யாரோ செய்வார்… எவரோ செய்வோர்… என்ற எண்ணுவதை விடுத்து “நம் எண்ணமே கடவுளாக இயக்குகிறது” என்பதை உணர வேண்டும்

யாரோ செய்வார்… எவரோ செய்வோர்… என்ற எண்ணுவதை விடுத்து “நம் எண்ணமே கடவுளாக இயக்குகிறது” என்பதை உணர வேண்டும்

 

உதாரணமாக… ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த உணர்வினை ஏற்றுக் கொண்ட பின் அந்தப் பொருளை நாம் உற்று நோக்கி அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்கும் போது “எப்படியாவது…” அதை வாங்கிவிடுகின்றோம்.

ஆனால் அது கிடைக்கவில்லை என்றால் உடனே சோர்வடைகின்றோம்… சஞ்சலப்படுகின்றோம்… சங்கடப்படுகின்றோம்…!
1.முயற்சி எடுத்தேன் அது கிடைக்கவில்லை என்று சோர்வின் உணர்வுகளை நாம் எண்ணுகின்றோம்…
2.நாம் அதுவாக ஆகிவிடுன்றோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பொருள் கிடைக்கவில்லை என்று சோர்வடைகின்றோம் சலிப்புப்படுகின்றோம் சஞ்சலப்படுகின்றோம்… சங்கடப்படுகின்றோம்… வேதனைப்படுகின்றோம். இப்படி ஐந்து விதமான உணர்வுகளை நுகர்ந்த பின் ஐந்து வித அணுக்கள் உடலுக்குள் கருவாக உருவாகின்றது.

அப்படிக் கருவாக உருவாகிவிட்டால் நாம் எதைப் பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த எண்ணத்திற்கு (வேலைக்கு) நாம் போக வேண்டும் என்று எண்ணினாலும் உடனே சலிப்பு வருகிறது.

1.இவ்வளவு முயற்சி செய்தேன்… ஒன்றும் ஆகவில்லை… என்ற உணர்வை எடுத்து
2.அங்கே செல்லவிடாதபடி அதைப் பெற முடியாத நிலைகளில் தடைப்படுத்திவிடுகின்றது.
3.நம் எண்ணம் அதுவாக ஆகிவிடுகின்றது.
4.இவ்வளவு செலவழித்து முயற்சி எடுத்து வெற்றி இல்லாது போய்விட்டதே…! என்று வேதனை.

வேதனையை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் விஷத் தன்மையான அணுக்கள் கருவாக உருப்பெறுகிறது. பின் அதை மீண்டும் மீண்டும் எண்ணும் போது அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

அதற்கு அந்த விஷம் தான் தேவை.

அந்த வேதனையைச் சுவாசிக்க அந்த அணுக்கள் வளர்ச்சி பெற அதனுடைய மலங்கள் நம் உடலில் இரத்தநாளங்களில் கலக்கப்படும் போது “கைகால் குடைச்சல்…” போன்ற நிலைகள் வருகின்றது.

ஒரு தரம் நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இத்தனை விதமான அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்குகிறது.
1.ஆக நம் காரியங்கள் வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி பெறுகின்றோம்.
2.நடைபெறவில்லை என்றால் மாறுபட்ட குணங்கள் நமக்குள் பெருகுகின்றது.

இவை அனைத்தையும் நம் உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நமக்குள் அந்த உணர்வின் தன்மையை உடலாக மாற்றிக் கோண்டே உள்ளது.

ஆக நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் உயிர் உருவாக்குகின்றது.

ஒரு காரியத்தினை முயற்சிக்கின்றோம்… நிச்சயம் வெற்றி கிட்டும். அவருக்கு நல்ல மனது வரும்… உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வரும்…. என்று இப்படி எண்ணினோம் என்றால் நமக்குள் உதவி செய்யும் உணர்வுகளும் அவரை எண்ணிச் செல்லப்படும் போது நம் சொல் அவர் செவிகளில் பட்டு நாம் எண்ணியது இங்கே ஆன்மாவாகச் சேர்கின்றது.

நாம் திருப்பி இரண்டு தரம் சொன்னால் இந்த உணர்வுகள் செவிகளில் பட்டு நம்மை அவர் உற்றுப் பார்த்தார் என்றால் நம் நினைவு… “அந்தச் சொல்லை அவர் சுவாசித்து… உதவி செய்யும் பண்புகள் வருகிறது…”

ஆனால் ஒரு தரம் கிடைக்கவில்லை என்றால் வேதனையும் வருத்தமும் சோர்வும் அடைகிறோம். அடுத்து அந்தச் சோர்வுடனே நாம் செல்லப்படும் போது
1.என்னங்க… போன தடவை சொன்னீர்கள்… இப்போது வந்தனுங்க…!
2.இரண்டு தடவை இப்படிக் கேட்டோம் என்றால் அல்லது சொல்லாமல் மனதிலே எண்ணினோம் என்றாலும்
3.இது அவருக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இந்த உணர்வு கண்களில் பட்டவுடனே நம் உடலிலிருந்து வரும் மணத்தை அவர் நுகர்ந்தவுடனே அதை அறியச் செய்கிறது. நாம் சோர்வடைந்திருந்தால் அவரும் உதவி செய்கிறேன் என்று சொல்லாமல் “பார்க்கலாம்…!” என்பார்.

அடுத்து மீண்டும் வேதனையுடன் கேட்டால்… என்ன…? சும்மா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்…! என்ற இந்த உணர்வைத் தோற்றுவிக்கும்.
1.நமக்குள் விளைவதைத் தான் அங்கே அவர் கண்கள் கவர்ந்து
2.அந்த உணர்வைச் சுவாசிக்கச் செய்து அதே உணர்வு அவரை இயக்குகிறது.

இப்படி நம் வாழ்க்கையில் “நம் எண்ணமே… கடவுளாக உள் நின்று…” நாம் எண்ணியதைத் தான் உருவாக்குகிறது.

இதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் சிறு குறைகள் ஏற்படும். எப்படியும் அது நிவர்த்தியாக வேண்டும்… அவருக்கு நல்ல மனது வர வேண்டும்… நமக்கு உதவி செய்யும் பண்புகள் அங்கே வர வேண்டும்… என்ற எண்ணத்தைத் தான் தோற்றுவிக்க வேண்டும்.

1.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தை விடுத்துவிட்டு
2.நாம் நமது வாழ்க்கையில் எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும்
4.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதைச் செயல்படுத்த வேண்டும்.

நம் வீட்டில் அழுக்குப்பட்டால் அடிக்கடி அதைத் தூய்மைப்படுத்துவது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கை அடிக்கடி இப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்.

அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழக வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply