அகஸ்தியன் நுகர்ந்த மின்னலின் ஆற்றல்கள்

அகஸ்தியன் நுகர்ந்த மின்னலின் ஆற்றல்கள்

 

நஞ்சினை முறித்திடும் பல பல தாவர இனச் சத்துக்களைத் தாய் தன் உடலில் பூசிக் கொண்டதால் அந்தத் தாய் கருவில் இருக்கக்கூடிய குழந்தை (அகஸ்தியன்) நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றது.
1.அது பிறந்த பின் சூரியனைப் பார்த்து அந்த உணர்வினை நுகர்கின்றது.
2.சூரியனிலிருந்து வரக்கூடிய விஷத்தன்மை இந்தக் குழந்தையைப் பாதிப்பதில்லை.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது மின்னலாக மாறுகின்றது.

அந்த மின்னலின் தன்மை வேகமாக வந்தாலும்
1.அந்தக் குழந்தை கண்களுக்கு அது அடங்கி மகிழ்ச்சியூட்டும் நிலைகளாக அமைகிறது
2,மேலும் அந்த மின்னலின் செயலாக்கங்களைப் பற்றியும்
3.எந்த நட்சத்திரம் எது எதிலிருந்து வருகின்றது…? எது எதனுடன் மோதுகின்றது என்ற நிலையையும்
3.அறியும் தன்மை பெறுகின்றான் குழந்தைப் பருவத்திலேயே அகஸ்தியன்.

உதாரணமாக… குளவி ஒரு புழுவை எடுத்துத் தீண்டி தன் இனம் என்ற நிலையில் அதைப் பெருக்கச் செய்கின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூட்டி மண்ணை எடுத்து வந்து ஒரு கூட்டை அமைக்கின்றது.

ஒரு புழுவை எடுக்கின்றது தன் விஷத்தைப் பாய்ச்சுகின்றது, கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது.
1.இந்த உணர்வின் தன்மை தாக்கிய பின்
2.புழுவின் “உயிரின் துடிப்பு” அதிகரிக்கின்றது.

புழுவின் உணர்வுகள் அது துடிப்பின் தன்மை கம்மி ஆனது. ஆனால்
1.குளவி கொட்டிப் புழுவின் உயிர் துடிப்பு அதிகமாகப்படும் போது
2.அந்த விஷத்தன்மை புழுவின் அணுக்களை அதிகமாகத் துடிக்கச் செய்யும் பொழுது சுருங்கி விடுகின்றது.
3.சுருங்கிய உணர்வு கொண்டு (விஷத்தைக் கொடிய குளவி எப்படி முதலில் உருவானதோ) அந்தக் குளவியின் ரூபமாக மாற்றி விடுகின்றது
4.குளவியின் விஷத்தின் தன்மை இதனுடைய கலவையை இப்படி மாற்றி விடுகின்றது.

இதைப் போல தான் விஷத்தின் தன்மை கொண்டு தனக்குள் அடக்கிடும் நிலை பெற்ற இந்த அகஸ்தியன்
1.மின்னலின் ஒளிக் கற்றைகளை அவன் நுகர்கின்றான்
2.ந்த உணர்வின் தன்மை தனக்குள் வரப்படும் பொழுது இந்த உடல் பெறும் உணர்வுகளைச் சுருக்குகின்றது… உணர்வின் தன்மை வளர்க்கின்றது.

ஆகையினால் தான் அந்த அகஸ்தியனை மிகவும் குள்ளமாகப் போட்டு‌ காட்டி இருப்பார்கள்…!
1.தசைகள் வளர்ச்சி கம்மி…
2.”உணர்வின் அணுக்களின் சக்தி வீரியமடைந்தது…!” என்ற நிலையை இங்கே தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

ஆகவே நட்சத்திரங்களிலிருந்து மின்னல்கள் வருவதைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்தச் சக்தியால் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் வீரியத் தன்மை பெறுகின்றது.

எதனை நுகர்ந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தி கிடைக்கின்றது என்பதை அறிந்து கொள்கின்றான். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

(தாய் கருவிலிருக்கும் போது) அவன் எத்தகைய விஷத்தன்மையை எந்தத் தாவர இனங்களிலிருந்து நுகர்ந்தானோ அதனின் இயக்கச் சக்திகளை எல்லாம் அறிந்துணர்ந்தவன் ஆகின்றான்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் நாமும் பெற வேண்டும்.

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே நம் பூமிக்குள்ள கடலும் நீரும்தான்

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே நம் பூமிக்குள்ள கடலும் நீரும்தான்

 

நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வடதுருவ, தென்துருவக் கடல்களின் நிலையினால் இப்பூமி முழுவதற்குமே ஆங்காங்குள்ள நீர்நிலைகளும், ஆறு குளங்களும் இப்பூமியில் பெய்திடும் மழையின் நிலையும் கடல்களினால் தான் இப்பூமி முழுவதற்குமே நீர் நிலை பெறும் சக்தி வந்தது.
1.காற்றுடன் நீர் இல்லா விட்டால் தாவரங்கள் மட்டுமல்ல
2.இப்பூமியில் வளர்ந்திடும் எக்கனி வளங்களும் எவ்வுயிரணுவும் இன்றைய நிலை கொண்ட வளர்ச்சிக்கு வந்திருக்க முடியாது.

எவ்வமிலமும் இந்நீருடன் தன் சக்தியைச் சேமிக்கும் சக்தி கொண்ட பூமி இது. இன்று நம் பூமியில் கடல்கள் உள்ள இடங்களில் கடல்களில் உள்ள நீர் பகலில் குறைந்தும் இரவில் அதிகப்பட்டும் உள்ளது.

அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களிலும் மற்ற நாட்களைவிட இந்நீர் அதிகமாகப் பொங்கி வரக் காண்கின்றோம்.

பகலில் சூரியனின் நேர் ஒளி படும் நிலையில் பூமியின் கோளத்தின் அக்கடலின் நீர் உள்ள நிலையில் நேராய் சூரியனின் ஒளி பட்டவுடன் அந் நீரிலிருந்து ஆவியான அமிலங்கள் காற்றுடன் கலந்துவிடுகிறடு.

பின் பூமி சுழலும் நிலைகொண்டு இரவில் சூரியனின் ஒளிக்கதிர் அந்நீர் நிலையில் படாமல் அக்கடல் நிலையுள்ள இடமும் இச்சுழலும் தன்மையில், நம் பூமியின் அசைவைக் கொண்டு இக்கடல் நீரும் வட துருவமோ அல்லது தென் துருவமோ இந்நிலையில் இரவு நேரத்தில் அக்கடல் நீர் அந்நிலையில் மோதி,
1.பூமியின் சுழலும் வேகத்தில் இரவின் அசைவினால் வட துருவத்தில் மோதப்பட்டு
2.பகலில் ஆவியான இவ்வமிலமும் குளிர்ச்சி கொண்டு வட துருவ பூமியில்
3.படிவமாய்க் குளிர்ந்த நிலையில் பனிக்கட்டியாய் உறைந்து விடுகின்றது.

இப்பூமியின் வட துருவத்திலும் தென் துருவத்திலும் பாறை போல் உறைந்து குளிர்ச்சியான உப்புக் கலந்த அமில சக்தியைக் கொண்ட நீராய் உறைந்துள்ளது.

சூரியனின் ஒளி இரவில் இல்லாததினாலும், அவ்வுஷ்ண அலைகள் இக்கடலில் தாக்காததினாலும்
1.பகலில் ஈர்த்து ஆவியான நீர்களே
2.இரவில் அவ்வுறைந்த நிலை கொண்ட பகுதியில் இக்காற்றாலைகள் மோதி நீராய் வடியப் பெற்று
3.இரவில் கடல்களில் நீர் நிலைகளின் பெருக்கத்தைக் காண்கின்றோம்.
4.வட துருவம் தென் துருவம் இரண்டு பக்கத்திலுமே இந்நிலை கொண்ட சக்திதான் உள்ளது.

அமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் ஏற்படும் இவ்வணுக்களின் மாற்றத்தினால் இக்காற்று மண்டலத்தின் சக்தியில் சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும்
1.குறைந்த அமாவாசையின் அணு சக்தியும் பௌர்ணமியில் கிடைத்திடும் அதிக அணு சக்தியும்
2.இவ்விரண்டு பக்கத்திலும் உறைந்துள்ள நீரின் அமில சக்தி மாற்றம் கொள்ளும் நிலையில் இக்கடல் நீர் “பொங்குகின்றது…”

இன்று இப்பூமிக்கு ஜீவனாய் பொக்கிஷமாய் அமைந்துள்ள இந் நீர் நிலைகள் வட துருவமாயும் தென் துருவமாயும் இப்பூமி சுழல்வதற்கே சக்தி கொடுத்து நிறைந்திருக்கா விட்டால் :நம் பூமிக்கு இம்மழையும் மற்ற நீர் நிலைகள் எவையுமே கிடைத்திருக்காது…”

ஜீவனாய் இப்பூமிக்கு இருக்கும் இச்சக்தி ஒவ்வொரு மண்டலத்திலும் மாறு கொள்ளுகின்றது.

சந்திரனில் நம் பூமியில் பெய்யும் மழையும் மற்ற நீர் நிலைகளும் இங்கு தேங்கியுள்ளதைப் போல் அங்கு மாறு கொண்ட நிலையில் சந்திரனின் நிலை கொண்டு இன்றுள்ளது.

இதுவே இப்பூமியின் மாற்றத்தினால் நம் பூமியின் சக்தியைப் போல் நம் பூமிக்கு அருகாமையில் பூமியுடன் அதிகத் தொடர்பு கொண்ட சந்திர மண்டலம் இருப்பதினால் “இப்பூமியின் நிலையைப்போல் சக்தியை வளர்க்கப் போகிறது…”
1.நம் பூமியைக் காட்டிலும் சுழலும் வேகம் குறைவு
2.ஆனால் மாற்றத்தில் சந்திரனின் சக்தி கூடி துரித வேகம் அதிகபடப்படுகின்றது.

துரித சக்தியின் வளர்ச்சியினால்… ஈர்ப்பு சக்தியின் இன்று செழித்து வளரும் நிலையில்லாமல் காற்றும் மழையும் குறைந்துள்ள நிலையில்… மழையென்றால்… நம் பூமியில் பெய்வதைப் போல் பூமி ஈர்த்து ஆங்காங்கு வெளிப்படுத்தும் பருவ மழைகளும் இக்கடலில் புயலால் ஏற்பட்டு உருக்கொண்டு வீசிடும் காற்றில் இருந்து… இங்கு பெய்யும் மழையின் நிலையும் இரவு பகல் என்ற மாற்றம் கொண்ட நிலையும் சந்திரனில் இல்லாமல் உள்ள இன்றைய நிலையே… இக்கலியின் மாற்றத்தினால்…
1.இப்பூமியின் சக்தியின் நிலையே
2.சந்திரனின் சக்தி நிலையுடன் செயல் கொள்ளப் போகின்றது.

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

 

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்களை குருநாதர் காட்டிய அருள் வழியில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

இணையச் செய்தாலும் அடுத்து நினைவு நாள் கொண்டாடுகின்றோம். அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி நிலை பெற்ற அந்த நினைவு நாள் தான் இன்று என்றால்…!
1.நாம் கூட்டுத் தியானத்திலிருந்து அவருடைய உயிரான்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
2.அந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து விட்டது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
4.என்றும் அவர்கள் பேரருளாக இருத்தல் வேண்டும்.
5.எங்கள் குடும்பத்தில் இருளை அகற்றும் அருள் சக்தியாகப் படர்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர் ஒளியின் சரீரமான நாள். இன்றைய தினம் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பங்களில் படர்தல் வேண்டும்.

அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கொண்ட பின் அந்த உணர்வை எடுத்து
1.நம் குடும்பத்தில் எங்களை அறியாத தீய வினைகள் நீங்கிட வேண்டும்.
2.குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்த்திட வேண்டும்.
3.எங்கள் குலதெய்வங்களாக என்றும் நிலைத்திருந்து இருளினை அகற்றி நஞ்சினை வென்று
4.உணர்வினை பேரருளாக மாற்றிடும் அருள் சக்தியாக அது வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் அவர்கள் நம்முடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் பற்று கொண்ட நாம்… அவரின் உணர்வுகள் நமக்குள் பங்கு உண்டு.

விண் செலுத்தத் தவறினால் அவரின் நோய் இங்கே வளர்கின்றது. அப்படி நமக்குள் வளராது தடுக்க இம்முறைப்படி தான் அந்த நினைவு நாளைக் கொண்டாட வேண்டும். இதை
1.அவர்கள் பேரொளி பெற்ற நாள்
2.என்றும் இருளை அகற்றிய நாள்.
3.சப்தரிஷிகளாக ஆன நந்நாள்.
4.சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்று சேர்த்த அந்த உணர்வின் தன்மை எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
5.குடும்பத்தில் தெளிவான நிலைகளை எங்களுக்கு ஊட்ட வேண்டும்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அவர்கள் வீட்டில் வாழ்ந்த உணர்வலைகள் நம் உடலில் அது பதிவாகி இருப்பினும் ஆக நாம் குடியிருக்கும் வீட்டில் பதிவாகி இருப்பினும் மேலே சொன்னபடி நாம் செய்தோம் என்றால் அந்த்த் தீமைகள் மறைகின்றது.
1.அருள் ஒளி என்ற நிலைகள் நமக்குள் பெருக்கப்படுகின்றது.
2.நாம் நினைவு நாள் இப்படித் தான் கொண்டாட வேண்டும்.

மாறாக… அமாவாசையன்று அவர்களுக்கு உணவுகள் கொடுத்து அவர்களை அழைத்தோம் என்றால் ஆவியின் நிலை அடைந்து விடும். பின் இது சில தீமையின் நிலைகளுக்குத் தான் செல்லும். மீண்டும் பிறவிக்கே நாம் அழைக்கின்றோம் என்று பொருள்.

ஆகவே… உடலை விட்டுப் பிரிந்டு சென்றவர்களை நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பேரொளி என்ற உணர்வினை ஆக்கிய பின்
1.அவர் விண் சென்ற அந்த அருள் ஒளி என்ற நிலைகள் நம் வீட்டிலே படர்ந்து
2.அறியாத இருளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வினில் தான் நாம் வாழ்ந்திட வேண்டும்.

என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை அடைந்த அந்த அருள் உணர்வுகள்…
1.குடும்பத்தில் இருளை அகற்றி அனைவருக்கும் தெளிந்த மனம் கொண்டு வாழும் அருள் சக்தியை எங்களில் என்றும் பரப்புதல் வேண்டும்.
2.நம் குடும்பத்தை நீங்கள் காத்திடல் வேண்டும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்தியாக எங்களில் வளர்த்திட வேண்டும்.
4.உங்கள் அருள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று
5.அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் இத்தகைய நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

இதனை எண்ணினால் அவர் உடலில் வாழ்ந்த காலத்தில் நாம் கேட்டறிந்த நோயின் தன்மை வராதபடி மாற்ற முடிகின்றது. ஆகவே நமக்குள் அருள் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நமது மூதாதையர்களை இந்த முறைப்படி பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்… பேரின்பம் பெறச் செய்வோம்.

சந்திரனில் “இனி” ஏற்படப் போகும் மாற்றங்கள்

சந்திரனில் “இனி” ஏற்படப் போகும் மாற்றங்கள்

 

கலியின் மாற்றம் கொண்டு நம் பூமியின் நிலை மாற்றம் கொள்ளப் போகிறது என்று உணர்த்தினேன். அந்நிலை கொண்டு அனைத்து மண்டலங்களின் நிலையும் மாறுவதை உணர்த்தியுள்ளேன்.

இன்று நம் பூமியின் இயற்கை சக்தியைப் போல் சந்திரனின் இயற்கை வளமும் கூடப் போகின்றது. நம் பூமியில் கடல்கள் உள்ளதைப் போல் ஆழ்ந்த நீர் நிலை அங்கு இல்லை.

பூமியில் வட துருவ, தென் துருவ நீர் நிலையின் சக்தியினால்
1.இப்பூமி சுழலும் நிலையில் காற்று மண்டலம் இந் நீர் நிலையிலிருந்து வருவதினால்
2.இவ்விரண்டு பக்க நீர் நிலையில் ஒன்றை ஒன்று உலகம் சுழலும் நிலையில் ஈர்க்கும் சக்தியும் ஏற்படுவதினால்
3.நம் பூமிக்குக் காற்று மண்டல சக்தியுடன் நான்கு நிலை கொண்ட கால நிலையினால்
4.இங்கு ஏற்படும் மழையும் மற்றச் சீதோஷ்ண நிலைகளின் மாறு கொண்ட சக்தியும் நம் பூமியின் பொக்கிஷமாய் உள்ளது.

அதைப் போல்… இக்கலி மாறும் தருணத்தில் சந்திரனின் ஈர்ப்புடன், சந்திரனுக்கு அருகாமையில் நீரை ஏற்படுத்தும் அமில நிலை கொண்ட உப்புக் கலந்த அமில சக்தி கொண்ட நட்சத்திர மண்டலங்கள் அதிகமாய் உள்ளன.

1.மாறும் தருவாயில் இன்று இம்மனிதன் சந்திரனுக்குச் சென்று அவனது சுவாச அலையை அங்கு விட்ட நிலையிலும்
2.இப்பூமியிலிருந்து ஆத்மாக்களில்லா ஏவுகணைகள் பல அந்நிலைக்குச் சென்று, இப்பூமியின் சக்தி சந்திரனில் இன்று செயல்படும் நிலையிலும்
3.நம் பூமியின் பார்வை நிலையில் நம் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சந்திரனில் நிறைந்துள்ள நிலையிலும்
4.தெரிந்தோ தெரியாமலோ சந்திர நிலவை, அப்பௌர்ணமி நாளை நம் ஆத்மாக்களில் பலர் ஆண்டவனாய் வழிபட்டதின் நிலையில்
5.நம் பூமியின் ஆத்மாக்களின் எண்ண சக்தியின் அலையும் சந்திரனில் இன்று குடி கொண்டுள்ள நிலையில்
6.நம் பூமியில் இருந்து ஈர்த்து அமிலப்படுத்திய நீர் நிலை கொண்ட அமில சக்திகளெல்லாம் சந்திரனுடன் சேரும் நிலையில்
7.இன்று சந்திரனில் நாம் காணும் அப்பள்ள நிலைகளே நம் பூமியின் நிலை போல் சந்திரனில் இரண்டு பக்கங்களிலும் நீர்நிலை கூடப் போகின்றது.

நம் பூமியில் உள்ளதைப் போல் தாவர வளர்ச்சி நிலையும் செயல் கொண்டு… நம் பூமியின் சக்தி நிலைகொப்ப வளரும் நிலை சந்திரனுக்குக் கூடப் போகிறது.

அந்நிலையில் இருந்து நம் பூமியில் உள்ள ஆத்மாக்கள் நம் பூமியின் இக்கலி மாற்றத்தில்… நம் பூமியின் சுவாச நிலையின் சக்தி கொண்ட சந்திரனில் வாழப் போகின்றார்கள்.

எந்நிலை கொண்டு…?

நம் பாட நிலையில்தான் இப்பூமியில் வாழ்ந்த ஆத்மாக்கள் மாறு கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்திட முடியாது என்று உணர்த்தியுள்ளோம்.

இப்பூமியின் ஆத்மாக்கள் எப்படிச் சந்திரனுக்குச் சென்று வாழ்ந்திடும்…? என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்குத் தோன்றிடலாம். தொடர் நாளை…!

“நஞ்சினை வென்றிடும் அணுக்களை” அகஸ்தியரிடமிருந்து நாம் பெற வேண்டும்

“நஞ்சினை வென்றிடும் அணுக்களை” அகஸ்தியரிடமிருந்து நாம் பெற வேண்டும்

 

மனிதனான பின் அகஸ்தியன் “நஞ்சினை வென்று” இருளினை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியைப் பெற்றான். அவன் வளர்ச்சியில் அவன் பருவ நிலை வரும்பொழுது திருமணம் ஆனது.

அவன் கண்ட உண்மையைத் தன் மனைவிக்கு எடுத்துப் போதித்தான். மனைவியும் அதன் கணவனின் சொல் படி உணர்வை நுகர்ந்தறிந்து அதுவும் நஞ்சினை வென்றிடும்… இருளை அகற்றிடும்… மெய்ப்பொருள் காணும் சக்தியினைப் பெற்றது.

அவர்கள் இரு மனமும் ஒன்றி வாழ்ந்தது
1.இருவருமே “நஞ்சினை வென்றிடும் உணர்வினை” அவர்கள் நுகர்ந்து
2.நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தி… பேரருள் என்ற ஒளியின் உணர்வினை அவர்களுக்குள் இருவருமே வளர்த்தனர்
3.இரு உடலிலும் ஒன்றென இணைத்தனர்.

எந்தத் துருவப் பகுதியின் வழியாக நுகர்ந்து அந்த உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கின்றனரோ…
1.அதனின்று வரும் உணர்வினை யாம் இப்போது சொல்லும் போது உங்கள் காதிலே அந்த உணர்வுகளைக் கேட்கின்றீர்கள்.
2.கண்ணிற்கே அந்த நினைவு வருகின்றது
3.இந்த நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள் நுகர நேர்ந்தால்
4.அந்த உணர்வு உங்கள் உடலுக்குள் சென்று நஞ்சினை வென்றிடும் அந்த அணுவின் கருவாக உயிர் உருவாக்குகின்றது
5.அது நாளடைவில் நஞ்சினை வென்றிடும் அணுவாக உருப்பெறுகின்றது.
6.அடிக்கடி இந்த நிலையை நாம் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
7.நமது உடலில் அறியாது சேர்ந்த “நஞ்சினை அடக்கிடும்” அணுக்களின் பெருக்கமாகின்றது.

இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா சென்றால் “நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தியாக” இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.

நமது உயிர் எதனை உற்று நோக்கி உணர்வினை நமக்குள் வலுப்பெறச் செய்கின்றதோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் அங்கே அடைய முடிகின்றது.

ஆகவே நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே சிவலோகமாக இருப்பினும் “சொர்க்கலோகமாக” மாற்றுகின்றது.

“உயிரின் வழி” இந்த உடலிலே மகிழ்ச்சி என்ற உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது
1.நாம் இந்த உயிரின் வழியே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தறிந்ததனால்
2.உயிர் வழி நாம் சொர்க்கத்தை அடைய முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

அதுதான் சொர்க்கவாசல் என்பது நமது உயிரின் இயக்கத்தை இப்படித் தெளிவாக உணர்த்துகின்றனர் ஞானிகள்.

“நஞ்சினை வென்று” உணர்வினைப் பேரருளாக மாற்றிய இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து இதை அலைகளாக மாற்றுகின்றது.

நமது குரு காட்டிய அருள் வழிப்படி அதனைத்தான் நாம் பெற இப்போது ஏங்கித் தியானிக்கின்றோம். நாம் எண்ணி ஏங்கும் உணர்வுகள் அனைத்தையும் நமது உயிர் அது ஈசனாக நின்று “ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…” என்று நமது உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இப்படி இந்த உடலில் சொர்க்க லோகமாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் மாற்றுதல் வேண்டும். இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்.
1.உயிரான ஈசன் வழி நாம் கேட்கும் போது அந்த உயிரான ஈசனின் வழி தான் சொர்க்கவாசல் அமைகின்றது.
2.ஆகவே நாம் இதனை இப்போது ஏங்கிப் பெறுவோம்.

பூமியில் உயிரணுக்களின் தோற்றம் எங்கிருந்து வந்தது…?

பூமியில் உயிரணுக்களின் தோற்றம் எங்கிருந்து வந்தது…?

 

இப்பாட நிலைக்கொப்ப இந்நிலையில் உணர்த்தி வரும் இம்மண்டலங்களின் சக்தி நிலையும் இன்றுள்ள இம்மண்டலங்களின் சுழற்சியின் வேகத்தைக் காட்டிலும் இப்பூமியின் சுழற்சி சக்தி அதிகபப்டுவதாகவும் இந்நிலை ஒத்தே மற்ற மண்டலங்களின் துரித நிலையும் அதனதன் விகித நிலைப்படி அதிகப்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இன்று இப்பூமியின் ஈர்ப்பு சக்தி நிலையும் ஓட்ட நிலையும் இந்த 24 மணி நேரம் 18 மணிக்கணக்கில் வரும் நிலையில் இன்று இப்பூமியில் திடப்பொருளாய் உள்ளவற்றின் நிலை எல்லாம் எந்நிலையில் செயல்படும்…?

இன்றுள்ள மலைகளும் நீர் நிலைகளும் இயற்கை சக்திகள் அனைத்துமே இப்பூமியின் அசைவின் தொடர்நிலை கொண்டு மாற்றம் கொள்ளப் போகின்றன. அந்நிலையில்
1.இப்பூமியில் இவ்வசைவின்போது ஏற்படும் இயற்கையின் தாக்குதலின் நிலையில்லாமல் தப்பிவிடும் பூமியில் வாழ்ந்திடும் உயிரினங்களின் நிலையும்…
2.இப்பூமியின் சுவாச சக்தியே மாறு கொண்ட பிறகு தப்பி வாழ்ந்திடும் ஜீவராசிகளின் சுவாசத்தின் நிலையும் மாறு கொள்வதால்…
3.இவ் இயற்கையில் இருந்து தப்பிடும் எந்த ஜீவராசிகளும் பல காலங்கள் வாழ்ந்திட முடிந்திடாது.
4.ஆக… இப்பூமியின் இயற்கை சக்தியே மாற்றம் கொள்ளப் போகின்றது.

இப்பூமியில் இப்பூமி தோன்றிய நாள் தொட்டே உதித்த உயிரணுக்கள் எவையுமே… உயிரணு அழிந்திடாது மாற்றம் தான் பிம்ப நிலையில் மாறும் என்று உணர்த்தியுள்ளேன்.

அதே சமயத்தில் இப்பூமியில் தோன்றி… இப்பூமியின் சுவாசத்தையே சுவாசித்துப் பழக்கப்பட்ட எவ்வுயிராத்மாவும் இப்பூமியில் இருந்து… மற்ற மண்டலத்திற்கு “மாறு கொண்ட சுவாச நிலையில்” சென்று வாழ்ந்திட முடியாது என்றும் உணர்த்தியுள்ளேன்.

இக்கலி மாறி கல்கியில் சுவாச நிலை மாறிக்கொண்ட இப்பூமியில் கலியின் காலம் வரை வந்திட்ட உயிர் ஆத்மாக்களின் பிறப்பிடம் எதுவாய் இருந்திடும்…?

இக்கேள்வியின் நிலை இந்நிலையிலேயே இருந்திடட்டும்.

1.நம் பூமிக்கு உயிரணுக்கள் தோன்றி உயிராத்மாவாய் அறிவு நிலை பெற்ற மனிதர்களாய் வாழும் சக்தி எந்நிலையில் வந்திட்டது…?
2.இன்று நம் சந்திரனின் நிலை என்ன…?
3.நம் பூமியில் மனித உயிரணுக்கள் தோன்றிடும் வித்து எங்கிருந்து ஆரம்பித்தது…?

நம் சூரியனின் ஈர்ப்புடன் கூடிய 48 மண்டலங்களில் நம் பூமியைக் காட்டிலும் வியாழன் மண்டலத்தின் அளவு விகித நிலை அதிகம்.

ஆனால் இன்று வியாழன் மண்டலத்தின் சக்தி நிலை கூடியிருந்தாலும் உயிராத்மா பிம்ப நிலை கொண்ட மனித இனங்களில் இல்லை. அங்கும் இன்றும் உயிரணுக்களுண்டு. நம் பூமியைக் காட்டிலும் செழிப்பும் பல நிலைகொண்ட கனி வளங்கள் அனைத்தும் உண்டு.

ஆனால் நம் பூமி இன்றுள்ள மனித ஆத்மாக்களை வளர்க்கும் நிலை நம்மை விட சக்தி கொண்ட வியாழனிலும் இல்லை. ஆனால் நம் பூமிக்கு உயிராத்மாவின் நிலைபெறும் சக்தி வியாழனிலிருந்து தான் வந்தது.

1.ஒரு கோடி இரண்டு கோடி நிலையிலல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்
2.நம் நிலைக்கொப்ப அறிவு நிலைப்பட்டு வாழ்ந்த ஆத்மாக்களைக் கொண்ட மண்டலம்தான் வியாழன் மண்டலம்.

இன்று நம் அறிவின் வளர்ச்சியில் மற்ற மண்டலத்திற்குச் செல்லும் ஆசை நிலையின் செயற்கை நிலைக்கொப்ப நம் பூமியிலிருந்து சந்திரன் செவ்வாய் இப்படியுள்ள மண்டலங்களுக்கு ஏவுகணையின் மூலமாய்ச் சென்ற ஆத்மாக்களின் சுவாச நிலை அங்கு இவர்கள் இருந்து வாழாவிட்டாலும் இவர்கள் விட்டு வந்த சுவாச நிலையின் சக்தியிலிருந்து தோன்றிடும் உயிரணுக்களின் வளர்ச்சி நிலையில் வித்திட்டு வந்துள்ளார்கள்.

அந்நிலை போன்றே
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழனில் தோன்றிய உயிராத்மாக்கள் நம் பூமிக்கு வந்து சென்ற நிலையினால்
2.நம் பூமியில் உயிராத்மாக்களின் தொடர்நிலை கொண்டது.
3.இங்கு எப்படி இக்கலியில் ஏற்படும் பிரளயத்தைச் செப்புகின்றோமோ அந்நிலை போன்றே
3.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளையத்தினால் நம் பூமிக்கு உயிராத்மாக்கள் தோன்றும் நிலை வந்தது.

வரப்போகும் இப்பிரளய நிலையினால் நம் பூமியின் விகித அளவு நிலை கூடுவதைப் போல் சந்திரனின் நிலையும் கூடப்போகின்றது.

இன்று சந்திரனில் நம் பூமியைப் போல் மழையும் இங்குள்ள காலை பகல் இரவு என்று சூரியனின் ஒளி வீச்சில் கிடைத்திடும் மாற்ற நிலை அங்கில்லை.

சந்திரனில் சூரியனின் ஒளிக்கதிர் வீச்சின் நிலை ஒரே நிலையில் ஒளி பாய்ச்சிடும் சக்தி நிலையாய்ச் சுழற்சி கொண்டு… இம்மூன்று குமிழ் நிலை கொண்ட சக்தியில் சந்திரனின் நிலை உள்ளதினால்… மையப் பகுதியில் உள்ள இப்பள்ளத்தின் நிலையினால் ஒரே நிலையில் சூரியனின் அணுவீச்சுகள் இருந்தாலும் “மையப் பகுதியின் பள்ளத்தினால்” சந்திரனின் நிலை சிதறாமல் சுழன்று கொண்டுள்ளது.

இக்கலியின் மாற்றத்தில் சந்திரனின் நிலையென்ன…? என்பதனை அடுத்து விளக்கிடுவேன்.

தியானம் எடுக்க வேண்டிய முறை

தியானம் எடுக்க வேண்டிய முறை

 

நமது கண் ஒரு ஆண்டனா…! ஏரியல்…! அதைப் பயன்படுத்தித் தியானத்தில் வெளியிலிருந்து எடுக்கின்றோம்…
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது அந்த அலைகள்.
2.உங்களிடம் இந்நேரம் வரையிலும் அதைப் பதிவு செய்துள்ளேன் (ஞானகுரு)
3.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் பொழுது கண்ணான ஆண்டனா மூலமாக உங்கள் உடலுக்குள் அதைச் சேர்த்துப் பதிவாக்குகின்றது.

மீண்டும் இதே மாதிரி இந்த எண்ணத்தை எண்ணி வரப்படும் பொழுது அந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து நமது கண் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

இந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்க வேண்டும்.
1.இப்படி ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத்
2.தனித்து இயக்கச் செய்வது தான் இப்பொழுது நம்முடைய வழி.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் விஷத்தன்மையான உலகில் சீக்கிரம் இதைக் பெற்றுக் கொண்டீர்கள் என்றால்… உங்கள் உடலும் நன்றாக இருக்கும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்… உலகமும் நலம் பெறும்.

உலகமே என்றால்… அந்த உணர்வுகள் எல்லாமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை…!
1.அந்த உலக இயல்பு நமக்குள் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால்
2.அதை மாற்றுவதற்காக என் குருநாதர் எப்படி எனக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.

உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை. நீங்கள் எல்லாம் தெளிவாக வேண்டும் என்று தான் கொண்டு வருகின்றோம். அதை நீங்கள் நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்.

நல்ல வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி இனி பிறவியில்லா நிலையை அடையலாம்.

ஆனால் ஆசையை எங்கேயோ வைத்து என் தொழில் இப்படி இருக்க வேண்டும் நான் இப்படி இருக்க வேண்டும் நான் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அந்த ஆசை எங்கேயோ போய்விடும்…!
1.அது ஒன்றிலேயே போகும்… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.
2.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய் சொன்னது போன்று
3.எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதன் வழியில் “படுபாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்…”

ஆகவே… நமது ஆசையினுடைய உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு சென்றால் அங்கே இணைந்து இருளை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்றிவிடும்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி வருகின்றேன்.

முதலில் உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள். அம்மா அப்பாவின் அருளால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் பெற வேண்டும்” என்று அடுத்து ஏங்குங்கள். (என் குரு தான் எனக்கு இந்த வழியைக் காட்டினார்).

அன்னை தந்தை என் உடலை உருவாக்கியது… எனக்கு ஒரு நல்ல வழியையும் உணர்த்தியது… அது குருவாகவும் இருக்கின்றது. அதனால் அவர்களை முதலில் எண்ண வேண்டும்.

அதே சமயத்தில்
1.இந்த மனித உடலுக்குப் பின் எங்கே என்ற நிலையில் இருளை நீக்கி ஒளி பெறும் உணர்வுகளை உபதேசித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2.அந்த உணர்வை அவர் சொன்ன வழியில் நாம் பின்பற்றினோம்.
3.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்… அந்த உணர்வு என் உடலில் என்ன செய்தது…? என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்று உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமையை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பன்றி எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்ததோ அதைப் போல் சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வை நீங்கள் சுவாசித்து “உயிரை ஒளிமயமான நிலைகள் பெற முடியும்….”

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியும் நீங்கள் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும். உங்கள் சொல்லிலே வைரத்தைப் போன்று ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதை போன்று மனது மங்காத நிலைகளை நாம் கொண்டு வர வேண்டும். மலர் எப்படி நன்றாக நறுமணங்கள் கொடுக்கின்றதோ உங்கள் சொல் மற்றவரை நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

அந்தச் சக்தி பெறுவதற்குத் தான் இப்பொழுது நாம் இதைச் செய்கின்றோம். ஆகையினால் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருங்கள். இது பேராசையும் கூட…!

1.உங்கள் உடலில் உள்ள எல்லாவற்றிற்கும் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் இந்த மாதிரிச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பேராசையாக மாறுகின்றது.
3.நானும் பெறுகின்றேன்… நீங்களும் பெறுவீர்கள்.
4.எல்லோரும் பெற வேண்டும் என்ற பொழுது இந்தப் அந்தப் பேராசை நமக்குள் வளரும்.

ஆனால் நான் சொல்லிவிட்டு உங்களை ஏமாற்றினேன் என்றால் அது பேயாசை‌. சாமி பெயரைச் சொல்லி அடுத்தவரை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் அது பேயாசை. அவர்களையும் கெடுத்து நீங்களும் கெட்டு மற்றவர் பெறக்கூடிய நல்ல உணர்வைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.

ஏனென்றால் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு.

1.அந்தத் தீமைக்கு நாம் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும்.
2.நாம் செல்லும் நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
3.முதலில் தெரியாது… பின் சிக்கலான பிற்பாடு… அந்த வேதனை வந்த பின் தான் நாம் உணர முடியும்.

இதைப் போன்ற தீமைகள் சந்தர்ப்பத்தால் எத்தனையோ வகையில் உருவாகின்றது. அதிலிருந்து நாம் தப்புவதற்காக வேண்டி மீண்டும் மீண்டும் இதை “எச்சரிக்கை செய்கின்றேன்…”

உங்கள் உணர்வனைத்தையும் உங்கள் அம்மா அப்பாவின் மேல் செலுத்துங்கள். அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.
1.குருதேவர் அறிந்துணர்ந்த சக்தியான துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் ஏக்கத்தைக் கண்ணான கருமணியில் செலுத்துங்கள்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் கருமணியில் தான் படமாகின்றது. அந்த உணர்வு தான் நரம்பு வழி எல்லாவற்றிற்கும் உணர்த்துகின்றது.

ஆகையினால் இதைக் கருமணியில் எடுத்து கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றினால்
1.இந்த உணர்வுகள் உயிர் வழி இழுக்கச் செய்து அந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப முடியும்.
2.கொஞ்ச நாட்கள் இப்படிப் பழகி விட்டால் எல்லா அணுக்களுக்கும் இந்த வீரிய சக்தியை ஊட்டும் பொழுது நமக்குள் தீய சக்தி குறையும்.

மனித வாழ்க்கையில் தீயவர்களைப் பார்த்து அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல சக்திகள் தணிந்து தீய சக்தியே நமக்குள் விளைகின்றது.
1.அந்தத் தீய சக்தியை நீக்கி அதைக் குறைத்து நல்ல சக்தியை வளர்ப்பது தான் நம் தியானத்தின் நோக்கம்.
2.ஆக உங்களுடைய மனதை இதைப் போல் தெளிவாக்கித் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்.

பிரளய மாற்றம்

பிரளய மாற்றம்

 

பூமி சுழலும் வேகத்தை… ஒரு நாளைக் குறிக்க 24 மணி நேர விகிதப்படுத்தி இவ்வுலகம் முழுவதுமே அக்கணக்குப்படி ஒரு நாள் என்று நிலைப்படுத்தி உள்ளார்கள்.

இந்த 24 மணி நேர விகிதக் காலம் குறித்து… பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் அந்நிலையை வைத்தே அந்நிலையின் செயலுக்கொப்பக் கால நிலை குறிக்கும் அளவைச் செயலாக்குகின்றனர்.

இந்த 24 மணி நேரம் குறித்த காலத்திற்கும்… “இன்று” இப்பூமி சுழலும் நிலை துரிதம் கொண்டுள்ளது… வினாடி விகிதத்தில். ஆனால் பல நூறு கோடி ஆண்டுகளில் சில வினாடி நேரம்தான் அதிகத் துரிதத்துடன் இன்று நம் பூமி சுழல்கின்றது.

ஆனால்
1.இக்கலி முடிந்து கல்கியில் இவ்வுலகப் “பிரளயம் தோன்றி” இவ்வுலக நிலை மாறிச் சுழலும் தருவாயில்
2.நம் பூமி சுழலும் வேகம் இப்போதைய நேரத்தில் நான்கில் ஒரு பாகம் எடுத்த நிலையில் மூன்று பாகங்கள் கொண்ட துரித கதியில்
3.இன்று 24 என்பது 18 மணி விகிதத்தில் சுழலப் போகின்றது.

நம் பூமியில் இவ் அசைவின் பிரளயத்தின் போது நம் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களும் சேரப் போகின்றன. நம் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் சக்தி நிலையும்… அளவு நிலையும் அதிகப்படப் போகின்றன.

நம் சூரியனின் விகித நிலையும் கூடப் போகின்றது.

சூரியனும் 48 மண்டலக் கோளங்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி கொள்ள… இவற்றிற்குச் சக்தி நிலை கூடும் அமிலங்கள் யாவும் நம் கண்ணிற்குத் தெரியாத நிலை கொண்டு… பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே இம்மாற்றம் கொள்ளும் தருவாயில் மண்டலங்களின் ஈர்ப்பில் வந்து சேர்ந்து… மண்டலங்களின் வளர்ச்சி நிலை கூடப் போகின்றது.

இன்று நம் பூமியில் வட துருவம் தென் துருவ நிலை கொண்டு பூமியின் சுழற்சியில் பகலும் இரவும் இக்கால நிலைகள் நான்கும் ஒத்த நிலையில் உள்ளன.

ஆனால் மழைக்காலம் மற்றும் அந்தந்தப் பிரதேசங்களின் பூமி ஈர்த்து அப்பூமி கக்கும் உஷ்ண அலைகளுக்கொப்ப மழையின் நிலை அந்தந்த நிலைகளில் மாறு கொண்டு வருகின்றது.

ஆனால் நம் பூமியின் மாற்றம் கொள்ளும் கல்கியின் காலத்தில் இன்று இவர்கள் குறித்துள்ள 365 நாள் விகிதக் கணக்கு வருடச் சுற்றலில் குறைவுபடப்போகிறது.

சூரியனைச் சுற்றியுள்ள அனைத்துக் கோளங்களின் சுற்றலின் நிலையும் துரிதப்படுவதினால் சூரியனின் நிலையும் துரிதம் கொள்ளப் போகின்றது.

நம் சூரியனுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் விகித நிலை கூடும் பொழுது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியில் அமில சக்தியை எல்லாம் இம்மண்டலங்கள் உறிஞ்சிய பிறகு நம்மைச் சார்ந்துள்ள இம்மண்டலங்களின் நிலையில்லா மற்ற மண்டலங்கள்
1.நம் சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட சூரியனின் சுழற்சியின் ஈர்ப்பிலுள்ள ஒரு மண்டலம்
2.ஆவியாய்ப் பிரியும் நிலை கொண்டு தன் ஜீவனை இழக்கப் போகின்றது.
3.பல நூறு கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மண்டலம் அது.
4.நம் பூமிக்கு மட்டும் மாற்ற நிலை வரப்போகின்றது என்பது அல்ல.
5.இவ்வண்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களின் நிலையிலுமே இந்நிலை செயல்படப் போகின்றது.

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

 

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் காலையில் எடுத்து
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்காகச் சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்… அதாவது பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும்.

ஒரு இன்ஜினை முதலில் ஓட்ட வேண்டும் என்றால் என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா…?

மோட்டாரில் பேட்டரியை வைத்துள்ளார்கள் அதை வைத்து “எர்த்” ஐக் கொடுத்த உடனே ஓட ஆரம்பிகிறது. அடுத்து இஞ்சின் பெட்ரோலை எடுத்து ஆவியாக மாற்றித் தன்னிச்சையாக ஓடுகிறது.

இதே மாதிரிக் காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் போட்டுச் சார்ஜ் செய்து
2.அந்த நல்ல உயர்ந்த உணர்வுகளை எடுத்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று யாம் (ஞானகுரு) சொன்ன பிரகாரம் நன்றாகச் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்‌.

அதற்குப் பின் இந்த்த் தினசரி வாழ்க்கை நடப்பில்… ஒருவன் அந்தத் தவறு செய்கின்றான் இந்தத் தவறு செய்கின்றான் என்று நாம் இதை எல்லாம் கேட்க நேர்கின்றது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவு மங்கிக் கொண்டே வருகின்றது.

அப்போது அதை மங்காமல் தடுப்பதற்கு…
1.காலையில் சார்ஜ் செய்த அந்தச் சக்தியின் துனை கொண்டு
2.அந்தந்த நிமிடத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று “சுருக்கமாக எண்ணி முடித்து விட்டால்” அப்படியே ஒடுங்கிவிடும்.
5.அவர்களுடைய கஷ்டமோ துன்பமோ தீமைகளோ நமக்குள் வராது.

அதற்குப் பின்… அவர்கள் சிந்தித்துச் செயல்படும் அந்த திறன் பெற வேண்டும்… அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… அவர்கள் நோய் நீங்க வேண்டும்… அவர்கள் பிள்ளை நல்லவனாக இருக்க வேண்டும் என்று “இதைத்தான்” நாம் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லிவிட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

நாம் சொல்கின்றோம் அவர்கள் காதுகளில் கேட்கின்றது. நாம் வெளியிட்ட உணர்வு அவர்கள் கண்கள் பதிவாக்குகின்றது. திருப்பி எண்ணினார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இல்லையென்றால்… அவர்கள் சொன்ன அந்தக் கஷ்டம் நமக்குள் வராமல் துடைத்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது நீங்கள் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்காமல்… கஷ்டத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னால்..
1.என்ன…! பெரிய இவர் மாதிரி நடக்கின்றார்…! என்று நம்மைக் குற்றமாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
2.ரொம்ப அகராதி பிடித்தவர்… ஏதோ சாமியார் சொன்னாராம்… எதையும் கேட்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று
3.என்னையும் சேர்த்து இரண்டு திட்டு இழுத்து விட்டுப் போய் விடுவார்கள். இதுதான் நடக்கும்.

அதனால் அதைக் கேட்டு உணர்ந்து நல்ல வழி சொல்ல வேண்டும்…!

நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள் ஒன்றுபட்டு வாழ்வீர்கள் என்று “நம் சொல்” அங்கே சென்று அவர்களை நல்லதாக்க வேண்டும்.

இப்படிச் செய்யவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வரும் பொழுது நம்மை இயக்கி விடுகின்றது. அது உமிழ் நீராக மாறுகின்றது நல்ல குணங்களை மயங்கச் செய்கின்றது… நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கின்றது.

ஆகவே அது ஒரு சந்தர்ப்பம்…!

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் தான் மனிதனாக வரும் வரையிலும் தீமையை நீக்கும் உணர்வு கொண்டு பன்றியாகப் பிறந்து சுத்தமாக தீமையை நீக்கி நல்ல அணுக்களை உருவாக்கி வந்தது.

பன்றியின் உடலில் இருந்து தான் நாம் மனித உடலைப் பெற்றோம்.

இந்த மனித உடலில் நாம் நஞ்சினை மலமாக மாற்றி நல்லதை உடலாக மாற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவாக நமது ஆறாவது அறிவு உள்ளது.

அதைச் சீராகப் பயன்படுத்தி… ஞானியர் கண்ட அந்த உண்மையை நமக்குள் செலுத்தி இந்த உடலுக்கு பின் நாம் பிறவில்லா நிலை அடைய வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் உடலுக்குள் செலுத்திப் பாதுகாக்க முடியும்.

எப்படித்தான் இருந்தாலும் தேடிய செல்வம் நம்முடன் வருகின்றதா…?

இத்தனை ஞானத்தை பேசும் ஞானிகள் உயிரோடு இருக்கின்றார்களா…?
1.ஆனால் உயிரோடு இருக்கின்றார்கள் “ஒளியின் உடலாக” இருக்கின்றார்கள்
2.அதாவது உயிரோடு சேர்ந்து ஒளியாக விண்ணிலே நிலையாக இருக்கின்றார்கள்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால்… அடுத்து என்ன ஆகும்…?

இங்கே இப்பொழுது நமக்குள் எடுத்துக் கொண்ட வேதனை, வெறுப்பு, சங்கடம், எந்தெந்தக் குணங்களோ அதற்குத் தகுந்த மாதிரி நமது உயிர் உடலை அமைத்து மாற்றிக் கொள்கின்றது.

அப்புறம்… வலுவானது தாக்கும் போது அதைக் காட்டிலும் வலுவான உணர்வைக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகிப் பரிணாம வளர்ச்சி அடையும்.

இருந்தாலும்
1.இதற்கு முதலில் எப்படி நாம் வேதனைபட்டோமோ அந்த வேதனைப் பட்டு மனிதனாக மீண்டும் வருவதற்குக் காலம் இல்லை
2.அதற்குள் நம் பூமி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது… அந்த அளவிற்குப் பூமியினுடைய மாற்றங்கள் போய்க் கொண்டுள்ளது.

பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்

பூமியில் ஏற்படும் பகல் இரவு… நான்கு பருவ கால மாற்றங்கள்

 

இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருஷம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலை உணர்ந்து இவ்வான சாஸ்திரத்தில் வருடம், நாள், வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.

இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை, பகல், இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியைப் போலில்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.

உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும், பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பைவிட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும் பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்புப் பெரிதாகவும் காண்கின்றோம்.

எந்நிலை கொண்டு…?

உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை உள்ளது.

ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள்
1.நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில்
2.“நாம் உள்ள இடத்தில்…” சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது
3.உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் “நம் பூமிக்குச் சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகிறது…”

உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால்… நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக்கதிர்களின் வெப்பநிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டுப் “பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்…”

உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம்.

பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.

ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையில் உள்ள சூரியனின் வெப்பநிலை நமக்குக் குறைந்தும் பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில் வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்/ எந்நிலை கொண்டு…?

நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்ற நிலையில்
1.வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாய் நிறைந்துள்ள
2.நம் பூமியின் பொக்கிஷக் கடல்களான அந் நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு
3.அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்தி தான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.

நம் பூமியின் இவ்வட துருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான் நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது.

நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.

சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களில் இருந்தும் நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம், வசந்த காலம், இளவேனிற் காலம், குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.

நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர்நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையில் உள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ, தென் துருவ நீர்நிலைகளின் மேல் அம்மண்டலங்களில் இருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்ளுகின்றன.

ஒவ்வொரு நொடியும், இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.

1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியேதான் இன்றளவும்
2.இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.