அருள் ஒளியை எடுத்து அந்த ஒளி கொண்டு தாக்கினால்… இருளை ஒளியின் அறிவாக மாற்றச் செய்யும்… ஒளி.. ஒலி… ஒளி…!

அருள் ஒளியை எடுத்து அந்த ஒளி கொண்டு தாக்கினால்… இருளை ஒளியின் அறிவாக மாற்றச் செய்யும்… ஒளி.. ஒலி… ஒளி…!

 

ஒருவருக்கொருவர் கோபம் கொண்டு ஏசுகின்றனர்… பேசுகின்றனர். அப்போது தன்னைத் தாங்காது நீ உருப்படமாட்டாய்… உன் குடும்பம் நாசமாகிவிடும்.. உன் குழந்தை குட்டி எல்லாம் நாசமாகப் போகும்… கண் தெரியாது குருடாகிவிடும் என்று சந்தர்ப்ப பேதத்தால் ஒருவருக்கொருவர் சாபமிடுகின்றனர்.

சந்தர்ப்பவசத்தால் இப்படி மோதக் கூடிய நிலைகள் வரப்படும் போது அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சித்திரை.., திரையாக மூடிவிடுகிறது.

இந்த வாழ்க்கையில் இப்படி மூடி இருள் சூழும் நிலையாகி வேதனையாகி விட்டால் நாம் எதை நுகேர்வோம்…? அடுத்து எண்ணத்தால் நாம் எதை எடுப்போம்…? என்பதைத் தான் ஞானிகள் சித்திரை என்று அந்தத் திரையை நீக்கும் நாளாகக் காட்டினார்கள்.

1.சூரியன் எதனின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எவ்வாறு கவர்கின்றதோ
2.தன் ஒளியின் தன்மையைப் பாய்ச்சி அந்த அறிவின் ஞானமாக இயக்குகின்றது ஒளி… ஒலி.
3.அதைப் போல் .அந்த மெய் ஞானிகள் காட்டிய உணர்வின் சக்தியை நமக்குள் ஒளி… ஒலி… ஒளி என்ற நிலையில் எடுக்க வேண்டும்.

மனிதனுக்குள் விளைய வைத்த தீமையை அகற்ற வேண்டுமென்ற நிலையில் மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் இழுக்கும் பொழுது இருள் சூழ்ந்த நிலையைச் சித்திரை (சிறு சிறு திரை) அதை நீக்கி உணர்வின் அறிவாக நமக்குள் அறியச் செய்யும்.

ஒருவன் தீமையில் சிக்கிக் கொண்டாலும்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனுக்குள் இருக்கும் உணர்வினை அந்த ஒளி கொண்டு தாக்கினால்
2.ஒளியின் அறிவாக அவனுக்குள் அறிந்திடும் ஆற்றல் வருகின்றது.. ஒளி… ஒலி ஒளி… ஒலி.

மெய் ஞானிகள் காட்டிய மெய்ப் பொருளின் உண்மை நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் புதிய வருடம் முழுவதும் என்றுமே நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.அந்த மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
3.உங்களுக்குள் தீமைகளை அகற்றும் திறனைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் – ஈஸ்வரபட்டர்

ஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர் – ஈஸ்வரபட்டர்

 

இயேசு கிறிஸ்துவைக் கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அவர் மூன்றாம் நாளில் எப்படி வெளிப்பட்டார்…? ஏற்கனவே அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்…! என்று செப்பியுள்ளேன்.

அவ்வுடலை இவர்கள் அடக்கம் செய்த பிறகு அவ் உடல் என்னும் கூட்டிற்கும் அவ்வுடலில் ஏறிய ஞானியின் ஆத்ம சக்திக்கும் தொடர்பற்ற நிலையில் இவர்கள் இம்சித்ததெல்லாம் உடல் என்னும் கூட்டைத்தான்.

இவர்கள் இம்சித்த நிலையில் இவர்கள் எண்ணத்தில்தான் அத்தீய சக்தி இவர்களையே தாக்கிற்று. இயேசு பிரானின் ஆத்மாவையோ அஜ்ஜீவ சக்தியையோ இவர்கள் செய்த இம்சை நிலை பாதிக்கவில்லை.

எப்படி எப்படி எல்லாம் இம்சைப் படுத்திடலாம் என்ற எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணமுடனே சுவாசித்த சக்தி நிலையெல்லாம் இவர்கள் உடலில் தான் ஏறியது.

அம்மகான் இவர்கள் அடக்கம் செய்திட்ட பூத உடலில் இருந்து அந்த ஞானியின் சக்தி வெளிப்பட்டு ஆவியான அமில நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஆவி பிம்பத்தைத்தான் இயேசு பிரானாய் இவர்கள் மூன்றாம் நாளில் கண்டது.

இந்நிலை பெறுவதற்கு அவ்வுடலில் ஏறிய அம்மகான் இச்சுவாச சக்தியை எங்கும் பிம்பப்படுத்திடும் நிலை பெற்றார்.

ஆனால் அங்கு வாழ்ந்த மக்களிடையே… இன்று அவ்வழியில் வந்திட்ட அந்நிலையைப் போதிக்கும் ஜெப நிலையில்…
1.அவரை ஜெபப்படுத்தும் நிலையே மாறு கொண்ட நிலையில் உள்ளது
2.சக்தியின் ஜெபத்தை ஈர்த்து ஜெபிப்பார் இல்லை.

ஞான ஒளியைத் தன் ஞானமுடன் ஜெபம் கொண்டு ஈர்த்து இயேசுபிரான் நாமத்தில் வந்திட்டவரின் சக்தியை ஈர்த்து அவருடன் தொடர்பு கொண்டு செயல் படுத்திடும் நிலை அவர்களை வழி நடத்துவோருக்கு எட்டவில்லை.

பல ஜெபங்கள் செய்கின்றனர்… வளர்ந்துள்ள நாகரிக நிலைக்கொப்ப…! ஆத்ம ஜெபம் கொண்டு அவரின் தொடர்பைப் பெற்றிடும் நிலை கொண்டிடவில்லை.

பக்தி நிலையை வளரவிட்டு சக்திக்கு அடிபணியும் நிலை உள்ளது. அம் மகானின் தொடர்பைப் பெற்றிருந்தால் இன்று இம் மனித உள்ளங்களின் வெறி உணர்வை மாற்றும் நிலையைப் போதித்திடலாம்.

இன்றுள்ள எண்ண நிலையே வெறி உணர்வும்… காம இச்சையின் நிலையும்… பேராசையின் நாகரிக நிலையும்… “அதிவேகமாக எண்ணமுடன் கலந்து வளர்கின்றன…!”

இந்நிலையின் வளர்ச்சியினால் வரும் அபாயத்தையோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்ம சக்தியையோ கடுகளவும் எண்ணுவார் இல்லை.

ஆத்மீகத்தை வழிப்படுத்திட்டால் இன்றுள்ள இவ்வெண்ண நிலைக்கு அமைதி கொள்ளும் அன்பு நிலையைச் செயலாக்கிடலாம்.
1.இன்றும் அங்குள்ள மக்களின் நிலையில் பக்தி என்னும் பய நிலை உள்ளது
2.வழிப்படுத்திடத் தக்க குரு இல்லை.

மற்ற நாடுகளில் தம் தம் எண்ணத்தில் உள்ள கறையை இன்றுள்ள ஜெபாலயங்களில் வெளியிட்டால் எண்ணக் கறையை நீங்கிவிடுவதாகப் போதனை நிலையுள்ளது.
1.இக் கறையுடன் கறையைச் சேர்த்து
2.ஒரே சூனிய நிலையாக்குகின்றார்கள் மனித ஆத்மாக்களை.

சக்தியின் சக்தியாய் ஆத்ம ஜீவன் கொண்ட மக்களெல்லாம் இன்று வாழ்ந்திடும் அன்பு நிலையிலும் பந்த பாசம் கொண்ட ஆத்மீக நெறியும் இல்லாமல் மிகவும் கீழ் நிலை கொண்ட அவல நிலையிலும் வாழ்கின்றனர்.

மாபெரும் முனிவரின் சக்தி பெற்ற இந்நிலையுள்ள அவ்விடம் இன்று சூனிய நிலையாக உள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுப் பேராசைப் பேயின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்தியே ஆத்மீக நெறியினை அறிந்திடாமல் இப்பாட நிலையை யாவருக்கும் பொதுவான நிலைப்படுத்தி வழங்கி வருகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

எம்முடைய “ஒரு சொல்லை” ஆழமாகப் பதிவாக்கி அதன் வழி நடந்தாலே போதும்

எம்முடைய “ஒரு சொல்லை” ஆழமாகப் பதிவாக்கி அதன் வழி நடந்தாலே போதும்

 

இந்த வாழ்க்கையிலே நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனாலும் தவறு செய்தோர் நிறைய உண்டு. அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தால் நம் நல்ல குணங்களை அது மறைத்து விடுகிறது.

அப்போது அவர்கள் விடும் சாபங்களோ ஏசிப் பேசும் உணர்வுகளோ அல்லது துன்பப்படும் உணர்வுகளோ வந்துவிடுகிறது.
1.அதை நுகர்ந்தால் நம்மையும் சாபமிடச் செய்யும்… ஏசிப் பேசும்படி செய்துவிடும்.
2.நம் குழந்தையாக இருந்தாலும் இரக்கமற்று அடிப்போம்.

ஒரு சிலர் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கிறான்… என்று பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டிருப்போம்.

இது எல்லாம் நம்மை அறியாமலே நடக்கும் நிலைகள்.

நமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது பார்… இவன் பெரிதாக என்ன செய்து விட்டான்…? என்று பாவ வினைகளாகச் சேரும். அவர்களுக்கு இடையூறு செய்யும் தன்மையாக வேதனைப்படச் செய்து அதை இரசிக்கும் நிலையாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

உயிரின் வேலை என்ன…?

எதை நாம் எண்ணினாலும் உயிரிலே பட்ட பின் ஓ… என்று ஜீவனாகி ம்.. என்று உடலாக்கச் செய்யும்.
1.ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ..ம். ஆக உடலின் வேலை இதைத் தான் செய்யும்.
2.ஆனால் உயிரின் வேலை… நெருப்பிலே எந்தப் பொருளை இட்டாலும் அதன் மணத்தை அது வெளிப்படுத்திக் காட்டுவது போல்
3.உயிரான நெருப்பிலே நாம் சுவாசிப்பது பட்டவுடனே எண்ணம் சொல் செயல் என்று அதை இயக்கிக் காட்டும்.

எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதன் மணத்தின் தன்மை கொண்டு அதுவாகும். அதனின் இயக்கத்தின் தன்மை கொண்டு உணர்வாகும்.

ஒரு சிலர் செய்வதைப் பார்த்து உனக்குக் கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கின்றதா…? அறிவு இருக்கின்றதா…? அறியக் கூடிய திறன் இருக்கின்றதா…? என்றெல்லாம் நாம் வழக்கத்தில் பேசுவோம்.

ஒன்றைச் சொல்லப்படும் போது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அப்போது… இப்படிச் சொல்லிவிட்டாயா…? இரு நான் பார்க்கின்றேன்… என்று இந்த உணர்வின் தன்மை எனக்குள் விளைகின்றது சொல்லின் தன்மை கேட்போருக்கும் உணர்ச்சியைத் தூண்டுகிறது.

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…? என்று உணர்ந்து அந்தத் தீமைகள் நமக்குள் வராதபடி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் சுமார் இருபது வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மைச் (ஞானகுரு) சுற்றச் செய்து மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

அந்தக் குடும்பங்களை எல்லாம் சுட்டிக் காட்டி
1.தவறு செய்யாமலே தொல்லைகள் அவர்களுக்கு எப்படி வருகிறது…?
2.தவறு உள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது…?
3.பாவ வினையாக எப்படி இயங்குகிறது…?
4.சாப வினைகளாக எப்படி வருகிறது…?
5.தீயவினைகளாக எப்படி உருவாக்குகிறது…? என்பதைக் காட்டி
6.அதிலிருந்து அவர்களை மீட்க எப்படிச் செய்யப் போகிறாய்…?
7.இது குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி.

அந்த அருள் ஞானி காட்டிய உண்மையின் இயக்கங்கள் அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையில் உபதேசத்தைக் கொடுத்து என்னை அறியும் ஆற்றலாகச் செயல்படுத்தினார் குருநாதர்.

அவர் கொடுத்த அருள் ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.
1.உங்களை அறியாது வரும் தீமைகளை உங்களாலேயே அகற்ற முடியும்
2.அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொள்ளும் போது உயிரால் இயக்கப்பட்டு அதை ஜீவனாக்க முடியும்
3.அந்த உணர்வின் சக்தியாக… உங்கள் உடலாக ஆக்க முடியும்.

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்கும் செயல்படுத்துகிறேன். காரணம் குருநாதரை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

தீமைகள் தன்னை அறியாமலே சாடுகின்றன. அதிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்று நீ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சு..!

1.எனக்குள் விளைய வைத்த வித்துக்களை உனக்குள்ளும் விளையச் செய்கின்றேன்.
2.அதை நீ விளைய வைத்து அந்த உணர்வை யார் யார் உற்று நோக்குகின்றார்களோ அவர்களுக்குள் பதியச் செய்.
3.அங்கே விளைந்த நிலைகள் அது வெளி வரும் போது என்னை அங்கே காண்.
4.அவர்கள் மகிழ்ச்சி பெறும் போது அங்கே என்னைப் பார்…! என்றார் குருநாதர்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… யாம் உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குத் தக்க சமயத்தில் வழி காட்டும்.

எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஞானத்தின் தொடர் கொண்டு உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்று “குருவின் ஆணைப்படி…” இதைச் செயல்படுத்துகின்றோம்.

உங்களுக்குள் துன்பங்கள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கும் ஆற்றலாகவும் அருள் உணர்வை வளர்க்கும் தன்மையாகவும் வரும்.

ஒரு சிலர் நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் எங்களுக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் அர்த்தமாகவில்லை என்று எண்ணுவார்கள். அப்படி எண்ணினால் அது அர்த்தமாகாது.

1.எப்படியும் ஞானகுரு சொன்ன வழியில் நடக்க வேண்டும் என்று
2.அந்த ஒரு சொல்லை எண்ணினால் அது நிச்சயம் உண்மையை விளக்கிக் காட்டும்.

முருகன் + ஈசன் = முருகேசன் என்ற முருகேஸ்வர போகநாதர்…! – ஈஸ்வரபட்டர்

முருகன் + ஈசன் = முருகேசன் என்ற முருகேஸ்வர போகநாதர்…! – ஈஸ்வரபட்டர்

 

நம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.

ஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி… அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.

“முருகா…!” என்ற ஜெபம்
1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட
2.இக்குணங்களையே முருகனாக்கி… முருகா…! என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.
3.ஆனால் முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.

அழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்… இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு… அவர் சக்தியில் அவர் உடலிலேயே… அவர் ஆத்மாவுடன்… அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.

அந்த நிலையில்…
1.முருகா…! என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ
2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக…
3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.

அழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு… எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்…” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்…!”

போகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.

எந்நிலையில் என்று உணர்ந்தீரா…?

அப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.

ஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.

போகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை… உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு… அவ்வாவி சக்தியை… இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.

அதாவது ஆவியான அமில சக்தியை எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.

ஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்…!

ஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்… நம் ஆத்மாவுடன்… நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே… நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.

1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்
2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல
3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.

ஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி…
1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்
2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்
3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து
4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றன்…? என்பதைச் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றன்…? என்பதைச் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினை நீக்கிவிட்டு வெப்பம் காந்தம் என்று ஒளியாகப் (வெயில்) பரப்பும் போது… அது எதன் எதனுடன் கலந்து வெளி வருகின்றதோ அதை எல்லாமே இயக்குகின்றது.

1.காந்தம் வெப்பம் விஷம் இந்த மூன்றும் எந்தப் பொருளைக் கவர்கின்றதோ
2.அது உள் நின்று தான் கவர்ந்து கொண்ட மணத்தை இயக்குகின்றது – கடவுள்…!

பிரகலாதன் கதையிலே கடவுள் எங்கே இருக்கின்றான்…? என்ற வினா வரும் போது
1.உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்…
2.தூணிலும் இருக்கின்றான்… துரும்பிலும் இருக்கின்றான்… என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள் ஞானிகள்.

எத்தகைய துரும்பாக இருந்தாலும் வெப்பம் காந்தம் விஷம் என்று அந்த மூன்று நிலைகளில்… தான் கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத் தெளிவுபடுத்தி காரண காரியப் பெயரை வைத்து நமக்குத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்கள் ஞானிகள்.
1.இதையெல்லாம் தெளிந்து கொள்வது… தெரிந்து கொள்வது…!
2.தெரிந்து கொண்டால்… தெளிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்

விஞ்ஞான நிலைகளில் பாட நிலைகளைப் புகட்டி மனித வாழ்க்கையைச் சுகமாக வாழ்வதற்காக வேண்டி இயந்திரங்களையும் மற்ற பொருட்களையும் நாம் உருவாக்கி நமது வசதிகளுக்காகச் செய்து வைத்திருக்கின்றோம்.

அதைப் போல் மெய் ஞானியின் உணர்வினை நமக்குள் செலுத்தி நஞ்சினை அகற்றி ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மகிழச் செய்து நம் சொல்லால் கேட்போர் உணர்வுகளையும் மகிழச் செய்ய முடியும். அது தான் மகிழ்வாகனா (மயிலை வாகனமாக முருகனுக்குக் காட்டியிருப்பார்கள்).

1.பிறரிடத்திலிருந்து தீமைகள் வந்தாலும்
2.நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றி
3.அந்தத் தீமையை அகற்றிடும் செயல் பெற்றவன் மனிதன்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு டாக்டருக்குப் படிக்கின்றோம் என்றால் “ஒரு நோயின் தன்மை வந்தால் அதை எப்படி அகற்ற வேண்டும்…? என்ற பாட நிலையைப் புகட்டுகின்றார்கள்.

அதனை ஆழமாகப் பதிவு செய்தால் இந்த அறிவின் தன்மை கொண்டு பிறருடைய நோயைப் போக்கும் நிலையும் வருகின்றது.

அதே போல் ஒரு தச்சு வேலை செய்கிறார்கள் என்றால் சீராக இல்லாதவற்றைச் சீர்படுத்தி அழகாகப் பல பொருள்களை உருவாக்குகின்றார்கள்.

1.சீர்படுத்தும் இத்தகைய ஆறாவது அறிவின் தன்மையைத் தான் “முருகு…” என்ற காரணப் பெயரை வைத்து
2.ஒரு சொல்லுக்குள் பல உணர்வின் தன்மையைக் காட்டி
3.மனிதன் என்ற நிலையில் தன் நிலை அடையச் செய்யும் நிலையாகத் தெளிவாகத் தெரிந்து
4.தெளிந்திடும் நிலை கொண்டு தெரிந்து… தெளிந்திடும் நிலைக்குக் காட்டினார்கள் ஞானிகள்.

சிவ தத்துவத்தில் வரப்படும் பொழுது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று “படைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்…” என்று காட்டுகின்றார்கள்

மனிதனிலிருந்து வளர்ச்சி பெற்றவர்கள் தான் ரிஷித் தன்மை அடைந்து சூரியக் குடும்பங்களை உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

மனிதனிலிருந்து வளர்ச்சி பெற்றவர்கள் தான் ரிஷித் தன்மை அடைந்து சூரியக் குடும்பங்களை உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கை சக்தியில்…
1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று
2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி
3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து
4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு
5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே
6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே
7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.

எவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.

ஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.

பல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்
1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து
2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை
3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்
4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு
5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு
6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…?

நம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.

பல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.

அந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்
1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்
2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறி முறையில் மாற்றம் காணாமல்
3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ
4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்
5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று
6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.

வாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.

சித்து நிலை பெற்றவர்கள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.

இவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.

மேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.

1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.
2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.

இந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.

இந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…!

உயர்ந்த சக்தியை உங்களுக்குள் கொடுக்கின்றேன்… நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும்

உயர்ந்த சக்தியை உங்களுக்குள் கொடுக்கின்றேன்… நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும்

 

இராக்கெட்டை விஞ்ஞானிகள் விண்வெளியிலே அனுப்பினாலும் தரைக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை… அலைகளை வைத்துத் தான் அதனுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

இவர்கள் அனுப்பிய இராக்கெட்டில் சந்தர்ப்பத்தால் ஏதாவது பழுதடைந்தால் தரையிலிருந்தே லேசர் இயக்கமாக அந்த இயத்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கின்றார்கள்.

அதைப் போன்று
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி… அதை வைத்து ஒரு பழுதடைந்த மனதைத் தூய்மைப்படுத்த முடியும்…
2.அதாவது அடுத்தவர்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியால் (லேசர் இயக்கம் போன்று) நாம் சீராக்க முடியும்.

இன்றைய மனித வாழ்க்கையில் தொழிலின் நிமித்தங்களிலோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்டு தொழில் நடத்தும் போதோ சில வித்தியாசமான நிலைகள் ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகிறது.

பகைமையான பின் அவருடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் பகைமை உணர்வு கொண்டே அதைச் செயல்படுத்துவதும்… அவருடைய பொருள் என்ற நிலையில் அதைக் கொடுக்காத நிலையும் ஏற்பட்டு விடுகின்றது
1.அதாவது அடுத்தவருடைய பொருளை எடுத்துக் கொண்டு
2.”என்னுடையது தான்…” என்று இம்சிக்கும் இத்தகைய நிலைகள் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.

இதைப் போன்று நடக்கும் தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் துருவ தியான நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் அழுக்கைப் போக்க நாம் எப்படிக் குளிக்கின்றோமோ… துணி அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டு அதை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… இதைப் போன்று நமது ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் செலுத்த வேண்டும்.

மற்றவர்கள் செயலைப் பார்த்து நாம் எந்த விருப்பு வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி “அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும்…” என்று எண்ண வேண்டும்.

1.எனக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அவருக்குள் வரக்கூடாது என்ற இந்த உணர்வினை நாம் எண்ணினோம் என்றால்
2.அவர்கள் நம்மைப் பகைமையாக எண்ணும் போதெல்லாம் இந்த உணர்வுகளை அவர் நுகர நேர்ந்து
3.நம் மீது பகைமையை மறந்து… சிந்திக்கும் திறனையும் அவர்களுக்கு நாம் உருவாக்க முடியும்.

ஏனென்றால்
1.அவ்வளவு பெரிய உயர்ந்த சக்தியை உங்களுக்குள் கொடுக்கின்றேன்
2.நீங்கள் பொறுமையைக் கையாள வேண்டும்
3.சிறிது காலம் இவ்வாறு செய்தால் இங்கிருந்தே பிறருடைய குறைகளை நாம் நீக்க முடியும்

உதாரணமாக
1.நன்மை செய்தார் என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது
2.தீமை செய்கிறான் பாவி…! என்று எண்ணினால் புரையோடித் தீமையின் செயலாக உருவாக்குகின்றது

அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நமக்குள் பெருக்கி
2.தீமை செய்வோர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால்
3.தீமைகளிலிருந்து மற்றவரை மீளச் செய்யவும் முடியும்.

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள் இயற்கையில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள் இயற்கையில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

எறும்பிற்கும் உணர்வுண்டு… சிறு மண் புழுவிற்கும் உணர்வுண்டு…! இஜ் ஜீவத் துடிப்பு நிலையுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே இவ்வுணர்வு நிலையுண்டு.

ஆனால் தாவர வர்க்கங்களுக்கு இஜ் ஜீவத் துடிப்பு நிலை இல்லாததினால் தாவரங்களுக்கு உணரும் தன்மை இல்லை.

சில வகைத் தாவரங்கள் மனிதனின் உடல் உறுப்புகள் பட்டவுடனே சுருங்கும் தன்மை பெறுகின்றன. உணர்வில்லாமல் அவை எப்படிச் சுருங்குகின்றன என்று எண்ணுவீர்…?

இவ்வுணரும் சக்தி பெற்ற ஜீவஜெந்துக்கள் அதற்குகந்த அவை ஈர்த்து வளர்ந்த அமிலத் தன்மைக்குகந்த காந்த சக்தி நிலையுண்டு.

இச்சக்தியினால் அத்தாவரங்களின் மேல் இச்ஜீவஜெந்துவின் சக்தி நிலை பட்டவுடன்… அந்தத் தாவரம் எந்த நிலை கொண்ட சக்தி பெற்று எந்த அமிலத்தை ஈர்த்து வளர்ந்ததோ… அந்நிலைக்கும் இந்நிலைக்கும் எதிருண்ட நிலை அடைவதினால்… “மற்ற ஜீவ ஜெந்துவின் உறுப்புகள் பட்டவுடன் அது சுருங்கும் நிலைக்கு வருகின்றது…”

அஜ் ஜீவ ஜெந்துவின் வெப்ப நிலையும் அத்தாவரத்தின் வெப்ப நிலையும் மாறுபட்ட நிலையில் உள்ளதினாலும் இந்நிலை பெறுகிறது.

சில வகைத் தாவரங்கள் சில நிலை கொண்ட மனிதரின் தீய எண்ணத்தையே ஈர்த்து நச்சு நிலையில் வாழ்பவரின் உஷ்ண நிலை அவர் அந்நிலையில் எடுக்கும் சுவாச நிலை அந்தத் தாவரங்களின் மேல் பட்டாலே அத்தாவரம் கருகும் நிலை பெறுகிறது.

இன்னும் சிலரின் நிலையில் அவர்கள் விதை விதைத்தால் அவ்விதை வளர்ந்திடாது. அவ்விதையே இவர் கையில் ஏந்தி வைத்துள்ள நிலையிலேயே அவர் எடுக்கும் சுவாச நிலை கொண்டு அவர்களின் அங்க சக்தியைக் கொண்டு அவ்விதைக்கு வளரும் சக்தியற்றுப் போகிறது. அந்நிலையில் அவர் விதைக்கும் விதையும் வளர்வதில்லை.

1.சிலரின் சுவாசத்தினால் இவ்வுலக சக்தியையே சக்தியாகக் காணும் நல் நிலை உள்ளது
2.சிலரின் சுவாசத்தினால் அவர்களின் எண்ணத்தின் நிலையினாலேயே
3.எந்த நிலைக்குச் சென்றிட்டாலும் சோர்ந்த நிலை பெறுகின்றனர்.

சக்தி நிலை பொதுவானதே…! இவ்வெண்ண நிலையினால்தான் மாறுபட்ட நிலைகளெல்லாம்…!

தாவரங்களின் நிலைக்கு இவ்வுணரும் நிலையும் எண்ண நிலையுமில்லை. உயிரணுவாய் ஒரே நிலையில் சக்தியை ஈர்த்து எந்நிலை கொண்ட அமில சக்தியை ஈர்த்து வளர்த்தனவோ அந்நிலைக்கொப்பத்தான் அவற்றில் விளையும் பூவும் காயும் கனியும் தானிய வகைகளும் இருக்கும்.

தாவர வர்க்கங்களை நாம் அதில் வளரும் பூவையும் காய்கனியையும் சில கீரைகளின் மேல் நிலையில் உள்ள கொழுந்துகளையும் நாம் பறித்து எடுக்கும் பொழுது அதன் நிலை மென்மேலும் வளரத்தான் செய்கிறது.

அவற்றுக்கு ஜீவத் துடிப்பும் உணரும் தன்மையும் இல்லாமல் ஒரு நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளரப் பெற்றதினால் ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட கால நிலைப்படி அதன் பயன் நிலை கொண்டு சக்தியளித்து நமக்குப் பயன் தருகின்றது.

1.இந்த இயற்கையின் சக்தியில் பல நிலை கொண்ட ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட நிலையில்
2.நம் எண்ணத்திற்கும் நம் உணர்விற்கும் எட்டாத பல கோடி நிலைகள் உள்ளன.

சில தாவரங்கள் பல நாட்கள் வளர்ந்தாலும் பலன் தராததை வைத்தும் இன்னும் சில வகைத் தாவரங்களுக்கு ஒன்றுக்கெதிரில் அதே நிலைகொண்ட (ஜாதி) அதன் நிலை பெற்ற தாவரம் இருந்திட்டால்தான் இவை இரண்டுமே பலனளிக்கும்.

தாவரங்களில் சில பலன் தராத நிலை பெற்றதை ஆண் தாவரம் என்கின்றனர். தாவரங்களுக்கு இவ் ஆண் பெண் என்ற நிலையில்லை. உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிடும் எவ்வுயிரணுக்களுக்குமே இவ் ஆண் பெண் நிலையில்லை.

உயிரணுவாய் இருந்து ஜீவ ஆத்மாவிற்கு வந்த பிறகுதான் இவ் ஆண் பெண் நிலையெல்லாம். ஆவி உலகத்திலும் இவ் ஆண் பெண் நிலையில்லை.

இவ்வாவி உலகிலிருந்து ஜெனனத்திற்கு வருபவர்களின் ஆவி ஆத்மாவின் எண்ணப்படிதான் இஜ்ஜீவ ஆத்மாவிற்கு ஆணாகவும் பெண்ணாகவும் வந்து பிறப்பது எல்லாம்.

1.அவரவர்கள் எண்ண நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கப்படிதான்
2.அவ்வாவி உலக ஆத்மா இஜ் ஜீவ உடலுக்கு வருகின்றது.

எத்தகைய நிலையாக இருந்தாலும் அங்கே மறைந்த உண்மையை வெளியே கொண்டு வரும் சக்தி நமக்கு உண்டு

எத்தகைய நிலையாக இருந்தாலும் அங்கே மறைந்த உண்மையை வெளியே கொண்டு வரும் சக்தி நமக்கு உண்டு

 

பணத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தையே குறிக்கோளாக வைத்துப் பிறருடைய துன்பத்திற்குத் தீர்ப்பு கூறுவார்கள். அங்கே உண்மையின் நிலைகள் தீர்ப்பு வராது. இன்று சத்தியம் தர்மம் “செல்வத்தில் தான்…” இருக்கின்றது.

