
காமதேனுவிடமிருந்து சக்தி பெறப் பழகிக் கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்ட வேண்டும் என்றால்
2.அந்த வீரிய எண்ணச் செயல் வளர்வதற்கே
2.வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை..!
ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிருடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்…
1.அதாவது காமதேனு என்று மகரிஷிகள் சூட்சமமாக உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொள்ள வேண்டும் என்றால் பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை ஆகாரமாகப் பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய மகரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும்…! என்றும் காட்டினார்கள்.
இதையே தான் உலக வழக்கப்படி… நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்று அன்று சித்தர்கள் காவியங்களில் மறைமுகமாகச் சொன்னார்கள்.
விசுவாமித்திர மாமகரிஷிக்கு
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.
தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.
1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம்…! என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் எனச் சித்தர்களால் காட்டப்பட்டது.
சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?
1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்துக் கொண்டால்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
இதை நீ அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.