சிவ தத்துவம்

நந்தீஸ்வரன்

  1. “நந்தீஸ்வரன்” சிவனுக்குக் கணக்குப்பிள்ளை

நம்மை ஈசன் உருவாக்கினான் என்று நாம் தெரிந்து கொண்டோம்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அந்த வினைகளுக்கு நாயகனாக தீமைகளை நீக்கும் மனித உடலைத் தந்தது என்பதைத் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சிவ தத்துவத்தில் “நந்தீஸ்வரன்.., சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று வைத்தது.

நந்தீஸ்வரன் என்றால்.., “சுவாசித்ததை” உயிர் என்ற ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் “அதே குணத்தை” உருவாக்கும்.

கோபப்படுவோரைப் பார்த்தோம் என்றால் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. திரும்பத் திரும்ப வளர்க்கப்படும் பொழுது கோபமான உணர்வு அதிகமாகி.., “அந்தக் கணக்கின்படி” நமக்கு இரத்தக் கொதிப்பு வருகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால்.., சாப்பாடு கொண்டு வந்தார்கள் என்றால், “வள்..,” என்று கத்தச் சொல்லும்.

உதவி செய்தார்கள் என்று எண்ணச் செய்யாது. புலி எப்படி உறுமித் தாக்குகின்றதோ அது போல நம்மை இயக்கும்.

நாம் ஒவ்வொரு உடல்களிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் மனிதனாக உருவாக்கியது, இந்த உயிரான ஈசனால் வளர்க்கப்பட்ட நிலைதான்.

ஆனால், தீமையை நீக்கும் சக்தி பெற்ற இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வு ஆகி “அந்தக் கணக்குக் கூடினால்” உயிர் என்ற ஈசன் உடலை விட்டுச் சென்றபின் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப.., “தீர்ப்பு”.

நீ இதை எடுத்ததனால் அங்கு சென்று பிறந்து பழகு, நீ கஷ்டத்தை அனுபவி. “கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தாய்.., கஷ்டத்தை நீ அனுபவி..,” என்று உயிர் உருவாக்கிவிடும்.

நாம் நினைக்கலாம். கோர்ட்டில் ஏறிப் “பொய் சாட்சி” சொல்லலாம் என்று. ஆனால், உயிரிடம் மட்டும் யாரும் தப்ப முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.

அதனால்தான்…, சிவதத்துவத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் “கணக்குப்பிள்ளை” என்று இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

  1. பிறர் உணர்வு.., பிற தோஷம் – பிரதோஷம்

அந்தக் கணக்கின்படி பிறருடைய கஷ்டங்களையும் வேதனைகளையும் நாம் கேட்கின்றோம். அவைகள் “பிற.., தோஷங்களாக” நமக்குள் வந்துவிடுகின்றது.

ஒருவர் மேல் அன்பாக இருக்கின்றோம். அவர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் தோஷம் வந்துவிடுகின்றது. நம் உடலின் அணுக்களில் பட்டபின் வேதனைதான் படுகின்றோம்.

பிரதோஷத்தை எப்படிப் போக்குவது என்று சிவன் ஆலயத்தில் காட்டப்படுகின்றது.

நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்றால் மாலை 4 மணிக்கு ஆலயத்திற்குச் சென்று விளக்கு பூஜை வைத்து அர்ச்சனை செய்து விரதம் இருந்து ஈசனுக்கு அபிசேகம் செய்தபின் நந்தியிடம் சென்று அதன் காதில் சொல்கின்றோம்.

அதாவது, நான் எல்லோருக்கும் நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால், குடும்பத்தில் நோயும் கஷ்டமும் வந்து கொண்டிருக்கின்றது.

என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன்.., என்கின்றான். “இதையெல்லாம்.., நீ போய் ஈசனிடம் சொல்..,” என்று பிறர் தோஷத்தைக் கழிப்பதற்கு மாறாக அங்கும் அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

நமக்குள் அந்த நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று “அகஸ்தியன் எப்படித் தீமைகளை நீக்கினானோ’ அதைப் போல நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

(பிறதோஷங்களை எல்லாவற்றையும் நீக்கி ஒளியின் சரீரமாக அகஸ்தியன் தான் இன்று துருவ நட்சத்திரமாக உள்ளான்)

அப்படி நீக்குவதற்கு  நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்? என்பதற்காகக் காட்டுகின்றார்கள். காலை 4 மணிக்கு துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்தி அதிலிருந்து வெளிவரும் பேரருள் பேரொளியை நாம் கவர்தல் வேண்டும்.

அதை எடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று உடலை உருவாக்கிய அணுக்களுக்கு “இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்”.

அடுத்து நாம் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குறைகளையும் வேதனைகளையும் கேட்டறிந்தோமோ அவர்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இப்படி எண்ணி நமக்குள் சேர்த்து அந்த மூச்சலைகளை அவர்கள் பால் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது.., யாருடைய உணர்வுகளும் “நமக்குள் தோஷமாக மாறாது”. இந்தக் கணக்கின் பிரகாரம் எந்தத் துருவ நட்சத்திரத்தினை அதிகமாக எண்ணினோமோ சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதன் ஈர்ப்பு வட்டத்தில் இணைவோம்.

அழியாத நிலைகள் பெறுவோம். பேரானந்த நிலையில் என்றுமே வாழ்ந்திட முடியும்.

Leave a Reply