தியானத்தில் “ஞானம்” பெறுவது முக்கியம்

தியானத்தில் “ஞானம்” பெறுவது முக்கியம்

 

தியானம் என்பது தனித்து அமர்ந்து சக்தி பெறக்கூடியது அல்ல. காரணம்… எவ்வளவு சக்தி பெற்றாலும் நாம் அந்த “ஞான சக்தி” என்ற நிலையை அடிக்கடி நினைவுபடுத்தி அதைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
1.ஞானத்தின் உணர்வுகள் பெருகினால் தான்
2.இந்த வாழ்க்கையில் ஓரளவு சிந்தித்து செயல்படும் தன்மையும்
3.தீமையான உணர்வுகள் நமக்குள் வளராதபடியும்
4.மீண்டும் பிறவிக்கு வராதபடி தடைப்படுத்தும் சக்தியும் வரும்.

ஞானத்தின் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி வளர்த்துக் கொண்ட பின்… உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிர் நேரடியாக நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்… அதைப் பார்க்கலாம்.

செத்த பிற்பாடு என்ன…? என்று சாதாரணமாக நினைப்பார்கள்…!

யார் மீதாவது நாம் அதிகப் பற்றுடன் பிரியத்துடன் இருந்தால் இந்த ஆன்மா உடலுக்குள் வந்து எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இறந்த பின் எத்தனை அவஸ்தைப்படுகிறது…? இன்னொரு உடலுக்குள் சென்று தான் கஷ்டப்பட்டது போல அவர்களையும் கஷ்டப்படுத்தும் நிலையாக வரும்.

அனுபவத்தில் நாம் பார்க்கலாம்.

உடலில் பட்ட அவஸ்தைகளை அங்கேயும் உண்டாக்கி வேதனையை அங்கேயும் எடுத்து அதை முழுமையாக்கிக் கொண்ட பின் விஷம் அதிகமாகி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு நிச்சயம் பாம்பாகப் பிறக்கும்.

வேதனைகள் வந்த பின் சிந்திக்கத் தெரியாதபடி குடும்பத்திலோ தொழிலிலோ மற்றவர்களையோ வெறித் தன்மையாகப் பேசினால்… அல்லது அடித்துத் தாக்கும் உணர்வுகள் வந்தால்… அடுத்து புலியாகத்தான் பிறக்க நேரும்.

ஒரு உடலுக்குள் சென்று இத்தகைய நிலைகளை வளர்த்து வெளியே வந்தால் புலியாகத்தான் பிறக்கும்.

ஆனால்… ஒவ்வொரு நொடிகளிலும் இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை எல்லாம் நல்லதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை எடுத்து
2.வருவதை எல்லாம் மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளரச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பெற வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போல் நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… தெருவில் உள்ளோர் நன்றாக இருக்க வேண்டும்… ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்… உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

சண்டையிடுபவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் அவர்களும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும். ஒன்றுபட்டு வாழும் உணர்வு பெற வேண்டும். அவர்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்… அவர்கள் சண்டையிட்ட உணர்வு நமக்குள் பதிவு இருக்கும். அதை மேலே சொன்னபடி எடுத்து மாற்றி அது நமக்குள் வளராதபடி பக்குவப்படுத்த வேண்டும்.

ஒரு செடியில் விளைந்த வித்தை அது அப்படியே விட்டு விட்டால் அது முளைத்து வளர ஆரம்பித்துவிடும். அது போன்று மற்றவர்கள் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே தான் நமக்குள் பதிவாகின்றது. அது வளராதபடி தடுக்க வேண்டும்.
1.அந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு இது எதிரான நிலை.
2.இப்படி இது வளரும் போது அந்த அணுக்கள் நல்ல அணுக்களாக நமக்குள் மாறும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி எத்தகைய தீமையையும் மாற்றி நம் உடலில் நல்ல அணுக்களாக அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

AGRICULTUREல் (விவசாயப் பண்ணைகளில்) வீரிய வித்தாக மாற்றுவது போன்றது செய்து பழக வேண்டும் ஒவ்வொரு உணர்வையும் நல்லதாக.. ஒளியாக… மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

நுனிக் கரும்பின் சுவையை உணர்ந்தவர்களே ஞானிகள்

நுனிக் கரும்பின் சுவையை உணர்ந்தவர்களே ஞானிகள்

 

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

குருநாதருடன் ஆயுள் மெம்பராக நாம் இணைய வேண்டும்

குருநாதருடன் ஆயுள் மெம்பராக நாம் இணைய வேண்டும்

 

வீட்டிலே சில பேர்களைப் பார்க்கலாம்…
1.இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? என்று
2.இப்படிச் சொல்லிச் சொல்லியே “தன்னை உருப்படாமல்…” செய்து கொள்வார்கள்.

இந்த மாதிரிப் பேசுபவர்கள் உடல்களில் பாருங்கள்…! ரொம்பச் சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். பையன் மீது வெறுப்புகள் வரும்.

இவர்கள் எண்ணமே… உருப்படுவார்களா…? உருப்படுவார்களா…? என்று சொல்லும் போது மற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக பகைமையாக்கிப் பிரித்துவிடும்.

நண்பர்களிடம் அடிக்கடி இதைச் சொன்னாலும் அவர்கள் உடலில் பதிவாகி அவர்களும் இப்படிப் பேசுகின்றார்களே உருப்படுவார்களா…! என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். “எப்பொழுது பார்த்தாலும் இப்படிப் பேசுகிறார்கள்… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…?” என்று அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இப்படித்தான் மாறிக் கொண்டே போகும்.

எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

தீமை என்று தெரிந்து கொள்கின்றோம்… நமக்குள் அது புகாது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடமே வேண்ட வேண்டும்… அவன் தான் நமக்கு உணர்த்துகிண்றான்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பெருக்கி பழகுதல் வேண்டும்.

மற்றவர்கள் தவறு செய்தாலும் கூட அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். ஒரு தெளிவான நிலைகள் அவர்களுக்குள் வர வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்தால் நமக்குள்ளும் தெளிவாகின்றது.

அதே சமயத்தில் அவர்கள் எடுத்தால் அங்கே தெளிவாகின்றது.
1.எடுக்கவில்லை என்றாலும் அங்கிருந்து வந்த உணர்வுகளை
2.நாம் மேலே சொன்னபடி எண்ணிச் சுவையாகச் சமைத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

காரமான உணர்வின் தன்மை அவர்களுக்குள் இருந்தால் நோயின் தன்மை அங்கே விளைகின்றது. அந்தக் காரத்தை நமக்குள் எடுத்தால் அதே நோய் நமக்கும் வரும்.

ஆகையினால் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நமக்கு ஒரு பாதுகாப்பு தேவை. அதற்குத் தான் ஒவ்வொரு நொடியும் அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும்படி சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டால் அதன் வழி உண்மை நிலைகளை நாம் உணர முடியும்.

கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் பொழுது தீமைகளை அகற்றி மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். நம் குடும்பங்களில் முதலில் இதைப் பரப்பிப் பழக வேண்டும். நாம் எடுக்கும் உணர்வு நம் வீட்டில் மட்டுமல்ல… மற்ற இடங்களிலும் பதிவாகின்றது. அனைவருக்கும் கிடைக்கும் சக்தியாக வருகிறது

1.நம் குருநாதர் ஒளியாக இருக்கின்றார்
2.அவர் விண்ணிலே ஒளியாக இருப்பது போல நாமும் ஆயுள் மெம்பராக அவருடன் சேர வேண்டும்.

“சூட்சமத்தை…” உள்ளடக்கிய காவியமே இராமாயணம்

“சூட்சமத்தை…” உள்ளடக்கிய காவியமே இராமாயணம்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

1.“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும் காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும்…! என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.

ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

தியான வளர்ச்சியில்… நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

தியான வளர்ச்சியில்… நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

 

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் பாசத்துடன் இருப்பார்கள். அவர் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் அவருடன் வேலை செய்பவர்கள் எல்லாம் தொல்லை கொடுக்கின்றார்களே… என்று எண்ணுவார்கள்.

இருந்தாலும் மனைவி இப்படி எண்ணி இந்த உணர்வைச் சமைத்து வெளிப்படுத்தினால் ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சுத்தமாக அது செயலற்றதாக மாற்றிவிடும் (பாசமாக இருப்பவர்களுக்குள்).

1.கணவருக்கு இந்த மாதிரித் தொல்லை வருகின்றதே… இப்படிச் செய்கின்றார்களே…! என்ற உணர்வை எடுத்தால்
2.கணவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் பாய்ந்து அவருடைய திறமைகளை எல்லாம் குறைத்துவிடும்.

இதையெல்லாம் மாற்ற நாம் அருள் ஒளி பெற வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவருடைய உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் இரு மனமும் ஒன்று பட வேண்டும்… இரு உயிரும் ஒன்றாக இணைய வேண்டும்
3.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இரண்டு பேரும் ஒரு ஐந்து நிமிடமாக எண்ணிப் பழக வேண்டும்

அதிகாலையில் முழிப்பு வரும் பொழுது இது போன்று செய்து பழக வேண்டும்.

நான்கு மணிக்கு மேல் உங்களை அறியாமலே அந்த முழிப்பு நிச்சயம் வரும். அந்த நேரத்திலே சுதாரித்து இந்த சக்தியை இரண்டு பேருமே எடுக்க வேண்டும்

பெண்கள் தங்கள் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் ஆண்கள் தங்கள் மனைவிக்கு அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும். குரு அருளைப் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து அவர்கள் பார்வையில் தீமை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று செலுத்திப் பாருங்கள்

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும். அவரைப் பார்ப்பவர் எல்லாம் அந்த புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும். இதே போல மனைவியும் கணவனுக்கு எண்ண வேண்டும். ஒரு இரண்டு நிமிடமாவது இதை எண்ண வேண்டும்.

அதிகாலையில் இவ்வாறு செய்து விட்டு அடுத்து எழுந்தபின் ஒரு ஆனந்தமான நிலையாக இருக்கும்.
1.இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் வீட்டிலே பளீர்… பளீர்… என்று வெளிச்சம் வரும்
2.உங்கள் உடலில் இருந்து வீட்டிற்குள்ளேயே அது படரும்.

ஏனென்றால்
1.நாம் அருள் சக்திகளை நுகரப்படும் பொழுது அது பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.அந்த வீட்டிற்குள் பளீர்… என்று ஒரு வெளிச்சம் வரும்… பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் மூச்சலைகள் பட்ட உடனே இது போன்ற நிலைகள் நிச்சயம் வரும்.

சூரியன் தனக்குள் விளைந்த பாதரசத்தால் தன் அருகில் வரும் மற்ற உணர்வுகளுடன் மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்… என்று இந்த பிரபஞ்சம் முழுவதற்குமே வெளிச்சமாகின்றது.

இதே போன்று நாம் வீட்டிற்குள் செய்தோம் என்றால் நம் உடலில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியுடன்
1.தீமை என்ற உணர்வுகள் மோதிய பின் அது விலகிப் போகும்
2.நம் உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும்
3.புதுவிதமான ஒரு மகிழ்ச்சி வரும்… அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் இதைச் செய்து பழகுங்கள். இப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் நான் கொடுத்த ஞான வித்திற்கு “நீங்கள் சக்தி ஊட்டுகின்றீர்கள்…” என்று அர்த்தம்.

மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…

மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…

 

இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்…!”

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாகப் பொருள்படுத்தியது…”
1.எல்லா ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!

ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
1.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
2.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டி தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள் தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி
1.ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை…!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உருக்கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி…?

உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாயமான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…!

ஏன்…?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!

அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி…!

இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

 

உடலை விட்டு இந்த உயிர் சென்று விட்டால் அடுத்த கணம் இந்த உடல் சவமாகி விடுகின்றது. இறந்த பிற்பாடு உடலை உருவாக்கிய அணுக்கள் உயிரணுக்களாக மாறி… புழுவாகி இந்த உடலையே சாப்பிடுகின்றது.

சாப்பிட்டு இந்த உடல் தசைகள் தீர்ந்த பிற்பாடு அதுவும் இறக்க நேருகின்றது. நம் உயிரணுவைப் (உயிர்) போல் அதுவும் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறிய பின் அந்த உயிர் என்ன செய்கின்றது…?

1.யார் யாருடன் பழகி அந்த உணர்வுகள் தசைகளோடு இணைந்ததோ
2.இது உயிரணுவான பின் அவர்கள் உடலுக்குள் சென்று
3.அந்த உணர்வுகளைத் தீண்டி அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வாகச் சேர்கின்றது.
4.உடல்களிலே பலவிதமான நோய்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.
5.தசைகளில் நோய் வருகின்றது… எலும்புகளிலே மற்றவைகளிலே நோயாக மாறுகின்றது.

அதாவது ஒருவர் இறந்த பிற்பாடு அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அந்தப் பழகியவர்கள் உடலில் இப்படிச் சேர்கின்றது.

ஆனால் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகளைப் பதிவாக்கி நாம் கவர்ந்து கொண்ட பின் இதைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அந்த உடலில் இருந்து வரக்கூடிய சத்தை எல்லாம் அந்த உடலில் எந்த நோயாக மாறியதோ அதை எல்லாம் இங்கே உருவாக்குகின்றது.

இதுவே உயிரணுக்கள் வெளியே சென்ற பிற்பாடு
1.அந்த இறந்த உடலைச் சாப்பிட்டது போல இந்த உடலைச் (உயிருடன் இருப்பவர்கள்) சாப்பிடும் நிலைகளிலே
2.குஷ்டரோகமா மற்றும் அழுகிய நிலைகளோ படை பத்து போன்ற நோய்கள் வருகின்றது.

நான் ஒன்றுமே செய்யவில்லை… என் உடலில் படையாக வந்து விட்டது பத்து வந்துவிட்டது… ஒன்றும் செய்ய முடியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

மனிதனுக்குள் தொடர்ந்த இந்த உணர்வின் அலைகள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டு போகின்றது. எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த பிற்பாடு மனிதனின் நிலைகள் இப்படி ஆகிறது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியை அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர வேண்டும்.

அதற்காக வேண்டித் தான்…
1.பல முறை உபதேசத்தைக் கொடுத்துப் பல விதமான உணர்ச்சிகளை நுகரச் செய்து
2.உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்கிறோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்வதறகுத் தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

ஒரு சிலர் அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள். மூன்று மணி நேரம் பேசுகிறேன் என்றால் நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்தங்களிலே கலக்கப்படுகின்றது.

எந்த அளவிற்கு உற்றுப் பார்க்கின்றீர்களோ இரத்தத்தில் கலந்து அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றது. உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் அதை எண்ணி எடுத்தீர்கள் என்றால் நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்து உங்களுக்குள் விளையும்.

அது விளையத் தொடங்கினால் ஒவ்வொரு நொடிகளிலும் மகரிஷிகள் பெற்ற அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கை எப்படி இருக்கின்றது…? குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி ஒன்றி வாழ வேண்டும்…? என்று யாம் சொல்லப்படும் பொழுது அதை வைத்து… சர்வ தீமைகளிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

தீமை நம்மை இயக்காதபடி கணவன் மனைவி ஒருவருக்கொருவர் காத்துக் கொள்ளவும் முடியும்.

எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அதற்குத் தேவை “முயற்சி மட்டும் தான்…”

எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அதற்குத் தேவை “முயற்சி மட்டும் தான்…”

 

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம்… அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்…!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது…! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

குருநாதர் வழியில் காடு மேடெல்லாம் அலைந்து உண்மைகளைத் தெரிந்தாலும்… உலகம் எப்படிப் பார்த்தது…?

குருநாதர் வழியில் காடு மேடெல்லாம் அலைந்து உண்மைகளைத் தெரிந்தாலும்… உலகம் எப்படிப் பார்த்தது…?

