இயற்கை உரத்தைப் பயன்படுத்தாமல் இரசாயண உரத்தைப் பயன்படுத்துவதால் நமக்கு வரும் கேடுகள்

Image

Third-Eye-Chakram

இயற்கை உரத்தைப் பயன்படுத்தாமல் இரசாயண உரத்தைப் பயன்படுத்துவதால் நமக்கு வரும் கேடுகள் 

உதாரணமாக  மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களின் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர் நிலையாகப் படும் போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய  முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த  விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்து விடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

ஆக செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த  விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும்.  இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ  இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரை “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இன சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தியானத்தில் புருவ மத்தியில் ஏற்படும் மாற்றங்கள்

Intuition-Third-Eye

தியானத்தில் புருவ மத்தியில் ஏற்படும் மாற்றங்கள்

அகஸ்தியன் துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு மனமும் ஒரு மனமாகி
3.இரு உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.

ஒளியின் சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி பிறவியில்லா நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

நமது பூமி அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.

அதிகாலை 4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.நம் உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில் அது பரவுகின்றது  நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.

அடிக்கடி இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருக்கும். ஆக தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின் தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்களை ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது
2.புருவ மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா என்றாலே உங்கள் உயிர் தான்.

உங்கள் உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள்.

அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இப்படி அதை நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள் செல்லுகின்றது.

1.உங்கள் புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.

சிலருக்குக் குறு குறு என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.

உங்கள் நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள் ஏங்கும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.
5.புருவ மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை.

இரண்டு கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது. அதன் வழியாக உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.

நமது இரத்த நாளங்களில் பெருக்குகின்றோம்.

உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் இரத்த நாளங்களுக்குள் கலப்பதும் உடல்களில் உள்ள அணுக்கள் பெறும் அந்த உணர்ச்சிகளையும் “நீங்கள் அறிய முடியும்”.

உங்களுக்குள் அது பேரொளியாக மாறும். அருள் வட்டமாக ஒளி வட்டமாகத் தெரியும். உங்கள் உடலிலிருந்து “பளீர்.. பளீர்…” என்று வெளிச்சம் வருவதையும் காண முடியும்.

நம் அன்றாட வாழ்க்கையில் வரும் “தோஷங்களை…” நீக்கிப் பழக வேண்டும்

Image

shanidev - peyarchi

நம் அன்றாட வாழ்க்கையில் வரும் “தோஷங்களை…” நீக்கிப் பழக வேண்டும்

எத்தனையோ கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும். இடுப்பு வலிக்கிறது, மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது. சர்க்கரைச் சத்து வந்து விட்டது. இரத்தக் கொதிப்பு வந்து விட்டது என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்து விடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் படபடா.. படபடா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு படபடா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள். அவர் தவறு செய்யவில்லை.

1.செல்வம் இருக்கிறது.
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

பிறருடைய உணர்வுகள் இவ்வாறு நமக்குள் தோஷமாக வந்து விடுகின்றது.

இதே மாதிரி… சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறக்கின்றது. பெண் குழந்தைகள் பிறந்த பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற காலத்தில் தாய் தகப்பனுக்கு நிம்மதி இல்லை.

தாய் தகப்பனுக்கு நாம் என்ன கடமை செய்ய வேண்டும்? அது தெரியவில்லை. தாயினுடைய உண்மையை உணர முடியவில்லை.

இன்றைக்குப் பெண்கள் பிறந்த குடும்பங்கள் எல்லாம் மிகவும்  அல்லல்படுகின்றார்கள்.
கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய தாய் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்? நாம் அதை மதிக்கின்றோமா…!
அவர் நம் மீது அந்தப் பாசத்திற்குத் தகுந்தபடி

1.நாம் எண்ணியது நமக்குள் நடக்க வேண்டும்
2.நம் தாய் எண்ணியது எனக்குள் நடக்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்தச் சக்தி நமக்குள் உருவாகும்.

நாம் யாராவது இப்படி எண்ணுகின்றோமா?

தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “நான்… வாழ வேண்டும்” என்று
1.தாயை அதன் வழியே  கொண்டு வர வேண்டும் என்று
2.நினைத்தோம் என்றால் அது தவறான வழி ஆகும்.
3.இப்படி நிறையப் பேர் உண்டு (மகனும் சரி பிள்ளையும் சரி)

தன் உணர்வின் ஆசைக்கு அந்த இணக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக
1.நம்மை ஈன்று மனிதனாக உருவாக்கிய அந்தக் கடவுளையே
2.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தையே
3.நமக்கு நல்லது சொன்ன குருவையே
4.மனதை நோகும்படிச் செய்கின்றோம்.

இதையெல்லாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய உலகில் ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இருக்கின்றதா? சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொல்ல முடிகிறதா…!

ஆகவே இப்படிப் பல வகைகளிலும் வரும் தோஷங்களெல்லாம் நமக்குள் சேர்ந்த பிற்பாடு உடலில் நோய் வந்துவிடுகின்றது, நம் நல்ல அணுக்களை எல்லாம் அது கொன்று சாப்பிடுகின்றது.

இதை யார் மாற்றுவது? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
அதே சமயத்தில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்து முடிப்பதற்கு முன்னால் அந்தத் தாய் படுகின்ற அவஸ்தையோ
1.வயதாகிப் போகின்றதே… வயதாகிப் போகின்றதே… என்று எண்ணுவார்கள்
2.இன்ன வயதாகிப் போனால் அந்த வயதிற்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமே என்று
3.தாய் எண்ணி எண்ணி எண்ணிப் பிள்ளைகளை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறது,

பிள்ளையைப் பார்க்கும் போதேல்லாம் இந்த வேதனை உண்டாகின்றது.

ஆனால் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை வர வேண்டும். நல்லது வர வேண்டும் என்று நினைக்கின்றதா என்றால் தாய் நினைக்கவில்லை.

ஆசை இருக்கிறது. வேதனை எடுத்து அதைத் தனக்குள் எடுத்து வேதனையான உணர்ச்சியைச் சொல்லி அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வேதனை வருகின்றது.
இவ்வாறு அந்த வேதனை விஷம் என்ற நிலைகள் பட்டால் நினைவென்ற நிலைகள் இழுக்கப்பட்டு
1.தாயை நினைத்து அந்த வேதனையை எடுக்கின்றோம்
2.அது அறியாமையாக வந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

குழந்தையை மட்டும் சொல்வதற்கு இல்லை.

தாயின் ஆசைகள் “இப்படி நடக்கின்றதே… நாளைக்கு என்ன ஆகப் போகின்றதோ…!” என்ற இந்த வேதனையைச் சுவாசிக்கின்றது,

குழந்தையை எண்ணி வேதனையை உருவாக்குகின்றது. இந்த உள் உணர்வின் தன்மை சொல்லாகப் போகும் போது என்ன செய்கின்றது?

ஏனென்றால் ஒரு நெருப்பில் பாத்திரத்தை வைத்து பதார்த்தத்தைப் போடுகின்றோம். பல பொருட்களைச் சேர்த்து வேக வைக்கின்றோம். நாம் போடுகின்ற பொருளுக்குத் தக்கவாறு தான் அதிலே ருசி வருகின்றது.

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு. நம் குழந்தை மேலே ஆசையாக இருக்கின்றோம். ஆனால் “சீக்கிரம் திருமணம் ஆகவில்லையே…” என்கிறபோது அது வேதனை.

அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சரக்குகளைச் சேர்த்து இந்த வேதனை உணர்வை உருவாக்கி இந்த உணர்வின் தன்மை உமிழ் நீராக்கி நம் உடலுக்குள் வளர்த்து இந்த உணர்வைச் சொல்லாக்கி வெளியில் சொல்லப் போகும் போது என்ன செய்கின்றது?
இந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுது எல்லாம் அந்த வெறுப்பு வருகிறது. “இப்படி ஆகின்றதே….” அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்வு வரப்போகும் பொழுது குழந்தைகளுக்கு என்னவாகும்?

தாய் பார்க்கும் பொழுது இந்த மாதிரி இருக்கின்றதே என்று அவர்கள் வாயிலேயே தன் பிள்ளையிடம் சொல்லுகின்றது. அதை வாங்கி அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் மோசமாகின்றது.

நமது அறியாத நிலைகள் நமக்குள் எந்த நிலையைச் செய்கின்றது? “இதெல்லாம் ஒரு தோஷம் தான்”.

இந்தத் தோஷங்களை நீக்கும் வழி என்ன? என்பதைத்தான் சிவன் ஆலயத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர். சிவன் ஆலயத்தில் சிவனுக்கு முன்பு நந்தியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்கும் பொழுதெல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்”.

ஏனென்றால் அந்த மகரிஷிகள் இதைப் போன்ற தோஷங்களை எல்லாம்  நீக்கி நஞ்சை அடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிப் பழகியவர்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்தால் நமக்குள் வரும் பேரிருளை நீக்கிப் பேரொளியாக மாற்றும்.
1.நம் காரியங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற
2.அந்தத் தெளிவான ஞானங்கள் வரும்.

செய்து பாருங்கள்.

ஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்…! நடந்த நிகழ்ச்சி

Image

Jaadhagam - nadi

ஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..?  நடந்த நிகழ்ச்சி

 

இன்று உதாரணமாக ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.

அவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.

சினிமா தியேட்டர் ரைஸ் மில் என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது.  மூடியே கிடந்தது.

இப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.

அப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.

அங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.

இங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமா மகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்த தியானத்தை அங்கே மேற்கொண்டேன்.

கோலமாமகரிஷி அவர் பெற்ற உணர்வுகள் அதை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.

இந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.

அதர்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.

அதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.

எல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலே எப்படி வந்தது என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.

மறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.

மூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.

“என்ன நடக்கின்றது…!” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.

இருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,

“சாமி வருவார்…! வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.

நன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா?

ஆமாம்…! சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.

அப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.

இந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,

இவர் நட்சத்திரம் இவர் பெயர் இவர் பூர்வ புண்ணியம் இவர் எந்த எந்த வழி என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்?

இவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்கிறது…? என்று பார்க்கின்றார்கள்.

அந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்?

அவர் காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.

அதற்காக அந்த ஜோசியக்காரருக்குக் நிறையக் காசு கிடைக்கிறது.

ஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை  எல்லாம் சொல்வார்.

ஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.

ஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார். நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார் என்று தேடி வருகின்றார்கள்.

குட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.

இதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.
2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.
3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.
4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.

ஜாதகக்காரருடைய என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.

ஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட்ட வைக்கும் பொழுது தான் தெரியும்.

அதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து  சொல்கிறார்.

எனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.

“என்ன…! என்று நண்பர் கேட்டார்.

நான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.

அவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.

“எந்தச் சாமியார்..?” என்று கேட்டார்.

அவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

“அப்படியா” சரி பார்க்கலாம் என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.

சாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.

அவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.

வந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.

நான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.

அதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள  அனைத்தையும் சொன்னார்.

என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.

சரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.

இனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.

ஏனென்றால் இதைப் போன்ற ஜாதகக்காரர்கள் மக்கள் யார் யாரிடம் எல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போய் அவர் ஜாதகங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது.

ஜோதிடம் பார்ப்பதற்காக வரும் மனிதர்களின் நட்சத்திரம் என்ன…? ஏது…? அவர் உணர்வு என்ன…? என்று எல்லாம் அடுக்கு வரிசையில் தெரிந்து கொண்டு தன் இந்த மாதிரித் தவறுகளைச் செய்கின்றார்கள்.

இந்த லாட்ஜுகளில் கேம்ப் போட்டுச் செய்கின்றார்கள். இவர்களிடமெல்லாம் இந்த மாதிரி வேலைகள் ஏராளமாக உண்டு. ஒன்றும் தெரியாதது மாதிரிச் சொல்வார்கள்.

இதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே அனுபவபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

“மனிதனுக்கு ஜாதகம் இல்லை”.

 

தினசரி நிலநடுக்கம் ஏற்படுகிறது… பனிப் பாறைகள் உருகி கடல்கள் பெருகி ஊர்கள் மூழ்கப் போகின்றது… பூமி வெப்பமாகி விட்டது… என்று கண் கூடாக இன்று பார்க்கின்றோம் – “இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்”

Image

EARTH-MANTLE

தினசரி நிலநடுக்கம் ஏற்படுகிறது… பனிப் பாறைகள் உருகி கடல்கள் பெருகி ஊர்கள் மூழ்கப் போகின்றது… பூமி வெப்பமாகி விட்டது… என்று கண் கூடாக இன்று பார்க்கின்றோம் – “இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்”

 

 

பூமிக்கடியில் அணுக்கதிரியக்கங்கள் இன்று மிகவும் அதிகமாகி விட்டது. இது வெடித்து மக்கள் இறந்தாலும் தொக்கிய உணர்வுகள் பூமிக்கடியில் அதிகமாகச் சேர்த்துக் கொதிகலனாக மாறி பாறையெல்லாம் குழம்பாக மாறப் போகின்றது.

 

அணு உலைகளில் அந்த எரி பொருளை எரித்தவுடனே வேகமாகச் சூட்டை உண்டாக்குகின்றது. அதைப் போன்ற நிலை நம் பூமியின் நடு மையத்திலும் அதிகமாகிவிட்டது.

 

உதாரணமாக மின்னல்கள் தாக்கப்படும் போது ஒரு நொடிக்குள் எல்லாவற்றையும் பஸ்பமாக்கி விடுகிறது. மின்னல்கள் கடலிலே விழுந்த பின் அடங்கி மணலாக மாற்றிவிடுகின்றது.

 

மணலாக மாற்றியதை யுரேனியமாகப் பிரித்து மீண்டும் வெடிக்கச் செய்கின்றார்கள் விஞ்ஞானிகள். (அணு உலைகள், குண்டுகள், லேசர் இயக்கங்கள், மிகவும் சக்தி வாய்ந்த எலெக்ட்ரானிக் கருவிகள்)

 

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் இயற்கையாக வெளிப்படுத்தும்

2.கதிரியக்க உணர்வுகள் ஒன்றின் வலு அதிகமானதும்

2.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கமும்

4.ஒன்றுடன் ஒன்று மோதும் போது

5.எல்லாவற்றையும் கடினமாகச் சூடாக்கச் செய்கின்றது.

 

(சூரியன் அடிக்கடி நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொல்வார்கள் – SUN FLARE)

 

அது மோதும் இடங்களில் உயிரினங்களையும் கல்லுக்குள் இருப்பதையும் மற்ற எல்லாவற்றையும் மடியும்படிச் செய்கின்றது.

 

அதை வெடித்துப் பரீட்சித்தார்ந்தமாகப் பார்த்தாலும்

1.எல்லாமே பூமியின் சுழற்சியால் நடுமையம் அடைகின்றது.

2.நடு மையத்தில் கொதிகலனாகவும் மாறுகின்றது.

 

அதே சமயம் பூமிக்குப் புறத்திலும் வெடிக்கச் செய்தது சூரியனுக்கும் மற்ற நம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோள்களுக்கும் சென்றுவிட்டது.

 

இந்த விஷத்தின் தன்மைகள் நட்சத்திரங்களிலும் கோள்களிலும் பரவப்பட்டு நமது பிரபஞ்சத்திலும் அதிகமாக விஷத்தன்மை பரவி விட்டது.

 

நமது பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் விஷத் தன்மைகளை வடித்திடும் ஓசான் திரை உண்டு. அதிலே விஷ அடுக்குகள் உண்டு. தன் இனத்தைச் சேர்த்துக் கொள்ளும். பூமிக்குப் பாதுகாப்பு அது.

 

கீழே சுழலும் போது தனக்குத் தேவைப்பட்ட உணர்வு தான் இயக்கத்திற்கு வரும். ஆனால் அதுவும் இன்று என்ன ஆகி விட்டது,

 

பிரபஞ்சத்தில் மனிதனால் செயற்கையால் பரவச் செய்யப்பட்ட அணுக்கதிரியக்கங்கள் துருவப் பகுதி வழியாக மீண்டும் பூமிக்குள் நுழைந்து ஓசோன் திரையும் ஓட்டை ஆக்கிவிட்டது.

 

1.இந்தக் கதிரியக்க உணர்வுகள் அதிகமாகி

2.அது குவிந்து நம் துருவத்தில் வரப்போகும் போது

3அங்கிருக்கும் பனிப்பாறைகள் கரைகின்றது.

4.வட துருவமும் சரி தென் துருவமும் சரி கரைந்து கொண்டேயுள்ளது.

 

ஆனால் அதே சமயத்தில் பூமியின் நடு மையமோ கொதிகலனாக மாறுகின்றது. பூமிக்குள் இவ்வாறு ஆகப் போகும்போது

1.முதலில் கொதிகலன் சிறிதளவு இடத்தில் இருந்தது.

2.அப்புறம் அது கொஞ்சம் பெரிதானது.

3.இப்படிப் பெரிதாகப் பெரிதாகப் பெரிதாகக் கூழ் மாதிரி ஆகிக் கொண்டு  வருகிறது.

 

(ஏற்கனவே) கூழாக மாறியதால் தான் பாறையில் மாற்றமும் நில நடுக்கம் பூகம்பம் நில அதிர்வு மற்ற நிலைகளும் வருகின்றது.

 

நாம் பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு பல சரக்குகளைச் சேர்த்து ஒன்றாக்குவது போல பூமியின் நடு மையத்தில் உணர்வின் தன்மை பல கலவைகள் ஆகின்றது.

 

கொதிகலனாகும் போது கலவையாகிய பின் வெடிப்பாகி மீண்டும் இறங்கி இதனுடைய உணர்வுகள் மாற்றிக் கொண்டே இருக்கும்.

 

துகள்கள் தூசிகள் போவதில்லை. ஆனால் கீழிருந்து உணர்வின் தன்மை மாறினால் மேலே உறைய உறைய உறைய அதன் உணர்வு மாறினாலும்

1.எல்லாம் கலவையாகச் சேர்த்துக் கீழே

2.நம் பூமியின் நடுமையம் “வெப்பத்தால்… உருக்கப்படுகின்றது”.

 

உருகிய நிலைகள் கொண்டு தான் ஆவியாக மாறுகின்றது. ஆவியாக மாற்றப்படும் போது ஒன்று சேர்த்து இருக்கும் போது ஒன்றுமில்லை. வெடித்து விட்டால் இதன் வழி கூடி ஆவியினுடைய சத்துக்கள் வெளி வருகின்றது.

 

சில நேரங்களில் உள் வெடிப்பு இருக்கும். பாறையில் மாற்றம் இருக்கும்.

 

ஆக உள் வெடிப்பு என்று இருக்கப்படும் போது இது சிறுகச் சிறுக மேலே வரும் போது வெடிப்பின் தன்மை அதிகரிக்கும்.

 

1.முதலில் 3,500 மைல் தூரத்தில் (அடியிலிருந்து) மேல் ஓடு இருந்தது என்றால்

2.அது 1,000 மைல் தூரம் ஆகி

3.இப்பொழுது 3,000 – 4,000 அடி தூரத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டது.

4.அதனால் தான் இன்று அடிக்கடி வெடிப்பின் தன்மை அதிகமாகின்றது.

  1. இன்று இந்தப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்று தினசரி நீங்கள் கேள்விப்படலாம்.

 

வெடித்தபின் மேலே எந்தப் பக்கம் அதிகமோ அமிழ்த்துகின்றது. இப்போது இந்தப் பக்கம் அமிழ்த்தினவுடனே இதை அடைத்து விடுகின்றது.

 

இப்படிச் சாய்ந்த பின் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்

1.உள்ளுக்குள் இருக்கக்கூடிய “சகதி… கூழ்…”

2.எப்படி ஒரு பைப்பிற்குள் போகும் போது ஏதாவது தடுத்தால் சப்தம் வருகின்றதோ

3.அந்த மோதலில் எங்கெல்லாம் தடுப்பாகின்றதோ

4.அந்த மோதலில் அதிர்வு வரும் போதெல்லாம்… போகும் பாதையெல்லாம் (நில) அதிர்வு உண்டாகும்.

 

நம் பூமி வட்டமாக இருப்பதனால் சுற்றி வரப்போகும் போது எதனெதன் திசைகளில் அதிகமாகச் சந்து வருகின்றதோ அதன் நிலைகள் மோதுகின்றது.

 

அப்பொழுது அது மோதும் இடங்களில் கொஞ்சம் மேடான நிலைகள் அதாவது மறைக்கும் இடம் இருந்தால் “மோதி… ஒரு செகண்ட்…” அது அழுத்திய நேரத்தில் அங்கே நில நடுக்கம் வருகின்றது.

 

அது மறுபடியும் மோதி இப்போது மோதிய இடங்கள் எல்லாம்  பூமிக்குள் போகும். உதாரணமாக ஒரு இடத்தில் நடக்கிறது என்றால் இது நகர்ந்து இந்தப் பக்கம் விரிவான இடமாகப் போனால் நடுக்கம் இருக்காது. சப்தம் வரும். (EARTHU QUAKE AFTER SHOCKS என்பார்கள்)

 

இப்படி அது ஓடும் நிலைகள் குறுக்கே வரும் நிலைகளுடன் மோதி அந்த இடத்தில் மோதலில் அழுத்தம் வருகின்றது. அதிகமாக இது ஓட ஓட ஓட அதே சமயத்தில் கரையும் தன்மை ஜாஸ்தியாகின்றது.

 

கதிரியக்கம் அதிமாக ஆக ஆக பூமியின் குழம்பு அதிகமாகி துருவத்தின் வழி வரும் விஷத் தன்மை அதிகமாகி இயக்கத்தின் தன்மை அதிகமாக ஆகி இன்று பனிப்பாறைகள் அனைத்தும் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

 

(கடல்கள் மிகப் பெரிய அளவில் பெருகிக் கொண்டுள்ளது என்று உலக விஞ்ஞானிகள் இரண்டாவது எச்சரிக்கையும் செய்துவிட்டார்கள்)

 

கடல் இருக்கின்ற பக்கம் இத்தகைய நிகழ்வானால் கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரை அழிக்கும் தன்மை வருகின்றது. இதைப் போன்று இயற்கையின் சீற்றம் வருகின்றது…. வந்து கொண்டேயிருக்கின்றது.

 

நாம் எந்த உணர்வின் தன்மை பெற்றோமோ அதன்வழியில் நாம் உடலை விட்டுப் போகும் போது

1.எந்த ஆசையை அதிகமாக எடுத்துக் கொண்டோமோ

2.இந்த உயிரிலே கடைசி நிமிடம் எந்த உணர்வு எடுத்தோமோ

3.உயிரால் கவரப்பட்டு அதற்குத்தக்க அடுத்த உடலைப் பெறுகின்றது.

 

அதிலிருந்து மீள நாம் இப்பொழுதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

 

அதிகாலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

 

1.அது நமக்குள் ஒளியான அணுக்களாகப் பெருகப் பெருக

2.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்

3.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்

4.”அந்த உணர்வு… அந்த நினைவு… அந்தப் பற்று வருமானால்

5.நம் உயிர் நிச்சயமாக அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

 

இத்தகைய நிலையானால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.

 

ஆனால் எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையாகி பொருளின் பற்றுக்கு வரப்போகும் போது இந்த உணர்வின் தன்மை இந்த உயிரிலே பட்டு கருகும் நிலைக்கே வருகின்றது. பின் அதற்குத்தக்க கருகும் உடலின் தன்மையே பெருகுகின்றது.

 

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு வரும் போது கருக்கும் தன்மைய இழக்கச் செய்கின்றது, நம் உணர்வு அங்கே செல்கின்றது.

 

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்

1.உங்களுக்குள் பதிவாக்கி விட்டேன்.

2.உங்கள் நினைவு உங்களைக் காக்க வேண்டும்.

3.ஆக எவரும் காக்க மாட்டார்கள்.

 

ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துதான் உங்கள் உயிர் அந்த வாழ்க்கையை நடத்துகின்றது. உணர்வின் தன்மை உடலாக்குகின்றது. அதன் வழியே உங்கள் உயிர் உங்களை ஆளுகின்றது.

 

இதை மனிதன் தான் அறிந்து கொள்ள முடியும்.

1.எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன்

2.இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால்

3.பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்.

 

மீண்டும் இந்த உடல்கள் மாறும். உயிர் என்றுமே அழிவதில்லை.

 

1.அழியாத உயிரின் நிலைகள் கொண்டு

2.நம் உணர்வை அழியாத நிலைகளுக்குக் கொண்டு செல்வது தான்

3.யாம் உபதேசிக்கும் இந்த நிலை.

 

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் வளர்த்தால் “கல்கி”. பிறவியில்லா நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.

குடும்பத்திலும் வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கலில் பகைமையாகி “உருப்படுவாயா…” என்று சாபமிட்டுக் கொள்வார்கள் – அதை மாற்றுகின்றனரா…? – தீப ஆராதனை காட்டுவதன் தத்துவம் என்ன?

Image

karpoora-deepam

குடும்பத்திலும் வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கலில் பகைமையாகி “உருப்படுவாயா…” என்று சாபமிட்டுக் கொள்வார்கள் – அதை மாற்றுகின்றனரா…? – தீப ஆராதனை காட்டுவதன் தத்துவம் என்ன?

 

 

இன்று நாம் மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் நாம் பாசமாக அன்பாகத்தான் வாழ்கின்றார்கள்.

 

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீளத் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக நண்பர்களையோ உறவினர்களையோ தேடி வருகின்றார்கள்.

 

ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தை வாங்கிச் சமாளிக்கலாம் என்று வாங்குகிறார்கள்.

 

சீக்கிரம் திரும்பத் தந்துவிடுவேன் என்று சொன்னபின் அவர்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள்.

 

எப்படியோ (ஏமாற்றி) பணத்தை வாங்கிக் கொள்வார்கள். வாங்கிய பணத்தைச் செலவழிக்கின்றார்கள்.

 

ஆனால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

 

இப்பொழுது கொடுக்க முடியவில்லை. “தருகிறேன்…” என்று சொல்வார்கள்.

1.இரண்டாவது தடவை கேட்கும் பொழுதும் அதே பதில் வருகிறது.

2.மூன்றாவது தடவையும் கேட்டவுடனே என்ன சொல்வார்கள்?

 

“நான் தான் கொடுக்கிறேன்…!” என்று சொன்னேனே அதற்குள் என்ன அவசரம் என்பார்கள். அன்று

1.தக்க சமயத்தில் தனக்கு உதவி செய்தார்கள் என்ற

2.அந்த நல்ல எண்ணம் வருவதில்லை.

3.ஆக பணத்தைத் திருப்பிக் கேட்பவருக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

 

அப்பொழுது அவருக்குக் கோபம் வரும்.

 

கோபத்தின் தன்மை பணம் கொடுத்தவருக்கு வரப்படும் போது உதவி செய்தார்கள் என்ற எண்ணம் பணம் வாங்கியவருக்கு மறந்துவிடுகின்றது. அப்புறம் அவருக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

பணம் கொடுத்தவர் என்ன சொல்வார்? பார்… அன்றைக்கு உதவி செய்தேன். பாவிப் பயல் இன்றைக்கு அவன் எனக்குத் தொல்லை கொடுக்கிறான்…! என்பார்.

 

அப்பொழுது தொல்லையின் உணர்வுகளைத்தான் இவர் உடலிலே  வளர்க்க முடிகிறது. தொல்லைகளை நீக்கும் நிலை இல்லை.

 

இப்படி மனிதனுக்கு மனிதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உணர்வுகள் இப்படி மாறுகின்றது.

1.பகைமை உணர்ச்சிகள் உருவாகி உடலுக்குள் வந்தவுடன்

2.உறுப்புகள் சீர் கெடுகின்றது. கடும் நோயாக மாறுகின்றது.

3.இந்த நோயை மாற்ற என்ன வழி?

 

மனிதன் சந்தர்ப்பத்தால் நல்ல குணங்களை நல்ல முறையில் பயன் படுத்தினாலும் வாங்கிய பணத்தைத் திருப்பி அவர்களால் கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அங்கே என்ன நடக்கின்றது?

 

“என்னைத் தொந்தரவு செய்கின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள்” என்ற உணர்ச்சிகள் தன்னை அறியாமலே அதிகரித்துவிடுகின்றது.

 

உண்மையில் அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இரண்டு தடவை பணத்தைத் திருப்பிக் கேட்டாலே போதும். அங்கே உணர்ச்சிகள் மாறும்.

 

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. “தருகிறேன்…” என்று சொல்வார்.

 

ஆனால் முயற்சி எடுக்கும் பொழுது வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளால் இவர் செல்வம் தேடுவதும் இழந்து விடுகின்றது.

 

ஆனால் அதே சமயத்தில் இரண்டு தரம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் போது அந்த வெறுப்பு காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது. இந்த வேதனையின் உணர்வைத் தனக்குள் எடுத்தவுடன்

1.ஒன்று இவர் தவறு செய்பவராக மாறுகின்றார்.

2.இல்லை என்றால் அவர் நுகர்ந்த உணர்வு கடும் நோயாக மாறுகின்றது.

3.இதன் உணர்வுகள் இப்படித் தான் போகின்றது.

 

பணம் கொடுத்தவரோ… பாருங்கள்… அன்றைக்குக் கொடுத்தேன். இன்றைக்கு எதிர்க்கிறான்… கொடுக்காமல் ஏமாற்றுகிறான்.. என்பார்.

 

ஏனென்றால் இயற்கையில் (உண்மையில்) பணத்தை அவரால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

 

அவருக்கு எப்படியோ நல்ல நேரம் வரட்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய வலு வரவேண்டும். பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் வரவேண்டும் என்று “பணம் கொடுத்தவர்கள்… எண்ணுகிறார்களா…!” என்றால் இல்லை.

 

அப்படி எண்ண முடியவில்லை.

 

பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற வேதனை உணர்வு தான் வருகிறது. அப்பொழுது அந்த வேதனையைச் சமைக்கும் உணர்வுகள் பணம் கொடுத்தவர் உடலிலும் வருகிறது.

 

நான் அவ்வளவு உதவி செய்தேன். இந்த மாதிரி எல்லாம் செய்கிறானே என்று இவர் சந்தர்ப்பத்தில் விளைந்த உணர்வுகள் கடன்காரனை எண்ணி எடுக்கும் போது “ஓ…ம்” வெறுப்பான உணர்வுகள் ஜீவனாகி

1.இவனெல்லாம் உருப்படுவானா…?

2.என்னை இப்படி ஏமாற்றுகிறான் பார்…! என்று

3.சாபமிடும் நிலைக்கு வந்துவிடுகின்றார்.

 

அன்றைக்குக் கேட்டதும் பணத்தைக் கொடுத்தேனே… இவன் உருப்படுவானா…? என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து இந்த உணர்வுகள் உடலிலே விளைகின்றது.

 

இதே போல உணர்வுகள் அங்கே பணத்தை வாங்கியவர் உடலிலும் படருகிறது. இதை எண்ணும் போது அவரின் செயலின் தன்மையும் இழக்கச் செய்கிறது.

 

கடைசியில் பணம் கொடுத்தவருக்கும் வேதனை வருகின்றது. பணம் வாங்கியவருக்கும் வேதனை வருகின்றது. நல்லதின் பலனை இரண்டு பேரும் அடைய முடியவில்லை.

 

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்காகத்தான் ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுகின்றார்கள். ஏனென்றால் அப்பொழுது அங்கே மறைந்திருக்கும் பொருள்கள் அந்த வெளிச்சத்தால் தெரிகின்றது.

 

அப்பொழுது நாம் எண்ண வேண்டியது எது? பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

 

1.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

2.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

3.என்னிடம் தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

4.என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

5.என்னைப் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

 

இப்படி ஒவ்வொருவரையும் எண்ணும்படிச் செய்து ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் பகைமைகளை அகற்றச் செய்வதற்காகத்தான் தீப ஆராதனை என்ற “விளக்கை… அந்த ஜோதிச் சுடரைக்” காட்டினார்கள் ஞானிகள்.

 

ஜோதியின் சுடர் போல் பொருளை அறியும் திறன் நமக்குள் வளர்ந்தால் இருளைப் போக்கும் சக்தியாக அது வளரும்.

 

இருளைப் போக்கி அருள் ஒளி என்ற நிலை பெருகும் பொழுது நம் சொல் பார்வை செயல் மற்றவரையும் இருளிலிருந்து அகற்றச் செய்யும்.

1.வேதனையாக மாற்றாது.

2.மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும் ஆற்றலாகப் பெருகும்.

மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை… மரண பயம் கொண்டு பயந்து வாழும் நிலை உலகமெங்கும் பரவிவிட்டது…!

Polaris Pole star - sabdharishi

மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை… மரண பயம் கொண்டு பயந்து வாழும் நிலை உலகமெங்கும் பரவிவிட்டது…!

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்துவிட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில்
1.ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.
2.ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம்.

இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம் இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.
1.இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை.
2.ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம்.

தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனை நாம் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

1.தீமை செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர்
2.“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில்
3.சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால்
4.வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை இன்று வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாக குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட மெய் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைக் கவரும் நிலையாக
1.உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து
2.அந்தப் பேரருள் உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இன்றைய விஞ்ஞான உலகில் காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து நல்லதை நுகரப் பழக வேண்டும்.

சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.
3.நம்மை அறியாது வரும் இருளைப் போக்குவோம்.
4.மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.

அந்த மெய்ஞானிகளின் தொடர்பு கொண்டு முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம்.

முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால் இதற்கு முன்
1.நமது முன்னோர்களை நாம் விண் செலுத்தத் தவறிவிட்டோம்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

நாமும் விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே சென்றடையலாம். நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

1.மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும்
2.பிறவியில்லா நிலை என்பதும்
3.பேரின்பப் பெருவாழ்வு என்பதும் அந்தச் சப்தரிஷி மண்டலமே.

ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் தன்மை பெறுவோம்.

“வேதனை…வேதனை…வேதனை… என் வாழ்க்கையே வேதனை…” என்று எண்ணினால் பல விதமான பாம்புகளாகத்தான் அடுத்து உடல் பெறுவோம் – மீளும் மார்க்கம் என்ன?

Image

Spiritual Third eye

“வேதனை…வேதனை…வேதனை… என் வாழ்க்கையே வேதனை…” என்று எண்ணினால் பல விதமான பாம்புகளாகத்தான் அடுத்து உடல் பெறுவோம் – மீளும் மார்க்கம் என்ன?

 

 

உயிரணு தோன்றி எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக நாம் வந்த பின் விஷத்தை மலமாக மாற்றி நல்ல உணர்வுகளைக் கொண்டு வந்தது இந்த உடல்.

 

அவ்வாறு நல்ல உடலாக நாம் பெற்று வந்தாலும் இன்றைய வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை வேதனைப்படச் செய்கின்றது.

 

ஆனால் வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து எல்லா அணுக்களிலும் இந்த விஷத்தைச் சேர்த்துச் சேர்த்து வளர்த்து விட்டால் என்ன சொல்வோம்?

 

எம்மா…! என்னாலே முடியவில்லையே… அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கின்றான்… என்று கடும் வேதனையாக நாம் பேசத் தொடங்குவோம்.

 

அப்பொழுது நம் நண்பரிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று செல்கிறோம். அவரிடம் கடுமையான நிலைகளில் வேதனைப்பட்டதைப் பற்றி விவரித்துச் சொல்லும் பொழுது அவரும் உற்றுக் கேட்கின்றார்.

 

அப்பொழுது அவருக்குள் அந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமான பின் அவருக்கு மயக்கமாகி விடுகின்றது.

 

நாம் எந்த எதிர்பார்ப்பில் இருப்போம்? வேதனையைச் சொல்லி அவர்களிடம் ஏதாவது காசு வாங்கலாம் என்று எண்ணிக் கஷ்டத்தை அதிகமாகச் சொல்வோம்.

 

இந்தக் கஷ்டமான உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து அவர்களுக்கு வருமானம் வருவதையும் தடுக்கும். கடைசியில் அவர்களையும் (மயக்கம்) நோயாக்குகின்றது.

 

அப்பொழுது அந்த நேரத்தில் கேட்டால் “பணம் இல்லை…” என்பார்..

 

நாம் என்ன நினைப்போம்…! இந்த நண்பர் எனக்கு உதவி செய்கிறேன் என்று நேற்று சொன்னார். இன்று இப்படி இல்லை என்கிறாரே…! என்போம். ஆனால்

1.நம்முடைய உணர்வு தான்

2.அவரை இப்படிச் சொல்ல வைக்கின்றது என்று

3.நமக்குத் தெரிவதில்லை.

 

நமக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்று மீண்டும் இந்த உணர்வின் தன்மை வேதனையாகி நம் உடலுக்குள் வரப்படும் போது  விஷங்கள் அதிகமாக வளர்ந்து விடுகின்றது.

 

அப்பொழுது நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது?

 

எல்லா அணுக்களுக்குள்ளும் வேதனை படர்கின்றது. விஷத்தின் தன்மை நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிட ஆர்ம்பிக்கின்றது.

 

ஒரு விஷம் கொண்ட பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித்தான் மற்ற உயிரினங்களை விழுங்கித் தன் உடலாக மாற்றுகின்றது.

 

அதைப் போல வேதனப்படும் இந்த விஷமான அணுக்கள் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிடுகிறது.

 

நம் உடல் அப்படியே நலிந்து போய்விடும். ஐய்யய்யோ…, அம்மம்மா என்று சொல்லத் தொடங்குவோம்.

 

கேன்சர் நோயுடன் இருப்பவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? நாளுக்கு நாள் நாளுக்கு நாள் வேதனையைத் தான் சேர்க்கின்றார்கள்.

 

சரவாங்கி நோயோ மற்ற நோய்களோ வரப்படும் போது மூட்டுக்கு மூட்டு வலிக்கின்றது. வேதனை வெறுப்பு கோபம் இதெல்லாம் சேர்த்தவுடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று சாப்பிடுகிறது.

 

1.விஷத்தைப் பாய்ச்சி தனக்கு இரையாக்கிவிடும்.

2.அதனுடைய மலம் நம் உறுப்புகளைத் தின்றுவிடும்.

3.அதனுடைய மலம் உறுப்புகளைத் தின்றால் உடல் உறுப்புகள் குறையத் தொடங்குகிறது.

4.கடைசியில் மனிதன் வாழ்க்கையைக் குறைக்கச் செய்துவிடுகின்றது.

 

இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு எங்கே போகிறது? பாம்பின் உடலுக்குள் சென்று பாம்பின் உடலைத்தான் பெறுகின்றது.

 

கேன்சர் நோய் உள்ளவர்கள் இறந்தார்கள் என்றால் அடுத்துப் பாம்பின் நிலைக்கே போகிறார்கள்.

 

வேதனை வெறுப்பு கோபம் என்று வரப்படும் போது கட்டுவீரியன் பாம்பாகத்தான் போகவேண்டும். விஷத்தின் தன்மை அளவு கோல் எப்படி இருக்கின்றதோ அதற்குத்தக்க கண்ணாடிவீரியன் பாம்பாகப் போகிறார்கள்.

 

உடல் பெற்ற நிலைகளில்

1.எந்தெந்த உயிரினங்கள் ஊர்ந்து செல்கிறதோ

2.அது போல கை கால் எல்லாம் இழந்து

3அத்தகைய உயிரினங்களின் உடலாக ஆக்கிவிடும் நம் உயிர்.

4.இதுவும் உடல் சிவம் தான்.

 

ஆனால் இருளுக்குள் வேதனை என்ற உணர்வு வரும் போது சிந்திக்கும் தன்மை இழந்து அதற்குத்தக்க உடலை இந்த உயிர் தான் உருவாக்குகின்றது.

 

காரணம் “சந்தர்ப்பம்… தான்”.

 

வேதனைப்படுவோர்களுக்கு எல்லாம் அடிக்கடி ஏதாவது வரும். வந்தது என்றால் அது சந்தர்ப்பம் தான்.

 

ஐயோ… “நல்ல மனிதன்… இப்படி இருக்கின்றானே…!” என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

 

இந்தச் சந்தர்ப்பம் நம் உடலில் வேதனை அதிகமாகச் சேர்த்தவுடனே என்ன செய்கிறது? வேதனை என்ற விஷம் உள்ளுக்குள் போய் நல்ல குணங்கள் அனைத்தையும் சாப்பிட்டு விழுங்குகின்றது.

 

நான் எல்லாருக்கும் உதவி செய்தேனே… பண்பாக இருந்தேனே… பரிவாக இருந்தேனே… என்று நாம் சொல்லலாம்.

 

யானை தேய்ந்து கட்டெறும்பாகப் போன மாதிரி “அம்மா… தாங்க முடியவில்லையே… என்றைக்குத் தான் இந்த உடலை விட்டுப் போகப் போகிறேனோ?” இது… வந்துவிடும்.

 

நான் இத்தனை பேருக்கு உதவி செய்தேனே…! என்று எண்ணுவோம்

 

ஆனால் கடைசியில அதைக் கூட மறந்துவிட்டு “எப்படா… (உடலை விட்டு) என்னை வெளியில் கொண்டு போகப் போகிறாய்?” என்று சொல்லிப் புலம்புவோம்.

 

இந்த உணர்வுதான் தோன்றும். வெளியில் போனவுடன் என்ன செய்யும்?

 

அதற்குத்தக்க பாம்பின் ஈர்ப்புக்குள் போய் அதனின் கருமுட்டையாக அமைந்து அமைதியாகி பாம்பாகப் பிறக்கும். பாம்பாகப் பிறந்த பிற்பாடு விஷத்தைப் பாய்ச்சி சந்தோஷமாக இருக்கும் நிலை வருகிறது.

 

பாம்பு தன் உணவுக்காக ஒரு சுண்டெலியையோ அல்லது பெரிய எலியையோ பார்க்கிறது. விஷத்தால் தீண்டியவுடன் எலி இறந்து போகின்றது.

 

தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொன்ற பிற்பாடு வாயைத் திறந்து அந்த எலியை விழுங்குகிறது. உள்ளுக்குள் செல்லும் நிலையில் உடல் உப்புசமாகி பாம்பு நரக வேதனைப்படுகின்றது.

 

1.முதலில் (மனித உடலில்) அதிகமான வேதனைப்பட்டது.

2.அடுத்தாற் போல பாம்பாகப் பிறந்து

3.விஷத்தைப் பாய்ச்சிச் சந்தோஷமாக இருக்கின்றது.

4.பாம்பான பின் தன் இரையை விழுங்கும் போது இத்தனை நரக வேதனைப்படுகிறது.

 

உடலுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள் அது படும் பாடு பார்த்தால் அது எத்தனை நரக வேதனைப்படுகிறது?

 

பாம்பு தன் இரையை முழுங்கிய நிலையில் இருக்கும் பொழுது அதை நீங்கள் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அது எத்தனை அவஸ்தைப்படுகிறது என்று.

 

கேன்சர் நோய் உள்ளவர்கள் சாப்பிடும் போது எத்தனை வேதனைப்படுகிறார்கள்? அதே மாதிரி

1.பாம்பின் உடல் பெற்ற பிற்பாடும்

2.அதே வேதனை தான் வருகின்றது.

3.இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

 

நாம் என்னமோ… “கடவுள் எங்கேயோ இருந்து இயக்குகின்றார்…! அவர் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…!” என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

 

ஆனால் ஞானிகள் சொன்னது.

 

1.உள் நின்று இயக்கும் நம் உயிர் தான் கடவுள்.

2.நம் சந்தர்ப்பம் நாம் எதை நுகர்கின்றோமோ

3.அதனின் இயக்கமாக சுவாசித்ததை நம் உயிர் இயக்கி

4.எண்ணம் சொல் செயல் என்று செயல்படுத்துகின்றது.

 

நாம் நுகரும் உணர்வுகள் தான் அனைத்திற்கும் காரணம்.

 

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் பக்குவ நிலை நாம் பெற்றுவிட்டால் இந்த உடலுக்குப் பின் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையில் அழியாத உடலாக ஒளியின் சரீரம் பெறலாம்.

 

1.நஞ்சை வெல்லலாம்.

2.நஞ்சை ஒளியாக மாற்றலாம்.

3.என்றுமே அகண்ட அண்டத்தில் நிலைத்திருக்கலாம்.

 

ஆகவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

தண்ணீர் (மது) சாப்பிடுபவர்கள் மட்டன் சாப்பிடுபவர்கள் பீடி சிகரெட் பிடிப்பவர்களின் நிலைகள் – “எந்த மணம் உயிரான்மாவில் அதிகமாகிறதோ மனிதனின் முடிவு அந்த எல்லை தான்”

Image

star-light-spiral

தண்ணீர் (மது) சாப்பிடுபவர்கள் மட்டன் சாப்பிடுபவர்கள் பீடி சிகரெட் பிடிப்பவர்களின் நிலைகள் – “எந்த மணம் உயிரான்மாவில் அதிகமாகிறதோ மனிதனின் முடிவு அந்த எல்லை தான்”

 

 

நாம் எத்தனை கோடி உடல்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைக்கு மனிதனாக வந்திருக்கின்றோம்.

 

மனிதனாகப்போகும் போது ஆசையின் நிமித்தம் அது எத்தனையோ பேர் பல விதமான பழக்கங்கள் வைத்திருக்கின்றார்கள்.

 

தண்ணீர் (மது) சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்குத் திரும்பத் திரும்ப அந்தத் தண்ணியைக் குடித்தால் தான் அவருக்கு சந்தோஷம்,

 

சிகரெட் பீடி குடித்துப் பழகிவிட்டால் அது இல்லை என்றால் வேறு எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை… “முடியாது” என்பார்கள்.

 

கடைசியில் இருமல் வருகிறது…! இருதயமும் நுரையீரலும் கெட்டு விட்டது…! என்று தெரிந்தாலும் கூட அப்பொழுதும் இரண்டு குடித்தால் தான் எனக்கு நல்லது. அது தான் எனக்குச் சந்தோஷம் என்ற நிலைதான் வருகிறது.

 

நிறுத்த முடிகின்றதா…? என்றால், இல்லை .

 

அதே போல்  மட்டன் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு மட்டன் சாப்பிடவில்லை என்றால் என்ன சொல்வார்கள்? என்னாலே மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை என்பார்கள்.

 

ஆனால் அந்த மட்டன் சாப்பிட்ட பிற்பாடு என்ன நடக்கின்றது?

 

ஆடு மாடெல்லாம் தான் உணவாக உட்கொள்வதிலிருக்கும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. நல்லதைத் தன் கழிவாக வெளிப்படுத்துகின்றது.

 

இப்படி ஆட்டினுடைய உறுப்புகளுக்குள் அது கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைச் சேர்த்துத் தன் உடலாக்கி வலுவாக்கிக் கொள்கின்றது. அந்த ஆட்டைச் சாப்பிட்டவுடன் நமக்கும் உடல் வலுவாகிவிடுகிறது.

 

முரட்டுத்தனமான புத்தியும் வரும். மட்டன் சாப்பிட்டவுடனே அந்த வாசனை தான் நம் உடலிலிருந்து வரும். ஆட்டைக் கண்டாலே “அடித்துக் கொன்று சாப்பிடலாமா…” என்ற எண்ணம் வரும்.

 

ஆட்டைப் பார்த்தாலே இப்படிச் சாப்பிடும் எண்ணம் தான் வரும். மீண்டும் மீண்டும் மட்டன் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடலில் என்ன செய்கின்றது?

 

இதெல்லாம் வலுவான பிற்பாடு

1.நமக்குள் மனித குணம் இருக்கிறது அல்லவா.

2.அதை எல்லாம் இது கொன்று சாப்பிட்டுவிடும்.

3.எது?

4.இந்த விஷம்.

 

கறி சாப்பிட்டவர்கள் அவர்கள் உடலில் சென்ட்டை (வாசனைத் திரவியம்) போடவில்லை என்றால் நாற்றம் தான் வரும். மட்டன் சாப்பிடுகிறவர்கள் சென்ட் போடாமால் இருக்க முடியுமா…!

 

சென்ட் போடவில்லை என்றால் அவர்கள் பக்கத்தில் போனாலே கவிச்சி நாற்றம் இருக்கும்.  ஆகவே

1.அந்த மணத்துடன் உடலை விட்டு வெளியே வந்த பிற்பாடு

2.உயிர் என்ன செய்யும்?

3.ஆடு மேய்ந்து கொண்டிருக்கும்.

4.அதன் ஈர்ப்புக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும்.

 

அங்கு போனவுடனே அதற்குள் கருவாகி ஆடாகிறது.

 

நீ சாப்பிட்டாய். நீ அதே மாறிப் போ. உயிருடைய வேலை அது தான்.

 

நம் சந்தர்ப்பம் வலு எதுவோ அந்த நிலைகளுக்கு நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கும்.

1.இன்றைக்கு மனித உடல் ஒரு சட்டை.

2.நாளைக்கு ஆட்டு உடல் ஒரு சட்டை.

 

பாம்பு விஷத்தால் மனிதனைத் தீண்டிவிடுகிறது. உடலுக்குள் பாம்பின் விஷம் ஆன பிற்பாடு செத்தால் பாம்பு உடலுக்குள்ளே உயிர் போகின்றது.

 

ஆனால் பாம்பை ஒரு மாடு மிதித்ததென்றால் அதனுடன் இணைத்துக் கொண்டு மாட்டையே எண்ணி அந்தப் பாம்பினுடைய உயிர்  மாடு உடலுக்குள் போய் மாடாகப் பிறக்கின்றது.

 

மனிதன் அடித்துக் கொன்றாலும்  மனிதன் மேல் நினைவு அதிகமாகி மனிதனுக்குள் வந்து பாம்பு மனிதனாகப் பிறக்கிறது.

 

ஆனால் மனிதனைப் பாம்பு கடித்தாலோ பாம்பின் நினைவு வரும். மீண்டும் மனிதன் பாம்பாகப் போவான்.

 

இயற்கை எப்படி வளர்த்து வைத்திருக்கின்றது என்பதை இன்று விஞ்ஞானியும் தெரிந்து வைத்திருக்கின்றான்.

 

மெய்ஞானி தெரிந்து  நாம் எப்படி வாழ வேண்டும் என்று இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம், சிவ புராணம் எல்லாவற்றிலும் அன்றைக்கே கொடுத்திருக்கிறான்.

 

நாம் புரிந்து கொண்டோமா என்றால் இல்லை.

 

இந்த உடலுக்குப் பின் எங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தாலும் நாம் சாப்பிடுவதற்காகத்தான் எல்லாமே படைக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தில் உணவாக உட்கொள்கிறார்கள்.

 

சாப்பிடக் கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் உயிராத்மாவில் மணங்கள் மாறும். மாறியதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும்.

 

இது உயிரின் வேலை.

தினசரி நிலநடுக்கம் ஏற்படுகிறது… பனிப் பாறைகள் உருகி கடல்கள் பெருகி ஊர்கள் மூழ்கப் போகின்றது… பூமி வெப்பமாகி விட்டது… என்று கண் கூடாக இன்று பார்க்கின்றோம் – “இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்”

Image

EARTH-MANTLE.jpg

தினசரி நிலநடுக்கம் ஏற்படுகிறது… பனிப் பாறைகள் உருகி கடல்கள் பெருகி ஊர்கள் மூழ்கப் போகின்றது… பூமி வெப்பமாகி விட்டது… என்று கண் கூடாக இன்று பார்க்கின்றோம் – “இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்”

 

 

பூமிக்கடியில் அணுக்கதிரியக்கங்கள் இன்று மிகவும் அதிகமாகி விட்டது. இது வெடித்து மக்கள் இறந்தாலும் தொக்கிய உணர்வுகள் பூமிக்கடியில் அதிகமாகச் சேர்த்துக் கொதிகலனாக மாறி பாறையெல்லாம் குழம்பாக மாறப் போகின்றது.

 

அணு உலைகளில் அந்த எரி பொருளை எரித்தவுடனே வேகமாகச் சூட்டை உண்டாக்குகின்றது. அதைப் போன்ற நிலை நம் பூமியின் நடு மையத்திலும் அதிகமாகிவிட்டது.

 

உதாரணமாக மின்னல்கள் தாக்கப்படும் போது ஒரு நொடிக்குள் எல்லாவற்றையும் பஸ்பமாக்கி விடுகிறது. மின்னல்கள் கடலிலே விழுந்த பின் அடங்கி மணலாக மாற்றிவிடுகின்றது.

 

மணலாக மாற்றியதை யுரேனியமாகப் பிரித்து மீண்டும் வெடிக்கச் செய்கின்றார்கள் விஞ்ஞானிகள். (அணு உலைகள், குண்டுகள், லேசர் இயக்கங்கள், மிகவும் சக்தி வாய்ந்த எலெக்ட்ரானிக் கருவிகள்)

 

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் இயற்கையாக வெளிப்படுத்தும்

2.கதிரியக்க உணர்வுகள் ஒன்றின் வலு அதிகமானதும்

2.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கமும்

4.ஒன்றுடன் ஒன்று மோதும் போது

5.எல்லாவற்றையும் கடினமாகச் சூடாக்கச் செய்கின்றது.

 

(சூரியன் அடிக்கடி நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொல்வார்கள் – SUN FLARE)

 

அது மோதும் இடங்களில் உயிரினங்களையும் கல்லுக்குள் இருப்பதையும் மற்ற எல்லாவற்றையும் மடியும்படிச் செய்கின்றது.

 

அதை வெடித்துப் பரீட்சித்தார்ந்தமாகப் பார்த்தாலும்

1.எல்லாமே பூமியின் சுழற்சியால் நடுமையம் அடைகின்றது.

2.நடு மையத்தில் கொதிகலனாகவும் மாறுகின்றது.

 

அதே சமயம் பூமிக்குப் புறத்திலும் வெடிக்கச் செய்தது சூரியனுக்கும் மற்ற நம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோள்களுக்கும் சென்றுவிட்டது.

 

இந்த விஷத்தின் தன்மைகள் நட்சத்திரங்களிலும் கோள்களிலும் பரவப்பட்டு நமது பிரபஞ்சத்திலும் அதிகமாக விஷத்தன்மை பரவி விட்டது.

 

நமது பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் விஷத் தன்மைகளை வடித்திடும் ஓசான் திரை உண்டு. அதிலே விஷ அடுக்குகள் உண்டு. தன் இனத்தைச் சேர்த்துக் கொள்ளும். பூமிக்குப் பாதுகாப்பு அது.

 

கீழே சுழலும் போது தனக்குத் தேவைப்பட்ட உணர்வு தான் இயக்கத்திற்கு வரும். ஆனால் அதுவும் இன்று என்ன ஆகி விட்டது,

 

பிரபஞ்சத்தில் மனிதனால் செயற்கையால் பரவச் செய்யப்பட்ட அணுக்கதிரியக்கங்கள் துருவப் பகுதி வழியாக மீண்டும் பூமிக்குள் நுழைந்து ஓசோன் திரையும் ஓட்டை ஆக்கிவிட்டது.

 

1.இந்தக் கதிரியக்க உணர்வுகள் அதிகமாகி

2.அது குவிந்து நம் துருவத்தில் வரப்போகும் போது

3அங்கிருக்கும் பனிப்பாறைகள் கரைகின்றது.

4.வட துருவமும் சரி தென் துருவமும் சரி கரைந்து கொண்டேயுள்ளது.

 

ஆனால் அதே சமயத்தில் பூமியின் நடு மையமோ கொதிகலனாக மாறுகின்றது. பூமிக்குள் இவ்வாறு ஆகப் போகும்போது

1.முதலில் கொதிகலன் சிறிதளவு இடத்தில் இருந்தது.

2.அப்புறம் அது கொஞ்சம் பெரிதானது.

3.இப்படிப் பெரிதாகப் பெரிதாகப் பெரிதாகக் கூழ் மாதிரி ஆகிக் கொண்டு  வருகிறது.

 

(ஏற்கனவே) கூழாக மாறியதால் தான் பாறையில் மாற்றமும் நில நடுக்கம் பூகம்பம் நில அதிர்வு மற்ற நிலைகளும் வருகின்றது.

 

நாம் பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு பல சரக்குகளைச் சேர்த்து ஒன்றாக்குவது போல பூமியின் நடு மையத்தில் உணர்வின் தன்மை பல கலவைகள் ஆகின்றது.

 

கொதிகலனாகும் போது கலவையாகிய பின் வெடிப்பாகி மீண்டும் இறங்கி இதனுடைய உணர்வுகள் மாற்றிக் கொண்டே இருக்கும்.

 

துகள்கள் தூசிகள் போவதில்லை. ஆனால் கீழிருந்து உணர்வின் தன்மை மாறினால் மேலே உறைய உறைய உறைய அதன் உணர்வு மாறினாலும்

1.எல்லாம் கலவையாகச் சேர்த்துக் கீழே

2.நம் பூமியின் நடுமையம் “வெப்பத்தால்… உருக்கப்படுகின்றது”.

 

உருகிய நிலைகள் கொண்டு தான் ஆவியாக மாறுகின்றது. ஆவியாக மாற்றப்படும் போது ஒன்று சேர்த்து இருக்கும் போது ஒன்றுமில்லை. வெடித்து விட்டால் இதன் வழி கூடி ஆவியினுடைய சத்துக்கள் வெளி வருகின்றது.

 

சில நேரங்களில் உள் வெடிப்பு இருக்கும். பாறையில் மாற்றம் இருக்கும்.

 

ஆக உள் வெடிப்பு என்று இருக்கப்படும் போது இது சிறுகச் சிறுக மேலே வரும் போது வெடிப்பின் தன்மை அதிகரிக்கும்.

 

1.முதலில் 3,500 மைல் தூரத்தில் (அடியிலிருந்து) மேல் ஓடு இருந்தது என்றால்

2.அது 1,000 மைல் தூரம் ஆகி

3.இப்பொழுது 3,000 – 4,000 அடி தூரத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டது.

4.அதனால் தான் இன்று அடிக்கடி வெடிப்பின் தன்மை அதிகமாகின்றது.

  1. இன்று இந்தப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்று தினசரி நீங்கள் கேள்விப்படலாம்.

 

வெடித்தபின் மேலே எந்தப் பக்கம் அதிகமோ அமிழ்த்துகின்றது. இப்போது இந்தப் பக்கம் அமிழ்த்தினவுடனே இதை அடைத்து விடுகின்றது.

 

இப்படிச் சாய்ந்த பின் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்

1.உள்ளுக்குள் இருக்கக்கூடிய “சகதி… கூழ்…”

2.எப்படி ஒரு பைப்பிற்குள் போகும் போது ஏதாவது தடுத்தால் சப்தம் வருகின்றதோ

3.அந்த மோதலில் எங்கெல்லாம் தடுப்பாகின்றதோ

4.அந்த மோதலில் அதிர்வு வரும் போதெல்லாம்… போகும் பாதையெல்லாம் (நில) அதிர்வு உண்டாகும்.

 

நம் பூமி வட்டமாக இருப்பதனால் சுற்றி வரப்போகும் போது எதனெதன் திசைகளில் அதிகமாகச் சந்து வருகின்றதோ அதன் நிலைகள் மோதுகின்றது.

 

அப்பொழுது அது மோதும் இடங்களில் கொஞ்சம் மேடான நிலைகள் அதாவது மறைக்கும் இடம் இருந்தால் “மோதி… ஒரு செகண்ட்…” அது அழுத்திய நேரத்தில் அங்கே நில நடுக்கம் வருகின்றது.

 

அது மறுபடியும் மோதி இப்போது மோதிய இடங்கள் எல்லாம்  பூமிக்குள் போகும். உதாரணமாக ஒரு இடத்தில் நடக்கிறது என்றால் இது நகர்ந்து இந்தப் பக்கம் விரிவான இடமாகப் போனால் நடுக்கம் இருக்காது. சப்தம் வரும். (EARTHU QUAKE AFTER SHOCKS என்பார்கள்)

 

இப்படி அது ஓடும் நிலைகள் குறுக்கே வரும் நிலைகளுடன் மோதி அந்த இடத்தில் மோதலில் அழுத்தம் வருகின்றது. அதிகமாக இது ஓட ஓட ஓட அதே சமயத்தில் கரையும் தன்மை ஜாஸ்தியாகின்றது.

 

கதிரியக்கம் அதிமாக ஆக ஆக பூமியின் குழம்பு அதிகமாகி துருவத்தின் வழி வரும் விஷத் தன்மை அதிகமாகி இயக்கத்தின் தன்மை அதிகமாக ஆகி இன்று பனிப்பாறைகள் அனைத்தும் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

 

(கடல்கள் மிகப் பெரிய அளவில் பெருகிக் கொண்டுள்ளது என்று உலக விஞ்ஞானிகள் இரண்டாவது எச்சரிக்கையும் செய்துவிட்டார்கள்)

 

கடல் இருக்கின்ற பக்கம் இத்தகைய நிகழ்வானால் கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரை அழிக்கும் தன்மை வருகின்றது. இதைப் போன்று இயற்கையின் சீற்றம் வருகின்றது…. வந்து கொண்டேயிருக்கின்றது.

 

நாம் எந்த உணர்வின் தன்மை பெற்றோமோ அதன்வழியில் நாம் உடலை விட்டுப் போகும் போது

1.எந்த ஆசையை அதிகமாக எடுத்துக் கொண்டோமோ

2.இந்த உயிரிலே கடைசி நிமிடம் எந்த உணர்வு எடுத்தோமோ

3.உயிரால் கவரப்பட்டு அதற்குத்தக்க அடுத்த உடலைப் பெறுகின்றது.

 

அதிலிருந்து மீள நாம் இப்பொழுதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

 

அதிகாலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

 

1.அது நமக்குள் ஒளியான அணுக்களாகப் பெருகப் பெருக

2.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்

3.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்

4.”அந்த உணர்வு… அந்த நினைவு… அந்தப் பற்று வருமானால்

5.நம் உயிர் நிச்சயமாக அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

 

இத்தகைய நிலையானால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.

 

ஆனால் எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையாகி பொருளின் பற்றுக்கு வரப்போகும் போது இந்த உணர்வின் தன்மை இந்த உயிரிலே பட்டு கருகும் நிலைக்கே வருகின்றது. பின் அதற்குத்தக்க கருகும் உடலின் தன்மையே பெருகுகின்றது.

 

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு வரும் போது கருக்கும் தன்மைய இழக்கச் செய்கின்றது, நம் உணர்வு அங்கே செல்கின்றது.

 

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்

1.உங்களுக்குள் பதிவாக்கி விட்டேன்.

2.உங்கள் நினைவு உங்களைக் காக்க வேண்டும்.

3.ஆக எவரும் காக்க மாட்டார்கள்.

 

ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துதான் உங்கள் உயிர் அந்த வாழ்க்கையை நடத்துகின்றது. உணர்வின் தன்மை உடலாக்குகின்றது. அதன் வழியே உங்கள் உயிர் உங்களை ஆளுகின்றது.

 

இதை மனிதன் தான் அறிந்து கொள்ள முடியும்.

1.எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன்

2.இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால்

3.பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்.

 

மீண்டும் இந்த உடல்கள் மாறும். உயிர் என்றுமே அழிவதில்லை.

 

1.அழியாத உயிரின் நிலைகள் கொண்டு

2.நம் உணர்வை அழியாத நிலைகளுக்குக் கொண்டு செல்வது தான்

3.யாம் உபதேசிக்கும் இந்த நிலை.

 

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் வளர்த்தால் “கல்கி”. பிறவியில்லா நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.