
நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை
மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளை நாம் பதிவாக்கி வைத்துள்ளோம். கோபப்பட்டவரை வேதனைப்பட்டவரை நோய்வாய்ப்பட்டவரை இது போன்று எத்தனை வகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோமோ அவையெல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறிவிடுகின்றது.
இருந்தாலும் அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அலைகளாக நம் புமியிலே பரவுகின்றது.
1.அவ்வாறு பரவி இருப்பது நம் உடலில் அணுக்களாக மாறிவிட்டால் அது உணவுக்காக நம் உடலில் உணர்ச்சிகளை உந்தும்.
2.அப்படி உணர்ச்சிகளை உந்தினால் நம் முன் இருப்பதை அது கவரும்.
அதாவது செடி கொடிகள் தன் சத்தினை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்ந்தால் நாம் சுவாசிக்க நேர்கின்றது.
1.சுவாசித்தால் அவர்கள் என்னென்ன சங்கடப்பட்டார்களோ அது எந்தெந்த நிலையோ நம்மை அறியாதபடியே சோர்வடையும் நிலைகள் வரும்.
2.அத்தகைய சோர்வடையும் நிலைகள் வந்தால் இரத்த நாளங்களில் கலந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.
3.இப்படி நம்மை அறியாமலே சில நேரங்களில் சிந்தனை இல்லாதபடியே இது போன்ற சிந்தனைகள் வரும்… தியானம் செய்யும் பொழுது.
சிலரிடம் அதிகப் பற்றுடன் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் அவர்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அதை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து விட்டால் நாம் தியானிக்கும் நேரத்திலே நம்மை அறியாமலே அவருடைய எண்ணங்கள் நமக்குள் வரும்.
வியாபாரத்தில் ஏமாற்றி இருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகளை நாம் பதிவு செய்திருப்போம். அப்படிப் பதிவு செய்திருந்தால் நமக்குள் ஏமாற்றம் அடைந்த உணர்வுகள் இருப்பினும் இந்த உணர்வுகளுக்கு எல்லாம் வலு அதிகம்.
தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலும்… இந்த விஷம் கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது “நம் ஆன்மாவில் அதிகமாகச் சேர்கின்றது…”
அதைச் சுவாசித்தோம் என்றால் நம்மை அறியாமலே இயக்கும். நாம் நினைப்பது துருவ மகரிஷி என்று…! ஆனால் அவருடைய உணர்வுகள் தான் அதிகமாக வரும்.
1.அந்த மாதிரி நினைவு வந்தாலும் கண்களை மூடித் தியானித்துக் கொண்டிருக்கிருக்கும் பொழுது உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவை இணைக்க வேண்டும்.
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று அப்படியே கண்களை மூட வேண்டும்.
இப்படி அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துவிட்டால் மற்றவருடைய உணர்வுகளை இழுப்பது குறையும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் போது இத்தகைய நிலை வந்தால் இதைப் போன்று நாம் சமாளித்துப் பழக வேண்டும்.
தீமை விளைவிக்கும் உணர்வுகளுக்கு நாம் நுகர்ந்த உணர்வு ரத்த நாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து… அதாவது
1.நம் உடலில் உள்ள வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அந்த அணுக்களுக்கு
2.இரத்த நாளங்களில் துருவங்கள் நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியைக் கலக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும்.
நல்ல குணங்களுக்கொ மற்ற நிலைகளுக்கோ பிற உணர்வு நம்மைத் தடைப்படுத்துவது போல நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை கண்ணைத் திறந்து ஏங்கி சிறிது நேரம் உள்ளே செலுத்தினோம் என்றால்… ரத்தங்களிலே கலந்த பின் அந்த அணுக்களின் செயலை இந்த வலுவான நிலைகள் அதைத் தடைப்படுத்தும்.
இப்படி நாம் மாற்றிப் பழக வேண்டும்.
பலருடைய உணர்வுகள் இருக்கும் பொழுது இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின் அந்த அலைகளை எடுத்து நமக்குள் ஆன்மாவாக ஆனபின் இதுதான் முன்னணியில் வருகின்றது. நாம் தியானிக்கும் நிலையை மாற்றிவிடும்.
நாம் தியானித்துக் கொண்டே இருப்போம். திடீரென்று திசை மாறிச் சென்றுவிடும்.
இதே போலத் தான் நம் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தினோம் என்றால் அதனுடைய உணர்வுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கிவிடும்.
1.இப்படி நாம் அதை ஒடுக்கி ஒடுக்கி அருள் உணர்வுகளை பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.தியானம் செய்யும் பொழுது நாம் பழக வேண்டியது முக்கியமான பயிற்சி இது.
3.தீமை செய்யும் அணுக்கள் அனைத்தும் நல்லதாக மாறத் தொடங்குகிறது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.