போக்கிரி வலுவானவன் தான்… ஆனால் உடலுக்குப் பின் எந்த நிலை அடைகிறான்…?

போக்கிரி வலுவானவன் தான்… ஆனால் உடலுக்குப் பின் எந்த நிலை அடைகிறான்…?

 

ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவன் மற்றவர்களை அடித்து உதைத்துப் பழக்கப்பட்டவன். ஒருவன் மற்றவனை அடிப்பதை இவன் பார்த்தால் மன தைரியத்தோடு இருப்பான்.
1.அப்படித் தான் அடிக்க வேண்டும்…! என்று சொல்வான்.
2.ஏனென்றால் அவன் அடித்துப் பழகியவன்
3.அடித்து அடித்தே அவன் உணர்வுகளை வலுப் பெற்றவன்.

அவனுடைய அழுத்தம் அதிகமாக இருப்பதால் மற்றவர்கள் அடிப்பதை இவன் பார்த்தாலும் “அப்படித்தான் வேண்டும்…” என்ற வகையிலே தன்னுடைய உணர்ச்சிகளை வலுப்படுத்திக் கொள்கின்றான்.

ஆனால் ஒருவன் மற்றவனை அடிப்பதைப் பார்த்தால் நமக்கு நடுக்கம் தான் வரும். பயமும் பதட்டமும் சேர்ந்து வரும்.

போக்கிரியினுடைய அழுத்தம் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்து உடல் உறுப்புகளைப் பின்னப்படுத்தும். அத்தகைய பின்னப்படுத்தும் உணர்வுகள் வரப்படும் பொழுது அதே உணர்வைத்தான் அவனும் வளர்த்துக் கொள்ள முடியும்

அடுத்தவர்களைச் சிதையச் செய்த உணர்வுகள் தான் அவனுக்குள் சுவாசமாகி அதுவே உடலுக்குள் வளரும். உடலை விட்டுப் பிரிந்தால்
1.“எட்டுக்கால் பூச்சி… ஆக்டோபஸி…!” போன்ற பல விதமான உயிரினங்களாக மாறி அதிலே அவன் அவஸ்தைப்படும் தன்மை வரும்.
2.உணவைச் சரியாக உட்கொள்ள முடியாது கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சி இனங்களாக உயிர் உருவாக்கி விடும்.

மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மனிதனாக இருக்கின்றோம். இருந்தாலும் உயிர் அதுவாக மாற்றி விடுகின்றது.

இது போன்ற உணர்வுகளை மாற்றுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். ஆயுள் கால மெம்பராகச் சேரும் நீங்கள் அதன் தொடர்பை எடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் வலுவாக்க வேண்டும்.

சண்டை செய்தவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளை எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

ஆகவே இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கொண்ட பின் அது நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.

இரத்தத்தில் அது சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சுவையான உணர்வாக மாறிவிடும்.

அடுத்தவர்களைப் பற்றி நன்றாக வேண்டும் என்று சொல்லும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல முறையில் வளரும்.

அப்பொழுது எதனுடன் தொடர்பு கொள்கின்றது…?

1.உயிருடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு கொள்கிறோம்.
2.இதைத்தான் விஷ்ணு தனுசு என்று சொல்வது
3.உயிருடன் ஒன்றி… உணர்வின் தன்மைகளை எல்லாம் ஒளியாக்குகின்றோம்.

சக்கர வியூகம்

சக்கர வியூகம்

 

எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்தச் சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.

பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெற வேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் எப்படிப்பட்டது…?

துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் எப்படிப்பட்டது…?

 

பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையும் சூரியன் தன் பாதரசத்தால் மோதி வெப்பம் காந்தமாக உருவாக்கப்பட்டு விஷம் தனித்துப் பிரிந்து ஓடுகின்றது.

ஆனால் அந்த விஷத்தை வெப்பகாந்தம் மறுபடியும் எடுத்து அணுக்களாகச் சேர்த்து “எலக்ட்ரிக் எலக்ட்ரான்…” என்ற நிலையில் மற்ற பொருளை எடுத்துச் செல்கிறது.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடியது ஒரு அழுத்தமான உணர்வுகள் கொண்டது… அது மிகவும் வலுவானது. அது நேராகச் சூரியனுடைய ஈர்ப்புக்கு வரும்போது…
1.வரும் பாதையில் பார்த்தோம் என்றால் மற்ற நுண்ணிய அணுக்கள் எல்லாம் அதைக் கண்டு அஞ்சி ஓடி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்
2.அப்போது அதனுடைய அழுத்த நிலைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைக் கண்டறிந்து
3.நியூட்ரான் என்று அதற்கு விஞ்ஞானிகள் பேரை வைக்கின்றார்கள்.

அது “நியூட்ரானாக…” எப்படி மாற்றமடைகின்றதோ அதே போல நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையுமே “நல்லதாக” மாற்ற முடியும்.

எதை வைத்து…?

27 நட்சத்திரங்களிலிருந்து வருவது வலுவான நிலைகள் கொண்டு சந்தர்ப்பத்தால் மோதுகின்றது. ஆனால் நம் குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கச் சொல்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.இதனுடைய உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
4.எத்தகைய தீமையையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உருவாகின்றது.

மாடு ஆடுகள் இவைகள் எல்லாம் இயற்கையில் வந்ததை உணவாக உட்கொண்டு அதனுடைய உணர்ச்சிக்குத் தக்க தான் இயங்குகின்றது. ஆனால் மனிதன் இயற்கையிலே விளைந்ததை வேக வைக்கும் போது அந்தச் சந்தர்ப்பம் அதனுடைய சக்தி இழக்கப்படுகிறது.

நெருப்பிலே பாத்திரத்தை வைத்து மற்ற பொருள்களைச் சேர்த்து எதன் எதன் அளவுகோல் கொண்டு அதற்குள் போடுகின்றோமோ அதை ருசியாக மாற்றுகின்றோம்.

இயந்திரத்தையோ மற்ற கருவிகளையோ உருவாக்க… உலோகத் தன்மைகளையும் இதே மாதிரித் தான் செயல்படுத்துகின்றோம்.

பல விதமான நோய்களை நீக்க அதற்குண்டான மருந்தினைக் கலவையாக உருவாக்கி அதை மருந்தாகக் கொடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்… நோய்களையும் தணிக்கின்றோம்.

அதே போல் தான்
1.தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அடுத்த கணமே அதிலே இணைத்து விட்டால் அதனுடைய செயலை இழக்கச் செய்துவிடும்.
3.அப்போது தீமைகளை இழுக்கும் சக்தி குறைகின்றது.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்த உணர்வினை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எப்படி வலுவாக வருகின்றதோ (நியூட்ரான் போல்)
2.அது போன்று அழுத்த நிலைகளில் துருவ நட்சத்திரம் தீமையினுடைய செயலை இழக்கச் செய்கின்றது.

சில பேருக்குத் தன்னை அறியாமலே பதட்டங்கள் வரும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் அந்தப் பதட்டம் வராதபடி மன வலிமையைக் கொடுக்கும். பதட்டமான உணர்ச்சிகள் நம்மை இயக்காதபடி தடுக்கலாம்.

மன வலிமை கூடிய பின் சிந்திக்கும் ஆற்றல் கூடுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் எப்படிச் செய்யலாம்…? என்று அதற்குத் தக்க உபாயங்களும் வருகின்றது.

கஜலக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்

கஜலக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்

 

1.சுவாசத்தின் வீரியத்தைக் காட்டிட நாசியாக யானைகளையும்
2.சுவாசத்தில் நறுமணத்தைக் காட்டிடத் துதிக்கையில் அமுதக் கலசத்துடன் மலர்களையும்
3.மன எண்ண வீரியத்தின் தூய்மையைக் காட்டிட ஏழு எண்ணங்கள் கலந்த (தூய்மை எண்ணமாக) வெண்மையான யானையின் நிறத்தையும்
4.சுவாச நிலை முக்தி பெறும் தொடருக்கு ஆதி மூல நீர் சக்தியைக் காட்டியும்
5.நீரடி மூல வித்து நீர் மண் தொடர்பில் சித்தன் நிலை பெறும் சித்துக்கள் என்பதைக் காட்டிட நீரின் சுவாசத்தை ஈர்த்துச் சமைத்திடும் ஆகார நியதியைக் கொண்டு முளைத்து நீர் மேல் கிளைத்தெழும் தாமரை இதழ்களைக் காட்டி
6.பரிபூரணத்தைப் பெற்றிடும் வழியாக வண்ண மலரில் அமர்ந்திட்டாள் “கஜலக்ஷ்மி…!” என்று அன்று உணர்த்தினார்கள் ரிஷிகள்.

மண்டலமாக உருக்கோலம் பூண்ட நம் பூமித் தாய் பெற்று வளர்த்திட்ட… இன்னும் வளர்ச்சியின் வலுக்கொள்ளும் ஈர்ப்பின் செயலில்… தன்னை மேன் மேலும் வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல் பூமித் தாயின் செல்வங்களான ஒவ்வொரு உயிரான்மாவும் ஆதிமூலச் சக்தியின் தொடர் கொண்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திடும் தொடருக்கு “கஜலக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்…! என்பதிலும் அதே சூட்சமமே காட்டப்பட்டுள்ளது.

நமக்கு லாபகரமானது எது…?

நமக்கு லாபகரமானது எது…?

 

வீட்டில் கஷ்டமோ சங்கடமோ மற்றதோ வந்தாலும்… “அட போ…!” என்று இந்த உணர்வைப் பெருக்கிப் பாருங்கள்
1.இந்த உணர்வுகள் வலுக்க… வலுக்க… வலுக்க…
2.செய்வினையோ தோஷங்களோ மற்ற எதுவாக இருந்தாலும் நமக்கு அது ஒரு லாபகரமானதாக மாறிவிடும்.

பொருளையோ இந்த உடலையோ சொத்தையோ எண்ணிவிட்டால் பற்று இங்கே வந்து விடுகின்றது… புவியின் ஈர்ப்புக்கே வருகின்றது.

இந்த மாதிரி ஆகிவிட்டதே…! நான் எப்படி வாழப் போகின்றேன்…? என்று எண்ண வேண்டியது இல்லை. இந்த உடல் எப்பொழுதுமே மடியக்கூடியது தான்…! அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும்… இந்த உடலில் இருந்து தான் உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும். வாழ்க்கையில்
1.துன்பத்தைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வருகின்றதோ அப்போது தான்
2.”அதிலிருந்து விடுபட வேண்டும்…” என்று உணர்வு வருகின்றது.

வீட்டில் இருக்கக்கூடிய எலிக்கு… பூனையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. சந்தித்த பின் பூனை எலியைப் பிடித்து விட்டால் பூனையின் நினைவு தான் எலிக்கு வருகின்றது.

எலியோ பூனையின் உடலுக்கு அது இரையாகின்றது. இரையாகும் போது நரக வேதனைப்படுகிறது. ஆனால் எலியினுடைய அந்தச் சந்தர்ப்பம் தீமையில் இருந்து விடுபட வேண்டும்… வேதனையில் இருந்து விடுபட வேண்டும்… என்று எண்ணுகிறது.

பூனை எலியைப் பிடித்த பின் எலியின் உயிரான்மா அதனுடைய வலுவைப் பெற்று அதனின் சந்தர்ப்பம் எலி பூனையாகப் பிறக்கக்கூடிய நிலை வருகின்றது

அதே போல இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டம்… தொல்லை… என்று வரப்படும் பொழுது
2.அதை எல்லாம் “அருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் என்று நினைத்து விட்டால்”
3.வேதனை என்ற நிலையே வராது.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

எப்படித்தான் இருக்கட்டும்…! இந்த உடலோ சொத்தோ சுகமோ நம் கூட வருகின்றதா…? இல்லை.

இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிய அருள் உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது அதன் வழி உயிர் வெளியேறிய பின் இன்றைய செயல் நாளைய சரீரமாக மாறுகிறது.

“எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்…” என்று அவருடைய நினைவை கூட்டிக் கொண்டே வந்தால் இந்த உணர்வுகள் வலுப்பெற்று இந்த உடலுக்குப் பின் யாரை நினைவுக்குக் கொண்டு வந்தோமோ… உயிரான்மா அங்கே தான் செல்லும்.

அவர்கள் உடலில் சேர்ந்த பின் மீண்டும் அங்கேயும் இதே தொல்லைகளைத்தான் கொடுக்கும்… பழி தீர்க்கும் நிலையாக வரும். விஷத்தின் தன்மை உருவான பிற்பாடு பிறவி இல்லா நிலை அடைவதற்கு மாறாக சாகாக் கலையாக மாறி… இந்த வேதனை உணர்வு எதுவோ அதன் உணர்வின் தன்மைக்கொப்ப இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை பெற்றால்
1.எத்தகைய விஷத் தன்மையும் அதனைக் கொல்வதில்லை
2.இதுதான் வேகாநிலை என்று சொல்வது.

அந்த நிலையை நாம் அடைதல் வேண்டும்.

வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு

 

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பலவித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக…!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.

நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு – நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி… ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி… நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட… சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்…! சூட்சமப் பொருளை மனதில் கொள்க…!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

நம்மை நாம் அறிந்து கொள்வோம்

நம்மை நாம் அறிந்து கொள்வோம்

 

உதாரணமாக சண்டையிடுவோர்களைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நமக்கும் அதே உணர்வுகள் வருகின்றது,
1.இது தெரிந்து கொள்ள உதவுகின்றது.
2.தெரிந்தாலும் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு உடலுக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது

உணர்ச்சிகளால் அறிய முடிகின்றது. அந்த உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படுகின்றோம். நாம் கண்ணிலே பார்க்கிறோம் என்றால் கருவிழி ருக்மணி நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றது. “மூளையில் அல்ல…!”

உடலில் எலும்புக்குள் உள்ள ஊனில் வித்தாகப் பதிவாக்குகின்றது ஆதைத் தான் ஊழ்வினை என்று சொல்வோம்.
1.இங்கே பதிவு செய்தால்தான் மீண்டும் மீண்டும் அது நினைவுக்கு வரும்.
2.பதிவாகவில்லை என்றால் நினைவு வராது.

அவர்கள் இருவரும் சண்டை போட்ட உணர்வுகள் (மூச்சலைகள்) வெளி வருவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து வந்தால் அது உணர்வாக மாறுகின்றது.

உதாரணமாக செடி கவர்ந்து கொண்டால் அதை வித்து என்று சொல்கின்றோம். அது போல் தான் கோபம் இங்கே “உணர்வாக” (வினை) மாறுகின்றது

அந்த உணர்வை நாம் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாற்றி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது. இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் கலந்த பின் அவர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் போன்று நம் உடலிலும் பரவுகிறது.

நம் உயிரிலே மோதும் பொழுது இயக்கத்தின் சக்தியாக மாறுகிறது. இரத்தத்தில் கலந்தால் இந்திரலோகமாக மாறுகிறது. இந்திரலோகம் என்றால் கருத்தன்மைகள் உருவாகும் இடம்.

நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது கருவாகி உருவாகிவிட்டால் பிரம்மலோகம்… அணுவாகின்றது. அணுக்களாக உருவாகிவிட்டால் அதற்கு உணவு தேவை.

அப்போது உணவுக்காகக் கிளர்ச்சியாகி உந்தப்படும் பொழுது உயிரில் பட்டு உணர்ச்சிகளாக மாறி இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.உயிருக்கு எட்டும் போது சண்டையிட்டவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கண்ணின் காந்தப் புலன் இழுக்கின்றது.
2.காந்தப்புலன் இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
3.அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறி இது உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை வருகிறது.

நம் உடலில் எத்தனையோ கோடி உணர்வுகள் இருப்பினும் இதன் உணர்வு வலுப்பெறும் போது அந்தக் கோப உணர்வுகளைக் கவர்கிறது.

அதே உணர்ச்சியின் தன்மை நமக்குள் ஏற்படும் போது என்ன நடக்கிறது…?

யாரையாவது பார்த்தோம் என்றால் திடீரென்று நமக்குக் கோபம் வரும். கோபம் ஏன் வருகிறது…? ஒருவரைப் பார்த்தால் ஏன் சப்தம் போடுகிறோம் என்று தெரியாது…!

சண்டை போடுவதே சிலருக்குத் தெரியாமல் இந்தக் கோபத்தின் தன்மை வரும். பளீர்… என்று வரும். காரணம் அந்த அணுக்களுக்குச் சாப்பாடு வேண்டும் என்பதற்காக அப்படி இயக்குகின்றது.

அந்த நேரத்தில் நம்மால் நல்ல குணங்களை என்ன முடிகின்றதா…? இல்லை.

சில நேரங்களில் நாம் நல்ல குணங்களை எண்ணினால் அது முடிவதில்லை. வெறுப்பு வேதனை போன்ற அணுக்கள் ஜாஸ்தியாக நம் ஆன்மாவிலே முன்னாடி இருந்தால் அத்தகைய நிலை தான் வரும்.

ரேடியோ டி.வி. ஸ்டேசன் ஒலி/ஒளிபரப்பு செய்த உடனே எந்தெந்த உணர்வுகள் எந்த அலைவரிசைகளில் வருகிறதோ திருப்பி வைத்தவுடனே டி.வி.யிலே பார்க்கின்றோம்… ஒளிகளைக் காண முடிகின்றது. காற்றிலிருந்து பிரித்து எடுக்கின்றது.

இதே போன்றுதான் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் எப்போது பதிவானதோ இந்த உணர்ச்சிகள் தன்னிச்சையாக இயக்கப்படும் பொழுது நமக்கு அந்த எண்ணங்கள் வருகின்றது.

1.நாம் அமைதியாக இருந்தாலும்… சண்டை போட்ட நினைவெல்லாம் வரும்… பாக்கி நினைவு வராது
2.வெறுப்படைந்தது தவறு செய்தது தவறான நிலையில் எல்லா நினைவையும் இழுத்துக் கொண்டு வரும்.

ஏனென்றால் அது வலு பெற்றது. நல்ல அணுக்களுக்குச் சாப்பாட்டை விடுவதில்லை. நல்ல அணுக்கள் சோர்வடைந்து விடுகின்றது. அப்படிச் சோர்வடைந்த பின் அடுத்து ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும் கூட
1.“என்ன வாழ்க்கை போ…!
2.என்ன செய்து என்ன ஆகப் போகின்றது…?” என்ற சொல் வரும்.

வலு கொண்டு ஒரு நல்ல எண்ணத்தையோ ஒரு காரியத்தையோ பற்றிப் பேசவோ செயல்படுத்தவோ முடியாத நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

காரணம் “அதனுடைய அழுத்தம்: அதிகமாக இருப்பதால் ஆன்மாவில் வந்து இயக்கி விடுகின்றது.

ஆகவே நம் கண் கருவிழி ருக்மணி இது போன்று பதிவாக்கி அத்தகைய உணர்ச்சிகள் வந்தால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை இழுத்து
1.அந்த வேதனைப்பட்ட கோபப்பட்ட உணர்வோடு சேர்த்து இணைத்து… ஒட்டச் செய்ய வேண்டும்.
2.எப்படிப் பதிவானதோ அந்தப் பதிவான இடத்திலேயே கலக்க செய்ய வேண்டும்.

அக்ரிகல்சுரலில் (AGRICULTURE) வித்துக்களை மாற்றுவது போன்று மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் சண்டை போடும் உணர்ச்சியை மாற்றிவிட்டுச் சிந்திக்கும் தன்மையாக வரும்.

செய்து பாருங்கள்.

வடக்குத் திசையிலிருந்து நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

வடக்குத் திசையிலிருந்து நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்
1.அதாவது காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை (ஆகாரமாகப்) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.

இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.

“விசுவாத்திர மாமகரிஷிக்கு”
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

இன்றைய செயல்… “நாளைய சரீரம்…!”

இன்றைய செயல்… “நாளைய சரீரம்…!”

 

உதாரணமாக ஒரு மனிதன் அவன் உடலுடன் இருக்கும் போது “கோபித்தான்…” என்ற நிலையில் அந்தக் கோப உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் சரி… அல்லது அவன் இறந்த பின்னும் அவன் இப்படியெல்லாம் என்னைக் கோபித்தான் என்ற உணர்வை எடுத்துக் கொண்டாலும் சரி…
1.நமக்குள் பதிவான பின் எனக்குத் தீங்கு செய்தான் என்று
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்தத் தீமையே நமக்குள் உருவாகும்.

எப்படி…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் பல நிலைகளைக் கவர்ந்து பல பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஒரு இணைப்புப் பாலமாகி ஒன்றாக இணைத்துப் புதுப் புது அணுக்களை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இதனின்று வெளிப்படுவதைச் சூரியன் கவர்ந்து தனக்குள் உணவாக எடுக்கின்றது.

அதே போல் தான் நாம் உற்றுப் பார்த்தோ அல்லது செவி வழி கேட்டோ நுகரும் உணர்வுகள் சுவாசத்தின் வழி கூடி உயிரில் பட்டு உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது,

இரத்தத்திலிருந்து அது ஊடுருவி எல்லாப் பாகங்களில் செல்வதற்கு முன்
1.எதெனதன் உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டதோ அத்தகைய அணுக்களாகி அதனின் மலமாகி
2.உணர்ச்சிக்கொப்ப நம் உடலில் உறுப்புகளில் ரூபங்கள் மாறுகின்றது… அந்த உறுப்புகளில் சத்துகள் மாறுகின்றது.

மாடு ஆடு நாய் நரி புலி குருவி மைனா காக்காய் போன்ற உயிரினங்களோ அல்லது மற்ற பட்சிகளானாலும் அவைகள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப நுரையீரல் மண்ணீரல் கல்லீரல் போன்ற (அதனதன் சத்துக்கொப்ப) உறுப்புகளாகி அதன் உணர்வின் தன்மை இரத்தங்களாகி உணர்வின் தன்மை உயிரிலே மோதி உணர்ச்சிக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்களாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் பிரபஞ்சத்தில் உள்ள நவக்கோள்களின் வளர்ச்சியும்.

நம் உயிர் இந்த உடலுக்குச் சூரியனாக ஆனாலும்
1.நுகர்ந்த உணர்ச்சிகளை எல்லாம் கலக்கும்… இணைக்கும்… எல்லாவற்றிற்கும் பாலமாக அமைகின்றது
2.நமது உயிரே குருவாக இருக்கின்றது

இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கினாலும் இந்தp பிரபஞ்சத்திற்குள் மற்றதை இணைக்கும் பாலமாக அது (சூரியன்) குருவாக அமைகின்றது.

இப்படிக் கலந்து வரும் உணர்வின் சத்தைச் சூரியன் அருகில் இருக்கக்கூடிய புதன் கோள் பல விதமான உணர்வின் தன்மை கலந்து கலந்து… கலவைகளை மாற்றி உலோகத்தன்மைகளாக அது வெளிப்படுத்துகின்றது

சூரியனிலிருந்து வரும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலைகள் இதிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பிரபஞ்சத்தில் மீண்டும் வீசினாலும் மற்றதுடன் கலந்து சூரியன் தன் உணவாக எடுத்துக் கொள்கின்றது

இதைப் போன்று தான்
1.நம் நுகர்ந்த உணர்ச்சிகளின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து மற்றதை வளர்த்தாலும்
2.நரம்பு மண்டலங்களில் ஆசிட் தன்மையாகவும் வாயுத் தன்மையாகவும் உருவாக்கி
3.சுருங்க… இழுக்க… அந்த உணர்வின் தன்மைக்கொப்ப இயக்கச் சக்தியும்
4.இப்படி உருமாற்றி வரும்… இவைகளை எல்லாம் கலந்து வரும் உணர்வின் சத்தை நரம்பு மண்டலங்களில் வடித்து
5.நமது உயிருக்கும் சிறுமூளை பாகத்திற்கும் இந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது அது இயக்கமாகி… இணைத்து…
6.இந்த உடலில் உருவாக்கும் கருத்தன்மையாகி… அந்தக் கருத்தன்மையில் அதிலே சேர்க்கப்படும் தன்மைகள் எதுவோ
7.அதிலே நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் நாம் பிறிதொரு உடலின் தன்மை பெற்றாலும்
8.இதன் ஈர்ப்பு மண்டலத்திற்கு அழைத்துச் சென்று (ஒரு எறும்பை நசுக்கினாலும் இந்திரீக மண்டலம் என்று ஒன்று உண்டு)
9.அதன் உணர்வுக்குள் இழுத்துச் சென்று அதன் உணர்வின் கலவைக்குள் கொண்டு
10.இந்த உடலில் பெற்ற உணர்வைக் கலவையாக்கி அதற்குத்தக்க உடலை மாற்றும் தன்மை பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

 

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.

1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.முன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.

(வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பலவிதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்)

அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது. அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.

அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது. (இந்தத் தொடர் காலம் காலமாக நடக்கின்றது)

நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.

அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூலம் சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.

நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.

சரீரம் என்ற குகைக்குள்… உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம் சக்தியாகச் செயல் கொள்வது என்பது சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.

அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.

பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…?

சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.

ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும் பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும் பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”

தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.

அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.

இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் (நிறம் குணம் அமிலம்) நறுமணமாக அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.