முருகேஸ்வர போகநாதரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Murugeswara boganathar

முருகேஸ்வர போகநாதரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.

ஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி… அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.

“முருகா…” என்ற ஜெபம்
1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட
2.இக்குணங்களையே முருகனாக்கி… அம் முருகா என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.
3.முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.

அழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்… இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு… அவர் சக்தியில் அவர் உடலிலேயே… அவர் ஆத்மாவுடன்… அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.

அந்த நிலையில்…
1.முருகா…! என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ
2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக…
3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.

அழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு… எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்…” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்…!”

போகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.

எந்நிலையில் என்று உணர்ந்தீரா…?

அப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.

ஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.

போகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை… உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு… அவ்வாவி சக்தியை… இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.

அதாவது ஆவியான அமில சக்தியை எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.

ஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்…!

ஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்… நம் ஆத்மாவுடன்… நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே… நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.

1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்
2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல
3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.

ஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி…
1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்
2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்
3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து
4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.

Leave a Reply