய வாழ்க்கையில் எல்லா உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் வரும். குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளருவார்கள்.

நம்முடைய சொல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரும். எந்தச் செயல்கள் செய்தாலும் அது எல்லாம் வளர்ச்சியின் பாதையிலே செல்லும் சீராக வரும். விவசாயம் செய்தாலும் பயிர்கள் நல்ல மகசூல் தரும்.

இதையெல்லாம் நாம்
1.குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து நிரூபித்து காட்ட வேண்டும்
2.குரு கொடுத்த அருளின் துணை கொண்டு எல்லாவற்றையும் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்வதால் தான் நம்முடைய மகிழ்ச்சி அடிக்கடி பறிபோகிறது

பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்வதால் தான் நம்முடைய மகிழ்ச்சி அடிக்கடி பறிபோகிறது

 

சாமிக்கு குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார்…! நாம் எங்கே பார்க்கப் போகின்றோம்…? என்று எண்ணினால் யாம் சொல்லக்கூடிய அந்த உயர்ந்த உணர்வுகளைப் பெற முடியாது.

யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே…
1.என்னமோ அவர் குருநாதரிடம் சக்தி பெற்றார்
2.நாம் என்றைக்கு எதைப் பெறப் போகின்றோம்…? என்று எண்ணி விட்டுவிட்டால்
3.எம்முடைய உபதேசங்கள் உங்களுக்குள் பதிவும் ஆவதில்லை… உதறிவிடுகிறோம் என்று அர்த்தம்.

குருநாதர் எனக்குக் கொடுத்ததை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… பெற முடியும் என்ற அந்த ஆசையிலே தான் இதைச் சொல்கின்றேன். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

தீமைகள் உங்களைத் தாக்குகிறது என்றால் அதை எடுக்கக் கூடாது… “அதைத் தான் உதற வேண்டும்….”

ஏனென்றால் நம்முடைய உடலில் எத்தனையோ விதமான குணங்கள் உண்டு. அந்தந்தக் குணங்கள் வரப்படும் பொழுது அதனால் ஏற்பட்ட அணுக்களும் உண்டு.

நீங்கள் சங்கடப்படவே வேண்டாம். சங்கடப்பட்டதைக் கேட்டு அத்தகைய அணுக்கள் உடலில் விளைந்திருந்தால்
1.குடும்பத்தில் கன்னா…பின்னா… என்று ஒருவர் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்
2.அதைக் கேட்ட பின் அவரைப் பார்த்தபின் நம் உடலில் விளைந்த அணுக்கள் அதை உணவாக எடுத்து இங்கே வந்துவிடும்.
3.அறியாமலே நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தும்… குடும்பத்தில் சங்கடமான சொல்லைச் சொல்ல வைத்துவிடும்.

அந்த நேரத்தில் அணுக்கள் மீண்டும் தன் உணர்வை உணவை எடுக்காதபடி அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலக்க வேண்டும் என்று பல முறை அதை எண்ண வேண்டும்.

அவ்வாறு எண்ணிவிட்டு மகரிஷிகள் அருள் சக்தி சங்கடப்பட்டவர்கள் பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையிலே நலம் பெறும் சக்தி உருவாக வேண்டும்… என்று இந்த எண்ணத்தை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இதை எண்ணினால் அவர்களுக்கு அது கிடைக்கும்.
1.ஆனால் அவர்கள் எண்ணவில்லை என்றாலும் அவருடைய சங்கட உணர்வு நமக்குள் விளையாதபடி நாம் மாற்றிக் கொள்கின்றோம்.
2.இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும் அடிக்கடி நான் இதை சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

ஏனென்றால் நாம் எண்ணியது எதுவோ அதை உருவாக்குவது தான் உயிருடைய வேலை.
1.எண்ணியதைத் தான் வாழ்க்கையில் வளர்க்க முடியுமே தவிர
2.ஒருவருடைய நிலைகளை நாம் பிரதிபலன் எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது.

ஆனால் அந்தப் “பிரதிபலன்… எதிர்பார்ப்பு…” எதுவாக இருக்க வேண்டும்…?

நாம் பார்த்த குடும்பம் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அனைத்தும் நலம் பெற வேண்டும் அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும் இந்த குடும்பம் பேரானந்தம் பெற வேண்டும் நாம் எண்ணி அதை அவர்களுக்குப் பாய்ச்சும் போது
1.அதன் வழி அவர்கள் வாழ்க்கையில் செயல்பட்டு அங்கே நல்லதனால்
2.அதைக் கண்டு நாம் மகிழ வேண்டும் அதைத் தான் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

மற்றவர்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்ற நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும் என்று அதை “நம்முடைய எதிர்பார்ப்பாக” வளர்க்க வேண்டும்.

1.அந்த எதிர்பார்ப்பு நல்ல உணர்வின் அணுக்களாக நமக்குள் உருவாக்கும்…
2.அத்தகைய அணுக்களாக உடலில் விளையும் தீமைகள் நமக்குள் புகாது தடுக்கச் செய்யும்

ஆனால் பற்றை வேறு பக்கம் வைத்து. எதிர்பார்ப்பை அதிலே வைத்தோம் என்றால் என்ன ஆகும்…?

ஒருவர் மீது நமக்குப் பற்று அதிகமாக இருந்தால் அவர் என்ன தப்பு செய்தாலும் “சரி” என்று சொல்வோம்

அதே சமயத்தில் பிடிக்காதவர்களாக இருந்து என்னதான் நல்லதைச் செய்தாலும் உடனே “குறை கூறும் நிலைகள் தான்” நமக்குள் வரும். அவர்களைப் பார்த்த உடனே இந்த மாதிரி எண்ணங்கள் தான் வரும்.

இதைப் போன்ற நிலையில் இருந்து அந்த விஷத்தை ஒடுக்கும் ஆற்றலை நாம் பெற வேண்டும்
1.ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
2.நமக்குள் அந்தத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது… மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது… மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

 

உதாரணமாக… கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்…!

1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.

“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.

மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.

1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.

வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.

நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி…” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.

பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.

வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா…? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.

பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எனண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்… சுவை கெட்டுவிடும்.

1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.

அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ… அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்… இணைந்து வாழ்வதும்… பிரிந்து வாழ்வதும்… எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்… அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.

நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.

எண்ணங்களின் இணக்கமும்… எண்ணத்தின் உணர்ச்சியும்… நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது…? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.

உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்… உணர வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது…” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.

கணவன் மனைவிக்குள் “பற்று…” எப்படி இருக்க வேண்டும்…?

கணவன் மனைவிக்குள் “பற்று…” எப்படி இருக்க வேண்டும்…?

 

குடும்பத்தில் சஞ்சலம் என்று உணர்வு வந்து விட்டால் கணவன் மீது பற்றாக இருக்கும் மனைவி கணவர் வெளியே செல்லப்படும் பொழுது அவருடைய தொழில் எப்படி இருக்கின்றதோ…? அங்கே என்ன நடக்கின்றதோ ஏது நடக்கின்றதோ…? என்று மனைவி அடிக்கடி எண்ணினால் இதே உணர்ச்சிகள் கணவருக்குத் தூண்டப்பட்டு அங்கே சிந்தனையற்ற செயல்களாகி… பகைமை ஆகி… தொழில் செய்யும் இடங்களில் தீமைகள் வருகின்றது.

கணவன் மனைவிக்குள் இது போன்று வருகின்றது. இதைத் தடுக்க மனைவி எப்படி எண்ண வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தன் உடலில் மனைவி அதை வலுவாக்கிக் கொண்டு அந்த அருள் சக்தியைக் கணவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.
1.அவருக்கு அந்த ஊக்கமான நிலை கிடைக்க வேண்டும்
2.அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்
3.அவர் பார்ப்பவருக்கெல்லாம் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்

கணவர் மீது பற்று இருப்பினும் அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலும் எண்ணும் பொழுது அவருக்கு வரக்கூடிய தீமையில் இருந்து மீட்க முடியும். கணவனுக்குத் தீமை வராது மனைவி காத்துக் கொள்ள முடியும்.

ஆகவே… துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளை காலை துருவ தியானத்தில் இரண்டு பேருமே எடுத்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளை இணைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நுகர்ந்து பேரின்பம் பெறும் உணர்வாகப் பெற்று இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நோயாளியை உற்றுப் பார்த்து நோயை அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் இயக்காதபடி அதை அடக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயாளியை நாம் பார்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் எண்ணி எடுத்தால் அது விஷ்ணு தனுசு.

நோயாளி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டால் இந்த உணர்வுகள் அங்கே உருவாகின்றது. அவர் உடல் நலம் பெறும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

இத்தகைய வல்லமை பெற்ற சக்தியாக வர வேண்டும் என்றால் காலையில் கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
1.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
2.எங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்
4.நுகரும் அந்த உணர்வுகள் எல்லாம் உயிரின் இயக்கத்தில் ஒன்றி அது பிரணவமாகின்றது (ஜீவன் பெறுகிறது)
5.உயிரான ஈசனிடம் பட்ட பின் ஓ…! என்று உணர்ச்சிகளாக மாறி இரத்தநாளங்களில் கலக்கின்றது
6.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உடலிலுள்ள அணுக்களிலே படரப்படும் பொழுது தீய அணுக்கள் ஒடுங்குகின்றது.

ஆனால் அதே சமயத்தில் தீய அணுக்களை நுகர்ந்தால் அதன் உணர்ச்சி கொண்டு இயக்கப்பட்டு நல்ல அணுக்கள் செயலற்றதாகிந்றது… நாம் சோர்வடைகின்றோம்… சஞ்சலப்படுகின்றோம்…! இந்த உணர்வு அதிகரித்தால் உடலில் மாற்றமே (வலியோ நோயோ) வருகின்றது.

ஆகவே கணவன் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இரு உணர்வும் ஒன்றாகி விட்டால் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கல்யாணம் ஆகிவிட்டால் மனைவியைக் கண்டபடித் திட்டுவதும்… உதைப்பதும்… போன்ற நிலையில் சிலர் இருப்பார்கள்.

அதே சமயத்தில் பெண்களும் கணவர் செயல் பிடிக்கவில்லை என்றால் அவரைச் சாபமிடும் நிலைகளுக்கே வருகின்றார்கள்.

இது போன்ற நிலைகளில் இருவரும் செயல்பட்டால் மனிதனாக இருக்கக்கூடிய நிலையினைப் பிரிக்கப்பட்டு
1.எதனின் விஷத்தின் தன்மை இருவருக்குள்ளும் கலந்ததோ அதற்குத்தக்க அடுத்து தீமையான உடல்களுக்குத் தான் செல்ல நேரும்.
2.அடுத்து மனித உருப் பெரும் தகுதியை இழந்து விடுகின்றோம்
3.நரக லோகத்தைச் சந்திக்கும் நிலையே வருகின்றது.

இது போன்ற நிலையிலிருந்து விடுபட குடும்பத்தில் கணவன் மனைவி ஒவ்வொருவரும் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று கணவன் மனைவி ஒன்றி வாழ்ந்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்து அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் பற்று கொண்ட நிலையில் வேதனையைச் சேர்த்து விட்டால் அந்த வேதனை உருவாக்கப்படும் பொழுது இங்கே இருவருக்குள்ளும் நோயாக மாறுகின்றது அதாவது
1.”வெளியிலே எனக்கு இடைஞ்சல்…” என்று கணவன் மனைவியிடம் சொல்லப்படும் பொழுது
2..அதை ஏற்று மீண்டும் திருப்பி கொடுக்கும் நிலையாக ஆண் பெண் என்ற நிலையில் “நோயே…” இங்கே ஜீவன் பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் பெற வேண்டும்… என்று மனைவியும் மனைவி பெற வேண்டும் என்று கணவனும் இணைத்து விட்டால்… அது மிகவும் உயர்ந்த சக்தியாக இங்கே ஜீவன் பெறுகின்றது.

அதைத் தான் கணவனும் மனைவியும் உருப் பெறச் செய்ய வேண்டும்.

அன்று அகஸ்தியன் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று கணவன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கையும்

அன்று அகஸ்தியன் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று கணவன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கையும்

 

இப்போது கணவன் மனைவியுமாக வாழ்பவர்கள் இரு மனமும் ஒன்றித் தான் வருகிறார்கள்.

எப்படி…?

தொழிலில் ஒரு நஷ்டமாகி விட்டால் என்ன ஆகிறது…?

நல்ல முறையில் நான் வேலை செய்கின்றேன் ஆனால் என்னை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று கணவன் மனைவியிடம் சொல்லும் நிலை வருகின்றது.

மனைவியோ தன் கணவரை நினைத்து வேதனையை உருவாக்கிக் கொள்கிறது. கணவனை நினைக்கும் போதெல்லாம் வேதனையைத் தான் மனைவியாலும் எண்ண முடிகிறது.

வேலைக்குச் சென்று விட்டார் என்றால்…
1.“இந்த மாதிரி நஷ்டமாகின்றதே…!” என்று வேதனையாக மனைவி நினைக்கும் போது
2.கணவனுடைய சிந்தனை குறைந்து செய்யும் வேலையில் பலவீனமாகும்.

ஒரு வியாபாரத்திற்கே செல்கிறார் என்றால் “அங்கே கலவரம் நடக்கிறது… இங்கே சண்டையிடுகின்றார்கள்…” என்று வீட்டில் பெண்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அதே உணர்வு தன் கணவருக்குத் தாக்கப்பட்டுப் பயமும் பதட்டமும் வந்து கொண்டேயிருக்கும்.

பதட்டமும் பயமும் வந்ததும் இவர் வைத்திருக்கும் பொருளைக் கூட இவருக்குத் தெரியாமல் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். பொருள் காணாமல் போகும்.

இந்த மாதிரிச் சில நிலைகள் எல்லாம் நடக்கும்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றார்கள்
1.ஆனால் வேதனை கலந்து தான் இருக்கின்றார்கள்.
2.வேதனையைத் தான் இருவரும் வளர்க்க முடிகிறது
3.இருவர் உடலிலும் நோயாக மாறுகிறது.

வேதனை அதிகமாகும் போது கடைசியில் இந்த உணர்வுகள் விஷமாகப் போகும் போது இருவர் உடலிலும் பகைமையாகின்றது. ஆக வேதனையில் தான் ஒன்று சேர்த்து வாழ்கின்றார்கள்.

இது தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் எப்படி வாழ்ந்தனர்…?

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தையும் அறிந்து… அண்டத்தையும் அறிந்து… அதனின் இயக்கத்தைத் தன்னில் உணர்கின்றான். அவனுடைய பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

1.தான் கண்டறிந்தவைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்.
2.மனைவியும் தன் கணவன் சொன்ன நிலைகளை ஏற்று அதன் வழி நடக்கிறது.

மனைவி உயர்ந்து வருவதைக் கண்டு அகஸ்தியன் மகிழ்ச்சி அடைகின்றான். அவர்கள் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல் வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாக மாறுகின்றனர்.

1.இரண்டு உயிரும் தனியாக இருந்தாலும் ஒரு உயிராக மாறிவிடுகின்றனர்…
2.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றனர்.

அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றனர்.

அதுவே நாம் அடைய வேண்டிய எல்லை.

துன்புறுத்தும் உணர்வுகளை நாம் நீக்கினால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்

துன்புறுத்தும் உணர்வுகளை நாம் நீக்கினால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்

 

வயலை உழுகும் போது சீதா என்ற குழந்தை கிடைத்தது. அதை ஜனகச் சக்கரவர்த்தி எடுத்து வளர்த்தான் என்று காவியங்கள் கூறுகிறது.

ஜனகச் சக்கரவர்த்தி யார்…?

நாம் உழுது பயிரிடும் போது அந்தப் பயிரிலிருந்து வரக்கூடிய மணம் சுவை கொண்டதாக இருக்கிறது. அது தான் சீதா. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கிறது. “சீதாலட்சுமியாக…” அந்த ஜனகச் சக்கவரவர்த்தி சீதாவைத் தத்துப் பிள்ளையாக எடுத்து வளர்க்கின்றார்.

நாம் உழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது அந்தச் சுவையின் சத்து நமக்குள் எப்படி வளர்கிறது…? என்ற நிலையை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

காட்டிலே விளையும் பயிர்கள் வெளிப்படுத்தும் சத்தினையும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்கிறது. சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வளர்க்கிறது. ஆனால் அது விஷச் செடிகளாக இருக்கின்றது.

இப்படி இத்தகைய இரண்டு விதமான உணர்வின் சத்துகளும் (நல்ல பயிர்கள், காட்டிலே விளையும் விஷமான பயிர்கள்) உலகில் பரவப்படும் போது அந்த உணர்வின் இயக்கத்தை நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

அப்போது… நற்குணம் கொண்ட சீதாவை திருமணம் செய்ய வல்லமை பெற்றவர்கள் அவரவர்கள் திறமைகளைக் காட்டுங்கள்…! என்று பறைசாற்றுகின்றனர்.

பறைசாற்றும் போது அவரவர்கள் வில்லை எடுத்துக் குறி வைத்து மற்றவரை வீழ்த்துகின்றனர். செடி கொடிகளில் விளைவதையும் அதனின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்ளும் போது அதை எவரெவெர் நுகர்கின்றனரோ அந்த உணர்வின் சொல்லாக வெளிப்படுத்தி மற்றதை வீழ்த்துகின்றனர்.

1.உழுது பயிரிட்ட உணர்வுகள் ஒன்றை அரவணைக்கிறது என்றும்…
2.அப்போது மகிழச் செய்யும் எண்ணங்கள் வருகிறது என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
3.ஆனால் விஷம் கொண்ட செடியின் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் உடனே அலறும் தன்மையாக வருகிறது என்றும்
4.நுகர்ந்தவரை வீழ்த்தச் செய்கின்றது என்றும் காட்டுகின்றனர்..

உழுது பயிரிடப்பட்டதை உணவாக உட்கொள்ளும் போது அந்த உணர்வின் சொல்லாக விளையப்படும் போது கேட்போர் நிலைகளை அது அரவணைக்கும் தன்மையாக வருகிறது.

இந்த உணர்வுகளின் இயக்கங்களைத் தெளிவாக்குவதற்காக
1.எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்றும்…?
2.சுவைக்கொப்ப உணர்வுகள் உருவாவது “அது தான் எண்ணம்…” என்றும்
3.இவை எல்லாம் உருவாக்குபவன் அனைத்திற்கும் சக்கரவர்த்தி (ஜனகர்) சூரியன் என்றும் தெளிவாக்குகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய அவரவர்கள் வைத்திருக்கும் வில்லைக் (ஆயுதம்) காட்டித் திறமைகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் இராமனோ “தீமை விளைவிக்கும் அந்த வில்லையே ஒடித்துவிடுகின்றான்…!”

ஒடித்தபின் தீமையான எண்ணங்களை நீக்கிய பின் அந்தச் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறான்.
1.அரவணைக்கும் தன்மையாக மற்றொன்றை மகிழ்ச்சியுடன் தனக்குள் எண்ணினால்
2.அந்தச் சக்தி தன்னுடன் இணைந்தே வாழும் என்றும் அதைக் “கல்யாணராமா…” என்றும் சொன்னார்கள்.

ஆகவே நாம் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலுக்குள் பரவச் செய்து தீமை செய்யும் பகைமை உணர்வுகளை எல்லாம் ஒடித்துவிட வேண்டும். அப்போது நாம் மகிழ்ச்சியை அரவணைத்துக் கொள்கிறோம் – கல்யாணராமா.

ஏதிரி என்றும் எதிர்நிலை என்றும் நமக்குள் வளர விடக் கூடாது

ஏதிரி என்றும் எதிர்நிலை என்றும் நமக்குள் வளர விடக் கூடாது

 

1.மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே மறைமுகமாகத் தீங்குகள் எப்படி விளைகிறது…?
2.நம்மை அறியாமல் தீமைகள் எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிகளுக்கும் தூண்டப்பட்டு இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? என்று
5.இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நமக்கு அடிக்கடி தொந்தரவு செய்கிறார் என்று எண்ணுகின்றோம். அவ்வாறு எண்ணும் பொழுது அந்த உணர்வு
1.நம் உடலுக்குள்ளும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது
3.நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்… அங்கேயும் வெறுக்கும் உணர்ச்சிகளைத் தான் தோற்றுவிக்கின்றது.

ஆகவே அதனதன் உணர்வுக்கு அது அது போராடும். அங்கேயும் அதனதன் உணர்வுக்காகப் போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்த்திடும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் நாரதனாக இயக்கத் தொடங்குகிறது. நாரதனாக நமக்குள் வந்தபின்… “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கிறோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கிறது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வலுப்படுத்திக் கொண்டு அங்கே யார் மீது வெறுப்படைந்தோமோ நம் கண்ணின் நினைவலைகளை அவர் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள்… (அதாவது) கண்ணனும் அந்த நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3.எதிரியின் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அந்த “நாரதன் வேலையைச் செய்வான்…”

நம்முடைய உணர்வுகள் அங்கே பகைமையாக்கும் உணர்வாக முதலிலே சென்றது. அடுத்து இந்த அருள் ஞானியின் உணர்வுகள் அங்கே சென்றபின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

1.நாரதன் கண்ணனிடம் (கண்கள் வழி) இவ்வாறு செயலாக்கிய பின்
2.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
3.கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
4.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்

எப்போதுமே “எதிரிகளை…” எதிரிகள் என்று எண்ணாதபடி… அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுக்கப்படும் சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க… அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும் என்றும்
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வரவேண்டும் என்றும்
3.இந்த உணர்வினை நமக்குள் பதிவாக்கிக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது… “அவர் எனக்குத் தீங்கு செய்தார்…” என்ற அந்த உணர்வை நமக்குள் வளர்த்து நம்மை பலவீனப்படுத்துவதற்குப் பதில்
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து
2.அந்த உணர்வினைக் கண் கொண்டு செலுத்தப்படும் போது நாரதனாக அங்கே செல்லும்.

அங்கே சென்ற பின் அவர் செய்த தீங்கினையும் அங்கே வெளிப்படுத்திக் காட்டும். அப்போது நம் மீது வரக்கூடிய உணர்வுகளைப் பலவீனப்படுத்துகின்றது.

இதைப் போன்று அடிக்கடி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் எண்ணங்கள் கொண்டு நம் இரத்தநாளங்களில் பெருக்கப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர்கின்றது.

இதற்கு முன்னாடி அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சங்கடமோ சஞ்சலமோ வெறுப்போ வேதனை போன்ற உணர்வுகளால்… இரத்த நாளங்களில் உருப்பெற்ற இந்தக் கருக்கள் அனைத்தும் அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கச் செய்கின்றது.

அதைத் தடுக்கத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள்ம் இதைக் கருக்களாக உருவாக்கப்படும் போது இரத்த நாளங்களில் இது பெருகுகின்றது.

1.ஏனென்றால் உடலுக்குள் இரத்தம் போகாத இடமே இல்லை
2.அருள் உணர்வுகளை இப்படி எண்ணி எடுத்துக் கொண்டால்
3.பாதுகாப்பான நிலைகளுக்கு நம்மை அழைத்துச் சென்று பகைமை உருவாகாதபடி தடுக்கும்.

அதைத் தான் காட்டிலே “இராமனுக்குக் குகன் உதவி செய்கிறான்…” என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. (இராமன் – எண்ணங்கள்; குகன் – இரத்தநாளங்கள்)