இது போன்ற சூழ்நிலையில்
1.நாம் வளர்த்துக் கொண்ட அருள் செல்வத்தை வைத்து…
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வைத் தவறு செய்வோருக்குள் பாய்ச்சி
3.அவர்கள் தவறு இல்லாத நிலையில் நடந்து கொள்வதற்குச் செயல்படுத்த வேண்டும்.

தவறு செய்வோர் உணர்விலும்…
1.அந்த உண்மைகளை உணர வேண்டும்
2.அவர் தெளிவான செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்று உணர்வைப் பாய்ச்சும் பொழுது
3.நம்மை அவர்கள் எண்ணும் பொழுது இது ஊடுருவி
4.தவறு செய்யும் உணர்வினைப் பிளந்து உண்மையை உணர்த்தும் சக்தியாக அங்கே மாறும்.

இந்தச் சக்தி உங்களுக்கு உண்டு…!

ஒருவர் மேல் வெறுப்படையும் போது அந்தச் சக்தி கொண்டு “நாசமாகப் போவான்…!” என்று சொல்லப்படும் பொழுது அவர் செவிகளில் இது பட்டு இந்த உணர்வுகள் அவர் தொழிலுக்குப் பாதகத்தைப் ஏற்படுத்தும்… அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தால் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றது.

1.மனித வாழ்க்கையில் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
2.பிறருடைய வேக உணர்வுகள் தாக்கி விட்டால் நம்முடைய சிந்தனையை அது சீர்குலையைச் செய்து விபத்துகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
3.சில விபரீத செயல்கள் நம்மை அறியாமலேயே செயல்படுத்தத் தொடங்கிவிடும்.
4.விபரீத செயல்கள் செயல்படுத்துவது மட்டுமல்லாதபடி குற்றவாளியாக ஆக்கும் நிலையும் உருவாக்கி விடுகின்றது.

பகைமையை வளர்த்து வெறுப்பின் தன்மை வரப்படும் பொழுது அடுத்து நம் நண்பரிடத்தில் பழகினாலும் அவரையும் வெறுப்பின் தன்மை அடையச் செய்யும்.

நம் பெயரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவருக்குள் சென்று ஏற்கும் நிலை இல்லாதபடி நமக்கு உதவி செய்வதும் தடைப்படும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எண்ணி எடுக்கும் பொழுது பிறருடைய தீமைகள் எதுவாக இருப்பினும் அது நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டாது இது அடக்கிவிடும்.

அதே சமயத்தில் யார் யாரெல்லாம் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
2.அவர்கள் அறியாது செய்த தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாற வேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலே அவர்களுக்குள் வரவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

யார் தீங்கு செய்தாலும் அவர்களுக்கு அருள் ஞானத்தை இப்படி ஊட்டுங்கள்.

நாரதன் கலகப்பிரியன்… நாம் ஈடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாரதனாகச் சென்று உண்மையை வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது. இதைத் தான் காவியங்களில் நாரதனை முக்கிமாக வர்ணித்துக் காட்டியிருப்பார்கள்… “நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று…!”

இதனின் உணர்வினை நாம் வழிப்படுத்தினால் தீமைகளை உருவாக்கும் நிலையில் இருந்து “நம் எண்ணத்தாலேயே நாம் விடுபட முடியும்…”
1.இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் உணர்வை நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்
2.மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்கின்றோம்.

ஒரே நிலை கொண்ட சுவாசத்தைப் பெற வேண்டியதன் அவசியம் – ஈஸ்வரபட்டர்

ஒரே நிலை கொண்ட சுவாசத்தைப் பெற வேண்டியதன் அவசியம் – ஈஸ்வரபட்டர்

 

நாம் எடுக்கும் சுவாசம் ஒரே நிலை கொண்டதாக இருந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையுடன் எடுக்கும் சுவாசத்தில் நம் நிலைக்கு நாம் பெறும் சக்தி நிலை தடைப்படுகின்றது.

1.வாழ்க்கையில் பல நிலைகள் மோதுண்டாலும்…
2.நம் எண்ண சக்தி அவ்வீசனின் ஜெபம் கொண்டதாக
3.நம்முள்ளே உள்ள ஈசனை வணங்கிய நல் சக்திக்கு வர வேண்டும்.

காட்சி:
இல்லத்தில் தூசி அண்டிக் கொண்டே இருந்திட்டாலும் அதனை நாம் பெருக்கித் தூய்மைப்படுத்திக் கொண்டே உள்ளோம்.

அதே போல் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது அத்தீபத்தில் உள்ள எண்ணெய் குறையக் குறைய மீண்டும் அவ்வெண்ணையை ஊற்றித் தீபத்தின் திரியைத் தூண்டுகின்றோம்.

அப்படித் தூண்டினால்தான் அத்தீபம் ஒளி அளித்துக் கொண்டே இருக்கும்.

1.அதே போல்… நம் எண்ணத்தை எண்ணெயாக்கி
2.நம் ஆத்மாவின் ஜோதி என்னும் ஒளிரும் சக்தியில்
3.இவ் எண்ணமான எண்ணெயைக் குறையக் குறைய ஊற்றி
4.தீபம் சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல்
5.நம் சக்தியை நாம் உணர்ந்து… உணர்வுகள் ஒளியாகும் நல் சக்தி பெற வேண்டும்.

தாவர வர்க்கங்கள் ஒரே நிலை கொண்ட சக்தியை மட்டும் ஈர்த்து எப்படி அச்சக்தியின் நிலை கொண்ட செயலில் வளர்கின்றனவோ அந்த நிலை போல் நம் நிலையும் இருந்திடல் வேண்டும்.

தாவரங்கள் அதன் இயற்கையின் சக்தியில் ஒரே நிலை கொண்டு அவ்வணு வளர்வதினால் ஒரே சக்தியில் ஈர்த்து வளர்கின்றன.

ஆனால் ஜீவ ஆத்மாக்கள் (நாம்) பல நிலைகளை எண்ணும் நிலையில் உள்ளத்தினால் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்தந்த நிலைக்குகந்த சக்தி நிலையும் நம் உடலுக்குள் செல்கின்றது.

அதிகோப நிலையும் சலிப்பு நிலையும் பயந்த நிலையும் இப்படி ஒவ்வொரு நிலை கொண்ட எண்ணமுடன் நாம் உள்ள நிலையில்
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் இக்காற்றில் உள்ள அமிலத்தில் இருந்து அவைகள் நம் உடலில் வந்து குவிந்து
3.நம் உடலின் நிலையை மாறுபடச் செய்கின்றது.

ஆக… நாமாக ஏற்பதுதான் நம் வாழ்க்கை நிலையும் ஆயுள் நிலையும்.

எண்ண சக்தி கொண்டு உயிராத்மாவாய்ப் பிறந்து இவ்வெண்ணமுடனே வளர்ந்து இவ்வெண்ணத்துடனே உடலை விட்டு ஆத்மா பிரிந்தும் இவ்வெண்ணத்துடனே ஆவி உலகில் சஞ்சரித்தும் பிறகு இவ்வெண்ண நிலைகொண்டு தான் இப்பூமிக்கு மறு பிறப்பிற்கும் வருகின்றோம்.

உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே அந்த நிலை கொண்டு வளர்ச்சியுற்று எல்லா நிலைகளுமே இந்த எண்ணத்துடன்தான் செயல்படுகின்றன.

எண்ண சக்தியை நாம் பெற்ற மானிடனாக இப்பூமியில் வாழ்ந்திடும் காலத்திலேயே
1.நாம் பிறந்ததின் பயனை உணர்ந்து
2.நம் ஆத்மாதான் நமது தெய்வம்
3.அவ்வாத்மாவிற்கு நாம் ஈர்க்கும் சுவாசம் கொண்டும்… நாம் சேமிக்கும் சக்தி நிலையைக் கொண்டும்…
4.நம் நிலையை நல் நிலை ஆக்கிடும் நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி வாழ்ந்திடும் எண்ணத்தை வழிப்படுத்துதல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள தாவரங்களின் நிலையுடன் இயற்கை அன்னை அளித்துள்ள நல்ல கனிகளையும் உண்டிட்டே நம் நிலையில் அவற்றின் சக்தியைக் கொண்டே வளர்த்திடல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள இத் தாவரங்களுக்கு மட்டும் ஜீவனில்லையா..? இவ் இயற்கையுடன் பூமியில் உள்ள அனைத்துமே ஜீவனுடன் உள்ள பொழுது மிருகங்கள் பறவைகள் இவற்றின் மாமிசத்தைப் புசித்திடலாகாது. இத்தாவரங்களை நசித்து உண்ணலாமா…? என்றுரைப்பீர்.

தாவரங்கள் இப்பூமியைப் போன்ற நிலை பெற்றவை. உயிர் அணுவாய் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து அச்சக்தியின் நிலையின் தொடர்பு கொண்டு நம்மை வளரச் செய்பவை.
1.இத்தாவரங்கள் உயிரணுவாய் வளரப் பெற்றவைதான்
2.ஆனால் இச்சரீர நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஜீவத்துடிப்பு இல்லாதவை.

இஜ்ஜீவனுடன் ஜீவன் பெற்ற அனைத்து ஆத்மாக்களுக்குமே அது ஈர்க்கும் சக்தி கொண்ட உஷ்ண அலைகளின் வெக்கை நிலையும் அதன் உடல் ஆரோக்கிய நிலையைப் பொறுத்துக் கூடிக் குறையும் நிலை அஜ் ஜீவனுடனே அஜ் ஜீவனே ஏற்படுத்திக் கொள்கிறது.

தாவரங்களின் நிலையில் நம் பூமி வெளியிடும் உஷ்ண சக்தியின் நிலைதான் அந்நிலையில் வளர்ந்திடும் தாவரங்களுக்கும் இருந்திடும்.
1.ஜீவத் துடிப்பும் ஜீவ எண்ணமும் தாவரங்களுக்கில்லை
2.தாவரங்களின் சக்தியெல்லாம் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளர்ந்திடும் நிலைதான்…!