அகஸ்தியர் உணர்வையும் குருநாதர் உணர்வையும் கலந்தே நாம் தியானிக்க வேண்டும்

அகஸ்தியர் உணர்வையும் குருநாதர் உணர்வையும் கலந்தே நாம் தியானிக்க வேண்டும்

 

நமது உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது.

நம் உயிர் ஓ என்று இயக்கி ம்… என்று உடலாக்கப்படும் போது உடலில் உருவான அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது.

1.நம் குருநாதர் அவர் உயிரிலே உருவாக்கிய உணர்வின் தன்மையை
2.இந்த மனித வாழ்க்கையை வென்று என்றும் ஒளிச் சுடராக வளர்ந்திடும் அவர் சக்தியை
3.நமது குருவை எண்ணி அதை ஏங்கிப் பெறும் பொழுது
4.நம் உயிர் அணுவின் கருவாக அதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.நமக்குள் உருவாக்கும் ஈசனாக நம் குரு (குருநாதர்) வருகின்றது (வருகின்றார்).
6.(அதனால் தான்) ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் அவருக்குப் பெயர் வைத்தார்கள்.

அவர் தனக்குள் வளர்த்த அந்த அருள் சக்தி… அவர் உபதேசித்த உணர்வுகள் நமக்குள் குருவாக இருந்து… அரூப உணர்வை நமக்குள் அது உணர்த்தி… அவர் பெற்ற வழியில் நம்மையும் அருளானந்தம் பெறும் நிலைகளுக்கு… அது குருவாக அழைத்துச் செல்லும்.

அகஸ்திய மாமகரிஷியை அவர் கண்டுணர்ந்த வழியில்
1.நஞ்சினை வென்றிட்ட அகஸ்தியர் உணர்வினைப் பெற்ற அந்த குரு அருள் நமக்குள் உறுதுணையாக இருந்து
2.அவர் தான் நுகர்ந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நாம் கவரும் தன்மை பெற்று
3.இருளை வென்று ஒளியை உருவாக்கும் உணர்வின் சக்தியைப் பெறும் தகுதியை நாமும் பெறுவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
“நம் உயிரும்…”
“நம் குருவும்…”
இணைந்தே வருகின்றார்கள்.

இந்த இணைவுடன் குரு அருளை நமக்குள் பெறுவோம் என்ற ஏக்க உணர்வுடன் அகஸ்திய மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

நம் உயிருடன் தொடர்பு கொண்டு குரு காட்டிய அந்த உணர்வின் நிலையை நமக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை இரத்த நாளங்களில் கருவுறச் செய்து அந்த உணர்வின் அலைகள் உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் பெற வேண்டும் என்று ஏக்கத்தைச் செலுத்தி உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியர்… அவர் தான் பெற்ற அந்தச் சக்தியும்
2.நமது குருநாதர்…அவர் தான் பெற்ற அந்த அருள் சக்தியும் கலந்து
3.அதை நீங்கள் நுகரும் பொழுது அரும் பெரும் சக்தியாக
4.புதுப் புது தாவர இனங்களில் மணங்களை… அந்த நஞ்சினை வென்றிடும் அருள் சக்திகளை நுகர்வீர்கள்
5.நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் உங்களிலே உருவாகும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் தகுதியை இப்போது பெறுகின்றீர்கள்.

முதல் பாதம்… இரண்டாம் பாதம்… என்றால் என்ன…? – ஈஸ்வரபட்டர்

முதல் பாதம்… இரண்டாம் பாதம்… என்றால் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

கால நிலை எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. காலை பகல் இரவு ஒவ்வொரு தன்மைக்கு உகந்த உஷ்ண நிலையும் காற்று மழை இடி இவற்றைப் போன்ற சில நிலைகளும் மாறி மாறித்தான் இப்பூமிக்கும் அதன் சக்தி நிலை கிடைக்கின்றது.

இப்பூமியில் வாழும் நாமும் மற்ற ஜீவராசிகளும் இக்கால நிலையின் மாற்றத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு அவரவர்களின் நிலைக்குகந்த காப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஜீவ உடல் பெற்ற ஜீவ பிம்பம் கொண்ட ஆத்மாக்கள் வெயில் மழை காற்று பனி குளிர் இவற்றில் இருந்து ஜீவ உடலைக் காப்பதற்காக இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஜீவனுடன் வாழ்ந்து ஜீவன் விட்டுப் பிரிந்த ஆவி நிலையில் வாழ்ந்திடும் ஆத்மாக்களின் நிலைக்கு… அவ்வாவியுடன் ஆவியாகத் தன் சக்தியைத் தனியாக தன் ஆத்மாவுடனே கலந்து படர்ந்து வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள இவ்வாத்மாக்களுக்கு அவற்றின் சக்தியுடன் கலந்து விட்டதினால் இந்நிலை தாக்கப்படுவதில்லை.

இவற்றில் சில ஆவி உலக ஆத்மாக்கள் வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.அவ்வாத்மாவுடன் கூடிய ஆவி சக்தியுடன்..
2.இக்காற்றில் கலந்துள்ள அவற்றின் சக்திக்கு ஒத்த சக்தி அவற்றுடன் சேரும் பொழுது அதன் கனம் அதிகரிப்பதனால்
3.அதி மழை வரும் பொழுது இம்மழையின் தன்மையினால் கனமான ஆவி நிலை கொண்ட சக்தியை ஈர்த்த ஆத்மா
4.இப்பூமியின் மேல் மழை வரும் காலங்களில் வந்து படர்கின்றது.
5.அந்த நிலையில் அச்சக்தி நிலை கொண்ட ஆத்மாவே சில புதிய தாவரவர்க்கமாக
6.நச்சுத் தன்மை வாய்ந்த தாவர இனமாக வளர்கின்றன.

இவ்வுடலை விட்டு எந்த எந்த எண்ணம் கொண்ட நிலையில் ஆவி பிரிந்ததோ… அந்த அந்த நிலை கொண்ட எண்ணமுடன்தான் அனைத்து ஆவிகளுமே சுற்றிக் கொண்டுள்ளன.

தன் எண்ண நிலை கொண்டே சுற்றிக் கொண்டுள்ள ஆவிகளின் நிலை… அவரவர்கள் உடலில் வாழ்ந்த நாட்களில் ஈர்த்து வெளியிட்ட சுவாச நிலைப்படி ஆவி உலகிற்குச் சென்றிட்டாலும்… வாழ்ந்த நாட்களில் அவர்களின் குண நிலைப்படி உள்ள எண்ணத்தைக் கொண்டே ஆவி உலகினிலும் அவர்களின் எண்ணம் செயல்படுவதினால்… இந்நிலையை வைத்தே
1.அவர் முதல் பாதத்தில் உள்ளார் இரண்டாம் பாதத்தில் உள்ளார் என்று
2.இப்படிப் பல பாத நிலைகளை வரிசைப்படுத்தி… ஒவ்வொரு பாதமாக மேல் நிலைக்கு சென்று
3.அச் சிவனிடம் ஐக்கியப்படுவதாகச் சொல்கின்றனர்.

இப்பாதம் என்னும் நிலையென்ன…?

வெறியுணர்வுடன் செல்லும் ஆத்மாக்கள் அவ்வெறி உணர்வுடனேதான் ஆவி உலகில் இருந்தும் மற்ற உடல்களில் ஏறியோ மற்ற எண்ணங்களுடன் கலந்தோ இன்று நாம் பேய் பிசாசு என்று செப்பிடும் நிலையில் மிகவும் கீழ் நிலையான எண்ணத்துடனே தான் பெற்ற சக்தியைச் செயலாக்கியும் சுற்றிக் கொண்டுள்ளன.

சலிப்புடன் செல்லும் ஆத்மாக்கள்… அச்சலிப்பு நிலை கொண்டே பெரும் சோர்வுடனே ஆவி உலகிலும் சஞ்சரித்துக் கொண்டுள்ளன சில ஆத்மாக்கள்.

குடும்பப் பற்றுக் கொண்ட குடும்ப ஆசையுடன் செல்லும் ஆத்மாக்கள்… அக்குடும்பத்துடனே அக்குடும்பத்தை காக்கும் நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

தெய்வ பக்தியுடன் தன் எண்ணம் அனைத்தையும் பக்தி கொண்ட நிலையிலேயே செல்லும் ஆத்மாக்கள்… கோவில்கள் உள்ள இடத்திற்குச் செல்வோரின் எண்ணத்திற்கெல்லாம் ஆவி நிலையில் இருந்து கொண்டு… அப்பூஜை நிலைக்கே செல்பவரின் எண்ணத்தையும் செயலாக்கித் தானும் பூஜித்தே தன் எண்ணத்தை கலக்கவிட்டு வாழ்கின்றன சில ஆத்மாக்கள்.

இந்நிலையைத்தான் எந்தெந்த எண்ணம் கொண்டு ஆவி பிரிந்து ஆத்மா செல்கின்றதோ அந்தந்த நிலையை முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சூட்சுமமாக நம் முன்னோர் வெளியிட்டதை… இன்று பல நிலைப்படுத்திக் காண்கின்றோம்.

ஆனால் இவ்வெண்ணமுடன் எல்லாம் செல்லும் ஆத்மாக்கள் எவ்வளவு காலங்கள் ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாலும்… இப்பூமிக்கு எதாவது ஒரு பிறப்பிற்கு மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கின்றது.

“ஏழு ஜென்மம் எடுக்கின்றன…” என்று உணர்த்தினேன் முன் பாடங்களில். இவ் ஏழு ஜென்மத்தை மட்டிலும் எவ்வாண்டவன் செயல்படுத்தி அனுப்பினான் என்றுரைப்பீர்.

எவ்வாண்டவனும் செயல்படுத்திடவில்லை…!

இப்பூமியில் உயிர் அணுக்களாய் வந்து மோதும் அனைத்து உயிரணுக்களுமே மனிதப் பிறவியாய் வருவதில்லை.

அப்படியும் இம்மனிதப் பிறவியாய் முதல் பிறவிக்கு வருவதற்கு முன்னே பல நிலைகள் பெற்றுப் பல உயிராத்மாக்கள் மாறி மாறி… உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிய நாள் தொட்டு அவ்வுயிரணு ஈர்த்துச் சேமித்து கொண்ட சக்தியின் நிலை பெற்றுதான்… பல நிலைகள் மாறி மனிதக் கர்ப்பத்திற்கு இம்மனிதன் வருகின்றான்.

மனிதனாய் உருவம் பெற்று வரும் நிலையிலேயே இவ் ஏழு நிலைகளுக்குகந்த சக்திகளை ஈர்த்துதான் மனித நிலைக்கு வருகின்றான்.

1.தான் ஈர்த்த சக்தியினை என்றும் அழியாச் சக்தியாக்கி “ஒரே பிறவியிலேயே…” ஆண்டவன் நிலைக்குச் சென்ற அரும்பெரும் ஜோதிகள் பல உள்ளனர்.
2.தான் பெற்ற சக்தியே “இவ் ஏழு ஜென்மத்திலும் தவற விட்டு” பல ஈன நிலைகளுக்குச் செல்லும் எண்ணத்தையும் பல ஆத்மாக்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்று வாழும் வாழ்க்கை மட்டும் “எண்ணம் போல் வாழ்வு…” என்பதல்ல.

உயிரணுவாய் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டே இவ்வெண்ண சக்தியின் நிலை கொண்ட ஒவ்வொரு உயிரணுவின் சக்தி நிலையும் ஒவ்வொன்றுக்கும் கிட்டுகின்றது.

1.உயிரணுவாக நிலை பெற்ற நாள் கொண்டே… அதன் தொடராக
2.நாம் நம் நிலையைதனைச் செயல் கொண்ட வாழ்க்கையாக வாழ்வதுவே
3.இன்றைய நம் வாழ்க்கை நிலையும்…!

எந்த வகையிலும் (நன்மையோ தீமையோ) நாம் யாருக்கும் அடிமையாகிவிடக் கூடாது

எந்த வகையிலும் (நன்மையோ தீமையோ) நாம் யாருக்கும் அடிமையாகிவிடக் கூடாது

 

மீண்டும் மீண்டும் உங்களுக்குள் ஞாபகப்படுத்துகின்றோம். நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வளர்ச்சி நமக்குள் பேரின்பத்தை ஊட்டும் நிலையாக வரும்.
1.இந்த உடல் இருக்கும் பொழுதே அந்த அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால்தான்
2.நமக்கு அந்த வளர்ச்சி கிடைக்கும்.

ஆனால் யாரோ எவரோ செய்து கொடுப்பார்…! என்று எண்ண வேண்டாம்.

யாரோ செய்வார் என்று அந்த ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் மகா சக்தி என்ற நிலைகள் கொண்டு அடுத்தவர்கள் வலையில் நாம் சிக்கி நம் புத்தி இழந்து அவருக்குள் அடிமையாகி விடுகின்றோம்.

அதற்குப்பின் அவர்களிடமிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

உதாரணமாக ஆசைகளை ஊட்டி “இந்தத் தொழிலில் நீங்கள் லாபம் பெறலாம்…” என்ற உணர்ச்சிகளை ஒருவர் நமக்குள் தூண்டி விட்டால் அவரைப் புகழாரம் பாடத் தொடங்குவோம்.

அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று அதே எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்று புகழ்ந்து பேசி நம்மிடம் கேட்பார். கேட்டவுடன் கொடுத்துவிடுவோம்.

அடுத்தாற்போல் நாம் அதைக் கேட்கப் போனால் நல்ல நேரத்தில் அன்று உபகாரம் செய்தீர்கள் இன்னும் ஒரு 500 ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…! என்று கேட்பார்கள்.

ஆக.. புகழ்ந்து பேசுபவருடைய நிலையில் நாம் அடிமையாகி விட்டால் அவர் புகழ்ந்து பேசியே காசை நம்மிடம் வாங்கிச் சென்று விடுவார்.

நமக்குக் கஷ்டமாக இருக்கும் பொழுது பணத்தைக் கேட்டால்
1.ஐயோ… என்னிடம் காசு இல்லையே…! என்பார்
2.ஆனால் நாம் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்
3.ஆனால் கேட்பதை நிறுத்த மாட்டார்
4.நாம் இல்லை என்று சொல்லி விட்டால் பகைமையை ஊட்டிவிடுவார்
5.காசைத் திருப்பி கேட்பார் என்று அடுத்தவரிடம் சீண்டி விடுவார்
6.கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் செய்து இடையூறை ஊட்டி பணத்தை வாங்க இவ்வாறு செயல்படுத்தி விடுவார்
7.கடைசியில் எப்பொழுது நீ பணம் கொடுத்தாய்…? நம்மைக் கேட்கும் அளவிற்கு வந்து விடுவார்

புகழாரம் பாடுவோர் கையிலே நாம் சிக்கிவிட்டால் மனிதனின் வாழ்க்கை இப்படிக் கடுமையாகி விடுகின்றது. சிந்திக்கும் செயலும் இழந்து விடுகிறது

ஆகவே நாம் ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றால்
1.திருப்பிப் பெறும் நிலைகளுக்கு இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலையில் இருக்க வேண்டும்

“மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும்…” என்று அருள் வாக்கினைக் கொடுத்து விட்டால் திரும்பக் கேட்கும் நிலை வராது. ஆகவே திரும்பக் கேட்கும் நிலை அற்று இருக்க வேண்டும்.

உபகாரம் செய்வதில் கவனமாக இல்லையென்றால் நட்புக்குள் பகைமையும் வந்து விடுகின்றது இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுக் கருக்களாக… அதைக் கருவாக்கி நாம் வளர்த்தோம் என்றால் உடலுக்குள் அணுக்களாகப் பெருகி ஒளியான வளர்ச்சியின் தன்மை கூடிக் கொண்டே வரும்.

1.பிறிதொரு பகைமையோ உணர்வு ஏமாற்றும் உணர்வோ நமக்குள் வராதபடி அருள் உணர்வின் தன்மை வலிமை பெற்று
2.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெறச் செய்ய வேண்டும்
3.என்னைப் பார்க்கும் போதெல்லாம் மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வரவேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கருவாக்கி வளர்த்துக் கொண்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவார்கள் இதை நுகர்ந்த பின்
6.ஏமாற்றும் செயலே அவர் உடலில் இருந்து விலகிச் சென்று விடுகிறது.

இதைப் போன்று நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்

எப்போதுமே அடுத்தவரிடம் நாம் பழகும் போது… அவர் கஷ்டங்களைச் சொன்னால் “அவருடைய கஷ்டத்தை நீக்கும் உபாயங்களை…” நாம் சொல்லிப் பழக வேண்டும்.

இதன் வழி நாம் செல்லும் பொழுது
1.அந்த அருள் உணர்வுகள் நமக்குள்ளும் பெருகும்… துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் நமக்குள் விளைகிறது.
2.நம் எண்ணங்கள் கொண்டு அந்தக் கஷ்டங்களைப் போக்கும் தன்மை வரும்.
3.ஆகவே அருள் வழியில் இத்தகைய உபாயங்களை நீங்கள் சொல்லுங்கள்.

இவ்வாறு செயல்பட நாம் அந்த உணர்வுகளை எண்ணும் போதெல்லாம் நம் உடலுக்குள் வளர்ந்த அணுக்களுக்கும் இந்த நல்ல உணர்வை ஊட்டி அதை வளர்க்கும் தன்மையும் பெறுகின்றது நாம் வாழ்க்கையில் இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்துப் பழகிக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும் போது நாம் மெய் ஒளி பெறுகின்றோம்.

குருவிற்குக் கொடுக்க வேண்டிய காணிக்கை – ஈஸ்வரபட்டர்

குருவிற்குக் கொடுக்க வேண்டிய காணிக்கை – ஈஸ்வரபட்டர்

 

புள்ளிகளோ கோடோ மையமாக வைத்துத்தான் கோலம் போடுகின்றோம். அவற்றை அழகு பெறவும் செய்கின்றோம்.

அதே போல் நம் ஆத்மாவை நாம் உணர்ந்து… மையமாக அதை வைத்து நம் எண்ணச் சிதறல்களுக்கு அடிமையாக்கிடாமல் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகளெல்லாம் உள்ளனவோ அதைப் போலவே நம் உயிராத்மாவிற்கும் அனைத்துச் சக்திகளும் உள்ளன என்ற உண்மைகளை உணர்ந்திட வேண்டும்.

1.இப்பூமிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு…
2.பூமிக்கு மேலே எந்த ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாலும் அதை எந்தக் கால அளவில் பூமி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதோ
3.அந்த நிலை போலவே நம் உயிராத்மாவும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டதாகத்தான் உள்ளது.

இன்று நாம் நம் செயற்கையில் ஓடவிடும் அனைத்து இயந்திர நிலை கொண்ட சாதனங்களுக்கும்… அதற்குகந்த சக்தி நிலையை வைத்து மற்ற சக்தியை அதனுடன் மோதலிடும் பொழுதுதான்… நாம் அமைக்கும் இயந்திர நிலைகள் செயல்படுகின்றன… அச்சக்தியே செயல்படுகின்றது.

இந்த நிலை போலவே நம்முள் உள்ள இக்காந்த சக்தி கொண்ட அனைத்துச் சக்தி நிலையையும் ஈர்க்கும் இவ்வாத்மாவைப் பெற்ற நாமும் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்று தானாக இயங்கும் இயந்திரமாக இவ்வுடலை எண்ணிடலாகாது.

இவ்வுலகம் எந்தெந்த அமிலங்களை எல்லாம் ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றதோ அவற்றின் நிலைப்படுத்திய சக்தியனைத்தும் இவ்வுடலுக்கும் உண்டென்பதை உணர்ந்து
1.நம் ஆத்மாவின் உன்னத சக்தியை விரயம் செய்திடாமல்
2.நம் அறிவாற்றலை மென்மேலும் வளர்த்து
3.நம் உடலில் அண்டவிடும் பிணிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலையில் வாழ்ந்திடவும்
5.கோபம் குரோதம் சலிப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சாந்தம் அன்பு ஆசை என்ற ஆத்மிக நெறியை அனைவரும் ஈர்த்து
6.நமக்கு வழி காட்டும் ஆண்டவன் நிலைபெற்ற சப்தரிஷிகளின் அருளாசியைப் பெற்றிடல் வேண்டும்.

இந்த வளர்ச்சியில் இவ்வுலக உண்மைகளை மட்டுமல்ல… இவ்வுலகைப் போலுள்ள எல்லா மண்டலங்களின் நிலையையும் அதனதன் ஈர்ப்பு சக்தியையும் அறிந்திடலாம்.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதற்குகந்த தனித்தன்மை உண்டு ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லை.

இன்றைய நம் வாழ்க்கை வழி முறைகள் அனைத்துமே பிறர் எழுதிய… பிறர் சொல்லும் நிலையைக் கேட்டு… வாழ்ந்திடும் நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மீக நெறிக்கே பிற ஏடுகளையும் பழங்காலக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையின் கால நிலையை அதிலே விரயமாக்கி பிறர் நிலை அறிந்து வாழும் எண்ண வேட்கை கொண்டதாகவே உள்ளது.

1.சக்தியின் சக்தி ஆத்மா தான் நாமும் என்றுணர்ந்து
2.நம்முள்ளேயே நம் சக்தியை வளர்த்து
3.அனைத்து நிலையையும் நாமே அறிந்திடும் ஆற்றலையும்… உணரும் சக்தி நிலையையும் நாம் பெற வேண்டும்.

வழி அறிந்திட குரு வேண்டும்… அக்குருவின் சக்திக்கு மேல் சக்தி பெறும் சக்திவானாகச் செல்வதுதான் குருவாக நாம் ஏற்பவருக்கு நாம் அளிக்கும் காணிக்கை…!

ஒவ்வொருவரும் தனக்குகந்த ஈர்ப்பு சக்தியை உணர்ந்து ஒரு நிலை பெற்று… “உயிரோட்டம் கொண்ட சக்தி ஜெபம் பெற்றிடுங்கள்…!”

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

 

பற்று கொண்ட நிலையில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் மனைவியுடைய ஆன்மா பிரியப்படும்பொழுது கணவருடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது… கணவனுடைய ஆன்மா பிரியப்படும் போது மனைவியுடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் இரண்டும் கரைக்கப்பட்டு
2.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
3.விண்வெளியில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
4.பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

அதாவது கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா மனைவியின் பால் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனுடைய உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரம் பெற்று விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது துருவ தியானத்தில் இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

உதாரணமாக நெசவு தொழிலில் இருந்த ஒரு குடும்பம் அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரோ ஆஸ்த்மா நோயினால் மிகவும் அவதிப்பட்டார். எளிய குடும்பமாக இருப்பினும் மனைவி மேல் மிகுந்த பற்றின் தன்மையும் குழந்தை மீதும் பற்றும் வருகின்றது.

இருந்தாலும் அந்த நோயினால் உடலில் வேதனை தாங்காது விஷத்தை உணவாக உட்கொண்டு உடலை விட்டு அந்த ஆன்மா பிரிகின்றது. பிரியும் பொழுது தன் மனைவி நினைவாகவே அந்த ஆன்மா சென்றது… மனைவி உடலுக்குள் சென்று விட்டது.

விஷத்தைச் சாப்பிட்ட பின் அவர் எப்படித் துடிதுடித்தாரோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடிதுடிக்கும் நிலை வந்துவிட்டது.

இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழன்று வரப்படும்போது சிறு மூளை பாகம் சென்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி
அதே உணர்வு
அதே சொல்
அதே செயல் என்று
அந்த உடலை இயக்கி அவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தது

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. சிறிது நேரம் சுயநினைவு இருக்கும் சில நேரம் இருக்காது. ஆனால் இரண்டு நாட்களாக சுத்தமாகவே நினைவு இழந்து விட்டது என்று என்னிடம் (ஞானகுரு) கொண்டு வந்தார்கள்… தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் நாங்கள் சென்றோம் பணத்தைச் செலவு செய்தோம்… ஒன்றும் ஆகவில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வந்து சொல்கின்றார்கள்.

ஆனால் அந்த அம்மாவிற்குச் சுயநினைவுன் இல்லை. அந்தக் குழந்தைகளும் வாடிக் கொண்டிருக்கிறது.

குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் இருங்கள்… என்று சொன்னேன்
1.அந்த அம்மா உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா உயர்ந்த சக்தி பெற வேண்டும்
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மைகள் நீங்க வேண்டும் என்று தியானிக்கும் படி சொன்னேன்.

அதன் வழி அந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒரு அரை மணி நேரம் தியானித்தார்கள். அந்த அம்மா சிறிது தெளிவானது.

எழுந்தபின் அந்த அம்மாவையும் இதே போல் சொல்லச் செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்தும்படி சொன்னேன். உடலில் இருந்த அந்த ஆன்மா பரிசுத்தம் அடைந்தது.

பின் நல்ல நிலைகள் ஏற்பட்டுத் தன் குடும்பத்தைப் பேணிக் காக்கும் அளவிலே வந்தது. வாழ்க்கையின் நிறைவில் அந்த அம்மாவும் இறந்தபின்
1.அந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது ஒளிச்சரீரம் பெற்றது

ஆரம்ப நிலையில் யாம் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது 25 வருடங்களுக்கு முன்பு இத்தகைய நிலைகளைச் செயல்படுத்தி வந்தது.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எளிதில் விண்ணுக்கு (சப்தரிஷி மண்டலம்) அனுப்ப முடியும்.

குடும்பமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.

வரும் தடங்கலுக்கு வருந்தாமல் அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழியில் செல்வதுதான் ஞான மார்க்கம் – ஈஸ்வரபட்டர்

வரும் தடங்கலுக்கு வருந்தாமல் அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழியில் செல்வதுதான் ஞான மார்க்கம் – ஈஸ்வரபட்டர்

 

ஞான மார்க்கத்துக்குச் சென்ற அவ்வாத்மீக வழியின் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகையையும் சோலைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் இப்பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச் சிகரங்களுக்கும் சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலையென்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும்… இம்மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும்… மற்ற ஆலைகள் உள்ள இடங்களிலும்… அங்குள்ள காற்று…
1.அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமாகவும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளாகவும்
3.காற்றுடனே அந்நிலை கொண்ட அவ்விடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

அந்நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது அவர்களின் எண்ணமுடன் இவ்வெண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது.

ஆகையினால் இக்காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். அப்பொழுது அத்தியானத்திற்குப் பல நல்லுணர்வுகளும் அவர்களின் ஆத்மாவிற்கு நற்பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இப்பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது அசுத்தமான காற்று அவர்கள் செய்யும் தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுதும் இப்பூமிக்கு அடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே. “வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால்” இந்நிலைக்குச் சென்று இத்தியானம் பெறுவது எளிது.

1.ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு
2.நம் வாழ்க்கையையே… நாம் வாழும் நிலையையே தியானமாக்கி
3.வாழும் பக்குவ நிலைதான் நமக்குகந்த உன்னத நிலை.

உடல் உபாதை உறும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்கும் அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமுற்ற மருந்தை உண்டால்தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல்லுணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்…!

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும் அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து எப்பாதை சரியான பாதை என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்றே
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து நாம் மீண்டு சென்று
2.ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞான மார்க்கம்.

இம்மார்க்கத்தை வெறுப்புடனோ… சலிப்புடனோ… சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ… நம்மைத் தாக்கிடும் இன்னல்களிலிருந்து பயந்தோ… செல்வது முறையல்ல…!

1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்…
2.அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழிக்குச் செல்வதுதான்
3.நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உயர்ந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இவ்வுலகம் முழுவதுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்…!” இன்று இவ்வுலகில் உள்ளனர்.

ஞான வழியையும் இத்தெய்வீக வழியையுமே இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை…! என்று உணர்ந்து அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

அவர்களைப் போன்றே… நாமும் நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாய் ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.

மகா பச்சிலையின் மணங்களை நுகரும் ஆற்றல் பெறுங்கள்

மகா பச்சிலையின் மணங்களை நுகரும் ஆற்றல் பெறுங்கள்

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

நம் உயிரே ஈசனாக இருந்து நாம் எண்ணியதை எல்லாம் அந்த உணர்வின் கருவாக “உயிரே மாற்றுகின்றது…!” அப்படிக் கருவின் தன்மை பெறச் செய்வதற்கு நமது உயிரே குருவாக இருக்கின்றது.

நம் குருநாதரின் அருள் சக்தியைப் பெற்று அவர் வழியில் அகஸ்தியரின் அரும் பெரும் சக்திகளை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உருவான அந்த உணர்வு கொண்டு அவன் வழியில் நாமும் சென்று ஆறாவது நிலையை ஏழாவது ஒளியாக மாற்றி அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடையும் சக்தியை நாம் பெறுவோம்.

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது
1.அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போன்று இருக்கும்
2.அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் போதெல்லாம் அவன் நகர்ந்த அந்த “மகா பச்சிலையின் மணங்கள்…” உங்களுக்குள் வரும்
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வலிமை மிக்க சக்தியாக நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக நீங்கள் நுகரும் தன்மை பெற்று
5.அந்த அணுவின் தன்மை கருவாக உருப்பெறும் சக்தியும் பெறுகின்றது.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்குக் காலை துருவ தியானத்தின் மூலம் அருள் சக்திகளை நீங்கள் தினசரி செருகேற்ற வேண்டும்.

நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய எம்முடைய உபதேசத்தின் பல கலவைகளும் சேர்த்து அதுவும் அணுக்கருக்களாக உங்களில் உருவாகும். தியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருங்கிணைந்து அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பெருகும்.

அகஸ்தியன் உடலிலிருந்து உருவாகி வெளிப்பட்ட அருள் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது. அதை நீங்கள் கவர்வதற்காக இந்நேரம் வரையிலும்
1.அதைப் பதிவு செய்தது
2.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது
3.உங்களுக்குள் உள் நின்று அது இயக்கத் தொடங்குகின்றது

அதை நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது அந்த எண்ணம் உங்கள் கண்ணிற்கே வருகின்றது. யாம் சொல்லும் சொல்லின் நிலைகளைக் கண் உங்களுக்குள் பதிவாக்கி அந்த உணர்வை நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

அது தான் ஹரி…! அறியக்கூடிய அறிவாக… சூரியனால் இயக்கப்படுவது ஹரி கிருஷ்ணா “கிருஷ்…“ என்றால் பதிவாக்குவது அப்படிப் பதிவான பின்…
1.இந்த உணர்வு எண்ணம் ஆகும்போது ஹரி ராமா.
2.அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணிற்குக் கொண்டு வந்தால் ஹரி கிருஷ்ணா

அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தின் மூலம் உள்ளுக்குள் பதிவாக்கி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்த பதிவின் நிலையை நுகர்ந்து
3.நமக்குள் அணுவின் கருவாக உருவாக்கும் திறனைப் பெறுகின்றோம்.

கண் வழி நுகரும் சக்தி பெறுகின்றீர்கள். நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்த நாளங்களில் கருத் தன்மை அடையும் கருக்களாக உருவாக்கப்படுகின்றது

1.அகஸ்திய மாமகரிஷி பெற்ற நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சக்தியும்
2.நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மை விளைந்து அவனின்று வெளிப்பட்ட மூச்சின் உணர்வலைகளும்
3..உங்கள் உடலுக்குள் ஊடுருவும் போது உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுகிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில்…
அதை நுகரும் சக்தியும்
அறியும் சக்தியும்
வளர்க்கும் சக்தியும்
வளர்ந்திடும் சக்தியும் பெருகும்…!

1.அந்த அரும்பெரும் சக்தி உங்கள் அருகில் சுழன்று
2.நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்தின் வழி கூடி உடலுக்குள் செல்லும் நிலை இப்போது உருவாகின்றது.

ஆகவே அகஸ்தியமாமகரிஷி வெளிப்படுத்திய மணத்தின் தன்மைகளை நுகர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி – ஈஸ்வரபட்டர்

நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி – ஈஸ்வரபட்டர்

 

இன்று நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் நாம் எடுக்கும் சுவாசமும் விஷம் கலந்ததாக உள்ளது. அதனால் பல புதிய வியாதிகளை நாம் ஏற்க வேண்டிய நிலையும்… அது நம்மைத் தாக்கும் நிலையும் உள்ளது.

இவை தவிர இன்றைய இக்கலியில் வாழ்ந்த நம்மில் வாழ்ந்த உடலில்லா ஆத்மாக்களின் எண்ணத்தில் செயலில் இருந்து நம்முடன் வாழும் மனிதர்களின் எண்ணத்தில் செயலில் இருந்தும் தப்ப வேண்டியுள்ளது.

இவைகளின் தாக்குதலில் இருந்தெல்லாம்…
1.நம்மையும் நம் மனோநிலையையும் நம் உடலையும் காத்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து
2.ஆத்மீக வழியைப் பின்பற்றி வாழும் நிலைக்குப் பக்குவம் பெற்று வந்திடல் வேண்டும்.
3.நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி.

ஓங்கி நிற்கும் “தனியான தெய்வம் ஒன்றில்லை…” என்பதனை உணர்ந்து… நாமும் நம்மைப் போல்தான் இவ்வுலகமும் மற்ற அனைத்து உலகங்களுமே என்றுணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் அதனதன் உடல் தன்மை எந்தெந்த நிலை கொண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் செயல்படுகின்றதோ அந்நிலை கொண்டே இப்பூமித்தாயும் உயிருடன் உணர்வுடன் வாழ்கின்றாள்.

இப்பூமியில் வளர்ந்து வாழும் நாம் ஜீவன் கொண்டு எப்படி வாழ்கின்றோமோ அப்படியே தான் இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்… வளர்க்கின்றாள்… காக்கின்றாள்… அனைத்து சக்தியையும் வளர விடுகின்றாள்…!

உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் எந்நிலை கொண்ட உணர்வுத் தன்மை உள்ளதோ அந்நிலையின் உணர்வுடனே இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்.

இவ்வுலகத் தாயின் உணவாக இவ்வுலகத் தாய்க்குச் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் அமுது தான் பல சக்திகள் கொண்ட இக்காற்றினில் வந்து சேரும் இப்பூமித்தாய் ஈர்க்கும் பல அணுக்களும் நீருமே.

இப்பூமித்தாய் உண்ணும் நீரும் அணுவும்தான் அவள் உண்டு அந்த அமுதை நமக்கும் அளிக்கின்றாள். அவள் பெற்ற செல்வங்களுக்கு இந்நீர் இல்லாவிட்டால் இவ்வுலகுக்கே ஜீவனில்லை.

இவ்வுலகிலுள்ள உலோகங்கள் தங்கம், தாமிரம், வைரம், நிலக்கரி இன்னும் பல நிலை கொண்ட உலோகங்களும் கல்லும் மண்ணும் மரமும் செடியும் எவையுமே
1.இப்பூமியிலிருந்து வளரும் எவையுமே நீர் இல்லாவிட்டால் வளர்ந்திடாது.
2.இப்பூமியும் நீர் இல்லாவிட்டால் வாழ்ந்திட முடியாது
3.நீரையே ஜீவனாகப் பெறும் இவ்வுலகிற்கு உணரும் தன்மை அனைத்தும் உண்டு.

இவ்வுலகில் பல இடங்களில் எரிமலையும் வெளிப்படுகின்றது பனி மலையும் வளர்கிறது பாலைவனங்களும் உள்ளன. “பாலைவனங்களுக்குச் சக்தி இல்லை…” என்று எண்ண வேண்டாம்.

பாலைவனங்கள் தான் மற்ற நிலையில் உள்ள சோலைகளுக்கு உயிர் நாடி. சோலைவனங்களும் மலைகளும் கடலும் சில பள்ளத்தாக்குகளும் இப்படி இவ்வுலகிலேயே ஒன்றுபோல் இல்லாமல் ஒவ்வொர் இடத்திற்கும் ஒவ்வொரு மாறுபட்ட தன்மைகளை இப்பூமித்தாய் தான் ஈர்த்து வெளிக்காட்டிடும் நிலையில் வளரச் செய்கின்றாள்.

பல சக்திகள் இக்காற்றில் சுற்றிக் கொண்டே உள்ளன.

அனைத்து சக்திகளுமே மனிதனுக்கெப்படி துடிப்பு நிலை சுவாச நிலை ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனவோ அந்நிலை போல்தான் இப்பூமியும் ஈர்த்துத் துடிப்புடனே வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

இவ்வுடலுக்கு நாம் உண்ணும் ஆகாரங்கள் அமிலமாகி அவை ஜீரணித்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற்று நமக்கு வேண்டாத நிலையை வெளிப்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் உண்ட உணவையே இவ்வுடல் ஏற்று உதிரமாகவும் சிறுநீராகவும் மலமாகவும் காற்றாகவும் வியர்வையாகவும் ஆக்குகின்றது. இவற்றில் உதிர சக்தியை மட்டும் உடல் ஏற்று மற்றவைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்நிலை கொண்டுதான் இப்பூமித்தாய் ஈர்க்கும் நீரையும் அணுவையும் எந்தெந்த நிலைகளில் எச்சக்தி கொண்ட அணுவான அமிலத்தை ஈர்த்தனளோ அவ் ஈர்த்த சக்தியின் நிலை கொண்டே அச்சக்தியின் நிலை பெற்று அந்நிலையில் வளர்ச்சி பெறுகிறது.

அப்படி வளரும் நிலைகேற்ப சக்தியை அளிக்கும் (கொடுக்கும்) நிலையில் இப்பூமியின் உள் நிலையில் பல நிலை கொண்ட அமிலச் சக்திகள் தங்கி ஈர்க்குங்கால் அந்நிலையில் அவை சுற்றிக் கொண்டுள்ள தன்மையில் ஒரு சக்தியுடன் ஒரு சக்தி என்பது ஒரு நிலை கொண்ட அமிலத்துடன் மற்றொரு சக்தி நிலை கொண்ட அமிலம் மோதும் பொழுது (சத்ரு, மித்ரு நிலை) ஒன்றுக்கொன்று ஏற்காத நிலையில் அவை வெடிக்கும் தன்மையில் தான் பூமி அதிர்வு ஏற்படுவதெல்லாம்.

நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முதலிலேயே இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கும் நிலையை உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் இந்நிலை அதிர்வு பூகம்பம் இவை எல்லாம் எந்நிலையில் ஏற்படுகின்றன…? என்பதனை உணர்த்தி விட்டால் இனி விஞ்ஞானத்திற்கு இன்னும் பல வழிகள் புலப்பட்டிடும்.

1.பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து சக்திகளையும்
2.இக்காற்றிலிருந்து இழுத்துத் தன் சுவாசத்திற்கு ஈர்த்திடும் ஆற்றல்
3.இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உண்டு.

ஆனால் அவையவை எடுத்த சக்தியின் நிலை கொண்டு குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்ட தன்மையுண்டு. உலோகங்களில் மாறுபட்ட தன்மை உள்ளது போல் ஜீவராசிகள் ஈர்த்து வெளிபடுத்திடும் சக்தியிலும் மாறுபட்ட சக்தி நிலையுள்ளது.

ஒன்று போல் ஒன்றில் சக்தி நிலை ஒன்றுபட்டு எவற்றுக்குமே இருந்திடாது. கனி வர்க்கங்களிலும் ஒரே மரத்தில் காய்க்கும் கனிக்கும் மாறுபட்ட சுவையும் மாறுபட்ட சக்தியும் மாறுபட்ட அளவு நிலையும் இருந்திடும் சிறிதளவேனும்.

ஒரே செடியில் பூக்கும் புஷ்பங்களின் நிலையும் இவை போன்றே. இவ்வுலக நிலையும் இவை போன்றே.

சுற்றிக் கொண்டே உள்ள உலகில் அவை ஈர்த்து வெளிப்படுத்திய சக்தியில்தான் எத்தனை மாற்றங்கள்…? எத்தனை நிலை கொண்ட தன்மைகள்…?

இவை போல்தான் ஒவ்வொரு மண்டலத்தின் நிலையுமே.

இவ்வான மண்டலத்தின் நிலையும் ஜீவன் கொண்டேதான் சுற்றிக் கொண்டு உள்ளது. பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்றெல்லாம் செப்புகின்றோம். எவை சூனிய மண்டலம்…?

1.சூனிய மண்டலம் என்ற தனித்த மண்டலம் ஒன்றில்லை.
2.இப்பால்வெளி மண்டலம் என்ற மண்டலத்திற்கே ஜீவன் உண்டு.

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் உடலில் இருக்கக்கூடிய அணுக்கருக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவன் ஊட்டிப் பழக வேண்டும்.

அது அணுவின் தன்மையாக அடைந்தபின் நாம் எதை நுகர வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை எண்ணி ஏங்கப் படும்போது
1.அது ஞானத்தின் உணர்ச்சிகளாக நம்மை இயக்குவதும் அருள் வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது
2.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்க தொடங்கி விடுகிறது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விட்டால் இந்த உடலில் ஏற்கனவே உடலின் இச்சை கொண்டு மற்ற அணுக்கள் வளர்ந்திருந்தாலும் அருள் ஒளியின் சுடராக வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த அந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்து விடுகின்றது.

அது மடியும் தன்மை வரும் போது
1.ஒளியின் அணுவாக மாறுகின்றது… ஒளியாக மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்ற பின்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக ஆகின்றோம்.

உதாரணமாக ஒரு பட்டுப் புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் அந்த மலத்தை நூலாம்படை போன்று தனக்குள் சுற்றுகின்றது.

தனக்குள் சுழற்றிக் கொண்ட பின் தன்னை அறியாமலேயே ஒரு பாதுகாப்புக் கூடாக அமைத்து விடுகின்றது. அதிலே பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்டபின் “வெளியே செல்ல வேண்டும்… வெளியே செல்ல வேண்டும்…” என்று உணர்வுகள் உந்துகிறது.

1.தன் உடலில் மலத்தால் கட்டப்பட்ட இந்தக் கூட்டிற்குள் இருந்தே உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
2.நினைவின் ஆற்றல் வெளியே பறக்க வேண்டும் என்ற உணர்வுகள் முதிர்ந்து “இறக்கைகள்” வளர்கின்றது.

அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த கூட்டைக் கத்திரித்து விட்டு வெளியே வரப்படும் பொழுது அது பூச்சியாக (புழு – பூச்சியாக) வெளி வருகின்றது.

அதனின் நிலைகள் முட்டை இடும் பொழுது இதை உணவாக உட்கொண்ட அதனின் கருவாக தன் இனமாகப் பெருக்குகின்றது. கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகிறது.

