கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி

கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி

 

விஷமான உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி…! என்றார்.

அதாவது எங்கேயோ தோன்றிய… பேரண்டத்தில் இருந்த நிலைகள் கோடிக் கோடியாக மாறுகின்றது.
1.பல கோடிக்குள் மற்ற உணர்வின் அணுக்கள் சேர்த்து
2.மனிதனாக வருவதற்குக் கோடியில் கோடி… எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடி கோடி…!

நான் எண்ணமாகப் பேசுகிறேன் என்றால் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் இங்கே வருகின்றது. இதைத்தான் மனித உணர்வுக்குள் இது பட்டபின் அதனின் நிலை தனக்கொத்ததாக மாறுகின்றது.

1.இதை உணர்த்துவதற்குத் தான் குருநாதர் எனக்கு அடியைக் கொடுத்து
2.பிரமை பிடித்த மாதிரிச் செயல்படுத்தி விண்ணை நோக்கி ஏகும்படிச் சொன்னார்.

குருநாதர் எனக்கு அடி கொடுத்தார்… உங்களுக்கு சொல்லடி கொடுக்கின்றேன். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிகின்றது… சீதாராமா. அந்த ஞானியின் உணர்வுகள் அம்பாகப் பாய்கின்றது.

கோபத்தால் சொல்லும் பொழுது இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது. எதிர் பதிலாக அதுவே வருகின்றது.

இதைப் போல் தான் கோடியில் கோடி என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் உணர்வினை ஒளியாக மாற்றி… குருநாதர் கண்டுணர்ந்த உணர்வை அடியால் கொடுத்து… உணர்வின் தன்மை அங்கே உந்தச் செய்து உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

1.எனக்கு அடி கொடுக்கும் பொழுது அவருடைய சக்தி எப்படி எனக்குள் உறைகின்றதோ இதைப் போன்று தான்
2.அந்த விண்ணின் ஆற்றலும் அது உருவாகும் மாற்றமும்
3.மண்ணுலகில் வரப்படும் பொழுது “கோடி கோடி கோடி கோடி…” என்ற இந்த நிலையைக் கொண்டாருகின்றார் குருநாதர்.

விண்ணின் ஆற்றலை எனக்குள் அவர் பதிவு செய்த பின்… உடல் எங்கே இருக்கின்றது… உதைத்த உணர்வுகள் அவருடன் ஒன்றும்… ஒன்றிய உணர்வுகளை விண்ணிலே பறக்கச் செய்வார்…!

பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
1.அடைந்த உணர்வுகளும் இங்கே அடித்த உணர்வுகளும் இழுக்கும்… இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்கு அறிவித்தார்.
2.நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழிகள் எல்லாம் வந்தாய்…? என்று கனா காண்பது போன்று
3.அணுவாகத் தோன்றி உயிரணுவாக… உன் உயிரே எப்படி உண்டானது…? என்று அறியச் செய்தார்.

விண்ணிலே உயிர் உண்டாவதற்கும் இதிலேயும் பல கோடி கோடி கோடி கோடி. பார்த்தால் உயிரின் துடிப்பு ஒன்றாக இருக்கும். ஆனால் எத்தனை கோடி உணர்வுகள் கலந்து உயிரின் துடிப்புக்குள் இணைந்து அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்.

ஒரு அணுவின் தன்மை மற்ற கோளின் தன்மை வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி கோடி… கோடி கோடி.

காரத்தின் தன்மையோ கசப்பின் தன்மையோ அதுஎப்படி வந்தது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பானது…? காரமானது…? என்று சுவையின் உணர்வுகளும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…?

இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply