உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது

உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது

 

விஞ்ஞானத்தில் தான்… அவர்களின் கண்டுபிடிப்பில் இருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை. நீர் இருந்தால் அல்லவா உயிரினம் வாழ…? என்ற வினா எழுப்பப்பட்டது.

அதன் விடை.

1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால் அம்மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…?
2.உயிரணு இல்லாவிட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?
3.அம்மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி
4.அதன் வழியில் தொடர் கொண்டு, வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.

பால்வெளி மண்டலத்தில் காற்றுமுண்டு நீருமுண்டு உயிரணுக்களும் உண்டு.
1.வானமாய்ப் பரந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில்
2.சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லை என்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?
3.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லாவிட்டால் அம் மண்டலத்திற்கு சுழற்சி ஏது…?
4.அதிலிருந்து பௌர்ணமி நிலவாய்க் காண்கின்றோமே அவ் ஒளியும் ஏது…?

நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை இல்லை. நீர் நிலையில் இருந்து வெளிப்படும் அமில சக்தியினால் இப்பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள், ஆறு, ஏரி, குளம், குட்டைகள் இப்படி உள்ள நீர் நிலைகளும் அங்கில்லை.

விஞ்ஞானத்தில், சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினரா…?

இவ் வரப்போகும் மாற்றத்திலிருந்து, அடர்ந்த நீர்நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப்போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.

சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அக்கல் எப்படி வளர்ந்தது…?

பனியான நிலை என்றுமே சந்திரனுக்குண்டு… குளிர்த்த மண்டலம் அது. அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில் உறைந்து பிறகு அப்பனி நிலை தொடர்பு கொண்டு நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை.

நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு சக்தி நிலையில்லை. நீர்நிலை அடர்ந்து உள்ள மண்டலத்தில்தான் அம் மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.
1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை ஏவி இம்மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே…
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை “நாம் ஏங்கிப் பெற வேண்டும்”

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை “நாம் ஏங்கிப் பெற வேண்டும்”

 

உங்களுக்குள் அரும்பெரும் சக்தியான துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

1.அகஸ்தியன் எப்படித் தாய் கருவிலிருந்தே தீமைகளை நீக்கினானோ அதை நுகர்ந்தறியப்படும் பொழுது
2.நீங்கள் நுகரும் உணர்வுகள் உங்கள் இரத்தத்திலே கருத்தன்மையாக உருவாகி உடல் முழுவதற்கும் பரவச் செய்து
3.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இருளை நீக்கும் அருள் ஒளியைப் பெருக்குவது தான் இது.

அடிக்கடி நாம் சேர்த்து இதைப் பெருக்கிக் கொண்டு வந்தோம் என்றால் எல்லா உறுப்புகளிலும் தீமையை நீக்கும் உணர்வுகள் “அந்த ஒளி என்ற உணர்வின் அறிவுகள்” பெருகுகின்றது.

இந்தத் தியானத்தை கற்றுக் கொண்டவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கஷ்டப்படுவரையோ சங்கடப்படுபவரையோ வேதனைப்படுவரையோ அவர்கள் உணர்வு நம்மை இயக்காதபடி தடைப்படுத்த வேண்டும். உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

காரம் புளிப்பு உப்பு அதையெல்லாம் சேர்த்துச் சமைத்துச் சுவையாக எப்படி மாற்றிக் கொள்கின்றோமோ அதைப் போன்று சமப்படுத்திக் கொள்ள முடியும்.

நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும்… ஒருவர் கோபப்படுகிறார் என்று பார்த்தோம் என்றால் நமக்கும் அதே உணர்வு தோன்றுகின்றது அவன் மேல் வெறுப்பு வருகின்றது… ஆத்திரம் வருகின்றது.

அந்தக் கோபத்தால் வேதனைப்படுபவரைப் பார்க்கும் பொழுது அந்த வேதனையும் கலந்து வருகின்றது. அந்தக் கோபமும் வேதனையும் நம் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது அத்தகைய உணர்வின் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

இது உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளையும் வீணாக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப் பழகிக் கொண்டால்
2.உங்கள் இரத்தங்களிலே விளைந்து வரும் அந்தத் தீமையான நிலைகளை அடக்க முடியும்.

ஏனென்றால் வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ நுகர்ந்தால் அவைகள் எல்லாம் இரத்தத்தில் முதலில் கருவாகி முட்டையாகின்றது.

தொடர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் பருவம் அடைந்து வெடித்துக் குஞ்சாக மாறுகின்றது அதற்குண்டான கருத்தன்மை இல்லை என்றாலும் கூட அந்த விஷத்தின் தன்மை ரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குச் சென்று அதை வீணாக்குகின்றது.

1.அணுவாக ஆனாலும் சரி அணுவாக ஆகாதபடி அந்த முட்டை அழுகிச் சென்றாலும்
2.அழுகிய உணர்வு ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எந்த உறுப்புகளில் அது சேர்கின்றதோ அதைப் பாழாக்குகின்றது.
3.இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பல விதமான தொல்லைகளைக் கொடுக்கும் அணுக்களாக விளைந்து விடுகின்றது.

அதிலிருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து அதை உடல் முழுவதும் பரவச் செய்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்து உணர்வினை நினைவூட்டி அதை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு இப்போது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும்
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகளை நேரடியாகச் செலுத்தும் பொழுது உடலுக்குள் அந்த சக்திகள் செல்கின்றது
2.கண் வழி அந்த நரம்பு மண்டலங்கள் வழி சென்று உடல் உறுப்புகளை இயக்குகின்றது
3.அதன் வழி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் பெருக்கிக் கொள்வதற்குப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.

தீமைகள் எப்படி உடலுக்குள் ஊடுருவி இயக்குகின்றதோ இதைப் போன்று “கண்ணின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் ஊடுருவச் செய்து” அதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ
2.நிச்சயம் உங்கள் உடலிலே தீமையை நீக்கும் உணர்வின் அணுக்களாக விளைந்து
3.இந்த வாழ்க்கையில் தீமையை நீக்கும் ஞானத்தின் வழி கொண்டு அருள் உணர்வைப் பெருக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை நிச்சயம் அடைய முடியும்

வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு

வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு

 

சக்தியின் சக்தி பெற்று இப்பூமியில் மனித ஆத்மா அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பை இப்பூமியில் பிறப்பெடுத்து வாழ்ந்து வழி பெற்ற சக்தி மட்டுமல்ல… இன்றுள்ள எண்ண வளர்ச்சியின் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று… உயிரணுவிற்குத் தொடர்நிலை கொண்ட அமில சக்தி கூடப் “பல கோடி ஆண்டுகள் ஆயிற்று…”

பெரும் பாக்கிய சக்தி மனிதனாய் வாழும் சக்தியே…!

இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்திட்ட நிலையையே அறிவில் மிஞ்சிய நிலை என்ற கணிப்பில் ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் ஒருவரைத் தலைவனாக்கி… அரசாளும் நிலைப்படுத்தி, அவ்வட்டத்தின் வழியிலேயே சேர்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி… ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டு இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சியுடனே இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி,
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்து
2.தானும் இந்நாட்டின் மன்னன் என்றும் ஒவ்வொருவரின் மனப்பாங்கே இம்மதிப்பின் பேராசை வெறியில் வழி வந்துவிட்டது.

இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் ஏற்படவில்லை இன்றைய இந்நிலை.

அன்றாண்ட 2000 ஆண்டுகளுக்கு முதலே ஆட்சி என்னும் வித்திட்டு “அழிவிற்கு மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான்…”

இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலையே இன்று பிறப்பில் வந்திட்ட நிலை அல்ல. நற் சக்தியின் பயனும் சொல்லில் செயலும் மாறிவிட்டது.

இச் செயற்கையில் நம் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத்தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட் – செயற்கைக் கோள்கள்) இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்புவித்த ஏவுகணைகள் எல்லாம் இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதனை உணர்த்தினேன்.

1.பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும் ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்
2.இம்மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி
3.அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படப் போகின்றன.

இம்மனித ஆத்மாக்களின் சக்தியினால் இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம் இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.

1.இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும்
2.சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.

ஆக்கத்தின் அறிவு சத்தியாய் ஒளிரும் ஆத்மாவையே அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசைப் பேயின் நிலையில் சிக்குண்டு… தன் சக்தியைத் தானே இழந்து… கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து “இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து… உங்கள் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்…”

நம் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கினால் எந்நிலை பெறுவோம்…? சந்திரனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி நிறுத்தியுள்ளோம்.

இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையினால் “இவ்வரப்போகும் சூரிய கிரகண நாளிலிருந்து சந்திரனுக்குச் சில சக்திகள் கூடப்போகின்றன…”

எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையில் நம் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடும் தருவாயிலும் நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து கீழ் இறங்கிச் செல்லும் நிலையில்
1.நம் பூமியின் ஈர்ப்பு சக்தி நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை
2.சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் செல்லும் நிலையில்,
3.இவ்வரப்போகும் சிறிய மாற்றத்தின் நாளிலிருந்தே
4.சந்திரனில் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் நீர்நிலைகள் அதிகரிக்கும் தன்மை கூடுகின்றது.

நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந் நீர்நிலைகள் தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால், இச்சக்தி நிலை கூடி, அதன் ஈர்ப்பில் அதன் சுவாசத்திற்கும், இதன் ஈர்ப்பின் சக்தியினால் அது ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்து, “ஒவ்வொரு நொடிக்கும் சந்திரனுக்கு வளர்ச்சி சக்தி கூடப்போகின்றது…”

இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப் போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தி உண்டு.

நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

 

மனிதனால் விடப்பட்ட தீய அணுக்களின் தன்மை தாவர இனங்களில் பட்டிருந்தால் அதிலே விஷ கிருமிகள் உருவாகித் தாவர இனங்களைத் தின்றுவிடும்.

ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் மேகங்களில் கலக்கச் செய்து அது மழையாகப் பொழிந்து
2.அந்த நீர் பூமியிலே பொழிந்து செடிகளில் பட்டால் செடியில் வரும் மணத்தை நுகர்ந்து அணுவாகி
3.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்து அதனுடைய மலம் செடிகளில் படும்பொழுது உரமாகும்.

ஆகவே அடிக்கடி நாம் மகரிஷியின் அருள் சக்திகளை மேகங்களுடன் கலக்கச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம் தியானித்து வருதல் வேண்டும்.

தியான வழிகளில் எடுத்து நாம் இதைச் செய்தோம் என்றால் மற்ற விஷக் கிருமிகள் தாவர இனங்களுடன் படரப் படும்பொழுது அதைச் செயலற்றதாக்க முடியும்.

ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவிரவாதம் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் தொடர்ந்து இந்தக் காற்றிலே படரப்படும் போது தான் அத்தகைய கிருமிகள் உருவாகின்றது.
1.நீங்கள் வேதனையுடன் ஒரு செடிக்கு நீரை ஊற்றிப் பாருங்கள்… இந்தச் செடி கருகிவிடும்
2.நீங்கள் வேதனையுடன் தொழில் செய்தால் அது வீணாகிவிடும்.

ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் மேகங்களில் கலக்கச் செய்து மழை நீராகப் பொழியச் செய்தோம் என்றால் இந்தக் காற்றில் உள்ள நச்சுத் தன்மைகள் குறையும்.

தாவர இனங்களில் படும் பொழுது நல்ல அணுக்களாக உருவாகும் தாவர இனங்கள் செழித்து வளரும் அதனுடைய மலங்கள் செடிகளுக்கு நல்ல உரமாகும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். அப்படி வந்துவிட்டால் நம் நாடும் செழிக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் பெற்ற அருள்
2.இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதை நாமும் பெற்று நமக்குள் வரும் இருளை நீக்கி
3.நமது மூச்சும் பேச்சும் புவியில் உள்ள இருளை நீக்கி கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கி
4.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெறச் செய்ய முடியும்.

அந்த அருள் ஞான சக்தி நீங்கள் பெற குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று இருளை நீக்கி உலக இருளை நீக்கி… அருள் வழி வாழச் செய்யும் அருள் ஞான உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக “உங்கள் மூச்சலைகள் படரட்டும்…”

உங்கள் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் அந்த அருள் வழி வளரட்டும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் உலகமாக சிருஷ்டியுங்கள்.

1.இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான நிலையாக இருள் சூழச் செய்யும் நஞ்சிலிருந்து விடுபட்டு
2.அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
3.நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்.

இந்த உடலுக்குப்பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைவோம்.

அகஸ்தியரின் அருளைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

அகஸ்தியரின் அருளைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி தாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ்நாளில்…
1.நஞ்சினை வென்று இருளினை அகற்றி உண்மையின் உணர்வை அறிந்து
2.அவனில் விளைந்து வெளிப்படுத்திய அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டி
4.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்களை மூடி கண்ணின் நினைவை புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அகஸ்தியன் அவன் வாழ்நாளில் நஞ்சை வென்று இருளை அகற்றி உண்மையின் உணர்வை அறிந்த… “அந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும்” என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று
2.“இப்பொழுது எத்தனை நேரம் இதை எண்ணுகின்றீர்களோ”
3.ஓ…ம் நமச்சிவாய என்று அதை உங்களுக்குள் சிவமாக்குகின்றது உயிர்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப உங்கள் நினைவாற்றலை உயிரான ஈசனிடம் ஒன்றி… ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.நாங்கள் என்றால் நம் உடலுக்குள் இருக்கும் அனைத்தும் சேர்த்து நாங்கள் என்று ஆகின்றது
2.நாம் என்ற நிலையில் ஒன்றிணைந்து அந்தச் சக்தியைப் பெற வேண்டும்.

நஞ்சினை வென்ற இருளை அகற்றிய அந்த அரும் பெரும் சக்தியை நுகரப்படும் பொழுது உங்கள் உடலில் நோய் இருந்தாலும் மன நோய் இருந்தாலும் வேதனைப்படும் நிலையோ நுகர்ந்தது இப்படிப் பல விதமான விஷத்தன்மையாக இருந்தால்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது
2.உங்கள் உடலில் உள்ள அந்த நஞ்சின் தன்மை பலவீனமடையும்… இந்த உணர்வினை நீங்களும் அறியலாம்.
3.இப்பொழுது நல்ல சிந்தனையின் உணர்வுகள் உங்களில் உருவாகும்.
4.உடலில் மகிழ்ச்சி என்ற உணர்வுகளை ஊட்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்களில் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

காவியத் தொகுப்பில் “கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று காட்டியிருப்பார்கள். அதாவது…
1.இப்பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
2.நம் உடலுக்குள் உருப்பெறுகின்றது குழந்தைகளாக.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் இந்த உணர்வினை அது பெறுகின்றது… இந்த உணர்ச்சி உடலுக்குள் அது உருப்பெறுகின்றது.

அது தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்பது.

கண்ணின் நினைவை அகஸ்திய மாமகரிஷியின் பால் செலுத்தி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணம் ஆகி கணவன் மனைவி இரு மனமும் ஒன்றெனெ இணைந்து… பேரருள் பெற்று இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் அந்தப் பேரருள் பெற்ற… “இருவரில் விளைந்த அருள் உணர்வுகளை” நாமும் நுகர்ந்தறிந்து நம் உடலில் உருவாக்குவோம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டி “துருவ மகரிஷி பெற்ற அந்த அரும்பெரும் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று… கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி துருவ மகரிஷி பெற்ற அருள் சக்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவத்தையே எல்லையாக வைத்து இருவரும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி உயிருடன் இணைந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அதனின்று வரும் உணர்வுகளை ஏங்கி நீங்கள் தியானியுங்கள்.

1.நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலுக்குள்
2.தீமைகளை அகற்றிடும் பேரருள் பெறும் அருள் ஞானத்தை உங்களுக்குள் அணுவாக உருவாகச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி… “உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தில் இணைத்து” அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துவிட்டு
2.அதன் உணர்வை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி இதைத் தியானியுங்கள்

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு

 

ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் உள்ளது‌. தொடர் நிலை இல்லாத செயல் எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு.

வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடரில்லாமல் ஒன்றில்லை. வியாழனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி… வியாழனில் இருந்து நம் பூமிக்கு எப்படி அணுக்கள் வந்து தோன்றின…? என்பதனை உணர்த்தத் தொடர் கொண்டு நிறுத்தியுள்ளேன்.

1.நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமிதான் வியாழன் மண்டலம்.
2.ஆனால் இன்று மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
3.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள் அங்கில்லை.
4.ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லோரும்.

இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனிலிருந்து வந்ததுதான்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே… தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகிக் கொண்டவுடன்
1.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
2.நீர்நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
3.இச் சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர் சக்தியை இப் பூமியில் வளர விட்டு
4.அதன் தொடர் நிலையிலிருந்து வந்ததுதான் இக் கலிகாலம் வரை.

இச்சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலையுண்டு.

எப்படி இன்று நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட முருக ஜெபத்துடன் ஒன்றிய போகரினால் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப் பூமியில் பதியச் செய்தார்.

தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை போகரின் நிலை.

முருகரின் பக்தி கொண்டு முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்து செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.
1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை… ரிஷிகளுக்கும் அவ் ஆசை உண்டு… ஆசையில்லா விட்டால் எதுவுமே இல்லை
2.பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில் தான் அனைத்துமே செயல் கொள்கின்றது
3.வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் நம் பூமி சக்தி பெற்றது.
4.நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப் போகின்றது
5.சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால் தான் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பொழுது செப்பிடும் சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை, ஒரு வருடம் அல்ல… இரண்டு வருடம் அல்ல… ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.

பல கோடி ஆண்டுகளாய் பல நற் சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே… இக்கலியினால் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால் மாற்றம் கொள்ளப் போகின்றது.

நம் பூமியின் மாற்றத்தினால் இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப் போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால் நம் பூமி மட்டுமல்ல… இதன் தொடர்பினால்
1.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
2.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
3.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது.

போகாப்புனல்

போகாப்புனல்

 

நாம் எடுக்கும் தியானத்தின் வலுகொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடலில் பெற்ற நஞ்சினை கரைக்கச் செய்து பிறவில்லா நிலையை அடையச் செய்வோம்.

உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மாக்கள் துயர்படும் உணர்வினைக் கரைத்து விட்டு துயரற்ற உணர்வாக என்றும் ஏகாந்த நிலை வாழ முடியும். இது மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை.

1.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவித்தோம்… மனிதனான பின் துன்பத்தை அகற்றிடும் அருள் சக்தி பெற்றோம்
2.துன்பத்தை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினைப் பேரருளாக மாற்றிய
3.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருளை நாம் பெற்று நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஏகாந்த நிலை அடையலாம்…
4.இருளை மாற்றி ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்குதலே மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை.

அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான்.

தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை நுகந்து பகைமை என்ற உணர்வோ நஞ்சு என்ற உணர்வோ இருள் என்ற உணர்வோ அறியாமை போன்ற நிலைகளையோ மாற்றிப் பேரருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

வாழ்க்கையில் நமது ஆசைகள் எவ்வாறு பக்தி கொண்டோ மற்றவர் அன்பு கொண்டோ நமக்குள் வளர்த்தாலும் பக்தியின் நிலைகள் கொண்டு வேதனை என்ற உணர்வுகள் கலந்தால் அன்பு கொண்டு அந்த உணர்வின் தன்மை அரவணைத்தாலும் அதனுடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக வரப்படும் பொழுது சாகாக் கலை.

இந்த உடலில் எதனை வளர்த்தோமோ இந்த உணர்வின் தன்மை மற்ற மனிதனின் உடலுக்குள் சென்று சாகாக்கலையாக இதையே உருவாக்கும்.

ஒரு மனிதன் நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகின்றது உயிர் வேகுவதில்லை. ஆகவே
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் வலுவாகத்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் நாம் ஒன்றிவிட்டால் வேகாநிலை அடைகின்றது.
3.பிரபஞ்சத்திலும் அகண்ட அண்டத்திலும் வரும் நஞ்சு இதை அழித்து விட முடியாது.

இதைத் தான் சாகாக்கலை வேகாநிலை போகாப்புனல் என்று அன்று வள்ளலார் பாடியது.

இந்த வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சாகாக் கலையாக மாறுகின்றது அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றினால் வேகாநிலை என்ற நிலை பெறுகின்றது.

போகாப்புனல்…! பேரருள் என்ற உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கிக் கொண்டால் இன்னொரு உடலுக்குள் புகுவதில்லை நாம் பிறவியிலா நிலை அடைய முடியும்.

இந்த வாழ்க்கையில் சாகாக்கலை என்ற நிலையிலிருந்து
1.உணர்வுகளை உயிருடன் ஒன்றி வேகாநிலை அடைந்தால்
2.இன்னொரு உடலுக்குள் போக முடியாது என்று அன்று வள்ளலார் தெளிவாகப் பாடியுள்ளார்.

அவர் சொன்ன மூலக்கூறை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அருள் பெறும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை… நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த அருளைப் பெறுகின்றது உயிர். அது தனிப் பெரும் கருணையாக வளர்கின்றது

நாம் எண்ணியது எதுவோ அதன் உணர்வின் அறிவாக நம்மை இயக்குகின்றது என்ற நிலையினை தெளிவாக அவர் கூறியுள்ளார் இராமலிங்க அடிகள்.

1.அவர் பெற்ற உண்மையின் உணர்வுகளும் அவர் வெளிப்படுத்திய நிலைகளும் இங்கே உண்டு
2.அவர்கள் பெற்ற அருள் ஞானத்தைப் உணர்வினை நாமும் நுகர்ந்தறிய முடியும்.
3.வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும் என்றும் பேரானந்த நிலை கொண்டு வாழ முடியும்.

அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

 

இவ்வுலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்தியையும்
2.இப்பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத் தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.

இம்மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு எப்படி அமிலமாய், ஆவி நிலை கொண்டு நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் உருப்பெற்று நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் அவ் உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான் நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளன.

எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால் நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா…? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்ளுகின்றது.

குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது.
1.எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகிறதோ
2.அந்நிலை போன்று தான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.

குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.

நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும் “அமில சக்தியின் ஆவி நிலைதான்” நம் உடலிற்கு சக்தி தரும் நிலை.

நம் பழக்க வழக்கப்படி நம் உடலை எந்நிலையின் உணவை உண்டு பழகியுள்ளோமோ அவ்வமில சக்தியின் வளர்ச்சியின் நிலைகொண்ட நிலையைத் தான் நம் உடல் ஏற்கிறது.

பட்டுப்புழு முசுக்கொட்டைத் தளையை மட்டும் உண்டு அதிலிருந்து எடுத்த ஆவியின் அமிலத்தினால் எப்படிப் பட்டை எடுக்கின்றோம்…?
1.அப்பட்டுப்புழுவிற்கே முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
2.அதைப்போல் தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல்நிலை நடக்கின்றது.
3.மனிதனின் நிலையும் அதுவே… மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவில் இருந்து மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.

இவ் உடல் கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்தில் இருந்து தான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.

நாம் உண்ணும் உணவு ஆவியாய் அமிலமாய் உதிர சக்தி பெறுகின்றது. அவ்வாவியான பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.

இவ்வாவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிரணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன.

ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ் உயிரணுக்களின் நிலையில் இருந்தால்தான் வளர்ந்திடும்.
1.இந்நிலையை வைத்துத் தான் முன் பாடத்தில் நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்

 

அகஸ்தியன் தான் கண்ட உண்மைகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டும் என்று தன் மனைவிக்குச் சொல்கிறான். அதன் வழி கொண்டு
1.இருவருமே துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகரும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.
2.துருவத்திலிருந்து வரக்கூடிய உணர்வை தங்களுக்குள் உருவாக்கும் சக்தி பெறுகின்றார்கள்.

துருவத்தின் வழியாக நுகரும் தன்மை வரும் போது 27 நட்சத்திரங்களின் மின்னணுக்களை அது பரப்புகின்றது. அதை உற்று நோக்குகின்றனர். அந்த மின் கதிர்களைத் தங்களுக்குள் அடங்கச் செய்கின்றனர் அவர் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறுகின்றது.

ஒரு நட்சத்திரமும் இன்னொரு எதிர்நிலையான நட்சத்திர உணர்வும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் அதனுடன் சேர்ந்து வியாழன் கோளின் கதிரியக்கப் பொறி தாக்கப்பட்ட பின் அனைத்தும் ஒன்றாகக் கலந்து துடிக்கும் நிலை வருகின்றது. அப்போது தான் உயிரணு என்ற நிலை வருகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின் கதிரியக்கங்களை உருவாக்குகின்றது உயிர் எதனை நுகர்கின்றதோ உணர்வுக்கொப்ப கதிரியக்கங்களாக மாற்றுகின்றது அந்த உணர்வை உடலாக மாற்றுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உறையும் தன்மை பெற்று ஜீவ அணுவாகி அந்த அணுவின் மலம் அந்தந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகளாக உருவாகின்றது.

இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி தனக்குள் உருவாக்கும் தன்மை பெறுகின்றான். உண்மையின் இயக்கத்தை அறிந்தான். இந்த உணர்வின் ஆற்றலைக் கணவன் மனைவி இருவருமே தங்களுக்குள் பெருக்கிக் கொண்டார்கள்.

எந்தத் துருவத்தில் இருந்து வருகின்றதோ
1.அதன் வழி வரும் நட்சத்திரங்களின் உணர்வனைத்தும் நுகர்ந்து
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை இந்த உயிரைப் போன்றே
3.எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் உணர்வின் அணுக்களாக ஒன்றாக இணைத்தான்.

(மின்னல்) மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அளவில்லாத தூரங்களுக்குப் பரவிச் செல்கின்றது. பல லட்சம் மைல்களுக்கு அப்பால் கூடச் செல்கிறது. அந்த ஒளிக்கற்றைகளை நாம் காண நேருகின்றது உலகம் முழுவதும் பரவுகின்றது.

அதை எல்லாம் வானளாவிய நிலைகள் கொண்டு இருளை நீக்கி பொருள் காணும் நிலையாகக் காணுகின்றனர் அகஸ்தியனும் அவன் மனைவியும். அகண்ட அண்டம் அது எப்படி உருவானது…? என்பதையும் கண்டறிகின்றனர்.

1.நஞ்சினை நீக்கி ஒளியாக மாற்றிடும் அந்த சக்தி இருவரும் பெற்றபின்
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்று
3,ஒத்த நிலைகள் கொண்டு ஒன்றாக ஒளியாக இணைக்கின்றனர்.

சூரியன் பல மண்டலங்களில் இருந்து எடுக்கும் விஷத்தன்மைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் மோதப்பட்டு விஷத்தின் தன்மையைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு விஷம் என்ற உணர்வு தனக்குள் சாடாது தீமைகளை நீக்கி விட்டால்… உயிர் என்ற நிலையில் ஒளி என்ற நிலையை அடையும் பொழுது… இருள் என்ற நிலை வராது தடுத்து ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது.

அப்படிப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது. “அதை மனிதர்கள் நுகர்ந்தால்” இருளை நீக்கி விட்டுப் பொருள் காணும் அருள் சக்தி பெறுகின்றார்கள்.

அந்த அகஸ்தியனைப் போன்ற இவர்களும் வளர்ச்சி பெற்றுப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்கள்.

துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டது. அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தான் உபதேசத்தின் வாயிலாக
1.உங்கள் நினைவாற்றலைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்வதும்
2.உணர்வின் ஒலிகள் உங்கள் செவிக்குள் உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது
3.கண் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களை நுகரச் செய்வதும்
4.நுகர்ந்த உணர்வை உங்கள் உயிர் அத்தகைய உணர்வைப் பெற்று அதைக் கவரும் அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான்
5.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நுகரச் செய்து கொண்டுள்ளேன் (ஞானகுரு).

அவ்வாறு நீங்க: நுகரும் உணர்வை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தகுதி பெறுகின்றது.

துருவ நட்சத்திரம். எத்தகைய மின்னல்கள் வந்தாலும் ஒளியின் கதிராக அது மாற்றிக் கொள்கின்றது… இருளை அகற்றுகின்றது.

சூரியன் ஒரு காலம் மங்கினாலும் துருவ நட்சத்திரம் என்றுமே மங்காது சூரியன் அழிந்தாலும் அதே சமயத்தில் துருவ நட்சத்திரம் அழியாது… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.

அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டு வேகாநிலை கொண்டு எதிலும் அழியாத நிலை கொண்டு ஒளியின் சரீரமாக இருக்கின்றது.

இவை எல்லாம் பல கோடி உணர்வுகளைக் கலந்து கலந்து மனிதன் ஆன பின் இருளை அகற்றி ஒளி என்ற நிலைகள் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி உள்ளான்.

அதை நாம் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால்
1.அகஸ்தியன் கண்ட உணர்வு நமக்குள் இனணந்து
2.இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை நாம் காத்து
3.இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் அங்கே செல்கின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஏற்கனவே இரண்டு பிரளயங்களை நம் பூமி சந்தித்துள்ளது

ஏற்கனவே இரண்டு பிரளயங்களை நம் பூமி சந்தித்துள்ளது

 

நம் பூமியில் முதல் பிரளயத்தில் ஏற்பட்ட நீர் நிலைகளின் வளர்ச்சி… நம் பூமி சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பிலிருந்து “நாம் பெற்ற பொக்கிஷம்…”

முதல் பிரளய காலத்திற்கு முன் இன்று எப்படி சூரியனைக் கேது கிரகணம் பிடிக்கின்றதோ அதைப் போன்றே சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் “வியாழனின் கிரகணம்” பிடித்தது.

நம் பூமிக்கு மேல் வியாழன் மண்டலம் பெரியது. சூரியனின் நிலை மிகவும் பெரியது. இந்நிலையில் சூரியனை வியாழனின் கிரகணம் பிடித்தவுடன் சூரியனைத் தாண்டி வியாழன் செல்லும் நிலையில்
1.நம் பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட நிலையில் பால்வெளி மண்டலத்தில்
2.வியாழனின் சக்தி நம் பூமியின் மேல் நேர் பார்வையில் பட்டவுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்திகள் உறைந்து
3.வியாழனின் இயற்கைக் குணமான அதிக நீரைக் கொண்ட சக்தியுடைய அமில உப்பு
4.இப்பால்வெளி மண்டலத்தில் கலந்து வேகமாய்ப் படர்ந்து உறையும் தன்மை கொண்டு இவ்வியாழன் சூரிய கிரகணத்தைத் தாண்டிய நிலையில்
5.உப்புக் கலந்த உறைந்த அமில சக்தியானது சூரியனின் ஒளி பட்டவுடன் கரைந்து
6.நம் பூமிக்கு எப்பொழுதும் இருந்த இயற்கை நிலையுடன் அதிக சக்தி கொண்ட இவ்உப்புக் கலந்த அமில நிலை மோதுண்டவுடன்
7.நம் பூமியின் நிலை ஏற்காமல் பிரளய நிலை ஏற்பட்டு
8.அதன் சுழற்சி வட்டத்தில் சிக்கிக் கொண்ட நீர்நிலைகள்தான் நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வட துருவ தென் துருவ நீர்நிலைகள் அடர்ந்த கடல்களே.

அதன் தொடர்ச்சியில் இருந்து சுழன்ற நிலை கொண்டு நம் பூமி முதலில் சேமித்துப் பழக்கப்படுத்திய இயற்கைத் தன்மை மாறி… இத்தாவர வர்க்கங்களும் முதல் பிரளயத்திற்கும் பிறகு நீருடனே நீர்நிலைகள் உள்ள இடத்தில், நீருக்கடியில் ஆரம்ப காலத்தில் வளர ஆரம்பித்தன.

அதன் தொடர்ச்சியில் இருந்து ஏற்பட்ட இன வர்க்கங்கள் தான் “கொசுக்களைப் போன்று நுண்ணிய உடல்களைக் கொண்ட உயிரணுக்கள்” இந்நீர் நிலைகளில் தோன்றி நீர்நிலைகளின் மேல் படர்ந்து வந்த்து,

அதன் தொடர்ச்சியில் அதன் சுவாசத்தில் அதன் கழிவின் உஷ்ண நிலையிலிருந்து சிறு சிறு முட்டைகள் தோன்றி அதிலிருந்து எறும்பின் தலையை ஒத்த தலையுடைய “சிறு வால்” நீண்ட உயிரணுக்கள் வளர்ச்சி கொண்டன.

அந்நிலையின் தொடரிலிருந்து நீரிலிருந்து வளர்ந்த இவ்வுயிரணுவே… சிறு சிறு மாற்றம் கொண்ட நிலையில் ஜீவ உடல் கொண்ட உயிர்ப் பிராணி வர்க்கத்திற்கு வந்ததின் தொடர் நிலையில் இருந்து தான் பல நிலைகள் மாறி… பல ஆயிரம் கோடி ஆண்டுகள் அந்நிலையின் வளர்ச்சிக்குப் பிறகு “மற்றும் ஒரு பிரளயம் ஏற்பட்டது…”

அந்த மாற்றத்திற்குப் பிறகுதான் இவ்வளர்ச்சி நிலையில் உயிரணுவாய் ஜீவ உடல்களைக் கொண்ட ஜீவன்களின் நிலை அதன் வளர்ச்சியில் அது சேமித்த சக்தியின் நிலை கொண்டு அடுத்த பிரளயத்தில் அவ்வுயிரணுக்களே தோன்றிய நிலையில் தான்…
1.இம்மனித உடல் கொண்ட அறிவு வளர்ச்சியுற்ற ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை வந்தது.
2.இவ்விரண்டாவது பிரளயத்தினால் நம் உலகிற்கு எந்நிலை கொண்ட மாற்றம் வந்தது…?
3.இவ் இரண்டாவது பிரளயத்திற்கும் வியாழனிலிருந்து தான் நம் பூமிக்கு மனிதர்கள் வாழும் நிலையின் தொடர் வந்தது.

நம் பூமியில் இன்று எப்படி நமது நிலை உள்ளதோ அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வியாழனிலும் நம்மை ஒத்த மனித இன வர்க்கமும் அடர்ந்த நீர் நிலைகளும் இருந்தன.

அறிவின் வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் ஆசையின் நிலையினால்…
1.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால் இன்று வியாழனில் மனித ஆத்மாக்கள் இல்லாத நிலை.
2.ஆனால் நம் பூமிக்கு வியாழனிலிருந்து தான் அதன் தொடர் சக்தியின் உருவிலிருந்துதான்
3.உயிர் ஆத்மாக்கள் தோன்றி இன்று இங்கு நாம் வாழும் நிலை உள்ளது.

இராமாவதார காலத்தில் இருந்து இக்கலி வரை ஏழு ஜென்மங்களில் இன்று மனிதராய் வாழ்பவரில் பலர் உள்ளனர். இக்கால நிலையிலேயே மனித உடல்களில் இருந்து மாறு கொண்ட மிருக வர்க்கத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே பல உயிர் ஆத்மாக்கள் சென்றுவிட்டன.

மிருக உடலில் இருந்தும் மாறிக் கொசுவாகவும், ஈ எறும்பு புழு பூச்சியாகவும் பல ஆத்மாக்களின் நிலை சென்றுவிட்டன.

இம்மண்டலத்தில் வந்து வாழக் குடியேறிய உயிராத்மாக்களுக்கு வந்த சக்தி ஏழு உடல்களை ஏற்கும் சக்தி தான் உண்டு. அதிலிருந்து மாறுபட்டுத் தோன்றிப் பல நிலைகள் கொண்ட உடல்களை ஏற்று எண்ணிலடங்கா உயிரணுக்கள் வாழ்கின்றன.

ஓர் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியில் உயிராத்மாவாய் பல ஜென்மங்கள் மாறு கொண்டு பல நிலைகளைப் பெற்று வாழும் தருவாயில் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் “பல உயிரணுக்களை உண்டு பண்ணியே தான் வாழ்கின்றது…”

எவ்வுயிரணுவும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியாது. அது எடுக்கும் ஆகாரத்தில் அதன் சக்தியை வளர்த்த பிறகு அது வெளிப்படுத்தும் மலத்திலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுகின்றன.
1.உண்டு கழித்து வாழ்ந்திடும் உயிராத்மாக்களினால் எண்ணிலடங்கா உயிரணுக்கள் தோன்றி
2.அவை அவை தோன்றிய நிலைக்கொப்பப் பல நிலைகளில் வளர்ச்சி கொள்கின்றன.