விஞ்ஞான அறிவால் இஞ்சினியர் இயந்திரத்தின் உறுப்புகளைச் சரி செய்வது போல் – மெய் ஞான அறிவால் குருநாதர்… “நம் உடல் உறுப்புகளைச் சீராக்கி” மெய் ஒளி பெறும் தகுதியை நமக்கு ஏற்படுத்துகின்றார்
ஆண்டவன் என்ற நிலையில் “அவன் நம்மைக் காப்பான்…” என்று தான் எண்ணுகின்றோமே தவிர நமக்குள் இருக்கும் “உயிர்… அவன் தான் காப்பான்…” என்ற நிலையை மறந்து விட்டோம்.
1.நாம் எண்ணியதை இயக்குவதும் உயிரே.
2.எண்ணியதை உருவாக்குவதும் உயிரே.
3.நமது நினைவாற்றலை இயக்குவதும் உயிரே.
இவையெல்லாம் நம் உயிரான ஈசனின் வேலை தான்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து வாழ்க்கையில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்தல் வேண்டும்.
நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும். தீமைகளை அகற்றும் பழக்கம் (பயிற்சி) வரவேண்டும்.
இன்று ஒவ்வொரு இயந்திரங்களுக்குள்ளும்/சாதனங்களுக்குள்ளும் அதற்குள் உள்ள உறுப்புகளின் இயக்கங்கள் (TECHNICAL) எவ்வாறு இயங்குகின்றது என்பதை விஞ்ஞான அறிவை வைத்து இஞ்சினியர் கண்டு கொள்கின்றார்.
“விஞ்ஞானி…” புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது அதைச் செயலுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ தேவைப்படுகிறது.
அப்பொழுது அதற்குத் தகுந்த (DESIGN AND FABRICATION) பொருள்களை உருவாக்கிக் கொடுப்பதும் அதைப் பிரிப்பதும் இயந்திரத்தை முழுமையாக உருவாக்குவதும் இன்ஜினியரின் வேலை.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.அந்த இன்ஜினியரின் நிலை போன்று
2.மெய் ஞானிகள் கண்ட வானுலகின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்தார்
3.தான் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு
4.உங்கள் உடலான உறுப்புகளுக்குள் அவரவர்களுக்குத் தக்க
5.மெய் ஞானியின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் சீர் படுத்தச் செய்து
6.உடல் உறுப்புகளில் வரும் நோய்களை அகற்றிடும் உணர்வின் தன்மையை நீங்கள் பெறும்படி செய்தார்.
விஞ்ஞானி கண்டுபிடித்த உணர்வின் தன்மைக்கொப்ப இஞ்சினியரால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தின் உறுப்புகள் சரியாக இருந்தால் தான் அது செயலாக்கும்.
1.அப்பொழுது தான் விஞ்ஞானி கண்டுபிடிப்பும் செயலுக்கு வரும்…
2.அது வேலையும் செய்யும்.
அதே போல மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமையை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
இயந்திரம் சீராக இருந்தால் தான் மற்ற உறுப்புகளும் சீராக இயக்க முடிகின்றது.
உங்கள் உடலில் நோய் இருந்தாலும் எந்த இடத்தில் வலி வருகின்றதோ ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நுகரும் படி செய்கின்றோம்.
உங்களுக்குள் அதைப் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவை நினைவாக்கினால் காற்றுக்குள் இருக்கும் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் எளிதில் நுகர முடிகின்றது.
உடலில் எந்த உறுப்புகளில் வேதனை வருகின்றதோ “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படரவேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உடல் முழுவதும் சுழலச் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் உறுப்புகளான – சிறு குடல் பெரும் குடல்; கணையங்கள்; கல்லீரல் மண்ணீரல்; நுரையீரல்; இருதயம்; கண்களில் உள்ள கருமணிகள்; நரம்பு மண்டலம்; எலும்பு மண்டலம்; விலா எலும்பு; குறுத்தெலும்பு; எலும்புகளுக்குள் உறைந்துள்ள் ஊன்கள்; தசை மண்டலம்; தோல் மண்டலம் அனைத்திலும் படர வேண்டும் என்று தலையிலிருந்து கால் வரை படரச் செய்ய வேண்டும்.
1.மகரிஷிகளின் உணர்வலைகள் உடல் உறுப்புகளில் சுழன்று வரும் சமயம்
2.நோயாக இருக்கும் இடங்களில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை சீக்கிரம் இழுத்து
4.நோயான அணுக்களை அது தணியச் செய்கின்றது
5.உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்கின்றது
ஏனென்றால் விஞ்ஞான அறிவுப்படி உங்களுக்குள் மெய் ஞானத்தின் உணர்வை ஊட்டி உடலுக்குள் செலுத்தும்படிப் பழக்கப்படுத்துகின்றோம்.
விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்த அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அருள் வாழ்க்கை வாழ முடியும்.
ஏனென்றால் மெய் ஞானிகள் கண்ட மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது “உயிர்..” நமக்கு மெய் ஒளியைக் காட்டுகின்றது.
அந்த மெய் வழி கண்டு உயிருடன் ஒன்றும் அனைத்து உணர்வுகளையும் ஒளியாக்கி விட்டால் ஞானிகளைப் போன்று ஒளியின் சரீரமாகும் தகுதியை நாம் பெறுகின்றோம்.
பழனி “முருகன் சிலையின் மகிமையையும்…” அதை உருவாக்கி விண்ணுலகம் சென்ற “போக மாமகரிஷியையும்…” பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
பழனியில் முருகன் சிலைக்குப் பக்கத்தில் போகர் சமாதி வைத்திருக்கின்றார்கள்.
முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்து விட்டுப் போகர் சமாதிக்கு வந்து “உனக்கு ஒரு கும்பிடு..! என்று கும்பிட்ட பின் காணிக்கையும் கொடுத்து விட்டுத் தன் பிள்ளைகளுக்கு ஏதாவது அர்ச்சனை செய்து கொண்டால் போதும்.
இதைத்தானே நாம் செய்கிறோம்? முருகன் கோயிலில் அந்தப் போகரை சமாதியாக வைத்திருக்கின்றார்கள். ஆனால் “அவர் யார்…?” என்பது தெரியாது.
முருகனைப் பார்த்த பின்… இந்தத் தெய்வ குணத்தை உணர்த்திய அந்தப் போகமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இப்படி எண்ண வேண்டும்
முருகன் சிலையைச் சிருஷ்டித்துக் கொடுத்தவன் போகன். சிலையை ஏன் அமைத்தான்? எப்படி அமைத்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மை இந்தப் பிரபஞ்சம் எப்படி மனிதனாக உருவாக்கியது என்பதை அறிந்து கொண்டவர் போகர்.
1.பிரபஞ்சத்தில் விளைந்தவை நவக்கோள் அது தான் “நவபாஷாணம்…”
2.இருபத்தேழு நட்சத்திரங்கள் இது “வைரம்…”
இருபத்தேழு நட்சத்திரங்களின் சத்தை இணைத்து சூரியனிலிருந்து உமிழ்த்தும் காந்தப்புலன் அறிவு “பாதரசம்…”
கோள்களின் சத்தையும் நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சூரியன் தனக்குள் எதைக் கவர்ந்து கொண்டதோ அதனின் உணர்வின் செயலாக உலகை மாற்றுகின்றது என்ற நிலையை அவன் உணர்ந்து அதைப் போன்றே உணர்வின் செயலாக முருகன் சிலையை உருவாக்கினான்.
எந்தக் கோள் உமிழ்த்துதோ அது பூமிக்குள் பரவி வந்தாலும் தன் இனத்தைக் கவர்ந்து அது பாஷாணமாக உருவாக்கும்.
இதே போல் இருபத்தேழு நட்சத்திரம் அது ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து உமிழ்த்தும் உணர்வுகள் புவிக்குள் பரவி ஒவ்வொரு வைரமும் ஒவ்வொரு கலராக இருக்கும்.
நட்சத்திரத்திலிருந்து வரும் மின் அணுக்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்து தனித்து எதிலும் சிக்காது வீரிய உணர்வு கொண்டு சந்தர்ப்பவசத்தால் பூமியிலே பதிந்து விடுகின்றது.
அப்படிப் பதிந்து விட்டால்
1.எந்த நட்சத்திரம் எந்தக் கல் எந்த மண் எந்தச் செடியிலே
2.இது அதிகமாகக் கலந்து இருக்கின்றதோ அதனின் சத்து வந்த பின்
3.இதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் மண்ணிற்குள் மறைந்து கருவாகி
4.தன் சத்தை மட்டும் அது உறிஞ்சி
5.ஒளியின் சிகரமாக அந்த வைரம் விளைகின்றது.
இதை எல்லாம் போகன் கண்டுணர்ந்தான்.
இந்தச் சத்துகள் எல்லாத் தாவர இனங்களிலும் எல்லா மண்ணுகளிலும் கலந்து இந்த உணர்வின் இயக்கமாகச் சூரியன் எவ்வாறு ஒளிச் சுடராக இருக்கின்றதோ இதைப் போல ஒளியின் சிகரமாக அறிந்திடும் அறிவின் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்று போகன் கண்டுணர்ந்தான்.
அவ்வாறு தான் அறிந்துணர்ந்த நிலைகள் கொண்டு இந்தப் பிரபஞ்சம் உருவானதையே மனித உரு போல அந்த உருவத்தை உருவாக்கினான் போகன். அது தான் முருகன் சிலை.
மனிதனுக்கு வேண்டிய ஜீவாதாரமான அறிவின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கொடுக்கும் தாவர இனங்கள் அது எவ்வாறு உருவானதென்ற நிலையையும் அறிந்து கொண்டான் போகன்.
சிலையை உருவாக்கும் பொழுது மனிதனுக்கு ஜீவாதாரமாகவும் தீமைகள் அகற்றிடும் உணர்வின் தன்மை எண்ணங்கள் வடித்த அந்தத் தாவரங்களின் உணர்வுகளை அவன் கவர்ந்து அதைச் சாரணையாகக் கொடுக்கின்றான்.
உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக வரும்போது பல வகையான தாவர இனங்களை உணவாக உட்கொண்டது.
அந்தச் தாவர இனச் சத்தின் மூலமாக வளர்ந்து தன்னைக் காத்திட அந்த ஞானத்தின் நிலைகள் எப்படிச் செயல்பட்டதோ அந்தத் தாவர இனச் சத்தை எல்லாம் இந்தச் சிலைக்குள் சாரணையாகக் கொடுக்கின்றான்.
மனிதனான நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக்கிக் கொள்கின்றோம்.
இதைப்போல இதற்கு நேர் எதிரிடையாக இந்த மனிதனின் சிலையை உருவாக்கித் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்றும் நிலையாக ஆறாவது அறிவை முருகா என்று காட்டினார் அந்தப் போகர்.
மண்ணுலகில் தன்னுடன் வாழ்ந்த மக்கள் அவர்களுக்குள் அறியாது வந்த நஞ்சை நீக்கி மகிழ்ந்திடும் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்… விண்ணுலக ஆற்றல் பெற வேண்டும் என்ற அந்த ஆசையுடன் தான் முருகன் சிலையைப் படைத்தார் போகர்.
முருகன் சிலையைப் பார்க்கும் மனிதர்கள் தனக்குள் வரும் இருளை நீக்கி மெய் ஒளி காணும் உணர்வுகளைப் பெறச் செய்தார் போகர்.
அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த மகிழ்ச்சியான உணர்வின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றிச் சென்றவன் போகன்.
இதைத் தெளிவாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய நிலைகளில் இந்தச் சிலையைப் போகர் உருவாக்கி அதன் மீது நீரைச் சொட்டச் செய்தார். நீரின் நிலைகள் படும் போது வெப்பத்தால் சிலையிலிருந்து ஆவியாக அலைகளாகப் படர்கின்றது.
சிலையை உற்றுப் பார்க்கும்போது அதிலிருந்து வரும் அலைகளை அனைவரும் நுகர வேண்டும் என்பதற்கே அவ்வாறு வைத்தார் போகர்.
சிலையைப் பார்க்கும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்? எதை நுகர வேண்டும்?
1.முருக குணத்தைக் காட்டிய அந்தப் போக மாமகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மனிதனான ஆறாவது அறிவின் தன்மை முழுமை பெற வேண்டும்.
3.எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
4.மெய்ப் பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையைப் பார்த்து நுகர வேண்டும்
அதிலிருந்து வெளி வரும் மணத்தை நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகளை மாற்றி நன்மையின் சக்தியாக அந்த ஒளியான நிலையை நாம் பெற முடியும். கண்டு உணர்வின் வித்தினை தெளிவாகத் தெளிந்து தெளிந்திடும் உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து அந்த உணர்வின் தன்மை தன் பார்வையால்
மகிழ்ச்சியாக இருக்கப்படுபவனைப் பார்க்கப்படும் போது நமக்கு மகிழ்ச்சியும் வேதனைப்படும் ஒருவனை உற்றுப் பார்க்கப்படும் போது நம்மை அறியாது வேதனையும் வருகின்றது. இதைப் போன்று
1.முருகன் சிலையை உற்று நோக்கி
2.அந்த உணர்வின் தன்மை எவெரெல்லாம் கவருகின்றனரோ
3.சிலையிலிருந்து வெளிப்படும் உணர்வின் ஆற்றல் அவர்களுக்குள் சென்று
4.அறியாது வந்த தீமைகளை போக்கிடும் நிலைக்காகச் செய்தான் அந்தப் போகன்.
5.இன்று அந்த மகரிஷியை யாராவது எண்ணுகின்றனரா?
6.அவர் காட்டிய அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றனரா…?
உனக்கு நான் அர்ச்சனை செய்தேன்… அதனால் என்னை நீ காப்பாற்று… என்ற நிலைகளில்தான் செல்லுகின்றோம்.
அந்தப் போக மாமகரிஷி
1.மெய் உணர்வின் தன்மையை அறிந்தான்
2.தன் இன மக்கள் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணினான்
மற்றவர்களிடமிருந்து பல உதவிகளைப் பெற்றாலும் சந்தர்ப்பத்தால் “நம் உணர்வே நமக்கு எப்படி எதிரியாகிறது..?” அதை எப்படிச் சரி செய்வது?
குடும்பத்தில் நான்கு பையன்கள் இருப்பார்கள். திருமணம் எல்லாம் ஆன பிற்பாடு அதில் ஒருவர் மிகவும் செல்வச் செழிப்பாக இருப்பார். வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அதே சமயம் இன்னொரு பையன் குடும்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். தொழில் மற்றவைகளில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்.
வசதியாக இருப்பவரிடம் சென்று பண உதவி கேட்கும் பொழுதெல்லாம் அவரும் உதவி செய்கின்றார். பணம் வாங்கினாலும் சிரமப்படுபவரோ அதிலிருந்து மீள முடியவில்லை.
பண உதவி செய்தவர் எடுக்கும் எண்ணம் எப்படி வருகின்றது?
நாம் எத்தனையோ தடவை உதவி செய்தோம்…! ஆக அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கொடுத்துத் தவித்துப் போய்விட்டது என்று வேதனைப்படுவார்கள்.
வேதனைப்பட்டாலும்… எப்படியோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சரி என்று மீண்டும் பணம் கொடுப்பார்கள்.
அந்தப் பணத்தை வாங்கும் பொழுது “ஊ..ஹ்ம்..,” இவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது…! ஏன்…? எனக்குக் கூடக் கொஞ்சம் பணம் கொடுக்கக்கூடாதா…! என்று இந்த வேதனையை எடுத்து பண உதவி செய்பவர்களைச் சாடுவார்கள்.
உதவி செய்யும் நோக்கத்தில் பணம் கொடுத்தாலும் பின்னாடியே இந்தச் சாபமும் வருகிறது.
1.நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
2.மனிதன் ஆறாவது அறிவு மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று செய்தாலும்
3.அது் சித்திரை – சிறு திரையாக அந்தத் தீமைகள் மறைக்கின்றது.
சிரமப்படுவோர் குடும்பத்திலே அவர் அறியாது சேர்த்த நஞ்சின் தன்மையால் வாழ்வில் கஷ்டப்படுகின்றார்கள்.
பாலில் பாதாமைப் போட்டாலும் நஞ்சு விழுந்து விட்டால் அதைக் குடித்தால் எப்படி இருக்கும்? நம்மை மயக்கப்படச் செய்யும்.
இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த நஞ்சு அவர்களை அறியாது அவ்வாறு செயல்படுத்தி விடுகின்றது. என்ன செய்வார்கள்?
1.அதிலிருந்து மீள முடியாது.
2.சிந்திக்க முடியாது. மறைத்து விட்டது. இது சித்திரை.
இதைப் போன்று வரும் தீமைகளை நீக்க வேண்டுமல்லவா?
ஒருவருடைய தீமையினுடைய நிலைகளை அகற்ற இரக்கம் கொண்டு பாவம் கஷ்டப்படுகின்றார் என்று எண்ணி அவர் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக “இந்தாப்பா… என்று ஒரு ஐம்பது அல்லது நூறு ரூபாயைக் கொடுக்கின்றோம்.
நூறு ரூபாய் கொடுத்ததும் அவர் என்ன நினைப்பார்…? இந்த நூறு ரூபாய் எந்த மூலைக்குக் காணும். பத்தவே பத்தாது…!
இவ்வளவு வசதி படைத்தவர் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா? வசதியாக இருக்கின்றவர் வெறும் நூறு ரூபாய் கொடுக்கிறார். ஏன்…., ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா…! என்று இந்த எண்ணம் வரும்.
1.ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்
2.இவருடைய நிலைக்கு எந்த வியாபாரமும் சரியாக வராது.
ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வியாபாரத்தைச் சரி செய்து விடலாம் என்பது ”பணம் வாங்க வேண்டும்…” என்று விரும்புபவருடைய எண்ணம்.
1.மனம் சீர்படவில்லை என்றால்
2.இந்த ஆயிரம் ரூபாயும் கரையத்தான் செய்யும். வளர முடியாது.
3.மனம் சோர்வடைந்து விட்டாலும் வேதனைப்பட்டாலும்
4.இந்த ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் இந்த உணர்வு
5.தன்னுடைய மனமே தனக்கு எதிரியாகி விடும்.
என் குடும்பம் இப்படி இருக்கின்றதே என்று வேதனை எடுக்கும் போது அந்தக் கஷ்டமான நேரத்தில் என்னென்ன எண்ணங்கள் வரும்?
1.அவன் அப்படிப் பேசுகின்றான் இவன் இப்படிப் பேசுகின்றான்
2.என்னை ரொம்பக் கேவலமாகப் பேசுகின்றான்
3.காசு இருந்தால் தான் என்னை மதிக்கின்றார்கள்
4.என்னை யாருமே மதிக்கவில்லை என்ற இந்த உணர்வுகள் தான் வரும்.
இதை இப்படி எடுத்துக் கொண்டபின் இது அடுத்துப் பேசும் போது சொல்களும் அதுவாகத் தான் வரும்.
சில பேர் என்ன செய்வார்கள்…? மிகவும் கஷ்டமாக இருக்கும் போது அவர்களிடம் ஒரு நூறு ரூபாய் கேட்டுப் பாருங்கள். அவர்கள் விடும் “பெரு மூச்சையும்… பார்வையையும்… அந்தச் சொல்லையும்… பாருங்கள்.
1.அவர்கள் நல்லதாகத் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
2.ஆனால் அந்த உணர்வு விடவில்லை.
இசைக் கருவியில் உதாரணமாக வீணையில் ஒரு நரம்பு சுருதி தளர்ந்து விட்டால் என்ன செய்யும்? நாதங்கள் மாறி விடும்.
ஏழு சுருதி இருக்கின்றது. அந்த நரம்புகள் இறுக்கமாகச் சரியான முறையில் பொருத்தப்பட்டிருந்தால் சுருதி சமமாக இருக்கும். வெளிப்படும் நாதங்கள் இனிமையாக வரும்.
அந்த நரம்புகள் கொஞ்சம் தளர்ந்து விட்டால்
1.எப்படி நாதங்கள் மாறுகின்றதோ இதைப்போல
2.மனிதனின் உணர்வுகள் மாறும் பொழுது
3.வெளிப்படும் நாதங்கள் அந்தச் சொல்கள் மாறும்.
அவனுக்குள் இயக்கும் நிலைகள் அப்பொழுது அந்த இனிமை வராது. சொல்லில் இனிமை வராது. தன்னுடைய மனமே ஆன்மாவே எதிரியாகும்.
இதை போன்ற நிலைகளிலிருந்து நம்மைத் தூய்மையாக்குவது எப்படி?
நமக்குள் தீமையான உணர்வுகள் வித்தாகி வளர்ந்து பின் விளைந்து அது கனியாக விடாதபடி தடுக்க வேண்டும்.
நுகர்ந்த உணர்வின் தன்மை அந்தக் குணத்தை இயக்குவது ஒலி. ஒலி ஒன்று தான். அந்த ஒலியின் தன்மை கொண்டு உள்ளிருந்து ஒளியாக அந்த மணத்தை நம் மனதை மாற்றுகின்றது.
ஒலி ஒளி என்று இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் பொழுது
1.உயிரின் தன்மையால் தான் அது இயக்குகின்றது.
2.உயிரால் அறியும் ஆற்றல் வரும் போது
3.மெய் ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் எடுத்தால்
4.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் வாழ்க்கையில் வரும்
5.சிறு சிறு திரைகளாக – தீமைகள் மறைப்பதை மாற்றிட முடியும்.
6.ஒளியின் தன்மை நமக்குள் பெருகும்.
ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை எடுத்துத் துடைக்க வேண்டும்.
நான் கடினமாக ஏதோ சொல்கிறேன்… அர்த்தம் ஆகவில்லையே…! என்று நினைத்து விடாதீர்கள்.
1.உங்களுக்கு அது அர்த்தம் ஆகும்.
2.சரியான சமயத்தில் உங்களுக்கு வழி காட்டும்.
உங்களுக்குத் தக்க நேரத்தில் சந்தர்ப்பத்தால் சிக்கல்கள் வந்தால் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்றிடும் உபாயம் வரும்.
அப்பொழுது தீமைகள் உங்களை அணுகாது.
அப்படியே அது வந்தாலும் அதை அறியும் நிலைகள் பெற்று அந்தத் தீமைகளைப் பிளக்கும் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன். (என் குருவின் ஆணைப்படி இதை உபதேசிக்கின்றேன்)
ஒரு எலெக்ட்ரிக் லைட்டை மனிதன் தான் உருவாக்குகின்றான்.
இருளான இடங்களில் ஸ்விட்சைத் தட்டிய பின் அந்த விளக்கு வெளிச்சத்தை உமிழ்ந்து இருளை விலக்குகின்றது. விளக்கின் வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்களைக் காணும் நிலை வருகின்றது.
இதைப்போல தான் அந்த மெய்ஞானிகள் தனக்குள் உணர்வின் தன்மையை ஆற்றல் மிக்கதாக மாற்றி இருள் சூழ்ந்த நஞ்சினை ஒளியாக மாற்றியவர்கள்.
நஞ்சின் தன்மை அதிகமாகும் பொழுது இருள் சூழும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிடுகின்றது. ஆனாலும்
1.நஞ்சு ஒரு பொருளுக்குள் தாக்கிய பின் வெப்பமாகின்றது.
2.வெப்பம் அதிகமாகும் பொழுது நெருப்பாகி ஒளியாக மாறுகின்றது.
3.மனிதனின் ஆறாவது அறிவு இத்தன்மை கொண்டதே.
இருளின் தன்மை வரும் பொழுது ஒளியைப் பாய்ச்சி அந்த இருளை மாய்த்து இருளுக்குள் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது மனிதனின் ஆறாவது அறிவு.
ஆதியிலே எல்லையே இல்லாத பேரண்டத்தில் நஞ்சின் தன்மையே பரவி எங்கும் இருண்ட நிலையாக இருந்தது. எல்லை என்றால் இதைப் போன்ற கோள்களோ நட்சத்திரங்களோ சூரியனோ இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தது.
சூனியப் பிரதேசத்தில் ஆவியாகப் படர்ந்து இருக்கும் அக்காலத்தில் ஆவிகளிலே மிகவும் சக்தி வாய்ந்தது அந்த விஷம் தான்.
ஆதியிலே அந்த விஷத்தின் தன்மை மற்ற அமைதி கொண்ட நிலைகளைத் தாக்கும்போது தான் வெப்பம் உருவாகின்றது. வெப்பத்தின் தன்மை பெருகி ஒளியாக அதாவது வெளிச்சமாகின்றது.
வெப்பத்தினால் வெளிச்சத்தின் நிலைகள் வரப்போகும் போது
1.ஈர்க்கும் நிலை உருவாகி… “காந்தம்”
2.தன்னுடன் அணைத்துக் கொண்டு வளரும் தன்மையாக
3.மீண்டும் மீண்டும் ஜீவனாக்கும் சக்தியாக அது விளைகின்றது.
எதனுடன் சேர்த்து ஒரு அணுவின் தன்மை விளைந்ததோ இந்த நஞ்சு “உலகை ஒளியாக்கும் நிலை…” வருகின்றது.
அது கடந்து வரப்படும் போது ஒவ்வொரு நிலைகள் பெற்று இவ்வாறு தான் “பிரபஞ்சம் இயக்கச் சக்தியாக…” மாறியது.
இயக்கச் சக்தி மாறினாலும் மீண்டும் நஞ்சின் தன்மை மற்றொன்றுடன் மோதி மோதி நெருப்பாகின்றது. பின் அந்த நெருப்பிலே நஞ்சைப் போட்ட பின் அந்த நஞ்சினுடைய சக்தி இழக்கப்படுகின்றது.
நஞ்சால்தான் வெப்பம் உருவாகின்றது. ஆனால் அந்த வெப்பத்தால் நஞ்சை அடக்க முடிகின்றது. இவ்வாறு உருவாகும் உணர்வின் சக்தியை அந்தப் பேருண்மைகளை மெய்ஞானிகள் தனக்குள் கண்டுணர்ந்தனர்.
பேரண்டத்தின் இயல்பின் நிலைகளயும் மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை எப்படிச் செயல்படுகிறது…? என்ற நிலைகளையும் அறிந்துணர்ந்தவர்கள் மகரிஷிகள்.
நெருப்பில் நஞ்சினைப் போட்டால் அந்த நெருப்பின் தன்மை நஞ்சினை எப்படி வீழ்த்தி விடுகின்றதோ இதைப் போல நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சிகரமாக மாற்றிடும் நிலைகள் பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு என்றும் காட்டினார்கள் ஞானிகள்.
ஆறாவது அறிவின் துணை கொண்டு நஞ்சினை வென்று
1.ஏழாவது நிலையாக ஒளியாக மாறுவதைத்தான் சப்தரிஷி என்று சொல்வது.
2.அந்த நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.
இதைச் சீராகச் செயல்படுத்தவில்லை என்றால் உயிருடன் ஒன்றிய நிலை அற்று மனித உரு இல்லாது நஞ்சு கொண்ட உடல்களைத்தான் பெற முடியும்.
உதாரணமாக நாம் மாட்டிற்கு ஆகாரம் போடுகிறோம் என்றால் கடும் நஞ்சாக இருக்கும் நாற்றமாக இருக்கும் அந்த நீரை ஊற்றுகின்றோம்.
மாடு அதை உணவாக உட்கொண்டு அதிலே கலந்த நஞ்சினைத் தன் உடலாக மாற்றிக் கொண்டு அந்த நஞ்சின் வலிமை கொண்டு ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி உடலின் வலிமையை அது பெறுகின்றது.
அதாவது நஞ்சைத் தன் உடலாக மாற்றிவிட்டு அதனுடைய மலத்தை நஞ்சற்றதாக மாற்றுகின்றது.
மனிதனான நாமோ உணவாக உட்கொள்ளும் அதற்குள் இருக்கும் நஞ்சினை நீக்கிவிட்டு நமது உடலை நல்லதாக (அதாவது) ஆறாவது அறிவாக அடைகின்றது.
நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வின் தன்மை உடலிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைத்தான் ஆறாவது அறிவாக உணர்த்துகின்றனர்.
எதையும் சரணமடையச் செய்யும் சக்தியான நம் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.
அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி இருளை நீக்கிப் மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
மனிதனின் நிலைகள் முழுமை அடைந்து விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்.
1.தான் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கி
2.தனி மண்டலமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அந்த அகஸ்தியன் உமிழ்த்திய உணர்வின் தன்மையை எவரெவர் கவர்ந்தனரோ அவர்கள் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றவர்கள் அனைவருக்குமே
1.தீமைகளை அகற்றிடும் நிலையும்
2.நஞ்சினைத் தனக்குள் அடக்கிடும் ஆற்றலும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைகள் வருகின்றது.
பேரண்டத்தின் உண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம். அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் நானும் இதைக் கண்டேன் என்று குருநாதர் உணர்த்தினார்.
குருநாதர் பதியச் செய்த உணர்வை எனக்குள் வளர்க்கும் பொழுது அகஸ்தியன் கண்ட உண்மைகளை என்னாலும் (ஞானகுரு) அறிய முடிந்தது.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் அந்த ஆற்றலை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
ரோட்டில் போகும் போது சந்தர்ப்பத்தால் நம் மீது ஒரு அசுத்தம் பட்டுவிட்டால் நம் உணர்வின் இயக்கம் எப்படி ஆகின்றது?
சாலையில் போகும் போது குளித்துச் சுத்தமாக வெண்மையான உடையைப் போட்டுக் கொண்டு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அந்த நேரம் நாம் போகும் பாதையில் பன்றியோ அல்லது மாடோ எதுவோ சாக்கடையில் இருக்கிறது. அது தன் வாலை வீசுகின்றது. அந்தச் சேறு ஒரு துளி நம் மீது பட்டுவிடுகிறது.
எறும்பு கடிக்கிறது என்றோ அல்லது ஈ வந்து உட்காருகிறது என்றோ அல்லது கொசு கடிக்கிறது என்றோ தன் வாலை வீசியது. கொசுக் கடி தாங்காதபடி அதனுடைய அறிவிற்குத் தக்கவாறு அந்த மாடு இயங்குகிறது.
பன்றிக்குக் கொழுப்புச் சத்து ஜாஸ்தி. அதிகமான வெப்பங்கள் வரும் போது வெப்பம் தாக்கினால் கொழுப்பு உருகும் நிலை வரும்.
பன்றிக்கு வலு இருந்தாலும் இந்த வெயிலின் தன்மை வரப்போகும் போது அதனுடைய ஞானம் சாக்கடையில் போட்டுச் சகதியில் போட்டு தன் உடலைப் பிரண்டு வைத்துக் கொள்கின்றது. அதனால் வெப்பம் உடலில் தாக்குவது இல்லை.
எருமைக்கும் வலு அதிகமாக இருந்தாலும் இந்த வெயில் அடிக்கும் போது அதைத் தாங்கும் உணர்வு வலு இல்லை. அதுவும் சாக்கடையிலோ சகதியிலோ தன் உடலைப் பிரண்டு தான் வரும்.
சகதிக்குள் பிரண்டு வந்த பிற்பாடு என்ன செய்கிறது? அது தன் வாலை வீசுகின்றது. அதனின் சந்தர்ப்பம் அது.
நாம் சுத்தமாகத்தான் போகின்றோம். அப்பொழுது நம் மேலே பட்டு விடுகிறது? பட்டவுடனே “ஐய்ய..ய்ய…, சே…” அந்தச் சகதி பட்டுவிட்டது…!” என்று நம்மை அறியாமலே சொல்வோம். அதைத் துடைக்கப் போகிறோம்.
அடுத்து அந்த மாட்டையோ ஏச ஆரம்பித்து விடுகின்றோம்.
வெறுப்புடன் “சீ… சனியன்…! எவன் வளர்த்தானோ…!” நடு ரோட்டில் போகும் போது இந்த மாதிரிச் செய்துவிட்டது என்று சப்தம் போடுகின்றோம்.
நாம் தவறு செய்யவில்லை. ஆனால் அந்த உணர்வை நாம் நுகர்ந்து அறிகின்றோம்.
1.இந்தத் தீய வினைகள் சித்திரை – சிறு திரைகளாக
2.நம்முடைய அறிவின் தன்மையை மறைக்கின்றது.
அது மாடு. அதற்கு அறிவு இல்லை. அது வாலை வீசியது. சரி… சேறு நம் மீது பட்டுவிட்டது. அதைத் துடைத்துக் கொள்வோம் என்று போனால் பரவாயில்லை.
ஆனால் அந்த மாட்டை வளர்த்தவர்களைத் திட்டுவோம். அல்லது மாட்டைப் பேசுவோம். இயற்கையிலே நம் உணர்வுகள் இப்படித்தான் செயல்படுகிறது.
நான் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கும் அந்தப் புத்தி தான் வரும். சாலையில் போகும் போது பன்றியோ மாடோ இப்படிச் செய்தால்.. “சீ… கிரகம்..,” என்று இப்படித் தான் சொல்வோம்.
பார்…! மாட்டைச் சாலையில் விட்டு விட்டு இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான். அந்த மாடு இப்படிச் செய்து கொண்டிருக்கின்றது என்று அந்த உணர்வுகள் இயக்கி நம்மை அப்படிப் பேச வைக்கத்தான் செய்யும்.
ஆனாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நல்ல அறிவை மறைக்கிறது. இதைத் துடைக்க வழி வேண்டுமா… இல்லையா…?
ஏனென்றால் இது இயற்கை. இது போன்ற நிலைகள் வந்தாலும் நம்மை அறியாமலே நம் நல்ல குணங்களை அது அந்தச் சந்தர்ப்பத்தில் மறைத்து விடுகின்றது.
மறைத்தபின் நாம் நல்ல செயல் இழந்து கோபம் வெறுப்பு வேதனை அந்த மூன்றையும் நாம் எடுக்கப்படும் போது வேதனைப்படுவோம்.
1.வேலைக்குப் போவதற்கு நேரமாகிப் போனதே…!
2.நான் கடைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன்…!
3.இதோடு நான் எப்படிப் போவது…? என்ற இந்த வேதனை வருகின்றது.
வேதனை என்பது விஷம். ஆனால் நாம் தவறு செய்ய வில்லை. இந்த உணர்வுகள் எனக்குள் பட்டுவிட்டது. இது சந்தர்ப்பம்.
சந்தர்ப்பத்தால் ஏற்படும் வேதனை நிலைகளிலிருந்து அது நமக்குள் தீமை எப்படி ஏற்படுகின்றது…? என்பதைக் காட்டுவதற்காத்தான்
ஏனென்றால் அன்றைய தினம் நடந்த இந்தச் செயல் தீமையானதாக நமக்குள் மோப்பமாகப் போகும் போது இருள் சூழ்ந்து விடுகின்றது.
இந்த நிலையைப் பார்த்து இதே வெறுப்பான நிலையுடன் அடுத்து நீங்கள் அலுவலகத்தில் போய் உட்கார்ந்து பாருங்கள்.
அங்கே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி
1.கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது நடந்து போனாலோ
2.என்ன…! எருமை மாடு மாதிரி இருக்கின்றான்…?
3.நம்மை அறியாமலே “இந்த வார்த்தை” வரும்.
தவறு நாம் செய்யவில்லை. நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் வேகத்தின் தன்மை நமக்குள் சித்திரையாகி (சிறு திரையாக) நம் நல்ல குணத்தை மறைத்து விடுகின்றது.
1.சந்தர்ப்பத்தால் நம் வாழ்க்கையில் எப்படித் தீமைகள் வருகின்றது?
2.அதனால் ஏற்படும் தீமைகள் என்ன?
3.அதனின் விளைவுகள் என்ன?
4.அதிலிருந்து விடுபடும் நிலையாக சிந்திக்கும் ஆற்றலை எவ்வாறு பெறவேண்டும்?
5.தீமைகளை எவ்வாறு நீக்க வேண்டும்?
6.நம் மனதை எவ்வாறு பக்குவப்படுத்த்க் கொள்ள வேண்டும்?
7.நம் எண்ணம் சொல் செயல் இவைகளை எப்படிப் புனிதப்படுத்த வேண்டும் என்று
8.காவியங்களைக் காண்பித்து கருத்தினை நாம் அறியும்படிச் செய்தார்கள் ஞானிகள்.
மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறுவதற்காக ஆலயங்களை அமைத்து தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதையும் காட்டினார்கள்.
அருள் மணங்களை நம் உயிருக்குள் அபிஷேகம் செய்து நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக அந்தத் தெய்வச் சிலைகளை வைத்து தெய்வ குணங்களைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
அந்தத் தெய்வ குணத்தை நாம் பெறுவோம். தெய்வ சக்தியை வளர்ப்போம். அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.
காட்டிற்குள் குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவங்கள் – பாம்பு மிரட்டி “வேர்..” – கேன்சர் நோயை நீக்கும் இரத்தத்தை உறிஞ்சும் “கொடி…”
குருநாதர் என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போகின்றார். அப்போது என் கையில் ஒரு வேரைக் கொடுக்கின்றார். அந்த வேரைக் கொடுத்துக் கையில் கட்டிக் கொள்ளச் சொல்கின்றார்.
கட்டிக் கொண்டேன்.
ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே ஒரு பெரிய “புதையல்…” இருக்கின்றது. அதை எடுத்துக் கொண்டு வாடா… என்கின்றார்.
என்ன புதையல் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் “நீ போ…!” என்றார்.
பார்த்தால் ஒரு மலைப் பாம்பைப் போலக் கரு நாகம் – ஒரு காளிங்கராயன் பாம்பு அங்கே அது படுத்திருக்கின்றது.
பார்த்தவுடனே… … …! எனக்குப் பயமாகி விட்டது.
எனக்குப் பயம் வந்தாலும் என்னைக் கண்டவுடனே அந்தப் பாம்பு ஒன்றும் சீறவில்லை. ஏன்…!
குருநாதர் என்னிடம் கொடுத்த வேர் என்ன செய்கின்றது?
அந்தப் அப்படியே பதும்பச் செய்கின்றது. அங்கே போனவுடனே குருநாதர் அதைத் தூக்கிக் கொண்டு வாடா என்று என்னிடம் சொல்கிறார்.
எனக்குப் பயமாக இருக்கின்றது. ஆனால் தூக்கினால் அது வரவில்லை. அந்தப் பாம்பைத் தூக்கிச் சுமக்க நான்கு பேர் வேண்டும் போல் இருந்தது.
என் ஒருவனால் தூக்க முடியவில்லை. சரி விட்டு விட்டு… வாடா… என்றார்.
இது எதனால் பாம்பு பதும்புகிறது?
இயற்கையில் விளைந்த உணர்வுகள் இந்த விஷத்தின் தன்மையாக்கப்படும் போது அதனுடைய செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது என்று
1.விஷத்தை ஒடுக்கும் சக்தி அந்த வேரிலே இருப்பதால்
2.அந்தப் பாம்பு அமைதியாக இருக்கின்றது என்று காட்டுகின்றார்
3.காட்டிற்குள் அனுபவரீதியிலே கொண்டு வருகின்றார் குருநாதர்.
காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.
அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.
அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா…! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.
சாமி… ஒரே நாற்றமாக இருக்கின்றது…! என்று சொன்னேன்.
நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! அதனாலே “உட்கார்ந்து பார்…!” என்று சொல்கிறார்.
உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்…? ஒரு நாளா… இரண்டு நாட்களா…! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.
பத்து பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.
அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்….?
புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.
புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.
இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.
புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.
புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.
அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.
உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உன்னி… ஈ…” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.
இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்லுகின்றார்.
புலியின் ஒரு உயிர் போனது. உயிர் போனபின் அந்த உடலில் பல உயிர்களின் தன்மை வளர்க்கப்பட்டு ஆடு மாடுகளில் உன்னியாகவும் ஈ ஆகவும் செல்லுகின்றது.
அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது? இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக…” வளர்கின்றது.
நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்த்னு நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.
இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.
அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.
அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.
இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் “கிறு..கிறு..” என்று சுற்றுகின்றது.
அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.
1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.
2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.
3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.
4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.
5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர். ஒரு வித்தாகி விடுகின்றது.
பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி சுவையாக மாறுகின்றது.
இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.
இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின் எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது
4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.
பக்கத்திலேயே இருக்கச் சொல்கிறார். வெளியில் போய்ச் சாப்பிடக் கூட விடவில்லை. பட்டினியாகத்தான் உட்கார வேண்டும். பச்சிலையை மெல்ல வேண்டியது அதைச் சாப்பிட வேண்டியது புலியைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது.
இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.
அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது.
கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார்.
கத்தி எதற்கு சாமி…? என்றேன்.
கத்தியைக் கொண்டு போ என்றார்.
அங்கே ஒரு மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து இருக்கின்றது.
அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.
கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்…” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா…” என்றார்.
நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.
பார்த்தயா…! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.
இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.
நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின் உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.
விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம். மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.
உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.
அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.
வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்து விடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.
கேன்சர் போன்ற நிலைகளுக்கு இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால் அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.
கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.
காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது?
செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது?
மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது?
ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச் சேர்க்கப்படும்போது
1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி
2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.
சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அதனின் உட்பொருளை அறிந்துள்ளோமா…?
கோயிலில் போய் நம் கஷ்டத்தை எல்லாம் சொல்லிவிட்டால் அந்தத் தெய்வம் நிவர்த்தி செய்து தரும் என்று தான் நாம் நினைக்கின்றோம்.
வாழ்க்கையில் கஷ்டம் வேதனை என் தொழில் நடக்க வில்லை… அது நடக்கவில்லை… இது நடக்கவில்லை… என்று வேதனையை எடுத்துக் கொள்கின்றோம்.
பிறருடைய கஷ்டங்களை நாம் கேட்கின்றோம். அறிகின்றோம்.. நுகர்கின்றோம்… பின் உதவி செய்கின்றோம்.
பிறருடைய உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கின்றது. பிறருடைய உடலில் கோபம் இருக்கின்றது. பிறருடைய உடலில் வேதனை இருக்கின்றது.
இதையெல்லாம் நாம் பார்த்து “பாவம்… அவர்கள் குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். நல்லவர்களாக இருக்கின்றார்கள்.
சந்தர்ப்பத்தில் அவர்கள் குழந்தை தான் அத்தனை அட்டகாசம் செய்கின்றான். அவனைப் பார்த்தால் அவர்களுக்குத் தொல்லையாகின்றது என்று நாம் அதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.
பிறர் சிரமப்படுவதைப் பார்க்கின்றோம்.. உணர்கின்றோம்.. அவன் திருந்தி வாழவேண்டும் என்றும் நினைக்கின்றோம். ஆனால் அதையெல்லாம் கூர்ந்து கவனித்து நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே
1.பிறருடைய அந்தத் தோஷம்
2.”தோஷமாக…” நமக்குள் வந்து விடுகின்றது.
எது…?
பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வருகின்றது. இது தான் பிரதோஷம். சிவன் கோயில்களில் இதைத்தான் “பிரதோஷம்…” என்று தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.
பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வந்தவுடனே நாமும் புலம்பத் தொடங்குவோம்.
காசு கொடுத்தவன் கொடுக்கவில்லை. என் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நம் வீட்டிலேயே “அந்தத் தோஷம்” இங்கே வந்து விடுகின்றது
நம் வீட்டில் இருப்பவர்கள் நன்றாக உயர்வாக இருந்தாலும் உடலில் நோய் வந்து விட்டது என்றால் உற்றுப் பார்க்கின்றோம். “அவர்கள் உடலில் விளைந்த தோஷம்” நம்மிடம் வந்து விடுகின்றது.
நான்கு பேர் நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். அவர்கள் உடலில் சந்தர்ப்பவசத்தால் நோய்கள் வருகின்றது. அதை நாம் கேட்டறிகின்றோம். “நண்பருடைய தோஷம்…” நமக்குள் வந்து விடுகின்றது.
1.இந்த வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை.
2.வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டறிந்து
3.இதை எல்லாம் நமக்குள் சேர்த்ததும்
4.நமக்குள்ளும் தோஷமாகின்றது.
நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள். நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாக நேசித்தோமோ இந்தக் கணக்கின் பிரகாரம் நம் உடலுக்குள் மாற்றங்களாகின்றது.
கோபம் கோபம் என்று ஆத்திரப்பட்டால் இரத்தக் கொதிப்பு வருகின்றது.
கோபமும் வேதனையும் சலிப்பும், சஞ்சலம் வந்து சரவாங்கி நோயாகிக் கை கால் எல்லாம் முடக்குகின்றது. கோபம் வந்தால் “பளீர்..” என்று வந்து வெட்டி “வெடுக்…”கென்று இழுத்துக் கொள்கின்றது.
விஷம் என்ற நிலைகள் வந்துவிட்டால் பாம்பு போல “தொளக்..” என்று போட்டு விடுகிறது. விஷம் பாய்ந்தவுடனே என்ன செய்யும்? கை இல்லாமல் போகும்.
நம் வாழ்க்கையில் நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாகச் சுவாசித்தோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் அதறிகுத்தக்க மாற்றம் வருகின்றது.
1.நாம் சுவாசித்த நந்தி… “ஈஸ்வரர்”
2.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈஸ்வரனிடம் படுகின்றது.
3.நாம் சுவாசித்தது நம் உடலுக்குள் போய்
4.எந்தக் குணமோ உயிரைப் போலவே ஜீவ அணுவாக உருவாகி
5.அந்தக் கணக்குகள் நமக்குக் கூடும்.
உயிரைப் போலவே ஜீவனாகின்றது. உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆக..
1.விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.
2.எதன் சுவையோ அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் வரும்.
3.வேதனை என்ற சுவை இருந்தால் வேதனை என்ற உணர்ச்சி வரும்.
அது தான் உயிரைப் போலவே அந்த அணுக்கள் அந்த உடலில் உருவாகும் – விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.
எவ்வளவு அழகாகக் கொடுக்கின்றார்கள்? நாம் எந்தக் குணத்தை அதிமாக எடுத்தோமோ அதன் ரூபமாக நம்மை மாற்றும்.
நந்தீஸ்வரன் – நாம் சுவாசித்த உணர்வெல்லாம் உடலில் சிவமாக மாறிவிடுகின்றது.
ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்றால் அது எப்படி…?
நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தவுடனே பார்வதி பஜே அரஹரா சம்போ மகாதேவா.
1.பார்வையில் பார்க்கின்றோம் – பார்வதி பஜே
2.வேதனைப்படுபவரின் உணர்வுகள் நமக்குள் வந்து நம்மை இயக்கி – அரஹரா
3.சந்தித்த சந்தர்ப்பம் இணைந்து – சம்போ
4.நம் உயிர் மகாதேவன் அதை உருவாக்கி விடுகின்றான் – மகாதேவா
கோபப்படுபவர்களைப் பார்த்தாலே பார்வதி பஜே அந்தப் பார்வையில் படுகின்றது நுகர்கின்றோம். பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா கோபமான உணர்ச்சிகள் நமக்குள்ளே வந்துவிடுகின்றது.
அதாவது… பிறருடைய தோஷங்களை நாம் அறிந்து உதவி செய்தாலும் இந்தத் தோஷங்களைச் சந்தித்த சந்தர்ப்பம் நமக்குள் என்ன நடக்கின்றது? எந்தக் கணக்கு கூடுகின்றது?
“சம்போ மஹாதேவா…” – நான் சந்தித்ததை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றான். மஹா தேவனாக இருக்கின்றான்,
யார்…?
நம் உயிர்…!
நமக்கு இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்களே…! நாம் யாராவது நினைக்கின்றோமா?
பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருந்து நல்ல குணங்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் “நீ இரு…” என்று இருக்கச் செய்து விடுகிறோம்.
நான்கு மணி வரையிலும் பட்டினியாக இருந்துவிட்டுச் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். விளக்கைக் கொண்டு போய் வைக்கின்றோம் – இது கார்த்திகேயா.
கார்த்திகை என்றால் விளக்கை முன்னாடி வைத்துக் காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு முன்னாடி இருக்கிறது,
விளக்கில் எல்லாப் பொருளும் தெரிகின்றது.
ஆறாவது அறிவால் இதைத் தெரிந்து கொள்…! என்று விளக்கை வைத்துக் காட்டுகின்றான். அந்த விளக்கு எது?
துருவ நட்சத்திரத்தின் விளக்கு. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இப்படித் தூய்மைப்படுத்து. தன்னுடைய மனதை விளக்கு என்று தான் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
இதற்குப் பதில் புறத்தீயின் நிலைகளை வைத்து தீபத்தை வைத்துக் காண்பிக்கின்றனர்.
ஆக… சாப்பிடவில்லை என்றால் நல்ல அணுக்கள் கெட்டுப் போகும். இந்த ஆறாவது அறிவால் தெரிந்தும் கூட பட்டினியாக இருந்து விரதம் இருக்கின்றோம்.
ஆனால் எது விரதம்?
வேதனை, வெறுப்பு, சஞ்சலம் அவன் அப்படிச் செய்கின்றான் என் பையன் என்னை எதிர்க்கின்றான் – இதைப் போன்ற உணர்வுகள் எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும் போது அந்தத் தீமைகள் நமக்குள்ளே போகாமல் தடுக்க வேண்டும்.
அது தான் உண்மையான விரதம்.
நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுத்தால் வீரியமாகும். அதற்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் சோர்வடையும். சோர்வோடு இருக்கும் போது எப்படி இருப்போம்?
இன்றைக்கு விரதம் என்றால் உற்சாகமாகவா இருக்கின்றீர்கள்…! முகம் அப்படியே வாடிப்போகும்… இல்லையா…! அந்த முகம் மாறினவுடனே என்ன செய்கின்றது,
சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரனுக்குக் கொண்டு வந்து முன்னாடி கொடுத்து “இந்தாப்பா சாப்பாடு….! என்று கொடுக்கின்றோம்.
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்.
2.என் மாமியார் திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.
3.என் மாமனார் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என் வீட்டுக்காரர் திட்டிக்கொண்டே இருக்கின்றார்.
4.கடன் கொடுத்தது அவன் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்.
5.சாப்பாட்டைக் கொடுத்து இதையெல்லாம் நந்தீஸ்வரன் காதில் மிகவும் வேதனையோடு சொல்வார்கள்.
பிரதோஷம் அன்றைக்கு விரதம் எது?
சங்கடம், சலிப்பு, சஞ்சலம், வேதனை, வெறுப்பு இதைப் போன்ற தீமையான உணர்வுகளைச் சுவாசிக்காமல் இருப்பதற்காகவும் தீமைகளை நாம் நினைக்கக்கூடாது என்பதைத்தான் விரதம் என்றார்கள் ஞானிகள்.
ஆனால் பிரதோஷம் அன்றைக்கு
1.என் வீட்டுக்காரர் மாமனார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.
2.மாமனார் சொல்வது மாமியார் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
3.இவர்கள் பேச்சைகளைத்தான் என் பிள்ளைகள் கேட்கிறது.
4.எங்கள் வீட்டிலேயும் அவர்கள் பேச்சைத்தான் கேட்கிறார்கள்
5.இந்தக் குறைகளை நீ போய் ஈஸ்வரனிடம் சொல்லப்பா என்று
6.தோஷங்களை நீக்குவதற்குப் பதில் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் இதெல்லாம் குருநாதர் சொன்ன பிற்பாடு தான் பிரதோஷம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இல்லை என்றால் எனக்கும் தெரியாது.
பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருப்பார்கள். அன்றைக்கு நமக்கும் கொஞ்சம் பசி எடுக்கும். நாம் சாப்பாடு வேண்டும் என்று கேட்டால் “இப்போது என்ன அவசரம்…?” என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்,
நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். எனக்குச் சாப்பாடு கொடு என்று கேட்டால் “சாமிக்குக் கொடுத்த பின் தான் சாப்பிட வேண்டும்..” என்று அவர்களுக்குக் கோபம் வரும்.
விரதம் இருக்கும் அன்றைக்கு இது போல நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு எப்படிக் கோபம் வரும் என்று பாருங்கள்…! பிறருடைய தோஷங்களை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.
எல்லா தோஷத்தையும் நீக்கி உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் உடலாக இருப்பது தான் துருவ நட்சத்திரம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நமக்குள் நம்மை அறியாது வந்த – வரும் தீய வினை சாப வினை பூர்வ ஜென்ம வினை பாவ வினை என்று எல்லாத் தோஷங்களையும் நீக்க முடியும்.
துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிப்பதால் ஏற்படும் நன்மைகள்
உதாரணமாகத் தொழிலில் நஷ்டம் ஆகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது மனச் சோர்வு அல்லது வேதனை இரண்டும் நமக்கு வரப்போகும் போது
1.இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை ஊட்டி விடுகின்றது.
3.சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது.
4.தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகின்றது.
5.கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.
இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவரும் அந்த வேதனையை நுகரப்படும்போது அவர்கள் உடலுக்குள்ளும் அவருக்குத் தக்கவாறு சில நோய்கள் வரத் தொடங்கி விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டும் என்றால் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானம்.
நாம் வேதனை வேதனை என்று எண்ணும் போது அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்தால் நம் உடல் உறுப்புகளிலுள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.
விஷத்தின் தன்மை பெற்றால் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் கலந்து எந்த உறுப்புகளில் விஷத்தன்மை அதிகமாகின்றதோ அந்த உறுப்புகளில் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
விஷத்தின் தன்மைகளை முறித்து ஒளியின் உடல் பெற்றது அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன நிலைகள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வினைச் சூரியன் கவர்வதனால் அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி நம் இரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.
அப்பொழுது நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று அதன் வலிமை பெறுகின்றது.
இப்படி நாம் தினமும் அதைச் சேர்த்துக் கொண்டு வந்தால்
1.நம் உடலிலுள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் மாற்றும்.
2.சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.
நம் இருதயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
1.இருதய வால்வுகள் சீராக இயங்கி
2.இருதயத்தை இயக்கும் அணுக்கள் வீரியமடைந்து
3.நாம் மன உறுதி பெற்று மன பல கொண்டு
4.சிந்தித்துச் செயல்படும் சக்தியும் வருகின்றது.
5.அமைதியும் சாந்தமும் கொண்டு இந்த வாழ்க்கை வாழ முடியும்.
இவ்வாறு வேதனை என்ற நிலையை நீக்கிச் சிந்திக்கும் வலிமை பெறும்போது
1.ஒவ்வொரு செயலையும் நாம் எப்படிச் செய்யலாம் என்ற உறுதியான எண்ணமும்
2.பிறரிடத்தில் உதவியோ அல்லது நல்ல சொல்களைச் சொல்லப்படும் போது
3.அதனால் மற்றவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
4.அமைதியும் சாந்தமும் கொண்டு பண்பும் பரிவும் கொண்டு வாழ இது உதவும்.
5.குடும்பத்திற்குள் பெரு மகிழ்ச்சி ஏற்படும்.
ஆகையினால் தினசரி அதிகாலையில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அந்தச் சக்தியை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.
இருதயத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலு ஏற்றி “நம் மன பலத்தைக் கூட்டிச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் வழி”
இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று மனதைத் தெளிவாக்கிக் கொள்ல வேண்டும்.
அந்த அருளைப் பெருக்கி இருளை அகற்றி நம்மை அறியாது வரும் தீமைகளைப் “பற்றற்றதாக…” மாற்றி
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றி
2.அன்புடனும் பண்புடனும் பரிவுடனும் ஒன்றி வாழும்
3.அருள் குடும்பமாக நாம் மாற்றியாக வேண்டும்.
நம் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்து பின் நாம் தனித்து நிற்க வேண்டிய சூழல் இருந்தாலும் பண்புடன் வழிகாட்டி பண்புடன் அரவணைத்து அன்புடன் அரவணைத்து வாழ வேண்டும்.
தனிக் குடும்பமாகச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டும் பொழுது அரவணைத்து வாழும் சக்தியை நாம் பெறமுடிகின்றது.
இதே போல உங்கள் வாழ்க்கையில் குடும்பத்தில் கஷ்டமானாலும் தொழிலில் நஷ்டம் என்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இருதயத்தில் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.
அப்போது சிறிது நேரத்திலேயே நல்ல சிந்தனை வருகின்றது. ஏனென்றால்
1.உடலிலுள்ள எல்லா உறுப்புக்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும்
2.உந்தித் தள்ளும் அந்த உணர்ச்சிகள்
3.இருதயத்திலிருந்து தான் (இரத்தத்தின் வழி) செல்லுகின்றது.
இருதயத்திலிருந்து உங்கள் உடல் முழுவதும் படரப்படும் பொழுது சிறு மூளையின் பாகத்திற்குச் சென்ற பின் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுக்கின்றது.
1.எதைச் செய்தால்… எது நல்லது…?
2.எப்படி இருந்தால் நமது வாழ்க்கையில் நல்லதாக இருக்கும்…?
என்று சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.
அந்த அருள் உணர்வைப் பெருக்கும் பொழுது தீமைகளை நீக்கி நல் உணர்வைப் பெறும் ஞானம் சாந்தம் விவேகம் என்ற உணர்வுகள் நமக்குள் ஊடுருவிச் சென்று
1.நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியாது.
ஆகவே உங்களுக்குள் வரும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று இந்தத் தியான முறைப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்குள் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப் பொருளை காணும் திறன் நீங்கள் பெறமுடியும்.
இல்லை என்றால் உங்களுக்குள் வெறுப்பு வேதனை என்று ஆகி அதற்குத் தகுந்த உங்களுடைய சொல்லும் செயலும் செயல்படத் துவங்கி விடுகின்றது.
பிறிதொருவர் உங்களிடம் நல்லதைச் சொன்னாலும் ஏற்காதபடி இந்த நியாயத்தைத் தான் பேசுவீர்களே தவிர
1.பண்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையோ
2.பண்பை வளர்த்துக் கொள்ளும் நிலைகளோ
3.வரக்கூடிய தீமைகளை அகற்றக் கூடிய நிலைகளோ
4.நமக்குள் வருவது மிகவும் சிரமம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கி தியானித்தீர்கள் என்றால் அருள் ஞான வாழ்க்கையாக வாழ முடிகின்றது.
தீமைகளை வெல்லக் கூடிய ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.
ஒவ்வொருவரும் அந்த அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணிப் பிரார்த்திக்கின்றேன்.