வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்

வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்

 

ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு அந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது என்ற ஒரே குறிதான். ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து உண்டு வாழ்ந்து மடிவதுவே.

ஆறறிவு படைத்த ஜீவனுள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான் என்கிறார்கள். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவைவிட மனித அறிவு உயர்ந்தது ஐந்தறிவு ஆறறிவு என்று சொல்கின்றார்கள்.

எறும்பிற்கும் ஐந்து அறிவுதானா…? யானைக்கும் ஐந்து அறிவு தானா…? இவர்கள் சொல்வது போல் ஜந்துக்களுக்கு ஐந்து அறிவும் அல்ல.. மனிதனுக்கு ஆறு அறிவுமல்ல…!

அவனவன் செய்த பாவ புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான். அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது. மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா…?

ஆறறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா…? மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலை பிரித்துக் காட்டிடப் பகிர்ந்திட்டேன் இவையெல்லாம்.

மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய ஜீவாதாரம் மிக முக்கியம். மனித நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம். இன்றுள்ள மனிதர்களுக்கு பொருள் முக்கியம்.

ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தை தன்னைத்தானே அடித்தும் உண்டிட்டான். இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்களெல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள்தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள் பிறகு ஒரு நிலையில் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்திட்டார்கள்.

அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறிகள் இலைளைப் பறித்துப் புசித்திட்டார்கள். அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறித்தான் அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.

இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது. இராமாவதாரத்தில் இருந்துதான் இந்த ஜீவாதாரத்திற்குப் பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான்.

இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா. காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.

அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சியினானும் சிக்க வைத்துப் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.

கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் தன் நிலையை உயர்த்திட…
1.உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திட
2.பெரும் புதையல் பொக்கிஷம் புதைத்து வைக்கும் நிலையை உண்டு பண்ணினார்கள்.
3.அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள்தான் செயற்கை யுகத்தைக் கலந்திட்டார்கள்.
4.காலப்போக்கில் அச்செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே மாற்றிவிட்டார்கள்.

ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியமப்பா. தன் ஜீவனை வளர்த்திடத் தன் வாழ்க்கைக்கு வேண்டியதை எண்ணுவதில்லை இம் மனிதர்கள். பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகிறார்கள் இம் மனிதர்கள்.

இச்செயற்கை ஆசையின் உந்தலினால்தான் ஜீவாதாரத்தின் தன்மையையே மாற்றித் தான் மகிழ என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.

ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள்.
1.தான் பிழைக்கும் வழிக்குத்தான் எல்லாமே…! என்கின்றார்கள்.
2.தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.
3.பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா…?

சொத்து என்று சேர்ப்பது என்னப்பா…?

அவர்கள் வழியில்… பணம் காசு தான் “சொத்து…!” என்கின்றார்கள். பெரும் சொத்து… அதுவல்லப்பா…!

தான் பிறந்து வளரும் நிலையில் தன் ஜீவாதாரத்தில் “போதும்…!” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
1.மறற மக்களுக்கு நல்லறிவைப் புகட்டி தர்ம நியாயம் அளிப்பவனும்
2.தான் பெற்ற மக்களை நல்லுணர்வுடன் வளர்ப்பவனும்
3.தான் என்றால் யார்…! என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்துத்தானப்பா பெரும் சொத்து.

இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது. அரிதப்பா அரிது. இக்கலியில் இருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலையெல்லாம் மற்றவனைப் பார்த்துத்தான் தன் நிலையில் வாழ்கின்றான். இது புரிந்ததா…?

மற்றவர்களைப் பார்த்து அவன் அந்நிலையில் வாழ்கின்றானே… தன் நிலை அப்படி இல்லையே…! தானும் அவனைப் போல் வாழ்ந்திட முடியவில்லை என்கிற பொழுது அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.

இந்நிலையில் உள்ளவனின் நிலைதான் இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். ஜீவாதாரத்திற்கு ஆசை வேண்டுமப்பா. ஆனால் பெரும் பேராசைக்காரன் அப்பா இக்கலியின் மனிதன்.

இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே பெரும் கரியாகிவிட்டதப்பா…! இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படி அப்பா இருப்பான்…?

இவன் விட்டிடும் நஞ்சுக் காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படியப்பா இருந்திடும்? ஜீவாதாரத்தையே மாற்றி விட்டான்…! ஜீவனுக்கே பெயர் வைத்துவிட்டான்… ஆறறிவு ஐந்தறிவு என்று…! பாட நிலை புரிந்ததா…!

கல்கி அவதாரத்தில் ஆரம்பித்துக் கலிக்கு வரும் உலகம் காலம் மாறி மீண்டும் இதே சுற்று நிலை வரும். கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள்தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள். இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறகொரு உலகம் வந்திடுமப்பா.

அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. உலகத்தன்மையில் உணர்வெல்லாம் இவ்வுலகத்திற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது.

மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன. அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம் கல்கியில் வரும் அவதாரங்கள்தான்.

இந்த வாழ்க்கையில் வரும் அற்ப ஆசைகளை மறந்துவிட்டு பெரு நிலையை எய்திடப்பார்…! அந்நிலையில் பெருநிலையை எண்ணிவிட்டால் பெற்றிடுவான் இந்நிலையில் பெருநிலையை…!
1.நான் வாழ்ந்தென்ன பயன்… நான் வாழ்ந்தென்ன பயன் என்கின்றார்கள்…!
2.வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்.

பெருநிலையை எய்திடவே என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்களெல்லாரும் பெரு நிலை எய்திக் கல்கிக்கு வருபவர்களே. எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலகாலமாகத் தவமிருந்த தவசிகளும் பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள். அவர்களுடன் கலந்திடலாம்.

இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்திவிட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம் பலகோடித் தேவாதி தேவர்களுடனும். பாட நிலை புரிந்ததா…?

விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால் நினைவின் எண்ணத்தில் வருவதுதான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?

1.விக்கலுக்கு மருந்து இல்லை
2.எண்ணும் எண்ணத்திற்கும் மருந்தில்லை.
3.விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
4.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வெண்ணம்.
5.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனுடன் ஒன்றிய நிலையில் ஜெப நிலையில் மனநிலையைக் கலந்திடப்பா.
6.உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன என்று…?

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் குருநாதர் என்னை எடுக்க வைத்த முறை

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் குருநாதர் என்னை எடுக்க வைத்த முறை

 

குருநாதர் பாஷை புரியாதபடி எதை எதையோ சொல்லுவார் என்னென்னவோ சொல்லுவார். எனக்குத் (ஞானகுரு) தெரியாது
1.தெரியாது… என்று நான் சொன்னாலும் வம்பு…!
2.தெரியும் என்று நான் சொன்னாலும் “எப்படித் தெரிந்து கொண்டாய்…?” என்று கேட்பார் குருநாதர்

இப்படி வழக்கத்திற்கு மாறான நிலையில் செய்து அதனைத் தனக்குள் செய்யச் செய்து
1.அவரின் சக்தி வாய்ந்த உணர்வை எனக்குள் போதிக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் வளர்ந்தபின்
2.இப்போது எப்படி இருக்கின்றது…? என்று கேட்பார்…?

அவர் சொல்லும் (உபதேசம்) பொழுதும் எனக்குக் கஷ்டங்கள் வரும் பொழுதும் மறைமுகமாகவே எனக்குள் இப்படித் தான் சொல்வார். சொல்லிவிட்டு
1.அதைப் பார்… இதைப் பார்…
2.இப்படிப் பார்… அப்படிப் பார்…! என்பார்.

அதை நான் கேட்கும்போது இவர் என்ன சொல்லுகிறார்…? என்று நான் நினைத்து விட்டால்
1.ஏன்டா திருடா நீ இதைத் திருட வேண்டும் என்றால் அதைத் திருடுகின்றாயே…!
2.நான் சொல்வதை விட்டுவிட்டு எதை எதையோ திருடிக் கொண்டிருக்கிறாய்… “என்னவோ ஏதோ என்று…”

ஆக அதைத் திருடினால் நீ திருடனாகின்றாய். ஆனால் நான் சொல்லும் உணர்வின் தன்மையைப் பெற்றால் நீ திருடன் அல்ல. நீ என்னிடம் கேட்டு வாங்குகிறாய்…! ஆகவே நான் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீ ஏங்கிப் பெறு என்பார்.

ஆனால் இவர் (ஈஸ்வரபட்டர்) சொல்வது எப்படி…? எனக்கு ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே… அதாகின்றது… இதாகின்றது… என்று எண்ணினால்
1.திருட்டுத்தனமாக உனக்குள் “குறையின் உணர்வை” எடுத்துக் கொள்கின்றாய்.
2.அது உன் திருட்டுத்தனத்தின் நிலையைக் காட்டுகின்றது.

நான் கொடுக்கின்றேன்… நீ எடுத்துக்கொள்…! ஆகவே கொடுப்பதை விடுத்துவிட்டுக் கிடைக்காததை நினைத்து நீ எங்கோ நினைவு செலுத்துகின்றாய்.

நான் மனமுவந்து கொடுக்கும் உணர்வை நீ நுகர்ந்தறிந்தால் அதன் அணுவாக உனக்குள் வரும். அருள் ஞானத்தின் உணர்வுகளை உனக்குள் வளர்த்துக் கொள்ள உதவும்…! என்றார்.

இப்படித்தான் அவருடைய சொல் செயல் இவை எல்லாம் வெளிப்பட்டது. அதன் வழி கொண்டு எனக்குள் தெளிவாக்கினார்.

எனக்குக் கல்வி அறிவே இல்லை… நான் மூடனாக இருப்பினும் என் மூடத் தன்மையை நீக்கி அருள் ஞானத்தை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று வளர்த்தார்.

காடு மேடெல்லாம் அலையச் செய்தார் உணவு இல்லாதபடி தேடச் செய்தார். இயற்கையில் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது…? என்று இப்படி எத்தனையோ பல உணர்வுகளைக் காட்டுகின்றார். அதையெல்லாம் பசியோடு இருந்து தான் பார்த்தேன்.

1.என் குரு எனக்குச் சொன்னது போன்று…
2.அவர் எனக்கு உணர்த்தியது போன்று…
3.நீங்களும் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று தான் இப்பொழுது உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

இப்போது பெற்றிருக்கும் இந்த மனித உடலே “கடைசியாக இருக்கட்டும்…”

இப்போது பெற்றிருக்கும் இந்த மனித உடலே “கடைசியாக இருக்கட்டும்…”

 

1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

ஈஸ்வரபட்டர் சாக்கடை அருகே எம்மை (ஞானகுரு) அமர வைத்துச் சொன்னது…

ஈஸ்வரபட்டர் சாக்கடை அருகே எம்மை (ஞானகுரு) அமர வைத்துச் சொன்னது…

 

1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கிப் பெறு
2.புருவ மத்தியில் நினைவு கொள்
3.சாக்கடை நாற்றம் உனக்குள் வருகிறதா என்று பார்..!
4.வராது… உன்னால் அதை உணர முடியாது என்று தெளிவாக்கினார்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் எடுத்த பின் இது தீமைகளை வெளியேற்றிக் கழித்து விடுகிறது. இதைத் தான் மடி மீது இரண்யனை வைத்து நரநாராயணன் வாசல்படி மீது அமர்ந்து அவனைப் பிளந்தான்… “நரசிம்ம அவதாரம்” என்று சொல்வது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் உயிருடன் ஒன்றப்படும் போது வலிமையான சக்தியாக உருப்பெறுகிறது.

எப்போதெல்லாம் தீமைகளைப் பார்க்கின்றோமோ அந்தத் தீமை நமக்குள் அணுவாக உருவாவதற்கு முன் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சாக்கடையின் அருகிலே அமரச் செய்து எனக்கு நேரடி அனுபவமாகத் தான் குருநாதர் அதைக் காட்டினார்.

எனக்குக் காபியும் அவருக்கு டீயும் வாங்கி வரச் சொல்லி சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பைகளை காபியில் போட்டுக் குடிக்கச் சொன்னார். அவர் டீயிலும் அள்ளிப் போட்டு அவர் குடிக்கின்றார்.

ஈஸ்வரா என்று உன் புருவ மத்தியில் எண்ணி அதைக் அதைக் குடித்துப் பார் என்றார்… குடிக்கச் செய்தார்.
1.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது
2.அந்த நாற்றம் வரவில்லை… அந்த மணம் எனக்குள் வரவில்லை.

ஆனால் முதலிலே குடிக்க மறுத்தேன். குருநாதர் “குடி…!” என்றார். நீ நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி இந்த உணர்வின் சுவைகளை எப்படி மாற்றுகிறது…? தீமைகள் அணுகாது எப்படித் தடுக்கிறது…? என்று நேரடியாகக் காட்டுகிறார்.

1.ஒரு திரவகத்தை ஊற்றினால் அது பட்டவுடனே மற்ற தீமைகளை அது எப்படி ஆவியாக மாற்றுகின்றதோ
2.அதைப் போல் நஞ்சினை வென்ற அந்தத் துருவ மகரிஷியின் உணர்வை உனக்குள் நீ எடுக்கப்படும் போது
3.அந்த நஞ்சு உட்புகாது… புறத்தாலே கழித்துவிடுகிறது என்றார்.

முதலில் நான் மறுத்தேன். ஆனால் “அவர் குடிக்கின்றாரே…” என்ற எண்ணம் எனக்குள் வந்த பின் நீ கொஞ்சம் குடித்துப் பார் என்றார் குருநாதர்.
1.அப்போது தேவாமிர்தம் போன்று அந்த மணத்தை மாற்றுகிறது.
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளை அங்கே உருவாக்குகிறது.

தீமைகளை நீ எப்படி நீக்க வேண்டும்…? நரசிம்ம அவதாரமாக நீ எப்படி ஆக வேண்டும்…? இயற்கையிலே இதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

அருள் ஞானி அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை வென்று இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின்று வெளி வரும் ஆற்றலைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகிறது.
1.அதை நீ உற்றுப் பார்…! என்று அந்த உணர்வின் தன்மையை நினைவாக்குகின்றார்
2.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் என் நினைவை இணைக்கின்றார்.

அதனின்று வெளிப்படும் உணர்வுகள் எப்படிப் பரவுகிறது…? சூரியன் எப்படி அதைக் கவர்கிறது…?
1.அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கிப் பெறு
2.அதை உன் புருவ மத்தியில் எண்ணி நுகரப்படும் போது ஒளிக் கதிர்கள் எப்படித் தெரிகிறது…? என்று பார்.

அந்த ஒளிக் கற்றைகள் உன் உடலுக்குள் பரவப்படும் போது அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. ஒளியான அணுவின் கருவாக மாற்றும் தன்மை பெறுகிறது என்று காட்டுகின்றார்.

அதற்குத்தான் அடிக்கடி உங்கள் நினைவினை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

அந்தச் சக்தியைப் பெறச் செய்யும் தகுதிக்குத் தான் துருவ தியானத்தில் உங்கள் நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தச் செய்யும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

1.எனது குரு எனக்கு எப்படிச் செய்தாரோ அதே போல்
2.நீங்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை நுகரும் சக்தியாக அடிக்கடி இந்த உபதேச வாயிலாக உணர்த்தி
3.கேட்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுக் கருவாக உருவாக்கப்படும் போது
4.மெய் ஞானிகளின் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த நினைவுகளைக் கொண்டு வரும்படி செய்கிறேன் (ஞானகுரு).

பல அணுக்களின் உந்தலுக்கு அடிபணியாமல் நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்

பல அணுக்களின் உந்தலுக்கு அடிபணியாமல் நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்

 

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும். நாம் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நாம் உண்ணும் உணவு நல்ல மணமாகவும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது.

அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு “அமிழ்தமாக… அரும் பெரும் சுவை கூடியதாக… நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது…!”

ஆனால் நாம் நமக்குள் பல கலக்கங்கள் பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச் சங்கடத்துடன் உள்ள பொழுது நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று அதிலுள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகின்றது. நோய் வரக் காரணமாகின்றது.
1.ஒன்று போல் உணவை எல்லோரும் உண்டாலும்
2.அவரவர்கள் நம் மன நிலையைப் பொறுத்துத்தான் உடல் அவ்வாகாரத்தை எடுத்து நம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.

அதைப் போன்று தான் ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டுதான் இவ்வுயிர் இவ்வுடலை இயக்கி வாழ்கின்றோம்.

எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ
1.ஏனென்றால் எந்த ஒரு சமையலையும் செய்யும் பொழுது
2.அதன் பதம் அறிந்து செய்தால்தான் அது முழுமை அடைகிறது.

அதைப் போலத்தான் இவ்வுடல் என்னும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதம் அறிந்து
2.சந்தோஷ நிலை – கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு
3.இவ்வுடலையே பக்குவப்படுத்தி பதம் அறிந்து
4.நாம் நம் உயிராத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.

நம்மில் நம்மைச் சுற்றி இருக்கும் பல அணுக்களின் உந்தலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…!”

1.நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ
2.அதைக் கொண்டுதான் நன்மையும் தீமையும் அமைகின்றது என்பதனை உணர்ந்து
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.

இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து நமக்கு முன் உபதேசித்த பல மெய் ஞானிகளின் அருள் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் பக்குவ நிலையில்.

1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல
2.இவ்வுலகனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல.
3.அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே ஒரே சொந்தம் தான்.

நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்ததுதான் எல்லாமே. அந்த எல்லாவற்றிலும் கலந்துள்ளவர் தாம் நாமுமே.

“நான்…!” என்ற தனி நிலை இல்லாத நாம் இவ்வுருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம்.

நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.

ஆத்மாவைத் தூய்மைப்படுத்தி அன்புடன் அறத்துடன் வாழ்வதே ஆத்மீகம்

ஆத்மாவைத் தூய்மைப்படுத்தி அன்புடன் அறத்துடன் வாழ்வதே ஆத்மீகம்

 

ஆத்மீகம் என்பது என்ன..?

ஆத்மீக வழிக்குச் செல்வதற்குப் பல நாள் பல பூஜைகள் செய்து… பல பாடல்களைப் பாடி… ஆண்டவன் திருப்பாதத்தை நமஸ்கரித்து வேண்டி… எண்ணத்தையும் செயலையும் அவ்வாண்டவனுக்கே அர்ப்பணித்து… ஆண்டவனின் அருள் ஒன்று பெற்றால் இவ்வுலகமே பெற்ற பூரிப்பு எனக்குக் கிடைக்கும்…!

அவ்வாண்டவனுக்குத் திருப்பணி நடத்துவதுவே… திகட்டாத இன்பம் என்றெல்லாம் நாம் நம்மில் பலரும் நல்லெண்ணம் கொண்டு வழி தெரிந்தும்… தெரியாமலும்…! நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற வழிதனை அவன் பாதம் பணிந்து நின்றே… பல விரதம் பல பூஜை செய்தே… செல்கின்றோம் ஆத்மீக வழி காண…!

1.ஆத்மீக வழியில் உள்ள ஆண்டவன் யாரப்பா..?
2.இந்நிலையில் பூஜிப்பவன் எல்லாம் ஆத்மீக வழியை அடைந்தவனா…?
3.அவன் எண்ணும் ஆண்டவன் யாரப்பா…?

இவ்வழி முறைகளைக் கொண்ட “ஆத்மீக வழிக்கு நான் சென்றுள்ளேன்…!” என்பவனின் எண்ணத்தில்
1.சிறிதளவு புகழ்ச்சிக்கு மகிழும் தன்மையும்
2.இகழ்ச்சிக்கு வருந்தும் தன்மையும் உண்டென்றாலும்
3.அவன் செல்லும் ஆத்மீக வழிக்குப் பயனேதும் இல்லையப்பா…!

நான் ஆண்டவனை வேண்டுகின்றேன் ஆத்மீக வழிக்குச் செல்வதற்குத்தான்…! ஏன் அந்த முருகன் வந்து எனக்கு வழிகாட்டக் கூடாதா…? என் தவறுக்கு – தவறுக்கு முன் தடுக்கும் வழியை அம்முருகன் செய்யக் கூடாதா…? நான் நினைப்பதுவும் செயல்படுத்துவதுவும் அவனே அல்லவா…! என்றே
1.அவ்வாண்டவனைப் “பிற ரூபத்திலேயே…..!”
2.நாம் ஆத்மீக வழியைக் கண்டுணரப் பார்க்கின்றோமப்பா.

ஆத்மீக வழியென்றால் என்ன…? ஆண்டவன் என்பதன் நிலையென்ன…? என்றெல்லாம் பல நிலைகளில் விளக்கியுள்ளேன்.
1.நம்முள் உள்ள ஆண்டவனை…
2.நாம் எண்ணும் சக்தி கொண்டு…
3.நாம் எண்ணும் வழிக்குத்தான்…
4.எவ்வெண்ணத்தில்… எச்சுவாச நிலையைப் பெறுகின்றோமோ…
5.அந்நிலை கொண்டேதான் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும் வந்தடைகிறது. (இது முக்கியம்)

முன் ஜென்மத்தில் நாம் விட்ட சப்த அலைகளும் நாம் இஜ்ஜென்மத்தில் வாழும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்ட சுவாசத்தின் முன் ஜென்மத்தின் சப்த அலைகளும் இஜ்ஜென்மத்தின் சப்த அலைகளும் கலந்தேதான் நாம் சுவாசம் எடுக்கின்றோம்.

இக்காற்றினிலே பரிசுத்தமான காற்று… நிர்மலமான காற்று… என்ற நிலை இல்லையப்பா. இக்காற்றில் கலந்துள்ள சப்த அலைகளில் பலர் எடுத்த பலர் எடுத்த என்னும் பொழுது இப்பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டுள்ள
1.ஜீவனுடன் உள்ள எல்லா சப்த அலைகளும்
2.ஜீவனில்லா இயந்திரங்களின் சப்த அலைகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளன.

நாம் எடுக்கும் சுவாச நிலைகொண்டு நம்மைச் சுற்றியுள்ள நாம் பிறவி எடுத்த இப்பிறவி மட்டுமல்ல அணுவாக உதித்த காலம் முதற் கொண்டு நாம் விட்ட சப்த அலைகளும் அனைத்துமே நம்மைச் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

நம்மில் கலந்துள்ள இச்சப்த அலைகளில் இஜ்ஜென்மத்தில் நம் எண்ணமும் செயலும் நல்லவைகளாக இருந்திருந்தாலும் முன் ஜென்மத்தின் நன்மை தீமைகள் நம்மைச் சுற்றிக் கொண்டுள்ளதினால் அதனின் இயக்கமும் வரும்.

