புத்தர் ஞானம் பெற்ற பூர்வாங்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

புத்தர் ஞானம் பெற்ற பூர்வாங்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன…?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது…?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன…?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே…
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து… ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து… உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்…!” என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்… “கோவிந்தா…!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்… காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்…?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்…!

Leave a Reply