“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

Soul cleaning - serene

“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

 

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால்

1.சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.

2.வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

 

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம்

1.எதனை…

2.எவ்வாறு…

3.எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

 

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

 

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

 

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

 

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

 

நாம் உலகில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் அனைவரும்

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்

2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.

3.அவர்கள் குடும்பத்தில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

4.தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும்.

5.மகரிஷிகள் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.

6.அருள் ஞானம் அவர்களுக்குள் பெருக வேண்டும்.

7.இருளை நீக்கிடும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.

8.நஞ்சினை வென்றிடும் அருள் ஞானம் அவர்கள் பெற வேண்டும்.

9.அருள் வாழ்க்கை வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

நாம் சந்தித்தோர் பார்த்தோர்… நாம் தொழிலின் நிமித்தம் சந்தித்தோர்… தொழிலின் நிமித்தம் இணைந்து வாழ்ந்தோர்… “இவர்கள் அனைவரையும்” நாம் இவ்வாறு நாம் எண்ணினோம் என்றால்

1.நமக்குள் பகைமை என்ற உணர்வை மாற்றி

2.அருள் ஞானத்தின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply