
ஆறாவது அறிவைப் பயன்படுத்தி நாம் ஒளியாக மாறும் பருவத்தைத் தான் உத்தராயணம் என்றார்கள் ஞானிகள்
சித்திரை…! என்றால் ஒவ்வொரு நிலைகளிலும் (சந்தர்ப்பத்தால்) நம் எண்ணத்தால் வரும் பிறிதொரு தீமையின் நிலைகள் நாம் உண்மையை உணர முடியாத நிலைகள் கொண்டு மறைத்துவிடுகிறது… அதனால்தான் சித்திரை.
பங்குனி கடைசியில் உத்தராயணம் பிறக்கின்றது. “உத்தராயணம்…” என்கிற பொழுது புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை மாற்றியமைத்து
2.இயற்கையின் நிலைகளை மாற்றி ஒளியின் சுடராக அறிவின் தன்மையாக
3.தனக்கு வேண்டியதைத் தனக்குள் சேமிக்கும் நிலை
உத்தராயணம் வரப்படும் பொழுது தான் வெயிலின் தன்மையும் அதிகமாகிறது. இந்த பூமியில் விளைந்த உணர்வின் சத்துகள் அது எதுவானாலும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் சேமிக்கின்றது,
அந்தத் தருணத்தில் ஒவ்வொரு தாவர இனத்திற்கும்.. மரங்களுக்கெல்லாம் இலை உதிர் காலமாகிறது. ஆனால் செடிகளுக்கோ… வளர்ந்த நிலைகள் கொண்டு அதனுடைய சத்தைக் கவர்ந்து கொள்கின்றது
அதில் விளைந்த வித்துக்களை மறுபடியும் அந்த நேரம்… பருவம்… பார்த்து விதைக்கும் பொழுது
1.மாரிக்காலத்தில் தட்சிணாயணம் என்ற நிலைக்கு வரும் பொழுது
2.மழை நீரும் நீர் மற்ற நிலைகளும் வரும் பொழுது
3.அந்த வெப்பத்தின் தன்மை துடிப்பு கொண்டு தன் இனத்தை விருத்தி செய்கின்றது.
உத்தராயணம் தட்சிணாயணம் என்று இப்படி வரும் போது அந்தக் காலப் பருவத்தில் ஆக… மனிதனான பின் உத்தராயணம் “ஒவ்வொன்றையும் வேக வைத்து மாற்றி அமைக்கின்றோம்….!”
அதாவது மனிதனான பின் ஒரு பொருளை வேக வைத்துத் தனக்கு வேண்டியதை மாற்றி அமைத்துப் புது விதமாக நாம் சமைக்கின்றோம்… உணவாக உட்கொள்கிறோம் அல்லவா…!
உத்தராயண நேரங்களில் அந்த வெப்ப காலங்களில் தாவர இனங்களிலிருந்து கவர்ந்து கொண்ட இந்த உணர்வின் சத்து… அந்த அலைகள் அதிகமாகும் பொழுது பார்த்தால் பெரும் புயல்கள் வரும்… பெரும் அலைகளும் வரும்.
இந்தக் காற்றலைகள் எங்கிருந்து வருகின்றது…? எங்கிருந்து உருவாகின்றது…?
ஒவ்வொரு தாவரமும் தன் உணர்வின் வலுவால் வளர்ந்தாலும்… அதனின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரும் பொழுது
1.ஒரு விஷத்தன்மை கொண்ட நிலையோ
2.ஒரு உணர்வின் உந்து விசை கொண்ட உணர்வுகளையோ எடுத்து அலைகளாக வரப்படும் பொழுது
3.தாழ்ந்த உணர்வு கொண்ட சாந்தமான உணர்வு கொண்ட அலைகள் இதைக் கண்ட பின் அஞ்சி ஓடி வருகின்றது
அஞ்சி ஓடி வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் எதிர்ப்படும் நிலைகள் மோதித்தான் சுழல் காற்றுகளும்… பின் மற்றொன்றைச் சுழலச் செய்வதும்… அதன் உணர்வின் தன்மை அணுக்களின் தன்மைகளை உருமாற்றுவதும்… எல்லாம் ஒன்றாகச் சேர்த்துத் தனக்குள் கவர்ந்து கொள்ளும் போது புதுப் புது வித்தாக மாறுகின்றது.
இதைப் போன்றுதான் ஆறறிவு கொண்ட மனிதன்… “வாழ்க்கை…” என்ற சுழற்சியின் நிலைகளில் வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனையோ எதிர்மறையான உணர்வுகள் மோதி நமக்குள் புயலாக மாறுகின்றது
மாறினாலும் அந்த ஆறாவது அறிவை வைத்துப் அந்தப் புயலை அடக்க முடியும்.
எப்படி…?
1.வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கித் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் என்றால்
3.அந்தப் புயல்களை நாம் அடக்க முடியும்.
அதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.
நம் ஆறாவது அறிவை வைத்து ஒளியாக உருவாக்கும் நிலையை நமக்குள் எவ்வாறு வளர்ப்பது…? என்ற உண்மைகளைத் தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.