எண்ணத்திலிருந்து வருவதுதான் குணம். பல ஜென்மங்களின் தொடர்பு கொண்டுதான் நாம் இன்று வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் எப்படி நன்மை தீமை இருந்தன என்கின்றீர்…? என்பீர்கள்…! முன் ஜென்மத்தின் குறையினால் தான் ஜென்மத்தில் மீண்டும் உடல் பெற்று இங்கே வந்துள்ளோம்.

நாம் வாழும் வாழ்க்கையில்
1.நாம் ஆத்மீக வழிக்குச் சென்றிட
2.ஜெபம் செய்து ஆண்டவனின் திருப்பணி செய்து வாழ்வது மட்டும் வழியல்ல…! என்று உணர்தல் வேண்டும்.
3.ஆத்மீக வழிக்குச் செல்லும் வழிமுறையை நல் வழியாக அமைத்துச் சென்றிட வேண்டும்.

இக்காற்றினால் கலந்துள்ள நன்மை தீமை கொண்ட சப்த அலைகளில்… “நல்லதையே…!” நம் சப்த அலைகளில் ஈர்க்கும் சுவாச நிலைபெற்ற அந்த ஜெப நிலையை நாம் அடையும் பக்குவத் தன்மைக்கு வர வேண்டும்.

இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் மன நிலையை அடிபணிய விடாமல் நம் எண்ணமும் சுவாசமும் நம்முள் உள்ள அவ்வாண்டவனைக் கண்டுணர்ந்து
1.நம்மை ஆட்டுவிக்கும் அச்சக்தி நம்முள் உள்ள பொழுது அச்சக்தியை ஆண்டவனாக்கி
2.தீய வாழ்க்கையை விட்டகற்றி
3.கோபத்திற்கும் பகைக்கும் போற்றலுக்கும் நம்மை நாம் அடிபணிய வைத்திடாமல்
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஆத்ம சுத்தி)
5.அன்பு கொண்டு அறத்துடன் வாழ்பவன் ஒவ்வொருவனுமே
6.ஆத்மீக வழிக்குச் சென்ற ஆண்டவன் ஆகின்றான் என்றுணர்தல் வேண்டும்.

ஆகவே ஆத்மீக வழியின் வழியறிந்து அன்பென்னும் சத்தியத்திற்கு அன்பு காட்டி அன்புடனே அருள் கொண்டு வாழ்ந்திடுங்கள்.

இவ்வுலகினில் மட்டுமல்லாமல் இவ்வுலகுடன் தொடர்பு கொண்ட எல்லா உலகிலும் (அகண்ட அண்டத்திலும்) உள்ள நிலையை அறிந்து கொள்ள முடியும்.
1.அவரவர்கள் எந்த எண்ணத்தை எண்ணுகின்றார்களோ
2.அந்த நிலையிலிருந்து அமைவதுதான் அவரவர்களின் நிலையெல்லாம்.

நம் உடலுக்கு நாமெடுக்கும் ஆகாரம் கொண்டுதான் அவ்வுடல் நிலை உள்ளது. இவ்வுடல் என்னும் கூட்டைப் பாதுகாத்திடவே பரிபக்குவ நிலை பல செய்கின்றோம். அதைப் போல
1.இவ்வுடலுடன் கலந்துள்ள
2.இவ்வுடலையே நடத்திச் செல்லும் ஆண்டவன் என்னும் ஆத்மாவுக்கு
3.ஆத்மீக வழி என்ற அன்பு கொண்ட அன்னமிட்டே வளர்த்திடுங்கள்.

பக்தி எது…?

பக்தி எது…?

 

பக்தி என்பது நாம் சிலையை வணங்குவதும் அபிஷேகம் செய்வதும் தெய்வத்திற்குக் காசைக் கொடுப்பதும்… போன்ற நிலை உள்ளது. அங்கே அதன் வழியில் சாமியாராக உட்கார்ந்திருப்பவன்
1.நான் கடவுளையே கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்…! என்று மந்திரத்தைச் சொல்வான்.
2.பக்தியில் சென்ற ஆவியைத் தனக்குள் எடுத்து வைத்திருப்பான்.
3.நாம் அவனிடம் வந்தவுடனே நீங்கள் என்னென்ன எண்ணியிருக்கின்றீர்கள்…? என்பான்
4.இன்னென்ன மாதிரிச் செய்திருக்கிறீர்கள்…! என்று சொன்னவுடனே அவனே நமக்குக் கடவுளின் தூதுவனாகின்றான்.

அதன் நிலைகள எடுத்துக் கொண்ட பின் இவன் மீண்டும் அசுரனாகின்றான். ஆசையின் நிலைகள் தனக்குள் வரப்படும் போது தவறு செய்யத் துணிகின்றான் (சாமியார்).

பக்தி என்ற நிலை இப்படி வரும் போது நம்மை அறியாமலே அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் நுகர்ந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட சாமியார்கள் உலகில் பக்தி கொண்டோரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நரகலோகத்திற்கு அனுப்பும் உணர்வைத் தான் வளர்க்கின்றனர். ஆக… நல்லதைப் பெறும் நிலைகளை இழந்து நம்மையே வாட்டிக் கொண்டிருக்கின்றோம்.

பக்தி கொண்ட நிலையில் நாம் கடவுளை வணங்குகின்றோம் என்றால் வணங்குவோருக்கு
1.பக்தி கொண்ட நிலையில் நமக்கு ஏன் தெய்வம் இதை உணர்த்தவில்லை…?
2.மற்றவர்கள் சிரமப்படுகின்றார்கள்… சிரமத்திலிருந்து மீட்ட வேண்டும் என்ற நிலைகள் ஏன் வரவில்லை
3.தவறு செய்வோருக்குத் தெய்வம் உடந்தையாக இருக்கின்றதா…?
4.அபிஷேகமும் ஆராதனையும் காணிக்கையும் கொடுத்துவிட்டால் அவர்களை மட்டும் அந்தத் தெய்வம் காக்கின்றதா…?
5.நமக்கு நல்ல உணர்வைத் தெய்வம் ஊட்டவில்லையா…? ஊட்டுகின்றதா…? என்ற எண்ணங்கள் ஓடுகிறது.

ஆனால் இந்தப் பூமியில் இந்தப் பரமாத்மாவைச் (காற்று மண்டலத்தை) சுத்தப்படுத்துவதற்காகத் தான் அன்று ஒவ்வொரு மாதங்களிலேயும் விழாக்களை வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் அனைவரையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு தீய வினைகளைத் தடுத்து நிறுத்தும்படி செய்யச் சொன்னார்கள்.

களிமண்ணால் விநாயகரைச் செய்து அபிஷேகம் செய்து ஆராதனை செய்து அதைக் கொண்டு போய்க் கடலில் கரைத்துவிட்டால் அதற்காக நம்மை வணங்கினான் என்று மெச்சி நமக்கு எல்லாமே கொடுக்கின்றாரா…? என்றால் இல்லை.

ஆக நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு வேதனை கோபம் பயம் என்ற உணர்வுகள் உடலிலே அதிகரித்திருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதை எல்லாம் வளராது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முறைகளைத் தான் கடைப்பிடிக்கச் சொன்னார்கள்.

ஈஸ்வரா…! என்று தன் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் வளர்த்துவிட்டால் தீய வினைகள் உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

குடும்பத்திலோ… கொடுக்கல் வாங்கலிலோ… தொழில் செய்யும் இடங்களிலோ… வெறுப்பு என்ற உணர்வை இங்கே உள்ளே புகவிடாது அது தடுக்கப்படுகின்றது.

அதிகாலை நான்கிலிருந்து காலை ஆறு மணிக்குள் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த முறைப்படி செய்தால்
2.தீமையான அணுக்கள் நம் ஈர்ப்புக்குள் வராதபடி உடலுக்குள் வளராதபடி தடுக்கின்றது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்கள் கூட்டமைப்பாக வெளிவரப்படும் போது பூமியிலிருக்கும் அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைக் காலை ஆறு மணிக்குச் சூரியன் மேலே எடுத்துக் கொண்டு செல்கிறது.

அங்கே சூனிய நிலைகளுக்குச் சென்ற பின் கடலுக்குள் சென்று கடல் அலைகளுக்குள் அமிழ்த்திக் கரைத்துவிடுகிறது. நம் பரமாத்மா சுத்தமடைகிறது… நம் ஆன்மாவும் தெளிவாகிறது.

அருள் ஒளி பெறும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் தெளிவாகிறது. நம்மை அறியாமல் வரும் நிலைகளை இப்படித் தான் கரைக்கும்படி அன்று ஞானிகள் சொன்னார்கள்.

ஆகவே நாம் எதைப் பக்தி கொள்ள வேண்டும்…?

1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ண வேண்டும்.
2.நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.
3.ஒவ்வொரு உயிரும் கடவுளே… அந்த உடலை உருவாக்கிய ஒவ்வொரு குணங்களும் தெய்வமே…!

அந்த வழிகளில் மனிதனின் செயலாக்கம் உரு பெற்றுக் கொண்டு வந்தது.

ஆகவே மற்றவர்கள் உயர வேண்டும் என்றால் அந்த உணர்வு எனக்குள் தெய்வமாகிறது. இந்தப் பண்பினை வளர்ப்பதற்குத் தான் இதைச் செய்தார்கள்.

யாராவது நாம் சற்று சிந்தித்துப் பார்க்கின்றோமா…? இல்லை…! இல்லை என்ற பதில் தான் வரும். இதிலிருந்து நாம் மீள வேண்டும். பக்தி எது என்பதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நல்லது நடக்கும் “காலமோ நேரமோ” நம்மைத் தேடி வராது… நாம் தான் அதை உருவாக்க வேண்டும்

நல்லது நடக்கும் “காலமோ நேரமோ” நம்மைத் தேடி வராது… நாம் தான் அதை உருவாக்க வேண்டும்

 

தெய்வப் பிறவி… மனிதப் பிறவி…! என்ற பாகுபாடு எல்லாம் பிறக்கும் பிறவியில் இல்லை.

தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கின்றார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை. உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில்தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.

ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜெந்துக்களாகவும் ஆனதெல்லாமே அதனதன் சந்தர்ப்பம் தான்.
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.

உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லாருமே ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்
1.நாம் அன்று எடுத்த
2.அதே போல இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
3.நமக்கு நாமே தேடிக்கொண்ட நிலைதான்…!

இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.ஆண்டவன் பிறப்பு வேறு…!
2.மனிதன் பிறப்பு வேறு…! என்ற
3.மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.

நாம் இன்று மனித உடல் பெற்று வாழும் வாழ்க்கையை அதிலுள்ள உண்மையை ஊன்றிப் பார்த்தால் தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்ததுதான்.

மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து… நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலையே நமக்கு முன்னாடி உள்ளது.

ஆகவே
1.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம்
2.இந்தப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
3.மனிதனின் நிலை – தன்னை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.
4.தன் நிலை உணர்ந்து தான் வாழும் வாழ்க்கை என்பது “காலமும் நேரமும் பார்த்து அது வருவதில்லை…!

ஏனென்றால் காலத்தையும் நேரத்தையும் பார்த்துக் கொண்டு மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்கின்றான்.

அப்படிக் கெடுத்துக் கொள்வதால்தான் மனிதனுக்கு அடுத்துத் தெய்வமாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டுக் கொண்டு பல ஜென்மங்கள் ஜென்மங்களாக… பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ளான்…!

அந்த நிலையை நாம் ஏன் பெற வேண்டும்…?

உலக மாற்றம் அருகிலே வந்துவிட்டது. ஆகவே நல்ல நினைவு இருக்கும் இந்த நேரத்திலேயே மனிதப் பிறவியின் உய்வைக் காணுங்கள். அந்த நிலையை அடைந்த தெய்வ நிலைகள் பெற்ற
1.மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழும் தகுதியை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெறுங்கள்.
3.அகண்ட அண்டத்தில் என்றுமே நிலைத்திடும் நிலையாக வேகா நிலை அடையுங்கள்.

யாரோ செய்வார்… எவரோ செய்வோர்… என்ற எண்ணுவதை விடுத்து “நம் எண்ணமே கடவுளாக இயக்குகிறது” என்பதை உணர வேண்டும்

யாரோ செய்வார்… எவரோ செய்வோர்… என்ற எண்ணுவதை விடுத்து “நம் எண்ணமே கடவுளாக இயக்குகிறது” என்பதை உணர வேண்டும்

 

உதாரணமாக… ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த உணர்வினை ஏற்றுக் கொண்ட பின் அந்தப் பொருளை நாம் உற்று நோக்கி அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்கும் போது “எப்படியாவது…” அதை வாங்கிவிடுகின்றோம்.

ஆனால் அது கிடைக்கவில்லை என்றால் உடனே சோர்வடைகின்றோம்… சஞ்சலப்படுகின்றோம்… சங்கடப்படுகின்றோம்…!
1.முயற்சி எடுத்தேன் அது கிடைக்கவில்லை என்று சோர்வின் உணர்வுகளை நாம் எண்ணுகின்றோம்…
2.நாம் அதுவாக ஆகிவிடுன்றோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பொருள் கிடைக்கவில்லை என்று சோர்வடைகின்றோம் சலிப்புப்படுகின்றோம் சஞ்சலப்படுகின்றோம்… சங்கடப்படுகின்றோம்… வேதனைப்படுகின்றோம். இப்படி ஐந்து விதமான உணர்வுகளை நுகர்ந்த பின் ஐந்து வித அணுக்கள் உடலுக்குள் கருவாக உருவாகின்றது.

அப்படிக் கருவாக உருவாகிவிட்டால் நாம் எதைப் பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த எண்ணத்திற்கு (வேலைக்கு) நாம் போக வேண்டும் என்று எண்ணினாலும் உடனே சலிப்பு வருகிறது.

1.இவ்வளவு முயற்சி செய்தேன்… ஒன்றும் ஆகவில்லை… என்ற உணர்வை எடுத்து
2.அங்கே செல்லவிடாதபடி அதைப் பெற முடியாத நிலைகளில் தடைப்படுத்திவிடுகின்றது.
3.நம் எண்ணம் அதுவாக ஆகிவிடுகின்றது.
4.இவ்வளவு செலவழித்து முயற்சி எடுத்து வெற்றி இல்லாது போய்விட்டதே…! என்று வேதனை.

வேதனையை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் விஷத் தன்மையான அணுக்கள் கருவாக உருப்பெறுகிறது. பின் அதை மீண்டும் மீண்டும் எண்ணும் போது அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

அதற்கு அந்த விஷம் தான் தேவை.

அந்த வேதனையைச் சுவாசிக்க அந்த அணுக்கள் வளர்ச்சி பெற அதனுடைய மலங்கள் நம் உடலில் இரத்தநாளங்களில் கலக்கப்படும் போது “கைகால் குடைச்சல்…” போன்ற நிலைகள் வருகின்றது.

ஒரு தரம் நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இத்தனை விதமான அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்குகிறது.
1.ஆக நம் காரியங்கள் வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி பெறுகின்றோம்.
2.நடைபெறவில்லை என்றால் மாறுபட்ட குணங்கள் நமக்குள் பெருகுகின்றது.

இவை அனைத்தையும் நம் உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நமக்குள் அந்த உணர்வின் தன்மையை உடலாக மாற்றிக் கோண்டே உள்ளது.

ஆக நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் உயிர் உருவாக்குகின்றது.

ஒரு காரியத்தினை முயற்சிக்கின்றோம்… நிச்சயம் வெற்றி கிட்டும். அவருக்கு நல்ல மனது வரும்… உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வரும்…. என்று இப்படி எண்ணினோம் என்றால் நமக்குள் உதவி செய்யும் உணர்வுகளும் அவரை எண்ணிச் செல்லப்படும் போது நம் சொல் அவர் செவிகளில் பட்டு நாம் எண்ணியது இங்கே ஆன்மாவாகச் சேர்கின்றது.

நாம் திருப்பி இரண்டு தரம் சொன்னால் இந்த உணர்வுகள் செவிகளில் பட்டு நம்மை அவர் உற்றுப் பார்த்தார் என்றால் நம் நினைவு… “அந்தச் சொல்லை அவர் சுவாசித்து… உதவி செய்யும் பண்புகள் வருகிறது…”

ஆனால் ஒரு தரம் கிடைக்கவில்லை என்றால் வேதனையும் வருத்தமும் சோர்வும் அடைகிறோம். அடுத்து அந்தச் சோர்வுடனே நாம் செல்லப்படும் போது
1.என்னங்க… போன தடவை சொன்னீர்கள்… இப்போது வந்தனுங்க…!
2.இரண்டு தடவை இப்படிக் கேட்டோம் என்றால் அல்லது சொல்லாமல் மனதிலே எண்ணினோம் என்றாலும்
3.இது அவருக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இந்த உணர்வு கண்களில் பட்டவுடனே நம் உடலிலிருந்து வரும் மணத்தை அவர் நுகர்ந்தவுடனே அதை அறியச் செய்கிறது. நாம் சோர்வடைந்திருந்தால் அவரும் உதவி செய்கிறேன் என்று சொல்லாமல் “பார்க்கலாம்…!” என்பார்.

அடுத்து மீண்டும் வேதனையுடன் கேட்டால்… என்ன…? சும்மா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்…! என்ற இந்த உணர்வைத் தோற்றுவிக்கும்.
1.நமக்குள் விளைவதைத் தான் அங்கே அவர் கண்கள் கவர்ந்து
2.அந்த உணர்வைச் சுவாசிக்கச் செய்து அதே உணர்வு அவரை இயக்குகிறது.

இப்படி நம் வாழ்க்கையில் “நம் எண்ணமே… கடவுளாக உள் நின்று…” நாம் எண்ணியதைத் தான் உருவாக்குகிறது.

இதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் சிறு குறைகள் ஏற்படும். எப்படியும் அது நிவர்த்தியாக வேண்டும்… அவருக்கு நல்ல மனது வர வேண்டும்… நமக்கு உதவி செய்யும் பண்புகள் அங்கே வர வேண்டும்… என்ற எண்ணத்தைத் தான் தோற்றுவிக்க வேண்டும்.

1.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தை விடுத்துவிட்டு
2.நாம் நமது வாழ்க்கையில் எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும்
4.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதைச் செயல்படுத்த வேண்டும்.

நம் வீட்டில் அழுக்குப்பட்டால் அடிக்கடி அதைத் தூய்மைப்படுத்துவது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கை அடிக்கடி இப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்.

அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழக வேண்டும்.

சகலத்திலும் கலந்துள்ள ஆண்டவன் என்பவனை அறிந்து காண அவ்வாண்டவனால்தான் முடிந்திடும்

சகலத்திலும் கலந்துள்ள ஆண்டவன் என்பவனை அறிந்து காண அவ்வாண்டவனால்தான் முடிந்திடும்

 

கோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.

கோவில் என்னும் இடத்தைப் புனிதமாக்கி அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு… ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள்தான் பல கோவில்களும்.

கோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன்… செல்வமில்லாதவன்…! என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத்தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாட்டினை அமைத்து வைத்தார்கள்.

1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான்…
2.அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான்… என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக
3.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியில் இருந்து சகல அருளையும் தான் பெற்று
4.அக்கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு… வரும் பக்தர்களின் எண்ணத்தையெல்லாம் தன் நிலையில் ஈர்த்து
5.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது
6.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்த ரிஷிகளும் ஞான ரிஷிகளும் தாம்.

இந்த உலகில் தோன்றிய மகரிஷிகளும் ஞானிகளும் அவரவர்கள் கோவில் கொண்ட இடத்திலேயே இன்றும் சூட்சம நிலைகளில் செயல்படும் செயல்களினால் தான்
1.மக்களின் மனதில் ஒரு ஒற்றுமை நிலையும்
2.தவறுக்குப் பயப்படும் நிலையும் (இன்றளவும்) இருந்து வருகின்றது.

அக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல்தான் நாம் எல்லாம் இருந்திருப்போம்.

நாம் செய்த பாக்கியம்… அன்று தோன்றிய
1.நம்முடனே கலந்துள்ள
2.நம்மையெல்லாம் காக்கும் தெய்வங்களாக
3.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் மகரிஷிகள் தான் கலந்துள்ளனர்.

நம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர்… நமக்குத் தாழ்ந்தவர்…! என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் கொள்ளலாம்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ ஜாதி மத இன வேறுபாட்டினாலேயோ வருவதில்லை.

நமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ் ஈஸ்வரன் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள
1.நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும்
2.உயர்ந்த ஞானம் பெற்ற அத்தேவர்களை வணங்குவது தான்
3.நம் உயிராத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.

ஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.

“யாராலும்……..!” என்பது ஆண்டவன் என்பவன் எங்கிருக்கின்றான்..? அச்சக்தியின் ரூபம் என்ன…? அந்தச் சிவனின் ரூபம் என்ன…? என்று கண்டறிய ஆண்டவன் என்னும் ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபமளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலைகொண்டு வாழும்
1.பல பெரியோர்களைக் கேட்டாலும்
2.எந்த ரிஷித்தன்மை பெற்றவர்களாலும்
3.எந்த ஞான நிலை பெற்றவரினாலும் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டறிய முடியாது,
4.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண அவ்வாண்டவனால்தான் முடிந்திடும்.

சக்தியின் அருள் பெற்று இஜ் ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள… உணர்ந்து கொள்ள… இவ்வாத்மாவை அழியா நிலை கொண்டு சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர…
1.ஆண்டவனின் ரூபத்தையோ ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…?
2.ஆண்டவர் என்பவருக்கு ரூபமே இல்லை.
3.இல்லை என்று சொல்லுவதற்கும் நம் சக்தியில் பொருளில்லை.

நம் எண்ணம் கொண்டுதான் நம் சுவாச நிலையின் அருளால் நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும். நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இந்த உபதேசத்தின் நிலைகளும் தியானங்களும்.

எண்ணும் எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.
1.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…!
2.சகல அருளையும் பெற்றிடலாம்…!