
“கதிரியக்கப் பொறிகளை நுகர்ந்து… அதை அடக்கி…” ஒளியான அணுக்களாகத் தனக்குள் உருவாக்கினான் அகஸ்தியன்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது மிருகங்கள் எல்லாமே அஞ்சி ஓடுகின்றது அதனால் அவனுக்குப் பெயர் காட்டு ராஜா என்று வந்தது.
அவன் குழந்தையாக இருக்கும் பொழுது அவனுக்கு இவ்வாறு பட்டங்களைச் சூட்டி எல்லா நிலைகளையும் கொண்டாடுகின்றனர். அவனுக்கு ஐந்து வயது வரப்படும் பொழுது அவன் எண்ணங்கள் சில நிலைகளைப் பிரதிபலிக்கும் பொழுது தாவர இனங்களைப் பற்றி அறிகின்றான்.
காரணம்… அவன் தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் பல பல மூலிகை மணங்களையும் பச்சிலை வாசனைகளையும் பூர்வ புண்ணியமாகப் பெற்றவன்… அதன் வழி பிறந்தவன்.
ஆகவே…
1.தாவரங்களில் இருக்கும் சக்திகளை அவன் அறியும் நிலையில்
2.அந்தத் தாவர இனங்களுக்கு எங்கிருந்து உணவு வருகின்றது…? என்று
3.இவனுக்குள் தோன்றும் உணர்ச்சிகள் சிந்திக்கச் செய்கின்றது… உற்று நோக்குகின்றான். வானை நோக்கிப் பார்க்கின்றான்
4.அப்பொழுது துருவப் பகுதியில் இருந்து நம் பூமிக்குள் சக்தி எப்படி வருகிறது…? என்று அறிகின்றான்.
துருவத்திலிருந்து வரக்கூடியது அனைத்தும் விஷத்தின் உணர்ச்சிகளை உருவாக்கும் உணர்வு பெற்றாலும் இவன் அவைகளை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக்கதிர்களாக மாற்றுகின்றான்.
இன்று நாம் மின்னல்களைப் பார்க்கின்றோம். நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அதிலிருந்து உமிழ்த்தப்பட்டு வரும் துகள்கள் எதிர்நிலை ஆகி ஒன்றுடன் ஒன்று மோதும்போது சுக்குநூறாக அதனுடைய அலைகள் மாறும்.
மாறி வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து அதனுடைய கலவைகளில் வித்தியாசமாக வரும். அதை… அந்த மின்னலாக மாறி வருவதைத்தான்… குருநாதர் என்னைப் பார்க்கும்படி சொல்கின்றார். “என் கண்கள் குருடாகி விடுமே…” என்று எனக்கு அந்தப் பயம் வருகின்றது.
ஆனால் இதை அடக்கிடும் உணர்வுகளை அகஸ்தியன் எடுத்து மின்னல்களை அவன் எப்படிப் பார்த்தான்…? என்று பார்க்கச் சொல்கிறார்.
1.அந்த மின்னலின் அலைகளை அகஸ்தியன் எப்படி எடுத்தான்…?
2.மின்னலின் வீரியம் அது எப்படி அவனுக்குள் அடங்குகின்றது…?
3.அகஸ்தியன் விஷத்தை அடக்கியது எவ்வாறு…? என்று காட்டுகிறார் குருநாதர்.
ஏனென்றால் அது மிகவும் விஷத் தன்மை கொண்டது…!
இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வருவது எதில் எதில் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளை ஊட்டி அதைச் செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று
1.“மின்னலையும் என்னைப் பார்க்கச் சொல்லி…
2.அகஸ்தியன் அதை எப்படி அடக்கினான்…?” என்பதையும்
3.அந்த மின் அணுவின் தன்மையைத் தனக்குள் எப்படி ஒளியாக்கினான்…? என்பதையும் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.
ஒரு செடியிலோ மரத்திலோ மின்னல் தாக்கினால் அது கருகி விடுகின்றது… அதிலுள்ள சத்தை எடுத்து விடுகின்றது.
அதைப் போல
1.இந்த விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது
2.கதிரியக்கப் பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்
3.அதை ஒ\டுக்கித் தன்னுடன் ஒளியாக மாற்றும் அணுத் தன்மையாக மாற்றிவிடுகின்றான்.
4.அப்படி அவன் உடலில் உருவான அந்த ஆற்றலைக் கொண்டு தான் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.
இது எல்லாம் குருநாதர் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தது..
ஆகவே… அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது எல்லா மின்னல்களையும் பார்க்கின்றான். அவன் பெற்ற அந்த உணர்வின் சத்தை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் ஒளியாக முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.