
யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவு செய்து கொண்டால் மற்ற “எதுவுமே கடினமில்லை…”
உதாரணமாக… பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது “விஞ்ஞான அறிவு வந்த பின்…” விஞ்ஞானத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை.
1.பதிந்த நிலைகள் மீண்டும் அதைப் படித்துணரப்படும் போது மூலத்தின் கூறை அறிந்து
2.தன் வாழ்க்கைக்குப் பாட நிலைகள் கொண்டு வாழ வழி வகுக்கின்றது.
இதைப் போன்று தான் இந்த இயற்கையின் நிலைகளை மகரிஷிகள் காட்டிய உணர்வின் அடிப்படையில் அவர்கள் இட்ட காரணப் பெயரை வைத்து (சாஸ்திரங்கள்) நாம் வளர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே அதை நாம் பதிவு செய்து கொண்டால் தான் மீண்டும் நினைவு கொள்ள முடியும்.
பள்ளியில் படிக்கப்படும் போது
1.முதலில் “பதிவாக்கிக் கொள்கின்றோம்…”
2.அந்தப் பதிவின் தன்மை நினைவு வரும் போது தான் படித்த நிலைகளை “உணர முடிகின்றது…”
3.உணர்ந்த நிலைகள் கொண்டு அது “செயலாக்கத்திற்கு வருகிறது…”
அதாவது… தான் படித்த நிலைகள் கொண்டு இணைத்து மற்ற நிலைகளை வைத்து ஒரு புதுப் பொருளை உருவாக்க முடிகின்றது.
ஆக… விஞ்ஞானி தான் படித்துணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு டெக்னிக்கல் (TECHNICAL) என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு இயந்திரத்தின் உறுப்புகளை உருவாக்க முடிகிறது.
மனிதன் பதிவு செய்து கொண்ட உணர்வின் இயக்கம் எதுவோ அதனின் நினைவின் இயக்கமாகத் தான் இயக்குகின்றது.
இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நீங்கள் பதிவாக்கி
2.அந்தப் பதிவான நிலைகளை இயக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் தவறில்லாமல் செயல்பட முடியும்.
சந்தர்ப்பங்களில் நமக்குள் தவறுகள் உட்புகுந்து உருப்பெறும் சில நிலைகள்
1.தவறின் நிலையாக இயக்கச் செய்வது எது…? தவறை அடக்குவது எது…? என்ற நிலைகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.தவறு வரும் நேரங்களில் யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகளை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அது உங்களுக்குத் தெளிவின் நிலையை ஊட்டும்.
அதனின் அடிப்படையில் கூட்டுத் தியானத்தின் மூலம் எடுக்கும் வலுக் கொண்ட சக்தியால் ஞானிகள் பால் நினைவின் ஆற்றல் நமக்குள் பெருகி தவறின் நிலைகள் நம்மை இயக்காது… அந்தத் தவறைத் தடுத்து அதைத் தவிர்த்து நமக்குள் இயக்காவண்ணம் தடுக்க முடியும்.
அத்தகைய அந்த நிலை பெறச் செய்வதற்கே இந்த உபதேச வாயிலாக ஞானிகள் உணர்வுகளை உணரும் தன்மையை “உங்களுக்குள் ஒவ்வொரு உணர்விலும் தொட்டுக் காண்பிப்பது…”
அதன் வழியில் ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அறிகின்றோம்.
1.அந்த உணர்வின் அறிவைக் கிளர்ந்து எழச் செய்து அந்த ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
2.தீமைகளை அகற்றும் மார்க்கங்களை உங்களில் இணைக்கப்படும் போது தான் இந்த உணர்வின் அறிவாற்றல் பெருகி
3.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அதனின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.
அவ்வாறு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்…. அவர்கள் பெற்ற உணர்வின் தன்மையைத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் பதிவு செய்து உணர்த்துகின்றோம் (ஞானகுரு).
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.