
சர்வ மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்
குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே யாம் உபதேசிக்கும் போது அதை எந்த அளவிற்கு அளவு கோல் எண்ணி விகிதாச்சாரப்படி ஏங்கி நீங்கள் தியானிக்கின்றீர்களோ இதன் வழியில் உங்களுக்குள் சர்வ மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகின்றது.
அவர்கள் எப்படி ஒளியின் சரீரமாக ஆனார்களோ அதைப்போல தீமையை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளைகின்றது அப்பொழுதுதான் என் குரு காட்டிய நிலைகளை என் குருவை உங்களிடம் காண முடிகின்றது.
அவர் இட்ட வித்தின் தன்மை எதுவோ உண்மை நிலைகள் பரீட்சிப்பது இதுதான். நீங்கள் எல்லோரும் வளர வேண்டும் உங்கள் உயிரான ஈசனின் நிலைகள் அந்த எண்ணத்தின் நிலைகள் கொண்டு அந்த அபிஷேகம் அந்த அருள் ஞானிகளின் உணர்வாக நீங்கள் செயல்பட வேண்டும் என்றுதான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த சக்தியை பெறமுடியும் எண்ணிய நேரத்தில் தீமைகளை அகற்ற முடியும் அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சிருஷ்டிக்க முடியும்,
தீமைகளை அகற்றுவதும் அதே சமயத்தில் அந்த அருள் உணர்வை ஒளியாக மாற்றுவதும் ஒரே நேரத்தில் தான் இந்த ஆறாவது அறிவு தான்.
தீமைகளை அகற்றும் வலுக்கொண்ட நிலையில் மெய் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்த்திடும் நிலை தான் ஞானிகள் காட்டிய நிலையில் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது.
தியானப் பயிற்சியாக இதை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறும் தகுதியாக அவர்கள் நினைவின் ஆற்றலாக உணர்ச்சியை உங்களில் தூண்டச் செய்து ஏக்கத்தைப் பெறச் செய்து அதன் வழியில் நாம் அனைவரும் ஏங்கித் தியானிக்கும் இந்த உணர்வின் சத்து அவரவர்கள் எண்ணி ஏங்கிய உணர்வின் அளவுகோல்படி அவர்கள் ஆன்மாவில் சேருகின்றது.
தியான நேரத்தில் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் அருள் ஞான வித்தாக ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது. தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் அனைவருமே உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகள் ஆனாலும் அதைத் துடைத்திடும் வண்ணமே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு அந்த அரும்பெரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.
சாப வினையோ பாவ வினையோ தீய வினையோ அனைத்தும் உங்களை அணுகாது அதை நீக்கிடும் ஆற்றலாக தீமைகளை அகற்றிடும் நிலையாக இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். தீமைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றீர்கள்.
அதை மனதில் வைத்து ஒவ்வொரு நாளும் தியானித்து அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.