மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணையால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணையால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்

 

ஓர் விஞ்ஞானி தீமைகளை அறிகின்றான்… தீமைகளை அகற்றவும் செயல்படுகின்றான். ஒரு இயந்திரத்தை உருவாக்கப்படும் பொழுது அதிலே சில புரைகள் ஓடிவிட்டால் கடினப் பொருளை அதிலே சேர்க்கப்படும் பொழுது… அந்த இயக்கத்தைத் (எடையை) தாங்காது அது உடைந்து விடுகின்றது.

அது ஏன் உடைந்தது…? என்று விஞ்ஞானி உற்று நோக்கி அதற்குண்டான வலுவின் தன்மையைக் கூட்டி அதை மீண்டும் உருவாக்குகின்றான். இயந்திரத்தை இவ்வாறு தான் உருமாற்றி உருமாற்றிப் பல செயல்களை மாற்றுகின்றான்.

இந்த உடலுக்கு வேண்டிய வசதிகளைச் செய்ய முடிகின்றது. ஆனால் உணர்வால் நுகர்ந்தறிவது தீமையாகி… அது விளைந்த பின் தீமையிலிருந்து விலக விஞ்ஞான அறிவு கொண்டு உடல் உறுப்புகள் கெட்டுவிட்டால் அதை அகற்றி விடுகின்றான்.
1.செயற்கையான மாற்று உறுப்புகளையும் உடலில் இணைக்கின்றார்கள்.
2.ஆனால் நுகர்ந்த வேதனையான உணர்வுகளை இவர்களால் மாற்ற முடியாது.
3.ஆனால் மெய் ஞானிகள் இவ்வாறு நுகரப்பட்ட தீமையான உணர்வுகளை மாற்றிப் பழகியவர்கள்.

தங்கத்திற்குள் கலந்துள்ள செம்பு பித்தளை வெள்ளியை நீக்க திரவத்தை ஊற்றி அதை எவ்வாறு அப்புறப்படுத்தித் தங்கத்தைத் தெளிவாக்குகின்றார்கள். அதைப் போன்று தனக்குள் நுகர்ந்த தீமைகளை நீக்குகின்றார்கள் ஞானிகள்.

சாதாரண மக்களும் வாழ்க்கையில் வரும் தீமைகளை எளிதில் மாற்ற முடியும் என்ற நிலைகளில் சூட்சுமத்தில் நடப்பதை உருவங்களாகக் காட்டி கதைகளாகத் தீட்டி தெளிவான நிலைகளை நமக்குக் காட்டினார்கள் மெய் ஞானிகள்.

இன்று ஒன்றாவது வகுப்பிலிருந்து நாம் படித்து வந்தாலும் எந்த விஞ்ஞானி அவன் கண்டுபிடித்தானோ அதனின் வழியில் கல்வியை நாம் பதிவு செய்து கொள்கின்றோம்… அதன் வழியே நாம் செயல்படுகின்றோம்.

இஞ்சினியர் ஆக வேண்டும் என்றால் இயந்திரத்தின் உறுப்புகளை அது எவ்வாறு உருவாக்க வேண்டும்…? அதிலே உலகத்தின் கலவைகள் எவ்வாறு இணைக்க வேண்டும்…? என்று கற்றுணர்ந்த பின் அந்தப் பாடங்களைப் படித்து மீண்டும் நினைவு கொண்டு வந்து கொண்டு வரும்போது தான் விஞ்ஞான அறிவால் இயந்திரத்தை உருவாக்க முடிகின்றது.

மெய் ஞானிகளோ
1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எவ்வாறு உடலாக விளைந்தது…? என்றும்
2.அதனால் விளையக்கூடிய தீமைகள் எது…? என்றும்
3.அந்தத் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும்…? என்றும் காட்டினார்கள்.
4.அதைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேச வாயிலாக யாம் கொடுக்கின்றோம்.
5.மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்து அவர்கள் சென்ற பாதையில் சென்றால் என்றும் அழியா நிலைகள் பெறலாம்.

விஞ்ஞான அறிவு கொண்டு உலோகங்களையும் மற்றவைகளையும் கண்டுபிடித்து எடுத்தாலும் அது உணவுக்குத் தான் உதவும். கண்டுபிடித்தது எதுவாக இருந்தாலும் உடலின் இச்சைக்குத் தான் அது உதவும்.

அந்த வழியில்… “நண்பன்” விஞ்ஞான அறிவு கொண்டு இருப்பான் என்றால் எதிர்பாராது விபத்தாகி அவன் இறந்தால் இவனின் ஈர்ப்புக்குள் வந்து அவன் வளர்த்த விஞ்ஞான அறிவைத் தான் இங்கே வளர்க்க முடியுமே தவிர “விண்ணுலகம் செல்ல முடியாது…”

பக்தியின் நிலையில் கொண்டு மெய் ஞானிகள் காட்டிய வழியினை மாற்றி இந்த உடலின் இச்சைக்காக அபிஷேகம் ஆராதனைகளைக் காட்டி அதன் வழி இந்தத் தெய்வம் தான் நல்லது செய்யும் என்று முழு நம்பிக்கையை ஊட்டுகின்றார்கள்.

அந்த நம்பிக்கையுடனே வாழ்ந்து வளர்ந்து பின் உடலை விட்டு இறந்தால் இதே பக்தி கொண்ட இன்னொருவர் அதே ஏக்கத்தில் ஏங்கினால் இறந்த ஆன்மா அவருக்குள் இது சென்று அங்கே அருளாடச் செய்யும். பக்தியை இரு மடங்காக ஆக்கும்… மற்ற நல்லது செய்தாலும் எண்ணத்தில் வராது.

ஆக… நாம் எதைப் பக்தி கொள்ள வேண்டும்…? என்றால் அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி தீமைகள் புகாது நம் நல்ல உணர்வுகளைக் காத்திடல் வேண்டும்.

இன்றைய பக்தி வழிகள் எல்லாம் வேதனையை வளர்க்கும் நிலையாகத் தான் இருக்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

கற்க வேண்டும் என்றால் கல்விச்சாலைகளில் பல வருடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால்
1.இங்கே யாம் உபதேசிக்கும்போது மெய் ஞானிகள் உணர்வின் வித்தை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.அந்த உணர்வுகளை மீண்டும் நீங்கள் எண்ணினீர்கள் என்றால் துரித நிலைகள் உங்களுக்குள் விளையும்.
3.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.
4.எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை நீக்கி… உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்.

இதை எல்லாம் பத்து நிமிடத்தில் சொல்லி முடித்து விட்டு உங்களை வீட்டுக்கு அனுப்பவும் செய்யலாம். அதிலே பயன் இல்லை. அருள் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்… காலத்தைப் பார்க்க கூடாது…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில் தான் இடைவிடாது மணிக் கணக்கில் யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

தூக்கம்

தூக்கம்

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகைக் காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை.

ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக “கொட்டாவி வெளிப்பட்டு”
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…?

ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கி விட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

 

பூமி எப்படித் தன்னுள் இப்பால்வெளி மண்டலத்திலிருந்து அச்சூரியனின் ஒளிக்கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களைத் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ… அந்நிலை போல் இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எச்சக்தியையும் கண்டுணர முடியும்…”

இந்தப் பூமியில் சூரியனின் ஒளிக்கதிர் பட்டு இந்தப் பூமியும் நாமும் மட்டும் பயன் பெறவில்லை. இந்தப் பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…?

இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து அந்த நிலையிலேயே மாற்று உடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன. இன்றைய நம் விஞ்ஞானிகள் அதை உணர்ந்தாலும் அந்தத் திரவங்களையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்தி விடுவார்கள்.

இன்னும் இந்த வான் மண்டலத்தில் எண்ணிலடங்காத சக்தி நிலைகள் படர்ந்துள்ளன.
1.நாம் காணும் நிலைக்கு மேகங்களும் பால் வெளி மண்டலமாகவும் காட்சி அளித்திடும் இந்த பால்வெளி மண்டலத்தினால் தான்
2.அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன.

பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலமுமே
1.தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பது அல்ல.
2.சுழன்று கொண்டே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காத வண்ணம் சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.

புதிய புதிய நட்சத்திர மண்டலங்களைக் காணுகின்றோம். ஆனால் தொடர்பு கொண்டு என்றும் காணும் நட்சத்திர மண்டலங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி நிலை கொண்டும் இப்பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்
1.இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபடுத்தி உள்ளதால்
2.இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்று அதன் ஈர்ப்புடனே வருகின்றன.

இப் புதிய நட்சத்திர மண்டலங்கள் தான் இப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இந்தப் பால்வெளி மண்டலத்திலிருந்து “ஒன்றுபட்ட அமிலத்தினால்” சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கே சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.

இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில சக்தி கலந்துள்ளதாக இருந்தால்… இந்த ஈர்ப்பில் வந்தடையாமல் அதன் நிலையே உருகும் நிலையாகப் பரந்த நிலைப்படுத்தி பிரிந்து விடுகின்றது.

இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள் யாவையுமே… இப் பூமியைப் போலவும் இவ் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல் ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.

பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்து உள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.

அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.

இந்த பூமியில் உள்ள எல்லா கனிவர்க்கங்களுமே கரைபவை தான்… ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில் மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கு மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.

நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதினால்
1.நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனி வர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி உள்ளன.
2.இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் நிலையில்
3.தங்கத்தையே ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து… நட்சத்திர மண்டலமாக “பல கோடி சுற்றிக் கொண்டுள்ளது…”

இந்தப் பூமியின் கனிவளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.

இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோளங்களின் நிலை அறிந்திடச் செல்கின்றான். இந்த சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி நிலையை அறியாததினால்…!

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

 

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பத்தில் விபத்துகளைப் பார்க்க நேர்கின்றது. அங்கே சிதறிக் கிடக்கும் உறுப்புகளை உற்றுப் பார்த்த பின் நம்மை அறியாமல் அச்சமும் பதட்டமும் பயமும் வருகின்றது.

சிதறுண்ட அந்த உணர்வலைகளை நாம் எடுக்கப்படும் பொழுது நமக்குள்ளும் அது உருவாகி சிந்திக்கும் செயல் இழக்கச் செய்து எதற்கெடுத்தாலும் பதறும் நிலை வருகின்றது.

1.சிதைந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
2.நாம் உற்று நோக்கும் போது அதனின் வித்தாக நமக்குள் பதிவாகின்றது.
3.பதிவான பின் அந்த உடலில் விளைந்த “உறுப்புகள் சிதைந்த உணர்வுகள்” நமக்குள் வந்துவிட்டால்
4.நம்மை அறியாமலே நம் உடல் கூறுகள் சிதைந்து கொண்டே வரும்.

இதைத் தீய வினை என்று சொல்வார்கள்.

நாம் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் அதை உற்று நோக்குகின்றோம் அறிகின்றோம். இருந்தாலும் உற்று நோக்கிய தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகள் வித்தாக உடலில் விளைகின்றது.

ஒரு டேப்பில் இனிமையான பாடலைப் பதிவு செய்கின்றோம். மீண்டும் அதைச் சுழல விட்டால் அதைக் கேட்கப்படும் பொழுது உடல் அசைகின்றது… இனிமையாக இருப்பதால் முகமும் மலர்கின்றது… நமக்கு மகிழ்ச்சி மேலோங்குகின்றது.

ஆனால் ஒரு வேதனை கொண்ட பாடலை இசைத்தாலோ நம்மை அறியாமலே நம் உணர்வுகள் சோர்வடைகின்றது.

ஒரு வீணையை வாசிக்கிறார்கள். சீராக இசைக்கப்படும் போது மகிழ்ச்சி வருகிறது. ஆனால் அதிலே நாதத்தை எழுப்பும் ஒரு சுருதி மாறி விட்டால் நினைவுகள் உடனே சிதறி… மனதில் இருக்கும் மகிழ்ச்சி அப்பொழுதே குறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் முதலிலே சொன்ன மாதிரி ஒரு மனித உடல் விபத்தில் சிதைந்த நிலைகளை நாம் உற்றுப் பார்த்த பின்… அவன் எப்படிக் கடைசி நேரத்தில் வேதனைப் பட்டானோ அதைக் கவர்ந்து கொண்டால் அந்த உணர்வின் சக்தியே நம்மை இயக்குகின்றது.

ஏனென்றால் எதை உற்றுப் பார்த்தாலும்… கண் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுன்றது. மீண்டும் அதனை நினைவு கொள்ளும் போது… திரும்பத் திரும்ப எண்ணிய பின் அது விதியாக மாறி விடுகின்றது.

விதி முளைத்து விட்டால் ஒரு தடவை அச்சமடைந்ததைப் பார்த்த அந்த உணர்வுகள் விதியாக மாறி விட்டால் அந்த கதியின் தன்மையாக நாம் அடிக்கடி பயமடைவதும் என்ன ஆகுமோ என்று அந்த பயத்தின் கதியிலேயே நம்மை இயக்கும்.

இதைப் போன்று நம்முடைய வாழ்க்கையில்
1.நாம் உற்று நோக்கிப் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது விதியாக மாறி
2.விதியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் மணங்கள் “கதியாக” நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் கதியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எதைக் கொண்டு…? மதி கொண்டு தான் அந்த இருளை நீக்க முடியும்.

1.அதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை ஊழ்வினையாக நாம் பதிவு செய்ய வேண்டும்
2.பின் அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விதியாக நாம் மாற்ற வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் விதியை மதி கொண்டு மாற்ற வேண்டும். மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் ஒடுக்கி அதை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணிலே “அதனின் கதியில் அழியாத நிலை கொண்டு சுழன்று கொண்டுள்ளார்கள்…”

1.தன் மதியால் விதியை மாற்றி ஒளியின் சிகரமாக எத்தகைய தீமையும் தனக்குள் அணுகிடாது
2.அந்த கதியிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.அதை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீய வினைகளை “அந்த விதியை மாற்றி
4.அவர்கள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்.

இவை என்ன உலக இயற்கை…?

இவை என்ன உலக இயற்கை…?

 

(16.12.1979 அன்று தினமணிச் சுடரில் வெளி வந்த கட்டுரை)

அயல் நாட்டுக் கார் ஒன்று நீண்ட படகு போல் வீதியில் வேகமாகச் செல்கின்றது. இதை பார்க்கும் ஒருவர் அருகில் நிற்பவரிடம் சொல்கிறார்.

அந்தப் பெரிய காரில் போவது யார் தெரிகிறதா…? கள்ளக் கடத்தல் செய்து பொருள்களைப் பதுக்கி வைத்து அந்தக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றாரே… அவர் தான்…!

ஆமாம்…! அவர்கள் தான் இப்படி ஆடம்பரமாக வாழ முடியும்…! என்று பெருமூச்சுடன் கூறுகின்றார் மற்றொருவர்.

அந்த வியாபாரிக்குத் தண்டனை விதித்த “மேஜிஸ்டிரேட்” அந்த வீதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக வெயிலில் நிற்கின்றார். 2… 3… பஸ்களில் ஏகக் கூட்டம் அவரால் ஏற முடியவில்லை. “கோர்ட்டுக்கு நேரமாகிவிட்டதே” என்ற துடிப்போடு அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கின்றார்.

அந்த வீதியிலேயே பெரிய வீடு… ஆடம்பரமான பங்களா…! தொடர்ந்து லஞ்சம் பெற்றதற்காக வேலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவருடைய வீடு அது…! என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதே வீதியில் கொஞ்சம் தள்ளி… சிறு வீடு ஒன்றில் அந்த வேலை நீக்கம் பெற்றவருக்கு மேலதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வீடு இருக்கிறது.

அவர் நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றியவர்… எல்லோராலும் பாராட்டுப் பெற்றவர்… வேலையில் திறமையானவர்…! ஆனால் லஞ்சம் வாங்கும் திறமை அவரிடம் இல்லை.

நான்கு பெண்களைப் பெற்ற அவர் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆக கலப்படம் செய்பவர்களும் கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும்… லஞ்சம் பெற்றுக் கணக்கில்லாமல் சேர்த்து வரும் செல்வத்துடன் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றனர்.

அது மட்டுமல்ல…! ஊராரும் அவர்களைத் தான் போற்றுகின்றார்கள்… புகழ்கின்றார்கள். கள்ளச் சந்தையில் ஈடுபடாத வணிகர்களைக் “கையாலாகாதவர்கள்” என்று இழிவாகக் கருகின்றனர்.

கலப்படம் செய்வதற்குப் பயப்படும் வியாபாரிகளைத் “துணிச்சல் இல்லாதவர்கள்” என்று கேலி செய்கின்றார்கள். கயவர்களைப் போற்றும் உலகம் கண்ணியமானவர்களைத் தூற்றுகின்றது.

இதன் பயனாகத் தீயோர்கள் பிறர் மதிக்க வாழுகின்றனர்… நல்லோர்கள் இதயம் நலிந்து ஏங்கி இருக்கிறார்கள். இந்த விசித்திரமான நிலை இன்று போல் அன்றும் இருந்திருக்கின்றது. மனித குலத்தின் இயல்பும் மாறவில்லை அல்லவா…!

பணத்தைப் புகழ்வதும் பண்பாட்டைப் புறக்கணிப்பதும் மனிதனின் மாறாத தன்மை போலும்…! இந்த இழிநிலையினை காணும் நல்லோர்கள் மனம் நொந்து வருந்துவது இயல்பு தானே…!

ஒழுக்கமான வாழ்வே உயர் ஞானத்தின் பயன் என்று உரைத்த மெய்யடியார்கள் இதைக் கண்டு இதயம் இடிந்து போகின்றனர்.

“தீது அவம் கெடுக்கும் அமுதம்” என்று இறைவனை ஏத்தும் ஞானிகளால் தீமை ஓங்குவதையும் நன்மை நலிவடைவதையும் கண்டு எப்படிச் சகிக்க முடியும்…?

பண்புகளுக்கெல்லாம் பகைவர்களாக உள்ளவர்கள் புன்முறுவலோடு பொலிவுடன் வாழுகின்றனர். அன்பு நிறைந்த நல்லோர்கள் நலிந்து ஏங்குகின்றனர்.

எண்ணிலா இத்தகைய துயர் விளைவிக்கும் இது என்ன உலகத்து இயற்கை…! கண்ணனே…! கடல் கடைந்த வண்ணனே…! தாளாது அடியேனை உன் கழலிணைச் சேருமாறு அருள் புரிவாய்…! இந்த வாழ்வு வேண்டாம்…! என்று இதயம் கரைந்து பாடுகின்றார் நம்மாழ்வார்.

நல்லவர்கள் நலிவதும் நல்லோர் அல்லாதவர்கள் நன்கு வாழ்வதும் எதனால்…? மனிதன் தனக்கு வரித்துக் கொண்ட சமுதாய அமைப்பு முறையின் விளைவு தானே…?

அறத்திற்கு மாறான இந்த அவல நிலை அடியார்களின் உள்ளத்தை உலுக்குகின்றது இதைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதை விட உலக வாழ்வை விட்டு மறைவதே உகந்ததாகப் படுகின்றது.

இது மட்டுமா…? தான் உண்ணுவதற்கு என்று பிற உயிர்களைக் கொல்லுகின்றானே மனிதன்…! ஏமாற்றிப் பிடித்தும் வலையில் சிக்க வைத்தும் உயிரினங்களைப் பிடித்து அவற்றைக் கொன்று உண்ணுகின்றான்.

அறம் என்பது என்ன…? என்று அறியாத நிலையில் இவ்வாறு மனிதன் பிற உயிர்களைக் கொன்று உண்ணுகின்றான். கொல்லாமையை விட அறம் ஏது…? இதனை அறியாதவர்கள் உயிர்களைக் கொன்று பசியாறுகின்றனர்.

இதைக் கண்டு சகிக்க முடியவில்லை ஆராவமுதனே…! என்னை உன் திருவடியின் கீழ் அழைத்துக் கொள்… என்னைக் கூவி அழைத்துக் கொள்…! என்று இறைஞ்சுகின்றார் ஆழ்வார். புலால் உண்பதன் புன்மையினை அறப்போருளை அறியாதவர்களின் செயல் என்கிறார்.

“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்” என்பது குறள்.

பிற உயிர்களைக் கொல்லாமல்தானே அறத்திற்கு அடிப்படை. தன் உடம்பு பெருக்க வேண்டும் என்பதற்காக… தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்…? என்று கேட்கின்றார் திருவள்ளுவர்.

பிற உயிர்களைக் கொன்று உண்ணும் பழக்கம் அறத்திற்கும் அறத்தின் பயனாக அருளுக்கும் மாறுபட்டது என்பதால் அது விலக்கப்படுகின்றது.

உலக வாழ்விலே அருளும் அறமும் நலிகின்ற போதெல்லாம் நல்லவர்கள் மனம் நலிகின்றது. அறம் போற்றி வாழ்பவர்கள் அல்லல்படுவதும் அல்லாதவர்கள் ஆடம்பரமாக வாழ்வதும் உயிர்களைக் கொன்று உண்டு தம் ஊனை வளர்ப்பதும் உலகத்து இயற்கையாகி விட்டது…! உலக வாழ்வோடு ஒன்றிய இயல்பாகி விட்டது.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை விட்டு இறைவன் திருவடியில் விரைவில் சேர்வதே வித்தகர்களின் விசாரமாகி விடுகிறது என்று இதயம் இடிந்து இவ்வாறு பாடுகின்றார்கள்.

ஈஸ்வரபட்டரின் பதில்:-
நம்மாழ்வார் இயற்றி வெளியிட்ட அருட்பாக்களை ஆராய்ந்து இந்நிலையின் பொருளை விளக்குகின்றனர்.

நீதியைப் புகட்டும் நீதிபதியின் வாழ்க்கைத் தரத்தையும்… அந்த நீதிபதியினால் தண்டனைக்குட்பட்ட குடிமகனின் வாழ்க்கை நிலையையும்… இரண்டு வெவ்வேறு நிலை கொண்ட பொருளாதார அடிப்படையில் “இந்த ஞானவழிக்கும்… ஆத்மீக வழியின் தொடர் நிலைக்கும்” ஒப்பிட்டுப் பதம் காண்கிறனர்.

1.அவன் சென்ற வியாபார நோக்கின் வழி எண்ணத் தொடரின் செயலுக்கும்
2.நீதிபதியின் நற்போதனை நிலைக்கும்
3.வாழ்க்கை நிலையை இப்பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒப்பிட்டுச் செயல் காண்பது எந்த வழியில்… எந்த ஞானியாக இருந்தாலும் உத்தமம்…!

ஆத்ம நிலையை அறிய… இறை பக்தியை ஏற்றம் கொண்டு வழி நடந்திடும் இவ்வுணர்வுடையோர் இந்நிலையை ஒப்பிட்டு… இந்நிலையினால் தன் எண்ணத்தை விரக்திப்படுத்தி… இறைவனடி ஒன்று தான் உத்தம நிலை என்று “விலகிச் சென்று… ஆத்ம ஜெபம் என்ற இறை பக்தியை வளர்க்கின்றார்களாம்…!”

நீதிபதி தான் வந்த வழியில் நீதிக்காகச் செயல் கொண்டு செயலாற்றுவதற்கும் அவர் வாழ்க்கையின் பொருளாதார நிலைக்கும் ஒப்பிடலாகாது.

வியாபாரியின் நோக்கில் பல தவறுகள் நீதிக்கு புறம்பட்டதாக இருந்தும் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளதை வைத்து
1.இறைவனைப் பாகுபடுத்திட்ட நிலை தான்
2.இன்றைய மனிதர்களின் எண்ண நிலை எல்லாம்.

சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் அடிபணிந்தே வாழ்ந்தும் பல இன்னல்களை ஏற்க வேண்டியது உள்ளதே… “ஆண்டவனின் சோதனை நிலை” என்ற எண்ண நிலையிலேயே அப்பாகுபாடு என்னும் எண்ணமே…
1.தர்மவான் சத்தியவான் என்று வாழ்ந்தாலும்
2.தன்னையே குறுக்கிக் கொள்ளும் இந்த எண்ணத்தினால் தான்
3.இன்றைய இந்த உலகில் உள்ள சத்திய நியாயமும் மறைந்து வரும் நிலை.

சத்தியத்திற்குச் சோதனை வரும் என்ற எண்ண நிலையிலேயே அச்சோதனை நம்மைப் பற்றிக் கொள்கின்றது.
1.இந்நிலையில் சத்தியம் என்பது எப்படி ஜெயம் கொள்ளும்…?
2.எண்ணத்தில் உள்ள சத்தியத்தையும் தர்மத்தையும் இன்றைய மனிதன் சோதனையாக எண்ணி “நழுவ விட்ட காலம் இது…”

வாழ்க்கையில் பல தவறுகளைத் தவறென்று உணர்ந்தே செய்பவனும்… தன் எண்ண நிலையைச் சோர்வுக்கும் தோல்விக்கும் அடிபணிந்திடச் செய்திடாமல்… நன்மை தீமை கொண்ட எவ்வழிக்கும்… ஒரே எண்ணமுடன் சோர்வை அண்ட விடாமல் செல்பவனின் பொருளாதார வாழ்க்கை நிலையும் குடும்பத்தின் செயல் நிலையும் வளமுடன் தான் வாழ்கின்றன.

1.பல தவறுகள் செய்கின்றான்… அவனை ஆண்டவன் பார்ப்பதில்லை.
2.நல் உணர்வு கொண்ட நமக்கேன் சோதனை…? என்ற எண்ணத்திலேயே நம்மைத் தாழ்த்தி
3.அதனால் வரும் நம் ஆத்ம நிலையின் சோர்வினால்
4.நல் உணர்வுகளை நாம் பெற்றிருந்தாலும் நம் நிலையும் குன்றி நம் பொருளாதார நிலையும் கீழ்ப்பட்டு
5.நம்மையே நாம் குன்றச் செய்து கொள்கின்றோம்.

இவ்வண்ண நிலையில்தான் ஆண்டவனின் ஜெபமும் ஞான நிலையும் இறை பக்தியும் இவ்வுலகமும் இவ்வுலகைச் சார்ந்த அனைத்து உலகங்களுமே அடக்கம் பெற்று வாழ்ந்திடும்… “இவ்வாத்மாண்டவனின் (தனக்குள் இருக்கும் ஆண்டவன்) எண்ணத்தை உணர்ந்திடாமல்” வாழ்ந்திடும் மக்களின் எண்ணத்தையும்… நம் முன்னோர் சூட்சுமத்தில் வெளிப்படுத்திய நூல்களில் உள்ள உண்மை நிலையை உணர்ந்திடாமல்… மக்களின் எண்ணத்தையே கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்கள் என்று சில நிலைகளினால்.

1.பக்தி… ஞானம்… பரம்பொருள்… பரமாத்மா… என்றே பல நிலைகளைப் போதனைப்படுத்தி
2.இறை பக்தியாக ஆத்ம ஜெபம் எடுக்கும் நிலையை இன்று உணர்த்துவாருமில்லை… செயல் கொள்வாரும் இல்லை.
3.இறைவனை எண்ணுவதே இப்பொருளாதார ஆசையின் அடிப்படையில் தான் (இன்றைய நிலை).

இவ்வண்ண நிலை கொண்ட நாம் எடுக்கும் சுவாசத்தினால் மட்டும்தான்… ஒவ்வொரு ஆத்மாவின் வழித்தொடர் நிலையுண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவனின் நிலைக்கொப்பதான் அவன் சேமித்துச் செயல் கொள்ளும் வழித் தொடரின் நிலையில்… எண்ணத்தினால் அவனைச் சார்ந்துள்ளோரின் நிலையின் எண்ணக் கலப்பும் வழித்தொடரின் செயல் நிலைகொள்கின்றது.

நம்மாழ்வார் இயற்றிய பாடல்களில் உள்ள நிலையின் அர்த்தத்தையே கால நிலைக்கு ஏற்ப இன்று உணர்த்துகின்றார்கள்.
1.உண்மைத் தத்துவ நிலை எது…?
2.உணர்ந்து செயல்பட வேண்டும்.

நாம் செய்யும் ஆத்ம சுத்திக்கு வலு கூட்டும் முறை (முக்கியமானது)

நாம் செய்யும் ஆத்ம சுத்திக்கு வலு கூட்டும் முறை (முக்கியமானது)

 

இரவில் படுக்கும் போது:-
தனக்குள் அறியாத வந்த தீய வினைகளை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இரவிலே படுக்கச் செல்லும் பொழுது 100 முறையாவது இதைச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வீடு முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அந்தச் சக்தி படர்ந்து எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

காலையின் கண் விழித்த்தும்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர்ந்து… எங்கள் தொழில்கள் சீராகி மன பலம் மன வளம் உடல் நலம் செல்வம் செல்வாக்கு பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு 100 முறை எண்ணுங்கள்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் எங்களுடன் வேலை செய்பவரும் பணிபுரிபரும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று இதை எண்ணிச் செயல்படுத்துங்கள்.

காலையில் கண் விழித்த உடனே இதை எல்லாம் குறைந்தபட்சம் 100 முறையாவது சொல்வது மிகவும் நல்லது.

சமையல் செய்யும் போது பரிமாறும் போது உணவு உட்கொள்ளும் போது:-
வீட்டிலே பெண்கள் சமையல் செய்யும் போது 25 முறை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாங்கள் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்கள் உடல் நலம் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணிச் சமையல் செய்யுங்கள்.

ஆகாரத்தைக் கொடுக்கும் போதும் பரிமாறும் போதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று 25 முறையாது மனதில் எண்ணுங்கள்.

உணவாக உட்கொள்வோரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று 25 முறையாவது எண்ணுங்கள். நாங்கள் உணவாக உட்கொள்வது அனைத்தும் எங்களுக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வரவேண்டும் என்று எண்ணி உணவை உட்கொள்ளுங்கள்.

வெளியில் செல்லும் போது:-
எங்கே வெளியிலே சென்றாலும் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணிவிட்டு எந்தக் காரியத்திற்காகச் செல்கின்றீர்களோ நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் மலரைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டுச் செல்லுங்கள்.

எனக்கு நல்ல மனதும் என்னைப் பார்ப்போருக்கு நல்ல மனதும் எங்கள் வழி என்றுமே நல்ல வழியாகவும் அமைய வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

நோய் நீங்க:-
நோய் ஏது இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எவ்வளவுக்கு அந்த நோய் சாடி இருக்கின்றதோ அதையே எண்ணாது பற்றதாக மாற்ற வேண்டும். மேலே சொன்னதை எத்தனை முறை அதிகரித்துச் சொல்கிறீர்களா அவ்வளவுக்கு உங்களுக்கு நல்லது… அதற்குத் தக்க உங்கள் பிணிகள் சீக்கிரம் அகலும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை பற்றுடன் பற்ற முடிகின்றது. வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற முடிகிறது.

பிறர் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டால்:-
பிறர் நோய்வாய்ப்பட்டாலும் அதைக் கட்டறிந்த பின் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று திருப்பித் திருப்பி ஏங்கித் தியானியுங்கள்.

பின் அவர் அந்த சக்தி பெற்று உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டு… அவர்களுக்கு வேண்டிய உபகாரத்தை நீங்கள் செய்யலாம்.

அடுதவர் கஷ்டங்களை வேதனைகளைக் கேட்டறியும் போது:-
ஒருவர் தனக்கு மிகுந்த கஷ்டம் என்று சொன்னாலும் அதைக் கேட்டறிந்தால் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று முதலில் எண்ணி வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

பின்… அந்தக் கஷ்டப்படுபவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொல்லி “உங்கள் கஷ்டம் நீங்கும்” என்று வாக்கினை அவருக்குக் கொடுங்கள்.

1.உங்கள் சொல் தான் (உணர்வு) அவருடைய கஷ்டத்தைப் போக்க வேண்டுமே தவிர
2.அவருடைய கஷ்டத்தை நாம் வாங்கி விடக்கூடாது… நம் நல்லதை அது அழித்து விடக்கூடாது.

உடலில் ஆவி புகுந்திருந்தால்:-
ஒரு சிலர் உடலில் பிறிதொரு ஆவி இருக்கலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். என் உடலில் புகுந்த அந்த ஆன்மா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு ஐம்பது முறையாவது எண்ணுங்கள்

1.அதிலே கலந்து வந்த தீமைகள் மடிந்திட வேண்டும்
2.அவைகளும் எனக்குள் இருந்து பிறவா நிலை பெற வேண்டும்
3.எனக்கு நல் வழி காட்ட வேண்டும் என்று ஒரு 100 முறையாவது எண்ணுங்கள்.

இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதை வலுவாக்கும் பொழுது நாம் அடைய வேண்டிய எல்லையான அந்தச் சப்தரிஷி மண்டலத்தை எளிதில் அடைகின்றோம்.

இப்படிச் செய்யாது கஷ்டப்பட்டவரையும் வேதனைப்பட்டவரையும் நோய்வாய்ப்பட்டவரையும் எண்ணி அவர்களின் உணர்வை நுகர்ந்து விட்டால் அதே உணர்வு நம்மைத் தாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் தான் நாம் சிக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்போதெல்லாம் நமக்குள் அதைப் பற்றுடன் பற்றுகின்றோம். ஆகவே தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும்.
1.அப்போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
2.எந்தத் தீமையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட இந்த முறைகளைக் கையாளுங்கள்.

குருவிடம் யாம் (ஞானகுரு) பெற்றது:-
1.இலேசாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
2.25 வருடம் காடு மேடல்லாம் அலைந்து குருநாதருடைய அருளைப் பெற்று மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அதனின் அனுபவங்களைப் பெற்று
3.தீமைகளை எவ்வாறு நீக்க வேண்டும் என்று பெற்ற அந்த அருள் சக்தியைத் தான்
4.நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை நான் இப்பொழுது நியானிப்பது

குருநாதர் காட்டிய வழியில் பல முறை நீங்கள் எண்ணித் தியானிக்கும் போது உங்கள் பிணிகள் நீங்கும்… நீங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள். அந்த மகிழ்ச்சியே எனக்குத் தேவை. உங்களில் குருவைக் காணுகின்றேன்.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

 

05.12.1979 அன்று தினமணி பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி:-

பாரிஸில் (பிரான்ஸ்) சென்ற மாதம் 26ஆம் தேதி பறக்கும் தட்டு தூக்கிச் சென்றதாகக் கூறப்பட்ட வாலிபர்… நேற்று மீண்டும் அதே இடத்தில் தோன்றினார்.

பாரிஸுக்கு மேற்கு செயிண்ட் சூன் பகுதியைச் சேர்ந்த பாண்டைன் என்ற 19 வயது வாலிபரும் அவரது இரு நண்பர்களும் தங்கள் வீட்டு வாசலில் காரில் துணிப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது காருக்குச் சிறிது தூரத்தில் “ஒளியுடன் கூடிய பந்து போன்ற ஒரு பொருள்” தெரிந்தது. அது வர வர மிக பெரிதாகிக் கொண்டே வந்தது. அதன் ஒளியும் கண்ணை எரிக்கும் அளவுக்குப் பிரகாசமானது.

கார் அருகே அந்தப் பொருள் வந்த பொழுது… பெரிய பந்து போல் இருந்தது. பாண்டைன் மட்டும் நின்று கொண்டிருந்தார். மற்ற இருவரும் அதைப் படம் எடுக்க வீட்டிற்குள் ஓடினர்.

கேமிராவுடன் திரும்பி வந்த பொழுது பாண்டைனைக் காணோம்… காரைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளி இருந்தது. பின் அதுவும் மறைந்தது.

தகவல் அறிந்த பிரெஞ்சு போலீசார் உடனடியாக பாண்டைனைத் தேடுவதில் முனைந்தனர். பறக்கும் தட்டு இறங்கிய இடத்தில் கதிரியக்கச் சோதனையை போலீசார் நடத்தினர்.

அங்கு கதிரியக்கம் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது பாண்டைனுடைய இரு நண்பர்களையும் போலீசார் தீர விசாரித்தனர்.

இதற்கு இடையே எந்த இடத்தில் பறக்கும் தட்டு பாண்டைனை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டதோ அதே இடத்தில் நேற்று அவர் தோன்றினார்.

பறக்கும் தட்டு எடுத்துச் சென்ற அன்று என்ன உடை அணிந்து இருந்தாரோ… அது சிறிது கூடக் கலையாமல் இருந்தது. அவர் பையில் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது.

தான் பறக்கும் தட்டால் எடுத்துச் செல்லப்பட்டதைக் கூறும் பாண்டைன்… அதற்குப்பின் ஒரு வாரத்தில் என்ன நடந்தது…? என்று தெரியவில்லை. திடீரென்று தான் பழைய இடத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது என்று கூறினார்.

இது பற்றி இனம் புரியாத… “பறக்கும் பொருட்கள் பற்றி ஆராயும் பிரெஞ்ச் விண்வெளி விஞ்ஞானிகளிடம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரபட்டரின் பதில்:-

பந்து போன்ற அந்த ஒளி பிறரால் ஏவப்பட்ட பறக்கும் தட்டு என்ற சாதனம் அல்ல. “பறக்கும் தட்டு” என்ற பீதி கொண்ட நிலையில் எண்ணம் கொண்ட இச்செயல்… எந்த நிலையில் ஏற்படுகின்றது…? என்பதனை உணர்ந்திட வேண்டும்.

இந்த மனித ஆத்மாவிற்குப் பல அமில சக்திகளைத் தன்னில் ஈர்த்து மனித பிம்பமாக வாழ்ந்திடும் சக்தி நிலை உண்டு.

அணுவிலிருந்து பல நிலை மாறி மனித ஆன்மாக்களாக வாழ்ந்திடும் இப்பிம்பச் சக்திகளுக்கு
1.தாவர வர்க்கங்களைப் போன்றும்
2.மற்றைய கனி வளம் திரவங்கள் இப்படித் தனித்த ஒரு நிலை கொண்ட ஈர்ப்பு சக்தியிலிருந்து மாறு கொண்ட அனைத்து அமிலங்களையுமே
3.தன் எண்ணத்திற்குகந்த எந்த அமிலத்தையும் ஈர்க்கும் சக்தி நிலை (மனித ஆன்ம பிம்ப உடலுக்கு) உண்டு.

நம்மைச் சுற்றியுள்ள நம் பூமியும்… நம் பூமியுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் சக்தியும்… நம் சூரியனின் சக்தியிலிருந்து வந்திடும் அணு பிம்பங்களின் தொடர்பினால்… இந்த மனித ஆத்மாவை எந்நிலைக்குகந்த ஒரு நிலை கொண்ட அணு சக்தியையே… இவ் எண்ணத்தின் தொடர்பினால் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் சக்தியினால்… “இன்று ஒரு நிலை கொண்ட ரிஷிகளின் நிலையைப் போல உடலையே ஒளியாக்கி… ஆவி பிம்பமாக ஜோதியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

ஒவ்வொரு உடலையுமே இப் பிம்ப நிலை தெரியாமல் ஒளியுடன் ஒளியாகப் பறந்த நிலைப்படுத்திட முடிந்திடும்.

இன்று அங்கு நடந்திட்ட இந்நிலை “விஞ்ஞானத்தில் வழி வந்த” சித்து நிலை பெற்றோரின் சக்தி நிலை செயல் கொள்கின்றது
1.சித்து நிலை பெற்ற விஞ்ஞானி
2.தன் உடலையே ஒரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்த்துth தன் பிம்பத்தையே ஒளிப்படுத்தி…
3.அந்த ஒளியுடனே மற்ற ஆத்ம பிம்பத்தையும் ஒளிப்படுத்தித் தன்னுள் ஈர்த்து
4.தான் அடைந்த ஒளி பெறும் சக்தியின் நிலையினால் தன்னுள் சேர்த்த மற்ற ஆத்ம உடலையும்
5.அந்நிலையிலேயே ஈர்த்திடும் ஆராய்ச்சி நிலையில் நடந்த நிலை தான் அங்கு நடந்த நிலை.

ஆவியின் தொடர்பு கொண்டு “மனோவசியம் செய்வதைப் போல” ஆத்ம பிம்பத்தையே ஒளிப்படுத்தி மற்ற ஆத்ம பிம்பத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை தான் அங்கு நடந்ததன் நிலை.

விஞ்ஞானத்தின் செயல் எல்லாம் இயற்கையுடனும் மற்ற அணுக்களின் தொடர்புடனும் செயற்கையாகச் செயல்பட்டு விளையாடியது.

இந்தப் பூமியில்… இந்தக் கலியில்… விஞ்ஞான வழியில் வந்த சித்து நிலையினால் “ஆத்மாவுடன் ஆத்மாவை இணைக்கும்… ஒளி நிலை விளையாட்டு நிலைக்கு வந்துள்ளது…”

பிம்பத்தையே ஒளியாக்கிடும் சக்தி பெற்றவன் அந்நிலையின் சக்தித் தொடரைச் செயல்படுத்திட… மற்ற ஆத்மாவை ஈர்த்து ஏன் செயல் கொண்டிட வேண்டும்..?

மனித ஆன்மாக்களின் எண்ணத்தையே கலக்கம் கொண்டிடும் நிலைக்குத் தான் பெற்ற சக்தியை ஏன் இப்படி விரயம் ஆக்க வேண்டும்…?

இப்பூமியில் இந்தியாவில் கோயில்களை நம் சித்தர்களினால் செயல்படுத்திடும் புண்ணிய ஸ்தலப்படுத்தி… அங்கு பக்தி நெறியில் வந்திடும் ஆன்மாக்களுக்கு ஒளியுடனே ஒளியாக… தான் பெற்ற சக்தியை ஒளியின் வழியில் நல்லருளைப் பாய்ச்சிடும் (நம் சித்தர்களின்) வழியையே தான் மாற்று வழியில் அவர்கள் (விஞ்ஞான) செயல்படுத்துகின்றனர்.

அவ்வெண்ணத்துடன் தொடர்புடனே… அந்த வழியில் வந்த விஞ்ஞானச் சித்தனும் இங்குள்ளதைப் போல் பக்தி நெறி கொண்ட கோயில் நிலை அங்கு இல்லாததின் நிலையால்… வந்த விளையாட்டு நிலை தான் இது.

காந்த மின் ஒளி அலை (ELECTRO MAGNETIC WAVE)

காந்த மின் ஒளி அலை (ELECTRO MAGNETIC WAVE)

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது (முக்கியமானது). மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

“ஈர்க்கும் காந்த நரம்புகள்…”

“ஈர்க்கும் காந்த நரம்புகள்…”

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்… அவற்றிலிருந்து “அமைதியுடன் மீண்டு” ஆத்மீக வழியில் செல்வதுதான் சிறந்தது

வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்… அவற்றிலிருந்து “அமைதியுடன் மீண்டு” ஆத்மீக வழியில் செல்வதுதான் சிறந்தது

 

ஞான மார்க்கத்திற்கு சென்ற அந்த ஆத்மீக வழியில் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகைகளையும்… சோலைகள் அடர்ந்த காட்டுப்பகுதிகளையும்… இந்தப் பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச்சிகரங்களுக்கும்… சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலை என்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும் இந்த மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும் மற்ற தொழிற்சாலைகள் உள்ள இடங்களிலும்
1.அங்குள்ள காற்று அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளும் இந்தக் காற்றுடனே அந்நிலை கொண்ட அந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளது.

மனித ஆத்மாக்களின் நல் உணர்வும், தீய உணர்வும் கொண்டவரின் சுவாச நிலை பெற்ற காற்று இந்த காற்று மண்டலத்தில் ஒரு நிலை கொண்ட மட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருப்பதனால் அந்த நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது
1.அவர்களின் எண்ணமுடன் இந்த எண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுவதினால்
2.இந்தக் காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்யும் போது
3.அத்தியானத்திற்குப் பல நல் உணர்வுகளும் அவர்களின் ஆத்மாக்களுக்கு நல் பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இந்தப் பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் போதும் இந்த அசுத்தக் காற்று அத்தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் போதும் இந்தப் பூமிக்கடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே.

வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால் இந்நிலைக்குச் சென்று இத் தியானம் பெறுவது எளிது.

ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு நம் வாழ்க்கையையே நாம் வாழும் நிலையையே தியானமாக்கி வாழும் பக்குவ நிலை தான் நமக்கு உகந்த உன்னத நிலை.

உடல் உபாதை வரும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்க… அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமான மருந்தை உட்கொண்டால் தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல் உணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திகளுக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்.

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும்… அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து “எந்தப் பாதை சரியான பாதை…?” என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்று வாழ்க்கையில் வரும் இன்னல்களில் இருந்து நாம் மீண்டு சென்று “ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞானமார்க்கம்…”

இந்த மார்க்கத்தை வெறுப்புடனோ சலிப்புடனோ சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ நம்மைத் தாக்கும் இன்னல்களில் இருந்து பயந்தோ செல்வது முறையல்ல.
1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்… அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு
2.ஆத்மீக வழிக்குச் செல்வதுதான் நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உகந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இந்த உலகம் முழுவதுமே வெளிப்படுத்தி உள்ளார்கள். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்” இன்றைய உலகில் உள்ளனர்.

வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்ந்திடாமல்… வளரும் பக்குவக் குழந்தைகளுக்கு உணர்த்திடும் நிலையும் இன்று இல்லை. ஞான வழியையும் இந்தத் தெய்வீக வழியையுமே
1.இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை என்று உணர்ந்து
2.அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாக மனிதனாக தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் போகரும் முகமது நபியும் ஏசுபிரானும். அல்லா என்ற இறைவனையும் பரம பிதா என்ற தேவனையும் முருகா என்ற சக்தியையும் வணங்குகின்றார்கள்.

இயேசுவுக்கும் முகமது நபிக்கும் முருகர் வெங்கடாஜலபதி இப்படி நாமம் கொண்டவர்களின்… இறைவனாக இருந்து அருள் புரிபவன் சக்திக்கு மேல் உயர்ந்த சக்தி “அச்சக்தியின் சுடர்” ஒன்றை அனைவரும் போற்றி வணங்குகின்றனர்.

அந்தச் சக்தியின் செல்வப் புதல்வர்களான நாம்
1.நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாக
2.ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.