உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்… சொல்லும் சொல்லாக நான் வருவேன்… செயல் தானாகவே வந்துவிடும்

உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்… சொல்லும் சொல்லாக நான் வருவேன்… செயல் தானாகவே வந்துவிடும்

 

1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாம் ஒன்றாக…
4.ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்…!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்…! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.

நீ வேறல்ல உன் எண்ணம் வேறல்ல உன் சொல் வேறல்ல உன் செயல் வேறல்ல எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன்.
1.வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன்
2.உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல
3.எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,

உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது…? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்…? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது. சுற்றி வரும்.

காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.

எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.

பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.

நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது… பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.

எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா…?

1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்… செயலும் ஓங்கிவிடும்.

எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.

நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று…!

பிறவியில்லா நிலை அடைவதற்கு ஓசான் திரையின் முக்கியத்துவம் என்ன…?

பிறவியில்லா நிலை அடைவதற்கு ஓசான் திரையின் முக்கியத்துவம் என்ன…?

 

அதிகாலை துருவ தியானத்தில் நாம் சக்தி ஏற்றிக் கொண்ட பின்… நாம் எதைத் தியானித்தோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு நம் குடும்பத்தைச் சேர்ந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மாக்களை இணையச் செய்தபின் இந்த உணர்வுகள் பட்டு அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. “ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்…”

இதைக் கரைத்து வெளி வருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது. அது வரப்படும் பொழுது
1.இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை
2.அந்த விஷத்தை அது கவர்ந்து சென்று விடுகின்றது… ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் இதே சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

ஆனால் இது இயற்கையில் விளைந்த உணர்வாக இருந்தாலும் “வேக வைத்து நாம் நீக்கினாலும்…”
1.எதன் கலவையுடன் இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால்
3.அந்த உணர்வின் தன்மை இழுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து நமக்குள் அதை வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அணுக்களாக்கப்படும் போது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலைகொண்டு அந்த அணுக்கள் மாற்றமடைகின்றது.

இதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும் சூரியனுடைய காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது. ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலை சூரிய உதயத்தில் அது வரப்படும் பொழுது ஓசோன் திரை அதைக் கவர்ந்து கொள்கிறது.

காரணம் ஓசோன் திரை என்பதே “விஷத்தின் அடர்த்தியாகி… தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்வது தான்…!”

சூரியனிலிருந்து மற்ற பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடியது எல்லாம் பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியான பின் தான் விஷத்தன்மை உட்புகாது தடுக்கப்படுகின்றது… அதுதான் ஓசோன் திரை.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வைலட்… அதுவும் விஷத்தின் தன்மை கொண்டது தான். அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக்கதிர்கள் வெகு தூரத்தில் இருப்பதையும் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது.

நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத் தன்மைகள் பிரிகின்றது. ஆனாலும் இந்த மோதலில் (வெப்ப) மின் அணு போன்று ஆகும்பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மையை அடைகின்றது.

இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் நிலைகளில் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக (ஓசான்) ஆனபின் நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது.
1.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும்
2.தனக்குள் அடக்க சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்றுதான் இதனின் உணர்வுகள்… இந்த பிரபஞ்சத்தை விட்டு உயிரான்மா வெளி சென்றபின்
1.உடல் பெறும் உணர்வுகள் அந்த ஓசான் திரையுடன்… அதனுடைய அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
2.இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் (விஷம் வடிகட்டப்படவில்லை என்றால்)
3.மீண்டும் இந்த உயிரின் தன்மை அதனின் உணர்வு தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.

அதாவது… இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உடலாகத் தான் மீண்டும் உருவாக்கும். பிறவா நிலை பெறுவதில்லை.

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே… உன் ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா…!

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே… உன் ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா…!

 

1.பற்றற்று இருக்க வேண்டும்…
2.ஆசையில்லாவிட்டால் தான் உலக ஞானம் பெற முடியும் என்பது எல்லாம் இவர்களாகச் சொன்ன கதை.

பெரும் ஆசையினால் வந்தது தான் இந்த உலகமே. ஆசையில்லா விட்டால் இவ்வுலகமே இல்லை… ஜீவனும் இல்லை… பந்த பாசமும் இல்லை… பாற்கடலுமில்லை… பாழடைந்த நிலை தான் எங்கும் இருக்கும்…!

மனிதனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் ஆசையிலே தான் உலகமே உள்ளது. இந்த உலகம் மட்டுமல்ல… எல்லா உலகமும் ஈசனின் ஆசையில் தான் உள்ளது. ஈசனின் அருளைப் பெற்றிடவே பெரும் ஆசைதான் வேண்டும்.

1.பற்றற்றவன் என்பவனுக்கும் ஆசை இல்லாமல் இல்லை.
2.ஆசையில்லாதவன்…! என்று எவனும் இல்லை.
3.சித்தனுக்கும் ஞானிக்கும் மகரிஷிக்கும் ஆசையுண்டு.

ஈசனுக்கு ஆசையுள்ளதால் தான் ஞானி சித்தன் மனிதன் உயிரினங்கள் எல்லா ஜீவராசிகளுக்குமே ஈசனின் அருளை அளித்திடுகின்றான்.

எண்ணத்தை இன்பமாக்குங்கள் என்று சொல்லும் பொழுது அந்த எண்ணம் ஆசையில் தான் வருகிறது.
1.ஆசைக்கு நான் (ஈஸ்வரபட்டர்) எதிரியல்ல.
2.ஆசையுடன் தான் நானும் உள்ளேன்.
3.ஆசையுடனே இருந்திடுங்கள்..!

ஆசை என்பது வேறு… ஆனால் பேராசை என்பது வேறு…! பேராசை என்னும் பேயை ஒட்டிவிடுங்கள்.

“சுவாச நிலை… சுவாச நிலை…!” என்பதெல்லாம் நம் மனதைச் சாந்த நிலையில் வைத்துக் கொண்டு
1.நம் மனதில் வந்து மோதும் கோபம் தாபம் குரோதம்
2.எது வந்தாலும் அந்த நிலையை அடக்கிக் கொண்டு
3.பெரும் சாந்த நிலைக்கு வருவது தான் சுவாச நிலை.

அச்சுவாச நிலை வருவதற்கே அந்த ஆசை இருந்தால் தான் சுவாச நிலையே வரும். ஆசை தான் மனிதனே. சோர்வல்ல மனிதன்.

ஆசையை அடக்கிவிடு… ஆசையை அடக்கிவிடு…! என்று சொல்வதெல்லாம் சொல்பவனுக்கே அந்த நிலை இருப்பதில்லை.

1.ஆசையை விட்டுவிட்டால் இந்த ஆன்மாவுக்கு என்ன வேலை இந்த உடலில்…?
2.ஆசையை அடக்குபவனின் ஆன்மா தானாகப் பிரிந்துவிடும் தன் நிலைக்கே.

இவ்வுலகில் நாம் பிறந்த பலனை (மெய்ப் பொருளை அடைய) ஆசையுடனே பெற வேண்டும். நாம் பெற்ற குழந்தையை ஆசை இருந்தால் தான் வளர்க்க முடியும். உண்ணும் உணவையும் ஆசைய்டன் தான் உண்ண முடியும்.

ஆசையுடன் இருங்கள் என்பதும்… அன்புடன் இருங்கள் என்பதும்… ஒன்றே தான். ஆசை இல்லை என்றால் இந்த உலகில் அலையுமில்லை கடலுமில்லை.

செடிக்கும் மரத்திற்கும் ஆசையுள்ளது. மண் பேசும் கல் பேசும் என்பதும் இந்த ஆசையினால் தான். ஆசையில்லாதவன் பிறந்ததுமில்லை. ஆசையில்லாதவன் பிறக்கப் போவதுமில்லை.

ஆசையைப் பற்றிச் சொல்லும் பொருள் எல்லாம் என்ன என்றால்
1.தன் நிலை அறிந்து
2.உன் ஆசையை எண்ண வேண்டும் என்பது தான் அதனின் பொருளே.

ஆசையுடன் அருள் செய்வாய்… “குருதேவா ஈஸ்வரா…!”
ஆசையான இவ்வுலகில் ஆசையுடன் இருந்திடவே
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை…
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை…!

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே – உன்
ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா…!
ஆசை மனதை எனக்கருளி
ஆசை அமுதை எனக்கூட்டு…!

ஆசையுடன் நான் தியானம் செய்ய ஆசியும் அருளும் வேண்டுமப்பா
ஆசியும் அருளும் வேண்டுமப்பா… ஆசியும் அருளும் வேண்டுமப்பா…!

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

 

பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்றபின் விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் இந்த பூமியில் இன்று பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களிலும் கடவுளை வணங்குவது எல்லாம் இந்த உடலுக்கு வேண்டிய சுகத்திற்குத் தான்.
2.இந்த உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்றால் அதை யாரும் எடுப்பதில்லை.
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் பொழுது இந்த வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும்…
4.அதே சமயத்தில் அந்த ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரும் என்ற நம்பிக்கை யாருக்கும் வருவதே இல்லை.

விஞ்ஞான அறிவால் இன்று பல ஆடம்பரப் பொருட்களை விரும்புகின்றோம். அதன் வழி கொண்டு செயல்பட்டாலும் டி.வி. மற்ற தொலைத் தொடர்பு உபகரணங்களை நாம் உபயோகப்படுத்தும் பொழுது உலகம் முழுவதும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கி அதை உடனுக்குடன் காட்டுகின்றனர்.

ஒரு கர்ப்பமுற்ற தாய் இதையெல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வந்தால் குறிப்பாக… “ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் இதை நுகர்ந்தால்…” அந்த குழந்தையின் உடலிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

அங்கே சிதைந்த உணர்வுகள் டி.வி. மற்ற சாதனங்கள் மூலமாக இங்கே வருகின்றது. சிதைந்திடும் உணர்வுகள் இந்தக் குழந்தையிடமும் விளைகின்றது கருவிலேயே…!

இதைப் போன்று நம்மை அறியாத நிலையில் எத்தனையோ வருகின்றது.

இவ்வாறு ஒளி ஒலி அலைகளை அடிக்கடி இப்படி ஒளிபரப்பு செய்கின்றனர். எங்கே சிதைந்த உடலிலிருந்து அந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ அந்த உணர்வலைகளை நுகரும் தன்மை வருகின்றது.

இன்று எங்கேயோ நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் வீட்டில் இருந்தபடியே உடனடியாக இங்கே அந்தச் செய்திகளைப் பார்க்கவும் படிக்கவும் பல பிரதிகள் (COPY) எடுக்கவும் முடிகின்றது… மற்றவருக்கு அனுப்பவும் முடிகிறது.

காரணம்… காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைகளை வைத்து மாற்றிக் கொண்டு வருகிறார்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற தொடர்வரிசை கொண்டு இதே அழுத்தங்களை எண்ணப்படும் பொழுது அந்த அழுத்த உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்காக மனிதனுடைய படத்தையே அங்கு காட்டுகின்றது.

உலகெங்கிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு நொடிப் பொழுதில் இங்கே கிடைக்கும்படி செய்கின்றார். ஆக மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு நாம் செய்தாலும் அது மனிதனுக்கு “எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கின்றது…?” என்ற நிலைகளை நாம் மறந்துவிட்டோம்.

1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வரும் பொழுது மனித உடலின் இச்சைதான் வருகின்றது
2.மனிதனின் கடைசி எல்லை – பிறவியில்லா நிலையை அடைய முடியாதபடி இழக்கப்படுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு அவன் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் வழிப்படி நாம் அதைப் பெற முடியும்.

அதிகாலை துருவ தியானத்தில் இதைத் தெளிவாக அதை எடுத்துக் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து
1.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று என்ற நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தி
3.இரு உயிரும் உணர்வின் தன்மை ஒன்றிணைக்க அவசியம் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் அருள் உணர்வைப் பெற்றுத் தங்களைச் சார்புடையோர் நிலைகள் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்துதல் வேண்டும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் முன் சென்றால் நாமும் பின் செல்ல முடியும்

தியானத்தின் நிலையில் “அந்த ஈஸ்வரனே…” பந்தம் வருவான் மனதை அடக்கு…! என்பதன் பொருள் என்ன…?

தியானத்தின் நிலையில் “அந்த ஈஸ்வரனே…” பந்தம் வருவான்

 

மனதை அடக்கு…! என்பதன் பொருள் என்ன…?

1.உள் மனதை அடக்கும் தன்மை முதலில் வந்துவிட்டால்
2.வெளி மனதும் அடங்கிவிடும்.
3.உள் மனதை அடக்கிவிட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை காண்பாய்.
4.வெகு சீக்கிரத்தில் இந்தப் பூமியின் ஆகர்ஷண சக்தியையே வென்றிடலாம்.

“ஆர்யபட்டா” பறந்ததன் நிலை என்ன…? அவனே செய்தானா..? ஈஸ்வரபட்டா சென்றல்லவா அதைப் பார்த்தான். அந்த ஆர்யபட்டா என்ற பெயர் வர அவனுள்ளே நான் இருந்தேன்.

ஆனால் விஞ்ஞான நிலை கொண்டு அழிக்கும் நிலை நமக்கு வேண்டாம்.

1.தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்.
2.“நீ வேறு… அவன் வேறு அல்ல…!” என்ற நிலையை நீ பெற்றிடு.

நான் சொல்லும் பாடம் இதுவே தான்,

இந்த உலகில் பிறந்த நிலை எவ்வுலகத்திலும் இல்லை.

நம் மனமே தெய்வமாக்கும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான் தெய்வம் என்பதில்லாமல் மனதையே தெய்வமாக்கிக் கொள்ளுங்கள்.
1.உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கருளும் பாக்கியம் வரும்.
2.தியான நிலையின் மூலமாகப் பெறும் அருள் மணங்களை உன் மனதில் உருவாக்கு.
3.சுவாச நிலை என்பதன் உட்பொருளே இது தான்.
4.உன் மனதை வாசனையாகப் பெற்றுவிட்டால் கோடி இன்பம் இதுவே தான்…!
5.நுகரும் தன்மையில் இருந்திடப்பா…! மலரும் கழிவும் வேறல்ல…! என்னும் நிலை தெரிந்திடும்.

கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. மணம் என்னும் வாசனையைப் பெற்றுவிட்டால் எல்லா நிலையும் மாறிவிடும். யோகியாகச் சென்று தான் இதை அடைய வேண்டும் என்ற நிலை இல்லை.

இப்பொழுது வாழும் நிலையிலேயே மெய்ப் பொருளை உணரத்தான் இந்தப் பாடங்கள்…!

அகஸ்தியனுக்குள் விளைந்த அபூர்வ சக்திகள் உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

அகஸ்தியனுக்குள் விளைந்த அபூர்வ சக்திகள் உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

 

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் சிறு குழந்தைப் பருவத்திலேயே மிக மிக சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெற்றான்.

அவனுடைய தாய் தந்தையரோ கடவுள் நம்மைக் காக்க வருகின்றான் என்ற எண்ணத்துடன் காலையில் “சூரியனை…” உற்றுப் பார்க்கின்றனர். அவர்கள் சூரியனை உற்றுப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள் அவர்கள் கருவில் விளைந்த இந்த அகஸ்தியன் என்ற குழந்தையும் அதற்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் சூரியனை அதுவும் உற்றுப் பார்க்கின்றது.

சூரியனை உற்றுப் பார்க்கும் பொழுது அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் குழந்தை பார்க்கின்றது. அந்த உணர்வின் அறிவு குழந்தையிடம் விளைகின்றது. அதே சமயத்தில்
1.குழந்தையிடமிருந்து வெளிப்படும் அந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது
2.எப்படி எடுக்கிறது… எப்படி விளைகின்றது… இந்த மனித கருவுக்குள் வந்தபின் ஒன்றும் அறியாத நிலையில் இருந்தாலும் இந்த உணர்வலைகள் எப்படி வருகிறது…?
3.அதைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகிறார் குருநாதர்.

இதை அக்காலத்தில் அவனுடன் வாழ்ந்த மக்களும் அவன் செய்கைகளை உற்றுப் பார்க்கின்றனர் உற்றுப் பார்க்கும் பொழுது இந்த உணர்வுகள் அக்கால மக்களுக்கும் தெரிய வருகின்றது.

இவனின் வளர்ச்சியில் இயற்கையின் உண்மை நிலைகள் அவனுக்குள் விளைந்த பின் அவன் அருகில் வரப்படும் பொழுது இந்த உணர்வின் ஞானத்தை மற்றவரும் பெறுகின்றனர்.

முதலில் அகஸ்தியனின் தாய்
1.விஷத்தை வென்றிடும் பச்சிலைகளை மணங்களையும் மூலிகைகளிண் ஆற்றல்களையும் நுகர்ந்தது.
2.அதனால் விஷத்தின் தன்மைகள் மடிந்தது… கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அந்தச் சக்திகள் விளைந்தது.
3.அதன் வழிப்படி அகஸ்தியன் பிறந்தபின் அவனைச் சூழ்ந்துள்ளோரும் உற்றுப் பார்க்கப்படும் பொழுது
4.இவனில் விளைந்த தாய் கருவிலே பெற்ற சக்திகளை அவர்களும் நுகர்கின்றனர்… அதன் அறிவாக அவர்களும் விளைகின்றனர்.

இவனைப் போல அந்த உணர்வினை அவர்களும் நுகர்ந்து தாவரங்களின் சக்திகள் எப்படிப்பட்டது…? என்று அறியும் பருவம் அந்தப் பகுதியில் உள்ள மனிதர்களுக்கும் இது தோற்றுவிக்கப்படுகிறது.

இப்படி அகஸ்தியனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் சூரியனால் கவரப்பட்டு நமக்கு முன் பரவி உள்ளது என்பதைக் குருநாதர் தெளிவாக்கினார்…
1.எனக்குள் (ஞானகுரு) அதைப் பதிவாக்கினார்.
2.அகஸ்தியனின் உணர்வலைகளை நுகரும்படி செய்தார்.
3.காட்டிலே அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது இந்த உண்மைகளை அறிய முடிந்தது

ஏனென்றால் குரு அதை எல்லாம் பெற்றவர். அவர் பெற்ற உணர்வின் தொடர் வரிசையில் வரப்படும் பொழுது
1.எனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற முடிந்தது.
2,அந்த வழிகளிலே தான் உங்களுக்குள்ளும் அந்த அகஸ்தியனின் சக்திகளை இணைக்கின்றேன்.

கஷ்டங்கள் வந்தாலும் என் (ஈஸ்வரபட்டர்) அருள் உங்களுடனே…!

கஷ்டங்கள் வந்தாலும் என் (ஈஸ்வரபட்டர்) அருள் உங்களுடனே…!

 

ஜெப நிலையைக் கூட்டிக் கொள்
ஜெபத்துடனே நான் இருப்பேன்
ஜெபமெல்லாம் உன்னுடனே
ஜெபிப்பதெல்லாம் உன்னுள்ளே

 

“ஜெபித்ததெல்லாம் நானல்லவோ..!”

 

இந்நிலையில் நான் இருக்க
உனக்கு இனி கவலையில்லை
பாடும் பாடல் நானல்லவோ
“பாடிய குரல் எனதல்லவோ – புரிந்ததா…?”

 

உன் நிலை மறந்திடாமல்
ஜெப நிலையில் வந்துவிட்டால்
எந்நிலையும் கிட்டிவிடும்
என்ற பொருள் இதுவே…!

 

ஜோதி நிலை தந்திடுவேன்
ஜோதியுடன் கலந்திடுவாய்
ஜோதியாகி உலகத்தையே
ஜோதி மயம் ஆக்கிடுவாய்…!

பாடலின் தன்மையைப் புரிந்து பாட வேண்டும்.

நாம் சொல்கிற வார்த்தையிலும் செய்கிற செயலிலும் நம் நினைவு ஆழமாக அதில் ஒன்றி இருக்க வேண்டும்..!

உனதல்ல… எனதல்ல… இந்த உலகம்…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். ஆத்மீக வழியைப் பெறுவதற்கு வயது வரம்பு தேவையில்லை – ஏற்றுக் கொள்ளும் நிலையும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு.

ஆசையைத் தூண்டத்தான் இந்தப் பாட்டு.
1.உன் பாடலை எனதாக்கு
2.என் பாடலை உனதாக்குகின்றேன்.

உன் நிலையை மாற்றிக் கொள். காலம் கனிந்து வரும்.

1.எனக்கு நல்ல மனம் கொடு…! என்று சொல்லும் பொழுது
2.எல்லோரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை
3.பக்குவ நிலையில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகவே எந்த ஒரு துளி நிலையும் வீண் செய்யாமல் காலத்தை உபயோகப்படுத்துங்கள். உங்கள் வழி நல் வழியாகட்டும். தட்டில் சாப்பாடு உள்ளது. எடுத்து சாப்பிடுவது அவரவர்கள் வேலை.

அருள் மணங்களைப் பெற்றிடுங்கள். நம்பி வந்த பாதையை வென்று வாருங்கள். சித்தனின் நிலையைக் காண்பீர்கள். சித்தனாகிச் சித்தனுடன் கலந்திடுவீர்கள்.

நேரத்தை வீணாக்காதீர்கள். கால நிலை குறுகி விட்டது. காற்றுடன் கலந்து வாருங்கள். கஷ்டங்கள் வந்தாலும் என் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) அருள் உங்களுடனே…!

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்… கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்… கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

 

உதாரணமாக பாம்பினை நாம் கொன்றால் அந்தப் பாம்பின் உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவும் போது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. விஷம் அதனின் நினைவுக்கே அழைத்துச் செல்கின்றது.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதனின் உணர்வு நம்முடைய நினைவாற்றல் அனைத்தையும் மடியச் செய்து விடுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றபின் அதனின் ஈர்ப்புக்குள் சென்று நாம் பாம்பாகத் தான் பிறக்க நேரிடும்.

எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதராக உடல் பெற்றாலும் இத்தகைய தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்றால்
1.விஷத்தை வென்ற விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.பாம்பின் நினைவு மறைந்து நஞ்சினை வென்ற நினைவு வரும்.
4.அந்தப் பாம்பினத்திற்குள் போகாது தடைப்படுத்த முடியும்.

நம் உணர்வின் நினைவலைகள்
1.கண் கொண்டு கடைசியில்… எது நினைவுக்கு வந்ததோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு கண்ணன் பார்த்தசாரதியாக
3.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலிமை பெற்றதோ அங்கே அழைத்துச் செல்லும் நம் கண்கள்.

ஆனால் அதற்கு மாறாகப் பாம்பினத்தின் நினைவுகள் வரும் போது அது வலுவாகி விட்டால் நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் “இந்தப் பாம்பு தான் தன்னைத் தீண்டியது…” என்ற உணர்வுடன் அந்த விஷத்தின் தன்மை வலுவானால் இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று சொல்வது. பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்…! அப்போது அந்தப் பாம்பிடம் இருந்து தப்பிக்க கண்கள் எத்தனையோ உபாயங்களைச் சொல்கின்றது.

இருப்பினும் இந்தக் கண் அதனின் உணர்வை வலுவாக்கிவிட்டால் அர்ஜுனன் ஆகின்றது. அர்ஜுனன் ஆன பின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இந்த உடலைத் தீண்டினாலும் அதன் உடலுக்குள் நாம் (உயிரான்மா) சென்ற பின் அது பாதுகாப்பு தருகிறது.

கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ… அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று… அதன் வழியில் நம்மைப் பாதுகாக்கச் செய்கிறது.

ஒரு பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் நம் நினைவுகள் அதனை வலு கொண்டு எண்ணும் பொழுது இந்த உடலில் அந்த நஞ்சு பாய்ந்தாலும் நஞ்சு கலந்த உணர்வு பாய்ந்தாலும்
1.பாதுகாப்பான இடங்களை அந்தத் துருவ நட்சத்திரத்தினை நாம் எண்ணும் பொழுது அது வலிமை பெற்று
2.இந்த உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் சென்று நஞ்சினை ஒடுக்கச் செய்கின்றது
3.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது அதன் அருகில் செல்கின்றோம்
4.நஞ்சை வென்ற உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது.
5.மனிதர் என்ற அறிவின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகிறது.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.

ஆகவே நம் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நம் உயிரான்மா வெளியில் சென்றால்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அதனின் வலுவை இழக்கச் செய்து
3.அருள் ஒளியின் உணர்வைப் பெறும் தகுதியை நாம் பெற வேண்டும்.

காலை துருவ தியானத்தில் நாம் அதை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் இந்த உடலிலே எடுத்தாலும்
1.ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க இந்த உடலை உருவாக்கிய அணுக்களும் அந்த ஒளி பட்டு இது கரையத் தான் செய்யும்
2.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி நாம் ஒளியாக மாற முடியும்.

உடலுடனே நான் இருப்பேன் என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை. எதனின் உணர்வைக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.

அத்தகைய நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.

தன் மன நிலையில் இருந்துதான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

தன் மன நிலையில் இருந்துதான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

 

இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள். அறிவு நிலையும் ஆயுள் நிலையும் அவனுக்குள் இருக்கும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள்.

அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் உள்ள மனிதன்.
1.அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் ஆயுள் வந்தது என்று.
2.இல்லையப்பா… அவன் எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை
3.ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.

மனித உடலில் ஆசையுள்ளவன்…
1.தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை.
2.அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான்.
3.அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது.

எண்ணத்தைக் குறுக்கிட்டு வாழ்ந்து என்ன பயன் இருந்து என்ன புண்ணியம் வரும்…? வியாதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலேயே சுருங்கி விடுகின்றான். அவன் உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளேயே சுருங்கி விடுகின்றன.

1.ஆயுள் முடிந்து இறக்கின்றான்.. என்பதல்ல.
2.அவனின் எண்ணம் சுருங்கி மனம் சுருங்கிப் பெரும் பயத்தில் உள்ளவனிடம்
3.சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் அவ்வாவியின் நிலை.

வாழ்ந்திட வேண்டும் என்று ஆசையுள்ளவன் வாழ்கின்றான் பல நாட்கள். உயிர் பிரிவதெல்லாம் காலன் பிரித்துச் செல்வதல்ல. இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.

அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே தன் உயிர் பிரிந்துவிடும் என்ற பயத்திலேயே பிரிந்து செல்வதுதான் அவ்வாவி.

எந்நிலையில் உள்ளவனும் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஒரு நிலைப்படுத்தி வேண்டுபவன் எல்லாம் வாழ்கின்றான்.
1.மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.
2.பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவனிட்ட பிச்சை என்கின்றோம்.. இயற்கை என்கின்றோம்…!
2.எதுவப்பா பிச்சை…? எதுவப்பா இயற்கை…?

அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா…?

தன் மன நிலையில் இருந்துதான் மடிகின்றான்… வாழ்கின்றான் இம்மனிதன்…!

ஜெபித்திடுவேன்… ஜெபித்திடுவேன்…!
ஜெப அருளைத் தந்திடுவாய்

ஜெபமெல்லாம் ஜெயித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்

ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓ…ம் என்ற நாதத்தில்

ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் “ஓ…ம் ஈஸ்வரா…!

ஜெபித்த நிலையில் நீ வந்து… ஜெபமாக்கித் தந்திடுவாய்… ஈஸ்வரா…….!

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசிக்கவே கூடாது

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசிக்கவே கூடாது

 

ஒரு சிலர் வேதனைப்படுபவரைக் கண்டு ரசித்துப் பார்ப்பார்கள்.
1.பார்க்கலாம்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித் தான் வேண்டும்…! என்று
2.அந்த வேதனை உணர்வினை ரசித்துச் சுவாசித்தால்
3.விஷத்தை உருவாக்கும்… விஷத்தை உணவாக உட்கொள்ளும்… அணுவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

பொதுவாக ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு அணுக்களும் விஷத்தின் இயக்கமாகவே தான் இருக்கின்றது… நல்ல குணங்களும் சரி… மற்றதும் சரி.

ஆனால் வேதனைப்படுவோரைக் கண்டு ரசித்தோம் என்றால் இந்த விஷத்தினை உணவாகக் கவரும் அணுக்கருவாக உடலில் உருவாகிறது.

அந்த அணுக்கள் நம் இரத்தநாளங்களில் சுழலப்படும்போது உடலில் எந்த பாகத்தில் தேங்கி அணுக்களாகப் பெருகுகின்றதோ…
1.விஷத்தையே உணவாக உட்கொள்ளும் அணுவாகத் தன் வீரியத்தைக் காட்டுகின்றது,
2.முதலில் விழுதுகளை ஊன்றுகின்றது… பின் ஒவ்வொரு அணுக்களுக்கும் செல்லும் நிலையில்
3.உடல் முழுவதும் படர்கின்றது… “கேன்சராக” (புற்று நோயாக) மாறுகிறது.

மற்ற அணுக்கள் விஷத்தின் இயக்கத்திலேயே வருகின்றது. ஆனால் கேன்சர் அணுக்கள் தனக்குள் அந்த விஷத்தை வளர்த்து உடல் முழுவதும் பரப்பி உடலுக்குள் வரும் விஷத்தையே உணவாக உட்கொள்கிறது.

இப்படித்தான் கேன்சர் என்ற நோய் ஒவ்வொரு நிலைகளிலும் படர்ந்து உடலையே சீரழித்து விடுகிறது.

பார்க்கலாம் கேன்சர் வந்தவர்களுக்கு…!
1.உடலில் ஒரு பகுதியில் அதை அறுத்து அப்புறப்படுத்தி எடுத்தாலும்
2.அடுத்து அதனுடைய விழுதுகள் தொடர்ந்து மரக்கிளைகள் முளைப்பது போன்று
3.அது வேறு பக்கம் முளைத்துக் கொண்டே வரும்.

இன்று சில வகையான தாவரங்களைப் பார்த்தோமென்றால் அதனின் விழுது ஊன்றும் வழிகளிலேயே அந்த மரங்கள் செடி கொடிகள் விளையும். இதைப் போன்று தான் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் இந்த உடலில் பரவுகிறது.

இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே வேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசித்தோம் என்றால் அவனிடமிருந்து வெளிப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது அவன் எப்படி வேதனைப்படுகின்றானோ அந்த விஷத்தின் அணுக்கள் நமக்குள் வளர்ந்து அது அணுவாக விளைந்த பின் விஷத்திற்காக அந்த அணுக்கள் ஏங்கும்.

அப்போது வேதனைப்படும் உணர்வை மீண்டும் நுகரப்படும் பொழுது அது பெருகும். இடைமறித்து நம் உடலில் விழுகளைப் போட்ட பின் நம் உடலில் இருக்கும் மற்ற அணுக்களின் இயக்கச் சக்தி குறையும்.

இவ்வாறு ஆனபின் நல்ல உடலில் வீக்கங்கள் உருவாகும். வீக்கமாகும் போது உணவுக் குழாயில் வந்து விட்டால் உணவு உள்ளே போகாது அடைத்து விடுகின்றது.

பல்லிலே வந்தால் அங்கே விஷத்தின் தன்மை கூடி கடுமையான வலியாகிறது. இப்படி நரக வேதனையைத் தான் பட வேண்டி இருக்கின்றது.

ஆகவே வேதனைப்படுவோரைப் பார்த்து ரசித்தோம் என்றால் நிச்சயம் அவருக்குக் கேன்சர் நோய் வரும். இதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்காதே… வேதனைப்பட்டு அதன் வழியில் உருவாக்கும் அனைத்தும் அவர்களுக்குள் விஷமான அணுக்கள் உருவாக்கப்பட்டு நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது

கேன்சர் நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்…? ஒவ்வொரு நொடியிலும் பிறர் தவறு செய்வதைக் கண்டு நீ மகிழ்ச்சி அடையாதே…! என்றார் குருநாதர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எனக்குள் பெருக வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று முதலில் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்…
1.அந்த வேதனைப்படுவோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
2.அறியாமையிலிருந்து விடுபடவேண்டும்… இருள் நீக்கிப் பொருளறியும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
3.பிறர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற மாட்டோம்
4.அவருக்குள் வரும் தீமைகளை நுகர்ந்து அறிய மாட்டோம்.
5.வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்க மாட்டோம்…!

கேன்சர் நோய் வராது இப்படித் தடுக்க முடியும்.