நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவே என்றும் வெளிப்பட வேண்டும்

நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவே என்றும் வெளிப்பட வேண்டும்

 

குடும்பத்தில் மிகவும் கஷ்டம் என்று ஒருவர் சொன்னால் அதை அதிக நேரம் கேட்டு நமக்குள் பதிவாக்கக் கூடாது. கேட்டவுடனே…
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
2.எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

தியானித்த பின் கஷ்டத்தைச் சொன்னவரிடம்… உங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருப்பீர்கள்… உங்கள் தொழில் நன்றாக இருக்கும்… குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பீர்கள்… செல்வம் செல்வாக்கு பெருகும்… என்று இதைச் சொல்ல நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் உடலில் வந்த நோயைப்பற்றிச் சொன்னாலும் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள். பின் அவரிடம்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் இரத்த நாளங்களில் கலந்து உங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து நீங்கள் நலம் பெறுவீர்கள்…! என்று சொல்ல வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவர்களை ஏங்கித் தியானிக்கும்படி சொல்ல வேண்டும்
2.உடலில் எங்கு வலி இருக்கிறதோ அவர்களை அங்கே நினைக்கச் செய்து
3.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி எடுக்கும் இடங்களில் படர்ந்து வலி நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால் அவருடைய நோய் நீங்க நீங்களே உதவி செய்கின்றீர்கள். ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்காதபடி
2.உடனடியாக (SUDDEN ஆக) நோய் நீங்கிவிடும் என்று சொல்லக்கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று முதலில் ஏங்கி அந்தச் சக்திகளை வலுவாக்க வேண்டும்.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவருடைய இரத்த நாளங்களில் கலந்து அவர் உடலில் இருக்கக்கூடிய சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ மற்ற எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று சொல்லிப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் இவ்வாறு இருந்தாலும்
1.கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்…
2.கணவர் உடல் நலம் பெற வேண்டும் என்றும் மனைவி இதே மாதிரி சொல்லி
3.ஒருவருக்கொருவர் இந்த உணர்வை பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இதன்படி செய்து வந்தால் எந்த நோயாக இருந்தாலும் அதை நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். பழகி விட்டால் சரியாகிவிடும்.

ஆகவே நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாக இருக்க வேண்டும்.

தீமைகளை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக நாம் விடும் இத்தகைய மூச்சலைகள் இந்த பூமியிலே பரவப் பரவ…. விஞ்ஞான அறிவால் காற்று மண்டலம் நச்சுத் தன்மை அடைந்து வரும் இந்த வேளையில் அதை மாற்றிடும் சக்தியாகப் பரவும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்… நோய்களை நீக்கும் சக்தி பெற வேண்டும் என்றும்… நாம் ஏங்கி எடுத்து அந்த உணர்வுகளைப் பரப்பும் போது பூமியிலே அதிகமாக இது பரவும்.

ஒவ்வொருவரும் இதைச் செய்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பரவுகிறது. எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

உதாரணமாக நண்பனுக்கு நண்பன் பழகும்போது “நன்மை செய்தான்…” என்றால் விக்கலாகிறது… நாம் செய்யும் காரியமும் அப்போது நல்லதாகிறது.

காரணம்… நன்மை செய்த உணர்வுகள் இங்கே படர்ந்திருக்கும் நிலையில் அதை எண்ணும்போது உடனே அவர்கள் உடலிலே பதிந்திருக்கும் உணர்வுகள் அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.

ஆனால் பழகிய பின் தீமை செய்திருந்தால் அதைப் பதிவு செய்து எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று எண்ணினால் உடனே அங்கே இயக்கிப் புரையோடச் செய்கின்றது… காரியங்களும் தடையாகின்றது.

இது போன்ற உணர்வின் இயக்கங்களை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால்
1.நண்பர்கள் உடல் நலக் குறைவாக இருந்தாலும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.நண்பனின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இவ்வாறு நாம் செய்து துன்பங்களை நீக்கிப் பழகுதல் வேண்டும் (இல்லை என்றால் நண்பரிடம் விளைந்தது இங்கேயும் பரவும்)

கூட்டுத் தியானங்கள் ஆங்காங்கு நடக்கும் பொழுது புதிய அன்பர்கள் வந்தாலும் அவர்களுக்கும் இந்த முறையைச் சொல்லிக் கொடுத்து… நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள்…! உங்கள் குடும்பம் நலமாகும் தொழில் நலமாகும்… உடல் நோய்கள் நீங்கும் என்ற வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் வழியில் கூடுமானவரை அவர்கள் உடலில் இருக்கக்கூடிய சிரமங்கள் குறைந்தால் நீங்கள் சொல்வது போல் அவர்களும் இந்தத் தியானத்தைச் செய்ய முற்படுவார்கள்.
1.அவர்கள் விடும் நல்ல மூச்சுகளும் இந்தப் பூமியிலே பரவும்
2.ஒன்று சேர்ந்து வாழும் சக்திகள் நம் பூமியிலே அதிக அளவிலே வளரும்.

பணம் சம்பாரிக்கத் தான் இன்றைய கல்வி… தன்னை உணர்வதற்கல்ல…!

பணம் சம்பாரிக்கத் தான் இன்றைய கல்வி… தன்னை உணர்வதற்கல்ல…!

 

அறியாதவர்கள் அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலேயே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர்… கல்லாதவர்… அறிந்தவர்… அறியாதவர்… எழை… செல்வந்தன்… இப்படிப் பல பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இந்த உலகமே சுழல்கின்றது.

1.கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும்
2.கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு மனப்பான்மையும்
3.தன் மனதிலுள்ளே ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த
4.மாய ரூபத்தையே மனதினில் கலக்கவிட்டு உலக மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு…! என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தியுள்ளார். இன்றுள்ள மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணம் தான் அதிகமாக உள்ளது. அதையே பெரிய படிப்பாக எண்ணி வாழ்கின்றார்கள்.

1.ஏட்டுப் படிப்பிற்குப் பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தியுள்ளதால்
2.அந்த நிலைக்காக ஏங்குவோர் பலர் உள்ளனர்.
3.படிப்பும் பட்டமும் அளித்த மாய ரூபங்கள் தாம் இவை.

தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
1.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
2,அன்று கம்பர் எழுதிய கவிதையெல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்றுப் படிக்கப்பட்டதப்பா..?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசகரும் வான்மீகியும் இப்படி எண்ணிலடங்கா ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டுதான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளிகளிலும் கல்லூரியிலும் கல்வி என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப் படிப்பைப் படித்ததற்கு இன்றுள்ள உபாத்தியாயர்கள் மதிப்பெண்களும் தருகிறார்கள். மதிப்பெண் பெறுவதில் தான் இருக்கின்றார்கள்.
1.ஆக இன்றுள்ள இக்கலியுகமே
2.தானாக உணர்ந்து செயல்படும் நிலையை முழுவதுமாக மாற்றி வருகிறது.

உலகின் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மனிதனின் எண்ணத்தில் மட்டும்
1.தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு
2.பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழ்கின்றான் இன்றுள்ள மனிதன்.
3.மனிதர்களின் எண்ணமெல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
4.பிறர் சொல்லிய உண்மைகளையே ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
5.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது. இந்தச் செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இனியாவது இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா…!

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அந்தச் சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும்.

தானும் ஒரு திருவள்ளுவராகவும்.. கம்பராகவும்… வால்மீகியாகவும்… வியாசகராகவும்… அந்த ரிஷிகளைப் போல ஆகலாம்…! என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து இன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

வீண் விவாதத்திற்கு இடம் தராமல் கற்கும் கல்வியால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
1.இந்த உலக நன்மைக்காக
2.இந்த உயிரணுக்களின் நன்மைக்காக
3.இந்த விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
4.கல்கி என்னும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கையின் சக்தியைப் பெற்றிடுங்கள்…!

நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக (இயற்கைக்கு) அடிபணிந்து வாழ்ந்திடலாம்.

கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒளியாக ஆவதற்குத் தான் திருப்பூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினர் ஞானிகள்

கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒளியாக ஆவதற்குத் தான் திருப்பூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினர் ஞானிகள்

 

கணவன் இறந்தாலும் அவர் உடலிலே விளைந்த உணர்வுகள் மனைவியின் உடலிலே நிலைத்திருக்கின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு
1.என்றும் என்னுடன் அவர் இருக்கின்றார்… “இருக்க வேண்டும்…!” என்பதற்குத்தான் மாங்கல்யத்தை அணிகின்றனர்.
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் மாங்கல்யத்தின் தத்துவமே
3.என்றுமே கணவர் தன்னுடன் உறுதுணையாக இருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்குத் தான்.

மாயவரத்தில் ஒரு கிராமத்தில் அவர் ஒரு டாக்டர். அவருடைய தாயாருக்கு வயது 65 அல்லது 70 இருக்கும். கணவர் உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது.

அந்த ஊரின் சமூகத்தின்படி பொட்டை நீக்கவேண்டும்… தாலியைக் கழட்ட வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டார்கள்.

நான் (ஞானகுரு) அங்கே மாயவரம் சென்றிருக்கும் பொழுது இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லும் பொழுது அந்த அம்மா பொட்டையும் கலைக்கவில்லை… தாலியையும் கழட்டவில்லை.

1.கணவர் என்னுடன் தான் இருக்கிறார்… என்னுடன் தான் இருக்கிறார்… என்ற நிலையைச் சொல்லி
2.அவருடைய உணர்வு என்னுடன் உள்ளது
3.சாமி சொன்னபடி அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றே செயல்படுத்தியது.

உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மா அவருடைய உணர்வின் துணை கொண்டு… எங்கள் உடலில் இருப்பதை அதனின் வலுக் கொண்டு தான் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தோம்.

உடல் பெறும் உணவுகள் அங்கே கரைந்துவிட்டது… ஒளி பெறும் சரீரம் அங்கே நிலைத்திருக்கின்றது.

1.இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் அவருடன் நான் தொடர்பு கொள்கின்றேன்… காண்கின்றேன்.
2.அந்த உணர்வின் ஒளியின் நிலை கொண்டு எனக்குள் அவ்வப்போது அந்த நினைவாற்றல் வரும் பொழுது
3.இந்தப் புவியில் வரும் இருளை நீக்கும் அருளாற்றல் எனக்குக் கிடைக்கின்றது என்று அந்த அம்மா செயல்படுத்தியது.

இது நடந்த நிகழ்ச்சி…!

ஆனால் சாங்கியங்களைச் செய்து மாங்கல்யத்தைப் பறிப்பதும் பெண்களை அவமதிப்பதிலும் தான் இருக்கின்றார்கள். பெண்களை ஒரு கருவியாகத் தான் மதங்கள் பயன்படுத்தி உள்ளதே தவிர
1.சம உரிமை கொண்டு கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும் நிலை இல்லை
2.காலப்போக்கில் அவை அனைத்துமே மறைந்து போய்விட்டது.

கணவனும் மனைவியும் என்றும் ஒன்றியிருந்து ஒளியின் உணர்வின் நினைவு கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது இந்த உடலை விட்டு முதலில் ஒருவர் சென்று அடுத்து ஒருவர் சென்றாலும் “அங்கே தான் செல்ல முடியும்…”

இப்படிப்பட்ட உணர்வுடன் காலை துருவ தியானத்தில் எடுக்கப்படும் போதெல்லாம் அங்கே ஒளியான கணவன்/மனைவி உணர்வுடன் தொடர்பு கொள்கிறது. அதன் மூலம் அந்தக் குடும்பத்திற்கும் உயர்ந்த உணர்வின் ஞானங்களும் கிடைக்கின்றது.

ஆகவே யாராக இருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் உடல் தான் செல்கிறது. ஆனால் அவருடன் வாழ்ந்த உணர்வுகள் இவரை (உடலில் பதிந்திருப்பது) விட்டு அகலவில்லை இந்த உணர்வை எப்படிப் போக்குவது…?

பொட்டையும் தாலியையும் நீக்க வேண்டும் என்றால் உறவாடிய உணர்வுகள் உடலில் பதிந்துள்ளது… நினைவுகள் வருகின்றது… சொற்கள் வருகிறது. இதை எப்படி நீக்குவது…?

சாங்கியங்களைச் செய்து கணவன் மனைவி ஒன்றிணைந்து ஒளியாகும் பழக்கங்கள் காலத்தால் அந்த உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது.

ஆகவே
1.திருமணம் ஆகிவிட்டால் கணவனும் மனைவியும்
2.நாங்கள் ஒன்றி வாழ்கிறோம் என்ற இந்த உணர்வுடன் தான் வாழ வேண்டும்.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

 

1.மனித எண்ணத்தின் வேகம் என்பது
2.இந்த உலகிலுள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று
3.பல முறை சொல்லியுள்ளேன்.

நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோதவிடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுவாகிறது.

இந்த எண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்… உயிர் உதிக்கும் நிலையும்… உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்… எல்லாமே வருகின்றன.

இந்த எண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன. எண்ணத்தின் ஆசையை வளர விடுவதனால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகின்றோம்.

இந்த எண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன்.
1.இந்த எண்ணத்தை வைத்தே ஒவ்வொரு ஆத்மாவும் அந்த உடலில் இருக்கும் நிலை கொண்டு
2.தன் எண்ணத்தை “ஓ..ம் ஈஸ்வரா…” என்ற நாதம் கொண்டு
3.ஒரே நிலையில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
4.இந்த உடல் வேறு… இந்த ஆத்மா வேறு…! என்ற நிலையைக் கண் கூடாகக் கண்டிடலாம்.
(சீராகத் தியானமிருப்பவர்களால் இதை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும்)

நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் வாழ்க்கை நிலையில் நாம் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை. ஏனென்றால் நம்மையே நாம் உணராத நிலையில்
1.பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது
2.பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.
3.அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்…?

நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளேயே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி…? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.

விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து என்றும் அழியாது வாழ்பவர்களே “சப்தரிஷிகள்”

விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து என்றும் அழியாது வாழ்பவர்களே “சப்தரிஷிகள்”

 

இப்பூவுலகில் ஜீவ உடலுடன் நம் ஆத்மா (உயிர்)
1.எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ
2.எந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதோ (உடலுடன் உள்ள பொழுது)
3.அதே நிலை கொண்டு தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின்னும்
4.உயிராத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன.

ஏனென்றால் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்ற பிற்பாடு எந்த நிலையில் ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…?
1.நாம் எந்த நிலை அடைகிறோம்…?
2.எங்கே எப்படி இருப்போம்..? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இதைப் பற்றி பலரும் பல ரூபங்களிலும் பல விதக் கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகக் கேட்கப் பெறுகின்றோம். அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாருமில்லை. அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள்.

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்குச் சுவாச நிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையில் தான் சுற்றிக் கொண்டே இருக்கும்.

பூமியில் சுற்றிக் கொண்டேயிருந்து மீண்டும் இங்கேயே இன்னொரு ஜீவ உடல் பெற்று ஜென்மம் எடுக்கிறதா…? அல்லது இந்த நிலையிலிருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜென்மம் எடுப்பதில்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்ற அவ்வுயிரணு உருவம் பெற்ற நிலையில் எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்டே தான் அவ்வுயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளது.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலை கொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்வாத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலை பெற்று அவ்வுயிரணுவிற்குச் சுவாச நிலை கிடைத்ததுவோ அதே நிலை பெற்றுத்தான்
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வுயிரணு என்னும் ஆத்மா எல்லாமே..!

அந்த ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்த நிலை கொண்டு தான் அவ்வுயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திட முடியும்.

உடலுடன் இருக்கும் பொழுது தான் உயிராத்மா தன் வலுவைக் கூட்ட முடியும். உடலை விட்டுப் பிரிந்தால் உயிராத்மாவில் என்ன மணம் அதிகமாக உள்ளதோ அந்த மணங்களின் ஈர்ப்பிலே தான் சுழன்று கொண்டிருக்க முடியும். வளர்ச்சி இருக்காது.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு மீண்டும் ஒரு உடலுக்குள் செல்லாது
1.“பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…!” என்று முயற்சி எடுத்து
2.அதன் வழி விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து
3.விண்ணுலகில் அழியாது வாழ்பவர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை எய்திடத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

தேறாதது எது…? தேறுவது எது…!

தேறாதது எது…? தேறுவது எது…!

 

நோயுற்ற ஒரு பெண் குழந்தையைக் குணப்படுத்துவதற்காக எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்தார்கள். சுமார் 13 வயது இருக்கும்.

குழந்தை நோயால் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் பொழுது வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டதால் விஷத்தின் தன்மை அடைந்து விட்டது.

1.மருந்து மாத்திரைகள் என்று விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதனல்லாத உடலாகத் தான் பிறக்கும்.

அந்த உடலிலேயே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஏற்று வளர்த்துக் கொண்டால் அடுத்து உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியில்லா நிலை அடைகின்றது.

ஆகவே…
1.மகரிஷிகளின் உணர்வை அந்த குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு
2.உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த உணர்வுடனே தொடர்பு கொண்டு தியானப் பயிற்சி கொடுத்தோம்.

ஏனென்றால் அது உடலில் ஆஸ்த்மா தொல்லை உண்டு.

நுரையீரல் பாகங்களில் நரம்பு இழுத்துப்பிடித்து இருப்பதனால் அத்தகைய பாதிப்பு வந்தது. இந்தப் பிடித்தம் அவர்களின் பரம்பரையில் வந்தது அப்பாவுக்கும் உண்டு… தாத்தாவுக்கும் அது இருந்தது

பரம்பரை வழியிலே வந்ததனால் இந்த பின்னம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட்டால் தான் அதனுடைய நிலைகள் தப்ப முடியும்.

ஆகவே பெண் குழந்தையாக இருப்பதால் இப்போது காப்பாற்றினாலும்… அதனுடைய மண வாழ்க்கையில் மீண்டும் அதிகமான வேதனைப்பட்டால் மனிதனல்லாத உருவைத் தான் உருவாக்கிவிடும்.

ஆகவே பருவம் வரப்படும் பொழுது அருள் ஒளியின் தன்மை கொண்டு இந்த உடலிலே மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவர்களையே பெறும்படி செய்தோம்.

இப்போது எடுக்கும் அருள் உணர்வுகளின் வளர்ச்சி கொண்டு…
1.அடுத்து உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்
2.உடல் பெறும் உணர்வுகள் கரையவும் பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவருடைய நிலைகளை நாம் இத்தகைய நிலைகளில் அது மாற்றி அமைக்க வேண்டும்.

குழந்தையினுடைய தாயும் வேதனை உணர்வையே எடுத்துக் கொள்கின்றது. அதை மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும் என்ற நினைவைக் கூட்டும்படி செயல்படுத்தப்பட்டது.

1.இதன் வழி செய்தால் அந்த ஆன்மா எளிதில் அங்கே போய்ச் சேர்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகிறது.

காரணம்… எந்த நேரமும் எத்தருணத்திலும் உடலை விட்டுப் பிரிய நேரலாம். முயற்சி செய்தால் இன்னொரு பத்து வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

ஆனால் இங்கே இந்தப் பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது சீரான உடல் அமைப்பு இல்லை என்றால் மண வாழ்க்கையில் காலப் பருவம் வரும் போதெல்லாம் வேதனைப்படும்.
1.ஆகவே “இது தேறாது…” என்ற நிலை வந்தபின்
2.தேறுவது எது…? என்ற நிலையில் அருள் உணர்வின் ஒளியே தேறுகிறது… அதுவே என்றும் பிறவியில்லா நிலை.
3.இந்த இளமைப் பருவத்தில் அது ஒளியாகிவிட்டால் நலமாக இருக்கும் என்று
4.அந்த ஆன்மா அதன்படி சப்தரிஷி மண்டலம் இணைந்தது.

இப்படி… இந்த உடலுக்கு என்று இச்சை அதிகமாகப் பெறாதபடி அருள் ஒளி பெற வேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தாலே போதுமானது.

1.குறித்த காரியங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்
3.வழியறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்
4.சோர்வு என்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும்… அருள் ஒளி பெறும் அந்த நினைவு பெருக வேண்டும்… இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அரும் பெரும் சொத்தே நமக்குச் செல்வம் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் தேடிய செல்வங்கள் நம்முடன் வருவதில்லை… அழகான உடலும் வருவதில்லை… நாம் அலங்காரம் செய்யக்கூடிய பொருள்களும் வருவதில்லை… ஆடம்பரமாக நாம் கட்டிய வீடும் வாங்கிய காரும் வருவதில்லை. மற்ற எத்தகைய பொருளாக இருந்தாலும் நம்முடன் வருவதில்லை.
1.ஆனால் அந்த அருள் ஞானத்தை இந்த உடலிலே வளர்த்துக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை பெறும்.
3.வேகா நிலையாக பிறவியில்லா நிலை அடைய முடியும்
4.அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ முடியும்
5.அப்படி வாழக்கூடிய பருவத்தை இந்த உடலிலேயே சேர்த்தால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது மனதை மட்டும் “நான்…!” என்று ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?

உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது மனதை மட்டும் “நான்…!” என்று ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?

 

தாய் தந்தையில்லாமல் குழந்தையில்லை…! நிலம் நீர் இல்லாமல் “தாவர இனங்கள் இல்லை….!” சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்லாமல் பூமியுமில்லை…! பல மண்டலங்களின் நிலையில்லாமல் சூரியனுமில்லை…!

சூரியனின் நிலை இல்லாமல் பல மண்டலங்களுமில்லை…! சூரியனுக்கே சக்தி தரும் பல கோடிச் சூரியன்கள் இல்லாமல் இயங்காமல் இந்த மண்டலங்கள் சூரியன்கள் எதுவுமே இல்லை…!

இந்த மண்டலங்களின் தன்மை எதுவும் இல்லாமல் காற்றும் மழையும் ஒளியுமில்லை…! இப்படி இந்த எல்லா நிலைகளையும் ஆட்டிப் படைக்கும் அத் தேவனின் சக்தி ஒன்றே தான்… ஒரே நிலை கொண்டு தனித்து வணங்கிடும் அவ்வாண்டவனின் சக்தி…!
1.அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து இயங்குபவை எல்லாமே
2.எதுவுமே தனித்து இல்லை….
3.ஒன்றை ஒன்று ஒட்டித்தான் எல்லாமே உள்ளன.

ஆனால் இன்றைய மனிதர்களில் சிலரின் நிலை “நான்…!” என்ற ஆணவத்தில் இயங்கி வருகிறது. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டகற்றிடும் அவன் மன நிலையை அச்சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து தான் அவன் பெற வேண்டும்.

ஆண்டவனே இல்லை என்று சொல்லும் யாராக இருந்தாலும் இதைப் படித்து விட்டுப் பதில் சொல்லட்டும்…!

1.இந்த உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது
2.நம் மனதை மட்டும் “நான்…!” என்ற நிலையில் ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?
3.நான் என்ற நிலை கொண்ட மன நிலையை விட்டு அகற்றிடுங்கள்.

இந்தக் கலியின் கடைசி நிலை கொண்டு நாம் எல்லோரும் வாழ்கிறோம் என்ற உண்மையை அறிந்து இனி நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்னும் நிலையில் அவ்வாண்டவனை வேண்டி அருள் பெற்று வாழ்ந்திடுங்கள் நல் வாழ்க்கையை.

ஆண்டவனின் சக்தி… ஆண்டவனின் சக்தி… என்று சொல்லும் பொழுதே ஆண்டவனை ஆண்பாலாகவும் சக்தியினைப் பெண்பாலாகவும் கொண்டு யாம் (ஈஸ்வரபட்டர்) எதையும் தனித்துச் சொல்லவில்லை.

எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து தான் உள்ளது. அந்த ஆண்டவனின் சக்தி நிலை இயங்குவதற்கே இப்பல மண்டலங்கள் இல்லாவிட்டால் பொருளில்லை.

இந்த நிலையில் ஆண்டவன் எங்கப்பா தனித்து நிற்கின்றான்…?

1.நாம் தனியாக இயங்கவில்லை (நம் எண்ணத்தில் தான்…!)
2.அவன் ஒருவன் உள்ளான் என்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்
3.அவ்வாண்டவனை மட்டும் தனித்த நிலையில் வணங்கச் செய்தார்கள் ஞானிகள்.

அவ்வாண்டவனின் சக்தியில் தான் எல்லா மண்டலங்களும் எல்லா உயிரினங்களும் உள்ளன.

1.அவ்வாண்டவனே தான் எல்லாமே
2.ஆண்டவன் என்பவன் தனித்து எங்குமில்லை
3.அவ்வாண்டவன் என்பவன் தான் எல்லாமே என்ற உண்மை மட்டும் தனித்து இருக்கிறதப்பா…!

அவ்வாண்டவனின் சக்தியை நீங்கள் எந்த ரூபம் கொண்டும் எந்த நிலை கொண்டும் அவரவர்கள் மன நிலைக்கு உகந்தபடி வணங்கி வாழ்ந்திடுங்கள். நம்முள்ளே உள்ள ஈசனையே நாம் காணும் பாக்கியம் பெற்றிடலாம்.

அந்த ஆண்டவனின் சக்தி நிலையும்… எந்த நிலை கொண்டு இருக்கிறது என்பதனையும் தான் புகட்டியுள்ளோம்.

ஆண்டவன் என்பவன் யாரென்று புரிகின்றதா…?

ஆண்டவன் என்பவன் யார்…? நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத இந்தப் புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலுமே கலந்துள்ள சக்தியை யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் ஒருநிலைப்படுத்திச் சொல்லும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து அவரவர்கள் வழிக்கு வணங்குகின்றார்கள். இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகின்றார்கள்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம். எல்லோருமே ஆண்டவன் தான். எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

1.எத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை
2.அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல் இன்று
3.அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

நாளேடுகளிலும் சினிமா டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள். பல கோடி நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.

1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு
2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்
3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து
4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள் எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலமும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.

இக்கலியை கல்கியாக்கி வாழ்ந்திடுங்கள். கலியை ஆண்டவன் வந்து கலியாக்குவதில்லை. இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன்கள் எல்லோருமே ஆண்டவன்கள் என்பது யாரென்று புரிந்ததா…?

இக்கலியில் உள்ள உயிரணுக்களான நாம் எல்லோருமே தான் கலியைக் கல்கியாக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை
2.மனிதர்கள் மன நிலையை வைத்துத்தான் கால நிலையும் மாறுகின்றது.

ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்து மனிதரின் மன நிலையை வைத்துத் தான் மாறுபடுகிறது. இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இந்த மன நிலை மாறுவதற்காகத்தான்… நம் ஞானிகளின் நிலை கொண்டே நடந்திடும் “பெரும் நாடகம்…”

நாடகத்தின் தொடரை இனிக் கண்டு வாழ்ந்திடலாம். இந்த நிலையிலிருந்து மக்களின் மன நிலையில் பெறும் மாற்றம் வந்திடுமப்பா.

அந்த நிலை நடப்பதற்காகத்தான் சூட்சம நிலையில் உள்ளவர்கள் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்த நிலையின் உண்மைகளை நாமும் (எல்லோரும்) பார்த்திடலாம்.

குடும்பப் பற்றும்… அருள் பற்றும்

குடும்பப் பற்றும்… அருள் பற்றும்

 

ஞானிகள் காட்டிய வழியினைப் பற்றுடன் பற்றும் பொழுது அருளை நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் எல்லாம் நடக்கின்றது.

வாழ்க்கையில் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் போது செயல்கள் தடைப்படுகிறது. காரணம்…
1.குடும்பப் பற்று என்று வந்தாலே
2.அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.

இந்தக் குழந்தைக்கு இப்படி ஆக வேண்டும்… அங்கே இப்படி நடக்க வேண்டும்… என்ற உணர்வு வந்து விட்டாலே போதும்.
1.நமக்குள் பதிந்திருந்த “பழைய உணர்வுகள்” அனைத்தும் முன்னாடி வந்துவிடும்.
2.அது முன்னாடி வந்து விட்டால் அதனைக் காப்பது என்பதே பெரிய சிரமம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டுமென்றால் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எல்லாம் தெளிவாக வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி நாம் கூட்டிக் கொண்டே வந்தால் சரியாக இருக்கும்.

1.கண்களைத் திறந்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி
3.அந்த அருள் சக்திகளைச் சுவாசிக்க வேண்டும்.

அதற்குப் பின் வாழ்க்கையில் எது நமக்குக் குறையாகத் தென்படுகிறதோ அது நிறைவேற வேண்டும்… குழந்தைக்கு திருமணம் ஆக வேண்டும் சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்

ஆனால் ஆகவில்லை என்கிற போது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்று ஏக்கம் வருகிறது.

ஏக்கத்தின் தன்மை கொண்டு “அது நடக்க வேண்டும்…” என்ற நிலை இருந்தால் சோர்வு நமக்குள் வராது. ஆனால் சோர்வடைந்த நிலையில் எண்ணி எடுக்கப்படும் பொழுது இந்த விஷத் தன்மைகள் கூடி
1.இந்தப் புவியின் பற்றும் உடலின் பற்றும் அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருளைக் கூட்டினால் அது வளர்ந்து எதையும் நாம் வெல்ல முடியும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள் உயர்வாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது.

கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது மனித வாழ்க்கையின் எண்ணங்கள் கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி வருகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.நமக்குள் வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி
2.அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் வழியில் எங்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டே வந்தால் இந்த உயர்ந்த குணம் நமக்குள் உருவாகும்… நமக்குள் அது பெருகும்… நம்முள் அது வளரும்.
6.நம் சொல் அனைவரையும் பற்றுடன் இயக்கும் நிலை வரும்
7.நாம் எண்ணிய காரியங்கள் ஜெயமாகும்… அந்த உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து செயலாகும்.

சுவாசக் கண்ணின் நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…” ஒரு நிலைப்படுகின்றது

சுவாசக் கண்ணின் நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…” ஒரு நிலைப்படுகின்றது

 

1.நாம் எண்ணும் பொழுது தான்… சுவாசத்தை ஈர்த்து
2.நம் உடல் இயங்குகிறது என்று எண்ணுகிறோம்.
3.ஒருவரை நாம் பார்க்கும் பொழுது – ஒரு பொருளையோ ஒரு மனிதரையோ எதுவாக இருந்தாலும்
4.நம் பார்வை பட்டுத்தான் நம் எண்ணத்திற்கு வருவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நம் பார்வைக்கு (கண்களுக்கு) ஒளியே எங்கிருந்து கிடைக்கின்றது…?

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது பார்ப்பதற்கு முதலிலேயே அச்சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் பொழுதுதான் நம் கண்களுக்கே ஒளி வருகிறது.
1.நம் கண்ணிற்கு “ஒளி”
2.நாம் எடுத்திடும் சுவாசத்திலிருந்து தான் கிடைக்கிறது.
3.நம் உடலில் உள்ள எல்லா அவயங்களுமே இந்தச் சுவாச நிலை கொண்டே தான் இயங்குகிறது.
4.அந்தச் சுவாசத்தை ஈர்த்து நாம் இழுக்கும் பொழுதே நம் எண்ணம் நம் அவயம் யாவும் செயல்படுகிறது.

நாம் வாழ்ந்த நாட்களில் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்ட எல்லா நிலைகளும் நம்மைச் சுற்றி அப்படியே பதிந்துள்ளன. நாம் சுவாச நிலையில் பார்த்த நிலையும் பல நாட்களுக்குப் பிறகு நம் எண்ணத்தில் வருகிறதல்லவா…!

அது எப்படி வருகிறது…?

நாம் பேசிய ஒலி அலைகள் மட்டும் தான் நம்மைச் சுற்றுகிறது என்பதல்ல. நாம் எடுத்திட்ட ஒவ்வொரு சுவாச நிலையும் நம்மைச் சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

1.நாம் விழித்துள்ள நிலையில் எடுத்த சுவாச நிலைகளும்
2.உறக்கத்தில் எடுத்த சுவாச நிலைகளும் நம்மைச் சுற்றிக் கொண்டு தான் உள்ளன.

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது அச்சுவாச நிலை ஈர்த்துத் தான் பார்க்க முடிகிறது. அதைப் பார்ப்பதற்கு முதலிலேயே நம் எண்ண நரம்பில் அச்சுவாச நிலை தாக்கிய பிறகு தான் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

நம் விழியில் அச்சுவாச நிலை பட்ட பிறகுதான் அவ் விழியே பார்க்கும் தன்மை பெறுகிறது.
1.ஞானக் கண்ணில் பார்க்கின்றார்கள்…
2.அகக் கண்ணில் பார்க்கின்றார்கள்
3.புறக் கண்ணில் பார்க்கின்றார்கள் என்கின்றார்கள்.
4.அவ்வகக்கண்ணும் புறக் கண்ணும் ஞானக் கண்ணும் இச்சுவாசக்கண் ஒருநிலைப்படும் பொழுது தான்
5.செயற்கரிய கண்ணாகச் செயல்படுகிறது.

நம் சுவாசக் கண்ணை எந்த நிலை கொண்டு செயல்படுத்துகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…!” ஒரு நிலைப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் இரண்டு கண்களை வைத்து அந்தக் கண்களிலிருந்து வீசிடும் ஒளியை வைத்து அவன் குண நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

மன நிலையில் மாறுபட்டவர்கள் நிலையையும் அக்கண்ணிலிருந்தே கண்டிடலாம். ஒரு மனிதனின் குணத்தையும் அவன் நிலையையும் அவன் கண்ணிலிருந்தே அறிந்திட முடியும். ஒவ்வொரு மனிதனின் குணமும் அவன் எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் அமைகிறது.

அழகான இயற்கை நிலை கொண்ட சில இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நமக்குப் பிடிக்காத நிலை கொண்டு ஒருவரைப் பார்க்கும் பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நம் கண்ணின் பார்வைக்கும் நம் உடல் உறுப்புகளுக்கும் நம் உயிரணுவிற்கும் பல மாற்றங்கள் விளைவிக்கின்றன.

நாம் ஒவ்வொரு நிலை கொண்டு எடுத்திடும் சுவாச நிலையைப் பொறுத்துத்தான் நம் உடல் நிலை செயல்படுகிறது. நம் உடல் நிலை எந்த நிலை கொண்டு செயல்படுகிறதோ அந்த நிலை எல்லாம் நம் உயிர் அணுவிற்குத் தாக்கப்படுகிறது.

அதிகக் கோபமும்… அதிக மனச் சஞ்சலமும்… அதிகத் துவேஷமும்… உள்ள மனிதர்களுக்கு அவர்களின் உயிரணு சஞ்சல நிலைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நிலை கொண்டு இருக்கும் பொழுதும் அந்த உயிரணு எல்லா நிலையும் அறிந்து தான் செயல்பட்டு வருகிறது.

நம் உடல் மனம் இவைகளைத்தான் நாம் எண்ணுகின்றோம். நம்மை ஆட்டி வைக்கும் அவ்வுயிரணுவைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சுவாச நிலை கொண்டு தான் எல்லா உயிரினங்களுமே உயிர் வாழ்கின்றன என்ற உண்மை எல்லோரும் அறிந்ததுவே. ஒவ்வொரு உயிரணுவும் எப்படி எப்படி உயிர் பெறுகிறது என்பதனைத்தான் பாட நிலையில் விளக்கியுள்ளோம்.

1.சுவாச நிலையை நாம் எந்த நிலை கொண்டு ஈர்க்கிறோம் என்பது தான்
2.இந்தப் பாட நிலையின் மையக் கருத்தாகும்.

குருவின் அருள் பாதுகாப்பு

குருவின் அருள் பாதுகாப்பு

 

நான் (ஞானகுரு) எத்தனையோ சிரமங்கள் பட்டேன். காட்டிற்குள் சென்று பல துன்பங்களை அனுபவித்துக் குருநாதர் காட்டிய உண்மைகளையெல்லாம் அறிந்து அதை உங்களுக்குள் பதிவு செய்து அந்த உணர்வை வளர்க்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் பற்று கொண்டவர்கள் இரவெல்லாம் சாமி…! எனக்குத் தலை வலிக்கிறது… மேல் வலிக்குதே… உடம்பு வலிக்குதே… என்னை காப்பாற்ற மாட்டீர்களா…! என்று தான் நினைக்கிறார்கள்.

சாமியைத் தான் நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்
3.தீமையை வென்றிடும் அந்த அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.ஒவ்வொருவரும் எண்ணுங்கள் என்றும் யாம் சொன்னாலும் அதை எண்ணுவதில்லை.

சாமியைத் தான் நினைக்கிறார்கள்… ஆனால் ஞான வித்தை நான் தான் உங்களுக்கு பதிவு செய்திருக்கின்றேன்.

இது போன்று ஆயிரம் பேருடைய உணர்வு என்னைத் தாக்கினால் எனக்கு எப்படி இருக்கும்…? அத்தனை பாதிப்புக்கும் நான் உள்ளாக வேண்டியிருக்கின்றது இத்தனைக்கும் நான் சமாளிக்க வேண்டி இருக்கின்றது
1.என்னையும் காக்க வேண்டும்… உங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
2.என்னை அந்த உணர்வுகள் சாடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்குக் குருநாதர் அருள் கொடுத்தார்
3.அதைப் போன்று உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு உண்டு… என்றுமே எமது அருள் உறுதுணையாக இருக்கும்.

அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும். குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அது கிடைக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்டபின் இனி நாம் எப்படி வாழ வேண்டும்… என்ற நிலையில் உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

ஆனால் ஒரு பிறவி என்று இனி வந்தாலோ நரகத்திற்குத் தான் நாம் செல்கின்றோம். இப்போது நரகலோகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1.மனித உடல் பெற்றால் சொர்க்கலோகம் என்று சொல்வார்கள்
2.அது பண்டைய காலமாகப் போய்விட்டது.

உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனை உருவாக்கும் உணர்வுகளையும் நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலும் போர் முறைகளே நமக்குள் வருகின்றது.

நல்ல குணங்களுக்கும்… தீமை செய்யும் குணங்களுக்கும்… மற்றவர்கள் செய்யும் உணர்வுகளை நுகர்ந்தபின் நமக்குள் பெரிய போரே நடக்கின்றது இந்த போரினால் மனக் கலக்கங்கள் வருகின்றது… உடல் நோய்கள் வருகின்றது… சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நம் உடலுக்குள் நாம் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி இந்த உணர்வுகள் சென்று அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

1.என்ன வாழ்க்கை என்றும் இனி வாழ்ந்து என்ன…? என்றும்
2.இந்த உடலையே அழித்திடும் நிலைக்குத் திருப்பி விடுகிறது.

இதை எல்லாம் நாம் செய்யவில்லை. உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் அது எதுவோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குவதும் இதே உயிரே தான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றும் இருளை அகற்ற வேண்டும் என்றும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதித்தல் வேண்டும்.

பதித்த அந்த நினைவு கொண்டு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால்
1.வாழ்க்கையில் வரும் போர்களை அடக்கும்.
2.அது எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலையில் கொண்டு வரலாம்.

அத்தகைய வலிமை பெற்று விட்டால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் வலுவைப் பெற்றோமோ உடலை விட்டுச் சென்ற பின் நம்மைப் பிறவியில்லா நிலைக்கு அழைத்துச் செல்லும்.