ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”

ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”

 

ஓம் ஈஸ்வரா என்றால் நமது உயிர் ‘ஓ’ என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்வது அனைத்தையும் ‘ஓ’ என்று ஜீவ அணுவாகக் “கருவாக” உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆகவே நாம் எதைக் கேட்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… எதை நுகர்கின்றோமோ… இவை அனைத்தையும் நாம் நுகரப் படும்போது நாம் அந்தந்தக் குணங்களை அறிய முடிகின்றது.

அதை எல்லாம்
1.நமது உயிரோ ஓ… என்று ஜீவ அணுவாக கருவாக மாற்றி விடுகின்றது.
2.அவ்வாறு கருவாக மாற்றி விட்டால் நம் ரத்த நாளங்களில் அது கலந்து விடுகின்றது
3.இதற்கு இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் இந்திரலோகம் என்றால் இந்திரீகம்… “ஒரு அணுவின் கருவாக” உருவாக்கும் தன்மை பெற்றது ஆகவே இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

அதே சமயம் நம் உடலுக்குள் அது இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
1.கோழி எவ்வாறு முட்டையை அடைகாத்துக் குஞ்சினை வெளிப்படுத்துகின்றதோ இதைப் போல
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை நம் உடலுக்குள் நமது உயிர் அடைகாக்கின்றது.
3.அதனுடைய பருவம் வரும் பொழுது அந்த முட்டையை விட்டு வெளி வருகின்றது.

நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்ந்தறிந்தோமோ அந்த அணுவின் தன்மை வெளிப்படும்போது நமது உயிர் ஈசனாக இருந்து இயக்குவதனால் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்… இயக்கத்தால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்… அதனதன் சந்தர்ப்பத்திற்க்கொப்ப நாம் அறிந்துணர்வதற்கு இவ்வாறு காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் நுகரும் உணர்வுகள் கருத்தன்மை அடைவதனால் அதை இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

1.அந்தக் கருமுட்டைக்குள் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கருவானதோ அது அணுவாக மாறுகின்றது.
2.எந்த குணத்தின் தன்மையோ அதனுடைய அணுவாக உருவாக்கப்படும் போது அதனுடைய இயக்கம் ஈசனே.
3.அதில் துடிப்பின் நிலை வரும் பொழுது வெப்பம் விஷ்ணுவே
4.அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் வரும் பொழுது லட்சுமி.
5.எக் குணத்தின் தன்மை கொண்டு அந்த அணுவின் தன்மை பெற்றதோ அது பிரம்மம்.
6.அதனின்று வரக்கூடிய உணர்வின் மணங்கள் ஞானம் சரஸ்வதி.

ஆகவே எந்தக் குணத்தின் தன்மையால் அந்த அணு உருவானதோ ஆக அது பிரம்மமாக இருந்து தன் இனத்தை அது உருவாக்கும் என்று பொருள். பிரம்மா உருவாக்குகின்றான், விஷ்ணு வரம் கொடுக்கின்றான், சிவன் அரவணைக்கின்றான்.

ஆக நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இந்த உடலுக்குள் அது அணுவின் மலமாகும் போது சிவலோகம் ஆகின்றது.

உயிர் உருவாக்கப்படும் பொழுது ஈஸ்வரலோகம். அணு கருவாகும் பொழுது இந்திரலோகம் அணுவாகும் போது பிரம்மலோகம் அது தன் இனத்தை உருவாக்கும் என்று பொருள்படும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள். அதன் உணர்வின் மலம் உடலாகும் போது சிவலோகம்.

இதுதான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா…!”

நீ எப்படி ஒளியாக நின்று உணர்வின் தன்மை அணுவாக மாற்றுகின்றாயோ இதைப் போன்று
1.நீ உயிராக நின்று ஒளியாக இருப்பது போல் என் உணர்வின் தன்மை தெளிவான ஒளியான நிலைகளில் எனக்குள் உருவாக வேண்டும்.
2அந்தக் கருணை உன்னில் வர வேண்டும் என்பதைத்தான் நமது உயிரான ஈசனிடம் வேண்டிப் பாடுவது.

அது தான் “ஓம் ஈஸ்வரா…” எடுப்பது (சுவாசிப்பது) எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய் “கருணைஸ்வரூபா…”
1.என்னை கருணை கொண்டு ஏற்றுக் கொண்டு
2.நான் எடுக்கும் நல்ல எண்ணங்களை அந்த அணுவின் தன்மையாக உருவாக்குகின்றாய்
3.ஆகவே நீ என்னை ஏற்றுக் கொள்…! என்று தான் பொருள்.

ஓம் ஈஸ்வரா குருதேவா… கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் குருதேவா.

அப்படி என்றால் இந்த உடலுக்குள் அது உருவாக்கிவிட்டால், எந்தக் குணத்தின் தன்மை உருவாக்கியதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது…. ஈசனாகவும் இருக்கின்றது. குருவாகவும் இருக்கின்றது.

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

 

நம் பூமி வளர்ந்த தொடர் நிலையின் பாடத்தில் நம் பூமியில் தோன்றிய உயிரணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.

அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனது.

அதன் பிறகு இப்பூமியின் முதல் பிரளய நிலையில் இருந்து ஜீவ உயிரணுக்கள் விட்ட நிலையில் இருந்து தொடர் நிலையாய் அவற்றின் அமில சக்தியிலிருந்து தோன்றிய உயிரணுக்களின் தன்மையையும்… முதல் பிரளய நிலைக்குப் பிறகு தான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவ நீர்நிலைகள் பெறும் சக்தி கொண்ட நிலையையும் இதன் தொடர் நிலையிலேயே விளக்கிடுவேன்.

இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.

நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில்… நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் ஏற்காமல்… எப்படி வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில் பல இன்னல்களை இம் இண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன… அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.

இந்நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.

பிரளயம் ஏற்படுவதுவும் இச்சுழற்சியின் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல்… அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.

1.நம் உடல் மண்டல நிலையில் ஆரோக்கிய நிலை கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும்
2.எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
3.உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினால் மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தை தாக்கிடாது.
4.அந்நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திட்டால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையிலும் நம் பூமியின் நிலை ஆரோக்கியமாய் இருந்திட்டால் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்காது.

நம் பூமியில்தான் இன்று நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!

இந்நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.

“கேதுவின் கிரகணத்திற்குப் பின்” பூமியில் மாற்றம் ஆரம்பித்தது

“கேதுவின் கிரகணத்திற்குப் பின்” பூமியில் மாற்றம் ஆரம்பித்தது

 

16.1.1980 ஆம் தேதியில் ஏற்படும் சூரிய கிரகணத்தில் நம் சூரியனைத் தாண்டி “கேதுவின் ஓட்டம் செல்வதினால்” கேது மண்டலத்தில் உள்ள விஷ அணுக்கதிரின் தாக்குதல் நம் பூமிக்குத் தாக்கப் போகின்றது. கேதுவின் தன்மையில் விஷத்தன்மை அதிகம்.

நம் பூமியில் எப்படி சில தாவரங்கள் விஷத்தன்மை கொண்டதாகவும் சில நல்ல தாவரங்களாகவும் வளர்கின்றனவோ அவை போல் இம்மண்டலங்களின் வளர்ச்சியிலும் ஒவ்வொரு தன்மையில் வளர்கின்றது என்றேன் அல்லவா…?

கேது மண்டலம் இல்லாமல் இருந்திருந்தால் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையில் இவ்விஷ அமிலமும் நிறைந்தே சுற்றிக் கொண்டிருக்கும்.

நட்சத்திர மண்டலங்களிலும் இவ்விஷமான அமில சக்தி கொண்ட பல நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

எண்ணத்தில் கூடக் கேதுவின் சக்தியை எண்ணிலடங்கா வண்ணம் நச்சுத்தன்மை கொண்ட அமில சக்தி நிறைந்த மண்டலமாய் கேது மண்டலம் வளர்ந்துள்ளது.

சூரியனின் ஈர்ப்பிற்கு இந்த 48 மண்டலங்களின் சுழற்சியுடன் கூடிய மண்டலம் தான் கேது மண்டலமும்.
1.கேதுவின் கிரகணம் பிடிப்பதினால் நம் பூமியின் மேல் இதன் அதன் ஈர்ப்பு சக்தி தாக்கி
2.நம் பூமியின் இயற்கையுடன் இவ்விஷ அணுக்களின் தாக்குதல் பட்டு
3.அத்தாக்குதலினால் நம் பூமியின் நிலையே சிறிது இறக்கம் (கீழ்) இறங்கப் போகின்றது.
4.அந்நிலையில் இருந்து சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட தூர விகிதமும் அதிகப்படப் போகின்றது.
5.இதிலிருந்து இன்று இப்பூமிக்குக் கிடைக்கும் சூரியனின் உஷ்ண அலையின் சக்தி குறைவு கொண்டு குளிர்ந்த நிலை அதிகப்பட போகின்றது.

இந்நிலையின் தொடர் நிலையாலும் நம் பூமியின் “மாற்ற நிலை ஏற்படப்போகும் நிலைக்கு” இக்கேதுவின் நிலை சாதகப்படுத்தி செல்கின்றது.

நல்வழியின் சாதகமல்ல கேதுவின் கிரகணத்தினால்.

நம் முன்னோர்கள்‌ எக் கிரகணம் பிடித்ததோ இந்நிலையில் வாழ என்று தெரிந்தோ தெரியாமலோ செபினர்.
1.நம் பூமி பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு
2.இக்கேதுவின் கிரகணத்தினால் சில தன்மைகளில் மாற்றம் கொள்ளப் போகின்றது.

சுழன்று கொண்டே உள்ள இம்மண்டலங்களின் ஓட்டத்தில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையிலும்… ஒன்றுக்கொன்று ஒன்றின் சக்தியை ஒன்று அதன் ஓடும் நிலையில் பார்த்துக் கொண்டே செல்லும் நிலையிலும்… இப்பாடத் தொடர்ச்சியின் ஒவ்வொரு மண்டலத்தின் வளர்ச்சியின் நிலையில்… பல ஆண்டுகள் ஒன்று போல் உள்ள இயற்கையின் நிலையில் மாற்றம் கொண்டு…
1.இயற்கையில் உள்ள அம்மண்டலத்தின் சக்தியே
2.மற்ற மண்டலத்திலிருந்து அதன் ஈர்ப்புப் பட்டவுடன் மாறும் நிலை கொள்கின்றது.

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!

 

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா.

இந்த உயிர் உடலில் இல்லை என்றால் நாம் இருக்க முடியுமா இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலில் நாம் இல்லை. “உயிரின் இயக்கமாகத் தான் நாம் இருக்கின்றோம்…”

உயிர் பூமியிலே தோன்றி புழுவில் இருந்து பல கோடிச் சரீரங்களில் பட்சியாக பறவையாக மிருகமாக பாம்பாக தேளாக யானையாக புலியாக நரியாக நாயாக எத்தனையோ உடல்கள் பெற்ற நிலையில்
1.ஒவ்வொன்றிலும் தன்னைக் காத்துக் கொள்ள அதன் வழி கொண்டது… காத்திடும் உணர்வே விளைந்தது.
2.அந்தக் காத்திடும் உணர்வு கொண்டு மனிதனாக உருவாக்கியது உயிர்.

ஆகவே எத்தகைய தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும்
1.தீமையிலிருந்து விடுபடும் நிலையாக என் உடலாக எப்படி ஆக்கினாயோ
2.இந்தத் தீமையை நீக்கிய உணர்வின் நினைவெல்லாம் எனக்குள் வர வேண்டும்.

நான் எத்தனை துன்பங்களை பட்டேனோ… “துன்பங்களிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றேனோ” இதைப் போல எனது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்
1.எனக்குள் துன்பத்தையும் துயரத்தையும் வேதனையும் வெறுப்பையும் ஊட்டாது
2.அந்த நினைவெல்லாம் எனக்குள் துன்பத்தை நீக்கிய உணர்வின் சக்தியாக நான் பெற வேண்டும்.

அதைத் தான் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று சொல்வது…”

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ துன்பத்தைக் கடந்து என்னை மனிதனாக உருவாக்கினாயோ “அந்த நினைவெல்லாம் எனக்குள் வரவேண்டும்” என்று தான் நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் என்று பாடலைப் பாடுவது.

அதாவது
1.தீமைகளை நீக்கிடும் இந்த உடலான நிலைகள் இருந்து அந்த நினைவெல்லாம்
2.தீமைகளை நீக்கிடும் அந்த அருள் சக்தியாக என்னிலே வளர வேண்டும் என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்

உலகை எல்லாம் அறியக்கூடிய சக்தியை நீ எப்படிக் கொடுக்கின்றாயோ நான் நுகர்ந்த உணர்வை எனக்குள் அறிவிக்கின்றாயோ இதைப்போல
1.உன் உணர்வின் தன்மை எதுவோ உன் ஒளியின் தன்மை எதுவோ
2.என் உடலின் அணுக்களும் அவ்வழியே ஆக வேண்டும் என்று
3.எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்று உயிரிடம் வேண்டி கேட்கின்றோம்

நான் அதைச் செய்வேன். இதைச் செய்வேன் என்ற நிலையில் எண்ணம் கொண்டு உண்மைகளை உணராது பல எண்ணங்களில் தனது ஆசையைக் கூட்டினால் அதன் வழி வளரப்படும்பொழுது
1.எனக்குள் தீமை வராது தடுத்துக் கொள்ள ப
2.ல நினைவுகள் நமக்குள் வராதபடி நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதைத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாத பரிபக்குவமான நிலைகளை நான் பெற எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று நாம் வேண்டுகின்றோம்.

இவ்வாறு எண்ணும்பொழுது நமது உயிர் ஓம் நமச்சிவாய இத்தகைய நிலைகளை நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

நாம் பக்குவ நிலை பெற வேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வின் அணுவாக்கி அதன் உணர்வை உணவாக்கி அந்த உணர்வின் தன்மை நாம் நுகரப்படும் பொழுது
1.சிந்தித்துச் செயல்படும் திறனும்
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வும்
3.நாம் பக்குவப்படும் நிலையும் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே தான் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய். ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டச் சொல்கிறோம்.

நாம் எண்ணும் உணர்வின் தன்மை ஓம் நமச்சிவாய என்று உடலாக்கினாலும் அதன் உணர்வின் தன்மை அணுவின் கருவாக அணுவாகும் போது… அது உணவுக்காக உந்தப்படும் பொழுது… அந்த நினைவு பக்குவப்படும் உணர்வின் எண்ணங்கள் எனக்குள் உருவாகி… அதன் வழி “என்னைக் காத்திடும் அந்த அருள் நிலை பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று நாம் எதை எண்ணுகின்றோமா அதை நமது உயிர் உருவாக்குகின்றது என்று நாம் அறிவதற்குத் தான் ஈசனிடம் இந்த உணர்வினை வேண்டுகின்றோம்.

“துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபணுவை” நாம் பெற வேண்டும்

“துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபணுவை” நாம் பெற வேண்டும்

 

விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் பொழுது கடவுளை இப்பொழுது நீ காட்ட வேண்டும் என்று கேட்கின்றார்,

கடவுளைக் காட்ட முடியாது… நீ உணரலாம் என்று தான் அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார்…!
1.நீ நுகர்வது உன் உடலுக்குள் நின்று… அது உள் நின்று இயக்கும் கடவுள்தான்
2.அந்த உணர்ச்சியை ஊட்டுவது கடவுள்.
3.கடவுளை நீ உணர்ச்சி மூலமாகத் தான் பார்க்க முடியும்… நீ கண்ணில் பார்க்க முடியாது என்றார்.

அப்பொழுதுதான் விவேகானந்தர் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய பாடத்தையே திருப்பி எடுத்து இவர்களுடைய சுகபோகங்களுக்கு இப்பொழுது மாற்றிக் கொண்டு உள்ளார்கள்.

ஒவ்வொரு ஞானிகளும் தத்துவத்தை உரைக்கின்றனர்.
1.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு
2.பண்பு கொண்ட நிலைகள் உயர வேண்டும் என்று எண்ணு அந்த உணர்வே உனக்கு வழிகாட்டும்
3.அதன் வழியில் உனக்கு நல்வழி காட்டி அன்பை வளர்க்கச் செய்யும்… கடவுளை நீ அங்கே பார்க்கலாம்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அதே உணர்வு உனக்குள் உள் நின்று இயக்குகின்றது. அது கடவுளாக உன் எண்ணத்தைச் சீர்படுத்துகின்றது… நல்வழி காட்டுகின்றது பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது… பகைமையற்ற வாழ்க்கையை வாழுகின்றது.

தன் குடும்பத்தில் எப்படிப் பற்று வைக்க வேண்டும் என்றும் அரசியல் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் பக்தி மார்க்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஆலயத்தில் நீ எப்படி பண்புகளை சேர்க்க வேண்டும் என்றும் விவேகான்ந்தர் சொன்னார்.

அதையெல்லாம் படிக்கின்றார்கள் ஆனால் மூலையில் போட்டு வைத்து விடுகின்றார்கள்.

1.கோயிலுக்குச் சென்றால் கடவுளை நீ எப்படி வணங்க வேண்டும்…?
2.தெய்வத்தை நீ எப்படிப் பார்க்கின்றாய்…?
3.கடவுளை ஏப்படி நேசிக்கின்றாய்…?
4.எதன் வழி கடவுள் உன்னை இயக்குகின்றார்…? என்று தெளிவுறக் கூறியுள்ளார் விவேகானந்தர்.

அதையாவது நாம் இன்று எடுத்துள்ளோமா என்றால் இல்லை…!

அவரைப் பற்றிய புத்தகங்கள் பல வரும்… அதன் வழி பிழைப்புக்கு. விவேகானந்தரைப் பற்றிப் பெருமையான பேச்சுகளைப் பேசுவோம் ஆனால் உண்மை நிலைகளில் நாம் கடைபிடிக்கும் தன்மையை இழந்துள்ளோம்.

ஆகவே விஞ்ஞான உலகில் இன்று எங்கோ சென்று விட்டது. மரபு அணுக்களை வைத்து எப்படி எப்படிப் புதிது புதிதாக உருவாக்கலாம் என்று.

ஆனால் தீமையை அகற்றிய உணர்வின் தன்மை
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் நுகர்ந்தால்
2.அந்த உணர்வினை நமக்குள் உருவாக்கிப் பகைமையை மாற்றி
3.பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று விநாயகர் தத்துவத்தைக் கூட்டினான் அன்று அகஸ்தியன்.

அந்த மரபணுவை நாம் பெற முடியும்… ஏன் உங்களுக்கு இந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது…?

இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் இந்த பௌர்ணமி நாளன்று ஆன்மாக்களை மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்படி சொல்கிறோம்.
1.மூதாதையர்கள் அங்கே செல்லப்படும் பொழுது “நம்மைக் காத்திட வேண்டும் என்ற மரபணு” நம் தீமையை அகற்றி நம்மைக் காக்கும்.
2.ஒளி நிலை அடைந்த நிலைகள்… பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்… சுட்ட சாம்பலைக் கரைத்து விட்டு மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று விநாயகர் கோயிலுக்குச் சென்று மோட்ச தீபம் காட்டிவிட்டு வருவது அல்ல.‌

மனித உடலுக்குள் வந்த பகைமை உணர்வை மாற்றிவிட்டு ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அந்த ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் துருவ நட்சத்திரமாக…!
1.அனைவரும் இதை எளிதில் பெற முடியும்
2.அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும்
3.மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும்
4.மெய்ப்பொருள் காண முடியும்… இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்.

உணர்வின் அழுத்தத்தால் நுகரச்செய்து உணர்வின் அணுக்களை உங்களுக்குள் உருவாக்கிய நிலை கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் உங்களில் வரும் பகைமையை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை ஊட்டி, இனி பிறவியில்லா நிலை அடையலாம்,

குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம். பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம். பரிவான நிலைகளில் வாழவும் முடியும். பரிவால் வரும் தீமை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்கள்.

ஆகவே…
1.அந்த அகஸ்தியனின் மரபு அணுக்களைப் பெறுவதற்குத் தான்
2.அன்று விநாயக தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

கிரகணம்

கிரகணம்

 

மண்டலத்தில் ஜீவன் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கு இச்சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகி விடுகின்றன.

இஜ்ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எம் மண்டலத்தில் தோன்றியதோ அம்மண்டலத்தின் வளர்ச்சியுடனே இதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.

இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான் இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.

இந்நிலையில் சுழலும் மண்டலத்திற்கு “மாறிக் கிடைக்கும் சக்தி” எப்பொழுது எல்லாம் ஏற்படுகின்றது…?

இன்று நம் சூரியனைச் சுற்றிச் சுழன்றிடும் 48 மண்டலமுமே சூரியனைச் சுற்றிவரச் சில காலங்கள் கொள்கின்றன. இந்நிலையில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்றெல்லாம் சூரியனைச் சுற்றி வரும் இக்கோளங்கள் சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும் பொழுது குறுக்கே வருகின்றது.

அந்தச் சமயத்தில்
1.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராய்த் தாக்கிடாமல்
2.சூரியனைத் தாண்டி எக்கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப
3.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் ஒளி அலையின் மாற்றத்தினால்
4.சூரியனைத் தாண்டிச் செல்லும் அக்கோளத்தின் மறைப்பினால்
5.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள இவ்வொளி அலைகளை
6.இரவில் உள்ள நிலை போல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று
7.எம்மண்டலம் தாண்டிச் செல்கிறதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை கொண்டு
8.பூமியின் சக்தி நிலை இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் அக்காலக் கெடு நிலையிலேயே “பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது…”

நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருவது என்பதல்ல, எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு…!”

ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலை உண்டு.

1.ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம் செல்லும் நிலையிலும்
2.அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும்
3.ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு நிலையில் சேமித்த சக்தியின் தன்மை
4.இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும்…
5.அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும் மோதுண்ட நிலையில்
6.இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்திலும் அதன் அமிலத்தன்மை மாறு கொள்கின்றது.
7.அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே அதனுடைய இயற்கைக் குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.

சூரியனைத் தாண்டி ஓடும் மற்ற மண்டலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் தாண்டி ஓடும் சக்தியினால்… “எம்மண்டலம் சூரியனைத் தாண்டி ஓடுகின்றதோ” அம்மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின் தாக்குதல் “நம் பூமிக்கு ஏற்பட்ட அதிலிருந்து” இயற்கையிலேயே நற் சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.

ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?

ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?

 

காட்டுக்குச் சென்று தவம் இருக்கச் செல்வோரை எல்லாம் வாதாபி என்ற அரக்கனும் அவருடைய சகோதரனும் சேர்ந்து விருந்து கொடுப்பதாகச் சொல்லிக் கொன்று புசித்தவர்கள்.

“விருந்து கொடுப்பது” எங்களுடைய வழக்கம் என்று சொல்வார்கள். அதிலே ஒருவன் ஆடாக மாறி விடுவான். அடுத்தவன் அதை அறுத்துச் சமைத்து இந்த மாமிசத்தைச் சாப்பிட வேண்டும் என்று வந்தவருக்குக் கொடுப்பார்கள்.

சாப்பிட்டு முடிந்த பின் “வாடா வாதாபி” என்றால் வயிற்றைப் பிளந்து வெளி வருவான். இப்படிக் கொன்று… வருவோரை எல்லாம் அவர்கள் சாப்பிட்டுப் பழகியவர்கள்..

அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது இதே முறைப்படி அவர்கள் வரவேற்கிறார்கள். அகஸ்தியனோ, “நான் மாமிசத்தை சாப்பிடுவதில்லை” என்கிறான்.

இல்லை…! எங்கள் முறைப்படி விருந்தில் நீங்கள் அதைஸ் சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றான்.

நாங்கள் வருபவருக்கு மரியாதை செலுத்துகின்றோம், நீங்கள் சாப்பிடுங்கள்…! என்று கூறி வாதாபி ஆடாகப் போய்விட்டான். அறுத்துச் சமைத்து இவனுக்கு கொடுத்தான்.

அகஸ்தியனும் நன்றாக ருசித்து சாப்பிட்டான்…! அகஸ்தியனுக்குத் தெரியும்… தெரிந்ததனால் சாப்பிட்டான்…!

“வாடா வாதாபி” என்கின்றான் அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிப் போய்விட்டான் என்கின்றான் அகஸ்தியன்.

ஆகா… அப்படி ஆகிவிட்டதா…? பாருடா… உன்னைக் கொன்று நான் விழுங்கப் போகின்றேன் என்றான்.

அப்பொழுது அகஸ்தியன் கண்ணிலே பார்த்தான்… அவனை எரித்து விட்டான்.

ஆனால் அதற்கு முன்னாடி தவ யோகிகள் தவம் செய்தவர்களை எல்லாம் இரையாக்கி ரொம்ப பேரைத் தின்றுவிட்டார்கள்.

அப்பொழுது இதற்காக வேண்டி இராமாயணம் மகாபாரதம் எழுதுபவர்கள் சொல்கின்றார்கள், “அகஸ்தியன் கணபதியைத் தொழுது கொண்டு இருந்தான்…” அதனால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று…!

கணபதி என்றால் எது…?
1.இந்த பிரபஞ்சத்தின் உணர்வுகள் அனைத்தையும் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
2,அவன் எண்ணத்தைக் கொண்டு ஆட்சி செய்து தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்று
3.அதற்குக் “கணபதி” என்று காரணப் பெயரை வைக்கின்றான்.

ராஜாஜி எழுதிய நூலிலும்… கணபதியை வணங்கிக் கொண்டிருப்பதனால், அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.

கண ஹோமம் செய்தோம் என்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கிடைக்கும். கண ஹோமம் செய்தால் உங்களுக்கு வல்லமை கிடைக்கும் உங்கள் பாவம் அனைத்தும் நீங்கும். யாரும் ஒன்றும் தீங்கு செய்ய முடியாது என்று “இதற்குக் காரணம் காட்டுவதற்காக” இப்படி எழுதுகிறார்கள். ராஜாஜி படித்தவர் அரசியல்வாதி தான் உலக ஞானத்தைப் பெற்றவர் தான்.

ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பல நூல்களில் வடிவமைத்து உலக ஞானத்தைக் கற்றவர் நேரு.

பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் நேரு. அந்த நிலைகளில் வளர்ந்தாலும் இந்த உலக உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன்.
1.இது எல்லாம் பொய்… இப்படிச் செயல்படுத்த கூடியது அனைத்தும் பொய்யானது
2.இவையெல்லாம் தவறான செயல் என்று சுட்டிக்காட்டினார் நேரு.

ஆனால் ராஜாஜி ரொம்ப சாணக்கியமாகச் சொல்கின்றார். ராமாயணத்திற்கும் மகாபாரத்திற்கும் ஜீவன் ஊட்டி மக்கள் இதைப் பின்பற்றினால் இப்படி இருக்கும் என்று ஜீவன் கொடுத்தவர் ராஜாஜி… ஆனால் வக்கீல்… வல்லமை பெற்றவர்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் இயற்கையின் உண்மையின் நிலைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அறியாமை என்ற நிலையில் தன் இனம் என்ற நிலைகள் கொண்டு…
1.இனத்தை பிரித்து வாழும் தன்மை தான் வந்ததே தவிர தன் உயிரை மதித்து நடக்கும்…
2.அருள் ஞானிகள் கூட்டிய நிலைகள் இங்கே வருவதில்லை.
3.அதைத்தான் அன்று சொன்னான் நேரு.

கடவுள் எப்படி இருக்கின்றான் என்ற நிலைகள் கொண்டு… என்னை யாரும் வணங்கிட வேண்டாம் இறந்த பின் என் சாம்பலைத் தூவி… விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நிலைகளில் விமானத்தில் கொண்டு போய் இதையெல்லாம் தெளிக்கச் சொன்னார்.

ஏன்…?

1.கங்கையில் கொண்டு போய்க் கரைத்தால் அங்கு பாவம் சேர்ந்து விடும்…
2.அங்கே கரைக்க வேண்டாம்..
3.மாணவர் படிக்கக் கூடிய இடங்களில் நீங்கள் தூவினீர்கள் என்றால் இந்த அருள் ஞானமாவது அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை
4.“கற்றுணர்ந்தவன்… தெரிந்து கொண்டவன்…” இதைச் சொன்னான்.

நேரு தன் சாம்பலைக் கங்கையில் கரைக்கச் சொல்லவில்லை. அங்கே கரைத்தால் பாவம் வந்துவிடும் என்று சொன்னார். சாம்பலை வயல் வெளியில் தூவப்படும் போது உரமாகி அந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு ஞானம் வரட்டும்… வயல் வெளியில் தூவுங்கள் என்று கூறுகின்றார்.

நேரு அரசியல் பண்புகளைக் கற்று உணர்ந்தாலும் நாட்டினை மீட்டு தன் சொத்தை இழந்தவன் தான்.
1.கடவுள் என்ற நிலையில் உண்மையை உணர்ந்தான்
2.ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்பு வரவேண்டும் என்றான்.

பஞ்சசீலக் கொள்கையில் கம்யூனிசத்தை மாற்றி அமைத்தார். ஏனென்றால் அதிலே இராஜ தந்திரமாகச் செய்யப்படும் பொழுது “தப்பான நிலைகளில் வருகின்றார்கள்” என்று உணர்ச்சியின் வேகப்பட்டு கை கால் அங்கங்கள் இழக்கப்பட்டான்… மடிந்தான்.

அவனைப் பற்றி சிந்திப்போர் யாருமில்லை. அவன் பெயரையே எடுக்க வேண்டும் என்கின்றார்கள் இன்று.

பண்டிட் மோதிலால் நேரு அவ்வளவு பெரிய சொத்தை வைத்திருந்தார். அப்பா கூடச் சண்டை போட்டான். நீங்கள் செய்வதெல்லாம் அதர்மம் என்று. யார்..? நேரு. நீ கோடி கோடி சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றாய்… இது எல்லாம் ஆகாது என்றார்.

நாட்டிற்கு செய்யக்கூடிய சேவைக்காகத் சகல சொத்தையும் இழந்தார்.

அன்று விவேகானந்தர் சொன்னது போல்
1.கடவுளை நீ எங்கேயும் பார்க்க வேண்டாம்
2.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக மதி
3.அவன் அமர்ந்திருக்கும் அந்த ஆலயம் என்று நீ எண்ணு… ஆகவே நீ அவனை மதி என்று நேரு சொன்னார்.

அவர் சொல்லை யாரும் மதிக்கவில்லை.

மண்டல வளர்ச்சி

மண்டல வளர்ச்சி

 

மண்டல வளர்ச்சி நிலை தோன்றிய நிலையை ஆரம்ப பாட வரிசையில் உணர்த்திட்டால்தான் இன்றளவு உணர்த்திய பாட நிலைக்கு ஜீவன் அளித்த நிலை தோன்றிடும்.

1.எறும்பைக் காட்டிலும் சிறிய நுண்ணிய உயிரணு கொண்ட உயிராத்மா
2.அவ்வுயிரணுவுடன் மற்றோர் உயிராத்மாவின் சேர்க்கையில் ஒன்றுடன் ஒன்று ஜீவ சக்தி பின்னிய நிலையில் இரண்டும் ஐக்கியப்பட்டு
3.தன் ஆவி நிலையுடன் பால்வெளி மண்டலத்தின் பல நிலைகள் கொண்ட ஆவியான அமில சக்திகள்
4.இவ்விரண்டு ஆத்மாவுடன் இதன் சேர்க்கையுடன் ஆவியாய் மோதுண்டு
5.இதன் ஈர்ப்பு நிலையுடன் இதன் வட்டத்திலேயே இவ்வாத்ம அமிலமுடன் பல சக்தி நிலைகள் கூடி
6.இவ் ஆவியான அமிலமே உறைந்த நிலையில் திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
7.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் கலந்து வந்த உயிர்த்துடிப்புக் கொண்ட மற்ற உயிரணுக்களின் இவ் ஈர்ப்பு நிலையில் சிக்கி
8.இதன் வட்டத்திற்குள் வந்த பிறகு இதன் ஆவி அமிலமும் இச் சுழற்சியில் காற்றும் நீரும் படும் நிலையில்
9.திடப்பொருளாய் கெட்டிப்பட்ட உயிர்த்துடிப்புக் கொண்ட திடமாய் ஆகின்றது.

இதன் வளர்ச்சியே அமிலத்தின் ஈர்ப்பாய் அதிகப்படுகின்றது. அமிலத்தை ஈர்க்கும் சக்தி இவ்விரண்டு ஆத்மாவின் உயிர் சக்தியுடன் உட்சென்ற உயிரணுக்களின் பெருக்கமும் இச்சிறிய கோளமாய் உருப்பெற்ற இதன் ஈர்ப்பின் வட்டத்தில்… இதற்கு உணவாய் “இவ்வுயிரணுக்களின் சக்தி தான்” இது வளரும் நிலைக்கு உதவுகின்றது.

உயிரணு இவ்வட்டத்திற்குள் வந்தவுடன் அதன் சக்தியை உணவாய் ஈர்த்து அதன் சக்தியை உண்டு அதில் வெளிப்பட்ட அழிவு நிலை ஆவியாய் இச்சிறிய மண்டலமாய் வளரப் பெறும் மண்டலம் வெளிப்படுகிறது.

இதன் தொடர்ச்சியிலேயே ஆரம்பத்தில் எவ்வுயிரணுவின் சக்தியை உண்டு மலமாக்கி அதன் ஆவியை வெளிப்படுத்திப் பழக்கப்பட்டு வாழ்ந்ததோ அதே நிலையில் இம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையைப் பொறுத்த அமிலங்களை ஈர்த்து ஈர்த்து அதன் தொடர்ச்சியிலேயே சிறுகச் சிறுக வளர்ச்சி கொள்கிறது.

வளர்ச்சியில் தன் சுழலும் வேகத்தினால் பால்வெளி மண்டலத்தில் இச்சேமித்த அமில கோளமுடன் இது சுழலும் வேகத்தில் இதன் ஈர்ப்பில்
1.இதன் அமிலத்தன்மையுடைய இதன் வர்க்க அமிலமும் மோதி மோதி
2.ஆவியாய் அமிலமாய் திடமாக வளர்ந்து கொண்டே கோளமாய் உருக்கொள்கின்றது.

இதன் நிலையில் உயிரணுக்களின் சேர்க்கையும் ஏற்பட்ட நிலையில் இவ்வுயிரணுக்களின் நிலையும் மற்ற அமில சக்தியின் நிலையும் இதனுடன் மோதுண்டு வளர்ச்சி பெறும் நிலையில் “இக்கோளத்தின் துடிப்பு நிலை துரிதம் கொள்கின்றது…”

இக்கோளம் உண்டு கழிக்கும் கழிவின் உஷ்ணத்தினால் ஒன்று நூறாய் நூறு ஆயிரமாய் ஆயிரம் கோடியாய் பல கோடி உயிரணுக்கள் இக்கோளம் பந்து நிலைக்கு வருவதற்குள் வளர்ச்சியில் பெருகி விடுகின்றன.

ஒன்றிற்கு உணவு ஒன்று அளிக்கும் சக்தியின் கூட்டினால் இக்கோளத்துடன் உயிரணுக்களின் வளர்ச்சியினால் தான்… அதனதன் ஆகாரத்தை அது அது எடுத்து உண்டு வெளிப்படுத்தும் சுழலில் இருந்து… அதன் உஷ்ண அலையில் அதன் சுவாச நிலைக்கொப்ப அக்கழிவிலிருந்தே பல உயிரணுக்கள் தோன்றி… இந்நிலையின் தொடர் வளர்ச்சியினால் இக்காற்றுடன் கலந்த நீரும் இவற்றிற்கு உரமாய் அமைய… இதன் தொடர்ச்சியிலேயே இக்கோளம் இன்று நாம் காண்கின்றோமே நட்சத்திர மண்டலமாய்… அவற்றிற்கும் மேல் பெரிய கோளமாய் உருப்பெற்ற பின்பே “தாவர வளர்ச்சி” நிலை இக்கோளங்களில் வளர்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுணர்ந்த நிலைபோல் தான் ஆரம்ப கதியில் இக்கோளத்திற்கு மேல் “பாசி படிந்த நிலைபோல் பச்சையான அமிலத்தில்” இக்கோளத்துடன் ஆங்காங்கு படர்ந்து அந்நிலையின் வளர்ச்சித் தொடரில் அதன் சக்தி உருப்பெறும் மண்டலத்திற்கு உணவாய்ச் சென்று… அதிலிருந்து வெளிப்படும் கழிவின் நிலையிலிருந்து “மாறு கொண்ட காளான் நிலைக்கு” வளர்ச்சி பெறுகிறது.

அந்நிலையின் தொடரில் அதனின் நிலையும் மாறு கொண்டு உள்ள தாவர நிலை அழுகிய நிலையில் அக்கோளத்துடன் படிந்து அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையினால் மற்ற தாவர இன வர்க்கமான புல் பூண்டு தோன்றி… இதன் வளர்ச்சி நிலையிலேயே இதன் ஆவியின் சுவாச நிலைக்கொப்ப மாறு கொண்ட… ஒவ்வொரு தாவர வர்க்கங்கள் வளரும் பக்குவ நிலையை அக்கோளம் பெறுகின்றது.

இந்நிலைக்கு வருவதற்குள் இக்கோளத்தின் சுழற்சி வேகம் உயிரணுக்களின் பெருக்கத்தினால் சேமிக்கும் அமில சக்தியின் உறையும் நிலையும் கூடிக்கூடி… இக்கோளத்தின் வளர்ச்சியை சக்தி கொண்ட மண்டலத் தன்மைக்கு உருப்பெற்று விடுகின்றது.

இன்று சந்திரனாய் நாம் காணும் சந்திர மண்டலத்தின் அளவு விகித நிலைப்படி உருக்கொள்கின்றது.

1.இந்நிலையில் உருப் பெறவே பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆகின்றன.
2.இந்நிலையின் வளர்ச்சிக்குப் பின் தான் ஜீவராசிகள் தோன்றும் நிலை பெறுகின்றது.

ஜீவராசிகள் தோன்றி வாழ்ந்திட தாவர வர்க்கங்களின் சுவாச நிலைக்கு வேண்டிய நீரின் சக்திக்கு மேல் “ஜீவராசிகளுக்கு அதிக சக்தி தேவை…”

இத்தாவர வளர்ச்சியின் நிலையிலுள்ள மண்டலமே பல உரு நிலைகள் மாறி மாறிப் பல ஆயிரம் காலங்கள் சென்ற பிறகுதான் அதன் இன வர்க்கத் தொடர்ச்சியில்
1.ஒவ்வொரு தாவரம் தோன்றி அது வளர்ந்து வாழ்ந்து அழுகிய நிலையில் பூமியில் படிந்து
2.அதன் வெக்கையில் தோன்றிய மற்ற உயிரணுவின் சக்தியினால் மாறு கொண்ட தாவர வர்க்கம் உருப் பெறுகின்றது.

ஓர் இன வர்க்க வளர்ச்சியிலிருந்து அது வளர்ந்து அதன் சக்தி மக்கி அதையே உணவாய் இப்பூமி ஈர்த்து அது கக்கும் கழிவிலிருந்து அதன் சுவாச நிலையில் பல காலம் அதே இன வர்க்கத் தொடர்தான் வளர்ச்சி கொண்ட நிலையில் வாழ்ந்த பிறகு…
1.இத்தொடருடன் மற்ற உயிர் அணுக்களின் சக்தி அம் மண்டலத்தின் காற்றுடன் மோதுண்ட பிறகு
2.மாறு கொண்ட வளர்ச்சி நிலை பெற்ற தாவரம் மற்ற இடத்தில் தோன்றுகின்றது.

இதே தொடரில் தோன்றும் நிலையில்தான் தாவர வர்க்கத்திலிருந்து உயிரினமாய் இக்கோளமுடன் கோளம் சேமிக்கும் அமிலத்தினால் கல்லும் மண்ணும் வளர்ச்சியுற்ற நிலையில் இருந்து
1.கல்லாய் உருப்பெற்ற திடப்பொருளாய் உறைந்த அமிலம் கொண்ட அதன் உஷ்ண நிலை அலையும்
2.தாவரத்தின் உஷ்ண அலையும் மோதுண்ட சக்தி நிலையில்
3.உருப்பெறும் உயிரணுவான ஜீவத்துடிப்புக் கொண்ட ஜீவராசியாய் ஓடுகள் போன்ற நிலை கொண்ட
4.நத்தை ஆமை இந்நிலை கொண்ட ஜீவராசிகள்தான் இப்பூமியில் முதலில் தோன்றிய ஜீவராசிகள்.

கல்லில் இருந்தும் மண்ணிலிருந்தும் அதன் உஷ்ண அலையின் வெக்கையில் இஜ்ஜீவராசிகள் தோன்றிச் சில தாவர நிலைகளை உணவாய் உண்டு… இவை கழித்த மலத்தில் இருந்து பல உயிரணுக்கள் ஜீவன் கொண்ட நிலையில் தவளையாய் மற்றும் சில நிலை கொண்ட ஜீவராசிகள் தோன்றின.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து பல உயிரணுக்கள் அதன் சுவாச நிலைக்கொப்பப் பல ஆயிரம் ஆண்டுகள் ஒத்த நிலையின் வளர்ச்சியிலேயே வளர்ந்து கொண்டே வருகின்றது.

இதன் தொடர்தான் எல்லாமே…!

“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்

“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிப் பழகுதல் வேண்டும். இது மனிதன் ஒருவனால் தான் முடியும்.
1.அதிகாலையில் நாம் படுக்கையிலிருந்து அதை எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.குளித்துவிட்டு நான் பூஜை அறையில் போய் உட்கார்ந்து என்னமோ எடுக்கப் போகிறேன் என்று எல்லாம் நினைக்க வேண்டியது இல்லை.
3.கண் விழித்தவுடனே தியானத்தைச் செய்யுங்கள்.

முடிந்த பிற்பாடு… அப்புறம் வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் பூஜை அறையில் உட்கார்ந்து பழகுங்கள். அங்கே நல்ல நல்ல படங்களை வைத்திருப்போம். அந்தக் குணத்தின் சிறப்புகளை எண்ணிப் பாருங்கள்.

1.இலட்சுமி என்றால் எல்லாவற்றையும் வளர்க்கக்கூடிய நிலைகள்
2.காளி என்றால் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றது
3.சரஸ்வதி என்றால் சர்வ ஞானத்தையும் பெருக்கக்கூடியது,
4.முருகன் என்றால் தீமையை அகற்றி மெய்ப்பொருளை காணும் வல்லமை பெற்றது.

இந்த மாதிரி நற்குணங்களை எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஆனால் பூஜை செய்து சூட தீப ஆராதனை எல்லாம் காட்டிவிட்டு… நான் உனக்குத் தினமும் சூட தீபாராதனை காட்டுகின்றேன்… என்னை ஏன் நீ இப்படி சோதிக்கின்றாய்…? என்று உங்கள் கஷ்டத்தை எல்லாம் சொன்னால் எது உருவாகும்…?

சாமி படங்கள் எதற்காக வீட்டில் வைத்திருக்கின்றோம்…?
1.அந்த தெய்வ குணங்களின் உணர்வை நாம் நுகர்வதற்குத் தான்.
2.அங்கு போய் சூட தீப ஆராதனையைக் காட்டி விட்டு இப்படி எல்லாம் இருக்கின்றது என்று வேதனைப்படுவதற்கல்ல.

அதே சமயத்தில் சிறு குறைகள் வந்துவிட்டால் போதும் கர்ப்பிணிகளுக்கு. அந்த படத்தை பார்த்து இதே போல் அரும்பெரும் சக்தி என் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பதற்கு மாறாக… நான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து என் குழந்தை என்னை இப்படிப் பேசுகின்றான்… எங்கள் மாமியார் இப்படி பேசுகின்றார்… என் கணவர் இப்படி பேசுகின்றார்… இப்படி எல்லாம் தொல்லையாக இருக்கின்றதே…! என்று அழுது கொண்டு இருப்பார்கள் படத்தைப் பார்த்து.

அப்பொழுது அந்த கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு எப்படி இருக்கும்…? படம் எதற்காக வேண்டி வைக்கின்றீர்கள்…?

ஆக மறைமுகமாக இயக்கும் குணங்களின் சிறப்புகளைக் காவியமாகப் படைத்து சரஸ்வதியின் நிலை இப்படி… இலட்சுமியின் நிலை இப்படி… முருகனின் நிலை இப்படி… கணபதியின் நிலை இப்படி… சிவனின் நிலை இப்படி…! என்று கதைகளாக எழுதி வைத்துள்ளார்கள்.

அதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் அங்கே போய் அழுது வரம் கேட்டால் என்ன செய்யும்…?
1.அழுகும் உணர்வே இங்கே வரும்…
2.எல்லோரையும் அழுக வைத்துக் கொண்டுதான் இருப்பீர்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் உருவாக்கும். ஆகவே நாம் எதை செய்ய வேண்டும்…?

நமது ஞானிகள் கொடுத்த தத்துவத்தின் முறைப்படி நாம் நுகர்ந்தால் அத்தகைய உணர்வின் அணுக்களாகி நமக்குள் தெளிவான நிலையும் அடுத்து… பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

இந்த நம்பிக்கைகள் வரவேண்டும்.

இன்றைய பழக்கத்தில் நாம் எதற்கெடுத்தாலும் சாமியாரைப் பார்க்க ஓடுகின்றோம், ஜோசியம் பார்க்க ஓடுகின்றோம்… ஜாதகத்தைப் பார்க்க ஓடுகின்றோம்.

ஜாதகமும் ஜோசியமும் மனிதருக்கு அல்ல.

ஆகவே
1.மதி கொண்டு விதியை மாற்றி அமைக்க வேண்டும்
2.நாம் வேதனை வேதனை என்று பார்த்துக் கொண்டு அதை விதியாக மாற்றிடாதபடி,…
3.அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு அந்த மதி கொண்டு விதியை மாற்றி அமைக்கலாம்.

எல்லோரும் அருள் ஞானம் பெற்று “ஒற்றுமையுடன் வாழ்வார்கள்” என்ற உணர்வினை நாம் நமக்குள் வளர்த்துப் பழக வேண்டுமே தவிர தீமைகளை வளர்த்துவிடக் கூடாது.

மெய்ஞானச் சுடர்

மெய்ஞானச் சுடர்

 

“மனதின் சக்தியே” பல கோடி ரிஷிகளின் மெய்ஞானச் சுடராக இன்று இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காச் செயல் திறன் செய்விக்கும் ஆற்றல் கொண்ட “மாமகரிஷிகளின் மெய்ஞானச் சுடரொளியாகும்…”

மலர் மலர்ந்து மணம் பரப்புகின்றது… காய் கனிந்து மணம் வீசுகின்றது. மலர்ந்த நாள் மலருக்கு மணம்… அடுத்த நாள் வாடிய மலரின் துர்வாடை வீசுகின்றது… கனியின் நிலையும் அதுவே.

செயல்பாட்டின் தன்மையில் ஒவ்வொரு செயலிலும் பருவம் பக்குவமாகி மணமாகவும் அடுத்து அதன் கதி துர்நாற்றமாகவும் ஆகிவிடுகின்றது.

1.நமது மனம் மலரின் நறுமணத்தை ஏற்கின்றது… துர்நாற்றத்தை வெறுக்கின்றது
2.நிகழும் செயல் யாவும் இரு நிலை கொண்ட செயல்பாடு தான்.

என்றாலும்… ஏற்கும் நிலைக்காக மனிதன் பக்குவமாக மலரின் வாசனைகளைத் திரவமாகச் (ESSENCE) செயல்பாட்டிற்கு எடுத்துப் பக்குவ கதிக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

மனித ஆற்றலின் செயல்பாட்டில்… தனக்கொத்ததைச் செய்விக்கும் திறன் ஆய்வின் மூலக்கருவே தன் “ஆத்மாவின் விழிப்பின் சுடர்தான்…”

1.மனித சக்தியின் உண்மையை உணர்ந்து
2.மகரிஷிகளின் விழிப்பின் சுடர் ஒளிச் சுடர்களாக மண்டல இயக்கத்தில் செயலாகும் ஒளி சக்தி
3.எப்படி பூமியின் இயக்கத்திற்குச் செயலுக்கு வருகின்றது என்பதை
4.மெய்ஞானச் சுடரிலிருந்து ஒவ்வொரு ஆத்மாவும் விழிப்பெய்தல் வேண்டும்.

சில வகை மீன்கள் அதனுடைய உயிர் சக்தியின் அமைப்பில் மூலத் தொடரிலேயே ஒவ்வொரு செதிலிலும் “மின் காந்த ஒளியை வெளிப்படுத்தும் ஒளி மீன்களாக” பல வகையில் சில இடங்களில் உண்டு.

நீரிலிருந்து மின்சாரம் எப்படிப் பெறப்படுகின்றதோ அதைப் போன்றே
1.இம்மீன்களின் உயிரணுக்கள் பெற்ற ஒளி காந்த மிகுதியால்
2.மின் ஒளியைப் போன்று மின்னக்கூடிய தன்மை அதற்கு ஏற்படுகின்றது.

அதைப் போன்று மனித உணர்வின் எண்ணத்தில் நறுமணத்தை மனம் ஏற்பது போன்று
1.நற்குணமான நற்சக்தியை மட்டும் எண்ணத்தின் செயல் ஏற்று
2.தீய உணர்வு எண்ணத்தை இச்சரீர உணர்வு எண்ணத்தில் இருந்து அகற்றி
3.கோள்களின் தொடர்புடன் தெய்வ குணமுடன் ஞானத்தின் ஒளியை மனதின் எண்ணம் செலுத்தும் பொழுது தான்
4.எண்ணத்திற்கொப்ப ஈர்ப்பின் அமிலம் சரீரத்தில் பாயும்.

உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் “மெய் ஞான குணமுடன்” தன் ஞானத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாக “விழிப்பெய்திட” இங்கே கொடுக்கும் பாடநிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

பல ரிஷிகளின் செயல் தன்மை தான் “மெய்ஞானச் சுடராக” இங்கே சுடர்ந்து கொண்டிருக்கின்றது.
1.இத்தத்துவத்தின் உண்மை அறிந்து அந்த மகரிஷிகளுக்கு ஏற்பட்ட அனுபவ வளர்ச்சியை
2.மகரிஷிகளின் ஒளிச்சுடர் கொண்டு அவர்கள் ஒளிபெற்ற உண்மைதனை
3.மனித அறிவின் விவேகத்தால் ஒவ்வொருவரும் ஜெபம் கொண்ட தியானத்தால் ஒளிச்சுடர் பெறலாம்.