இலட்சுமணக் கோடு

இலட்சுமணக் கோடு

 

சூது வாது பொய் புரட்டு ஆசை கோபம் குரோதம் வஞ்சனை இது தான் இன்றைய உலகம். தர்மம் நியாயம் என்பதெல்லாம் ஒரு சிலருக்குப் பேச்சளவில்தான்.

தான் வாழ வேண்டும்… தன் குடும்பத்தார் வாழ வேண்டும்… தன் சுற்றத்தார் வாழ வேண்டும்… நான் பெரியவனா…? நீ பெரியவனா…? “பிறருக்கு மேல்… தான் “உயர்ந்த நிலையில்” இருக்க வேண்டும்…”

உயர்ந்த நிலை என்பது
1.இன்றைய மனிதர்களுக்குச் சோம்பேறித்தனமாக
2.எல்லா வசதிகளுடனும்… தானாகக் குவியும் பணத்துடனும்… வேலை வெட்டி ஒன்றும் செய்யாமல்
3.எல்லோரும் பார்த்து “நீ பெரிய பணக்காரன்… எல்லா வசதியும் உள்ளவன்” என்று சொல்வது தான்
4.இன்றைய மனிதர்கள் நினைக்கும் உயர்ந்த நிலை.

அவனது உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும் பிரிந்து சென்ற பின் அவனுடைய ஆத்மாவின் நிலையும் அதே நிலையில் தான் இருக்கின்றது. மறு பிறவியிலும் அதே ஆசையுடன் தான் வந்து பிறக்கின்றான்.

1.உள்ளதை வைத்துத் தர்மம் நியாயம் என்பதைக் கடைப்பிடிப்பவன்
2.ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குறிக்கோளுடன் தான் அவன் பாதையில் செல்கிறான். அந்தந்தக் குறிக்கோள் அவனுக்கு முடிவு பெறுவது இல்லை. அதனால் தான் அவன் மறு ஜென்மம் எடுக்கின்றான்.

சொல்லிய பாடத்தையே திரும்பவும் ஏன் சொல்கிறேன்…? என்று நினைக்கலாம். உங்கள் பாடத்திற்கு முதல் பாகம் இது தான்.

இராமாவதாரத்தில் வால்மீகி எழுதிய கதையில் – (கதை என்று சொல்லாதே…!) எழுதிய நூலில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுடனும் பிற்கால மனிதர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாக எழுதி உள்ளார்.

அதைப் படிப்பவர்களும் அந்த நூலின் தத்துவத்தைக் கேட்பவர்களும் அதைக் கதையாகத்தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர… புரிந்து ஏற்பது இல்லை…!

காட்சி:-
சீதை உட்கார்ந்து இருத்தல்… லட்சுமணன் கோடு போட்டுக் கோட்டைத் தாண்ட வேண்டாம்…! என்று சொல்லிச் செல்தல். இரட்டை மாட்டு வண்டியில் மாடு கோட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பி செல்கிறது.

இதனுடைய அர்த்தம் புரிகின்றதா…?

1.ஒன்று வேண்டாம் என்று சொல்லும் பொழுது
2.சொல்லியும் அதைத் தாண்டிச் செல்லும் பொழுது “படும் இன்னல்” அந்த நூலில் இருக்கின்றது.

ஆறறிவு படைத்த மனிதனுக்குச் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடிவதில்லை. ஐந்தறிவு படைத்த மாடு கோட்டைத் தாண்டாமல் திரும்பிச் செல்கிறது.

ஆறு அறிவு படைத்தவன் புரிந்து கொள்ளாததை எல்லாம்… அதாவது…
1.தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது
2.எல்லா வசதிகளும் கண்டுபிடித்து விட்டோம்
3.இந்த மண்டலத்தில் இருந்து பிற மண்டலத்திற்குக் கூட “செல்லும் வழியைக் கண்டுபிடித்து விட்டோம்…”
4.மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை…! என்று ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர்.

ஆனால் ஐந்து அறிவுடைய மிருக வர்க்கங்கள் பறவைகள் புழு பூச்சி இவைகளுக்கு இருக்கும் மனச்சாந்தி கூட எந்த மனிதனுக்கும் இல்லை. எனக்கும் தான்…! (குருநாதர்).

எனக்கும் மனிதர்களை நல்ல வழியில் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஒன்று இருக்கிறது அல்லவா… அதைத்தான் சொல்கின்றேன்.

இந்தக் கால சூழ்நிலையில் தனி ஒரு மனிதனால் எதுவும் செய்ய முடியாது. காலத்துடன் ஒத்துத் தான் செல்ல வேண்டும்.

1.ஆசையை அடக்க ஈஸ்வர தியானத்தில் இருந்து
2.இந்த யுகம் மாறி அடுத்த யுகத்திலாவது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளாமல்
3.நல்ல நிலையில் இருக்கத்தான் இந்தப் பாடங்கள் எல்லாம்.

பேய் பிசாசு என்பதெல்லாம் உண்மை. பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொல்கின்றார்கள். அதுவும் உண்மைதான்…! அவனுடைய மனதே அவனுக்குப் பேய்தான்.

பேயாக இருக்கும் மனதை அடக்கி மனிதனாகி தெய்வமாகலாம். ஒவ்வொரு மனிதரிலும் பேயாகவும் மனிதனாகவும் தெய்வமாகவும் இருக்கின்றார்.

பேயான மனதை அடக்கி மனிதனாகித் தெய்வீக அருள் பெறலாம்.
1.அதற்கு வயது வரம்பு வேண்டாம்.
2.வயதான பிறகு தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம்
3.தன்னைத்தானே உணரும் வயது முதற் கொண்டே இந்த நிலைக்கு வரலாம்.

கல்கி

கல்கி

 

உலகெங்கிலும் தோன்றிய ஞானிகள் அனைவருமே
1.மனிதனின் உயிரைக் கடவுளாக மதி
2.மனிதனுக்கு மனிதன் மனிதனாக நீ மதி
3.மனிதனை ஒரு கடவுளாக மதி என்று தான் அனைவரும் சொல்லி உள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள்
1.மனிதனை மதித்தார்கள்… மனித உடலை மதித்தார்கள்
2.மனிதன் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்தார்கள்
3.மனிதன் அவன் அறியாத இருள்களில் இருந்து மீள வேண்டும் என்ற சதா தியானித்தார்கள்.
4.மனிதன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் பிறவிக் கடலை நீந்தி ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள் அது தான் கல்கி…!

கடவுளின் அவதாரத்தில்… என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள்.

மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான், பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிரின் பரிணாம வளர்ச்சியில் இறுதியானதும் உறுதியானதுமான அழியா ஒளிச் சரீர வாழ்வே மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுரைத்தார்கள் ஞானிகள்.

ஆனால்
1.இந்தக் கலியில் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் விளைய வைத்து
2.எவர் ஒருவர் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுகிறார்களோ அவரே கல்கி.
3.வாழ்க்கையில் வரும் இருளை யாரெல்லாம் மாய்க்கின்றார்களோ…
4.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை அடக்குகின்றார்களோ… அவரே கல்கி.

கல்கி அவதாரத்தில் வரப் போகும் “சித்தன்”

கல்கி அவதாரத்தில் வரப் போகும் “சித்தன்”

 

உன்னையே நீ உணர்ந்து கொள் மற்றவர்களின் புகழுக்காகவும் வேடிக்கைக்காகவும் அல்ல தியானம்.

காட்சி:-
உருண்டைப் பந்து – உலகம் – சுற்றி வெளிச்சம். இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் கலியுகம் வெளிச்சம்…!

ஒவ்வொரு அவதாரத்தின் போதும் உலக நிலை மாறி இருந்தது. வர இருக்கும் கல்கி அவதாரத்தில் காலநிலை மாறும். ஒவ்வொரு அவதாரத்திலும் நடந்து நிலையைத் தனித்துப் பிரித்துச் சொல்கின்றேன்.

இராமாவதாரத்தைப் பற்றி சாமி சொன்னது புரிந்ததா…?

காட்சி:-
குருநாதர் தன் நெஞ்சைப் பிளந்து காட்டுகின்றார். நெஞ்சுக்குள் உருவம் தெரிகின்றது. இராமர் தசரதரின் மகனாகப் பிறந்தார் வில்லை ஒடித்துச் சீதையை மணந்தார் தந்தையின் சொல்லுக்காக 14 வருடம் காட்டிற்குச் சென்றார் சீதையின் கற்பைச் சோதிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வைத்தார் என்பதெல்லாம் “வால்மீயால் இராமாவதாரம் நடக்கும் காலத்தில் எழுதப்பட்ட கதையே…”

இராமாவதாரத்தில்
1.ஜனங்களுக்குத் தெய்வ பக்தியும் தந்தை சொல் தட்டாத நிலையில் நற்குணமும் பண்பு பற்று பாசம் எல்லாம் நிறைந்து இருந்தது.
2.மனிதர்களும் சூது வாது அற்றவர்களாக இருந்தார்கள்.
3.இராமாவதாரம் நடக்கும் பொழுது புனிதத் தன்மை இருந்தது.
4.அப்போது இருந்த காலத்தில் மாமிசம் யாரும் புசிப்பதில்லை.
5.பிறரின் சந்தோஷத்திற்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் நிலை இருந்தது.

அப்போது இருந்த ரிஷிகளில் ஒருவர் தான் வால்மீகி. அந்த யுகத்துக்குப் பெயர் வைத்தவரும் வால்மீகி தான். இன்னும் அவர் வாழ்கிறார். பிற்கால மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கட்டும் என்று அவர் எழுதிய நூல் தான் இராமாயணம்.

“ஸ்ரீராமஜெயம்” என்று ஜெபிக்கும் பொழுது எந்த நம்பிக்கையோடு ஜெபிக்கின்றோமோ அந்த ஜெபத்தை ஜெயிக்க வைப்பது இராமாயணம் எழுதிய “வால்மீகி தான்…”

அவர் எழுதிய நூலை… அவருக்குப் பிறகு எழுதியவர்கள் அவரவர்கள் மனப்பக்குவப்படிச் சில விஷயங்களைத் திரித்தும்… கூட்டியும்… குறைத்தும் எழுதி விட்டார்கள்.

ஸ்ரீராமஜெயம் எழுதிய பக்தை நீ…! உனக்கு என்றும் ஸ்ரீராமராகவே வால்மீகியின் அருள் கிட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆசி என்றும் உண்டு.

நீ ஜெபித்த ஒவ்வொரு ஜெபமும் என் நெஞ்சில் பதிந்துள்ளது. இது மிகவும் ரகசியம்

இப்போது இருக்கும் ஈஸ்வரபட்டராகிய சற்குருநாதர் யார்…?

படிப்படியாக விளக்கம் சொல்கின்றேன். கலியுகத்தில் ஈஸ்வரபட்டராகவும் அபிராமி பட்டராகவும் இருந்தார். கிருஷ்ணாவதாரத்தில் கீதை உபதேசித்த அந்த ரிஷி யார்…? உன் யோசனைக்கு விடுகின்றேன்.

கீதா உபதேசத்தின் போது வந்த ரிஷி – குருநாதர் தான். இராமாவதாரத்தில் வால்மீகியாக இருந்தார். இன்னும் பல நிலையில் இருந்திருக்கிறார். தொடர்ந்து தியானத்தில் இருந்தால் இன்னும் பல வழிகள் புலப்படும்.

கலியுகம் முடிந்து கல்கி அவதாரம் வரும் பொழுது
1.சாமி சொன்னபடி சித்தன் வெளிப்படுவான் என்றார் அல்லவா… அந்தச் சித்தன் யார் என்பது உங்களுக்குப் புரியும்.
2.ஒரு குழந்தை பிறந்திருக்கிறது 2000 ஆண்டில் அவன் வெளிப்படுவான் என்று சாமி சொன்னார் அல்லவா.
3.அந்தக் குழந்தையின் ரூபத்திலும் “குருநாதர் தான்” சித்தனாக வெளிப்படுவார்.
4.கல்கி அவதாரத்தைப் பார்க்கச் சீக்கிரம் நடை போடு…!
5.“இப்போது நடக்கும் நிலையே கல்கி அவதாரத்தின் ஆரம்பம் தான்…”

மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்… கேலி செய்வார்கள்…!

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

 

உடலை நாம் சொந்தமாக்கினாலும்… இந்த உடலின் சொந்தத்தை வைத்து… மனித உடலின் தன்மை கொண்டு தான்…
1.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வந்த இருள்களை நீக்கி
2.உயிர் ஒளியாக இருப்பது போன்று நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றிட முடியும்.

ஆனால்
1.மாற்றத் தவறினாலோ மீண்டும் பிறவிக்கே திரும்பச் செல்கின்றோம்.
2.”பிறப்புக்கு” என்று வந்தாலும் அதிலே மீண்டும் மனிதனாகப் பிறப்பது “எத்தனை கோடி ஜென்மங்களோ…!” என்று சொல்ல முடியாது.

இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் மனிதக் கருவாக உருவாக முடியும். மனித உடலுக்குள் செல்லாது நாம் வேறு ஒரு உடலுக்குள் சென்று மனிதனாக உருப் பெற முடியாது (இது முக்கியம்).

குடும்பத்தில் நம் குழந்தை மீது அன்பைச் செலுத்துகின்றோம் அல்லது உற்ற நண்பன் மேல் அன்பைச் செலுத்துகின்றோம்… பாசத்தைச் செலுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

தன் குழந்தை மீது அன்பையும் பாசத்தையும் செலுத்தி விட்டால் கடைசியில் உடலை விட்டு நம் உயிரான்மா செல்லும் பொழுது யார் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்தோமோ “அந்த உணர்வு தான் முன்னணியில் இருக்கும்…. அந்த உடலுக்குள் தான் புகுவோம்…” (நண்பனோ அல்லது நம் குழந்தையோ)

ஆனாலும்
1.உடலை விட்டு ஆன்மா வெளியே செல்லும் பொழுது கடும் நோயுற்றுத் தான் வெளியே செல்கின்றது.
2.அதாவது… உடலின் இயக்கம் சீராகாதபடி உடல் நலிந்து உறுப்புகள் பின்னமாகி
3.அதன் பின் தான் இந்த உயிரான்மா வெளியே செல்கின்றது.

நாம் எந்த நிலையில்… எந்த நோயின் காரணமாக… இந்த உடலை விட்டு வெளியே செல்கிறோமோ பாசமாக இருக்கும் அந்த உடலுக்குள் தான் உயிரான்மா செல்லும்.

அவ்வாறு அந்த உடலுக்குள் உயிரான்மா சென்றால் இந்த உடலிலே எந்தெந்த நோய்கள் உருவாகி அவஸ்தைப்பட்டோமோ… அதே உணர்வை அந்த உடலிலும் செயல்படுத்தும்.

இந்த உடலில் எந்த ஆசைகள் பட்டோமோ… எதை எதையெல்லாம் செயல்பட வேண்டும் என்று எண்ணினோமோ… இதே உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்பட்டு யார் மேல் பாசமாக இருந்தோமோ… அந்தப் உடலுக்குள் நாம் சென்ற பின் “பேயாகத்தான்” ஆட்டிப் படைப்போம்.

நம் ஆசைகளை நிறைவேற்ற… இந்த உணர்வுகளை இங்கே தூண்ட இந்த ஆசையின் நிமித்தமே நோய் இங்கே (முதலில்) விளைந்தது.

அதே விளைந்த உணர்வின் தன்மை உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிர் தன்னுடன் அதனை அழைத்துச் சென்று… யார் மேல் பாசம் கொண்டோமோ அவர் உடலுக்குள் சென்று… அந்த உடலுக்குள் அதே தீய விளைவை உருவாக்கி… அந்தக் குடும்பத்திலும் கஷ்டத்தை உண்டாக்கி நோயையும் உருவாக்கி… பேயான ஆசைகளைத் தூண்டி… வேதனையான உணர்வுகளை அங்கே அதிகமாக உருவாக்கி… “அந்த உடலையும் வீழ்த்தும்…”

பின் அந்த உடலில் வளர்த்த அந்த உயிரான்மா… அவர் உடலில் என்னென்ன ஆசைகள் வந்ததோ… இதே பேயின் உணர்வு கொண்டு “இன்னொரு உடலுக்குள் சென்று பேயின் தன்மையாக (இப்படி வரிசையாக) இயக்கும்…”

இந்த உடலில் இருந்து ஆன்மா (முதலில் புகுந்தது) வெளிவந்த பின் மனிதனுடைய சிந்தனையே அதற்கு இருக்காது.

காரணம் ஒரு துளி விஷத்தை உட்கொண்டால் நம் நினைவு தடுமாறுகின்றது. கூட ஒரு துளி விஷம் உட் கொண்டு விட்டால் மனிதனுடைய நினைவே இருப்பதில்லை… இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.விஷத் தன்மை அதிகமாகி… உயிரான்மா மனிதனுடைய நினைவை இழந்து…
2.எத்தகைய விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அந்த விஷத்துடன்
3.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவில் மிதந்து கொண்டே இருக்கும்.

அப்படி மிதந்து கொண்டிருக்கும் பொழுது அதனின் விஷத்தின் அளவுகோலுக்கு ஒப்ப… ஒரு விஷத் தன்மை கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் செல்லும். மனித உரு பெறும் தகுதி இழக்கப்படுகின்றது.

இதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆகவே வாழக்கூடிய நாள்களில் உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே மகரிஷிகள் உணர்வை உடலில் விளைய வைத்து
1.(நம்மை) உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து
2.யாருடைய ஈர்ப்புக்குள்ளும் சிக்காது நாம் விண் செல்ல வேண்டும்.

நானே வழிகாட்டிச் செல்கின்றேன்… எல்லாம் புலப்படும்…!

நானே வழிகாட்டிச் செல்கின்றேன்… எல்லாம் புலப்படும்…!

 

சத்தியம் என்பது என்ன…? உனக்கு மேல் என் சிஷ்யனுக்குத் (ஞானகுரு0 தெரியும்.
1.சிஷ்யன் என்றால் அவன் மட்டும் அல்ல…
2.எல்லோரும் என் சிஷ்யர்கள் தான்.

சத்தியம் தான் ஜெயிக்கும் என்று சொல்கின்றோம். உண்மைதான் சத்தியம். எவன் ஒருவன் உண்மையில் இருந்து விலகாமல் அந்த உண்மையைக் கடைப்பிடிக்கின்றானோ அது தான் சத்தியம்.

சத்தியம் என்பதே உண்மை. ஒரு உண்மையை நாம் மறைக்கும் பொழுது சத்தியத்திலிருந்து விலகுகின்றோம்.
1.இடம் பொருள் சூழ்நிலை அறிந்து எந்தக் காரணத்தினாலும்… கடவுளாகவே இருந்தாலும் சத்தியம் செய்யாதே.
2.உன் உடலால் மனதால் சத்தியவானாக இரு.

நான் சொல்வதெல்லாம் உனக்கு மட்டுமல்ல… என்னிடத்தில் மனதை ஐக்கியப்படுத்தியுள்ள எல்லோருக்காகவும் தான்.

(ஒருவர் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ள ஈஸ்வரன் கோயில் அது அமைதியான இடம் தியானத்திற்கு ஏற்ற இடம் என்று சொன்னார்). அதற்கு குருநாதரின் விளக்கம்.

தியானத்தில் இருக்க தனிமையான இடமும் சோலைகள் அடர்ந்த அமைதியான இடமும் பிற சத்தங்கள் வராத இடமும் தான் தியானத்திற்கு ஏற்ற இடமா…? இல்லை…!
1.எந்த நிலையிலும்… எங்கு இருந்தாலும்…
2.எவன் ஒருவன் ஒரு நிமிடமாவது ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்துகிறானோ “அதுவே தியானத்திற்கு ஏற்ற இடம்…”

சித்தர்கள் முனிவர்கள் இருப்பது போல் உலகப் பற்றை விட்டுத் தியானத்தில் இருந்தால் தான் தியான நிலை என்பது அல்ல. உலகத்தில் உள்ள எல்லோரும் அது போன்று செய்ய முடியாது.

1.அவரவர்கள் ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்து கொண்டே
2.ஈஸ்வர தியானத்தில் இருப்பவர் எல்லோருமே ஈஸ்வரனின் அருளைப் பெறுகின்றார்கள்.

நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்… குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்த பிறகு நமது கடமை எல்லாம் முடித்துப் பிறகு தெய்வீக வழியில் ஈடுபடுகின்றோம் என்று…!

குழந்தைகளுக்குக் கல்யாணம் ஆனவுடன் நம் கடமை தீர்ந்து விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
1.தீர்ந்து விடுமா…? எந்தக் கடமையும் தீர்ந்து விடாது.
2.நீங்கள் இருக்கும் வரை நினைப்பது போல் எல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்.
3.நினைப்பது எல்லாம் நடந்து விடுமா…?
4.நீங்கள் இருக்கும் வரை கடமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே “கடமை பந்தம் ஆசைகளை விட்டு விடலாம் என்று நினைக்காமல்…” இப்போது செய்யும் முறையிலேயே தியானத்தைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

கடமைகள் தீர்ந்த பிறகு தான் இதிலே ஈடுபாடு வைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.
1.நானே வழிகாட்டிச் செல்கின்றேன்… இதிலிருந்தே எல்லாம் புலப்படும்.
2,என் அருளும் ஆசீர்வாதமும் என்றும் உண்டு.

தன்னையே தான் பார்த்து விட்டான்…! தன்னுள் ஈஸ்வர சக்தி இருக்கும் என்று உணர்ந்து விட்ட பிறகுதான் இது தெரிந்திருக்கும்.

சாமியிடம் (ஞானகுருவிடம்) சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவான்.

காட்சி:- ஜோதி – மயில் – கிண்ணம் – கிண்ணத்தில் இருந்து பெரிய பாத்திரம் – கிண்ணம் போய் விடுதல் – பாத்திரம் பெரிய கிண்ணமாக – அந்தரத்தில் – கிண்ணத்தில் வெள்ளை ஆகாரம். முனிவர்கள் கிண்ணத்தில் இருந்து ஆகாரம் கிரகிக்கின்றார்கள்.

உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்.

நெற்றிக் கண்ணைக் காட்டுதல்

நெற்றிக் கண்ணைக் காட்டுதல்

 

அன்பே சிவம்… அன்பே சத்தியம்… அன்பு இல்லார்க்கு இந்த உலகம் இல்லை… அன்பு… அன்பு…! என்று பாட்டுப் பாடுகின்றார்கள். அந்த அன்பு என்பது ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் முதலாம் மந்திரம்.

எல்லோரும் ஞானிகள் சித்தர்கள் ஆகிவிட முடியாது. ஞானிகளாகவும் சித்தர்களாகவும் ஆகித்தான் கடவுள் அருளைப் பெற முடியும் என்பது இல்லை.

சாதாரண மனிதனுக்கு வெறும் அன்பை மட்டும் வைத்துக் கொண்டு ஜீவிதம் செய்து விட முடியாது. அவனவன் காலத்திற்குத் தகுந்த மாதிரி மேடு பள்ளம்… நெளிவு… சுளிவு… எல்லோர் வாழ்க்கையிலும் எல்லாம் இருக்கும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு அன்பை மட்டும் ஊட்டி வளர்த்தால் அந்த மகன் உருப்படுவானா…?

ஈஸ்வரன் படத்தைப் பார். அவர் கழுத்தில் இருக்கும் பாம்பு… கையில் இருக்கும் சூலாயுதம்… அவர் ஜடாமுடி… நெற்றிக்கண்… தலையில் பிறைச்சந்திரன்… தண்டை சலங்கை… புலித்தோல்… உடுக்கை…! எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கும் உருவம் தான் சித்தர்களால் சிவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் தரித்துக் கொண்டு
1.அவர் முகம் மட்டும் அன்பாக சாந்தமாகக் காட்டுகிறார்.
2.இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா…?

உருவம் இல்லாத சிவனுக்குச் சித்தர்களால் கொடுத்த உருவத்தில் அவர் அங்கத்தில் தரித்திருக்கும் பொருள்கள் எதற்காக என்று தெரிகிறதா…?

இதன் உள் அர்த்தம்…
1.காட்சி:- வாயைத் திறந்து ஏதோ உள்ளே விடுதல் இந்த மாதிரியான உருவத்தில் பார்க்கும் பொழுது உனக்குப் பயமாக இருக்கும்.
2.காட்சி:- நெற்றிக்கண்ணை எடுத்துக் காட்டுதல். இதைப் பார்த்தவுடன் பயமாக இருக்கிறது அல்லவா…?

தெய்வமாக நெற்றிக்கண்ணைக் காட்டியது… முதலில் பயந்த பிறகு… கடவுளே நெற்றிக்கண்ணைக் காட்டியபோது எனக்கு என்ன பயம்…? என்று இருந்தாய்.

இது போல தந்தை… அன்பினால் மட்டும் மகனை வளர்க்க முடியுமா…? என்று கேட்டேன் அல்லவா. ஈஸ்வரர் நெற்றிக்கண்ணைக் காட்டியது போல் காட்டித் தான் அவனைத் திருத்த வேண்டும்.

இதே மாதிரி தான் அவர் தரித்திருக்கும் ஒவ்வொரு பொருளின் விளக்கமும். சித்தர்கள் மனிதர்களுக்குப் புரிவதற்காக கொடுக்கப்பட்ட உருவங்கள் அனைத்தும் இது போன்றுதான்.

மனதில் பதிய வைத்துக் கொள்.

அன்பினால் மட்டும் வென்று விட முடியுமா…? அன்புடன் மட்டும் இருந்தால் வாழ்க்கையினை நடத்திச் செல்ல முடியுமா…? சாமியிடம் (ஞானகுரு) கேட்டுத் தெரிந்து கொள்.

சாமி வரும் பொழுது வீண் கதைகள் பேசாமல் அவரிடத்தில் விளக்கங்களைக் கேட்டு தெரிந்து கொள்.
1.அவன் என்னிடம் உத்தரவு கேட்பான்
2.நான் சிவனிடம் வாங்கித் தருகின்றேன்…!

பார்த்தாயா…! யாரும் யாரையும் வெல்ல முடியாது.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும்

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும்

 

குருநாதர் காட்டிற்குள் எம்மை அழைத்துச் சென்று கேன்சர் போன்ற நோய்களைப் போக்கும் சில பச்சிலைகளைக் காட்டினார். அதை வைத்து நோயினை அகற்ற நீ உதவி செய்தாலும்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள்.
2.இதனை வாக்காக நீ அவருக்குக் கொடு.
3.இந்த அணுவின் தன்மை அங்கே விளையும்.
4.அவர்கள் அதை வளர்த்தார்கள் என்றால் அவரை அறியாது சேர்ந்த பாவ நிலையைப் போக்கும் நிலை வருகின்றது.

அவர்கள் எண்ணியதை அவரின் உயிர் உருவாக்குகின்றது. அணுவின் தன்மையை உடலுக்குள் பெருக்குகின்றது.

உதாரணமாக ஒருவன் கோபமாகப் பேசுவதை “நாம் கேட்டறிந்தால்” நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
1.ஆனால் கேன்சரை நீக்கும் உணர்வை நீ நுகர்ந்தாய்.
2.அந்த விஷ அணுக்கள் செயலற்றதாக ஆக வேண்டும் என்று “இந்த வாக்கினைக் கொடு…”

இந்தப் பதிவின் நினைவு கொண்டு யாரெல்லாம் தியானிக்கின்றார்களோ நஞ்சினை வென்ற துருவ மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் பெறுவார்கள் அந்த விஷத்தின் தன்மை அப்பொழுது தணியும்.

எதை எண்ணி ஏங்கிப் பெறுகின்றார்களோ அதை அவர்கள் உயிர்தான் இயக்குகின்றது.

“நான் செய்தேன்…” என்று (பெருமைக்காக) நீ இதைச் செய்தால் அவர் செய்யும் தீமைகளில் இருந்து விடுபட மாட்டார்.

உடல் நலம் பெற்று நல்லது வந்த பின்… மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் அவர் (அறியாமலே) செயல்பாடுவார். வேதனையைத் தான் மீண்டும் மீண்டும் நுகர்வார்.

அதே நோய் வரத் தொடங்கும் அவரின் விளைந்த உணர்வுகள் மற்றவருடன் உறவாடும் பொழுது அவர்களிலும் அந்த உணர்வு பதிவாகும். பதிவின் நிலையே அங்கே செயலாகும்.

இதை முழுமையாக மாற்றும் நிலை இல்லை…!

முழுமையாக நீக்க வேண்டும் என்றால்
1.நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால்
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரையும் நுகரச் செய்.
3.இந்த உணர்வின் துணை கொண்டு இருளை மாய்க்கச் செய்…!

பிறவியில்லா நிலை அடையும் பருவம் பெற்றது தான் இந்த மனித உடல். ஆகவே ஓவ்வொருவர் உயிரையும் ஈசனாக மதி… உடலைக் கோவிலாக மதி… உடலைச் சிவமாக மதி.

அருள் சேவை என்ற நிலையில் அருள் ஞானத்தின் உணர்வை ஊட்டும் ஊழ் வினை என்ற ஞான வித்தாக ஊன்று…!

அந்த வித்தினை எவர் எவர் வளர்த்துக் கொள்கின்றார்களோ அவர்கள் இந்த பாவ வினையும் சாப வினைகளையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள்… தீய வினைகளிலிருந்து விடுபடுகின்றார்கள்.
1.இதை மீண்டும் வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை வளருகின்றது
2.இப்படி வளர்த்தால் தான் அந்த நிலையை அடைய முடியும்

மாறாக… உன் கையால் பலருக்கு நீ நன்மைகளைச் செய்து கொடுத்தாலும் நல்லதான பின் “அந்த நேரத்திற்குத் தான்” எண்ணுவார்கள்.

அடுத்து பிறரை வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்வார்கள். நுகர்ந்த பின் வேதனைப்படும் சொல்லே மீண்டும் அவர்களுக்குள் வரும்.

இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாக முதலில் பதிவான நிலை மீண்டும் தன் சத்தினை நுகர்ந்து அந்தத் தீய அணுக்களையே உருவாக்கும். நீ செய்த நன்மையும் பயனற்றுப் போய்விடும் என்றார் குருநாதர்.

ஆகவே நீ சக்தி பெற்ற நிலைகளில்
1.அருள் ஞான வித்தினை அங்கே ஊன்றி விடு
2.அதை வளர்க்க உபாயத்தைக் கூறு
3.அதன் வழிகளிலே அவர் நுகரட்டும்
4.அருளைப் பெறட்டும் இருளை அகற்றட்டும்.

விநாயகர் தத்துவப் பிரகாரம் மனிதன் தான் முழு முதல் கடவுள். தீமைகளை அகற்றிடும் உணர்வினை விளைவித்து தீமைகள் அகன்றிட வேண்டும் என்று “கூட்டுத் தியானங்கள் அமைத்தால்… அருள் சக்திகளைப் பரவச் செய்தால்… தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும் அதிகரிப்பார்கள்…!”

1.அந்த உணர்வுகள் அதிக அளவிலே விளையப்படும் போது
2.அந்த அலைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலை வளரும்… அதை நீ செய்…! என்று சொன்னார் குருநாதர்

அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

 

உன்னை நீ நம்பு… ஈஸ்வரனின் அருள் இங்கே வட்டமிட்டுக் கொண்டே உள்ளது.

முதல் பாடத்தைச் சொல்லிவிட்டேன் இனி அடுத்ததெல்லாம் ஆன்மீக வழிக்குத் தான். உன் தியான நிலையில் மனதை ஒரு நிலை நிறுத்தி ஆண்டவனிடம் ஐக்கியப்படுத்து.

1.உன்னை நீ நம்பு என்பது…
2.உன்னுள் இருக்கும் என்னை நீ காண்… “புரிந்ததா…?”

நீயே நீ அல்ல என்னும் பொழுது உன்னுள் இருக்கும் என்னை நீ சீக்கிரம் காண்பாய்.

மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று கவலைப்படாதே. எதுவும் நினைத்தவுடன் தானாக நடக்கும் என்று நினைக்காதே.
1.உன்னுள் இருக்கும் “என்னையே”
2.நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கும் பொழுது ஏன் குழப்பம் அடைகின்றாய்…?

நீ கஷ்டத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று பார்த்தாய்…! தப்பித்து எங்கே சென்று விடலாம் என்று பார்த்தாய்…? தப்பித்து என்னிடம் தான் சேரலாம் என்று இருந்தாய்.

1.நானே உன்னுள் இருக்கும் பொழுது
2.என்னிடம் வந்து சேரலாம் என்று ஏன் இருந்தாய்…?

ஓவ்வொரு உடலிலும் இருக்கும்
1.என்னைப் பரிபக்குவமாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் யார் யாருக்கு உள்ளதோ
2.அவர்களுக்கு என் அருள் சீக்கிரமாகவே கிடைக்கும்.

காட்சி:-
ஜக்கில் சுடச்சுட காப்பி…! தட்டில் விட்டு ஆற்றிக் குடிக்கின்றார்.

மனம் கொதிக்கும் நிலையில் இருந்தாலும் “மனதை ஈஸ்வரனிடம் கொடு…! நான் உன்னுள்ளே இருக்கும் பொழுது நீ ஏன் கவலைப்படுகின்றாய்…?

எல்லாம் அவன் செயல் என்கிறாய்…! மரம் நட்டவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா…? என்பது பழமொழி.

மரம் நட்டவன் நிச்சயம் தண்ணீர் ஊற்றுவான். அதை ஏற்று உறிஞ்சுவது மரத்திடம் தான் உள்ளது. மரம் நட்டதும் தண்ணீர் ஊற்றியதும் ஆண்டவனாக இருக்கின்றான்.
1.மரம் தண்ணீரை ஏற்று எந்த அளவில் காயாகவும் பழமாகவும் பலன் கொடுக்கிறதோ
2.அது மரத்தின் வேலை தான்.

ஒரே இடத்தில் பக்கம் பக்கமாக மரம் வைத்தாலும் சில நன்றாகவும் சில சரியாகவும் காய்ப்பது இல்லை. சில பட்டுப் போகின்றன இதே நிலைதான் மனிதனுக்கும்.

விதியை மாற்ற ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து.
1.எல்லாம் அவன் செயல் என்று இருக்காதே
2.அவனே உன்னுள் இருக்கும் பொழுது “பாரத்தை” ஏன் அங்கு போடுகின்றாய்…?

உன்னையே நீ காணும் நாள் சீக்கிரத்தில் உண்டு. அந்த நிலைக்கு நீ உன் மனதைக் கொண்டுவர முயற்சி செய்.

இதையெல்லாம் தினசரி வரிசையாக எழுதிக் கொண்டு வா. நான் உத்தரவு தந்த பிறகு புத்தகமாகப் போடலாம். சரியாக எழுத வேண்டும்.

பிற்கால சந்ததியருக்கு இப்பொழுது இருக்கும் அளவுக்குக் கூட கடவுள் பக்தி இருக்காது. கோவில் என்பது அவர்களுக்கு சினிமா நாடகம் போல பொழுது போக்கு இடமாகப் போய்விடும்.

கோயில் என்பது அவரவர் அந்தஸ்தை காட்டும் இடமாகத்தான் உள்ளது… புரிந்ததா…?

வரும் சந்ததிகளின் காலத்திற்கு “கடவுளின் உண்மை சொரூபம் என்ன…?” என்பதற்கு புத்தகம் தனியாகப் போடலாம்.

“எனக்கு வேண்டியர்… உனக்கு வேண்டியவர்…” என்று யாருக்கும் காட்ட வேண்டாம். கல்லாக என்னை நினைத்து வணங்குபவர்களுக்கு இப்போது சொன்னால் புரியாது.

உனக்கே இத்தனை நாள் கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…? சாமி (ஞானகுரு) வந்து விளக்கம் சொல்லியும் குழப்ப நிலையில் தான் இருந்தாய்.

இப்பொழுது கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…?

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷம் என்று எதை நினைக்கின்றானோ… அதற்காக தர்மம் நியாயம் பக்தி என்று எதையும் பார்க்காமல் தன் சந்தோஷத்திற்காகச் செய்ய பார்க்கின்றான்.

சந்தோஷம் என்றால் என்ன…? என்று புரியாத மனிதர்களிடம் எப்படி விளக்குவது…?

எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

மனதை அமைதிப்படுத்தித் தன் நிலையைத் தான் உணர்ந்து மனதில் உள்ள சோர்வு சோகம் குரோதம் மனதில் உள்ள தாழ்வு இதையெல்லாம் விட்டுவிட்டு… எவன் ஒருவன் தர்மம் நியாயம் அன்பைக் கடைபிடிக்கின்றானோ “அவனுக்கு எல்லா அருளும் கிடைக்கும்…”

பூஜை என்பது என்ன…?

பூஜை என்பது என்ன…?

 

மனச்சாந்திக்காக எல்லோரும் பூஜை செய்கிறார்கள். சாமி (ஞானகுரு) சொன்னது போல் தியான மார்க்கத்திற்கு வந்தால் போதும். மனதை ஐக்கியப்படுத்தித் தியான மார்க்கத்திற்குப் போகவும்.

கடவுள் என்றால் என்ன…? என்பதை முதலில் தெரிந்து கொள்.

பூஜையில் இருக்கும் பொழுது
1.சாமி சொன்ன மாதிரி தாய்… தந்தை… போதனை கொடுத்த குருவிடம்… ஆசிர்வாதம் பெற்றுத் தியானத்தில் ஈடுபடவும்.
2.அடுத்து சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளை நினை.
3.அடுத்தது ஈஸ்வரா என்று நினைத்து மனதை ஐக்கியப்படுத்து.

கடவுள் எல்லாம் ஒன்றே என்று இருக்கும்பொழுது ஈஸ்வரனைப் புருவ மத்தியில் நினைத்தால் போதும்.

மாய ரூபம் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி உள்ளேன்… “ஜோதியே போதும்…!”

விநாயகர் முருகனை நினைத்துத் தியானித்தால் போகரின் காட்சி சீக்கிரம் கிடைக்கும். மனதை ஐக்கியப்படுத்தினால் கிடைக்கும். முனிவர்கள் சித்தர்கள் காட்சி வேண்டுமா…! அல்லது ஜோதி காட்சி வேண்டுமா…?

குழந்தைப் பாக்கியம் இல்லாத வரத்துடன் வந்திருக்கிறார்கள் குழந்தை இல்லை என்றால் அது அவரவர்கள் செய்து வந்த பூஜா பலன்… பிறவியிலிருந்து வந்த பலன் தான். மாற்றுதல் கடிநம்.
1.ஈஸ்வரனிடம் இருந்துதான் கேட்டு வாங்க வேண்டும்…
2.நம்பித்தான் கேட்டு மனதை ஐக்கியப்படுத்தித் தியானித்து வாங்க வேண்டும்.

“சந்தேக நிலை…” நிலையாக இருப்பதால் ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து. (காட்சி:-) மார்க்கண்டேயன் வரப் பலன் பெற வேண்டும்

பூஜைக்கு வரச் சொன்னது வழிமுறைக்காகத்தான். ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்திக் கேட்கவும் இதற்கு நீயோ நானும் என்ன செய்ய முடியும்…? பாடம் போதுமா… வேண்டுமா…? இன்னும் கேட்கலாம்… அவன் எழுத வேண்டாமா…!

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

 

நான் யார்…? இன்னவர் மகனா…? இன்னவர் கணவனா…? இன்னவர் மனைவியா…? இன்னாரின் அப்பாவா… அம்மாவா…?
1.நீ இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தி முடிக்கும் வரை தான் சொந்தம் பந்தம் எல்லாம்…
2.இறந்த பின் மறுபடியும் பிறப்பு.
3.பிறந்த பின்… இந்த வாழ்க்கையில் (மீண்டும்) ஒரு சொந்த பந்தம் குடும்பம்… வாழ்க்கை… பெயர்… எல்லாம்……

குழந்தைப் பருவத்தில் ஓர் ஆடை அணிகின்றோம். பிறகு வயதுக்குத் தக்க ஆடைகளை அணிகின்றோம். ஆக… ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு பெயர் வாழ்க்கை… சொந்த பந்தங்கள்…!

1.பிறப்பு எடுக்கும் முன்னும்… இந்தப் பிறப்பிலிருந்து வேறு பிறப்புக்குப் போகும் போதும் உன் நிலை என்ன…?
2.எத்தனையோ வாழ்க்கையும்… பிறப்பும்… அப்போது நான் யார்…?
3.பிறப்பு என்பது தொடர்ந்து வரும் போது… நான் என்பது யார்…?

எந்தப் பிறப்பும் எடுத்து முடியும் வரை எந்தவித ஆசைகளும் நிறைவேறாமல் தான் போகின்றோம். அடுத்து ஓர் பிறவியில்… மறுபடியும் அனுப்பும் போதும் ஆசைகள் நிறைவேறாமல் தான் போகிறோம்.

1.”என்று” ஆசைகள் பற்று பாசம் இல்லாமல் உலக வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறோமா…
2.முழு நிறைவோடு போகிறோமோ… அதன் பிறகு பிறவி இல்லை.

தற்போது நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…? எங்கும் எதிலும் இத்தகைய விளக்கம் இருக்காது…!

ஆகவே வாழ்க்கையில் சலிப்புடன் இல்லாமல் “நிறைவோடு வாழ்…!”

வேலைக்காரனை முதலாளி ஒரு வேலை கொடுத்து அனுப்பும் பொழுது… சரியாக வேலை செய்து முடித்து அவன் வரவில்லை என்றால்… மறுபடியும் அனுப்பிச் சரியாக செய்து வரச் சொல்லி அனுப்புவது போல்… பிறவி எடுத்ததிலும் நிறைவோடு இல்லாமல் ஆத்மா பிரிந்தால் “மறுபடியும் பிறவி எடுத்துத் தான் ஆக வேண்டும்…”

விதியை யாராலும் வெல்ல முடியாது என்கிறார்கள். விதி என்பது என்ன…? விதி என்பது வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் தான்…!

ஆண்டவனை நினைத்தால் விதியை வெல்லலாம். பாசம் பிடித்த இடத்தில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து விடுகின்றோம். அதே இடத்தில் ஆண்டவனை நினைத்து ஜாக்கிரதையாக நடக்கும் பொழுது விழாமல் நடக்கின்றோம்.

விழுந்து விட்டால் விதி என்றும் விழாமல் நடந்தால் ஆண்டவன் செயல் என்றும் சொல்கிறோம். அது மாதிரித் தான் நம் வாழ்க்கையிலும் வழுக்கலும் இருக்கலாம் சம தரையும் இருக்கலாம்

1.கஷ்டம் வரும்போது… அந்தக் கஷ்டத்தை நாம் எப்படி வெல்லுகிறோமோ
2.கஷ்டம் வரும் போது கடவுளை நிந்திக்காமலும் மனம் தளராமலும் வெல்லுகிறவன் தான் வாழ்க்கையின் பலனைப் பெறுகின்றான்

கஷ்டம் வரும்போது எல்லாம் தாண்டி வந்துவிட்டு… இப்போது சிறிய இடையூறுக்கு ஏனப்பா உனக்கு இவ்வளவு கலக்கம்…!