அருள் ஞானச் சக்கரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சக்திகள் சாதாரணமானவை அல்ல

அருள் ஞானச் சக்கரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சக்திகள் சாதாரணமானவை அல்ல

 

யாம் (ஞானகுரு) அகஸ்தியனைப் பற்றித் தொடர்ந்து உபதேசிக்கின்றோம். காரணம் ஆயுள் கால மெம்பர்கள் இதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

முந்தி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு வந்தோம். மெம்பர்களுக்கு எப்படியும் முழுமையாகச் சொல்லித் தான் ஆகவேண்டும். அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சித் தான் ஆக வேண்டும் என்பதற்கே பரிபூரணமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அருள் ஞானச் சக்கரத்தைச் “சும்மா வாங்கிக் கொண்டு போய்…” நானும் பூஜை செய்தேன் எனக்குக் கிடைத்தது என்று அதைச் செய்வதில் பலன் இல்லை.

1.சக்கரத்திற்கு முன்னாடி நீங்கள் நின்றாலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்…
2.அதற்குத் தான் சக்கரத்தைக் கொடுப்பது
3.குருபீடத்திற்கு அடியில் தான் அந்தச் சக்கரங்களை எல்லாம் வைத்து
4.அதிலே எல்லாச் சக்திகளையும் பரப்பி இப்போது உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அகஸ்தியன் தாயின் கருவிலிருக்கும் போது பெற்றது தான் அனைத்து நஞ்சினை வெல்லும் சக்திகளும். தாய் சுவாசித்த நஞ்சை வெல்லும் பல பல தாவர இனங்களின் மணங்களை இரத்தத்தின் வழி நுகர்ந்து அகஸ்தியன் பூர்வ புண்ணியமாகப் பெறுகின்றான்.

அதை எல்லாம் பெற்றுப் பிறந்த பிற்பாடு கொசுவோ பாம்போ தேளோ அவன் அருகில் வருவதில்லை. அதைப் பார்க்கும் போது சுற்றி இருப்பவர்கள் அவனைக் “கடவுளின் பிள்ளை” என்று போற்றும் நிலை வருகிறது.

அகஸ்தியன் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைய அடைய…
1.மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைக் கண்டாலே ஒடுங்கி நிற்கிறது.
2.செடி கொடிகளும் இவன் மணம் பட்டாலே இரைச்சலாகி ஒடுங்குகிறது
3.அப்போது அதன் குணங்களை முழுமையாக அறிகின்றான்.

வேப்பிலையைப் பச்சையாக நான்கு நாளைக்குச் சாப்பிட்டால் நம் உடலிலிருந்து வேப்பிலை வாசனை வரும். கத்திரிக்காயை இரண்டு நாள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் அந்த மணம் வரும்.

வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் அடுத்த நிமிடமே அந்த வாசனை வரும். சாப்பிட்டு அந்த அணுக்களில் சேர்ந்த பின் அந்த வாசனை வருகிறது.

இதை எல்லாம் அன்று அகஸ்தியன் அறிந்து முதலில் வேக வைக்கும் பழக்கத்தைக் கண்டுபிடிக்கிறான். இயற்கையில் விளைந்ததை வேக வைத்துவிட்டு அதனுடன் பல நல்ல பொருள்களைச் சேர்த்து ருசியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வருகின்றான்.

அதே சமயத்தில் மனிதனுக்குகந்த தாவரங்களைப் புதிதாக உற்பத்தி செய்கிறான். தன் மூன்றாவது வயதில் இதைச் செய்கிறான். இன்று நாமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா… மூன்று வயதுக் குழந்தை என்னென்னமோ செயல்படுத்துகின்றது என்று.

தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகரும் உணர்வுகள் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் இவை எல்லாம். சில சந்தர்ப்பங்களில் அபூர்வமான எத்தனையோ செயல்கள் அதனால் வந்துவிடுகிறது.

அகஸ்தியன் இதை எல்லாம் கண்டுணர்ந்து புதிய புதிய பயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றான்.
1.இயற்கையில் உருவான கனிகளைக் கூட
2.வேக வைத்துத் தான் அகஸ்தியன் சாப்பிட்டான்.

இன்று நாம் கனிகளைப் பச்சையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதை வேக வைத்துவிட்டால் அதில் உள்ள மற்ற அணுக்கள் செத்து விடுகிறது. அதனின் ருசி வேறாக இருக்கும். அதைச் சாப்பிடலாம்.

இது அகஸ்தியனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே… வேகா நிலை பெற்ற அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகினால் அவனைப் போன்றே நாம் மெய் ஞானியாகலாம்.

Leave a Reply