 

தனித்து நான் (ஞானகுரு) சாமியாராக இருந்தேன். குருநாதர் காட்டிய வழியில் காடு மேடு எல்லாம் அலைந்து பல அனுபவங்களைப் பெற்று விட்டு வந்த பிற்பாடு என் மனைவிக்கு இதையெல்லாம் சொன்னேன்.

ஆனால் “சாமியாராகப் போய்விட்டார்…!” என்று ஊரெல்லாம் என்னைத் திட்டினார்கள். குடும்பத்தை விட்டு விட்டுச் சாமியாராகச் சென்று விட்டார் என்று திட்டிய சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏராளம்.

சாமியம்மாவும் “பாவிப்பயல்…! என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்…” என்று என்னைத் திட்டியதும் உண்டு. அதே சமயத்தில் என் பிள்ளைகளைக் கூப்பிட்டு உன் அப்பனிடம் காசு வாங்கிக் கொண்டு வா…! பெத்துப் போட்டுச் சென்று விட்டால் யார் கொடுப்பது…? என்று துரத்தி விட்டவர்களும் உண்டு.

இது எல்லாம் இமயமலையில் நான் குருநாதர் காட்டிய வழியில் அனுபவம் பெறுவதற்காகச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகள்.

குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு தான் அங்கே போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி. அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு… கிடு… என்று நடுங்குகின்றது.

அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.

நடுக்கம் நீங்கியபின் என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.

அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா… நைனா… என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைக் குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.

அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு… கிடு… என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்…” என்று இருதயமே விரைக்கின்றது.

அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்…?

அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.

அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் “நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு…” என்று அங்கே உபதேசிக்கின்றார்.

அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இங்கே குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி என்னைத் தாக்கவில்லை.

ஏனென்றால்… இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.

அதாவது… அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே…” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது…?

இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால் என் மூத்த பையன் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று சொல்லி சொத்தை எல்லாம் இழக்கச் செய்துவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில்… இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. “பிள்ளைகளைப் பெத்துவிட்டுச் சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான்…!” என்று திட்டுகிறார்கள்.
1.இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
2.நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.

பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது…?

அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன்…? என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.

ஆக…
1.கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.
2.அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது… நல்லதை எண்ண முடியவில்லை.

சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது “தன் பையன்… தன் பிள்ளை…” என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.

ஏனென்றால் அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது…? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.

யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி… அவர்களெல்லாம் நலம் பெற வேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.

இப்படி பல வகையில் சிரமப்பட்டு உண்மைகளை எல்லாம் தெரிந்து நான் இங்கே வந்த பிற்பாடு சில இடங்களில்
1.இந்தச் சாமி கல்யாணம் செய்து விட்டாரே…!
2.கல்யாணம் பண்ணிய சாமியார்கள் எல்லாம் அயோக்கியச் சாமியார்கள் என்று இப்படியும் சொல்கின்றார்கள்.

காரணம்… சாமியார் ஆகிவிட்டால் கல்யாணம் செய்யக்கூடாது.

எப்பொழுதாவது என் மனைவி என் அருகில் வந்து ஏதாவது பேச முற்பட்டால் சில பேருக்கு இதைப் பார்க்கும் பொழுது “குடும்பப் பற்றுடன் இருக்கின்றாரே இந்தச் சாமியார்…” என்று சொல்கின்றார்கள்.

இது எல்லாம் “மனித உணர்வுகளுக்குள்…” நடந்த நிகழ்ச்சிகள்.

காம குணத்தை அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது தெய்வீகம்…! – “காமாட்சி”

காம குணத்தை அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது தெய்வீகம்…! – “காமாட்சி”

 

காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.

குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட் கருத்து ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…” அதையே “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”

சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

ரிஷி பத்தினி என்ற சிறப்பை அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுதுதான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும் சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வானஇயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை… அந்த உயர்வைப் பெறும் வழியை…
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.