மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் குருநாதர் என்னை எடுக்க வைத்த முறை

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் குருநாதர் என்னை எடுக்க வைத்த முறை

 

குருநாதர் பாஷை புரியாதபடி எதை எதையோ சொல்லுவார் என்னென்னவோ சொல்லுவார். எனக்குத் (ஞானகுரு) தெரியாது
1.தெரியாது… என்று நான் சொன்னாலும் வம்பு…!
2.தெரியும் என்று நான் சொன்னாலும் “எப்படித் தெரிந்து கொண்டாய்…?” என்று கேட்பார் குருநாதர்

இப்படி வழக்கத்திற்கு மாறான நிலையில் செய்து அதனைத் தனக்குள் செய்யச் செய்து
1.அவரின் சக்தி வாய்ந்த உணர்வை எனக்குள் போதிக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் வளர்ந்தபின்
2.இப்போது எப்படி இருக்கின்றது…? என்று கேட்பார்…?

அவர் சொல்லும் (உபதேசம்) பொழுதும் எனக்குக் கஷ்டங்கள் வரும் பொழுதும் மறைமுகமாகவே எனக்குள் இப்படித் தான் சொல்வார். சொல்லிவிட்டு
1.அதைப் பார்… இதைப் பார்…
2.இப்படிப் பார்… அப்படிப் பார்…! என்பார்.

அதை நான் கேட்கும்போது இவர் என்ன சொல்லுகிறார்…? என்று நான் நினைத்து விட்டால்
1.ஏன்டா திருடா நீ இதைத் திருட வேண்டும் என்றால் அதைத் திருடுகின்றாயே…!
2.நான் சொல்வதை விட்டுவிட்டு எதை எதையோ திருடிக் கொண்டிருக்கிறாய்… “என்னவோ ஏதோ என்று…”

ஆக அதைத் திருடினால் நீ திருடனாகின்றாய். ஆனால் நான் சொல்லும் உணர்வின் தன்மையைப் பெற்றால் நீ திருடன் அல்ல. நீ என்னிடம் கேட்டு வாங்குகிறாய்…! ஆகவே நான் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீ ஏங்கிப் பெறு என்பார்.

ஆனால் இவர் (ஈஸ்வரபட்டர்) சொல்வது எப்படி…? எனக்கு ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே… அதாகின்றது… இதாகின்றது… என்று எண்ணினால்
1.திருட்டுத்தனமாக உனக்குள் “குறையின் உணர்வை” எடுத்துக் கொள்கின்றாய்.
2.அது உன் திருட்டுத்தனத்தின் நிலையைக் காட்டுகின்றது.

நான் கொடுக்கின்றேன்… நீ எடுத்துக்கொள்…! ஆகவே கொடுப்பதை விடுத்துவிட்டுக் கிடைக்காததை நினைத்து நீ எங்கோ நினைவு செலுத்துகின்றாய்.

நான் மனமுவந்து கொடுக்கும் உணர்வை நீ நுகர்ந்தறிந்தால் அதன் அணுவாக உனக்குள் வரும். அருள் ஞானத்தின் உணர்வுகளை உனக்குள் வளர்த்துக் கொள்ள உதவும்…! என்றார்.

இப்படித்தான் அவருடைய சொல் செயல் இவை எல்லாம் வெளிப்பட்டது. அதன் வழி கொண்டு எனக்குள் தெளிவாக்கினார்.

எனக்குக் கல்வி அறிவே இல்லை… நான் மூடனாக இருப்பினும் என் மூடத் தன்மையை நீக்கி அருள் ஞானத்தை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று வளர்த்தார்.

காடு மேடெல்லாம் அலையச் செய்தார் உணவு இல்லாதபடி தேடச் செய்தார். இயற்கையில் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது…? என்று இப்படி எத்தனையோ பல உணர்வுகளைக் காட்டுகின்றார். அதையெல்லாம் பசியோடு இருந்து தான் பார்த்தேன்.

1.என் குரு எனக்குச் சொன்னது போன்று…
2.அவர் எனக்கு உணர்த்தியது போன்று…
3.நீங்களும் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று தான் இப்பொழுது உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply