நம் உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைக்க வேண்டும்

நம் உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைக்க வேண்டும்

 

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து… சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து… அந்த எண்ண வழித் தொடரில்
1.பசுக்களுக்காக வசுவா…?
2.வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான்
3.“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.

1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்று விட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெற வேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.

உயர்ந்த எண்ணங்களின் வழியில்… தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும்
1.உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தியால்
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன் கருப் பொருள் உணர்ந்து கொள்வதே நல்லது.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

 

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்களைச் சூரியன் தன் உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் மோதி அதில் உள்ள விஷத்தைப் பிரித்து விட்டு… வெப்பம் காந்தம் என்று உருவாக்குகிறது.

இருந்தாலும் பலவீனமடைந்த விஷத்தைக் காந்தம் மீண்டும் கவர்ந்து கொள்கிறது.
1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் கவரும் சக்தி (அரவணைக்கும் சக்தி)
3.விஷம் இயக்கும் சக்தி.

இப்படி மூன்று நிலைகளில் அது இயக்க அணுவாக உருவாகிறது.

ரேடியோ டி.வி. எந்தெந்த அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றோமோ அதை இந்தக் காந்தம் கவர்ந்து வைத்துக் கொண்டால் அந்தச் சத்தினை வெளிப்படுத்தும் சக்தி விஷத்திற்கு உண்டு.

இதே போல் அந்த இயக்க அணு ஒரு மனிதனின் உணர்வைக் கவர்ந்து கொண்டால்…
1.உதாரணமாக கோபத்தை அந்தக் காந்தம் கவர்ந்து தனக்குள் இணைத்துக் கொண்டால்…
2.மற்ற மனிதர்கள் அதை நுகர்ந்தபின் “கோபத்தை இயக்கும் அணுவாக” ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதை நாம் நுகர்ந்து உயிரிலே பட்டால் கோப உணர்ச்சிகளைத் தூண்டி அந்தக் கோபமான உணர்வின் சத்து உடல் முழுவதற்கும் பரவி எண்ணம் சொல் செயல் என்று இயக்குகிறது.

இதுவும் சூரியனிலிருந்து வந்தது தான்.

உயிரின் இயக்கம் ஈசன்… அதனின் துடிப்பில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் இலட்சுமி…!

கோபமான உணர்வை அந்த மனிதன் வெளிப்படுத்தும் போது இந்த இயக்க அணு அந்தக் கார உணர்ச்சிகளை நுகர்ந்து எடுத்துக் கொண்ட பின் அதை நாம் நுகர்ந்தால் உயிரிலே பட்டு அதே கோபத்தை இயக்கும்… அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை அடைகிறது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் நம் உடலையே இயக்கும் அந்தச் சக்தி பெறுகிறது. ஆகவே நம் உயிரின் இயக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்குச் “சங்கு சக்கரதாரி…” என்று காட்டுகிறார்கள்.

கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
1.அந்தக் கோபத்திற்குண்டான சப்தங்களும்… அந்த உணர்ச்சிகள் வேகமாக இயக்குவதும்…
2.ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ… என்று அலறுவது போல
3.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உடலில் இப்படிச் செயலாக்குகிறது.

உயிரின் இயக்கமும் இந்த மூன்று நிலையில் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் சூரியன் விஷத்தைப் பிரித்துவிட்டு இயக்க அணுவாக மாறி அந்தக் கோபமாக வெளிப்படும் உணர்வின் சத்தைக் கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்… அதனுடன் இணைந்து கொண்டால் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… இந்த விஷம் அந்தக் கோபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது புலனறிவு ஐந்தாக மாறுகின்றது.

இதைத் தான் சூரியன்… “ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இந்த உலகையே இயக்கிக் கொண்டுள்ளான்…!” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
1.எல்லா உணர்வுகளையும் இயக்க இந்த விஷமே மூலமாக இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ள ரூப வடிவினைக் காட்டி
2.சூரியனின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் காரணப் பெயரை வைத்து உணர்த்துகின்றனர்.

ஆகவே கோபமான உணர்வை நுகரும் போது அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் எப்படிப் பாய்கிறது…? என்பதனை குருநாதர் உணர்த்துகின்றார்.

அந்தக் கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின் சங்கு சக்கரதாரி “சப்தமாகி…” அந்த உணர்ச்சிகள் எண்ணம் சொல் செயல் என்று இந்த உடலை இயக்குகிறது என்பதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இந்த உடல் ஒரு அரங்கம். கோபமான உணர்ச்சிகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன்…! கோபமான நாதத்தை உண்டாக்குகிறது. அந்தக் காரமான உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது… ஆள்கிறது… “ஆண்டாள்” நம்மை ஆள்கிறது.

அதாவது நாம் எண்ணி எடுத்த அந்தக் கோபமான உணர்ச்சிகள் நம்மை ஆளத் தொடங்குகிறது.

அந்தக் கோபப்படும் மனிதனை உற்றுப் பார்க்கப்படும் போது அந்த இயக்க அணு நமக்குள் வந்து அது இயங்குகிறது. ஆனால் அது ஆள்கிறது.

அதே உணர்ச்சிகள் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறுகின்றது. உமிழ் நீராக மாறும் போது அந்தக் காரமான உணர்ச்சிகள் நம் சிறு குடல் பெரும் குடலில் இருக்கக்கூடிய அணுக்களுடன் இணைகின்றது.

அப்போது என்ன நடக்கிறது…?

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் எப்படி நாம் அலறுகின்றோமோ… அதே போல் நாம் சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்க முடியாதபடி எரிச்சலூட்டும் உணர்வுகளாக அங்கே உருவாகின்றது.
1.வயிற்றிலே எரிச்சல்…
2.இதன் உணர்வு உடல் முழுமைக்கும் படரும் போது மற்ற உறுப்புகளில் எரிச்சல்.

இப்படி நாளடைவில் இயங்கத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பாக வந்து விடுகின்றது. எதை எடுத்தாலும் எரிச்சலாகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சூரியனிலிருந்து வந்த இயக்க அணு அந்தக் கோபக்காரன் உணர்வை எடுத்துக் கொண்ட பின் அதை நுகரப்படும் போது அந்தக் கோபத்தை நமக்குள் இயக்கினாலும் அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறும்.

உமிழ் நீர் ஆகாரத்துடன் கலந்த பின் ஆகாரம் ஆவியாக மாறி அதனின் இயக்கமாக மாறி இரத்தமாக மாறப்படும் போது அந்த இயக்க அணு ஜீவ அணுவாக மாறுகின்றது.

ஜீவ அணுவாக மாறிய பின்
1.அந்தக் கோபத்தால் உருவான அணுவின் மலம் எங்கெல்லாம் படுகின்றதோ அங்கெல்லாம் எரிச்சல் வருகிறது…
2.குருநாதர் இதை எல்லாம் எம்மை நேரடியாக அறியும்படி செய்தார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒரு கோபப்படுவோரையோ வெறுப்படைவோரையோ பார்த்து… கோபத்தையும் வெறுப்பையும் நுகர்ந்து விட்டால் நம் உடலில் எப்படித் தீமைகள் விளைகின்றது…? என்பதைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

இதை எல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தாய்மையின் சக்தியால் தான் உயர் ஞானம் பெற முடியும்

தாய்மையின் சக்தியால் தான் உயர் ஞானம் பெற முடியும்

 

தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.

அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி… பாசம் கொண்ட செயல் மூலம்…!
1.உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”

தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.

அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.

ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!

அதாவது
1.(POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!)

பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?

தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால்
1.போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…”
2.மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.

அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் “தாய் சக்தியையும் இழந்து…” அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான்.

இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.

ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.

ஆனால் உயர் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெற வேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.

பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.

ஆகவே சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.

ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.

அருள் ஞானச் சக்கரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சக்திகள் சாதாரணமானவை அல்ல

அருள் ஞானச் சக்கரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சக்திகள் சாதாரணமானவை அல்ல

 

யாம் (ஞானகுரு) அகஸ்தியனைப் பற்றித் தொடர்ந்து உபதேசிக்கின்றோம். காரணம் ஆயுள் கால மெம்பர்கள் இதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

முந்தி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு வந்தோம். மெம்பர்களுக்கு எப்படியும் முழுமையாகச் சொல்லித் தான் ஆகவேண்டும். அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சித் தான் ஆக வேண்டும் என்பதற்கே பரிபூரணமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அருள் ஞானச் சக்கரத்தைச் “சும்மா வாங்கிக் கொண்டு போய்…” நானும் பூஜை செய்தேன் எனக்குக் கிடைத்தது என்று அதைச் செய்வதில் பலன் இல்லை.

1.சக்கரத்திற்கு முன்னாடி நீங்கள் நின்றாலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்…
2.அதற்குத் தான் சக்கரத்தைக் கொடுப்பது
3.குருபீடத்திற்கு அடியில் தான் அந்தச் சக்கரங்களை எல்லாம் வைத்து
4.அதிலே எல்லாச் சக்திகளையும் பரப்பி இப்போது உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அகஸ்தியன் தாயின் கருவிலிருக்கும் போது பெற்றது தான் அனைத்து நஞ்சினை வெல்லும் சக்திகளும். தாய் சுவாசித்த நஞ்சை வெல்லும் பல பல தாவர இனங்களின் மணங்களை இரத்தத்தின் வழி நுகர்ந்து அகஸ்தியன் பூர்வ புண்ணியமாகப் பெறுகின்றான்.

அதை எல்லாம் பெற்றுப் பிறந்த பிற்பாடு கொசுவோ பாம்போ தேளோ அவன் அருகில் வருவதில்லை. அதைப் பார்க்கும் போது சுற்றி இருப்பவர்கள் அவனைக் “கடவுளின் பிள்ளை” என்று போற்றும் நிலை வருகிறது.

அகஸ்தியன் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைய அடைய…
1.மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைக் கண்டாலே ஒடுங்கி நிற்கிறது.
2.செடி கொடிகளும் இவன் மணம் பட்டாலே இரைச்சலாகி ஒடுங்குகிறது
3.அப்போது அதன் குணங்களை முழுமையாக அறிகின்றான்.

வேப்பிலையைப் பச்சையாக நான்கு நாளைக்குச் சாப்பிட்டால் நம் உடலிலிருந்து வேப்பிலை வாசனை வரும். கத்திரிக்காயை இரண்டு நாள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் அந்த மணம் வரும்.

வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் அடுத்த நிமிடமே அந்த வாசனை வரும். சாப்பிட்டு அந்த அணுக்களில் சேர்ந்த பின் அந்த வாசனை வருகிறது.

இதை எல்லாம் அன்று அகஸ்தியன் அறிந்து முதலில் வேக வைக்கும் பழக்கத்தைக் கண்டுபிடிக்கிறான். இயற்கையில் விளைந்ததை வேக வைத்துவிட்டு அதனுடன் பல நல்ல பொருள்களைச் சேர்த்து ருசியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வருகின்றான்.

அதே சமயத்தில் மனிதனுக்குகந்த தாவரங்களைப் புதிதாக உற்பத்தி செய்கிறான். தன் மூன்றாவது வயதில் இதைச் செய்கிறான். இன்று நாமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா… மூன்று வயதுக் குழந்தை என்னென்னமோ செயல்படுத்துகின்றது என்று.

தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகரும் உணர்வுகள் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் இவை எல்லாம். சில சந்தர்ப்பங்களில் அபூர்வமான எத்தனையோ செயல்கள் அதனால் வந்துவிடுகிறது.

அகஸ்தியன் இதை எல்லாம் கண்டுணர்ந்து புதிய புதிய பயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றான்.
1.இயற்கையில் உருவான கனிகளைக் கூட
2.வேக வைத்துத் தான் அகஸ்தியன் சாப்பிட்டான்.

இன்று நாம் கனிகளைப் பச்சையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதை வேக வைத்துவிட்டால் அதில் உள்ள மற்ற அணுக்கள் செத்து விடுகிறது. அதனின் ருசி வேறாக இருக்கும். அதைச் சாப்பிடலாம்.

இது அகஸ்தியனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே… வேகா நிலை பெற்ற அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகினால் அவனைப் போன்றே நாம் மெய் ஞானியாகலாம்.

மறைக்கப்பட்ட மூலச்சக்கரமும் அதனின் தத்துவ இரகசியமும்

மறைக்கப்பட்ட மூலச்சக்கரமும் அதனின் தத்துவ இரகசியமும்

 

மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.

தீய எண்ணங்களின் குணங்களும் நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும் வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில் மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!

எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.

கோலமாமகரிஷி தீய குணங்களின் செயலையே மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்றுத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்ட உயர் ஞான வளர்ப்பினை
1.மூகமாகச் செயல்படும் திறத்தை… அந்த இரகசியத்தை
2.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
3.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.

கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டிட்டாரப்பா..!
4.இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!

பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டே உணர்ந்து கொண்டதிலும் தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலையுயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.

சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற்றிட வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.

அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

பின் அந்த அமைப்பையே கவர்ந்து சென்றிடும் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.

மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!

அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.

மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.

லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

அன்று அகஸ்தியன் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று கணவன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கையும்

அன்று அகஸ்தியன் வாழ்ந்த வாழ்க்கையும் இன்று கணவன் மனைவி ஒன்றி வாழும் வாழ்க்கையும்

 

இப்போது கணவன் மனைவியுமாக வாழ்பவர்கள் இரு மனமும் ஒன்றித் தான் வருகிறார்கள்.

எப்படி…?

தொழிலில் ஒரு நஷ்டமாகி விட்டால் என்ன ஆகிறது…?

நல்ல முறையில் நான் வேலை செய்கின்றேன் ஆனால் என்னை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று கணவன் மனைவியிடம் சொல்லும் நிலை வருகின்றது.

மனைவியோ தன் கணவரை நினைத்து வேதனையை உருவாக்கிக் கொள்கிறது. கணவனை நினைக்கும் போதெல்லாம் வேதனையைத் தான் மனைவியாலும் எண்ண முடிகிறது.

வேலைக்குச் சென்று விட்டார் என்றால்…
1.“இந்த மாதிரி நஷ்டமாகின்றதே…!” என்று வேதனையாக மனைவி நினைக்கும் போது
2.கணவனுடைய சிந்தனை குறைந்து செய்யும் வேலையில் பலவீனமாகும்.

ஒரு வியாபாரத்திற்கே செல்கிறார் என்றால் “அங்கே கலவரம் நடக்கிறது… இங்கே சண்டையிடுகின்றார்கள்…” என்று வீட்டில் பெண்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அதே உணர்வு தன் கணவருக்குத் தாக்கப்பட்டுப் பயமும் பதட்டமும் வந்து கொண்டேயிருக்கும்.

பதட்டமும் பயமும் வந்ததும் இவர் வைத்திருக்கும் பொருளைக் கூட இவருக்குத் தெரியாமல் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். பொருள் காணாமல் போகும்.

இந்த மாதிரிச் சில நிலைகள் எல்லாம் நடக்கும்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றார்கள்
1.ஆனால் வேதனை கலந்து தான் இருக்கின்றார்கள்.
2.வேதனையைத் தான் இருவரும் வளர்க்க முடிகிறது
3.இருவர் உடலிலும் நோயாக மாறுகிறது.

வேதனை அதிகமாகும் போது கடைசியில் இந்த உணர்வுகள் விஷமாகப் போகும் போது இருவர் உடலிலும் பகைமையாகின்றது. ஆக வேதனையில் தான் ஒன்று சேர்த்து வாழ்கின்றார்கள்.

இது தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் எப்படி வாழ்ந்தனர்…?

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தையும் அறிந்து… அண்டத்தையும் அறிந்து… அதனின் இயக்கத்தைத் தன்னில் உணர்கின்றான். அவனுடைய பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

1.தான் கண்டறிந்தவைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்.
2.மனைவியும் தன் கணவன் சொன்ன நிலைகளை ஏற்று அதன் வழி நடக்கிறது.

மனைவி உயர்ந்து வருவதைக் கண்டு அகஸ்தியன் மகிழ்ச்சி அடைகின்றான். அவர்கள் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல் வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாக மாறுகின்றனர்.

1.இரண்டு உயிரும் தனியாக இருந்தாலும் ஒரு உயிராக மாறிவிடுகின்றனர்…
2.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றனர்.

அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றனர்.

அதுவே நாம் அடைய வேண்டிய எல்லை.

உள் நின்று (மௌனமாக) இயக்கும் சக்தியே “மூகம்…!” என்ற உயிரின் சக்தி

உள் நின்று (மௌனமாக) இயக்கும் சக்தியே “மூகம்…!” என்ற உயிரின் சக்தி

 

ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?

1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லும்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!

மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொண்டிடும் பகுப்பாற்றல் (பிரித்து அறியும்) செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.

அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.

தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீதெண்ணப் (தீமையான எண்ணம்) பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.

இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட
1.மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
2.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
3.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு (ஃ).
4.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
5.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்

பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனித சரீரம்” என்று செப்பி அந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதம்… அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.

உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குலச் சிந்தனையைச் சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”

அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!

எதனையுமே ஒளியாக மாற்றும் கலை தான் வேகாக்கலை

எதனையுமே ஒளியாக மாற்றும் கலை தான் வேகாக்கலை

 

டி.வி. ரேடியோ ஸ்டேசனில் எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ… நம் வீட்டில் அதிலே எதைத் திருப்பி வைக்கின்றோமோ அதை இழுத்துப் படமாக அல்லது பாடலாகப் பாடுகிறது.

அதே போல ஒரு மரத்தில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் எந்த மரத்தின் சத்தை எடுத்து அது விளைந்ததோ… அந்தச் சத்தினைத் தான் அது கவரும்… அதே மரமாக விலையும்.

இதைப் போல் சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட
1.வேதனை சலிப்பு கோபம் ஆத்திரம் போன்ற குணங்கள்
2.நம் உடலுக்குள் வீரியமான சத்தாக வலு கொண்ட நிலையில் இருந்தால் அது தான் முன்னணியில் இருக்கும்.
3.நல்ல குணங்களை நமக்குள் விடாதபடி அது தடுத்துக் கொண்டிருக்கும்.

அப்படித் தடுக்கும் நிலைகளை மாற்றி அருள் ஞானிகளின் சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இப்பொழுது அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை… “அந்த அடிப்படை ஆதாரத்தையே” உங்களிடம் பதிவாக்குவது.

அன்று அகஸ்தியன் எப்படி இயற்கையின் பேருண்மைகளை அறிந்தானோ அதைப் பதிவாக்கி அதனின் தொடர் வரிசையிலேயே அடிக்கடி நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

அதை வளர்த்துக் கொள்ளக்கூடிய அந்தத் தகுதியை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத் தான் பல முறை உபதேசித்திருந்தாலும் ஆயுள் கால மெம்பருக்கு யாம் (ஞானகுரு) ஆசீர்வாதம் கொடுப்பதும் அந்த அரும் பெரும் சக்திகளைப் பதிவாக்குவதும்.

ஏனென்றால் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் அந்த அருள் உணர்வைப் பெற்று நீங்கள் எங்கே சென்றாலும் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை மாற்றிக் கொள்ள முடியும்.

புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி அதிலிருக்கும் விஷத்தைப் பிரித்துவிட்டு வெப்பமும் காந்தமுமாக உருவாக்குகின்றது… “இயக்க அணுக்களாக” வெளிப்படுத்துகின்றது.

அதே சமயத்தில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தம் அந்த விஷத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்டால்
1.அதனை இணைத்தே வாழ்கிறது… அந்த விஷத்தைக் கொல்லவில்லை.
2.இதைத் தான் “இரணியன் சாகாவரம் கேட்டான்…” என்று சொல்கிறார்கள்
3.ஏனென்றால் எல்லாவற்றுக்கும் இந்த விஷம் இருந்தே ஆகவேண்டும்.

இது சாகாக்கலை.

ஒரு சத்துக்குள் இந்த விஷம் போயிருந்தால் அந்தச் சத்தை இயக்கச் சக்தியாக மாற்றுகிறது. ஆகவே… எதனையுமே சாகாக்கலையாக அதனதன் உணர்வுகளை உருவாக்கும்…! என்பது பொருள்.

ஆனால் நம் உயிரோ வேகா நிலை பெற்றது.

உயிர் எதிலுமே வேகுவதில்லை. அந்த உயிரைப் போலவே ஒவ்வொரு உணர்வையும் வேகா நிலையாக ஜீவ அணுவாக மாற்றும் சக்தி இந்த மனித உடலில் தான் உண்டு.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா… தீமைகளை நீக்கும் உணர்வுகள் சேனாதிபதி.
1.தீமைகளைத் தடுத்து நிறுத்தி நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை ஒழுங்குபடுத்தி
2.உயிரைப் போலவே உணர்வின் ஒளிமயமாக ஆவது தான் வேகா நிலை.

அதை அடைவதற்குத் தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! அதைப் பயன்படுத்தும் போது விவேகம் தேவை

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! அதைப் பயன்படுத்தும் போது விவேகம் தேவை

 

மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.

சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.

இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…!

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! (இது மிகவும் முக்கியமானது)

சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!

“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு…!

அதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் அருமருந்து.

(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)

நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…!”

(வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது)

சூரியனிலிருந்து வெளி வரும் இயக்க அணுவும்… பிரகலாதனும்

சூரியனிலிருந்து வெளி வரும் இயக்க அணுவும்… பிரகலாதனும்

 

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் தினசரி சந்திக்கின்றோம். வேதனைப்படுபவரையோ கோபப்படுவோரையோ வெறுப்படைவரையோ பார்க்காமல் நாம் இருக்க முடியாது.

ஆனால் அந்த வேதனை கோபம் வெறுப்பு உள்ளுக்கே போகாதபடி தடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா. அதற்குத் தான் இதை உபதேசிக்கிறோம்.

தீமை நீக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பிள்ளை மேலே பாசமாக இருக்கின்றோம்… ஒரு மார்க் குறைந்து விட்டால் போதும் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…? பிள்ளைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…?

நீங்கள் சமப்படுத்த வேண்டும் அல்லவா.
1.ஆனால் வேதனையை எடுத்துச் சமப்படுத்த விரும்புகின்றீர்கள்
2.இந்த உணர்வுகள் நமக்குள் வந்து மீண்டும் சிவ தனுசாக மாறுகின்றது… வேதனைக்கொப்ப உடலாக (வேதனைப்படும் உடலாக) மாறுகின்றது.

அதனால் தான் பிரகலாதன் கதையிலே நாராயணனுக்கும் இரணியனுக்கும் இரண்டு பேருக்கும் அங்கே கேட்கின்றார்கள்.

பிரகலாதன் என்றால் இதிலே பிறக்காதவன். அதாவது
1.எதிலுமே பிறக்காதவன் தான் பிரகலாதன் என்று காட்டுகின்றார்கள்.
2.சூரியனிலிருந்து ஒவ்வொரு இயக்க அணுக்களும் வருகிறது அல்லவா…!

என்னால் தான் பிறந்தது என்கிறான். சூரியனால் தான் இயக்கப்படுகின்றான் என்கிறான். என்னால் தான் பிறந்தது என்னால் தான் உருவானது என்று இயக்க அணுவைப் பற்றிப் பிரகாலதன் கதையிலே காட்டுகின்றார்கள்.

ஹரி ஓம் நமோ நாராயணா…! சூரியனின் இயக்கமாகத்தான் நம் உடல் எல்லாம் இருக்கின்றது என்று பிரகலாதன் சொல்கிறான்.

அவன் எங்கே இருக்கின்றான் என்று இரண்யன் கேட்கின்றான்…?

உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்… எல்லாவற்றிலும் இருக்கின்றான்.

அவனைக் காட்டு…! என்கிறான்.

தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று காட்டுகின்றான்.

அவனை அழித்து (தூணை உடைத்து) அந்த உணர்வின் வேகத்தைப் பார்க்கப்படும் பொழுது அதிலிருந்து அந்த உண்மையை உணர்த்திக் காட்டுகின்றது

1.தன் உடலுக்குள் இருக்கும் தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை தான் வருகின்றதே தவிர
2.உன்னால் அழிக்க முடியும்… உணர முடியாது
3.அதை ஈர்க்க முடியும்… ஆனால் வளர்க்க முடியாது.
4.தீமையைத்தான் வளர்க்க முடியும்…! என்று பிரகலாதன் கதையில் அதைக் காட்டுகின்றார்கள்

எவ்வளவு பெரிய உண்மையைக் காட்டுகின்றார்கள்.

வெறும் கதையாக நினைக்கின்றோம். மக்கள் நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நல்ல குணத்தில் அதை வலுவாக்க வேண்டும்.

அந்தச் சக்தி வலுவான பின் வேதனையான உணர்வுகள் இங்கே வருகிறது அல்லவா… அதை உள்ளிருந்து பிளந்து விடுகின்றது.

இது தான் மடி மீது இரணியனை (நஞ்சான உணர்வுகள்) வைத்து நமக்குள் வரும் தீமைகளை வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன்… இந்த ஆறாவது அறிவால் இதைப் பிளந்து பழகுதல் வேண்டும்.

இப்பொழுது நாம் ஒன்பதாவது நிலையிலிருக்கின்றோம். அதைப் பிளந்தால் “பத்தாவது” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்