இதைப் போலத்தான்
1.அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் கூட்டைக் கட்டி
2.இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நம் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அணுக்கள் விளைந்த பின்
4.கூட்டைவிட்டு (உடலை) வெளியே செல்லும் பொழுது அருள் மகரிஷிகளின் வட்டத்தில் சென்று
5.நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இப்படித்தான் ஒவ்வொரு உடலிலும் முழுமை அடைந்து நாம் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் அளவுக்கு விஞ்ஞானம் ஓங்கி விட்டது – ஈஸ்வரபட்டர்

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் அளவுக்கு விஞ்ஞானம் ஓங்கி விட்டது – ஈஸ்வரபட்டர்

 

நல் உணர்வுடைய நற்செல்வங்களை (குழந்தைகளை) நாம் பெற்றே சமமான நிலையில் வாழ்ந்திட்டாலும் வாழும் நிலையில் சூழ்ந்துள்ள அசுத்தத் தன்மை வாய்ந்த மூச்சுக் காற்றுகளும் நல் நிலையில் வாழ்பவரையும் வந்து தாக்குகின்றது. ஆரோக்கிய நிலையும் மாறுபடுகின்றது.

1.இக்காற்றில் கலந்துள்ள சக்தியில் நச்சுத்தன்மையின் வீரியம் தான் இப்பொழுதுள்ள நிலையில் ஓங்கி நிற்கின்றது
2.இதிலிருந்து மீண்டு ஜெப நிலை பெற்றே வாழ்ந்திட வேண்டும்.

சில உபாதைகள் இக்காற்றிலிருந்து நாம் ஈர்க்கும் சுவாசத்துடன் நம்மை வந்து அணுகத்தான் செய்கின்றன. அந்நிலையிலிருந்து நாம் மீள… சில வைத்திய முறைகளை ஏற்க வேண்டியுள்ளது.

இக்காலநிலை மாறும் தன்மையிலும் இவ்வுடல் நிலை மாறும் தன்மையிலும் சில நிலை கொண்ட மாற்றங்கள் உடல் நிலைக்கும் வரத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இருந்தெல்லாம் நம் உடல் ஆரோக்கியம் பெறச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள நாம் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் போல் இக்காற்றிலிருந்தே உடலில் ஏற்படும் பிணிகளை மாற்றும் சக்தி கொண்ட காற்றினை ஈர்த்து வாழும் பக்குவ நிலை பெற்றவர்கள். அத்தகைய நிலையை நாமும் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கும் சரி… பிறந்த சிசுவுக்கும் சரி.. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் வாழ வந்த நாட்களில் அதைப் பேணிப் பாதுகாக்கப்
1.பிறந்த நாளிலிருந்தே சில மருந்துகளை நம் முன்னோர்கள் அதற்கு ஊட்டித்தான்
2.வளரும் பக்குவத்தை நமக்கும் வழிகாட்டித் தந்தார்கள்.

ஆனால் இன்று வாழும் மனிதர்களோ… உணவைப் போலவே மருந்தையும் உட்கொண்டே வாழும் நிலையில் உள்ளார்கள்.

ஏனென்றால் இக்காற்றின் அசுத்தத் தன்மையினால் வளரும் பயிரின் செழிப்பும் குறைந்து விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது.

நாம் உண்ணும் உணவுத் தானியங்களைப் பெருக்கிட வேண்டும் என்றால்… இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல இரசாயன நிலை கொண்ட உரங்களைச் செலுத்தியே உணவுத் தானியங்களின் உற்பத்தியை வளரச் செய்து நாம் அதை உண்ண முடிகின்றது.

1.இயற்கையின் உரங்களைச் செலுத்தி வளரச் செய்த காலங்கள் மாறி
2.செயற்கையான உரங்கள் செலுத்தித்தான் இன்றைய உணவு உற்பத்தி நிலையை நாம் பெற முடிகின்றது.

இந்த இரசாயன உரங்களை ஈர்த்து வளர்ந்த பயிர்களில் இருந்து நாம் பெற்று உண்ணும் தானியங்களின் மூலம் நம்மையும் அந்நிலை கொண்ட சத்து நிலை (இரசாயணங்கள்) வந்து தாக்குகின்றது.

இயற்கையில் வளரும் தன்மை இன்றுள்ள இக்கால நிலையில் முடியாததினால் இச்செயற்கையின் வளர்ச்சியில் வந்த செயற்கையான தானியத்தையே உட்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே செயற்கையுடன் ஒன்றி நாம் வாழ்வதால் இவ்வுடல் மாற்றத்திற்கு இன்று புதிய புதிய மருத்துவத்தைச் செயல்படுத்தி நமக்கு ஏற்கத்தான் வேண்டியுள்ளது.

1.நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய பல மூலிகைகளை இன்று இக்கால நிலையில் தவற விட்டுவிட்டோம்
2.மூலிகையில் உள்ள மகத்துவத்தை நாம் எடுக்கும் நிலையில் இல்லை
3.அதை ஏற்கும் மனோ நிலையும் நம்மிடம் இல்லை.

சித்தர்கள் நமக்கு உணர்த்திய பல மூலிகைகளை நாம் பெறுவதற்கும்… இன்றைய மனிதனின் மன வளர்ச்சியில் எதையும் துரித நிலை கொண்டு செயலாக்கும் மன வளர்ச்சியில்… “இன்றைய மனிதனுக்குப் பொறுமை நிலையும் இல்லை…!”

இதில் வந்த வினைச் செயலால் தான் இன்று இத்தேசத்தில் அன்று உணர்த்திய பல உன்னத மூலிகைகளின் பொக்கிஷமெல்லாம் மறைந்து சிதைந்து விட்டதின் நிலை.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் “விஞ்ஞானம்…” என்னும் துரித நிலையில் சென்று கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.

அன்றன்ற தேவையை மட்டும் உணர்ந்து வாழும் மனிதன் தன் ஆத்மா என்ற ஆண்டவனை எண்ணி வாழ்வதில்லை.

துரிதமுடன் செயற்கைக்கு அடிமைப்பட்ட இன்றைய மனிதனால்
1.இவ்வாத்மீக வழியும் ஜெப வழியும் அறிந்து வாழ்ந்திட்டால்
2.தன் வாழ்க்கையின் முழுமை எங்குள்ளது…? என்பதனையே அறிந்திடலாம்
3.காற்று மண்டல நஞ்சிலிருந்து விடுபடவும் செய்யலாம்…!