குரு இல்லாதபடி “எதையுமே” செயல்படுத்த முடியாது…!

குரு இல்லாதபடி “எதையுமே” செயல்படுத்த முடியாது…!

 

நல்லதைச் செயல்படுத்தும் பொழுது சிலருக்குப் பாருங்கள். உணர்வின் இயக்கங்கள் மாறும்.

கணவர் பணத்தை மற்றவருக்குக் கொடுத்து உதவி செய்கிறார் என்றால் “இப்படியே செய்து கொண்டிருக்கின்றார்…” என்ற வெறுப்பின் தன்மை மனைவிக்கு வரும்.

யாருக்காவது அவர் காசு கொடுக்கப் போனால்… கொடுப்பதற்கு முன் அல்லது அவர்கள் உதவி கேட்டு வருவதற்கு முன் தடுத்து நிறுத்தும் நிலை வருகின்றது.

இல்லை என்றால் “இப்படியே இருக்கின்றது…” என்று வீட்டிற்குள் சண்டை வரும். அதனால் வெறுப்பின் தன்மை வரும்.
1.பிறருக்கு நன்மை செய்ய மாட்டோம்
2.அவர்களை வாடச் செய்து துன்புறுத்தும் தன்மை தான் வரும்… அதை ரசிக்கும் தன்மை வரும்.
3.வீட்டிலே செல்வம் இருக்கும்… கஷ்டம் என்று ஒருவர் வந்தாலும் அவருக்கு உதவி செய்வதைத் தடுக்கும் நிலை வரும்.
4.ஒரு நல்ல காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றாலும் அது விடாது.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அறிவதற்குத் தான் குணங்களைப் பற்றி ஞானிகள் காவியங்களாகப் படைத்து
1.உயிரின் இயக்கத்தையும்
2.உணர்வின் இயக்கத்தையும்
3.உடலின் செயல்களையும் பல நிலைகளிலும் உணர்த்தி உள்ளார்கள்.

ஏனென்றால் மனிதனாக வருவதற்கு முன் எத்தனையோ சரீரங்களில் பல விதமான தாவர இனங்களைப் உணவாக உட்கொண்டு பழகியது. அதனின் தன்மை உடலிலே அணுக்களாக உருவாகி… அந்த அணுக்களுக்குள் ஒன்றை ஒன்று கொன்று தின்று… மற்றதை வென்றிடும் உணர்வின் உணர்ச்சிகள் மாறி அதிலே வளர்ச்சி பெற்றவன் தான் மனிதன்.

இதைப் போன்ற இருள்களை நீக்கி அருளைப் பெறும் உணர்வு பெற்றவன் தான் அகஸ்தியன். தாய் கருவிலேயே அந்தச் சக்திகளை அவன் பெற்றான்.

அகஸ்தியன் வெளிப்படுத்திய நஞ்சை வென்றிடும் அத்தகைய சக்திகள் “இந்தக் காற்றிலே தான் இருக்கின்றது…” என்று குருநாதர் அதைத் தெரியும்படி செய்தார். அதை நான் பெற்றேன்.

அதன் வழியில் என்னைத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக அமைத்தார் அதே போன்று உங்களையும் அமைக்க வேண்டும் என்று தான் செயல்படுத்துகின்றோம்.

இன்ஜினியரிங்… சம்பந்தமான புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் ஒரு கருவியை உருவாக்க அதிலே எந்தெந்த உலோகத்தைச் சேர்க்க வேண்டும்…? என்ற உணர்வின் தன்மை தெரியவில்லை என்றால் என்ன ஆகும்…?
1.வாத்தியார் சொன்னால்தான் தெரியும்
2.புத்தகத்தைப் படித்து விட்டேன் என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியுமா…?
3.தெரிந்து கொண்டாலும்… “அதை இணைக்கும் தன்மை பெற்றால் தான்…” அது செயல்படுத்த முடியும்.

சில பேர் கடைகளிலே சென்று இது போன்ற புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொள்வார்கள். இதனுடன் இதைச் சேர்த்தால் “சோப்பு செய்யலாம்… தைலம் செய்யலாம்…” என்று அதிலே போட்டிருக்கும்.

அதைப் படித்துவிட்டுக் காசைச் செலவழித்து எந்தப் பருவத்தில் எதை இணைக்க வேண்டும்…?” என்று தெரியாதபடி சோப்பு வரவில்லை… தைலம் வரவில்லை… எல்லாம் நஷ்டம் ஆகிவிட்டது…! என்று இருப்பார்கள்.

ஆக… நஷ்டமான பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும். புத்தகத்தைப் பார்த்தேன்… படித்தேன்… இப்படி எல்லாம் சேர்த்தேன்… என்று செய்ய முற்பட்டாலும் சரக்குகளைக் கலக்கும் தன்மை வரும் போது “தடுமாற்றம் தான் வரும்…”

ஏனென்றால்…
1.குரு என்ற உணர்வு கொண்டு அதை இணைத்து
2.எந்தப் பருவத்தில் எதைச் சேர்த்தால் உருப்பெறும் என்ற உணர்வுகள் இல்லை என்றால்
3.அதைச் சீராகச் செயல்படுத்த முடியாது.

புத்தகங்களை வெளியிட்டிருப்பார்கள். அதைப் படித்துவிட்டு “நான் எல்லாம் தெரிந்து கொண்டேன்…” என்று அடுத்தவர்களுக்கு சொல்வார்கள். இவனுக்கும் செய்யத் தெரியாது. ஆனால் அடுத்தவனிடம் சொல்லி இவன் வார்த்தையை அவன் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

இப்படி நிறையப் பேர் பொருளையும் பணத்தையும் இழந்தவர்கள் உள்ளார்கள்.
1.குரு இல்லாதபடி… வாத்தியார் இல்லாதபடி… தெரியாதபடி செய்தவர்கள் எல்லாம்
2.இருக்கிற காசை எல்லாம் விட்டுவிட்டுத் திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்

உதாரணமாக… இரசமணி செய்யலாம் என்று ஒருவன் சொன்னால் அதைக் கேட்ட பின் அதிலே இது இருக்கின்றது… அது இருக்கிறது… என்று சொத்தை எல்லாம் இழந்து ரோட்டில் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.

இரசமணி வைத்திருந்தால் அப்படிப் பேசும் இப்படிப் பேசும் இன்னன்ன நிலைகள் உண்டு என்று கதையைப் பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் முழுமையாகத் தெரியுமா…? என்றால் தெரியாது.

பல உணர்வுகள் சேர்த்து உணர்வின் தன்மை ஒன்றாகும் போது இரசமணி. அதாவது
உயிருடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை ரசமாக்கி
2.உயிர் எப்படி மின்னுகின்றதோ உணர்வின் தன்மைகளை ஒளியாக்குவது தான் இரசமணி.

ஆகவே மனிதனின் தன்மை உயர்ந்த நிலைகள் கொண்டு… இணைந்து வாழும் தன்மையாக இரசமணியாக மாற்றுதல் வேண்டும். ஞானிகள் இதைத் தான் சொல்லி உள்ளார்கள். குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டினார்.

“வான இயல் சூத்திரதாரி…!”

“வான இயல் சூத்திரதாரி…!”

 

வான இயலின் தத்துவத்தை “முத்தொழில்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) என்ற வகையில் அவர் அறிந்து கொண்டவர் வராகிமிகிரர். பேரண்டங்களின் சூட்சமச் செயல் நிகழ்வாக ஒவ்வொரு சூரியக் குடும்பங்களின் வளர்ச்சியின் ஆக்கத்தையும் அவர் உணர்ந்தார்.

ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற குடும்பத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வளர்ச்சியின் சக்திப் பிரவாகமாகச் சுழன்று கொண்டிருப்பது அனைத்தையும் தன் உயிராத்ம வலு கொண்டு ஞானதிருஷ்டி கொண்டு அறிந்து உணர்ந்து தெளிந்தவர் வராகிமிகி மகரிஷி…!

நம் சூரியக் குடும்பத்தில் பூமித் தாய் ஈர்த்து அளித்திடும் சக்தியின் தொடருக்கு தன் வினையின் செயலுக்கு நாற்பத்தி எட்டு கோளங்களே முக்கிய காரணமாகின்றது.

அந்த ஆற்றல்களை ஒவ்வொரு உயிராத்மாவும் ஜீவ சரீரம் கொண்டு வலு பெற்று வளர்த்திடவும் நல் வினையின் ஆக்கம் அறிந்து தெளிவு பெற்றிடவும் “மண்டலம்…” என்ற வகைப்படுத்திக் கர்ம வினைச் செயலாகக் காட்டினார்.

1.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நவக் கோள்களும்
2.வியாழனைப் பிரகாசப்படுத்திடும் எட்டு உப சந்திரக் கோள்களும்
3.புதனைச் சுற்றி ஓடும் ஐந்து சந்திரக் கோள்களில் நான்கு ஜீவன் கோள்களும்
4.பூமித் தாய் ஈர்ப்பின் தொடர்பு கொண்ட மாமகரிஷிகளின் அருள் பார்வை கொண்ட இருபத்தியேழு ஜீவ நட்சத்திரத் தொகுதியும்
5.நாள் கணக்கு வைத்து 48 என்ற வகையே மண்டலம் என்ற வகைப்படுத்தி
6.ஒவ்வொரு நாளும் பரவெளியில் நடக்கும் கோடிக்கணக்கான சூட்சமச் செயல்களில்
7.நிறம் மணம் குணம் என்ற அமிலக் கூறுகள் நீர் காந்த சக்தியுடன் கலந்து சிறப்புறும் அந்த விளையாடல் செயலை
8.யாரும் எடுத்துரைக்க இயலுமோ..?

பொதுவான பால்வெளி மண்டலமாகிய சூட்சமப் பேரண்டத்திற்குள் இருளினுள் ஊடே உலவி இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் சுற்றிச் சுழன்றோடுகிறது. இதைப் போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் ஆயிரமாகவும் இரண்டாயிரமாகவும் ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் சுழன்று வருகிறது.

அப்படிப்பட்ட சுழல் கதியில் ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற சூரியக் குடும்பங்களைச் சுற்றி வரும் நிலையில் நீர் சக்தியின் தொடர் மூலம் காந்த சக்தியின் ஈர்ப்பால் உள் நிகழ்வுகள் எத்தனையோ நடைபெறுகிறது.

சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்லும் சுழல் ஓட்டக் கதியில் ஒரு சூரியன் மற்ற சூரியனைச் சந்திக்கும் பொழுது அந்தச் சந்திப்பினால் ஒளிக் கதிர்வீச்சு எதிர் மோதல்களும் ஏற்படுகின்றது.

அவ்வாறு நடைபெறும் காலகட்டத்தில் அந்தந்தச் சூரியனைச் சார்ந்த மண்டலங்கள் அந்தக் கதிர்வீச்சின் ஈர்ப்பில் இயற்கையாக ஈர்ப்பின் தொடரில்
1.தனக்குத் தானே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு
2.சுழன்று ஓடிக் கொண்டே இருக்கின்றன.

மூன்று சூரியக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் வால் நட்சத்திரமாக உருவாகின்றது. அதே போல பஞ்சமுக சந்திப்பு…! என்ற வட்டப்பகுதி ஏற்படும் கால நிகழ்வு ஒன்றும் உண்டு.

பஞ்சமுக சந்திப்பின் கதிர்வீச்சு ஏற்படும் கால கட்டத்தில்
1.சக்தி இழந்து வரும் கோளங்கள் அந்த வெப்பக் கதிர்வீச்சில் ஆவியாக மாறுவதும்
2.பிரளயம் ஆகிச் சக்தி குறைவுபட்ட மண்டலங்கள் மீண்டும் தன் சக்தியின் வலுவைக் கூட்டுவதும் போன்ற நிகழ்வுகள்
3.சூரிய மண்டலங்களின் தொடர்பில் நடைபெறும் செயல் வருகின்ற காலத் தொடரில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோளங்களில் சூரியன் முதற் கொண்டு அனைத்துக் கோளங்களும் தங்களைச் சுற்றி வளையமிட்டுக் காத்திடும் தொடர்களும் உண்டு.

இவ்வாறு மனித குல வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான தியான வழித் தொடரைக் காட்டி ஆதி சக்தியுடன் கலந்து வாழும் சூட்சமம் பற்றிக் கூறிய சுத்திரதாரியே வராகமிகி.

அவருடைய அருள் சக்தி பெற்று அனைத்து மண்டலங்களிலும் செயல் கொண்டிடும் பூரணத்துவம் அறிய நாமும் தியானிப்போம்.

உயிரிலே கடைசியில் மிஞ்சும் உணர்வு… எது வலிமையோ அதற்குத் தக்க தான் “அடுத்த நம்முடைய ரூபம் (பிறவி)…”

உயிரிலே கடைசியில் மிஞ்சும் உணர்வு… எது வலிமையோ அதற்குத் தக்க தான் “அடுத்த நம்முடைய ரூபம் (பிறவி)…”

 

துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வரும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் நவக் கோள்களின் உணர்வுகளையும் அவைகளின் செயல் மாற்றத்தையும் அகஸ்தியன் உற்று நோக்கி நுகர்கின்றான்.

தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த உணர்வின் அறிவை இவனால் முழுமையாக அறிய முடிகின்றது.

1.துருவம் கவரும்… துருவத்தின் வழி பூமிக்குள் வரும் உணர்வுகள்
2.எவ்வாறு எங்கே எதன் வழியில் இங்கே உருப் பெறுகின்றது…?
3.கலவையாகி அந்த உணர்ச்சிகள் எப்படி எல்லாம் மாறுகின்றது என்பதை அறிந்தான்.

அந்த எல்லையில் இருந்தே அவன் பிரபஞ்சத்தின் ஆற்றல்களை நுகர்ந்தான். அங்கிருந்து பூமி கவர்வதற்கு முன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டான்

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது எதனின் ஒளிக் கற்றைகள் மாறுகின்றதோ அந்த ஒளிக்கற்றைகளையும் மின்கதிர்களையும் நுகர்ந்து தனக்குள் வளர்த்தவன் தான் அந்த அகஸ்தியன்.

துருவத்தின் நிலைகளில் எதை எதை எல்லாம் நுகர்ந்தானோ இன்று அதே எல்லையில் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கின்றான். பூமிக்குள் வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.

பாம்பு தன் உடலுக்குள் விஷமான உணர்வுகளைத் தான் வளர்த்து வைத்துள்ளது. அது தன் உணவுக்காக மற்ற உயிரினங்களின் மீது விஷத்தைப் பாய்ச்சி அதை மயங்கச் செய்து விழுங்குகிறது. விழுங்கும் போது தனக்கு இணையாக அது கரைக்கச் செய்யும் சக்தியும் பெறுகின்றது.

அதே போல் மாடு ஆடு இவையெல்லாம் இயற்கையில் விளைந்த தாவர இனங்களை உட்கொண்டாலும் அதிலுள்ள விஷத் தன்மையைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு… நல்லவைகளை மலமாக மாற்றுகின்றது.

விஷத்தின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி இந்த உணர்வின் தன்மைகொப்ப வரப்படும் பொழுது ஒரு கடினமான தட்டையாக இருந்தாலும் பிஸ்கட் போன்று அது எளிதில் கரைத்து உணவாக அதை உட்கொள்கின்றது.

பாம்பினமோ மற்றதை விழுங்கும் போதே உடனடியாக நீராக மாற்றும் தன்மை பெற்றது.
1.ஒவ்வொரு உடல்களிலும் பல பல விஷத் தன்மைகள் இருந்தாலும்
2.பாம்பினங்கள் முழுமையாக அது விழுங்கப்படும் பொழுது அதனின் உணர்வின் தன்மை பட்டபின்
3.அது சிறுகச் சிறுகக் கரைந்து நீராக மாறி… அதனுடைய உணவாக மாறி இரத்தங்களாக மாறி
4.இந்த உணர்வின் தன்மை ஒன்றாகித் தன் கருத்தன்மையாக… (தன் இனமாக வளரும்)
5.மற்ற உயிரினங்களின் தன்மையை இதன் உணர்வுபடி அதைக் கவர்ந்து கொள்கின்றது.

ஆனால் மனிதனை இந்தப் பாம்பு தீண்டிவிட்டால் உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது. மனிதன் இறந்தால் இந்த விஷத்தின் உணர்வுகள் சேர்த்து உயிருடன் ஒன்றிச் செல்லப்படும் பொழுது எங்கே… எப்படிச் செல்கிறது…?

பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் தூசுகள் மோதும் போது வெளிப்படும் மின்னல்களிலிருந்து “வெள்ளிக் கோள் அந்த ஒளிக்கற்றைகளை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ… அதில் வரும் விஷத் தன்மைகளைக் கேதுக் கோள் எப்படி எடுத்துக் கொள்கின்றதோ…” அதைப் போல்
1.பாம்பால் தீண்டப்பட்ட மனித ஆன்மா
2.தரையில் ஊர்ந்து செல்லும் உணர்வுகள் (பாம்பு) அதனுடைய காந்தம் – மேக்னட் அதற்குள் ஈர்க்கப்பட்டு
3.இதை ஒத்த உயிரினமாக இருந்தால் தனக்குள் அதைக் கவர்ந்து… தன் உடலில் சேர்த்துக் கருவாக்கி
4.மனிதனைப் பாம்பினமாக மாற்றிவிடுகிறது.

ஏனென்றால் உயிரின் உணர்வுகள் எதைக் கவர்ந்ததோ… அதன் வலிமை கொண்டு மற்ற… அதற்கொத்த இனத்தின் ஈர்ப்புக்குள் சென்று… அதன் கருத்தன்மை அடையும் தன்மை பெறுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

ஏனென்றல் இயற்கை எப்படி இயக்குகின்றது…? என்பதை அகஸ்தியன் கண்டவன். அதைத்தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்

தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்

 

“மதம்…” என்ற சொல்லின் முந்தைய நிலை மனித இனம் வாழ ஏற்படுத்தப்பட்ட “சமூக அமைப்பு” என்ற உலக வாழ்க்கை நிலை. ஆனால் இன்றோ மதம் என்ற சமூக அமைப்பே… “கடவுள்” என்ற பெயரால் ஒன்றுக்கொன்று ஏற்காது போர் முறையாகி ஆகிவிட்டது.

1.மனிதர்கள் உலகோதய ஆசைப் பிடிப்பில் சிக்குண்டு
2.இந்த உடல் வாழ்க்கையையே பிரதானமாகக் கருதி
3.ஆன்மாவை உயர்த்தும் அறிவின் ஆற்றல் குறைவுபட்டு
4.மனிதனின் எண்ணமே மீளாப் பிடிக்குள் ஆட்பட்டு
5.மீளும் வழி அறியும் செயலையே அறிய முடியாத காலங்களில்
6.மனித குலம் காக்கப்பட அவதார புருஷர்கள் அவதரித்த பூமி தான் நாம் வாழும் இந்தப் பூமி.

அன்று காட்டப்பட்ட நெறி முறைகளில் மனிதன் தன்னிலை உயர்த்த சுட்டிக் காட்டப்பட்ட அறிவின் ஆற்றல் அந்த மகான்களுக்குப் பின் வழி வந்த சீடர்களால் மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு விட்டார்கள்.

1.நாபிமனு முதல் வர்த்தமான மகாவீரர் வரை என்று சொல்லும் வரைமுறைகள் (பாரம்பரியம்) எல்லாம் எதற்கப்பா..?
2.வரையறையின்றிக் காட்டுவதே மதங்களின் பிடியில் அகப்படச் செய்வதற்குத்தானா…?
3.அந்த வரைமுறையை இன்று காட்டுபவன் அன்றைய நிலையைச் சிந்தித்தானா..?
மனித வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று சிந்தித்த நாபிமனு அதைச் செயல்படுத்த முனைந்து
1.ஞானப் பாதையை காட்டிய ரிஷப தேவர் (ஆதிநாதர்) வழியில் வந்த எத்தனையோ மகான்கள்
2.(தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்கள்)
3.ஜீவ காருண்யம் நல்லொழுக்கம் நற்செயல் என்று போதித்த வழி முறைகள் எல்லாம் “மதம் கொண்ட…!” மதத்தினை வளர்க்கத்தானா…?

“ஜீன தீர்த்தங்கரர்கள் இத்தனை பேர் தான்…!” என்ற பட்டியல் கொடுத்து விட்டால் அதைக் கண்டு என்ன செய்யப் போகிறான்..? மீண்டும் மதத்தின் பிடியில் அகப்பட்டு தத்தளிக்கப் போகின்றான்.

வர்த்தமானர் பெற்றதும் ஓர் நல் நிலை தான்…! அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கடமை.. விதி… சரீரம் தொட்டுச் செயல்படுத்த முனையும் வாய்ப்பு இன்றைய பரபரப்பான உலகியல் வாழ்க்கை நெறியில் இல்லையப்பா…!

1.சன்னியாசிக்கு என்று ஒரு வழி முறையும்
2.சம்சாரிக்கு என்று ஒரு வழி முறையும் அன்று காட்டியவற்றில்
3.உணர்ந்து கொண்டார்களா அனைத்தையும்…? அவைகளிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

வர்த்தமானன் கடவுளையா சொன்னான்..? இல்லயே…! மதம் என்ற பெயர்படுத்த மனித ஆத்மாவின் வளர்ச்சியை அல்லவோ கூறினான்.

நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியானத்தின் வழி முறையில் காக்கப்பட வேண்டியது ஆன்மா தான் என்று கூறிட்டாலும் காக்கப்பட வேண்டியது சரீரமும் தான்,

அன்று சமுதாய அமைப்பில் மனித இனத்தின் எண்ணிக்கை குறைவு பட்ட காலச் சூழலில் மகான்கள் நடைமுறைக்குக் காட்டிய செயல்களைச் செயல்முறைக்குக் கொண்டு வரும் வழி வகைகள் இருந்தன.

ஆனால் இந்தக் கலியில் உடலை வருத்திடும் செயல்கள் தேவை தானா…?

உன் கண்ணிலிருந்து நீர் வழிகின்றது. மனம் வேதனைச் சூழலில் ஆட்படுகின்றது, மனம் சங்கட அலைகளில் சிக்குண்டிருக்கும் பொழுது ஆத்மா வேதனையுறாவிட்டால் உடல் வருந்திட நீர் வரக் காரணம் என்ன..?

துக்கம் சந்தோஷம் அனைத்துமே ஆன்மாவில் பதிவு நிலைகள் தான்.

1.மனித மன நடை முறைச் செயலுக்கு
2.நல் வாழ்வு நற்கதிக்கு இதை விட வேறு ஆக்கமில்லை என்ற நிலையில்
3.இந்தத் தியான வழி கொண்டு உண்மையை உன்னுள்ளே ஊன்றிப் பார்.

வாழ்க்கையில் நேரும் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதற்காகப் பயன்படுத்தப்படும் பொழுது அதிலே நிறைவு காணும் மனம் பெற்று விட்டால் தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்.

“அகஸ்தியனுடன் ஒன்றி” அவன் நுகர்ந்த உணர்வுகளை எடுக்கப் பழக வேண்டும்

“அகஸ்தியனுடன் ஒன்றி” அவன் நுகர்ந்த உணர்வுகளை எடுக்கப் பழக வேண்டும்

 

நம் பூமியில் உருப்பெற்ற நிலைகளில் அகஸ்தியன் முதல் நிலைகளில் அணுவின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான். உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் தொடர்ந்து பதிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
1.”அவன் எப்படிப் பெற்றானோ…!” என்ற சந்தேக உணர்வு கொண்டு எண்ணாது
2.அவனுடன் ஒன்றி அவன் நுகர்ந்த உணர்வுகளை எடுக்கப் பழக வேண்டும்.

அகண்ட அண்டத்தை அறிந்துணர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது… பதிந்த உணர்வுகளை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் வாழ்க்கையில் வரும் பேரிருளை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றிட முடியும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் இணைந்திட வேண்டும்.
1.அவன் பெற்ற அருள் சக்திகளை எல்லாம் நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவருக்கெல்லாம் அந்த வித்தினைப் பரப்ப வேண்டும்
3.நாம் பார்க்கும் நண்பர்களிடத்திலும் இந்த உணர்வுகளைப் பரப்புதல் வேண்டும்.

அப்படிப் பரவச் செய்யப்படும் பொழுது இருளை நீக்கிடும் சக்தியும் சிந்திக்கும் ஆற்றலையும் அவர்களும் பெறுகின்றார்கள். அவர்களிடத்தில் விளைந்து அந்த உணர்வுகள் வெளி வரப்படும் பொழுது இந்தப் பரமாத்மாவிலே அதிகமாகப் பெருகுகிறது.

அதன் மூலம் அந்த அருள் உணர்வின் தன்மையை அனைவரும் எளிதில் பெற்று இருளை நீக்கும் வலிமையும் பெறுகின்றோம்.

இதற்கு முன் யாம் (ஞானகுரு) உபதேசித்த நிலைகள் எல்லாம் வேறு. இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் எல்லாம் உங்களை நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைக்கச் செய்யும் நிலையே…!

ஆயுள் மெம்பராக இருக்கும் நீங்கள் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தால் தான் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆனால் வெளியிலே சொன்னால் தவறின் உணர்வுகளுக்கே வரும்… மந்திரவாதிகளுக்கு உபயோகமாக இருக்கும். இந்தப் பேரைச் சொல்லி ஏமாற்றுவதற்கு உபயோகமாக… ஒரு கருவியாக மாறும்.
1.உண்மையின் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோர்கள் பலர் இருந்தாலும்
2.தவறு செய்வோரின்… அந்த தவறான உணர்வுகள் கலக்கப்படும் போது
3.உண்மையின் வழிகளில் செல்வோர் உணர்வுகளுக்குள் அவரின் விஷத் தன்மை படர்ந்து… சிந்தனை குறைந்து…
4.இப்படிச் செய்கின்றார்களே…! என்று உணர்வுகள் மாறப்படும் பொழுது போகும் பாதைகளுக்குத் தடையாக வருகிறது.

அப்படி ஆகாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

இன்று “எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்..” என்ற நிலைகள் கொண்டு எதனுடைய அழுத்தம் இருக்கின்றதோ அதனுடன் ஈர்க்கப்பட்டு இந்த உணர்வின் தன்மையை நமக்கு அறிவிக்கின்றது மனிதனால் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரானிக் கருவிகள்.

“நம் உயிரும் எலக்ட்ரிக் தான்…” நாம் நுகரும் உணர்வின் தன்மையை உயிர் எலக்ட்ரானிக்காக நமக்குள் இயக்கும் பொழுது
1.எதனுடைய அழுத்தத்தில்
2.எதனுடைய உணர்வின் தன்மை உள் செலுத்துகின்றமோ
3.அந்த உணர்வின் தன்மை… நம்மையும் அதன் வழிக்கே இயக்குகின்றது.

ஆக இயந்திரக் கருவிகள் போன்று தான் நமது உடலும் உணர்வுகளும் இயக்குகின்றது.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உயர் அழுத்தத்தின் உணர்வுகளைக் கொண்டு வரும் பொழுது
2.உங்களுக்குள் இருக்கும் தீமை என்ற உணர்வுகளை அது அழுத்தி
3.அருள் உணர்வின் ஞானத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

சகலத்திற்குமே தீர்வுண்டு

சகலத்திற்குமே தீர்வுண்டு

 

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அழித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

எல்லாவற்றையும் நான் வெட்ட வெளிச்சமாகச் (PUBLIC) சொல்ல முடியாது

எல்லாவற்றையும் நான் வெட்ட வெளிச்சமாகச் (PUBLIC) சொல்ல முடியாது

 

இந்தப் பிரபஞ்சமே அழியும் தருணத்தில் இருக்கின்றது. ஆனால் உயிரணு எப்பொழுதும் அழிவதில்லை… அதாவது பிரபஞ்சத்தில் உயிரணுவாகத் தோன்றி விட்டால் அது என்றுமே அழிவதில்லை.

உயிரணுவாக உதித்த பின் புழுவிலிருந்து மனிதனாக வரும் பொழுது எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் வந்திருக்கின்றோம். இருந்தாலும்…
1.இந்த உடலை விட்டுச் சென்றால் “கடைசி நிமிடத்தில்” எந்த வேதனை பெற்றதோ
2.உயிரிலே இந்த வேதனையின் துடிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
3.நரகலோகத்தை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

உடலில் இருக்கும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதை மாற்றலாம். உடல் இல்லை என்றால் மாற்ற முடியாது. இதை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கு
1.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது
2.அந்தச் சக்தியை முதலில் நீ பெறுகின்றாய்.

இதைப் போல உன்னைச் சார்ந்திருக்கும்… குரு ஸ்தானத்தில் சேரக் கூடியவர்களும் இந்த உணர்வுகளைப் பெற்றார்கள் என்றால் அவர்களும் உன்னைப் போன்று வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

ஆகையினால் ஆயுள் கால மெம்பராக அங்கம் வகிக்கும் அனைவரும் இதைப் பதிவாக்கி இதை நினைவாக்கிக் கொண்டு வருவது நல்லது.

உபதேசத்தின் உணர்வுகளை எத்தனையோ நூல்கள் மூலம் வெளியிட்டிருந்தாலும் அதிலே முழுமையாகக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த உயர்ந்த சக்தி ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படுகின்றது. இந்தப் பதிவின் நினைவு கொண்டு உண்மைகளை நீங்கள் பிரித்து எடுத்து உங்கள் வாழ்க்கையில் நல் வாழ்க்கை வாழ்ந்திட உதவும்.

“எல்லாவற்றையும் நான் வெட்ட வெளிச்சமாகச் (PUBLIC) சொல்ல முடியாது…”
பார்க்கிறோம் அல்லவா. எத்தனையோ பேர் வருகிறார்கள். வந்து எத்தனையோ நிலைகளில் அவரவர்கள் சௌகரியத்திற்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

ஆகவே… உண்மையின் இயக்கத்தை உணர்ந்து
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தோம் என்றால்
2.அவர்களும் வாழ்வார்கள்… அவர்கள் உணர்வு அவர்கள் அருகில் உள்ளோருக்குப் பட்டு அவர்கள் இருளைப் போக்கவும் செய்வார்கள்.
3.அதனால் இந்த உலகிற்கும் ஒரு நல்ல பயன் உண்டு என்பதற்குத் தான் இதைத் தனித்து
4.தனிப்பட்ட முறையில் ஆயுள் கால மெம்பர்களுக்குப் பதிவாக்குகின்றேன்.

இந்த உலகமே இருள் சூழும் நேரத்தில்… பிரபஞ்சமே சிதறுண்டு போகும் தருணத்தில்… ஒவ்வொரு நொடியிலும் அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து அதைப் பிளந்து விட்டு நமது பயணம் பிறவில்லாப் பயணமாக அந்த சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்…!

மனித உடலே ஒரு காண்டீபம்… அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்)

மனித உடலே ஒரு காண்டீபம்… அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்)

 

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.

ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.

இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!

பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.

தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான் மாமகரிஷியாக நம்மை ஆக்கும் என்ற உண்மையை உணர்ந்தார்.

அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்.

அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).

1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.

(நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பி கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது அதைக் காக்காது மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே இருளுக்குள் சென்று விடுகின்றோம்)

உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டும் என்றார்.

1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே சரணம் என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.

ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.

அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.

தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”

உயிருடன் ஒன்றி வாழ வேண்டும் என்று பிரியப்பட்டவர்களுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்

உயிருடன் ஒன்றி வாழ வேண்டும் என்று பிரியப்பட்டவர்களுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்

 

வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்தில் உயிரணு உருவாவதற்குக் குருவாக இருக்கின்றது. மனிதனாக வளர்ப்பதற்கும் உயிரணுக்களை வளர்ப்பதற்கும் வியாழன் கோளே காரணமாக இருக்கின்றது.

அதனால் தான் வியாழன் கோளைக் “குரு” என்று சொல்வது. இதைப் போல்
1.27 நட்சத்திரங்களின் உணர்வுகளில் மனிதனான பின் ஒருக்கிணைந்து மனிதனை உருவாக்குகின்றது… அது தான் நவமி.
2.மனிதன் முழுமையாக ஆவதற்கு இந்த 27 நட்சத்திரமே மூல காரணமாக இருக்கின்றது.

எத்தனையோ செடி கொடிகளில் அதைச் சேர்த்தாலும் அது சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சேர்த்து இன்று சூரியன் எப்படி ஒளிக்கதிராக ஆனதோ அதைப் போல் மனிதனின் ஆறாவது அறிவு… “ஒளியாகத் தெளிந்திடும் இந்த உணர்வுகள்” நமக்குள் விளைகின்றது.

சூரியன் பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்துவிட்டு ஆந்த அணுக்கதிரியக்கங்கள் ஒளியாக மாறி அது எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் அறிவாகவே அது இயக்குகிறது “இயக்க அணுக்களாக…”

இதைப் போல் தான் மனிதனின் நிலைகளில் ஆறாவது அறிவு (ஒளியின் அறிவாக) கார்த்திகேயா என்று வளர்ந்தது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி இதை எல்லாம் தெரியச் செய்தாரோ இதைப் போல ஆயுள்கால மெம்பராக இருக்கப்படும் பொழுது
1.நாம் எப்படி வளர்ந்தோம்… இனி எப்படிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…? என்று
2.இதைத் தெரிந்து கொண்டால் நாம் எளிதில் அந்தச் சக்திகளைப் பெறலாம்.
3.இதை வெளியிலே அதிகமாகச் சொல்ல முடியாது… ஆயுள் மெம்பர்களுக்குத் தான் இந்த உண்மையைச் சொல்ல முடியும்.

இதைப் பதிவாக்கி விட்டால் உங்கள் நினைவு சப்தரிஷி மண்டலத்தின் பால் சென்று இந்த வாழ்க்கையில் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவதற்கு உதவும். அதற்குத் தான் உங்களை ஆயுள் கால மெம்பராக ஆக்கியது.

என்றுமே கார்த்திகேயா என்று உங்கள் உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
1.அந்தத் துருவ நட்சத்திரம் எப்படி உருவானதோ
2.அதன் உணர்வை எடுத்து ஒளி உடலாகப் பெற முடியும்.

குருநாதர் காடு மேடல்லாம் அலையச் செய்தார். அவர் சொன்ன நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்ட பின் தான் உங்களுக்கும் இதைப் போதிப்பது.

குரு எனக்கு எப்படிக் காட்டினாரோ அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று தான் மெம்பர்களுக்கு “உயிருடன் ஒன்றி என்றும் வாழ வேண்டும் என்று பிரியப்பட்டவர்களுக்கு…” இதை நான் சொல்வது.

பிரியம் இல்லாதவர்களுக்குச் சொன்னால் இந்த உடலுக்கு என்ன வேண்டும்…? அது வேண்டும்… இது வேண்டும்… என்று தான் போவார்கள். யாம் சொல்வதை மறந்து விடுவார்கள்.

ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும் இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும்.

இந்தச் சூரியன் அழியலாம்… பிரபஞ்சம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரம் அழியாது அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.

அதனுடன் நாம் ஐக்கியமாக வேண்டும்…!

சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்… ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும்

சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்… ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும்

 

ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் காரண காரியங்கள் செயலாகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்கு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திகள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்…
1.அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து
2.அதன் பின்னணியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதிஅற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகாமகான்கள் தந்தனரோ அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி… வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு… பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் நடராஜரின் விந்தையே…!

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெற வேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெற வேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும் சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்). இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.