உத்தராயணத்தின் சிறப்பு

உத்தராயணத்தின் சிறப்பு

 

உதாரணமாக வியாபாரமோ அல்லது தொழிலோ நாம் கூட்டாகச் செய்யும் போது அதிலே ஒருவருக்கொருவர் வெறுப்பாகி விட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.

தொழில் செய்து முன்னுக்கு வர வேண்டும்… நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணமே அடுத்து வராது. அந்த வெறுப்பையே வளர்க்கப்படும் போது அது நம் நல்ல குணங்களை எல்லாம் மறைத்து விடுகிறது… சித்திரை.

யாரை எண்ணி வெறுப்பை நமக்குள் பதிவு செய்து வளர்த்தோமோ அந்த உணர்வின் ஆக்கமாக நம்மை அது இயக்கி வியாபாரத்தையும் மந்தமாக்கிவிடும்… உடல் நலத்தையும் பாதிக்கும்.

ஒரு நிலத்தில் வித்தைப் பதிவு செய்த பின் அது எப்படி வளரத் தொடங்குகிறதோ அது போல்
1.நம் உடலும் நிலம் போன்றது தான்.
2.அதிலே எத்தனை குணங்களை நாம் பதிவு செய்கின்றோமோ
3.வேதனை என்ற விஷமான உணர்வோ அல்லது கோபம் என்ற காரத்தை ஊட்டும் உணர்வோ அந்த வித்துக்கள் பதிந்து விட்டால்…
4.நம் ஆன்மாவில் படரப்படும் போது நம் நல்ல குணத்தின் இயக்கத்தையே அது மாற்றி நமக்குள் எதிரியாகிவிடுகின்றது.

இது எல்லாம் மனித வாழ்க்கையில் நமது எண்ணம் கனியாகும் பருவத்தை இழக்கச் செய்து சித்திரையாக மாற்றிவிடுகின்றது… நல்ல குணத்தினை மறைத்து விடுகின்றது.

இதைப் பிளத்தல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகள் கொண்டு அதை நீக்கும் நினைவாற்றலைக் கொண்டு வர வேண்டும்.

அதைக் காட்டுவதற்குத் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று
1.தீமைகளைச் சரணமடையச் செய்யும் சக்தியாக
2.இந்த உடலான குகைக்குள் நின்று
3.வருவது அனைத்தையும் அறிந்து
4.தீமைகளை அகற்றி உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா… என்று
5.காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறியுள்ளார்கள் ஞானிகள்.

இந்தப் புது வருடத்தில்
1.ஆறாவது அறிவைக் கொண்டு இருளைப் போக்கித் தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பதிவு செய்து
2.பேரானந்தப் பெரு நிலை பெறும் அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் வித்தாகப் பதிவு செய்து
3.தீமைகளை அகற்றும் உணர்வின் ஞானத்தை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.

இதற்கு முன் தட்சிணாயணம்… இப்போது உத்தராயணம்…! இதனின் வளர்ச்சியில் ஒளி கண்ட பின் இருள்கள் மாய்கின்றது… நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையும் தடுக்கப்படுகின்றது.

அதே சமயம் அந்தத் தாவர இனங்களின் சத்தை எல்லாம் காய வைக்கின்றது. அதனின் சத்தைக் கவர்ந்து கொள்கிறது. ஆறு மாதம் கழித்துத் தட்சிணாயனம் என்று வரப்படும் போது அந்த மழைக் காலத்தில் அதனின் வித்துகளுக்கு இது உணவாகக் கொடுக்கின்றது.

1.ஆகவே ஆறாவது அறிவால் நாம் சேமித்துக் கொண்ட… நாம் தெளிந்து கொண்ட… அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
2.நமக்குள் சிறிது சிறிதாக மறைத்திருக்கும் தீமைகளைப் பிளந்து இந்தப் புதிய வருடம் நமது வாழ்க்கையைத் தொடர வேண்டும்.

வருடம் தோறும் பன்னிரெண்டு மாதங்களிலும் மக்கள் அருள் உணர்வுகளைப் பெறுவதற்கு நமது சாஸ்திரம் தெளிவாக வழி காட்டுகின்றது. இதனின் உண்மையின் உணர்வை நாம் உணர்ந்து அதன் வழியில் அருள் வாழ்க்கையாக வாழ வேண்டும்.

உலக மாற்றத்தில்… அனைவருக்கும் ஆவதே நமக்கும் நடக்கட்டும்… என்று எண்ணிடலாகாது…! – ஈஸ்வரபட்டர்

உலக மாற்றத்தில்… அனைவருக்கும் ஆவதே நமக்கும் நடக்கட்டும்… என்று எண்ணிடலாகாது…! – ஈஸ்வரபட்டர்

 

பல காலங்கள் வெளியிடாமல் இருந்திட்ட சக்தியின் உண்மை நிலையை இங்கு போதனைக்கு அளித்திட்ட நிலைக்குக் காரணம்
1.இப்பொழுது மாறப் போகும் கலியில்…
2.இன்றுள்ள இக்கலியில் வாழ்ந்திடும் அறிவாற்றல் கொண்ட மனித ஆத்மாக்களின் நிலையை
3.இம்மனிதரின் நிலைக்கு உணர்த்தவே இப்போதனை நிலை.

இன்றைய மனிதரின் வாழ்க்கை முறையும் எண்ணக் கலவையும் இன்று வாழ்ந்திடும் மனிதனால் ஏற்பட்டதல்ல. கல்கியில் தோன்றிட்ட கால நிலை தொட்டே வருவது தான்.

மனிதருடன் எண்ண நிலை சப்த அலையாக எப்படிச் சுற்றிக் கொண்டு உள்ளதோ… அந்த நிலையின் தொடர்ச்சியுடன் ஒவ்வொரு உயிராத்மாக்களின் எண்ணத்துடன் கூடிய சப்த அலைகளும் இப்பூமியில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்… “இப்பூமிக்கே உகந்த சப்த அலை ஒன்று உண்டு…” என்று உணர்த்தினேன்.

ஓங்கார இசையுடன் ஓ…ம்… என்ற பிரணவ நாதத்தில் உருளுகின்ற இவ்வுலகினில் உயிராத்மாக்களின் சப்த அலையின் தொடர்ச்சியில் இவ்வுலகிற்கு எண்ண நிலையும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் சப்த அலையுண்டு.

சுவாசம் எடுத்திடும் நிலையிலேயே சப்த அலையுண்டு. ஒலி நிலை இல்லாமல் இவ் உலகமே இல்லை என்று உணர்த்தினேன்.
1.இயற்கையில் அமைத்திட்ட உன்னத ஒலிதனில்
2.இன்றைய செயற்கையும் கலந்து செயல்படும் நிலையில்
3.இப்பூமியே மிகவும் தத்தளித்த நிலையில் உள்ளது.

இப்பூமியில் அறிவாற்றல் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள் தன் சக்தியை உணர்ந்து செயல்படாமல் வாழ்ந்ததின் வினையினால் இவ்வினையின் செயல் இவ்வுலகுக்கு மட்டுமல்ல… “இவ்வுலகைச் சார்ந்த அனைத்து மண்டலங்களுக்கும் மாறு கொள்ளும் நிலை…” மிகவும் குறுகிய கால நிலையில் உள்ளன.

பயந்த நிலையில் எண்ணத்தைச் செயல் கொண்டு பேராசைக்கு அடிமைப்பட்டிடாமல் ஆத்மீக நெறியறிந்து ஒவ்வோர் உயிராத்மாக்களும் செயல்பட வேண்டும்.

1.மனித ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல
2.நினைவாற்றல் உடைய மற்ற ஜெந்துக்களிலும் வெறியுணர்வு பேராசை நிலை இவற்றிலிருந்து விடுபட்டால்தான்
3.மாறப் போகும் இக்கலியிலாவது நாம் மீட்சி கொண்டிட முடியும்.

அடுத்து வரப்போகும் கல்கியில் இன்று இப்பூமியில் அவதார புருஷர்களாக அவதரித்தவரின் எண்ண நிலை கொண்ட பிறப்பு நிலையின் தொடரினால் “நல் நிலையில் அவதரிக்கலாம்…!”

இவ்வுலக நிலையே மாறப் போகின்றது என்றால்…
1.நம் உடல்களும் அனைத்து ஜீவராசிகளும்தான் இயற்கை எய்தப் போகின்றனவே
2.அடுத்த நிலைக்காக ஏன் நம்மை இப்பொழுது செயல் கொண்டிட வேண்டும்…?
3.நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆனது நமக்கும்…! என்று எண்ணிடலாம்.

இயற்கையின் நியதியும் இயற்கையின் சீற்றமும் இயற்கையின் சக்தியுடனே தான் செயல்படுகின்றன.

இந்த இயற்கையில் தோன்றிய உயிரணுக்களிலிருந்து அந்நிலையின் தொடரினால் சக்தி கொண்ட உயிராத்மாக்களாகி… செயலாற்றும் திறமையுடைய “அதிக சக்தி நிலை கொண்ட இம் மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் மண்டலங்கள் சில தான்…”

இவ்வுன்னத பூமித் தாயின் குழந்தைகளாய் இப்பூமியின் சுவாசமுடன் கலந்துள்ள உயிராத்மாக்களான நாம்… நம் ஆத்மாவும்… நம் எண்ணமும்… நம் சப்த அலைகளும்.. என்றுமே அழிவதில்லை என்பதின் உண்மையினை உணர்ந்து… மாறப் போகும் இக்கலியில் நம் ஆத்மாவை உன்னத பொக்கிஷமாக நாம் உணர்ந்து…
1.பல தீய சக்திகளுக்கு நம்மை அர்ப்பணித்திடாமல்
2.நம்முடன் தொடர்பு கொண்டவரின் நிலைக்கும் நம்மிடமுள்ள தீய சக்தி பாய்ந்திடாமல்
3.நல்லுணர்வுகளையே அவர்களுடனும் கலக்கவிட்டு
4.அவர்களின் நற்சொற்களையே நம் ஆத்மாவிற்கும் சுழலச் செய்து
5.உலக சக்தியையே இவ்வியற்கையின் மாற்றத்தில் வரப்போகும் கல்கியின் சுழற்சியில்
6.நல் நிலையாக்கிடத்தான் இப்போதனை நிலையெல்லாம்.

மனிதர்களின் இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை இன்று அவர்களால் ஏற்படுத்திய நிலை மட்டுமல்ல…! கல்கியிலிருந்து கலி வரை வந்த நிலை. இவ்வுலகுடன் கலந்துள்ள சப்த ஒலிகளில் ஈர்த்து எண்ணமுடன் கலந்திட்ட நிலை. இந்நிலையிலிருந்து மீளும் நிலையைத்தான் நாம் அறிந்திடல் வேண்டும்.

“உயிராத்மாக்களின் பொக்கிஷ சக்தி நிலையை… ஆத்மீக நெறிதனில் அழைத்திடவே…” இப்போதனை நிலையெல்லாம் ஈஸ்வரபட்டனாகிய யான் கொடுக்கின்றேன்.

சித்திரைக் கனி

சித்திரைக் கனி

 

புது வருடம்… “சித்திரை… சித்திரைக் கனி” என்று சொன்னாலும் ஒரு கனியின் தன்மையை எடுத்துப் பார்த்தால் அந்தக் கனிக்குள் வித்து மறைக்கப்பட்டுள்ளது. அந்த வித்தின் தோடோ (மேல் ஓடு) அது சித்திரையாக மறைத்துள்ளது.

இதைப் போன்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிலைகள் கொண்டு மறைக்கப்பட்டே உள்ளது.
1.ஒரு நெல்லுக்குள் அரிசியின் தன்மை மறைக்கப்பட்டுள்ளது.
2.உமியைப் பிரித்துவிட்டால் அந்த நெல் முளைப்பதில்லை.
3.எந்த ஒரு வித்தாக இருந்தாலும் அதன் தோடைப் பிரித்து விட்டால் அதை மண்ணிலே ஊன்றினால் முளைப்பதில்லை.

இதைப் போன்று ஒரு தீமை என்று நமக்குள் வந்தாலும் அந்தத் தீமையின் நிலைகளைப் பிரித்து விட்டால் அது முளைப்பதில்லை (வளர்வதில்லை). இதைத்தான் நம்மை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலையை ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நம் உயிரின் தன்மை அதுவும் ஒரு வித்தாகின்றது. ஆனால் அதை மூடி மறைத்திருப்பது உடல்… இதுவும் சித்திரை தான்…! அதாவது பல அணுக்களின் நிலைகள் கொண்டு உணர்வின் தன்மை உடலாகி… உயிரினை உள்ளடக்கி அதை மறைத்துள்ளது.

ஆகவே ஒரு வித்திற்குள் இருக்கும் உணர்வின் சத்து தனக்குள் எதனை வளர்த்துக் கனியாக ஆனதோ அதை மண்ணிலே ஊன்றினால்
1.அந்த வித்தின் மேல் தோட்டைப் பிளந்து
2.தன் உணர்வின் சத்தினை வெளியே நீட்டி
3.தன் தாய்ச் செடியின் சத்தை அது நுகர்ந்து தன் இனத்தின் சத்தை அது வளர்க்கின்றது.

அதைப் போன்று தான் நமக்குள் மறைந்திருக்கும் உயிர் ஒளியாக இருக்கின்றது. இந்த வாழ்க்கையில் மற்ற உணர்வுகள் சித்திரையாக மறைத்திருக்கின்றது. அதை நீக்கி ஒளியின் உணர்வை நாம் நுகரப் பழக வேண்டும்.

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அதை எல்லாம் இராசிகள் என்று சொல்வார்கள்… வருடம் தோறும் அந்தச் சுழற்சிகள் வரும். அந்தந்த இராசியின் நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு நம் பூமியில் பரவும். ஆக சித்திரையால் மூடப்பட்டு அது செயல்படுகின்றது.

ஒரு வித்தை நாம் பூமியிலே ஊன்றும் போது அந்தப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அச்சித்திரையை (மேல் ஓடை) விலக்கித் தன் உணர்வின் சத்தை வெளிப்படுத்தி அந்த உணர்வின் சத்தால் அது விளைகின்றது.

இதைப் போன்று தான்
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் தனக்குள் வித்தாகும் போது
2.அது மறைத்திருக்கும் அந்த ஓட்டிலிருந்து நீட்டி… எத்தகைய தீமையின் நிலைகளையோ
3.அந்த உணர்வின் தன்மை பிளந்து தன் உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்க்கத் தொடங்குகிறது.

ஆனால் அது சித்திரையாக மறைத்திருப்பினும் அதை மாற்றி அமைக்க
1.நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு ஒளியின் சத்தை நாம் கவரும் நிலை வரப்படும் போது
2.தீமையான உணர்வின் சத்தைப் பிளந்து ஒளியின் சிகரமாக நமக்குள் வளர்க்க இது உதவும்.

பல கோடிச் சரீரங்களில் அந்தந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி நீக்கி… மறைக்கும் தீமைகளை அகற்றி அகற்றித் தீமைகளை அகற்றிடும் தன்மை கொண்டு நாம் மனிதனின் நிலைகள் இன்று அடைந்துள்ளோம்.

இதனின் நிலைகள் கொண்டு…
1.உயிர் எப்படி ஒளியானதோ நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை கனியாக்கி கனியின் தன்மை முழுமையாகும் போது
3.ஆறாவது அறிவு ஏழாவது நிலை அடைகின்றது… சப்தரிஷி.

நம் ஆறாவது அறிவைச் சிருஷ்டிக்கும் உணர்வின் ஒளியாக வாழ்ந்திடும் நிலையைத் தான் கனிகளை வைத்துச் “சித்திரைக் கனி…” என்று காட்டினார்கள் ஞானிகள்.

உலகம் மாற்றம் அடைந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

உலகம் மாற்றம் அடைந்து கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகினில் தோன்றிய உயிர் அணுக்களுக்கும்… உயிரணுவாய் ஜீவ ஆத்மா கொண்ட உடல் பிம்பம் கொண்ட அனைத்திற்கும்… எப்படி மறு ஜென்மம் ஒன்றுள்ளதோ அந்த நிலை போன்றே
1.இவ்வுலகிற்கும் இவ்வுலகைப் போன்ற வளர்ச்சி நிலை பெற்ற ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஜென்ம நிலை உள்ளது.
2.ஜீவன் கொண்டு தனி ஒரு சக்தி நிலை பெற்ற பெரிய மண்டலங்கள் அனைத்திற்குமே ஜென்ம நிலையுண்டு.

இவ்வுலகம் மாறு கொண்ட நிலையில் கல்கியில் தோன்றிய நாளில் உதித்திட்ட உயிரணுக்களின் செயல் சக்தியினை விளக்கியுள்ளோம்.

கல்கியில் தோன்றிய உயிரணுக்கள்… அன்றிருந்த நிலை ஜீவன் கொண்டு பிம்பக் கூடுகள் பெறும் நிலையில் அதிகச் சதை நிலை கொண்ட எலும்புகளின் வளர்ச்சி நிலையில்லா நிலையில்தான் பிம்ப உருவங்கள் இருந்தன.

கல்கியில் இருந்து தொடர்ந்த நிலை கொண்ட… மாறி மாறி வந்திட்ட ஜென்மத் தொடரில் ஈர்த்த சக்தி நிலைதான் இன்றுள்ள மனிதர்களும்… மற்ற இன வர்க்கங்களின் வளர்ச்சி நிலையும். இந்நிலை போன்றே இவ்வுலக நிலையும்.

1.அதிசக்தி நிறைந்த வளர்ச்சியில் வந்த நிலைதனை
2.இன்றைய வளர்ச்சி கொண்ட இக்கலியின் “செயற்கையின் நிலையினால்”
3.இப்பூமியின் சக்தியையே சிதறும் நிலைப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் நம் பூமியின் தொடர்பு நிலை கொண்ட இச் சூரியனைச் சுற்றியுள்ள மற்ற மண்டலங்களில்… நம்மை ஒத்த மனித பிம்பங்களும் இச்செயற்கையின் நிலையும் அந்நிலையில் இல்லாததினால் அம் மண்டலங்களின் சக்தி நம் பூமியையும் விட மென்மேலும் வளரும் நிலையில் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.

நம் பூமியும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது “பலன் இல்லாத நிலையில்…!”

அறிவு வளர்ச்சி கொண்ட… செயலாற்றும் திறமையும் அதற்குகந்த அங்கங்களும் பெற்ற… பிறவியிலேயே உன்னதப் பிறவி பெற்ற இம்மனிதனால் “தன் சக்தியை உணர்ந்திடாமல் வந்ததின் வினைதான்… இன்றுள்ள நம் பூமியின் நிலை…!”

தனக்குகந்த அறிவின் செல்வத்தைப் பேராசைக்கு அடிமை கொண்டு வாழ்வதின் நிலை இன்றைய மனிதனின் நிலையும் இம் மனிதனை வளர்க்கும் பூமிக்கும் உள்ளது.

இன்றைய பாட நிலையிலிருந்து ஜென்ம நிலையை உணர்த்தியதின் நிலை புரிந்ததா…?

இப்பூமியின் பொக்கிஷத்தைத்தான் இக்கலியின் மனிதனின் பேராசைக்காக எடுத்து விட்டீர்கள். இவ்வுலகனைத்தும் உள்ள எண்ண நிலையே இப்பேராசைப் பிடியில் சிக்குண்டு தவிக்கும் நிலையில் உள்ள பொழுது…
1.இந்நிலையில் இருந்து விடுபடும் எண்ணத்தை
2.இவ் உலகனைத்திற்கும் போதிக்கும் சக்தி நிலை இவ் உலகைக் காக்கும் சக்திக்கே இல்லை.
3.உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது.

அழிவு என்னும் நிலையே எதற்கும் இல்லை. எதுவுமே அழிவதில்லை…! மாறு கொண்ட நிலைதான் ஏற்பட்டிடும். மாறு கொண்ட நிலையில் இவ் உடல் என்னும் கூட்டிலிருந்தும் அனைத்து ஜீவராசிகளும் மாறு கொள்ளத்தான் போகின்றன.

எவ்வாத்மாவும் அழிந்திடாது. இவ்வுலகம் மாறு கொண்டு சுழலும் நிலையில் இவ் உடல் கூட்டை விட்டு வெளிப்படும் உயிராத்மாக்களின் நிலைக்காகவே இந்நிலையில் அளித்திடும் பாட நிலைகள் எல்லாம்…!

இப்பூமியில் வாழ்ந்திடும் இன வர்க்கங்களைப் போன்ற நிலை மற்ற மண்டலங்களில் மாறு கொள்கின்றது. இவ்வுலக நிலை மாறுபட்டு உயிராத்மாக்கள் இப்பால் வெளி மண்டலத்தில் உள்ள நிலையில் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இருந்த நிலை கொண்டு மற்ற மண்டலங்களின் நிலைக்குச் சென்று உடல் பெறலாம்.

அந்த நிலைக்காகத்தான் இப்போதனை நிலையும்… இப்பாட நிலையும்…!

இவ்வுலக நிலை மாறு கொள்ளும் நிலை நெருங்குவதினால் இந்த நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் ஆத்மீக நெறிக்கு வந்து அந்நிலையின் மூலமாக மீட்சி பெறுங்கள்…!

நல்லது நடக்க வேண்டும் என்று ஆசையை மட்டும் கூட்டுவதைக் காட்டிலும் அதைச் செயல்படுத்தும் மார்க்கம் மிக மிக முக்கியமானது

நல்லது நடக்க வேண்டும் என்று ஆசையை மட்டும் கூட்டுவதைக் காட்டிலும் அதைச் செயல்படுத்தும் மார்க்கம் மிக மிக முக்கியமானது

 

எனது எண்ணத்தில் நான் அதீதமாக ஆன்மீக நிலைகள் பெற வேண்டும் என்று ஆசையை வைத்துக் கொள்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

அதை ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து விட்டால்… அந்த ஆசையில் அதைப் பெறுவேன் என்ற எண்ணம் கொண்டாலும் அந்த ஆசை ஒன்றேதான் தனக்குள் மிஞ்சுகின்றது.

ஆனால் அதை நான் பெறும் தன்மையை எதன் வழி…? என்ற நிலைகளை இழந்து விடுகின்றேன்

நான் எண்ணியபடி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அந்த சக்தியின் தன்மை ஒன்றேதான் நினைவில் இருக்கின்றதே தவிர அந்தச் சக்தியை எவ்வழியில் பெற முடியும்…? என்ற நிலைகளில்
1.எனது குருநாதர் காட்டிய நிலைகளை நான் இழந்துவிட்டால்
2.அதை நான் பெறுவது மிகவும் கடினம்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனிடமும் எத்தனையோ ஆசைகள் வருகின்றது எத்தனையோ நிலைகள் விளைகின்றது…. இந்த வாழ்க்கையில் ஆசைப்பட்டபடி தான் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

அப்படி எண்ணினாலும் அதே சமயத்தில்
1.அவருடைய எண்ணத்திற்குள் அவரின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் சித்திரை…
2.அடுத்து எதிர்ப்பக்கம் என்ன வருகிறது…? என்று சிந்தனையற்ற நிலைகள் இருப்பார்கள்.

அது மறைத்திடும் பொழுது அதனின் நிலை இல்லாதபடி இவர் ஆசைப்பட்டபடி வாழ்க்கையில் நடக்காது அந்த நல்ல உணர்வுகளும் மறைந்து விடுகின்றது.

அதனைத்தான் “இந்தச் சித்திரையை” (இடைமறிக்கும் தீமைகளை) நீக்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

உதாரணமாக ஒரு வியாபாரத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்போது வியாபாரத்தில் லாபம் வர வேண்டும் என்ற ஒரே நோக்குடனே செல்கின்றோம்.

ஆனால் அது எந்த காலப் பருவம்…? என்ற நிலைகளைத் தெரியாது “வியாபாரம் செய்ய வேண்டும்…” என்ற அந்த நோக்கம் ஒன்றுதான் நமக்குள் வருகின்றது

காலத்தை அறியாதபடி பொருள்களை வாங்கி வைத்து விட்டால் யாரும் வாங்கமாட்டார்கள். யாருமே வாங்கவில்லை… வியாபாரம் நடக்கவில்லை… என்றால் அங்கே அந்த உணர்வின் தன்மை
1.நாம் ஆசைப்பட்ட நிலைகளை இடைமறித்து அதை மறைத்துவிடுகிறது…
2.சித்திரையாக அது வந்து விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் அதைக் காக்கும் நிலையற்று நாம் போகும் பாதையையே அது தடைப்படுத்திடும் சக்தியாக வந்து விடுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் எத்தனையோ உணர்வுகள் சித்திரையாக நம்மை மறைத்து விடுகின்றது. இதைக் குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நோக்கம் கொண்ட நிலையில் வருவார்கள். அவர்களுடைய எண்ணம் அதுவாக இருந்தாலும்
1.அவருடைய சந்தர்ப்பம் சூழ்நிலை அங்கிருக்கும் நிலைகளைத் தெளிவாக்கி
2.இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வினை நீ அவர்களுக்குத் தெரியப்படுத்தினால்
3.அருள் உணர்வுகளை அவர்களுக்குள் விளைவிக்கும் சந்தர்ப்பத்தை நீ ஏற்படுத்தினால்
4.உனக்குள் இருக்கும் நிலைகளை உன்னில் தெரிந்திடும் நிலைகள் வரும்.

ஆகவே… கேட்போர் உணர்வுகளில் அருள் ஞானத்தைப் பதிவு செய்து… அறியாத நிலைகள் கொண்டு அவர்கள் நல்ல உணர்வுகளை மறைத்திருக்கும் சித்திரையை நீக்கி…
1.அவர்கள் உணர்வின் தன்மை ஒளி பெறும் சக்தியாகவும்
2.கனியின் தன்மை பெறும் நிலையாகவும் நீ உருவாக்கு…! என்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

மனிதனின் தெய்வீக சக்தியை ஒவ்வொருவரும் உணர வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மனிதனின் தெய்வீக சக்தியை ஒவ்வொருவரும் உணர வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனித உடலுக்குத்தான் பல நிலை கொண்ட அமில சக்தியும் காந்த சக்தியும் கலந்த நிலை நிறைந்துள்ளது. இவ்வுடலுடன் பல அணுக்களின் நிலையும் ஏறி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலையும் குண நிலையும் உண்டு.

நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திடும் நிலை கொண்டு
1.எந்த நிலைக்குகந்த எண்ண சக்தியை ஈர்க்கின்றோமோ
2.அந்த நிலைக்குகந்த சக்தியுடன் கூடிய நிலைகளை எல்லாம் இவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்திடலாம்.

இன்றைய செயற்கையில் விஞ்ஞான நிலைப்படுத்தி இரசாயன முறையில் பல செயல்களைச் செய்கின்றனர்.
1.ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவும் ஒன்றுடன் ஒன்றைச் சேர்க்கவும்
2.பல நிலைகளை இன்றைய விஞ்ஞானத்திலும் செயலாக்குகின்றனர்.

விஞ்ஞான சக்திக்கும்… மெய் ஞான சக்திக்கும்… அனைத்திற்குமே… இக்காற்றிலிருந்து நமக்குக் கிடைத்திடும் சூரியன் அளித்திட்ட அமில சக்தி கொண்டுதான் இவ்வுலக சக்திகள் செயல்படுகின்றது.

அதன் மூலம் நம் ஆத்மாவின் துணையினாலே..
1.நம்முள்ளே அனைத்து சக்தியையும் ஈர்த்துச் செயல் கொண்டிடும் “உன்னத தெய்வீக அருள் கொண்ட நாம்…”
2.இன்றைய கலியில் மிகவும் ஈன நிலையில் அடிமை கொண்ட பேராசையில்
3.இக்குறைந்த வாழ் நாட்களை விரயம் செய்தே வாழ்கின்றோம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்றைய விஞ்ஞானத்தில் கண்டிட்ட சக்தியின் நிலைக்கு மேலே “இவ்வாத்மாவின் சக்தியை ஈர்த்தே…” பல நிலைகளை ஒவ்வொருவரும் செயலாக்கிட முடியும்.

பண்டைய காலம் தொட்டே பல ரிஷி நிலை கொண்ட தேவர்கள் எல்லோரும் அவர்கள் இப்பூமியில் வாழ்க்கையுடன் வாழ்ந்திட்ட நாட்களில்… அவர்களால் உணர்த்தப்பட்ட… பதிவு செய்வித்த அனைத்து உண்மை நிலைகளையுமே… இன்றுள்ள இக்கலியின் எண்ணத்திற்குச் செயல்படுத்திட முடியாத வண்ணம் பல நிலைகள் மறைக்கப்பட்டன.

நம் எண்ண நிலையை ஒரு நிலை கொண்டிட்டால் அவர்களின் துணையுடனே பல நிலைகளை நாம் இன்று பெறலாம்.

தாவரங்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு தாவரமும் ஒரே நிலை கொண்ட சக்தியைத்தான் (அமிலம்) ஈர்த்து வளர்கின்றது. சில வகைத் தாவரங்களின் நிலையுடன் சில அமிலங்களைக் கலக்கும் போது இப்பூமியில் இருந்து நாம் எடுத்திடும் கனி வளங்களைப் போன்ற பல வகை உலோகங்களை நாம் செய்திடலாம்.

தங்கம் தாமிரம் ஈயம் செம்பு இப்படிப் பல நிலைகள் நாமே செய்திடலாம். செய்து என்ன பயன்…? இப்பேராசையை வளர்க்கும் நிலைதான் ஏற்படும்.

தாவரங்களைப் போன்றே சில ஊரும் நிலை கொண்ட அட்டை என்னும் இன வர்க்கத்தை உடைய புழுவும் இன்னும் சில புழுக்களும் ஒரே அமில சக்தியை ஈர்க்கும் நிலையுடையதாக உள்ளன.

அந்த அட்டைப் புழுவின் நிலையெல்லாம் தாமிர சக்தியை ஈர்த்து வளர்ந்த நிலை. இவ்வுலகினில் இப்படிப் பல நிலைகள் உள்ளன. எத்தகைய விஷத்தையும் எடுத்திடும் தாவர வர்க்கங்கள் பல உள்ளன.

அனைத்து நிலைகளுக்கும் குறிப்பு நிலைகள் நம் சித்தர்களால் பதியச் செய்து மறைக்கப்பட்டுள்ளன.

அது எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற சாதாரண நிலையில் அந்த எண்ணத்தின் நிலைக்கு நாம் அடிமைப்பட்டிடலாகாது என்பதற்காக… “பல நிலைகளை மறைத்தே வெளிப்படுத்துகின்றோம்…!”

இருந்தாலும் சக்தியின் நிலையில்…
1.இம் மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை உணர்த்திடவே
2.சில குறிப்புகளை இங்கே வெளிப்படுத்தினோம்.

தியானத்தின் அடிப்படை முறையும்… அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டிய சரியான யுக்தியும் – பயிற்சி

தியானத்தின் அடிப்படை முறையும்… அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டிய சரியான யுக்தியும் – பயிற்சி

 

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்… “உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள்…” அவர்கள் தான் உங்களைக் காத்திடும் எண்ணங்கள் கொண்டு செயல்படுத்துபவர்கள்.

அந்த அரும் பெரும் சக்திகள் எத்தனையோ இந்தக் காற்று மண்டலத்தில் பரவி உள்ளது அவர்கள் உணர்வில் பதிவு செய்தது உங்கள் உடலிலும் ஆற்றல்மிக்க சக்தியாக உள்ளது.

அதன் துணையாகக் கொண்டு…
1.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்… உங்கள் கண்களைத் திறந்து.
2.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்
3.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவாத்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா இப்படி ஐந்து முறை கண்களைத் திறந்து ஏங்குங்கள்.

பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா உள்முகமாக உங்கள் உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு ஐந்து முறை எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா கண்களை மூடி ஐந்து முறை மீண்டும் நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்களைத் திறந்து மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…
3.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சொல்லி
4.ஒரு ஐம்பது தரமாவது எண்ணிச் சுவாசியுங்கள்.

இதே போல் கேன்சரோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் சரி… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள கேன்சர் நோய் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் என்று முந்நூறு தரமாவது முதலில் சொன்ன மாதிரிச் சுவாசித்து அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
1.இந்த நோய் தன்னாலேயே போய்விடும்.
2.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் சரி இந்த மாதிரிச் செய்யுங்கள்.
3.மருந்து சாப்பிடுவதற்கு முன்பு இதே மாதிரிச் செய்யுங்கள்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் மருந்து சாப்பிட்டுப் பழக்கமாகிப் போய்விட்டது. அதைச் சாப்பிடும் போது மகரிஷிகளின் உணர்வை எண்ணிக் கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் கேன்சருக்கெல்லாம் இன்று மருந்தே இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஒரு ஆயிரம் தராமவது இப்படிச் சொன்னால் அதன் மூலம் அதை நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஆயிரம் தரமாவது நீங்கள் எண்ணி அதைச் சுவாசித்தீர்கள் என்றால் நிச்சயம்
1.உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் வலுப் பெற்று
3.அந்தக் கேன்சரையே “கேன்சல்…” செய்துவிடும்

அத்தகைய சக்தி உங்கள் எண்ணத்திற்கு உண்டு. நீங்கள் எண்ணும் எண்ணங்கள் உங்கள் உடலுக்குள் சென்று அந்தக் கேன்சரை நீக்கிவிடும்.

இதைப் பழக்கப்படுத்தினால் உங்கள் எண்ணங்களுக்கு மிக மிக வலிமையான ஆற்றல்கள் கூடும். அத்தகைய நிலை பெறச் செய்வதற்கே இந்தத் தியானப் பயிற்சி.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைக் கடைப்பிடிக்க நோய் நீக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

1.சாதாரணமாகச் சொல்கின்றேன்…! என்று யாரும் எண்ண வேண்டாம்.
2.உங்களுக்குள் அந்தச் சக்தி பெருகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு வாக்கின் மூலம் பதிவாக்குகின்றேன்.

ஒவ்வொரு மனிதனும் தன் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்.

நண்பனுக்கு நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நூறு முறை சுவாசித்து விட்டு
1.உன் நோய் நீங்கி விடும்
2.நலமாக இருப்பாய் என்று சொல்லுங்கள்.
3.இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

அவர் நோயால் அவதிப்படுகிறார் என்பதைக் கேட்டுணர்ந்தாலும் சோர்வடையாது மீண்டும் நூறு தரம்
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்
4.மகரிஷியின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
5.அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
6.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

நீங்கள் இந்த உணர்வை எண்ணினால் கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
2.நலமடையும் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.

தீமைகளை அகற்றும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கப்படும்போது தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

அந்தத் தீமையை அகற்றும் ஆற்றல்களை நாம் பெற்றால் தான் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் பிறிதொரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி மகரிஷியின் அருள் வட்டத்திற்குள் செல்ல முடியும்.

அங்கே சென்று உடல் பெறும் நிலையைக் கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிச்சயம் பெற முடியும்.

1.ஏதோ… எளிதில் சொல்கின்றேன்… எளிதில் கிடைக்கச் செய்கிறேன் என்று
2.அலட்சியப்படுத்தி விடாதீர்கள்… அது உங்களுடைய இஷ்டம்.

நீங்கள் பெற வேண்டும் என்று நான் சதா தியானிக்கின்றேன். எனது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

குரு அருளால் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் தீய வினைகள் நீங்க வேண்டும் என்றும் உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளை நோய்களை “நீங்களே நீக்க முடியும்…” என்ற அந்தத் தன்னம்பிக்கையில் செயல்படுங்கள்.

உணவை உட்கொள்ளும் போதும் உணவில் கை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு பின் உட்கொள்ளுங்கள்.

அந்த அலைகள் அந்த உணவுக்குள் பாயும். சிறிது நேரம் ஆகாரத்தில் கையை வைத்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று குறைந்த பட்சம் பத்து தரமாவது எண்ணுங்கள்.

நாங்கள் உணவாக உட்கொள்ளும் இந்த உணவு அனைத்தும்
1.எங்கள் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும்.
2.மன பலம் மன வளம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்ளுங்கள்.
3.இந்த உணர்வின் உமிழ் நீர் சுரக்க சுரக்க
4.இந்த உணர்வுகள் சத்துள்ளதாகக் கூடி
5.உங்களுக்குள் நல்ல சக்தியாக நலம் பெறச் செய்யும் சக்தியாக வளர இது உதவும்.

இதை நீங்கள் பயிற்சியாகச் செய்து உங்கள் அனுபவத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்கலாம்.

இனம் இனத்துடன் தான் சேரும் – ஈஸ்வரபட்டர்

இனம் இனத்துடன் தான் சேரும் – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகம் இன்றுள்ள நிலைக்கொப்ப இக்கலியின் நிலைக்கேற்ப ஆத்மீக நெறியைப் போதிக்கும் நிலையும்… அவ்வழிக்கு வழி நடந்திட வந்திடும் நிலையும்… கால நிலைபோல் மாற்ற நிலையில் உள்ளன.

இப்போதனை நிலையே பல நாட்களுக்கு முதலில் பின் நோக்கிச் சென்றிட்ட அன்று வாழ்ந்திட்ட எண்ண நிலைக்கொப்ப வழி முறைகள்தான் இவ்வாத்மீக நெறி முறையுடன் கலந்துள்ளன.

இன்று நாம் வாழ்ந்திடும் இக்கலியுகத்தில் நாம் வளர்ந்து விட்ட நாகரிகத்துடன் ஒன்றியுள்ள நிலையில் இவ்வாத்மீக நெறியை எந்நிலையில் ஏற்று வழி நடந்திடல் என்பதனை உணர்த்திடவே… இப்பரந்துள்ள உலகில் ஈஸ்வரப்பட்டராகிய யான் “என் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகத் தான்…” இந்தப் பேருண்மைகளை இங்கே போதனைப்படுத்திட முடிந்தது.

இந்த நிலைக்கு ஒப்பத்தான் இவ்வுலகு அனைத்திலுமே…!

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட ஒரு நிலைப்பட்ட சக்திகள்தான் ஒன்றுபடுகின்றன
2.இனம் இனத்துடன் எப்படிக் கலக்கின்றதோ அந்த நிலை போன்றே…!

எந்த இனமும் தன் இனத்துடன் மற்ற நிலை மோதும்போது “சத்ரு… மித்ரு…” நிலை ஏற்பதில்லையோ அந்த நிலை போன்றே இவ் உலகில் இவ்வெண்ண நிலைக்கும் தொடர்பு நிலை உள்ளது.

இத்தொடர் நிலை கொண்டுதான் பிறப்பும் இறப்பும் உள்ளன. இந்த ஜென்மம் மறு ஜென்மம் அனைத்துமே இக்கலியில் மனித ஜென்மங்களாய் அறிவாற்றலும் நற்செயலைச் செயல்படுத்திடும் அங்கங்கள் பெற்றிட்ட நாம் நமக்குகந்த நம் உடலுடன் உள்ள இக்காந்த சக்தியை அறிந்திடாமல் நம் கால நிலையைக் களிப்பு நிலை என்ற உல்லாச நிலைக்கு அடிமைப்படுத்தி நம் ஆத்மாவை அடிமையாக்கி வாழ்கின்றோம்.

இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான யுகத்திற்கு வேண்டிய சக்தி அனைத்துமே இக்காற்றில் உள்ள காந்த சக்தியை ஈர்த்து இன்றைய மின்சாரமாகவும் இன்னும் இப்பூமியிலிருந்து ஈர்த்தெடுத்த திரவத்தைக் கொண்டு பல மண்டலங்களுக்குச் சென்றிடும் பல கோளங்களைச் செய்வித்தும் செயலாக்குகின்றனர்.

நம் எண்ணத்தில் நம்மையும் விட இயந்திரத்தின் சக்திக்கு அடிமைப்பட்டிடும் நிலையான வாழ்க்கை இக்கலியில் உள்ளது.

பல நிலைகளைப் புகைப்படமாக எடுக்கின்றீர். பல நாட்களுக்குப் பிறகு பழைய நினைவுகளை காண்பதற்கே. பதிவேட்டில் நம் சப்த அலைகளைப் பதித்துக் கேட்கின்றீர்.

ஆனால் இன்று இயந்திரத்தின் உதவியுடன் செயற்கையாகக் காணும் இந்த நிலைகள் அனைத்துமே நம் ஆத்மாவின் சக்தியில் (நம்மிடம்) உள்ளன.

இன்று எடுக்கும் மின்சாரத்திற்கு காந்தத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு அச்சக்திகளை ஈர்த்து நமக்கு ஒளியை அளிக்கின்றது. இவ்வுடல் என்னும் கூட்டில் நாம் அங்கமாகப் பெற்றிட்ட நாம் செயல்படுத்திடும் நம் கைகளுக்கு அக்காந்த சக்தி நிறைந்துள்ளது.

“நம் ஆத்மாவின் நிலையினை நாம் உணர்ந்தால்…” இவ்வுலகனைத்தும் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை அனைத்து நிலைகளையுமே நாம் பிம்பமாக எந்த நிலையை எண்ணுகின்றோமோ அந்நிலையின் ஆரம்ப நாள் தொட்டு இன்று நடக்கும் நாள் வரை ஒளிக் காட்சிகளாகக் கண்டிடலாம். சப்த அலைகளையும் அந்நிலையிலேயே கண்டிடலாம்.

1.நம் ஆத்மாவுடன் கூடிய காந்த சக்தியை நாம் எவ்வெண்ணம் கொண்டு ஈர்த்து எடுக்கின்றோமோ
2.அவ்வெண்ணத்தின் சக்தி அனைத்தும் தொடர் நிலையாக நாம் அறிந்திடலாம்.
3.இவ்வெண்ண நிலையின் பிறவி நிலையிலும் இத்தொடர் நிலையுள்ளது.
4.அவ்வெண்ணமேதான் அனைத்து நிலைகளுக்கும் முதல் நிலை.
5.இவ்வெண்ணத்தின் நினைவுடன் நாம் எடுக்கும் சுவாசமேதான் நம் ஆத்மாவின் செயல்நிலை.

ஆகவே… ஒவ்வொருவரும் இவ்வுலக சக்தியினை இவ் உடல் என்னும் கூட்டில் உள்ள நம் ஆத்மாவின் ஜோதியையே நற்சக்தியாக்கிடும் நிலைப்படுத்துங்கள்.

சர்வ மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்

சர்வ மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே யாம் உபதேசிக்கும் போது அதை எந்த அளவிற்கு அளவு கோல் எண்ணி விகிதாச்சாரப்படி ஏங்கி நீங்கள் தியானிக்கின்றீர்களோ இதன் வழியில் உங்களுக்குள் சர்வ மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகின்றது.

அவர்கள் எப்படி ஒளியின் சரீரமாக ஆனார்களோ அதைப்போல தீமையை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளைகின்றது அப்பொழுதுதான் என் குரு காட்டிய நிலைகளை என் குருவை உங்களிடம் காண முடிகின்றது.

அவர் இட்ட வித்தின் தன்மை எதுவோ உண்மை நிலைகள் பரீட்சிப்பது இதுதான். நீங்கள் எல்லோரும் வளர வேண்டும் உங்கள் உயிரான ஈசனின் நிலைகள் அந்த எண்ணத்தின் நிலைகள் கொண்டு அந்த அபிஷேகம் அந்த அருள் ஞானிகளின் உணர்வாக நீங்கள் செயல்பட வேண்டும் என்றுதான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த சக்தியை பெறமுடியும் எண்ணிய நேரத்தில் தீமைகளை அகற்ற முடியும் அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சிருஷ்டிக்க முடியும்,

தீமைகளை அகற்றுவதும் அதே சமயத்தில் அந்த அருள் உணர்வை ஒளியாக மாற்றுவதும் ஒரே நேரத்தில் தான் இந்த ஆறாவது அறிவு தான்.

தீமைகளை அகற்றும் வலுக்கொண்ட நிலையில் மெய் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்த்திடும் நிலை தான் ஞானிகள் காட்டிய நிலையில் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது.

தியானப் பயிற்சியாக இதை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறும் தகுதியாக அவர்கள் நினைவின் ஆற்றலாக உணர்ச்சியை உங்களில் தூண்டச் செய்து ஏக்கத்தைப் பெறச் செய்து அதன் வழியில் நாம் அனைவரும் ஏங்கித் தியானிக்கும் இந்த உணர்வின் சத்து அவரவர்கள் எண்ணி ஏங்கிய உணர்வின் அளவுகோல்படி அவர்கள் ஆன்மாவில் சேருகின்றது.

தியான நேரத்தில் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் அருள் ஞான வித்தாக ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது. தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் அனைவருமே உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகள் ஆனாலும் அதைத் துடைத்திடும் வண்ணமே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு அந்த அரும்பெரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.

சாப வினையோ பாவ வினையோ தீய வினையோ அனைத்தும் உங்களை அணுகாது அதை நீக்கிடும் ஆற்றலாக தீமைகளை அகற்றிடும் நிலையாக இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். தீமைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றீர்கள்.

அதை மனதில் வைத்து ஒவ்வொரு நாளும் தியானித்து அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை உயிராத்மா தன்னிச்சையாக ஈர்க்கும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை உயிராத்மா தன்னிச்சையாக ஈர்க்கும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

வளர்ந்து வரும் செயற்கையுடன் கூடிய கால நிலையில் ஆவி உலகின் செயலும் நம்முடனே வருகிறது என்பதனை உணர்ந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

1.இன்று வாழ்ந்திடும் மக்களின் (எண்ணிக்கை) அளவை விடவும் அதிகமாக
2.இவ்வாவி உலகில் ஆத்மாக்களின் தாக்குதலினால் இன்றுள்ள மக்களின் வெறியுணர்வு அதிகரித்துள்ளது.

உயிரணுவாய் உதித்து ஆத்மாவுடன் கூடிய ஜீவ நிலை பெற்று ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலெல்லாம் நாம் உண்ணும் நிலை கொண்டும்… எண்ண நிலை கொண்டும்… நம்முடன் பல உயிரணுக்கள் நம்முள் நம் உயிர் ஜீவ ஆத்மாவுடன் நம் உடலில் ஏறுகிறது.

அதனால் நம் செயல் எல்லாம் நம் ஆத்மாவுடன் கூடியதாக மட்டும் இருந்திடாமல் பல உயிரணுக்களின் நிலைக்கு ஒத்த சக்தியெல்லாம் நம் உடலில் இருப்பதினால் “பல நிலை கொண்ட சக்தி” நம் உடலுடன் வளர்கின்றது.

ஒவ்வொருவரின் உடலிலும் பல நிலைகள் உள்ளன. நம் ஆத்மாவை நாம் செயலாக்கிட…
1.ஒரே வழியான ஜெபம் கொண்ட வழியை நாம் செயலாக்கும் பொழுது
2.நம் உடலில் உள்ள பல நிலை கொண்ட அணுக்களின் சக்தி குறைந்து விடுகின்றது.

நம் உயிராத்மாவுக்கு நம் பூமியின் தொடர்பு கொண்ட சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை நம் உயிராத்மா தன்னிச்சையில் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் அதிலிருந்து வருவதுதான் நமக்குகந்த ஜெப நிலை.

1.பல தீய அணுக்களின் சக்திக்கு அடி பணிந்தே வாழும் வரை
2.தெய்வீக சக்தி நிலையை அடையும் நிலைக்கு நாம் வருவது மிகவும் கடினம்.

நம் உயிராத்மாவிற்கு வேண்டிய சக்தியினை ஈர்க்கும் நிலைப்படுத்தி வாழுங்கால் நமக்கு சப்தரிஷி மண்டலங்களின் தொடர்பிலிருந்து சேமிக்கும் நிலையை எளிதில் பெற முடியும். இது தான் தியானம் என்பது.

இத்தகைய தியானத்தின் மூலம் பல எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெய்வீக சக்தியை ஈர்க்கும் நிலை பெற்று விட்டால் பல ஞான வழிகளையும் சித்து முறைகளையும் சப்த ரிஷியின் நிலையையும் நம் உயிரணுவே (உயிர்) ஈர்த்துச் செயல் கொண்டிடும்.

இவ்வுயிர் என்னும் ஜீவக்கூட்டை இருந்த இடத்தில் விட்டுவிட்டு நம் ஆத்மாவுடன் கூடிய சத்து (அமில) நிலையை ஈர்த்துக் கொண்டே பறக்கும் நிலை பெறலாம்.

எந்நிலைக்கும் சென்று நம் ஆத்மாவுடன் கூடிய சத்து நிலையுடன் பிம்ப நிலையையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலங்களின் நிலையையும் அறியலாம்.

இக்காற்றுடன் எந்தெந்த ஜென்மங்கள் எடுத்து அச் ஜென்மத்தில் நாம் வெளியிட்ட மூச்சு அலையினால் சப்த அலையின் நிலை கொண்டு பல ஜென்மங்களில் வாழ்ந்த நிலையையும் அறிந்திடலாம். இவ்வுலகினிலும் மற்ற மண்டலங்களின் நிலையை அறிந்திடலாம்.

இவற்றினால் யாது பயன் என்றும் கேட்டிடுவீர்…?

இவ்வுயிர் ஆத்மாவின் சக்தியை இக்காலமுடன் காலமாக இவ்வுடலுடன் கூடிய குறுகிய வாழ்க்கையுடன் சுழல விடாமல் இம் மாற்றம் கொண்டு சுழலப் போகும் “இக்கலியின் நிலையிலிருந்து மீளத்தான் இவ்வழியினை வெளியிடுவதெல்லாம்…!”

நம் சக்தியுடன் பல மண்டலங்களின் சக்தியையும் இணைத்துச் செயல்படுத்திட முடியும். இவ்வழியினை யாவருமே அடைந்திடலாம்

இல்வாழ்க்கையென்னும் பிடியில் பேராசையில் வாழ்ந்திட்டால் செயலாக்குவது கடினம். அன்பு கொண்ட ஆண்டவனாய் வந்திட்டாலே இச்சக்தி நிலையை நம் ஜெபமுடன் பெற்றிடலாம்.

இந்நிலையில் வந்த சித்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையுடன் இன்னலில் இருந்து சலிப்புற்ற நிலையில் வந்த பலர் உள்ளனர்.

1.போகரின் நிலையைப் போல் வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வருவதுவே மகத்துவம்.
2.கோலமாமகரிஷி தன் சக்தியையே ஆதிசங்கரரின் சக்திக்கு அளித்திட்டார்.
3.ஒவ்வொரு ரிஷியும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்தவர்கள்தான்.
4.புத்தரின் நிலை அனைத்திற்கும் மாறு கொண்ட வெறுப்பற்ற நிலையில் வந்த நிலை.
5.பல ஞானிகள் வந்த நிலையெல்லாம் குடும்பத்துடன் ஒன்றிய ஆத்மீக நெறி கொண்ட அன்பு வழியில்தான்.
6.இவ்வழி அடைவதற்கே சந்நியாசி நிலை உகந்ததல்ல
7.ஆத்மீக நெறி பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

இந்நிலைகளை உணர்ந்து ஒவ்வொருவரும் வழி பெற்றிடுங்கள்.