அதிகக் கோபம் நமக்கு ஆகாது

அதிகக் கோபம் நமக்கு ஆகாது

 

நாம் எண்ணியபடி வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது.
1.அந்தக் கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறி உணர்வு,
2திலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
3.அதிலிருந்து பல உபாதைகள் நாமே நம் உடலுக்கு ஏற்றிக் கொள்கிறோம்.
4.கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கிறது.
5.அந்நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாய் நம் உடலில் ஏறுகிறது
6.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க, நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் ஒரு நிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கிறது.
7.அந்நிலையில் இருந்து, நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு
8.மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாய், பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு ஆளாக வேண்டி உள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் இத் தொடர் நிலையெல்லாம்.

சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மனநிலையை அமைதிப்படுத்தி… அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் இச்சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.

தெளிவை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

நம்மையே நாம் செய்யாத தவறுக்காக ஏசும்பொழுதும்…
1.அடுத்தவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாம் என்ன தவறு செய்தோம்…?
2.நம்மிடம் தவறில்லாத பொழுது… நம்மை ஏசுபவனை அவனே தண்டனை அனுபவிக்கட்டும் என்று அவன் தவறை என்றெல்லாம் எண்ணி
3.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவ் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல்லுணர்வு பெறட்டும் நல்வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோதவிடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் பிறரின் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களில் இருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவன் இருக்க வினை பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ, துவேஷித்தோ வருபவன் எல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையே நான் ஏமாற்றி வாழ்கின்றான்.

மன நிலையை ஒருநிலைப்படுத்திச் சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் “பல நெறி முறைகள் உண்டப்பா…!”


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply