மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

 

பாலில் பாதாமைப் போட்டால் சத்துள்ளது தான். ஆனால் அறியாதபடி ஒரு துளி விஷம் அதிலே பட்டு விட்டால் பாலுக்குச் சக்தி இல்லை.

இதைப் போல்தான் நாம் உயர்ந்த உணர்வு கொண்டு இருந்தாலும்
1.பிறர் செய்யும் தவறுகளையும் பிறர்படும் வேதனைகளையும் இப்படிச் செய்கின்றார்களே என்று அறிந்து கொண்டாலும்
2.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தெய்வ ஆணை ஆகி அந்த உணர்ச்சிகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு
3.நம் சொல்லும் செயலும் அதன் வழி அமைந்து “அந்த உணர்வு அமிலமாகி” உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவுகள் பாழ்படுகிறது.
4.நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பகைமை உணர்வு கொண்டு எதிர்நிலையால் தாக்கப்படும் பொழுது சீராக உணவு உட்கொள்ள முடிவதில்லை. ஆனால் பசி எடுக்கும்… உணவை உட்கொள்ள முடியாது.

பசியின் தன்மையால் “பித்தம் அதிகமானால்” உமட்டல் அதிகரிக்கும்.

மனிதனின் சகஜ வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளையோ குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில வேதனையான நிலைகளாலோ வேதனை அதிகமானால் உடலுக்குள் அஜீரணக் கோளாறு ஆகிவிடும்.

வயிறு உப்புசமாகும்… வாயு அதிகமாக உருவாகும்… ஜீரண சக்தி குறையும்…! அதனால் புளிப்பின் தன்மை ஏற்படும் போது ஜீரண உறுப்புகளில் பாதுகாப்பாக இருக்கும் அமிலங்களைச் செயலற்றதாக ஆக்கி அதனால் எரிச்சலாகி உணவை உட்கொள்ள மறுக்கச் செய்வதும் இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

தவறு செய்கிறார்கள் என்று மற்றவர்கள் உணர்வுகளை எப்படி நுகர்கின்றோமோ அதைப் போல் அதை நீக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அதை அவ்வப்பொழுது நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுங்கள். அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை அவன் வென்றவன். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவன் அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

1.மாமமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.சிறிது நேரம் இந்தச் சக்தியை உடலுக்குள் கூட்டினால் அந்த உணர்வுகள் நமக்குள் வலுப்பெறுகின்றது.

துணியில் பட்ட அழுக்கை நாம் சோப்பைப் போட்டு நுரையேற்றி அந்த அழுக்கினை எப்படி நீக்குகின்றமோ இதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அதிகரித்து அதை வலுவாக்கி
1.தீமை என்ற உணர்வுகள் சுவாசத்திற்குள் நுழையாதபடி
2.முன் பகுதியில் நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டால்
3.நாம் எடுக்கக்கூடிய உயர்ந்த உணர்வுகளால் சிந்திக்கும் தன்மையும்
4.உடலுக்குள் தொக்கி உள்ள விஷத்தின் தன்மையைத் தணித்து உடல் நலம் பெறச் செய்யும்.

அதற்குத்தான் உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறச் செய்கின்றோம். எப்போதெல்லாம் குறைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சிறிது நேரம் அதைச் சுவாசியுங்கள். அந்தத் தீமைகளை அகற்றிடும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டி இதை நீங்கள் பெருக்கிப் பாருங்கள்.
1.உங்களுக்குள் அமைதி கிடைக்கும்… சிந்திக்கும் தன்மை வரும்
2.கோபத்தைக்த் தணிக்கும்… படபடப்பை நீக்கும்.
3.அருள் உணர்வுகள் பெருகும் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

ஆகவே… இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply