
மகரிஷிகளை… “எண்ணத்தால்” நாம் எண்ணி எடுக்க வேண்டிய சரியான முறை
இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் உணர்த்தியது யார்…? அந்த மகரிஷிகள் தான். அவர்கள் அறிந்துணர்ந்த அறிவின் ஆற்றலை அவரில் விளைந்ததை தங்களுக்குள் உருவாக்கி அதை வெளிப்படுத்துகின்றார்கள் இந்த உண்மைகளை.
அவருக்குள் விளைந்த உணர்வின் எண்ண அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியில் படர வைத்துள்ளது
1.எதையெல்லாம் அவர்கள் உணர்த்தினார்களோ
2.அந்த மகரிஷிகளை நாம் எண்ணி அவரிலிருந்து விளைந்த உணர்வை நுகர வேண்டும் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.
ஏன் அவனிடம் வேண்ட வேண்டும்…? எப்படி வேண்ட வேண்டும்…?
கண்ணின் நினைவு கொண்டு அந்த சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை நம் கண்ணிலே கொண்டு வருகின்றோம்.
1.முதலில் கண்ணிலே பார்த்து… பின் சொல்வதை எல்லாம் காதிலே கேட்டாலும்
2.நினைவை… கண்ணின் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்… அப்போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகின்றது.
பதிவானதை மீண்டும் நாம் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக நினைவினைச் செலுத்தி நம் உயிரிடம் வேண்டிடல் வேண்டும்.
உயிர் தான் ஈசன்… அவனை நாம் மதித்தல் வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதை இயக்குகின்றான்
ஆகவே நாம் உயிரை “ஈஸ்வரா…!” என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவு கொண்டு இந்த நினைவினை உயிருடன் ஒன்ற வேண்டும் ஈஸ்வரா என்று…!
2.இப்படி இணைத்துப் பழகுதல் வேண்டும்.
உதாரணமாக மேக்னட் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த சுழற்சி ஆகும் பொழுது மோட்டார் ஓடுகின்றது ஆனால் மோட்டாருக்கு ஓடக்கூடிய கரண்டை வீட்டில் உபயோகிக்கும் ஃபேனுக்கு செலுத்தினோம் என்றால் ஃபேனில் உள்ள காயில் எரிந்து விடும். இதைப் போல
1.மிக சக்தி வாய்ந்த அந்த மகரிஷிகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டும் என்றால்
2.அதற்குத் தகுந்த காந்த புலனறிவு தேவை… ஈர்க்கும் சக்தி,
அப்பொழுது… முதலிலே நாம் எதைப் பதிவு செய்து உள்ளடக்கமாக வைத்திருக்கின்றோமோ அதனை நினைவு கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.நினைவினை அவனிடம் ஒன்றி… அவன் மூலமாக நாம் அறிய வேண்டும்.
2.அப்படி நாம் எடுக்கப்படும் பொழுது இந்த உணர்வின் இயக்கங்கள் வேகமாக இயக்கப்பட்டு
3.நம் உடலுக்குள் மீண்டும் அது சுழல்கின்றது.
உடலுக்குள் செலுத்திய பின் என்ன நடக்கிறது…?
தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பு வெள்ளி இவைகளைப் பிரிக்க திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அதைப் பிரித்து விடுகின்றதோ இதைப் போல நமது வாழ்க்கையில் தீமைகளைக் கண்டு உணர்ந்தாலும் அந்த ஞானியின் உணர்வின் தன்மையை நாம் எண்ணும் பொழுது உடலுக்குள் சென்று நம் நல்ல எண்ணங்களில் கலந்த அந்தத் தீமைகளை அகற்றுகின்றது.
ஆகவே… எந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கினாலும் இதை முறைப்படி நீங்கள் எண்ணினால்தான் நல்லது நடக்கும்.
இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகள் “அவர்கள் யார்…?” என்று தெரியவில்லை என்றாலும் மகரிஷிகள் என்பவர்கள் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள். அவர்கள் அறிந்தது தான் இந்த உண்மைகள்.
அதை எண்ணாமல் எந்த ஆலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தாலும் நல்லதாகும் நிலைகள் இல்லை.
அங்கிருக்கக்கூடிய பூசாரியோ அல்லது வழிகாட்டுவர்கள் யாரோ அவர்களை எண்ணினால் “அந்த மந்திரம் தான்” நினைவுக்கு வரும்.
கோவிலில் யாகம் செய்து இன்னார் சக்தி ஏற்றுகிறார் என்று அவர்களை எண்ணினால்
1.அவர்கள் என்னென்ன மந்திரம் செய்து பதிவு செய்து வைத்திருக்கின்றார்களோ
2.அந்த மந்திரங்களைக் கேட்டு யார் யாரெல்லாம் இறந்தார்களோ
3.அந்த மந்திர உணர்வு கொண்டு அதை மீண்டும் எண்ணப்படும் பொழுது
4.அந்த மந்திரத்தை அதிகமாக ஜெபித்தவரின் உயிரான்மா தான் இங்கே (நமக்குள்) வரும்.
5.பின் அவருடைய ஆசை எதுவோ அதைத்தான் நமக்குள் இயக்கும்
இதெல்லாம் இயற்கையின் உண்மை நிலைகள். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே
1.இயற்கையின் உண்மைகளை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.தெய்வீக நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.
அதற்குத் தான் இவ்வளவு விளக்கமாக உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.