இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

 

உடலை விட்டு இந்த உயிர் சென்று விட்டால் அடுத்த கணம் இந்த உடல் சவமாகி விடுகின்றது. இறந்த பிற்பாடு உடலை உருவாக்கிய அணுக்கள் உயிரணுக்களாக மாறி… புழுவாகி இந்த உடலையே சாப்பிடுகின்றது.

சாப்பிட்டு இந்த உடல் தசைகள் தீர்ந்த பிற்பாடு அதுவும் இறக்க நேருகின்றது. நம் உயிரணுவைப் (உயிர்) போல் அதுவும் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறிய பின் அந்த உயிர் என்ன செய்கின்றது…?

1.யார் யாருடன் பழகி அந்த உணர்வுகள் தசைகளோடு இணைந்ததோ
2.இது உயிரணுவான பின் அவர்கள் உடலுக்குள் சென்று
3.அந்த உணர்வுகளைத் தீண்டி அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வாகச் சேர்கின்றது.
4.உடல்களிலே பலவிதமான நோய்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.
5.தசைகளில் நோய் வருகின்றது… எலும்புகளிலே மற்றவைகளிலே நோயாக மாறுகின்றது.

அதாவது ஒருவர் இறந்த பிற்பாடு அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அந்தப் பழகியவர்கள் உடலில் இப்படிச் சேர்கின்றது.

ஆனால் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகளைப் பதிவாக்கி நாம் கவர்ந்து கொண்ட பின் இதைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அந்த உடலில் இருந்து வரக்கூடிய சத்தை எல்லாம் அந்த உடலில் எந்த நோயாக மாறியதோ அதை எல்லாம் இங்கே உருவாக்குகின்றது.

இதுவே உயிரணுக்கள் வெளியே சென்ற பிற்பாடு
1.அந்த இறந்த உடலைச் சாப்பிட்டது போல இந்த உடலைச் (உயிருடன் இருப்பவர்கள்) சாப்பிடும் நிலைகளிலே
2.குஷ்டரோகமா மற்றும் அழுகிய நிலைகளோ படை பத்து போன்ற நோய்கள் வருகின்றது.

நான் ஒன்றுமே செய்யவில்லை… என் உடலில் படையாக வந்து விட்டது பத்து வந்துவிட்டது… ஒன்றும் செய்ய முடியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

மனிதனுக்குள் தொடர்ந்த இந்த உணர்வின் அலைகள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டு போகின்றது. எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த பிற்பாடு மனிதனின் நிலைகள் இப்படி ஆகிறது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியை அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர வேண்டும்.

அதற்காக வேண்டித் தான்…
1.பல முறை உபதேசத்தைக் கொடுத்துப் பல விதமான உணர்ச்சிகளை நுகரச் செய்து
2.உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்கிறோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்வதறகுத் தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

ஒரு சிலர் அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள். மூன்று மணி நேரம் பேசுகிறேன் என்றால் நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்தங்களிலே கலக்கப்படுகின்றது.

எந்த அளவிற்கு உற்றுப் பார்க்கின்றீர்களோ இரத்தத்தில் கலந்து அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றது. உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் அதை எண்ணி எடுத்தீர்கள் என்றால் நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்து உங்களுக்குள் விளையும்.

அது விளையத் தொடங்கினால் ஒவ்வொரு நொடிகளிலும் மகரிஷிகள் பெற்ற அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கை எப்படி இருக்கின்றது…? குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி ஒன்றி வாழ வேண்டும்…? என்று யாம் சொல்லப்படும் பொழுது அதை வைத்து… சர்வ தீமைகளிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

தீமை நம்மை இயக்காதபடி கணவன் மனைவி ஒருவருக்கொருவர் காத்துக் கொள்ளவும் முடியும்.

Leave a Reply