நாம் எடுக்க வேண்டிய பிரமாணம்

நாம் எடுக்க வேண்டிய பிரமாணம்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வை
1.உலக மக்கள் அனைவரும் பெற்று…
2.இருளை அகற்றிப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்.

அவர் உணர்வை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழுகின்றார்கள். துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றி அருள் உணர்வைப் பெற்று ஒளி உணர்வாக வருவதை நுகர்ந்தோர் அனைவரும் “சப்தரிஷி மண்டலங்களாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் போன்று நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெபராக இணைந்துள்ளோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெற்று
1.அதன் உணர்வின் தொடர்பு கொண்டோர் அனைவருக்கும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று
2.நமக்குள் ஒன்றுபட்ட உணர்வின் வலுவைச் சேர்த்து அனைவரும் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.அனைத்து குடும்பங்களும் ஒன்றுபட்டு வாழத் தவமிருப்போம்.

கணவன் மனைவி இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற்று பேரரருள் உணர்வுகளைத் தனக்குள் கூட்டி அவர்கள் பார்வையில் இருளை அகற்றிடும் அருள் ஞானக் குடும்பமாக வளர்ந்திடத் தியானிப்போம்.

யாம் உபதேச வாயிலாக ஒளி உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிகளில் இந்த உணர்ச்சிகளை ஊட்டி… யாம் இட்ட உணர்வுகள் அனைத்தையும் கண் வழி கவர்ந்து… மூக்கு வழி சுவாசித்து… உயிர் வழி நுகர்ந்து… அந்த அருள் உணர்வுகள் அனைத்தையும் உங்கள் ரத்த நாளங்களில் இப்போது கலக்கச் செய்கிறோம்.

எல்லா உணர்வுகளையும் எடுத்துத் தான் துருவ நட்சத்திரம் ஒளியானது. அதாவது
1.மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி மகிழச் செய்து மகிழ்ந்திடும் உணர்வுகளை விளைய வைத்து
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் அந்த ஒளியின் சரீரமாகப் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலை பிறவி இல்லாத நிலை அடைந்தது துருவ நட்சத்திரம்.

அனைத்துக் குடும்பங்களிலும் பேரின்பப் பெரு வாழ்வு வாழச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஆயுள் கால மெம்பராக இணைவோம். அனைவரையும் நாம் வாழ்த்துவோம். அனைத்துக் குடும்பங்களும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் எண்ணுவோம்..

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அனைவரும் பெற்று இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி அனைத்துக் குடும்பங்களும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நாம் பிரார்த்திப்போம்.

1.அருள் வழி வாழ்வோம்… ஒன்றுபட்டு வாழ்வோம்
2.ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று இதை ஒரு பிரமாணமாக எடுத்துக் கொள்வோம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக உலக மக்களை இருளில் இருந்து அகற்றச் செய்யும் அருள் உணர்வாக நாம் படரச் செய்வோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply