உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது

உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது

 

விஞ்ஞானத்தில் தான்… அவர்களின் கண்டுபிடிப்பில் இருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை. நீர் இருந்தால் அல்லவா உயிரினம் வாழ…? என்ற வினா எழுப்பப்பட்டது.

அதன் விடை.

1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால் அம்மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…?
2.உயிரணு இல்லாவிட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?
3.அம்மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி
4.அதன் வழியில் தொடர் கொண்டு, வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.

பால்வெளி மண்டலத்தில் காற்றுமுண்டு நீருமுண்டு உயிரணுக்களும் உண்டு.
1.வானமாய்ப் பரந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில்
2.சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லை என்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?
3.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லாவிட்டால் அம் மண்டலத்திற்கு சுழற்சி ஏது…?
4.அதிலிருந்து பௌர்ணமி நிலவாய்க் காண்கின்றோமே அவ் ஒளியும் ஏது…?

நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை இல்லை. நீர் நிலையில் இருந்து வெளிப்படும் அமில சக்தியினால் இப்பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள், ஆறு, ஏரி, குளம், குட்டைகள் இப்படி உள்ள நீர் நிலைகளும் அங்கில்லை.

விஞ்ஞானத்தில், சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினரா…?

இவ் வரப்போகும் மாற்றத்திலிருந்து, அடர்ந்த நீர்நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப்போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.

சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அக்கல் எப்படி வளர்ந்தது…?

பனியான நிலை என்றுமே சந்திரனுக்குண்டு… குளிர்த்த மண்டலம் அது. அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில் உறைந்து பிறகு அப்பனி நிலை தொடர்பு கொண்டு நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை.

நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு சக்தி நிலையில்லை. நீர்நிலை அடர்ந்து உள்ள மண்டலத்தில்தான் அம் மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.
1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை ஏவி இம்மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே…
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply