நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

 

நாம் நன்றாகத்தான் இருக்கின்றோம். இரு நண்பர்களுக்குள் ஆகவில்லை. ஆனால் அவரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

என்னங்க…! நீங்கள் இவ்வளவு உதவி செய்கின்றீர்கள்… உங்களைப் பற்றி அவன் கேவலமாகப் பேசுகின்றான்…! என்பார்கள்.

நாம் “அப்படியா” என்போம்.

அவர்களுக்கு அந்த நண்பன் ஆகவில்லை.
1.நாம் செய்யும் உதவி அவனுக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக நம்மிடம் இப்படிச் சொல்கிறார்கள்.
2.ஆனால் சொன்னவுடன் நாம் மோப்பம் பிடிக்கின்றோம்.

கருப்பண்ணசாமிக்கு முன் என்ன இருக்கின்றது…? நாய் இருக்கின்றது… கையிலே அரிவாள் இருக்கின்றது.

நம்மைத் தவறாகச் சொல்கிறான் என்று அவர் சொன்ன தீமையான உணர்வுகளை நாம் கேட்டபின் “உடனே நம் மனம் இருண்டு விடுகின்றது…”

நாய் என்ன செய்கின்றது…? யார் அதை வளர்த்தார்களோ அதற்கு விசுவாசமாக இருக்கின்றது.
1.எதன் உணர்வை மோப்பம் பிடித்ததோ உடலுக்குள் சேர்த்துக் கொண்டதோ
2.அதன் உணர்வின் தன்மைக்கு விசுவாசமாக இருக்கின்றது.

இவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவன் சொன்னான். ஆனால் நாமோ “இருக்கட்டும் பார்க்கின்றேன்…” என்ற இந்த உணர்வை… நல்லதை நீக்கிவிட்டு அந்தப் பகைமையான உணர்வுகளை உருவாக்கி விடுகின்றது.

பரசுராம் என்று வரும் பொழுது தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்ற நிலையினை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இருந்தாலும்… மனித வாழ்க்கையில் அவன் சுகத்திற்காக இவ்வாறு தீமைகளைச் செய்யப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலேயே நமக்குள்ளும் தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவரும் பெறட்டும்… தெளிந்த மனம் பெறட்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர் பெறட்டும் என்று எண்ணி விட்டோம் என்றால்
3.அவர் சொன்ன உணர்வு நமக்குள் குரோதமாக ஆக்காது.

இப்படி மாற்றவில்லை என்றால்… அவர் சொன்னதைப் பதிவாக்கிய பின் அவரைப் பார்த்தாலே மோப்பம் பிடிப்போம். பிறகு எதையாவது பேசினோம் என்றாலும்… இந்த மாதிரிச் சொன்னீர்கள் அல்லவா… என்று அந்தப் பதிவு நினைவாகி “மீண்டும் பகைமையை உண்டாக்கிவிடும்…”

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாது சந்தர்ப்பத்திலே ஊருவாகுவதைக் காட்டுவதற்குத் தான்
1.கருப்பணசாமியை வைத்து அந்த உணர்வின் இயக்கங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
2.இருண்ட நிலையாக நமக்குள் உருவாகிவிடுகிறது என்பதை இப்படிக் காட்டுகின்றார்கள்… நல்லதைக் காக்க முடியாது போய் விடுகின்றது.

மேலும் கருப்பண்ணசாமிக்கு ஆட்டைப் பலி கொடுப்பதும் மற்றதையும் செய்தால் அவன் நம்மைக் காப்பான் என்று… ஞானிகள் கொடுத்த உண்மையின் உணர்வுகள் எல்லாம் “தலை கீழாக மாறிய நிலையில் தான் இன்று உள்ளது…”


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply