
தேறாதது எது…? தேறுவது எது…!
நோயுற்ற ஒரு பெண் குழந்தையைக் குணப்படுத்துவதற்காக எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்தார்கள். சுமார் 13 வயது இருக்கும்.
குழந்தை நோயால் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் பொழுது வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டதால் விஷத்தின் தன்மை அடைந்து விட்டது.
1.மருந்து மாத்திரைகள் என்று விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதனல்லாத உடலாகத் தான் பிறக்கும்.
அந்த உடலிலேயே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஏற்று வளர்த்துக் கொண்டால் அடுத்து உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியில்லா நிலை அடைகின்றது.
ஆகவே…
1.மகரிஷிகளின் உணர்வை அந்த குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு
2.உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த உணர்வுடனே தொடர்பு கொண்டு தியானப் பயிற்சி கொடுத்தோம்.
ஏனென்றால் அது உடலில் ஆஸ்த்மா தொல்லை உண்டு.
நுரையீரல் பாகங்களில் நரம்பு இழுத்துப்பிடித்து இருப்பதனால் அத்தகைய பாதிப்பு வந்தது. இந்தப் பிடித்தம் அவர்களின் பரம்பரையில் வந்தது அப்பாவுக்கும் உண்டு… தாத்தாவுக்கும் அது இருந்தது
பரம்பரை வழியிலே வந்ததனால் இந்த பின்னம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட்டால் தான் அதனுடைய நிலைகள் தப்ப முடியும்.
ஆகவே பெண் குழந்தையாக இருப்பதால் இப்போது காப்பாற்றினாலும்… அதனுடைய மண வாழ்க்கையில் மீண்டும் அதிகமான வேதனைப்பட்டால் மனிதனல்லாத உருவைத் தான் உருவாக்கிவிடும்.
ஆகவே பருவம் வரப்படும் பொழுது அருள் ஒளியின் தன்மை கொண்டு இந்த உடலிலே மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவர்களையே பெறும்படி செய்தோம்.
இப்போது எடுக்கும் அருள் உணர்வுகளின் வளர்ச்சி கொண்டு…
1.அடுத்து உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்
2.உடல் பெறும் உணர்வுகள் கரையவும் பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.
ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவருடைய நிலைகளை நாம் இத்தகைய நிலைகளில் அது மாற்றி அமைக்க வேண்டும்.
குழந்தையினுடைய தாயும் வேதனை உணர்வையே எடுத்துக் கொள்கின்றது. அதை மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும் என்ற நினைவைக் கூட்டும்படி செயல்படுத்தப்பட்டது.
1.இதன் வழி செய்தால் அந்த ஆன்மா எளிதில் அங்கே போய்ச் சேர்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகிறது.
காரணம்… எந்த நேரமும் எத்தருணத்திலும் உடலை விட்டுப் பிரிய நேரலாம். முயற்சி செய்தால் இன்னொரு பத்து வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!
ஆனால் இங்கே இந்தப் பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது சீரான உடல் அமைப்பு இல்லை என்றால் மண வாழ்க்கையில் காலப் பருவம் வரும் போதெல்லாம் வேதனைப்படும்.
1.ஆகவே “இது தேறாது…” என்ற நிலை வந்தபின்
2.தேறுவது எது…? என்ற நிலையில் அருள் உணர்வின் ஒளியே தேறுகிறது… அதுவே என்றும் பிறவியில்லா நிலை.
3.இந்த இளமைப் பருவத்தில் அது ஒளியாகிவிட்டால் நலமாக இருக்கும் என்று
4.அந்த ஆன்மா அதன்படி சப்தரிஷி மண்டலம் இணைந்தது.
இப்படி… இந்த உடலுக்கு என்று இச்சை அதிகமாகப் பெறாதபடி அருள் ஒளி பெற வேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தாலே போதுமானது.
1.குறித்த காரியங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்
3.வழியறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்
4.சோர்வு என்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.
எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும்… அருள் ஒளி பெறும் அந்த நினைவு பெருக வேண்டும்… இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அரும் பெரும் சொத்தே நமக்குச் செல்வம் என்று செயல்படுத்த வேண்டும்.
நாம் தேடிய செல்வங்கள் நம்முடன் வருவதில்லை… அழகான உடலும் வருவதில்லை… நாம் அலங்காரம் செய்யக்கூடிய பொருள்களும் வருவதில்லை… ஆடம்பரமாக நாம் கட்டிய வீடும் வாங்கிய காரும் வருவதில்லை. மற்ற எத்தகைய பொருளாக இருந்தாலும் நம்முடன் வருவதில்லை.
1.ஆனால் அந்த அருள் ஞானத்தை இந்த உடலிலே வளர்த்துக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை பெறும்.
3.வேகா நிலையாக பிறவியில்லா நிலை அடைய முடியும்
4.அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ முடியும்
5.அப்படி வாழக்கூடிய பருவத்தை இந்த உடலிலேயே சேர்த்தால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.