உத்தராயணம்

உத்தராயணம்

 

உயிரணுவாகத் தோன்றிய பின்… ஒரு உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிச் சிவம் ஆகின்றது. இவ்வாறு பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது.

பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டது… இருந்தாலும் அதனுடைய தசைகளை மற்றொன்று கொன்று புசிக்கிறது. அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் உணர்வின் தன்மை வருகின்றது.
1.தன்னைத் தெளிந்து கொள்ளும்… தன்னைக் காத்திடும் உணர்வின் அறிவின் தன்மை அதற்குள் வந்து
2.இவ்வாறு தான் ஒவ்வொரு உடலிலும் இணைத்து இணைத்து
3.நமது உயிர் மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலைகளில் மகா சிவன் ராத்திரி…!

உடலில் இருந்து வரக்கூடியதை ஆறாவது அறிவின் தன்மை ஒன்றிலிருந்து ஒன்றை மீட்டிடும் நிலைகள் கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெற்றது கார்த்திகேயா.

ஒரு வெளிச்சத்தைப் போட்ட பின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் தெரிகின்றது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காணும் நிலைகள் வரும் பொழுது “கார்த்திகேயா” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

1.முதலிலே வரக்கூடியது அனைத்தும் தட்சிணாயணம்
2.இந்த உடலின் நிலைகளிலிருந்து அறியும் ஆற்றல் வரப்படும் பொழுது மகா சிவன் ராத்திரி என்றும்
3.பங்குனி மாதம் வரப்படும் பொழுது உத்தராயணம்.
4.இதற்கு முன் மாசி மாதம் வரையிலும் தட்சிணாயணம் நடக்கின்றது… உடலுக்குள் இருள்
5.ஆறாவது அறிவு கொண்டு தட்சிணாயணம் திசை மாறி வெளிச்சம் அதிகமாகின்றது – அது உத்தராயணம்

அறிவின் ஆற்றல் அறிந்திடும் உணர்வு கொண்டு ஆறாவது அறிவால் உத்தராயணம் தேரை வைத்து இழுப்பார்கள்… பல ஆயிரம் பேர் சேர்ந்து முருகனை வலம் வரும்படி செய்வார்கள்.

நாம் அனைவரும் எண்ணி
1.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்
2.உத்தராயணம் இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது என்ற நிலைகளும்
3.எதை எடுத்தாலும் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாக அவனுடன் இணைய வேண்டும் மாற வேண்டும் என்பதற்குத்தான்
4.நமது சாஸ்திர விதிகள் இப்படிக் காட்டுகின்றது.

பங்குனி உத்திரம் அன்று உத்தராயணம் என்ற நிலைகளை வைத்து ஆறாவது அறிவை வளர்த்துப் “பிறவா நிலை பெறும்” வழியைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

 

குருவி ஜோதிடம், எலி, அணில் இப்படிப் பல நிலைகளைச் செப்புவது எந்நிலை கொண்டு…? என்பதனை விளக்கிடுவேன்.

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான்.

அப்பிராணிகளின் உடலில் (மந்திரவாதிகள்) கருவின் மையை ஏற்றி விடுவார்கள். அந்நிலையில் இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு, இப்பிராணிகளை வைத்து ஜோதிடம் செப்பிடும் நிலையில் உள்ளவர்களுக்கு, அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இப்பிராணியின் உடலில் உள்ள இக்குட்டிச்சாத்தான் தான்… நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட எந்நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும் இவர்கள் மனநிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும்.
1.இவ்வுலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது
2.பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன.
3.ஆவியின் தொடர்புபடுத்தி தன் உடலிலேயே பல ஆவிகளை துர் ஆவிகளை ஏற்றுக் கொண்டு அதனை ஏவிச் சூனியம் செய்வார்கள்.

சூனியத்திற்கு அடிமைப்பட்டவன் அச்சூனியத்தினால் தான் அவனுடைய ஆத்மாவும் பிரியும்.

1.பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்து விட்டு
2.இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்
3.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…” என்றவுடன்
4.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் அக்குட்டிச்சாத்தான் செய்து தரும்.
5.இவர்கள் வைத்த பொருள் தான் அங்கிருந்து வருமே ஒழிய
6.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ, புஷ்பமோ எவையுமே
7.இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்நிலையில் உள்ள எச்சாமியார்கள் ஆகட்டும் மந்திரவாதிகள் ஆகட்டும் அவர்கள் தன் புகழ் உயர தன் நாமத்தினால் பொருள் ஈட்டி இச்செயலையெல்லாம் செய்வித்து… மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை, “தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்…”

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தம்…?

இருக்கும் ஒரே சொந்தம் நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி, நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே இச்சூனியக்காரர்களினால் வந்த நிலை தான். நம் பூமியில் நாம் வாழும் இக் கண்டத்தில் நம்மை அறியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

1.நம் பூமியில் இவ் இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகள் சப்தரிஷி பெறும் நிலையெய்திட வாழ்ந்த பூமி இது
2.அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

இக் கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

மகரிஷிகளை… “எண்ணத்தால்” நாம் எண்ணி எடுக்க வேண்டிய சரியான முறை

மகரிஷிகளை… “எண்ணத்தால்” நாம் எண்ணி எடுக்க வேண்டிய சரியான முறை

 

இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் உணர்த்தியது யார்…? அந்த மகரிஷிகள் தான். அவர்கள் அறிந்துணர்ந்த அறிவின் ஆற்றலை அவரில் விளைந்ததை தங்களுக்குள் உருவாக்கி அதை வெளிப்படுத்துகின்றார்கள் இந்த உண்மைகளை.

அவருக்குள் விளைந்த உணர்வின் எண்ண அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியில் படர வைத்துள்ளது
1.எதையெல்லாம் அவர்கள் உணர்த்தினார்களோ
2.அந்த மகரிஷிகளை நாம் எண்ணி அவரிலிருந்து விளைந்த உணர்வை நுகர வேண்டும் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.

ஏன் அவனிடம் வேண்ட வேண்டும்…? எப்படி வேண்ட வேண்டும்…?

கண்ணின் நினைவு கொண்டு அந்த சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை நம் கண்ணிலே கொண்டு வருகின்றோம்.
1.முதலில் கண்ணிலே பார்த்து… பின் சொல்வதை எல்லாம் காதிலே கேட்டாலும்
2.நினைவை… கண்ணின் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்… அப்போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகின்றது.

பதிவானதை மீண்டும் நாம் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக நினைவினைச் செலுத்தி நம் உயிரிடம் வேண்டிடல் வேண்டும்.

உயிர் தான் ஈசன்… அவனை நாம் மதித்தல் வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதை இயக்குகின்றான்

ஆகவே நாம் உயிரை “ஈஸ்வரா…!” என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவு கொண்டு இந்த நினைவினை உயிருடன் ஒன்ற வேண்டும் ஈஸ்வரா என்று…!
2.இப்படி இணைத்துப் பழகுதல் வேண்டும்.

உதாரணமாக மேக்னட் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த சுழற்சி ஆகும் பொழுது மோட்டார் ஓடுகின்றது ஆனால் மோட்டாருக்கு ஓடக்கூடிய கரண்டை வீட்டில் உபயோகிக்கும் ஃபேனுக்கு செலுத்தினோம் என்றால் ஃபேனில் உள்ள காயில் எரிந்து விடும். இதைப் போல
1.மிக சக்தி வாய்ந்த அந்த மகரிஷிகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டும் என்றால்
2.அதற்குத் தகுந்த காந்த புலனறிவு தேவை… ஈர்க்கும் சக்தி,

அப்பொழுது… முதலிலே நாம் எதைப் பதிவு செய்து உள்ளடக்கமாக வைத்திருக்கின்றோமோ அதனை நினைவு கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.நினைவினை அவனிடம் ஒன்றி… அவன் மூலமாக நாம் அறிய வேண்டும்.
2.அப்படி நாம் எடுக்கப்படும் பொழுது இந்த உணர்வின் இயக்கங்கள் வேகமாக இயக்கப்பட்டு
3.நம் உடலுக்குள் மீண்டும் அது சுழல்கின்றது.

உடலுக்குள் செலுத்திய பின் என்ன நடக்கிறது…?

தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பு வெள்ளி இவைகளைப் பிரிக்க திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அதைப் பிரித்து விடுகின்றதோ இதைப் போல நமது வாழ்க்கையில் தீமைகளைக் கண்டு உணர்ந்தாலும் அந்த ஞானியின் உணர்வின் தன்மையை நாம் எண்ணும் பொழுது உடலுக்குள் சென்று நம் நல்ல எண்ணங்களில் கலந்த அந்தத் தீமைகளை அகற்றுகின்றது.

ஆகவே… எந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கினாலும் இதை முறைப்படி நீங்கள் எண்ணினால்தான் நல்லது நடக்கும்.

இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகள் “அவர்கள் யார்…?” என்று தெரியவில்லை என்றாலும் மகரிஷிகள் என்பவர்கள் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள். அவர்கள் அறிந்தது தான் இந்த உண்மைகள்.

அதை எண்ணாமல் எந்த ஆலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தாலும் நல்லதாகும் நிலைகள் இல்லை.

அங்கிருக்கக்கூடிய பூசாரியோ அல்லது வழிகாட்டுவர்கள் யாரோ அவர்களை எண்ணினால் “அந்த மந்திரம் தான்” நினைவுக்கு வரும்.

கோவிலில் யாகம் செய்து இன்னார் சக்தி ஏற்றுகிறார் என்று அவர்களை எண்ணினால்
1.அவர்கள் என்னென்ன மந்திரம் செய்து பதிவு செய்து வைத்திருக்கின்றார்களோ
2.அந்த மந்திரங்களைக் கேட்டு யார் யாரெல்லாம் இறந்தார்களோ
3.அந்த மந்திர உணர்வு கொண்டு அதை மீண்டும் எண்ணப்படும் பொழுது
4.அந்த மந்திரத்தை அதிகமாக ஜெபித்தவரின் உயிரான்மா தான் இங்கே (நமக்குள்) வரும்.
5.பின் அவருடைய ஆசை எதுவோ அதைத்தான் நமக்குள் இயக்கும்

இதெல்லாம் இயற்கையின் உண்மை நிலைகள். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே
1.இயற்கையின் உண்மைகளை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.தெய்வீக நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் இவ்வளவு விளக்கமாக உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?

மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?

 

இவ்வுலகினில் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல், கருவித்தை இப்படிப் பல நிலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நம் நிலை மீளும் நிலையை அறிந்திடல் வேண்டும்.

பல காலமாய் சூனியம் செய்தவர்களின் நிலையையும் மற்றத் தீய சக்தியின் செயலைத் தன் பிழைப்பிற்காக ஏவியதின் நிலையையும் வரும் பாடங்களில் உணர்த்திடுவேன்.

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்து பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம் மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து, மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்து, பூஜித்து இம்மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு, சில நிலைகளை அறிந்திடத் தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களைk கூடியவரை கருச் சிசுக்களைத் தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் தான் இக்கருவித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலைப் புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டி எடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசுக் காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித் தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள்.

அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல் கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது. இப் பின்னப்பட்ட இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச் சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச் சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச் சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயவங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மை போல் மசிய வைத்து பூஜித்து இப் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச் சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

இக்கருப்பு நிறம் கொண்ட இம் மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துகள் செய்து இம்மையை அதனில் வைத்து தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருள் ஆசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டி சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவில் இருந்து மட்டும் ஏன் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக் குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.மாரியம்மாள், காளியம்மாள் என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.மாரியாத்தா ஆடு கேட்கிறாள், கோழி, முட்டை கேட்கின்றாள் என்றெல்லாம் சொல்லி
3.இக்குட்டி சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து இவர்களின் செயலை முடித்துக் கொள்கின்றனர்.

இவர்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும்… விடுபடவும் வேண்டும்… நாம் சிக்கி விடக் கூடாது.

நம் உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் சரியான முறை

நம் உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் சரியான முறை

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அதனின்றி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அதை ஈர்க்கும் சக்தி பெறும் பொழுது “கருமணிகளில் கனமான உணர்வுகள்” வரும்.

இப்பொழுது உங்களுக்குள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
1.“உயிரை எண்ணி” அங்கே கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்… கண்களை மூடுங்கள்.
2.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் பொழுது
1.உயிரின் இயக்கம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெறும் போது உங்களில் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் புருவ மத்தியில் மோதும் பொழுது உணர்ச்சிகள் அழுத்தமும் ஒளிக் கற்றைகளும் தெரிய வரும் “வெளிச்சமாக…”

இவ்வாறு ஏங்கித் தியானித்தால் நம் உடலில் தீமை விளைவிக்கும் அணுக்களுக்குத் தீய உணர்வுகள் உள் புகாது தடைப்படுத்துகின்றோம். உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்களாக வளராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்களால் இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.இரத்தங்களில் உள்ள கருமுட்டைகளோ தீய அணுக்களோ எது இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது “நல்ல அணுக்களாக” மாறும் சக்தி பெறுகின்றது நம் இரத்தத்தில்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவரும்படி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெறும் பொழுது உங்கள் உடல் முழுவதற்கும் “ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும்… இதை நீங்கள் உணரலாம்…”
1.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் இப்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரத்தத்தின் வழி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில்… படிப்படியாக எல்லா உறுப்புகளிலும் தசை மண்டலம் தோல் மண்டலம் வரை பெறச் செய்யும்போது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான சக்தி காற்று மண்டலத்தில் படர்ந்துள்ளதைக் கவர்ந்து… “நம் ஆன்மா வலுப்பெறுவதற்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறுவதற்கும்” இது ஏதுவாக இருக்கும்.

காலையில் ஒரு ஆறு மணிக்குள் “ஒரு அரை மணி நேரமாவது” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலில் உள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியைக் காலையில் எடுத்துப் பழகுங்கள்.
1.“அந்த வலுவின் துணை கொண்டு” அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் போக்கிக் கொள்ள முடியும்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிக் கொள்ள முடியும்.

பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட ஆதி சக்தியின் சக்திக்குத் தான் முடியும்

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட ஆதி சக்தியின் சக்திக்குத் தான் முடியும்

 

ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்கிக் கொண்டு ஓடும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் அதற்குகந்த ஈர்ப்புத் தன்மையுடன் ஓடுகின்றது மண்டலங்கள்.

சூரியனை மையம் கொண்டு ஏழு பெரிய கோளங்கள் உள்ளன. இவ் ஏழின் ஈர்ப்பில் இவ் ஏழிற்கும் தாண்டிய நிலையில் இவ் ஏழிற்கும் சிறிய கோளங்கள் 48 மண்டலத்தில் சூரியனும் நாம் நம் பூமியைச் சேர்த்து ஏழு கோளமும் இவ் எட்டும் போக பாக்கி 40 கோளங்களும் இவ் ஏழின் ஈர்ப்புடன் சுழலுகின்றன.

ஒவ்வொன்றின் அமில சக்தியும் மாறு கொண்டுள்ளது. சூரியனை மையப்படுத்தி அதன் ஈர்ப்பின் வட்டத்துக்குள் வந்துள்ள மண்டலங்கள் தான் இந் நாற்பத்தி ஏழும்.

அவற்றிற்கு இச்சிறிய கோளங்களுக்கு நம் இன்றைய விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டவில்லை. தெய்வீக அருள் நெறியில் சித்தர்களினால் உணரப் பெற்று அவர்கள் இட்ட நாமகரணங்கள் இவற்றுக்கு உண்டு.

ராகுவும் கேதுவும் சுக்கிரனும் சனியும் குருவும் இவர்கள் பிடியில் சிக்குண்ட மண்டலங்கள். மற்ற மண்டலங்களை நட்சத்திர மண்டலமாக்கி அதன் நாமகரணத்தைச் சூட்டினார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்…
1.நம் சித்தர்களால் இயற்றப்பட்ட எண்ணத்தில் பதிவு செய்த இக்கோளங்களின் நிலையே
2.பல நிலையில் உருமாறி வெளி உலகிற்குச் செப்பிடும் நிலையே அற்று விட்டது.
3.அக்காலத்தில் எழுத்து வடிவங்களோ கற்பாறையில் ஓலைகளில் உணர்த்தச் செய்யும் வழி முறையோ இல்லை.

சித்தர்களால் மனித ஆத்மாவுக்கு வளர்ச்சியூட்டி அவ்வளர்ச்சியின் தொடரில் இவ்வுலக மனித ஆத்மாக்கள் வளர்ந்த நிலையில் சிறுகச் சிறுகத்தான் இவ்வாத்மாக்களின் அறிவு வளர்ச்சியைப் பெருகச் செய்து அதன் வழித் தொடரில் எண்ணத்தைப் பதித்திடும் நிலை வந்தது.

அதற்குப் பிற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்பதிவு செய்யும் “எழுத்து நிலையே” உதயம் பெற்றுச் செயலாக்கிட முடிந்தது.

இந்நிலை வளர்வதற்குள் மனித ஆத்மாவின் அறிவு நிலை வளர்வதற்குள் மண்டலங்களின் வளர்ச்சி நிலை பெருகிவிட்டது.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றுணர்த்திய சித்தர்களின் சக்தி நிலைக்கும்
2.இன்றைய இயற்கையின் சக்தி நிலைக்குமே பெரும் மாற்றம் உள்ளது.

ஒவ்வொரு கோளமுமே அதன் ஈர்ப்பில் பல சக்திகளைச் சேர்த்துக் கொள்கின்றது. சில நாட்களில் சந்திர மண்டலத்திற்கு அருகாமையில் நட்சத்திர மண்டலங்களைக் காண்பீர்கள். ஒரு நாள் காணும் நிலை மற்றொரு நாளும் காண முடிந்திடாது.

அதன் ஈர்ப்பில் சிக்குண்டு அதன் செயலுடன் ஆவியான அமிலமாய்ச் செயல் கொண்டாலும் செயல் கொண்டிடும் இதன் ஓட்டத்தினால் இதன் வேக நிலை கொண்டு சந்திரனின் ஈர்ப்பில் சிக்காமலும் தப்பிவிடும்.

நம் பூமியே ஒவ்வொரு நாளும் பல நட்சத்திர மண்டலத்தைத் தன்னுள் ஈர்த்தே சுழன்று ஓடுகிறது.
1.சில நாட்களில் வானத்தில் எரி நட்சத்திரமாய் எரிந்து விழுவதைப் போல் காண்பீர்கள்.
2.சுழற்சியில் சிக்கி ஆவியான அமிலமாய் நம் பூமியின் ஈர்ப்பில் பல நட்சத்திர மண்டலங்கள் கலப்பதைப் போல்
3.ஒவ்வொரு மண்டலத்திலும் அதற்குகந்த அமில சக்தியுடைய மண்டலங்கள் கலக்கின்றன.

வளர்ச்சியும் பல கொள்கின்றன…! சில நாட்களில் வான மண்டலத்தில் நம் பார்வைக்கு மிக அதிகமான நட்சத்திர மண்டலங்கள் தெரிவதைக் காண்பீர்கள். சில நாட்களில்… “ஒன்றிரண்டு காண்பது கூட அரிதாக இருந்திடும்…”

இம்மண்டலங்களின் ஈர்ப்பிலும் நம் பூமி ஓடும் நிலையில் நாம் சந்திக்கும் நிலை கொண்டு நிகழ்பவைதான் இவையெல்லாம்.

எம்மண்டலமும் ஓரிடத்தில் இருந்து சுழல்வதில்லை.
1.ஓடிக்கொண்டே உள்ள நிலையில்
2.நம் பூமி காணும் நிலை கொண்டு தெரிபவை தான் இந் நட்சத்திர மண்டலங்கள் எல்லாம்.

நம் பூமி ஓடும் நிலையில் நம் பூமியின் ஈர்ப்புடனும் பூமியில் சிக்காமலும் நம் பூமியுடனே ஓடி வரும் நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன. அங்கங்கு நம் பூமியின் ஓட்டத் துரித நிலையுடன் ஓட முடியாத குறுகிய ஓட்ட நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட அவ்வாதி சக்தியின் சக்திக்குத் தானப்பா செயல் சக்தியுண்டு.

சக்தியின் செயல் வேண்டியே நாம் அறிந்தே “எழுத்தின் வடிவிற்கு வருவோம்…”

எழுத்தின் வடிவமைக்கும் அறிவு சக்தி வளர்ந்தே நம் ஆத்மாவின் சக்தியையே எச்சத்திக்கும் நம் சக்தியைச் செயல் ஆக்கிட முடியும் என்ற வளர்ப்பு எண்ணம் கொண்டு… நம் எண்ணத்தையே சகல சித்து நிலைகளை அறிந்திடும் பக்குவப்படுத்தியே நம் செயல் இருந்திட வேண்டும்.

1.நம் எண்ண சக்தியைச் செயலாக்கிட எந்நிலைக்கும் நம்மை அடிமைப்படுத்திடாமல்
2.இவ்வுலகில் இம்மனித ஆத்மாக்களினால் காலம் காலமாய் அடிமை கொண்ட ஜாதி வேறுபாட்டில் சிக்குண்டு இருந்திடாமலும்
3.ஆண்டவனை ரூபப்படுத்தி தான் வாழ பிறரை ஏமாற்றும் நிலையில் சிக்கிடாமலும்
4.எண்ணத்தையே சூதாக்கி பிறரை வஞ்சிக்கும் எண்ணக் கடலில் அமிழ்ந்திடாமலும்
5.நம் ஆத்ம பொக்கிஷத்தைப் பிற சூனிய நிலையில் மாட்டிக் கொள்ளாமலும் செயல் கொண்டு
6.எண்ணத்தையே ஜெபமாக்கித் தப்பும் வழியை நாம் அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம்… ஆனால் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாட்டில் மாட்டு வண்டியிலே சாமான்களை ஏற்றிச் செல்கின்றார்கள் சந்தர்ப்பத்தில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டால் மாடுகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அங்கே அருகில் இருக்கக்கூடிய மக்கள் ஓடிச்சென்று
2.உணவுக்காக அந்த மாட்டினுடைய தசைகளை இரக்கமற்று அறுத்து எடுத்துச் செல்கின்றார்கள்
3.அதிலே அடிபட்ட மனிதனின் தசைகளையும் கூட அறுத்து எடுத்துச் சாப்பிடச் செல்கின்றார்கள்.

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது,.

இத்தகைய நேரத்தில் இராமாயணத்தில் கூறியது போல நாம் சிறிது காலமே வாழ்க்கை வாழ்கின்றோம்.

1.இதற்குள் நாம் மனதை ஒன்றாக்கி உடலுக்குள் ஒன்றென இயக்கி
2.இந்த உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி
3.உயிருடன் ஒன்றும் உணர்வை ஒன்றாக சேர்த்து
4.அந்த உண்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தும் போது நமக்குள்ளும் வளர்கின்றது… தீமைகளை அகற்றும் சக்தி இந்தப் பூமியிலும் பரவுகின்றது… நம் உடலுக்குள்ளும் அது பெருகுகின்றது.

கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ அதே போன்று மனிதர்களாக இருக்கக்கூடிய நாம்
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இந்தப் பூமியில் கலந்திருப்பதை அந்த உணர்வைப் பெருக்கி
2.தீமையை நீக்கும் அந்தச் சக்தியை நாம் சுவாசித்து
3.நமக்குள் தீமை புகாது தடுத்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.

விஷ உலகமாக மாறிவரும் வேளையில் இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் இனிமேல் எப்படி எல்லாம் செயல்படுத்துவார்கள்…? என்று சொல்ல முடியாது.

இந்த உலகையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் எதிர்பாராதபடி ஒருவருக்கொருவர் ஏவினால்
1.அந்தக் குண்டுகள் வெடித்தால் இந்தப் பூமியில் பரவத்தான் போகின்றது
2.விஷக் கதிரியக்கங்கள் அதிகமாகப்படும் பொழுது சூரியனின் ஒளிக்கதிர்களைத் தடுக்கத்தான் போகின்றது.

அப்படித் தடுத்து நிறுத்தி விட்டால் சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவவில்லை என்றால் துருவத்தில் எப்படிப் பனிப்பாறைகள் உறைகின்றதோ அதைப் போன்று
1.நாம் இருக்கும் இடங்களில் பனிப் பாறைகள் உறைந்து
2.உயிரினங்களே அனைத்தும் மறைந்து போகும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

அப்போது பூமி சூரியனைக் கடந்து விலகிச் சென்றுவிடும். இயக்கச் சக்தி கடந்தால் இந்தப் பிரபஞ்சமே சுக்குநூறாகிவிடும்… பின் பிரபஞ்சம் இல்லை

ஆனால் இங்கே உயிரணுவாகத் தோன்றி
1.வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழும் நிலை பெற்றவர்கள்
2.எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் அழிவில்லாதபடி அவர்கள் வாழுகின்றார்கள்.

அதை நீங்கள் பெற விரும்பினால் அது எளிதில் பெறக்கூடிய சக்தி தான் கடினமில்லை கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டே வந்தால் போதுமானது.
2.அதன்படி வாழ்க்கையே நீங்கள் தியானம் ஆக்கிக் கொள்ளுங்கள்.

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்

 

சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது. உஷ்ணக் கோளம் என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர்.

சூரியனின் கோளம் பெரியது. அதில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையும் எம் மோதும் அமிலத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை உடையது. உருவ நிலையிலும் வளர்ந்து கொண்டே சுழன்று ஓடும் பெரிய மண்டலமாம் நம் சூரிய மண்டலம்.

முந்தைய ஆராய்ச்சியில் சூரியன் மையம் கொண்டு ஒரே இடத்தில் சுழன்று கொண்டுள்ளதாகவும் அதனைச் சுற்றியுள்ள சூரியக் குழந்தைகள் தான் அதனைச் சுற்றி ஓடுவதாகவும் உணர்த்தினர்.

சூரியனின் யாம் அறிந்த உண்மை நிலை…
1.அது தன்னைத்தானே சுற்றி ஓடிக்கொண்டு அதன் ஈர்ப்பில் உள்ள இந்த 47 மண்டலங்களையும் தன்னுடனே தன் ஈர்ப்பில்
2.அது அது சுழன்று கொண்டும் ஓடிக்கொண்டே உள்ளன.
3.இவ்வண்டமும் மற்ற எல்லா அண்டங்களுமே ஓடிக்கொண்டே தான் உள்ளன. எதுவும் நிற்பதில்லை

ஒரு நிலையில். ஜீவன் பெற்று திடப்பொருள் கொண்ட பிறகுதான் ஓடும் நிலை ஒவ்வொன்றிற்கும் வருகின்றது.

இம்மனித மண்டலமே ஓடிக்கொண்டே தான் உள்ளது. பிம்ப உடல்தான் ஒரு நிலையில் எண்ணம் கொண்டு செயல் கொள்கின்றது. மனித மண்டலத்திற்குள்ள எல்லா அவயங்களுமே தன்னிச்சை நிலையில் செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளன.

இதே போல் ஜீவனுள்ள எல்லா ஜீவராசிகளும் மண், கல், நீர் அனைத்திற்கும் ஜீவத் துடிப்பின் ஓட்டம் இருந்து கொண்டே உள்ளது.

பல பல ஆராய்ச்சிகளைச் செய்விக்கின்றனர். மனிதனுக்கும் ஜீவராசிகளுக்கும் உயிர்த்துடிப்பு நிலையை உணருகின்றனர்.
1.ஆனால் கல்லிற்கும் மண்ணிற்கும் உயிர்த்துடிப்பும் ஜீவன் உண்டு.
2.ஜீவன் இல்லாவிட்டால் கல்லிற்கும் மண்ணிற்கும் வளர்ச்சி இல்லை.
3.அததற்குகந்த உஷ்ண அலையும் உண்டு.

மண்ணாய் உள்ள நிலையிலிருந்து மணலாகி, உருண்டு கல்லாகி, பெரும் பாறையாய் உருப் பெறுகிறது. அந்தந்தப் பூமியின் நிலைக்கொப்ப மண்ணின் நிறங்கள் மாற்றம் கொள்கிறது அல்லவா…?

நீர் நிலைகள் பாய்ந்து வரும் வேகத்தில் எவ்விடத்தில் அந்நதி உற்பத்தியாய் பாய்ந்து வந்தாலும் அந்தந்த நிலைக்கொப்ப பூமியின் மேல் படும்பொழுது இப்பூமியின் சுவை குணத்தை ஈர்த்தே ஓடுகிறது. இந்நீருக்கு ஜீவன் பூமியின் நிலையில் இருந்து பெற்ற ஓடுகிறது.

நம் பூமியிலேயே பல பாகத்தில் பல நிலைகள் உண்டு. ஒன்றின் கலப்புடன்தான் தொடர்நிலை கொண்ட அமில சக்தியை வளர்த்த நிலை கொண்டு வாழ்கின்றது நம் பூமியே.

1.நம் பூமியிலிருந்து வெளிப்படும் மணம் ரம்மியமான ஆனந்தமான மணமாய்ப் பரிமளித்த காலம் ஒன்றிருந்தது.
2.இன்று நம் பூமியின் மணமே மாறு கொண்டு விட்டது.
3.இந்நிலையில் விஷத்தன்மை பரவிடும் நிலையும் வந்துள்ளது.
4.பல காலம் வாழ்ந்த பெரியோர்கள் இம் மணத்தின் மாறுபட்ட நிலையை அறிவர்.

நம் பூமியில் உறையும் தன்மை உப்புக் கலந்ததாய் உள்ளதினால் கரையும் நிலையும் துரிதமாய்ச் செயல் கொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரியனின் சக்தி மிகவும் அதிகம் கொண்டது.

சூரியனின் நிலைத்தன்மையை முன் பாடத்திலேயே உணர்த்தியுள்ளேன்.

1.இன்று சூரியனுக்குச் செல்லவும் முடியும்
2.சூட்சுமத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்தாலும் சூரியனுக்குச் சென்றிடலாம்.

நம் பூமிக்கும் நம் பூமியைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரனுக்கும் உஷ்ண அலையை ஆராய்ந்து நம் பூமியிலிருந்து காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலைப் பகுதியைத் தாண்டி அதைப் போலவே சந்திரனுக்குச் செல்லும் ஏவுகணையை அனுப்பி உள்ளார்கள்‌‌.

நம் பூமியில் இருந்து இக்காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலை மண்டலத்தைத் தாண்டி பிறகு இவர்களுக்கு வேறு செலவினங்கள் இல்லாமல் எவ்அலையை வைத்து சந்திரனின் உஷ்ண அலை வரை தானாகவே இவ் ஏவுகணை ஓடுகின்றது…?

1.இவ் உஷ்ண அலை மண்டலம் (சந்திரனுக்குச் சொந்தமானது) வந்த பிறகுதான்
2.இவர்கள் ஏவுகணையை இயக்கச் செய்யும் சாதனத்தின் ஜீவன் செயல்திறன் கொள்கின்றது.

பொதுவானது பால்வெளி மண்டலத்தின் உஷ்ண அலை. இந்நிலை இருக்க நம் பூமியிலிருந்து சந்திரனுக்கு ஏவுகணையை அனுப்பியவர்கள்… நம் சூரிய மண்டலத்திற்கு… நமக்கு அருகாமையில் உள்ள அந்த மண்டலத்திற்கு அருகில் சென்று இவர்கள் விஞ்ஞானத்தை ஏன் செயலாக்கவில்லை…?

சூரியன் நம் பூமியைக் காட்டிலும் இரண்டு மடங்கு சுழற்சி சக்தி கொண்டது. இங்கு ஒரு நாள் 24 மணி நேரம்; அங்கு 12 மணி நேர விகித நிலையில் தன்னைத்தானே சுழன்று ஓடுகிறது.

விகித நிலை என்பது கூட அதன் சுழலும் சக்தி கொண்டு யாம் அறிந்த நிலை தானே ஒழிய அதற்கு இரவு பகல் என்ற மாறுபட்ட நிலை இல்லை.

அதைச் சுற்றி ஓடும் 47 மண்டலங்களின் ஈர்ப்பின் சக்தியையும் தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்திச் சுழன்றிடும் நிலையில் அதன் உஷ்ண அலையின் (47 மண்டலங்களின்) நிலை பெற்றுச் சுழலுகின்றது.

இந்த 47 மண்டலமுமே சூரியனைச் சுற்றி வட்டமாய்த் துரித கதியில் ஓடவில்லை. இவற்றிலுமே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று பங்கு பெற்று அச்சக்தியின் அமிலத் தொடர் அதற்குச் சென்றடைகிறது.

உதாரணமாய்:-
இங்கு இந்நிலையில் காட்டியுள்ள நிலைப்படுத்தி இம்மண்டலங்களின் தன்மை உள்ளது. இதற்கும் தாண்டிய நிலையில் இவ் ஆறு மண்டலம் அல்லாமல் 48 மண்டலத்திலேயே பாக்கியுள்ள மண்டலங்கள் இதற்கும் சிறியவை…. உஷ்ண அலைகளைக் குறைவாய் பெற்றுள்ள மண்டலங்கள்.

இவர்கள் நாமகரணத்தில் உள்ள சனி மண்டலத்திற்குக் குளிரும் நிலை அதிகம். உறையும் தன்மை கொண்ட அமிலத்தை வளர்த்துள்ள மண்டலம் சனி மண்டலம்.

சனியின் நிலையில் இவ்வமில சக்தி நிறைந்துள்ளதினால் அது சுழலும் நிலை கொண்டு அதன் பக்கத்திற்கு இப் பெரிய மண்டலம் செல்லும் காலங்களில் அதன் அமில நிலையின் சக்தி இவற்றிற்கு அதிகமாய்க் கிடைக்கின்றது.

நம் பூமியில் இக்கால நிலை மாற்றம் கொண்டு
1.கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாய்க் கிடைக்கப் பெறுவதும்
2.நம் பூமி சனியின் கோளத்திற்கு அதன் ஈர்ப்பின் நிலையில் வரும் கால நிலையில்தான் இக்குளிர் அமில சக்தியும் நம் பூமிக்கும் கூடுகின்றது.

இதைப்போல் தான்
1.பங்குனி, சித்திரை மாதங்களில் கடும் வெயிலைக் காணுகின்றோம்.
2.சூரியனின் உஷ்ண அலையுடன் நமக்கு அருகாமையில் நம் பூமியின் ஈர்ப்பிற்கு ராகுவின் நிலைக்குச் செல்கின்றது.

ஒரு வருடத்திற்குள் சூரியனை மையப்படுத்தி ஓடிடும் நிலையில் நம் மண்டலத்துடன் ஈர்ப்பிற்கு வரும் இந்த 48 மண்டலங்களின் தொடர்பைக் கொண்டு நம் பூமிக்குக் காலநிலை உருவாகிறது.

அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்திற்குமே இக்கால நிலையும் செயல்படுகின்றது.

அகஸ்தியன் காட்டிய வழிப்படி “வேதம்”

அகஸ்தியன் காட்டிய வழிப்படி “வேதம்”

 

வேப்பமரம் என்றால் ரிக்… வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை…
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஓய்… என்ற இசை வருகின்றது
2.வாந்தியாக வருகின்றது.

ஒரு ரோஜா பூ ரிக் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாம
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஆகா…கா என்று
2.ஆனந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது நாதங்களை.

ஒரு விஷச்செடி ரிக் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை.
1.அந்த மணத்தை நாம் நுகர்ந்தால் உச்… உச்… என்று
2.அரிப்புத் தாளாது அந்த ஓசையை எழுப்புகின்றோம்.

இதைத் தான் ரிக் சாம என்று காட்டுகின்றார்கள்.

சந்தர்ப்பவசத்தால் வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம்முடைய சாந்தமான உணர்வுக்குள் புகுந்து விட்டால் அந்த அணுக்கள் அதர்வண… சாந்தத்தை அடக்கி விடுகின்றது… ரிக் சாம.

விஷத்தின் தன்மை சாந்தமான அணுக்களுக்குள் சேர்ந்து விட்டால் அதை அடக்கி விஷத்தின் தன்மையாக மாற்றி அதை ஓங்கச் செய்து அதர்வண… யஜூர்… விஷத்தன்மை கொண்ட அணுவின் உடலாக மாற்றும் திறன் பெறுகின்றது என்று காட்டுகின்றான் அகஸ்தியன்.

இப்படி… மனித உடலில் உருவான வேதனை என்ற நாதத்தை உணர்கின்றான் அகஸ்தியன்.
1.அதை அடக்கும் தாவர இனத்தின் உணர்வை அவன் நுகர்ந்து அதைத் தனக்குள் விளைய வைத்து
2.அந்த மனித உடலில் விளைந்த வேதனையான நாதத்தை தணிக்கும்படி…
3.வேதனைப்பட்டவருக்கு அந்த ஆற்றலை நுகரும்படி செய்கின்றான் அன்றைய அகஸ்தியன்.

விஷத் தன்மையான அணுக்கள் இதைச் சுவாசித்த பின் ஒடுங்கி… இதனுடைய வலிமை கூடி
1.அந்த உடலில் தீமையை நீக்கும் அணுக்களை உருவாக்குகின்றான்…
2.இயற்கையில் விளைந்ததை வைத்து அன்றைய மெய்ஞானியான அகஸ்தியன்.

விஞ்ஞானியோ மற்ற பொருள்களைக் கலந்து இணைத்து புறப்பொருளின் நிலையின் இயக்கத்தை அந்த அணுக்களாகத்தான் மாற்றுகின்றான்.

ஆனால் அகஸ்தியன் இயற்கையின் உண்மையின் உணர்வு சாகாது… மற்ற மனித உடலுக்குள் அந்த இயக்க அணுவாக ஜீவ அணுக்களாக மாற்றுகின்றான்.

இப்படி…
1.மனித உடலில் தீமைகளை நீக்கும் உணர்வுகளை வளர்த்து
2.எதுவும் வெல்ல முடியாத நிலைகள் வேகா நிலை என்று முழுமை பெற்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த மெய்ஞானி இந்த உண்மையைப் பெற்றான் என்பதை நாம் அறிவதற்காகத் தான் விநாயகத் தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”

 

ஓடிக்கொண்டே உள்ள இம் மண்டலங்களின், ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவ் ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.
1.அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன
2.ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கில்லை
3.சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனித் தன்மையுண்டு.

நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும், சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம், கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.

நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.

நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர் நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…?
1.வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும், சூரியனின் சுழலும் வேகத்திற்கும்
2.இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.
3.வியாழனின் நிலை இல்லாவிட்டால் நம் பூமிக்கு நீரில்லை.

இதே நிலைபோல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்நிலையில் பாய்கின்றது…?

நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும், வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.

பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கிறோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி நம் பூமிக்கு “சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…”

உம் சப்தமே வெளிவராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் நேர்படுத்தி நம் பூமி பெறுகிறது.

அதே சமயம் சூரியனின் சக்தியினால் செவ்வாயின் சக்தியும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.

செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும் சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத் தன்மையும் கலவை பெறும் இடத்திலிருந்துதான் சப்த ஒலி பிறக்கின்றது.

இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலையில்லா விட்டால் “நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை…”

பல சக்தியை நம் பூமி ஈர்த்து, நம் பூமியின் சக்தியைச் சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.

இம் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் இந்நீர்நிலை சப்த ஒளியின் நிலையும் ஏற்பட்ட பிறகுதான் பல வளர்ச்சி நிலை ஏற்பட்டு… பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகு… அதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உள்ள சந்திரனின் தன்மையே… “ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்…”

வரப்போகும் இக் கிரகண கால நிலைக்குப் பிறகு
1.நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் கொண்டு நடக்கப் போகின்றது
2.சூரிய கிரகணம், சூரிய கிரகணம் என்று பல முறை கிரகணம் பிடிக்கின்றது சூரியனை.
3.ஒவ்வொரு நிலையிலும் இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்டு
4.எம்மண்டலத்தை எக்கிரகணம் தாண்டிச் செல்கின்றதோ அம்மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வட்டமிட்டுக் கொண்டே உள்ள இம்மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் “ஜீவன் வேண்டும்…”

அதே போல்
1.உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அது அதற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது
2.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை… அதி குளிர்ச்சி… பனிக்கட்டி போன்ற நிலையிலும் தாவர வளர்ச்சி வளர்வதில்லை.

இன்று நம் பூமியின் நிலை எந்நிலையில் அது சூழலும் தன்மை கொண்டு, காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகிறதோ… அந்நிலையில் தான் ஒவ்வொரு கோளங்களுக்கும், அதன் சுழற்சியில் காற்று மண்டலமும், அம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையும் செயல் கொள்கின்றது.

1.இம்மனித உடலுக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலையும் உண்டு
3.எல்லா ஜீவன்களுக்குமே மனிதனின் உடல் வெப்பநிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த் தான் இருந்திடும்.

தாவரங்களுக்கும் இந்நிலை உண்டு. இதைப்போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலை கொண்ட உஷ்ண அலைகள் உண்டு.

சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.
1.இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எம் மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றோரு இடத்தில் இருந்திடாது
2.எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இந்நிலை உண்டு.