செயற்கையாக உருவாக்கப்பட்ட அறிவுத் திறனைப் பற்றி (ARTIFICIAL INTELLIGENCE) அறிந்து கொள்ளுங்கள்

செயற்கையாக உருவாக்கப்பட்ட அறிவுத் திறனைப் பற்றி (ARTIFICIAL INTELLIGENCE) அறிந்து கொள்ளுங்கள்

 

கடந்த கால மனிதர்கள் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் நம்மைப் போன்று வேலை செய்வதில்லை. மிருகங்களைப் போலத்தான் தன் உணவுக்காகத் தேடி அலைவதும்… உணவு உட்கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.

அவர்கள் சேமித்து வைத்திருக்கும் உணவும் சிறிதளவு தான் இருக்கும். ஆனால் அதுவும் சிறிது காலத்தில் இருக்காது… சேமித்து வைத்தால் நிற்காது (கெட்டுவிடும்) என்று அக்கால மனிதர்கள் சேமித்து வைப்பது இல்லை. “கெட்டுப் போய் விட்டது…” என்று விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
1.உயிரினங்களைப் போலத் தான் அன்றைய மனிதர்கள் இருந்தார்கள்
2.ஆனாலும் இயற்கையின் நிலைகளைத் தன் எண்ணத்தால் நுகர்ந்து அறியும் சக்தி பெற்றவர்கள்.

அவர்கள் எண்ணங்கள் அப்படி இருந்தாலும் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவு எப்படி வருகின்றது…?

முந்தி எல்லாம் பள்ளிக்கூடங்களில் “மாகாணி வாய்ப்பாடு” சொல்வார்கள். அந்த வாய்ப்பாடுகளைச் சொல்லப் போகும் போது பேசிக் கொண்டிருக்கும்போதே இத்தனைக்கு இத்தனை என்ன…? என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்.

இப்பொழுது விஞ்ஞான அறிவில் வந்த மாணவர்களை எடுத்துக் கொண்டால் கால்குலேட்டர் வேண்டும். அதை வைத்துத் தட்டிப் பார்த்துத் தான் சொல்வார்கள். கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் சொல்ல முடியாது.
1.மனிதனுடைய மூளை வளர்ச்சி அங்கே தான் (இயந்திரத்திற்கு) போகிறது
2.இன்னொன்றை நாடும் போது சுயமாக சிந்திக்கும் நிலை இழக்கப்படுகின்றது.
3.எந்த இயந்திரத்தால் மனிதன் செயல்பட்டானோ அந்த இயந்திரத்தின் துணை வேண்டித்தான் அவன் எண்ணம் செல்கின்றது.

இயந்திரத்தின் நிலையை வடிவமைத்த… அது எந்த இன்ஜினியரோ அல்லது விஞ்ஞானியோ… அவன் உணர்வுதான் தான் வருகின்றது. இந்த உடலின் இச்சைக்குத் தான் இது நடக்கின்றது

இதைப்போல செயற்கையில் செய்யப்பட்ட கெமிக்கல் கலந்த உணர்வு இயக்கப்பட்டு… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இவனால் உருவாக்கப்பட்ட நிலைகள் அந்த அதிர்வுகளைக் கொடுக்கும் பொழுது அதன் செயலாக்கம் நடக்கின்றது.

கம்ப்யூட்டர் அல்லது டிவி.. ஃபோன் இதை எல்லாம் பார்த்தோம் என்றால் படமாகத் தெரிகிறது. அதை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டால் அதே உணர்வின் சிந்தனை தான் நமக்குள் வரும். அதையே தான் பார்த்துக் கொண்டிருப்போம்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடியவர்கள் அதிலேயே உட்கார்ந்திருந்தால்…
1.ஒரு பிரமை பிடித்த மாதிரித் தான் இருப்பார்கள்.
2.சகஜ வாழ்க்கையில் அதற்கு மேற்கொண்டு என்ன செய்வது…? ஏது செய்வது…? என்று தெரிவதில்லை.
3.இயல்பான அறிவின் ஞானம் இல்லாது போகிறது.
4.மனிதனால் இயக்கப்பட்ட அந்தக் கெமிக்கல் தான் இவன் உணர்வுக்குள் வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

மனிதனால் செயற்கையில் இயக்கப்பட்டு எந்த விஷத்தன்மை கொண்ட அதிர்வின் ஒலி/ஒளிகளைக் காணுகின்றானோ அதே உணர்வுதான் இன்று மனிதனுக்குள் வளர்ந்து கொண்டே வருகின்றது.

இப்படி அந்த விஷத்தின் அலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு சிந்தனை இழக்கும் தன்மையாகத் தான் மனிதன் மாறுகின்றானே தவிர மெய் ஞான வழிக்கு வர முற்படவில்லை.

இவன் உடலில் விளைந்த செயற்கை அலைகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து காற்றிலே பரவச் செய்கிறது.
1.அந்த எலெக்ட்ரானிக் சாதனங்களை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் போது
2.அதே உணர்வு தான் வரும் அதே உணர்வின் இயக்கமாகத் தான் வரும் (ARTIFICIAL INTELLIGENCE).

மனிதனுக்கு அடுத்த நிலையான உயர் ஞான வழிக்குச் செல்லும் நிலை தடைப்படுகின்றது..!

மகரிஷிகளால் சொல்லப்பட்ட முக்கியமான கலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மகரிஷிகளால் சொல்லப்பட்ட முக்கியமான கலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…! என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம்… ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே – நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும்.

அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” நமக்கு அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட நாம் முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

நம் வாழ்க்கை நடை முறையில் எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் வந்து மோதும் சமயத்தில் எல்லாம்… அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி (ஒரு பிரேக்)
2.அவ்வாறு சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்…!” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

1.ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து
2.அதன் வழியில் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால்
3.அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே சமமான நிலை நிலைக்க வேண்டும் என்று சொன்னபடி நாம் செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!

தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்

தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்

 

மெய்யுடன் மெய்யாக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் உயிர் என்பது மெய்…! உணர்வுகள் அனைத்தும் மெய் ஆகி ஒளி என்ற உணர்வாகும் பொழுது உயிருடன் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

அதனால்தான் இங்கே இராமேஸ்வரத்தில் நேரமாகி விட்டது என்று உணர்வின் (மனதை) தன்மையைக் கூட்டி இராமன் பூஜிக்கத் தொடங்கினான்.

இதைப் போல நாமும்
1.நம் வாழ்க்கையில் சந்தித்தோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்
3.பகைமை அற்ற வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்துக் கூட்டினால்
4.பேரருள் என்ற உணர்வுகள் பெருகி… பேரொளியாக மாற்றிடும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை இங்கே உணர்த்துகின்றோம்.

உடல் என்று இருந்தாலும் அது நாளடைவில் கரையும் தன்மை தான் வளர்கின்றது.
1.உடல் கருகும்… ஆனால் உணர்வுகள் வளரும்
2.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… அந்த அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
3.அந்த அருள் ஒளியைப் பெறுவதற்கே நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம்.

உடல் வாழ்க்கையில் சேர்த்த எந்தச் செல்வமும்… இந்த உடலும் நம்முடன் வருவதில்லை.

ஆகவே அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளர்த்திடும் பருவம் கொண்டு உயர்ந்த நிலையாக இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியாக நாம் செல்வோம்…! என்று வேண்டுகின்றேன் (ஞானகுரு).

ஒவ்வொரு குடும்பங்களிலும் இதைப் போலச் செயலாற்றிப் பழகுங்கள். பண்பட்டு வளரும் தன்மையாகக் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழுங்கள்.

நாம் தனித்து இருந்தாலும்… அன்புடன் பண்புடன் தனித்திருக்கும் நிலை வர வேண்டும்… உணர்வுகள் ஒன்றி வாழ வேண்டும். அதாவது தனித் தனியாக என்ற நிலை இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி வாழலாம்.

நம் குரு காட்டிய அருள் வழியில் அன்புடன் அரவணைத்து வாழும் உணர்வுகளை உடலிலே வளர்த்து
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும்போது செயல்கள் ஒன்றாக இணையும்.
2.செயல் ஒன்றானாலும் உடல் தனித்தனிதான்
3.உடல்கள்… உணர்வுகள்… தன் தன் நிலைகள் ஒன்றாக உருவாக்கும் பொழுது
4.பிறிதொரு உணர்வு நமக்குள் வந்தாலும் ஒன்றி வாழ்கின்றது… நமக்கு அது நன்மை பயக்கிறது.

ஆகவே ஒன்றி வாழும் உணர்வே என்றும் நிலையானதாக மாறுகின்றது. அந்த அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அருள் ஞானம் பெருக வேண்டும் இந்த உடலிலேயே பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ மகரிஷியின் அருள் உணர்வை நீங்கள் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு பெற எமது ஆசியும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அழியாச் செல்வமான பேரருளைப் பெற்று பேரின்பப் பெருவாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

காற்றிலிருந்து ஆகாரம் எடுக்கும் சித்தர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காற்றிலிருந்து ஆகாரம் எடுக்கும் சித்தர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.

1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”

ஆனால் இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும்
1.காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்..
2.“நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை

 

நமது வாழ்க்கையில் இன்று இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம்… எத்தனையோ ஆண்டுகள் வாழ்கிறோம் என்று…!

இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் அது சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது
2.வேதனை என்ற உணர்வுகள் வளர்ந்தால் தேடிய செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விட்டால் நம் உடலில் நோயின் தன்மை உருவாகின்றது
1.நோயின் தன்மை உருவானால்
2.இதுவே நாம் தேடிய செல்வம் ஆக மாறுகின்றது.

நோயின் உணர்வுகள் விளைந்தால்… “நம் உடலில் அந்தச் செல்வத்தின் வழியே…” உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது. ஆகவே தேடிய செல்வங்கள் நமக்கு சொந்தமல்ல… இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை…!

நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது…? என்று சிந்தியுங்கள்.

வேதனை வெறுப்பு என்பதைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உருவாக்குகின்றது உயிர். கோபம் குரோதம் என்ற நிலை ஆனால் அதன் வழி அடுத்த உடலைச் சொந்தமாக்கி அந்த உருவாக உயிர் மாற்றிவிடுகின்றது

ஒரு நிலம் சரியில்லை என்றால் அதனைப் பண்படுத்துகின்றோம். நிலத்தில் வீடு கட்டினால் சரியில்லை என்றால் மாற்று வீட்டை அதைக் காட்டிலும் நம் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகிறோம்.

இதைப் போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது இதைப்போல அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது

ஆகவே அத்தகைய வீடுகளை இந்த உடலில் மாற்றுவதற்கு மாறாக
1.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றும் நிலையான
2.பேரருள் பெறும் உணர்வினைச் சொந்தமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கி
3.இனி நாம் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

“எல்லாம் என் தலை விதி” என்று சென்றால் பிறப்பின் பலனை யாரும் எடுக்க முடியாது…! – ஈஸ்வரபட்டர்

“எல்லாம் என் தலை விதி” என்று சென்றால் பிறப்பின் பலனை யாரும் எடுக்க முடியாது…! – ஈஸ்வரபட்டர்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தைக் காட்டுகின்றார்.

அதாவது…
1.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
2.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்ற நிலையைத் தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள்பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.

ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

நமது உயிருக்கும் அகஸ்தியன் உயிருக்கும் உண்டான இயக்க வித்தியாசம்

நமது உயிருக்கும் அகஸ்தியன் உயிருக்கும் உண்டான இயக்க வித்தியாசம்

 

உயிரணு தோன்றி உலகின் நிலையில் பல பல பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வின் தன்மை மனிதனால் உருவாக்கப்பட்டது தான்.

அப்படி ஒளியாக உருவாக்கிய முதல் மனிதன் அகஸ்தியன் தான்…! அகஸ்தியன் இனமாகத் தான் நாமும் வளர்ந்து வந்துள்ளோம்.

மனிதனில் உயர்ந்தவன்… உயர்ந்த ஒளியின் உணர்வைப் பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. மாற்றிய அந்த உணர்வுகளைத்தான்
1.குருநாதர் எனக்குள் இணைத்து அதை வளர்க்கும்படி செய்தார்
2.ஒளியின் உணர்வாக நீ மாற வேண்டும் என்றும் சொன்னார்.

அதன் துணை கொண்டு இருளை அகற்றிடும் உணர்வைப் பெற வேண்டும். இந்த உணர்வினை எல்லோருக்கும் ஓது…! என்றார்.

நீ உபதேசிக்கும் போது அதை உற்றுக் கேட்போர் உணர்வுகளில் அது பதிவாகி அவர்களும் அதைக் கவரும் சந்தர்ப்பம் வரும்.
1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அவர்களும் அருள் வழி செல்லட்டும்…
2.அதைக் கவரும் உணர்ச்சியை நீ தூண்டு… அவர்களுக்குள்ளும் இதைப் பதியச் செய்.
3.அருள் வாழ்க்கை வாழச் செய்… இருளை அகற்றச் செய்…!
4.உயிர் என்ற நிலை வரும் பொழுது ஈசன் என்ற நிலை வருகின்றது… ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்று நீ கருது…! என்றார் குருநாதர்.
5.மனிதன் என்று உருவாக்கிய நல்ல உணர்வுகள் உயர வேண்டும் என்று எண்ணு.

பிறரைக் காக்கும் உணர்வு கொண்டு அந்த உணர்வுகள் உனக்குள் விளைந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்று அதன் உணர்வுகளை அவர்களும் பெற வேண்டும் என்று ஏங்கு.

ஏனென்றால் அவரால் வளர்க்கப்பட்ட அவர் உடலில் உருவான நோயின் தன்மையை நீ கேட்டறிந்து அந்த உணர்வுகள் உனக்குள் பதிந்தாலும்… அருள் உணர்வு என்ற நிலையை வைத்து உனக்குள் இதை மாற்றி…
1.அவர்களும் அதை பெற வேண்டும் என்று இவ்வாறு நீ எண்ணினால் அவர்களும் நலம் பெறுகின்றனர்
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உனக்குள் வராது தடுக்கப்படுகின்றது.

ஆகவே இம்முறையைக் கடைப்பிடித்து உனது வாழ்க்கையில் பிறிதொருவரின் நோய்களையோ தீமைகளையோ பார்த்தாலும் ஓ…ம் நமச்சிவாய…! என்று உன் உடலாக ஆனாலும் உடலில் வரும் அந்த அழுக்கினை நீக்க
1.நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ கவர்ந்து
2,அதனுடன் இணைத்து அந்த விஷத்தின் ஆற்றலை நீ பெருக்காது
3.அந்த அருள் என்ற உணர்வினை இணைத்து ஒளி என்ற உணர்வினை நுகரும் சக்தியாக
4.உன் உடலில் உள்ள அணுக்களை மாற்று… அதன் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்று…! என்றார் குருநாதர்.

வாழ் நாள் முழுவதும் இருளை அகற்றும் உணர்வுடன் வாழ்ந்தால் இது தான் விஷ்ணு தனுசு. ஆனால் பிறரின் நோயின் உணர்வை நுகர்ந்தால் அது சிவ தனுசு. அந்த உடலில் விளைந்த அதே நோய்கள் தான் வரும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார் குருநாதர்.

மிருகத்தின் உணர்வுகளை நுகர்ந்து அதனால் தாக்கப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் மிருகத்தின் நிலையை அடைகின்றோம்.

அப்படி அல்லாதபடி விஷ்ணு தனுசு என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றினால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக உலகெங்கிலும் இருளை அகற்றிடும் உணர்வுகள் பெற்றது.
1.நமது உயிரும் நுகர்ந்த உணர்வைத்தான் இயக்குகின்றது
2.ஆனால் அகஸ்தியனின் உயிரோ “இருளை அகற்றும் ஒளி என்ற உணர்வாக…” முழுமையான விஷ்ணுவாக மாறுகின்றது.

நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணு என்று உயிராக ஆனாலும் இருளை அகற்றி அந்த ஒளி கொடுக்கும் சூரியனைப் போன்று உயிர் ஒளியாக ஆகும் தகுதி பெற்றது. அப்படிச் சூரியனைப் போன்று ஆனது தான் துருவ நட்சத்திரம்…!

ஆகவே துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வினை நாமும் பெற்றோம் என்றால் அந்த உணர்வின் தன்மை உண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்ததின் உணர்வை நாம் நுகர்வோம்.
2.அருள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்
3.வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவோம்
4.மெய்ப் பொருளைக் காண்போம் என்று நமது குரு காட்டிய அருள் வழியில் ஏங்கித் தியானிப்போம்

“மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்… ”விதி வழி” பின் செல்லும்…! – ஈஸ்வரபட்டர்

“மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்… ”விதி வழி” பின் செல்லும்…! – ஈஸ்வரபட்டர்

 

இராமன்… லட்சுமணன்… சீதை என்று அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வரும்போது எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் அந்த ஆசை நிலையைச் சித்தரிப்பதே மாயமான்…!

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வலுவாகி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை.

“ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாக அங்கே பொருள்படுத்தியுள்ளார் வான்மீகி…!” எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்… வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!.

1.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
2.இந்த உலக ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
3.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனித வாழ்க்கையில் மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டி தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் இந்த உலக வாழ்க்கையின் “அதி ஆசை நிலை…!”

இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி “மாயமானாகிய அதி ஆசை நிலையைத்தான் தகர்க்கின்றது…!”

ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தி ஊட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி…?

1.உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து
2.வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி
3.ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலக ஆசை நிலையாகிய மாயமான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…! ஏன்…?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!

அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.

மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும் எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டியுள்ளார்.

1.மனித உயிரான்மாக்கள் பெற வேண்டிய உயர் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
2.”மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்…
3.”விதி வழி” பின் செல்லும்… என்று தெளிவாக அருளியுள்ளார் வான்மீகி மாமகரிஷி…!

தாயை நாம் மதித்து நடக்க வேண்டும்… அவர்களை மகிழச் செய்ய வேண்டும்

தாயை நாம் மதித்து நடக்க வேண்டும்… அவர்களை மகிழச் செய்ய வேண்டும்

 

தாய் எத்தனையோ வேதனைப்பட்டுத் தன் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அந்தத் தாய்க்கு நாம் உபகாரம் செய்யும் நிலை எது…?

உயர்ந்த உணர்வுகளை எடுத்துத் தாய் விரும்புவது போல் நாம் உயர்ந்தவராக வேண்டும்… நம் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… நம் செயல் அனைத்தையும் பிறர் மதிக்கும் தன்மையாக இருக்க வேண்டும்.

இப்படிப் பிறரை நாம் மகிழச் செய்யும் சக்தியாக நாம் மாறினால் அதைக் காணும் நம் தாய் பேரானந்த நிலை பெற்று நமக்காகப் பட்ட துயரத்தை எல்லாம் மாற்றலாம்… அகமகிழ்ந்து தன் துயரத்தை மாற்றிக் கொள்ளும் உணர்வும் தாய்க்கு வரும்.

ஆண்களானாலும் பெண்களானாலும் இதைப் போன்று தாயை மதித்தல் வேண்டும்.
1.நம்மை உருவாக்கிய கடவுள் என்று தாயை மதித்தல் வேண்டும்
2.தன்னைக் காத்த தெய்வம் என்று தாயை மதித்தல் வேண்டும்
3.நமக்கு நல் உணர்வு ஊட்டிய குரு என்று மதித்தல் வேண்டும்

சந்தர்ப்பத்தால் பல உணர்வுகளை நாம் பெற்றாலும் தாய் நமக்கு என்ன செய்தது…? என்று குறைப்பட்டுத் தாய் மனது புண்படும்படி எவரும் செய்யாதீர்கள். தாயைப் போற்றும் நிலையும் மகிழ்ந்து வாழும் செயலையும் தான் நாம் செயல்படுத்த வேண்டும்

நாம் எத்தனை குற்றத்தைச் செய்தாலும் தாய் தாங்கிக் கொள்ளும். ஆக… தன் பிள்ளைகள் உயர வேண்டும் என்று மனதைக் கூட்டுகின்றது. ஆகவே அதன் உணர்வின் தன்மை நம்மை மகிழச் செய்யும் சக்தியாகச் செயல்படுத்தும்.

ஆனால் அப்படி நம்மை மகிழ்ச் செய்யும் மனம் கொண்டு நம்மை வளர்ச்சியின் தன்மைக்குச் செயல்படுத்தும் தாய்க்கு நாம் வேதனைப்படும் செயலைச் செலுத்தினால் நாம் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வில் இருந்து விடுபடுங்கள். அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்… அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

1.தாயன்பைப் பெற முயற்சி எடுங்கள்
2.தாயை மகிழச் செய்ய உங்கள் வாழ்க்கையின் செயல்களைப் புனிதமாக்குங்கள்
3.உங்கள் சொல்லை இனிமையாக்குங்கள்… செயலைப் புனிதம் பெறச் செய்யுங்கள்…!

தாய்க்கு செய்யும் சேவையும் கடமையும் அவர்களை நாம் மகிழச் செய்வது தான். எத்தனையோ இன்னல்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கியது. இந்த உண்மையின் உணர்ந்து செயல்பட்டுத் தாய் தந்தையரை மகிழச் செய்வோர் எவரோ அவரே சொர்க்கம் அடைகின்றார்…!

அத்த்கைய பண்புடன் தாயின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது நாம் எண்ணிய உயர்ந்த உணர்வுகள் கவரப்பட்டு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் மாற்றி அமைக்கும் திறனை நாம் பெற முடியும்.
1.தாயின் உணர்வுகளை நாம் எடுக்கப்படும் பொழுது தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறும் தகுதியும் பெறுகின்றோம்
3.நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து விடுபடவும் முடியும்.

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நீங்கள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றென இணைந்து பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெறுங்கள்.

நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்து மனைவி கணவனை மதித்து இரு உணர்வும் ஒன்றான பின் சாவித்திரி என்ற நிலையில் என்றுமே இணைந்து வாழும் சக்தியைப் பெற முயற்சி எடுங்கள்.

நாம் கவர்ந்து கொண்ட அந்த உணர்வுகள் தான் வசிஷ்டர் என்பது. அதாவது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்பார்கள். பத்தாவது நிலையை அடைய கூடிய நாம் இந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது அது வசிஷ்டர் ஆகின்றது.

1.கவர்ந்து கொண்ட பேரருள் உணர்வுகள் நம்முடன் இணைகின்றது.
2.இணைந்து கொண்ட உணர்வுகள் பிரம்மமாக உருவாகிறது
3.பிரம்மகுரு என்ற நிலையில் அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் உருவாகி அது இணைந்தே வாழும் அருந்ததியாக…!

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் எதை வெல்ல வேண்டும்…? எதை வளர்க்க வேண்டும்…? என்பதை உணர்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதை உடலுக்குள் ஆழமாகப் பதித்து அதன் உணர்வுகளை உங்களுக்குள் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதே வசிஸ்டர் நீங்கள் கவரும் உணர்வுகள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உடலிலே பிரம்மமாகின்றது. அருள் சக்தி கொண்ட இருளை நீக்கி அந்த உணர்வுதான் பத்தாவது நிலை அடைந்து நஞ்சினை வென்று ஒளியாக்கி இந்த உணர்வினை உங்கள் உடலில் இணைந்தால் அருந்ததி இருளை நீக்கும் அந்த உணர்வுகள் இணைந்து வாழும் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் அதை பெற வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்
1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உயிரை ஈசனாக மதித்து… விஷ்ணுவாக வணங்குகின்றேன்.
2.உங்கள் உடலைச் சிவமாக மதித்து நீங்கள் உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.
3.அருள் உணர்வுகளை உங்களுக்குள் வினையாக்க வேண்டுமென்றும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி கணபதியாக்கி
5.தீமைகளை நீக்கும் உணர்வாக உங்கள் உடலைச் சிவமாக்கி
6.பேரொளி என்ற உணர்வாக உங்களில் வளர்க்கும் தன்மை பெற வேண்டும் என்று தான் குரு அருள் எனக்கு உபதேசித்தது…!

அதன் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால் உங்களிலே இருள் சூழா நிலையும் அருள் ஒளி பெருகும் நிலையும் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.

நல்லது நடக்கவில்லை என்று எண்ணி “நல்லதைப் பெறும் முயற்சியை விட்டு விடக்கூடாது” – ஈஸ்வரபட்டர்

நல்லது நடக்கவில்லை என்று எண்ணி “நல்லதைப் பெறும் முயற்சியை விட்டு விடக்கூடாது” – ஈஸ்வரபட்டர்

 

வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதையும் பெற வேண்டி ஆசைப்பட்டாலும் (ஆர்வம், விருப்பம்) நம் மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில் நல்லதைப் பெறும் உத்வேகம் எப்படி இருக்க வேண்டும்…?

அதைத் தான் “முயற்சி செய்வது…” என்று சொல்வது…! இருந்தாலும் அந்த முயற்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

அதாவது
1.செயல்படுத்த வேண்டியது எந்தப் பொருளோ அதிலேயே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளையே வீரியமாக வளர்க்கவும்
3.அப்படிச் செயல்படுத்தும் முறை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக
1.மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது
2.அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம்
3.தன்னுள் விழும் நிலையை அந்தக் கருத்தை அறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின்… வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்குக் கொண்டு வருகிறது.

இருந்தாலும்… சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம்… “ஊக்கம்” என்பது போல்
2.முயற்சி இருந்தால் நல்ல முத்தாக விளைவிக்கும்…
2.முத்தாக விளையவில்லை என்றால் என்ன செய்வது…? என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை…!
(இது மிகவும் முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) இந்த உலக… உடல் வாழ்க்கை மோதல்கள்… நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று… வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து தான்…!)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்கு… “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி “விதி வழி செல்லும்…” செயல் வாழ்க்கையில் அதிலே காட்டிலே பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

அதை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக எண்ணவே மாட்டோம்…!