
பூஜை என்பது என்ன…?
மனச்சாந்திக்காக எல்லோரும் பூஜை செய்கிறார்கள். சாமி (ஞானகுரு) சொன்னது போல் தியான மார்க்கத்திற்கு வந்தால் போதும். மனதை ஐக்கியப்படுத்தித் தியான மார்க்கத்திற்குப் போகவும்.
கடவுள் என்றால் என்ன…? என்பதை முதலில் தெரிந்து கொள்.
பூஜையில் இருக்கும் பொழுது
1.சாமி சொன்ன மாதிரி தாய்… தந்தை… போதனை கொடுத்த குருவிடம்… ஆசிர்வாதம் பெற்றுத் தியானத்தில் ஈடுபடவும்.
2.அடுத்து சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளை நினை.
3.அடுத்தது ஈஸ்வரா என்று நினைத்து மனதை ஐக்கியப்படுத்து.
கடவுள் எல்லாம் ஒன்றே என்று இருக்கும்பொழுது ஈஸ்வரனைப் புருவ மத்தியில் நினைத்தால் போதும்.
மாய ரூபம் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி உள்ளேன்… “ஜோதியே போதும்…!”
விநாயகர் முருகனை நினைத்துத் தியானித்தால் போகரின் காட்சி சீக்கிரம் கிடைக்கும். மனதை ஐக்கியப்படுத்தினால் கிடைக்கும். முனிவர்கள் சித்தர்கள் காட்சி வேண்டுமா…! அல்லது ஜோதி காட்சி வேண்டுமா…?
குழந்தைப் பாக்கியம் இல்லாத வரத்துடன் வந்திருக்கிறார்கள் குழந்தை இல்லை என்றால் அது அவரவர்கள் செய்து வந்த பூஜா பலன்… பிறவியிலிருந்து வந்த பலன் தான். மாற்றுதல் கடிநம்.
1.ஈஸ்வரனிடம் இருந்துதான் கேட்டு வாங்க வேண்டும்…
2.நம்பித்தான் கேட்டு மனதை ஐக்கியப்படுத்தித் தியானித்து வாங்க வேண்டும்.
“சந்தேக நிலை…” நிலையாக இருப்பதால் ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து. (காட்சி:-) மார்க்கண்டேயன் வரப் பலன் பெற வேண்டும்
பூஜைக்கு வரச் சொன்னது வழிமுறைக்காகத்தான். ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்திக் கேட்கவும் இதற்கு நீயோ நானும் என்ன செய்ய முடியும்…? பாடம் போதுமா… வேண்டுமா…? இன்னும் கேட்கலாம்… அவன் எழுத வேண்டாமா…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.