
பூமியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது…?
விஞ்ஞான அறிவால் இன்றைய மனிதன் தன் அறிவைக் கொண்டு மற்ற எதிரி நாடுகளில் எத்தகைய தீங்கான நிலைகள் உருவாக்க வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணினோ
1.அதற்குண்டான ஆயுதங்களை (அணு, இரசாயண, கிருமிகளை) உருவாக்கியதால்
2.அந்த உணர்வின் அலைகளை எல்லாம் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து இந்தப் பூமியிலே பரமாத்மாவாகப் படரச் செய்துள்ளது.
3.அந்த விஷக்கதிரியக்கங்கள் பூமி ஈர்ப்பின் நடு மையம் அடையப்படும் பொழுது பூமியில் கொதிகலனாக மாறுகின்றது.
கொதிகலனை அதிகமாக உருவாக்கினாலும் அதனின் விளைவுகளை அவர்கள் யாரும் அறியவில்லை. காரணம்… மனிதன் தன் சுகபோகங்களுக்காகப் பல காலம் ஒரு வருடமோ பத்து வருடமோ கடல் நீருக்குள் மறைந்திருந்து (நீர்மூழ்கிக் கப்பல்) எதிரியை வீழ்த்த வேண்டும்… மற்ற நாட்டை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்… என்று பல ஆயுதங்களையும் அணுக் கதிரியக்கச் சக்தியால் வீரிய உணர்வு கொண்டு செயல்படுத்தினார்கள்.
இதனின் உணர்வுகள் ஹைட்ரஜன் (கண நீர்) என்ற நிலைகள் அங்கே மாறி கடல் வாழ் உயிரினங்களில் அது இணைந்து கொண்டாலும் அது எல்லாம் வீரிய உணர்வின் அணுக்களாகவே மாறுகின்றது.
ஆனால் அதை மனிதன் உணவாக உட்கொண்டு வளர்ச்சி பெற்ற பின் மனித உடலில் இந்த உணர்வுகள் சிதைந்து… மீண்டும் நலிந்திடும் நிலையே அடைகின்றது. உடலைக் காக்கும் நிலை இல்லை…!
விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் வளர்ச்சி என்று கண்டுணர்ந்தாலும் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை இவ்வாறு தான் அது பதிவாகின்றது.
மனிதன் விஞ்ஞான அறிவால் இத்தகைய நிலைகளைச் செய்து செய்து செய்து நாம் வாழும் இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே நச்சாக மாற்றி விட்டனர்.
இவர்கள் பரப்பிய கதிரியக்கச் சக்திகள் பூமியின் நடுமையத்தில் அடையப்படும் பொழுது
1.ஏற்கனவே இருக்கும் பாறைகளைக் காட்டிலும்
2.விஷத்தன்மை கொண்ட பாறைகளாக மாற்றிடும் நிலை வந்துவிட்டது.
அதனால் பூமியின் உள் பகுதியில் கொதிகலன் அதிகமாக உரு பெற்றபின் துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர் நிலைகள் பெருகிக் கொண்டே உள்ளது.
அணுவைப் பிளக்கும் போது ஹைட்ரஜனை வைத்துக் கொதிகலனாக மாற்றி எப்படி அடக்குகின்றானோ (அடக்கும் நிலையில் வரும் கசிவுகள்) அதனால் நீர் நிலைகள் மாறி (கடல் நீர்)
1.விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த அணுவின் தன்மை நடு மையம் அடைந்து உருகிடும் நிலையில்
2.ஹைட்ரஜன் என்ற நீரின் தன்மை மீண்டும் மூடி மறைத்து இந்த உணர்வின் தன்மை அதிகமாகும் பொழுது
3.இந்தப் பூமியே மிகத் துரித நிலைகள் கொண்டு குறுகும் நிலையும் (கடல் நீர் பெருகி நிலத்தைக் குறுக்கும்)
4.குறுகிய நிலத்திற்குள் மனிதர்கள் மிகவும் விஷத்தன்மை கொண்டவர்களாகி
5.விஷப்பூச்சிகள் மற்றொன்றைத் தீண்டினால்… அது எதுவாக இருந்தாலும் எப்படி மடிகின்றதோ
6.இதைப்போல விஷத்தின் தன்மை அடையும் காலம் வந்து கொண்டுள்ளது.
ஹைட்ரஜன் எப்படி அடக்குகின்றதோ… இதைப்போல விஷத்தின் தன்மை அடக்கியபின் கொதிகலனில் வெடிப்பது போல இந்த உணர்வின் தன்மை கொண்டு கோளாக இருக்கும் பூமி நட்சத்திரமாக மாறும்.
ஆனால் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை வேறு. இன்று விஞ்ஞான வீரியத்தால் அணுக்களைப் பிளக்கச் செய்து அது எல்லாம் ஒருக்கிணைந்த நிலையில் வரும் போது
1.மற்றதைச் சுட்டுப் பொசுக்கி தன் இனத்தின் தன்மை பெருக்கி
2.அது வளரும் தன்மை வரப்படும் பொழுது “பூமியே நிலைகுலைந்து போகும்…”
அத்தகைய விஷத்தின் தன்மையைச் சேர்த்துக் கொண்ட உயிரணுக்கள் இங்கே அதிக அளவில் பெருகும் போது அது மனிதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து
1.நீருக்குள்ளோ அல்லது பனிப் பாறைகளுக்குள்ளோ அடைபட்டு
2.உடலை விட்டுப் பிரிபவர்கள் அனைவரும் நச்சுத் தன்மை கொண்டு வெகு காலம் நரகத்தையே அனுபவிக்க நேரும்.
அதற்குப் பின் இன்னோரு பிரபஞ்சத்திற்குள் சென்று அடுத்த உடலாக உருவாக வேண்டும் என்றால் பல கோடிக் காலம் ஆகும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.